சனி, 13 டிசம்பர், 2014

இதுதான் மனுதர்மம்



அந்தப் பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம்தோள்துடைபாதம் இவைக ளினின்றுமுண்டான பிராமணசத்திரியவைசியசூத்திர வருணத்தாருக்கு இம் மைக்கும் மறுமைக்கும் உபயோகமான கருமங்களைச் தனித் தனியாகப் பகுத்தார். -
அத்தியாயம் 1, சுலோகம் 87
பிராமணனுக்கு ஓதுவித்தல்ஓதல்எக்கியஞ்செய்தல்எக்கியஞ் செய்வித்தல்தானம் கொடுத்தல்தானம் வாங்குதல் ஆகிய இவ்வாறு தொழிலையும் ஏற்படுத்தினார்.
-_ 
அத்தியாயம் 1, சுலோகம் 88
சூத்திரனுக்கு இந்த மூன்று வருணத்தாருக்கும் பொறாமையின்றி பணி செய்வதை முக்கியமான தருமமாக ஏற்படுத்தினார். இதனால் அவனுக்குத் தான் முதலியவையுமுண்டென்று தோன்றுகிறது.
அத்தியாயம் 1, சுலோகம் 91
பிராமணன் முதல் வருணத்தானான தாலும்பிரம்மாவின் முகமாகிய உயர்ந்தவிடத்தில் பிறந்ததினாலும் இந்தவுலகத்தில் உண்டாயிருக்கிற சகல வருணத்தாருடைய பொருள்களையும் தாமன் வாங்க அவனே பிரபுவாகிறான்.
அத்தியாயம் 1, சுலோகம் 100
பிராமணன் சம்பளங் கொடுத் தேனும் கொடாமலேனும் சூத்திரனிடத் தில் வேலை வாங்கலாம். ஏனெனில்அவன் பிராமணன் வேலைக்காகவே பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டிருக் கிறானல்லவா?
-
அத்தியாயம் 8, சுலோகம் 413
யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன்பக்தியினால் வேலை செய்கிறவன்தன்னுடைய தேவடியாள் மகன்விலைக்கு வாங்கப்பட்டவன்ஒருவனால் கொடுக்கப்பட்டவன்குல வழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவன்குற்றத்திற்காக வேலை செய்கிறவன் என தொழிலாளிகள் எழு வகைப்படுவர்.
அத்தியாயம் 8, சுலோகம் 415
பிராமணன் சந்தேகமின்றி மேற் சொன்ன ஏழுவித தொழிலாளியான சூத்திரரிடத்தினின்று பொருளை வலிமையாலும் எடுத்துக் கொள்ளலாம். யஜமானனெடுத்துக் கொள்ளத்தக்கப் பொருளையுடைய அந்தச் சூத்திரர் தான் பொருளுக்குக் கொஞ்சமுஞ் சொந்தக்காரல்ல.
அத்தியாயம் 8, சுலோகம் 417
பிராமணன் தொழிலைச் செய்தா லும் சூத்திரன் பிராமண சாதியாகமாட் டான். ஏனென்றால்அவனுக்கு பிரா மண சாதித் தொழிலில் அதிகாரமில் லையல்லவாசூத்திரன் தொழிலைச் செய்தாலும் பிராமணன் சூத்திர சாதியாக மாட்டான். ஏனென்றால்அவன் ஈனத் தொழிலைச் செய்தாலும் அவன் சாதி உயர்ந்ததல்லவாஇப் படியே இந்த விஷயங்களைப் பிரம் மாவும் நிச்சயஞ் செய்திருக்கிறார்.
அத்தியாயம் 10, சுலோகம் 73
ஏர் பிடிக்கக் கூடாது!
பிராமணனும் சத்திரியனும் வைசி யன் தொழிலினால் ஜீவித்தபோதிலும் அதிக இம்சையுள்ளதாயும் பாரதீநமாயு மிருக்கிற பயிரிடுதலை அவசியம் நீக்க வேண்டியது.
அத்தியாயம் 10, சுலோகம் 83
சிலர் பயிரிடுதலை நல்ல தொழி லென்று நினைக்கிறார்கள். அந்தப் பிழைப்புப் பெரியோர்களால் நிந்திக்கப் பட்டது. ஏனெனில்இரும்பை  முகத்தி லேயுடைய கலப்பையும்மண்வெட்டி யும் பூமியையும்பூமியிலுண்டான பல பல ஜெந்துக்களையும் வெட்டுகிற தல்லவா?அத்தியாயம் 10, சுலோகம் 84
பெண்களும் மனுதர்மமும்
மாதர் ஆடவரிடத்தில் அழகையும் பருவத்தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மாத்திரம் முக்கியமாக எண்ணி அவர்களைப் புணருகிறாள்.
அத்தியாயம் 2, சுலோகம் 14
மாதர்கள் கற்பு நிலையின்மையும்நிலையாமனமும்நட்பு இன்மையும் இயற்கையாகவுடையவராதலால்கணவனாற் காக்கப்பட்டிருப்பினும் அவர்களை விரோதிக்கின்றார்கள்.
அத்தியாயம் 9, சுலோகம் 15
மாதர்களுக்கு இந்தச் சுபாவம் பிரம்மன் சிருட்டித்தபோதே உண் டானதென்று அறிந்து ஆடவர்கள் அவர்கள் கேடுறாமல் நடப்பதற்காக மேலான முயற்சி செய்ய வேண்டியது.
அத்தியாயம் சுலோகம் 16
படுக்கை,ஆசனம்அலங்காரம்காமம்கோபம்பொய்துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.
அத்தியாயம் 9, சுலோகம் 17
மாதர்களின் சுபாவமே மனிதர் களுக்கு சிருங்கார சேஷ்டைகளினால் தோஷத்தையுண்டு பண்ணும். ஆதலால்தெரிந்தவர்கள் அவர்களிடத்தில் அஜாக்கிரதையாயிரார்கள்.
அத்தியாயம் 2, சுலோகம் 213
ஜிதேந்திரியனாயிருந்தாலும்மூடனாயிருந்தாலும் அவனை மாதர்கள் தன் சம்பத்தினால் காமக் குரோதத்துக்கு உட்பட்டவனாகச் செய்கிறார்கள்.
அத்தியாயம் 2, சுலோகம் 214
தாய்தங்கைபெண் இவர்களுடனும் தனியாய் ஒன்றாக உட்காரக் கூடாது. இந்திரியங்களின் கூட்டமானது மிகவும் பலமுள்ளது. அது தெரிந்தவனையும் மயக்கி விடும்.
அத்தியாயம் 2, சுலோகம் 215
தானியம்லோகம்பசுஇவைகளைத் திருடுதல்குடிக்கிற மனையாளைப் புணர்தல்ஸ்திரிசூத்திரன்வைசியன்சத்திரியன் இவர்களைக் கொல்லுதல் இவையெல்லாம் தனித்தனியே உபபாத கமென்றறிக. (சிறிய குற்றம்)
அத்தியாயம் 11, சுலோகம் 66
சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் அறிவைகல்வியைக் கொடுக்கலாகாது. மனுதர்மம் என்பதுதான் இந்துலா என்ற இந்துச் சட்டத்திற்கு முக்கிய அடிப்படையாகும்.
இந்துலா என்ற இந்துச் சட்டத்தைஇந்திய அரசியல் சட்டத்தின் 372ஆவது விதி ஏற்று அமுல்படுத்த அனுமதி அளித்துள்ளது. எனவேஇந்த நாட்டின் பெரும் பான்மை மக்கள் சாஸ்திரப்படிசட்டப்படி (இந்து லாபடி) சூத்திரர்கள் அதாவது பார்ப்பனரின் தேவடியாள் மக்கள்
சுலோகம் 415படி
இம்மனுநீதி மனித தர்ம நீதிக்கு முற்றிலும் முரணானதால்
எரிப்ம்! எரிப்போம்!! எரிப்போம்!!!

விடுதலை ஞாயிறு மலர்,பக்2,13.12.14