செவ்வாய், 31 ஜனவரி, 2017

கிறிஸ்து மதமும் பணச் செலவும்



அமெரிக்க சர்வ கலா சாலையொன்றில் பேராசிரியராக திகழும் இந்திய தோழர் டாக்டர் சுதந்திர போஸ் பிரபுத்த பாரத என்ற பத்திரிகையில், கீழ்நாட்டில் கிறிஸ்துவ பாதிரிகள் செய்யும் வேலையைப் பற்றி எழுதியுள்ள குறிப்பின் சாராம்சம் வருமாறு:-

அமெரிக்க யுனைடெட் ஸ்டேட்ஸ் பிராட் டஸ்டான்ட் சர்ச்சானது வெளிநாடுகளில் தன் மதத்தை பரப்புவதற்காக மதப் பாதிரிகளை அனுப்பி வைக்கின்ற செலவு 4 கோடி டாலர்கள் ஆகின்றது. அதாவது ரூ.12 கோடி ரூபாய்களாகும்.

ரிபப்ளிக் நாடான சைனாவில் புராடஸ்டான்ட் மதத்தைச் சார்ந்தவர்களில் 120 பிரிவுகளுக்கு மேல் இருக்கின்றார்கள். இதுவரையில் அந்த நாட்டில் மாத்திரம் அரை லட்சம் கோடி டாலர்கள் செலவு செய்திருக்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் சைனா நாட்டில் உள்ள 700 நகரங்களில் 8000 பிராட்டஸ் டான்ட் மிஷினரிகள் இருந்து வந்தார்கள். ஆனால் இன்றைய தினமோ 5000 மெஷினரிகள் தான் 400 நகரங்களில் மாத்திரம் வசித்து வருகிறார்கள். கத்தோலிக் கிறிஸ்துவ பாதிரி மிஷினிகளோ, சில ஆண்டுகளுக்கு முன்பு 4000 பேர்கள் இருந்தவர்கள், இன்றைய தினம் 200, 300 மிஷினரிகளுக்கும் குறை வாகவே இருந்து வருகிறார்கள்.

அய்க்கிய அமெரிக்க நாட்டின் லுதர்ன் சர்ச் பொருளாளரான டாக்டர் கிளாரன்ஸ் இ.மில்லர் சமீபத்தில் தெரிவிக்கிறதாவது:- ஒரு சைனாக்காரரை கிறிஸ்துவர் என்ற மதமாற்றத்திற்கு கொண்டு வருவதற்கு ரூ.1300 வீதம் செலவாகி வருகிறது. இந்த கணக்குப்படி இயேசுநாதரின் பெயரை சைனா நாட்டில் நிலை நிறுத்த வேண்டுமானால் 175 லட்சம் கோடி டாலர்கள் ரிசர்வ் ஆக்க வேண்டும்.

இதிலிருந்து கோடிக்கணக்கான டாலர்களை மதத்தின் பேரால் செலவு செய்யும் கிறிஸ்து மதமாகட்டும், அன்றி வேறு எந்த மதமாகட்டும் முன்னேறுவதற்கு வழியின்றி சிதைந்து வருவது ஏன் என்று மக்கள் ஆலோசித்து பார்ப்பார்களாக.

- 30.7.1933, குடிஅரசு

-விடுதலை,19.9.14

வெள்ளி, 27 ஜனவரி, 2017

அய்யப்பனைக் காப்பாற்றிய சிறுநீர்!

கடந்த 17.1.1978-இல் இந்தியன் எக்ஸ்பிரஸ் கொச்சியிலிருந்து வெளியிடும் செய்தித்தாளை படிக்க நேர்ந்தது. அதில் எக்ஸ்பிரஸ் நியூஸ் சர்வீஸ் என்ற பகுதியில் ஒரு செய்தியை படித்து வியப்பும் அதேபோல் சிரிப்பும் உண்டாயிற்று.

அய்யப்பப் பக்தர்கள் தான் இதற்குப் பதில் கூற வேண்டும். அதில் கண்டுள்ள செய்தியின் தமிழ் மொழியாக்கம் இதோ!

‘Urln Quers Fire’

(எக்ஸ்பிரஸ் நியூஸ் சர்வீஸ்), கோட்டயம், ஜனவரி -16, சிறுநீர் மீண்டும் செய்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சற்றும் எதிர்பாராத இடங்களில் கூட ஆச்சரியப்படத்தக்க செயல்களைப் புரிந்துள்ளது. சிறுநீரின் உபயோகம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் கும்பளம் தோடி என்ற சபரிமலை வனப்பிரிவைச் சேர்ந்த பகுதி சாம்பலாகி இருக்கும். சபரிமலையின் எல்லா பகுதிகளும் காவல் புரிந்து வந்த காவல்துறையினர் ஜனவரி 9ஆம் தேதியன்று கும்பளம்தோடி என்ற பகுதியில் தீப்பிடித்துள்ளதாக கம்பியில்லாத் தொலைபேசி மூலமாக தலைமை அதிகாரிகளுக்கு செய்தி அனுப்பினர். காவல்துறை தனி அலுவலர் திரு. பி.ஆர்.மேனன் உடனடியாக 100 காவலர்களை இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்களின் தலைமையில் தீக்கிரையாகி கொண்டிருக்கும்

பகுதிக்கு விரைந்து சென்று தீயணைக்கும் பணியை தீவிரமாக தொடங்கும்படி கட்டளையிட்டார். தீ மிகவும் அசுர வேகத்தில் பரவிக் கொண்டு கடவுள் அய்யப்பனின் தலமாகிய அந்த அடர்ந்த காட்டையே அழிக்கும் நிலைக்கு எத்தனித்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் காவல் படையினர் அந்த இடத்தை சென்றடைந்தனர். அருகில் தண்ணீர் வசதியோ போதுமான அளவு மணலோ கிடையாது. காவலர்கள் என்ன செய்வது என்று அறியாமல் குழப்பத்திற்கிடையே கையற்ற நிலையில் தவித்துப் போயினர். ஆனால் தனி ஆயுதக் காவல்பிரிவைச் சார்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபாலும், கேரள ஆயுதக் காவல் பிரிவைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் பால்ராமும் பலவிதமான சிந்தனையில் ஈடுபட்டனர். இறுதியாக ஒரு விந்தையான எண்ணம் அவர்களுக்குத் தோன்றியது போலும். ஒரே சமயத்தில் 100 காவலர்களையும் தீயை நோக்கி சிறுநீர் விடும்படி அந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் கட்டளையிட்டனர். தீ மெதுவாக தணிந்தது. முடிவாக அணைக்கப்பட்டு விட்டது. சில தினங்களுக்கு முன்னர் மகர விளக்கு விழாவிற்காக சபரிமலைக்குச் சென்ற செய்தியாளர்களிடமும் இந்நிகழ்ச்சிகளை தனிக்காவலர் அலுவலர் மேனன் அவர்கள் விளக்கினார். தக்க சமயத்தில் செயல்புரிந்து  வரவிருந்த பெரும் விளைவை தடுத்த தற்காக அந்த சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும், அவர்கள் சேவையை பாராட்டி தகுந்த பரிசுகள் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

(ஆதாரம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்-
17.1.1978, செவ்வாய், கொச்சி பதிப்பு

-விடுதலை,23.5.14

புத்தரின் ஆத்மா மறுப்பு



புத்தர் கோசல நாட்டில் பயணம் மேற்கொண்டிருந்த போது, ஒரு பார்ப்பனர் ஆத்மா (உயிர்) பற்றி உங்கள் கருத்தென்ன? என்று வினவினார்.

ஆத்மா (உயிர்) எதையும் அறியக்கூடியது என்று வாதத்திற்காக வைத்துக் கொள்ளுங்கள்? கண்களைத் தோண்டி விட்டால், அந்த ஆத்மாவால் (உயிரால்) பார்க்கமுடியுமா? காதுகளைச் செவிடு ஆக்கிவிட்டால் ஆத்மாவால் கேட்கமுடியுமா? மூக்கை எடுத்துவிட்டால் நாற்றத்தை ஆத்மாவால் உணர முடியுமா?

நாக்கை அறுத்துவிட்டால் ருசி அறிய, பேச ஆத்மாவால் (உயிரால்) முடியுமா? என்று கேட்டுவிட்டு மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையற்ற சிந்தனைகள் இவையென்றும் சொல்லிக் கொண்டே நடந்தார்.

-விடுதலை,30.5.14

கடவுள் எங்கே இருக்கிறான்?




ஜெபமாலை உருட்டுவதை விடு, அத்துடன் பாட்டையும், மந்திரத்தையும் விட்டு விடு. தாளிட்ட கோயிலில் இருண்ட மூலையில் யாரைப் பூசிக்கிறாய்? கண்களைத் திற, கடவுள் உன்முன் இல்லை என்பதை அறி. நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பாடுபடும் பாட்டாளி மக்களிடமும், ஏழை விவசாயிகளிடமும் கடவுள் இருக்கிறான்.

அவர்களுடன் வெயிலிலும், மழையிலும் உழைக்கும் அவர்களுடைய ஆடையில் தூசி படிந்திருப்பதை பார். ஆகவே, நீயுங்கூட உன் காஷாயத்தை விலக்கி, மண்ணில் வந்து உழைக்க வா! கடவுளின் அருள் உனக்குக்கிட்ட இதை விடச் சுலபமான வழியும் கிடையாது

குறிப்பு: கோயிலில் கடவுள் இருக்கிறார் என்பதை மறுக்கிறார், அந்தக்கால சீர்திருத்தக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர்.

ஆதியிலே வழிபாட்டுக் கார்ந்த பெருங்கோயில் பல
ஜாதிமதச் சாக்கடையாய்ச் சண்டாளர் இருப்பிடமாய்
நீதிஅறம் அழித்து வரல்
நிர்மலனே நீ அறிவாய்
கோதுகளை அறுத்தொழித்துக்
குணம் பெருகச் செய்யாயோ?

- திரு.வி.க.

-விடுதலை,30.5.14

பூசணிக்காய் மகத்துவம்




புராணத்திலே கூறப்பட்டுள்ள கடவுள்கள் எப்படித் தோன்றினர் என்ற செய்திகளை நாம் படிக்க நேரிடும் போது பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மக்களின் அறிவின்மையும் முட்டாள்தனமும் அவர்களுடைய விபரீதமான கற்பனையும் நமக்கு நன்கு தெளிவாகின்றது. அது - விஞ்ஞானம் வளராத காலம்.

மக்கள் அறிவுப்பூர்வமாக சிந்திக்காமல் இருந்த காலம்.

அவ்வாறு அவர்களை சிந்திக்க விடாமல் அந்த கடவுளைக் கற்பித்தவர்கள் மக்களை முட்டாள்களாக்கி விட்டிருந்த காலம்.

அவரவர் வசதி, கற்பனைக்கு ஏற்றவாறு கடவுளை கற்பனை செய்து பரப்பியவர் களும் அதை நம்பி ஏமாந்தவர்களும் வாழ்ந்த காலம்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்தும் மக்களுடைய சிந்தனை, அறிவு இரண்டுமே இன்னும் புதுப்புதுக் கடவுள்களைக் கற்பிப்பதில்தான் ஈடுபட்டு இருக்கிறது. உண்மையைச் சிந்திக்க மறுப்பதோடு தங்கள் கற்பனையைத்தான் வளர்த்து வருகின்றார்கள்.

கல்லைக் கடவுள் என்றார்கள் - அதை வணங்கினார்கள். அதற்குப் பால் அபிசேகம், நெய் அபிசேகம் நடத்தினார்கள். எண்ணெய்க் காப்பு சாத்தினார்கள். சாணிக்கு பொட்டிட்டார்கள் - சாமி என்றார்கள். கடவுளின் பெயரால் காலத்தையும் செல்வத்தையும் தங்கள் சக்தியையும் வீணாக்கினார்கள்.

இன்று இதோ ஒரு புதுக் கற்பனை!

திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள பல் குலங்கரா என்ற ஊரில் பூசணிக்காய்ப் பொட்டிட ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கு ஊதுபத்தி கற்பூர ஆரத்தி காட்டி இருக்கிறார்கள். பால், நெய் என்றும் இன்னோரன்ன நைவேத்தியம் படைத்து இருக்கிறார்கள்.

இத்தனையும் செடியிலே பந்து போல் குண்டாகக் காய்க்காமல் நீள் வடிவத்திலே பாம்புபோல் காய்த்துள்ள பூசணிக்காய்க்கு அடித்த சான்ஸ். தினமும் பக்த கோடிகள் ஆயிரக்கணக்கில் அந்த பூசணிக்காயைக் கும்பிட விஜயம் செய்கின்றனர்.

வளைந்து காய்ந்த பூசணிக்காயைக் கடவுள் என்று வணங்கும் பக்தர்களே! கடவுள் உண்மையில் இருப்பாரேயானால் அந்தச் செடியிலே காய்த்துள்ள அந்த பூசணிக்காய் இன்னும் குறைந்தபட்சம் ஆறு மாதமாவது காய்ந்துப் போகாமல் இருக்குமா?

ஒரு பூசணிக்காய் இயற்கைக்கு மாறாக வளைந்து காய்த்ததைக் கடவுள் என்று வணங்குகிறீர்களே...! உலகத்தில் இயற்கையாக பிறவாமல் வளைந்த முதுகோடு (கூன்) பிறக்கிறார்களே அவர்கள் எல்லாம் கடவுள்களா? அல்லது பிறவிக் கோளாறுகளோடு பிறக்கிறார்களே அவர்களெல்லாம் கடவுள்களா? அவர்களுக்கு பாலாபிசேகமும், நெய்யாபிசேகமும் செய்தீர்களா? அல்லது செய்ய முன் வருவீர்களா?

இன்னுமொரு சுவையான செய்தி... இந்தப் பெயரைச் சொல்லி பண்ட் கலெக்சன் செய்ய ஆரம்பித்திருக்கிறார்களாம். இது என்ன நீங்கள் செய்கின்ற விபரீதமான கற்பனைக்கு கூலியா?

ஆதாரம்: இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு, நாள்: 26.5.1978
-விடுதலை,30.5.14

வியாழன், 12 ஜனவரி, 2017

வாரியாருக்கு வாயடைப்பு




திருவாரூரில் படித்துக் கொண்டிருக்கும் போது எங்கள் ஊருக்கு காலட்சேபம் செய்ய திருமுருக கிருபானந்த வாரியார் அடிக்கடி வருவார். அவரைக் கலாட்டா செய்ய வேண்டுமென்பதற்காகவே, பள்ளிக் கூடத்திற்கு டிமிக்கி கொடுத்து விட்டு நண்பர்களுடன் செல்வேன்.

காலட்சேபத்தில் கதை கூறும்போது திரு.வாரியார் அவர்கள், உயிருள்ள ஒன்றையும் - மிருகங்களையோ, பறவைகளையோ கொன்று மனிதன் சாப்பிடுவதற்காக கடவுள் படைக்கவில்லை என்றார். நான் எழுந்து, சிங்கத்திற்கு கடவுள் என்ன உணவை படைத்தார் என அவரிடம் கேட்டேன்.

வாரியார் என்னை உட்காரும் படி அடக்கிவிட்டு தாவரங்களுக்கு உயிர் இருக்கிறதே, அதைச் சாப்பிட லாமா? என்று மாமிசம் உண்போர் கேட்பார்கள். காய்கறி களை பறித்தபின் அவைகளின் வளர்ச்சி தடைப்படு வதில்லை. ஆனால், மனிதன் காய்கறிகளைத் தாராளமாக உண்ணலாம்; இது யாருக்கும் தெரியாது என்றார்.

உடனே நான் எழுந்து, கீரைத் தண்டை வேரோடு பறித்து உண்கிறோம்; அது எப்படி? என்று கேட்டேன். மறுபடியும் என்னை அடக்கி உட்கார வைத்தார் வாரியார்.

அன்று நான் எழுப்பிய கேள்விக்கு இன்று வரை பதில் கிடைக்கவில்லை. அதனால் நானும் என்கொள்கையை மாற்றிக் கொள்ளவில்லை.

- கலைஞர்,  ஆதாரம்: சுடர் கொழும்பு

எவன் பிராமணன்?



எழுத்துரு அளவு    ஒரு பிரா மணனோ அல்லது வேறு யாரோ, தாம் உயர்ந்தவர் என்று உரிமை கொண்டாடும் போது, பிராமணரல் லாதார் அதை எதிர்த்துப் போரிட் டால் அதை முழுக்க முழுக்க நான் ஆதரிக்கிறேன்.

நான் உயர்ந்தவன் என்று உரிமை கொண் டாடுபவன் மனிதன் என்று அழைக்கப்படுவதற்கு உரியவன் அல்லன். ஒரு பிராமணன் பணம் சம்பாதிப்பதில் இறங்கிவிட்டால் அவன் பிராமணன் அல்லன்.

- காந்தியார் 16.9.1927 அன்று தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில்

-விடுதலை,12.9.14

பூமியை அரசர்கள் மாறி மாறி ஆள்வதேன்?


சிவனும் பார்வதியும் நூறு தேவ வருட காலம் புணர்ந்து கொண்டிருந்தும் விந்து வெளிப்படாத நிலையில், தேவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, சிவனிடம் சென்று புணர்ச்சியை நிறுத்தும்படி வேண்டினர்.

ஏனெனில், இவ்வளவு நீண்ட காலப் புணர்ச்சியின் காரணமாக ஒரு பிள்ளை பிறந்தால் நாடு தாங்காதாம். வேறு வழியின்றி சிவன் விந்துவை வெளியில் விட்டான்.

விந்து ஸ்கலிதமாகும் நேரத்தில் தேவர்கள் இப்படிக் கெடுத்து விட்டார்களே என்று ஆத்திரத்தில், அவர்களின் மனைவிகள் எல்லாம் மலடாக போகக்கடவது என்று பார்வதி தேவியார் சாபமிட்டாளாம்.

மற்றும் தனது கர்ப்பத்தில் விழவேண்டிய விந்து, பூமியில் விழுந்ததால், பூமாதேவி மீது பார்வதிக்கு கோபம்! பூமாதேவியை தனது சக்களத்தியாக பார்வதி கருதி, அவளை (பூமியை) பல பேர் ஆள வேண்டும் என்று சபித்தாளாம். அதன் காரணமாகத்தான் பூமியை மாறி மாறி அரசர்கள் ஆளுகின்றார்களாம்.

ஆதாரம்: வால்மீகி இராமாயணம்


பாவ புண்ணியம்

சமுதாயத்தில் உயர்ந்த வகுப்பார் - தாழ்ந்த வகுப்பார் என்ற பிரிவினை இருப்பது அவரவர்களின் பூர்வ ஜென்ம பலனே என்று கூறுகிறார்கள். இது வெறும் கற்பனையே.

பாவம் செய்தவர்கள் தாழ்ந்த வகுப்பினராகவும், புண்ணியம் செய்தவர்கள் உயர் வகுப்பின ராகவும் பிறப்பதாக சொல்கிறார்களே, முன்ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் எதற்காக மறு படியும் பிறக்க வேண்டும் என்பதை யோசிக்க வேண்டாமா?

ஏற்றத்தாழ்வுகளுக்குக் காரணம், முன்ஜென்ம பாவ புண்ணியம் என்று கூறுவது தவறானதாகும். மக்கள் மாற்றிக் கொண்டாக வேண்டும்.

28.7.1963 அன்று அய்தராபாத் பொதுக் கூட்டத்தில் நேரு



சிவனும் பார்வதியும் நூறு தேவ வருட காலம் புணர்ந்து கொண்டிருந்தும் விந்து வெளிப்படாத நிலையில், தேவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, சிவனிடம் சென்று புணர்ச்சியை நிறுத்தும்படி வேண்டினர்.

ஏனெனில், இவ்வளவு நீண்ட காலப் புணர்ச்சியின் காரணமாக ஒரு பிள்ளை பிறந்தால் நாடு தாங்காதாம். வேறு வழியின்றி சிவன் விந்துவை வெளியில் விட்டான்.

விந்து ஸ்கலிதமாகும் நேரத்தில் தேவர்கள் இப்படிக் கெடுத்து விட்டார்களே என்று ஆத்திரத்தில், அவர்களின் மனைவிகள் எல்லாம் மலடாக போகக்கடவது என்று பார்வதி தேவியார் சாபமிட்டாளாம்.

மற்றும் தனது கர்ப்பத்தில் விழவேண்டிய விந்து, பூமியில் விழுந்ததால், பூமாதேவி மீது பார்வதிக்கு கோபம்! பூமாதேவியை தனது சக்களத்தியாக பார்வதி கருதி, அவளை (பூமியை) பல பேர் ஆள வேண்டும் என்று சபித்தாளாம். அதன் காரணமாகத்தான் பூமியை மாறி மாறி அரசர்கள் ஆளுகின்றார்களாம்.

ஆதாரம்: வால்மீகி இராமாயணம்

பாவ புண்ணியம்




சமுதாயத்தில் உயர்ந்த வகுப்பார் - தாழ்ந்த வகுப்பார் என்ற பிரிவினை இருப்பது அவரவர்களின் பூர்வ ஜென்ம பலனே என்று கூறுகிறார்கள். இது வெறும் கற்பனையே.

பாவம் செய்தவர்கள் தாழ்ந்த வகுப்பினராகவும், புண்ணியம் செய்தவர்கள் உயர் வகுப்பின ராகவும் பிறப்பதாக சொல்கிறார்களே, முன்ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் எதற்காக மறு படியும் பிறக்க வேண்டும் என்பதை யோசிக்க வேண்டாமா?

ஏற்றத்தாழ்வுகளுக்குக் காரணம், முன்ஜென்ம பாவ புண்ணியம் என்று கூறுவது தவறானதாகும். மக்கள் மாற்றிக் கொண்டாக வேண்டும்.

28.7.1963 அன்று அய்தராபாத் பொதுக் கூட்டத்தில் நேரு
-விடுதலை,12.9.14

செவ்வாய், 10 ஜனவரி, 2017

அல்லா கிறித்தவர்கள் பயன்படுத்தலாமா?




கோலாலம்பூர், ஜூன் 24- "அல்லா" என்ற வார்த் தையை முஸ்லிம் கட வுளைக் குறிக்க மட்டுமே என்று  மலேசிய உச்சநீதி மன்றம் கூறி உள்ளது. மலேசியாவில் சிறுபான் மைக் கிறித்தவர்கள் தங்கள் கடவுளைக் குறிக்க 'அல்லா' என்ற வார்த்தை யைப் பயன்படுத்துவற்கு எதிராக உயர்நீதிமன்றம் விதித்த தடையை அந் நாட்டின் உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. இது தொடர்பாக அந்நாட் டின் கத்தோலிக்கர்கள் தொடர்ந்த வழக்கின் மேல் முறையீட்டு மனுவை நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4பேரில் 3பேர்  ஏற்காமல் நிராகரித்து தள்ளுபடி செய்தனர். மலேசியாவில் 2007_லிருந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம், கத் தோலிக்கத் திருச்சபையின் செய்திப் பத்திரிகையான, 'ஹெரால்ட்' இதழால் 2009ல் முதலில் நீதிமன்றத் துக்குக் கொண்டு செல்லப் பட்டது. முதல் கிழமை நீதிமன்றத்தில் கத் தோலிக்கர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்தது. ஆனால், அத்தீர்ப்பை உயர்நீதிமன்றம் நிராக ரித்தது. பின்னர், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கத்தோலிக்கர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். ஹெரால்ட் பத்திரிகையின் மலாய் மொழிப் பதிப்பில், முதலில் அல்லா என்ற சொல் கடவுளைக் குறிக் கப் பயன்படுத்தப்பட்டதை எதிர்த்து எழுந்த சர்ச் சையை அடுத்து, அரசால் இந்தச் சொல் கிறித்த வர்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது.

ஆனால், கடவுள் என்ற பொருளில் வழங்கப்படும், அல்லா என்ற சொல்லை, தங்களது கடவுளைக் குறிக்கப் பல நூற்றாண்டு களாகவே தாங்கள் பயன் படுத்தி வருவதாகக் கிறித்த வர்கள் வாதிட்டனர். இந்த வார்த்தையை மலாய் மொழியில் கடவுளர் களைக் குறிக்க அனைத்து மதத்தினரும் பயன்படுத் துகின்றனர். ஆனால், இந்த வார்த் தையைக் கிறித்தவர்கள் பயன்படுத்துவது முஸ்லீம் களைக் குழப்பிவிடும் என்றும், சில முஸ்லீம்கள் மதம் மாறவும் அது வழி செய்யும் என்றும் அரசு கூறியது. இந்தத் தீர்ப்பு தங்களுக்கு ஏமாற் றமளிப்பதாக, ஹெரால்ட் பத்திரிகையின் ஆசிரியர் அருள்தந்தை லாரான்ச் ஆண்ட்ரூ கூறினார். இது சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைப் பற்றி எதுவும் கூறவில்லை என்றும் அவர் தெரி வித்தார்.

நீதிமன்றத்துக்கு வெளியே காத்திருந்த முஸ்லீம் ஆர்வலர்கள் இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்தத் தீர்ப்பு வழக்குகள் முடி வடைவதைக் குறிப்பதாகக் கூறிய திருச்சபைக்காக வாதாடிய வழக்குரைஞர் எஸ்.செல்வராஜா, முஸ்லீம் அல்லாதவர்கள் அல்லா என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கு ஒட்டுமொத்தத் தடையை இது விதிப்பதாகக் கூறி னார்.  இந்தத் தீர்ப்பை மறு ஆய்வ செய்ய திருச்சபை கோரக்கூடும் என்று சில மலேசிய இதழ்களில் வெளி வந்திருக்கும் செய் திகள் கூறுகின்றன.
-விடுதலை,24.6.14

ஞாயிறு, 8 ஜனவரி, 2017

இறைவனைக் கொலைகாரனாகவும் திருடனாகவும் குறிப்பிடும் மந்திரங்கள்

-மறைமலை இலக்குவனார்

வழிபாடு செய்வதற்குப் புரியாத வடமொழியின் துணை எதற்கு? தாய்மொழியில் வழிபாடு செய்தால் இறைவனுக்குப் புரியாதா என்று இறையன்பர்கள் சிந்திக்கவேண்டும். கடவுள் நம்பிக்கை தமிழ் மரபைப் பொறுத்தவரை வேள்விச் சடங்குகள் அல்ல. தமிழ் மொழியில் வணங்கிக் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்குவதேயாகும். எனவே சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லவேண்டும் என்றார் மாணிக்கவாசகர். ஆனால் நடப்பதென்ன?

கோயில்களில் தம் தாய்மொழியில் வழிபாடு செய்யும் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ளதே! புரியாத மொழியில் வழிபாடு நடப்பதால் எவ்வளவு பெரும்பிழைகள் நேருகின்றன?
சிவன் கோவில்களில் திருமுழுக்காட்டு (அபிசேகம்) நடக்கும் போதெல்லாம் ரீருத்திரம் என்பதே ஓதப்படுகிறது. யசுர்வேதத்தின் பகுதியாக அமைந்துள்ள இந்த ரீருத்திரம் இறைவனை எவ்வாறு அழைக்கிறது தெரியுமா?

நமோ ஸிமத்ப்யோ நக்தம் சரத்ப்ய: ப்ரக்ருந்தானாம் பதயே நமோ 3.1:7

வாளேந்தி வருபவர்களாகவும், பிறர் பொருளைக் கவரவென இரவில் சஞ்சரிப்பவர்களாகவும், அதற்கெனக் கொன்று அலைபவர்களின் தலைவனே! போற்றி! போற்றி! [3.1:7]
நம: உஷ்ணீ ஷிணே கிரிசராய குலுஞ்சானாம் பதயே நமோ 3.1:8
தலையிலொரு துண்டுகட்டி, மலைவாசிபோல் முகம் மறைத்து

வயல்களிலும் வீடுகளிலும் திருடுபவர் தலைவனே! போற்றி! போற்றி! [3.1:8]  

(நமகம்:மூன்றாவது அனுவாகம்)

இறைவனைக் கொலைகாரனாகவும் திருடனாகவும் குறிப்பிடும் மந்திரங்கள் திருமுழுக்காட்டின் போதெல்லாம் நிகழ்த்தப்படுவது அடியார்களுக்குத் தெரியுமா?

இந்த வடமொழியை விலக்கித் தமிழில் அமைந்த தேவாரம்,திருவாசகத்தில் பாடினால் பொருள்புரியுமல்லவா?அந்த உரிமைக்கு ஏன் போராடக்கூடாது?

நம் கோயில்களில் நம் மொழியில் வழிபட உரிமை இல்லையா?என்றாவது அடியார்கள் சிந்தித்தார்களா?

-விடுதலை,6.8.16(ஒரு பகுதி கட்டுரை)

சனி, 7 ஜனவரி, 2017

சொர்க்கவாசல் மூடத்தனம்!

 
மார்கழி மாதம் அல்லவா - வைணவர்கள் கொண்டாடித் தீர்ப்பார்கள். உச்சகட்டமாக வைணவக் கோவில்களில் குறிப்பாக சிறீரங்கம் ரங்கநாதன் கோவில் வைகுண்ட ஏகாதசி ஏகப்பட்ட பிரபல்யம். விடியற்காலை சொர்க்கவாசலில் நுழைவார்கள். அடேயப்பா, அவ்வளவு குதூகலம்!
நாம் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான். அப்படி சொர்க்கவாசல் நுழைந்தவர்கள் - அப்படியே சொர்க்கம் போக வேண்டியதுதானே - பிறகு ஏன் வீட்டுக்குத் திரும்பி வருகிறார்களாம்? இந்த சொர்க்க வாசலின் கதை என்ன தெரியுமா? கேளுங்கள்! கேளுங்கள்!!
“நாகப்பட்டினத்தில் இருந்து ஜைனக் கோவிலின் பொன் விக்கிரகத்தைத் திருடி வந்து, அதை உருக்கி எடுத்துப் பணமாக்கி, திருமங்கை ஆழ்வார் என்ற நாமக்காரன் சிறீரங்கம் கோவிலின் மதில்களைக் கட்டினான். ஆனால், அக்கோவிலின் மதில்களையும், கட்டடங்களையும் கட்டிய தொழிலாளிகளுக்கோ அந்தக் கோவிலின் சின்னத்தையே - அதாவது ‘நாமத்’தையே சாத்திவிட்டான். கூலி கேட்ட தொழிலாளர்களை ஓடத்தில் ஏற்றி, திரவியம் தருகிறேன் என்று கூறி, காவிரி தீரத்தில் கொண்டு போய்க் கவிழ்த்துக் கொன்றுவிட்டான் - ஓடக்காரன் துணையோடு.
அவர்களை ஆற்று வெள்ளத்தில் தள்ளி, படுகொலை செய்த இடத்திற்குக் ‘கொள்ளிடம்‘ என்றும், அந்தத் துறைக்குப் ‘பார்வானத்துறை’ (பார்வானம் - சுடுகாடு, பார் வணம் - சிரார்த்தம் செய்யும் இடம்) என்றும் பெயரிட ஆண்டவனிடம் இறைஞ்ச, அவ்வாறே அளிக்கப்பட்டு, அன்று கொல்லப்பட்டவர்களுக்கெல்லாம் ‘முக்தி’யும் அளிக்கப் பட்டதாம்! (‘திருமங்கை ஆழ்வார் வைபவம்‘ என்ற நூல் ஆதாரப்படி).
சிறீரங்கம் வைகுண்ட ஏகாதசியின்போது திறக்கப்படு கின்றதே ‘சொர்க்கவாசல்’ - அது எங்கே செல்லுவது தெரியுமா? திருமங்கை ஆழ்வார் கொள்ளிடக்கரையில் தொழிலாளர்களைக் கொன்று சிரார்த்தம் செய்த அந்தப் பார்வனத் துறைக்குத் தான் செல்லுகிறதாம்! சொர்க்கவாசல் மகிமையின் வண்டவாளம் என்ன என்பது இப்போது புரிகிறதா?
இது அறிவுக்குப் பொருந்துகிறதா? என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்தக் கதையின்மூலம் என்ன அறியப்படுகிறது? தொழிலாளர்களைக் கொன்று குவித்தது எவ்வளவுப் பெரிய அயோக்கியத்தனம் - படுபாதகம் - சூழ்ச்சி?
இதற்கொரு விழா கேடா? வைணவர் - வைகுண்ட ஏகாதசி என்றால் சைவர்கள் சும்மா இருப்பார்களா? சிவராத்திரி என்ற ஒரு கதையை வைப்பார்கள். ஒரு மதத்துக்குள்ளேயே போட்டிக்கடைதானே இவை?
அது சரி, இந்த சிறீ ரங்கநாதனின் சக்தி என்ன தெரியுமா? ‘இந்து’ ஆங்கில ஏடு 1959 இல் வெளியிட்ட செய்தி இதோ:
A serious fire accident occurred on March 22 in the famous Ranganathar temple in Srirangam. At about 9-15 a.m., smoke was seen shooting from the sanctum sanctorum. Immediately on receipt of information, Mr.K.K. Menon, Executive Officer of the Srirangam Devasthanam, rushed in along with several others carrying potfuls of water and sand. Meanwhile, the fire brigade was sent for from Tiruchi. It arrived soon and all efforts were made to put out the fire which took nearly three hours. As the annual Panguni festival is now in progress, the utsavar idols were not in the sanctum sanctorum at the time of the fire disaster. It is stated that the gold vimanum over the sanctum sanctorum has not been affected by the fire.
இதன் தமிழாக்கம் வருமாறு:
‘‘திருச்சிக்கு அருகே உள்ள சிறீரங்கநாதர் கோவி லில் 1959 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது, காலை வேளையில் பூசைகள் நடந்துகொண்டு இருந்தபோது கோவில் கருவறையில் இருந்து புகைமூட்டம் ஏற்பட்டது, சில நிமிடங்களில் இந்த புகைமூட்டம் தீப்பிழம்பாக  மாறி கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. உடனடியாக கோவில் நிர்வாகி கே.கே.மேனனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து கோவில் நிர்வாகிகள் மண் மற்றும் நீரை எடுத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். திருச்சி நகர தீயணைப்புப் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் அவர்களும் வந்து தீயை அணைக்கும்  பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. பங்குனி மாத திருவிழாவிற்கு கோவில் நிர்வாகம் தயாராகிக்கொண்டு இருந்தபோது இந்தத் தீவிபத்து ஏற்பட்டது குறிப்பிடத் தக்கதாகும். தீவிபத்தின் போது மூலவர் கருவறையில் இருந்து வெளியேற்றப்பட்ட காரணத்தால் மூலவர் சிலை தீயிலிருந்து தப்பித்துவிட்டது’’ என்பது ‘இந்து’ ஏட்டின் செய்தி.
புரிகிறதா? சிறீரங்க நாதர் வெடித்துச் சிதறாமல் தப்பிய தற்கே காரணம், அதனை அவசர அவசரமாக வெளியேற்றியதுதான்.
பக்தர்களே, பதறாமல் புத்தியோடு சிந்திப்பீர்!
கடவுளையே மனிதன் காப்பாற்றவேண்டியுள்ளது. அப்படி யிருக்க மார்கழி மாத விரதமும், சொர்க்க வாசல் மகிமையும் அசல் முட்டாள்தனம் அல்லவா!


-விடுதலை,7.1.17

கார்த்திகை தீபத்தின் கர்த்தா யார்? (2)&(3)

- இரா.கண்ணிமை -

நேற்றையத் தொடர்ச்சி....
சிவனைப் பற்றி - ஆராய்ச்சியில் ஜைனமதத்தில் காணும் சில செய்திகள்: இக்காலத்திலுள்ள ஜைன பக்தர்களைப்போல் - முற்காலத்தில் இருந்த ஜைனர்கள் சிவனை தெய்வமாய்த் தொழுதார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஏன் எனில் ஜைனர் வணங்கும் சிவனுக்கும் - சைவர் வணங்கும் சிவனுக்கும் உள்ள வேறுபாட்டை கீழ்வரும் சமஸ்கிருத சுலோகத்தால் - ஒரு ஜைனன் - சைவ மதத்தைக் கண்டிப்பதைக் காணலாம்.
சுலோகம்
தத்தம்யேன புரத்ரயம் சரபுவா தீவ்ராச்சி ஷாவஹ்கினா
யோவந்ருத்யதி மத்தவத் பித்ருவனே யாத்வ யாத்ந் கோவாகுஹ
சோயம் கிம்மம சங்கரோ பயத்ருசாரோ ஷார்த்தி மோஹக்ஷயம்
க்ருத்வாய ஸ்துர் ஸர்வ வித்தனுப்ருதாம் ஷேமங்கர சங்கர
பொருள்: சுடுகாட்டிலிருந்தெழும் கடும் ஜூவாலை வீசும் அக்னியால் எவன் திரிபுர சம்மாரம் செய்தானோ  - (விஷ்ணு மாயைக்குட்பட்ட பக்தன் என்று அறியாமையால் சுட்டெரித்தான் என்று பொருள்)
பித்தன்போல், எவன் சுடுகாட்டில் ஆடுகிறானோ அவன் என் வணக்கத்திற்குரியவன் அல்ல என்பதாம்.
சுலோகம்
ஈசாகிம் சின்ன லிங்கோய திவிகதபய
சூலபாணி கதம்ஸ்யாத்
நாதகிம பை க்ஷசாரி யாதிரி  ஸகதம்
ஸாங்கன ஸாத்ம ஜங்ச
ஆர்த்ராக கிம்த்வஜன்மா ஸகல விவதி
கிம்வேந்தி நாத்மாந்த்ராயம்
ஸம்க்ஷோபாத் ஸ்ம்யருக்தம் பசுபதிம பசு
கோத்ரதீ பானு பாஸ்தே!
பொருள்: முறிந்தலிங்கம் (ஆண் குறி) கடவுளாகுமோ? தீரவீரனானால் சூலம் கரம் தாங்குவதேன்? உலகிற்கே இறைவனானால் பிச்சையேற்று (யாசித்து) உண்பதேன்? மனைவி மக்களுடன் கூடியிருப்பவன் துறவி (யதிதி) யாவதெப்படி? பிறப்பு இறப்பு அற்றவன் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தான் என்றால் அர்த்தம் என்ன? தனக்கு எதிர்காலத்தில் வரவிருக்கும் இடையூறை அறியும் வகையற்றவன் தெய்வம் என்றால் எப்படி? - என்பதாம்.
- ஜைனர் வணங்கும் சிவனின் அடையாளங்கள்-
சுலோகம்
மயாநாஸ்தி ஜடாக பாலமுகுடம் சந்த்ரோர்ண மூர்த்தாவி கட்வாங்கம் நசவாசுகிர் நசதனு சூலம் நசோகீரம் முகம் காமோ யாஸ்ய நகாமினி நசவ் ருஷோகீதம் நந்ருத்யம்புன யோஸ்பர்ன பாது நிரஞ்சனோ நிருபம்  ஸர்வத்ரஸீக்ஷம சிவ.
பொருள்: மாயையற்றவனும், யாசகம் எடுக்கும் பாத்திரம், ஜடை தலையோடு இல்லாதவனும், கிரீடம், இளம்பிறை, தண் ணீர், கட்வாங்கம், வாசுகி, வில் சூலாயுதம், கடுகுமுகம், காமம், அழகிய பெண், ரிஷபம், பாட்டு, கூத்து முதலியன இல்லாதவனும் ஆனவனே - எங்களைக் காக்க வந்தவன் சிவன் என்பதாம்.
ஜைனர்கள் - ஜீவதேவனை வழிபட்டு வணங்குகிறார்கள். ஜீனன் என்றால் உலகத்தைக் கடந்த முழுமுதற் கடவுள் என்று அர்த்தமாம். இதனால் சைவர் வணங்கும் சிவன் மனிதன் என்றும், ஜைனர் வணங்கும் சிவன் இதற்கு முற்றும் வேறு பட்டவர் என்றும் விளக்குகிறது.
சிவனின் முக்கிய தலங்கள்
திருவண்ணாமலை, திருக்காளாஸ்திரி, திருவொற்றியூர், திருவிடைமருதூர், திருவாரூர், திருவாலங்காடு, திருக்கழுக் குன்றம், திருக்கோணமலை (இலங்கைத் தீவில் உள்ளது), சீர்காழி, சிதம்பரம், காசி, காஞ்சிபுரம் முதலியனவாம்.
ஜைன மதத்திலுள்ள சுலோகத்தில் இரண்டு சிவன்கள் உண்டு என்றும், சைவம் வணங்கும் சிவனுக்கும், ஜைனர் வணங்கும் சிவனுக்கும் பெரும் வேறுபாடு உண்டு என்றும் சொல்லப்பட்டிருப்பது போல் -  ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதப்பட்டுள்ள சிவஞான சித்தியாரின் சைவ சித்தாந்த நூலிலும் விளக்கப்பட்டிருக்கிறது.
பிர்மா முதல் மற்றுமுள்ள எல்லா தேவர்களும் அரன் உருவுக்கு சமத்துவமாவதெப்படி என்றால் அவர்கள் அனைவரும் தங்கள் தாங்கள் அலுவல்களை நடத்துவதே காரணம். இவ்வாறு இத்தேவர்களே அலுவல்களை நடத்திக் கொள்வதானால் அரன் என்னும்மற்றொருதெய் வம் வேண்டியதில் லையே?பிர்மாவும்,விஷ் ணுவும்பிரபஞ்சபர கிருதிக்குமேல் எழ முடியாமலும், ருத்திரனும், மகேஸ்வரனும் அசுத்தா மாயைக்கு மேல் எழ முடியாமலும் உள்ளவர்கள். ஆதலால் அனைத்தையும் காண வல்லவருமான ஒருவன் மிகமிக அவசியம் என்ப தாம். (சிவஞான சித்தியார் - சைவ சித்தாந்த நூல் சுபக்கம் 53ஆம் பக்கம்)
இதன் உண்மையை விளக்கும் கவி - திருவாசகத்தில் உள்ளது. சிவஞான சித்தியாரின் சுபக்கம் என்னும் நூலில் 32 ஆம் பக்கம் பார்க்கவும்.
- கவி -
மூவரும் முப்பத்தி மூவரும் மற்றொழிந்த
தேவரும் காணாச் சிவபெருமான் - மாலேறி
வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்க
மெய்யகத்தே இன்பம் மிகும்.
பொருள்: பிர்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூம்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும் கண்டிராத சிவபெருமான் வந்துதித்த வரலாற்றை பார்த்தோம் என்பதாம்.
இத்தனை சுலோகங்களின் பொருளையும் கூர்ந்து பார்க் கையில், அரன் என்னும் வார்த்தை (பதம்) மும்மூர்த்திகளில் ஒருவனான சிவனைச் சுட்டிக்காண்பிப்பதற்காக அல்ல. சிவனையல்லாது வேறொரு தெய்வத்தையே காட்டுவதாக தெரிகிறது. அது எது? இந்த சிவன் தனிமுதற்கடவுளான தேவன் அல்ல, என்னும் நிலையை உறுதிப்படுத்துகிறது. இதுவன்றி இம்மும்மூர்த்திகளுக்கும் உலக மனிதரைப் போலவே ஜாதி வேற்றுமை உண்டென்றும், இத்தேவர்களின் ஜாதி வகுப்பின்படியே, மனித ஜாதியார் அவர்களை வணங்க வேண்டுமாம். இது மகாபாரதத்தில் உள்ளது.
“Siva was the god of the upper classes, Brahamanas and Kshatriya and Manu in mentioning the caste of the gods. Make out that Siva is Brahman, Vishnu kshatriya and Brahama Vaisya and Indra Sudra and their worship by the respective castes are Recommended’ (Sivagnana Siddiyar - Subakkam 48. Found in Mahabarat).
இதன் பொருள்:
சிவன் பிராமண சத்திரியரான மேல் குல மக்களுக்கு தெய்வம். மேலும் மனுவென்பார் ஜாதி வரலாற்றை சொல்லும் போது சிவனை பிராமண ஜாதி என்றும், விஷ்ணுவை சத்திரய குலமென்றும், பிர்மாவை வைசிய குலமென்றும், இந்திரன் சூத்திர குலமென்றும் வகுத்துப் பிரித்து அந்தந்த குலத்தார் அந்தந்த குலக்கடவுள்களையே வணங்க கட்டளை விதித்திருக்கிறது - (சிவஞான சித்தியார் சுபக்கம் 48ஆம் பக்கம்). முழு விவரங்களை மகாபாரதத்தில் காணலாம்.
ஒரு விருத்தம்
கிருபையழகு கண்டே நெறிகெட்டு விரகங் கொண்டு
உரை செய்யும்படி நினைத்திடிலெங்கள் உள்ள மிகு
பயங்கொள்ளும் வேலை செய்தான் சிவன்.
பொருள்: “சிவன் - துரோணாச்சாரி மனைவியாகிய கிரு பையை பார்த்தவுடனேயே அவள் மேல் ஆசை கொண்டு அடாத செயலைச் செய்தானே! அய்யோ அந்த காரியத்தைச் சொல்ல நினைத்தால் மனம் திடுக்கிட்டு அச்சத்தைக் கொடுக்கிறதே!” என்பதாம். இக்கதையை சமஸ்கிருத பாரதத்தில் அறியலாம். இதை ஆதிபருவம் வாரணாவதச்சுருக்கம் 41 முதல் 44 ஆம் பாடல் வரை, பாரதத்தில் பார்க்கலாம். மேலும் கந்த புராணம் கயமுகனுற்பத்தி படலம் 160 முதல் 174 ஆம் பாடல் வரையும், உத்திரப்படலம் 30, 33, 34, 37, 38, 40, 43, 45, 53, 66, 89, 91, 92, 94ஆம் பாடல்களையும் பார்க்கவும்.
(தொடரும்)
-விடுதலை,11.12.16

நேற்றையத் தொடர்ச்சி....
கார்த்திகை தீபத்தின் கர்த்தா யார்? (3)
-இரா.கண்ணிமை
ஒரு சமயம் இலங்கா சூரனாகிய இராவணன் - சிவனின் கைலாயமாகிய வெள்ளி மலையை தன் கையால் பிடித்துக் குலுக்கினானாம். அதைக் கண்ட சிவன், தனக்குத் திரிபுர அரன் என்ற பெயர் வைத்துக்கொண்டு யுத்தம் செய்தானாம். பூமியை ரதமாக்கி, பிரமதேவனை சாரதியாக்கி, வேதங்களை குதிரைகளாக்கி, விஷ்ணுவை அம்பாக்கி, மேருவை வில்லாக்கி, ஆதிசேடனை நாணாக்கி பாணத்தைக் கொளுத்தி திரிபுரங்களை எரித்தானாம் - என்று பாகவதம் ஒன்பதாம் சல்லாபத்தில் சொல்லியிருப்பதைக் காணலாம்.
உண்மையில் - இன்று உலகெங்கும் நடக்கும் மிகப்பெரிய போர்களுக்கு இது எம்மாத்திரம் என்பது சிந்திக்கத் தக்கது.
மேலும் சிவன் பூமியை ரதமாகவும், வேதங்களை குதிரைகளாகவும், பிர்மாவை சாரதியாகவும், விஷ்ணுவை அம்பாகவும், மலையை வில்லாகவும், ஆதிசேட பாம்பை நாணாகவும் ஆக்கியது உண்மையானால், சிவன் பூமியை ரதமாக்கிக் கொண்டபோது சிவன் போர் செய்யப்போன அந்த மூன்று புரங்களும் எந்த பூமியிலிருந்தன? ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்ததா? அதில் வசித்த ராட்சதர் எங்கே போனார்கள்? இந்த திரிபுரங்கள் ரதமாக்கப்பட்ட பூமிக்குள் அடக்கமல்லவா? அது உண்மையானால் குதிரை, வில், அம்பு ஆயுதம் ஏன்? பூமியே ரதமானால் சிவன் இந்த ரதத்தை எந்த பூமியில் ஓட்டினான்? யுத்தம் நடத்திய இடமெங்கே? வேதங்களை குதிரையாக்கியதேன்? விஷ்ணுவைத் தவிர வேறு வகையில் அம்பு செய்யக்கூடாதா? மேருமலை வில்லானதெப்படி? இதுநின்ற பூமி ரதமானபோது - பூமியை சுமந்து கொண்டிருந்த ஆதிசேடனைத் தவிர வேறு நாண் கிடைக்கவில்லையா? அப்போது பூமியை சுமந்து கொண்டிருந்தது யார்? ஆதிசேடன் பூமியை தன் தலை மீது தாங்கியது உண்மையானால் - அது எதன்மேல் நின்று பூமியைத் தாங்கிக் கொண்டிருந்தது? - என்பதற்கெல்லாம் எந்த விளக்கமும் இல்லையே? இந்த பொருத்தமற்ற சிவபுராணச் செயல்களை இக்காலத்தில் உண்மையென்று நம்புவோர் யார்?
இன்று கடல், தரை, விண் ஆகியவற்றில் வியத்தகு விஞ்ஞான விளைவுகள் நடக்கின்றன. பூமியையே சிவன் ரதமாக்கி ஓட்டியது உண்மையானால் எந்த பூமியின்மேல் ஓட்டினான் என்பதை புராணங்கட்குக் பொருள் கூறினோர் ஏன் உணர்ந்து எழுதவில்லை.
இந்த சிவனை ஒரு சமயம் வானாசூரன் என்னும் அரக்கன் மிக பலம் உள்ளவனாதலால் - தனக்கு வாயிற் காவலனாக வைத்துக் கொண்டானாம். இவனை மீட்க விஷ்ணு, விநாயகன், வீரபத்திரன், சுப்பிரமணியன் ஆகியோரை அனுப்பி வானா சூரனோடு போர் புரிந்து சண்டையிடும்போது சூரன் அவர்களுக்கு எதிராய் சிவனை அனுப்பி தேரிலேறி விஷ்ணுவோடு யுத்தம் செய்யும்போது சிவன் தேர் அடிபட்டு உடையவே, சிவன் விழும் சமயம் விஷ்ணு பார்த்து இவன் நம்முடையவன் என்று கண்டு ரிஷபமாகத் தாங்கி தப்பி ஓடச் செய்யவே - ஓடிப்போன சிவனுடன் வானாசூரன் தன் படைகளோடு சென்று போர் புரிந்தானாம்! (திருவரங்கக் கலம் பகம் 36ஆம் பாடலில் உள்ளது.)
கவி
அய்ங்கரன் முருகியோட, முருகனோட
முக்கனீசன் மக்களைத் தேடியோட
வாணணாயிரம் புயங்கள் குருதிநீர் சிந்தியோட
நேமி தொட்ட திருவரங்கராசரே!
இந்த நிகழ்வுகள் தேவர்களின் செயல்களை எவ்வளவு - பட்டவர்த்தனமாக பகர்கிறது, பாருங்கள்.
கலித்துரை
குண்டக் கழுத்தனை கூத்தாடும் பேயனைக் குண்டணியைக்
கண்ட கருத்தனை பிள்ளையைத் தின்ற காண வையன்
மண்டக்கரத்தனை கண்ணப்ப னெச்சிலை வாரியுண்ட
மண்டப் பறையனையோ தேவனென்றெப்படி பாடுவேனோ?
சிவவாக்கியர்
தேவர் தேவரென்று நின்று தேடுகின்ற மூடர்காள்
தேவர் யாவரென்றறிந்து தேடவு மறிகிறீர்
மூவர்தேவர் என்று நீர் பொழிந்ததென்ன நியாயமோ
மேவதாக உம்முளே, விரித்துணர்ந்து கொள்ளுமே!

அரியுமல்ல, அயனுமல்ல, அரனுமல்ல, அப்புரம்
கருமை செம்மை, வெண்மையும் கடந்து நின்ற காரணம்
பெரியதல்ல, சிறியதல்ல, பெண்ணு மாணுமல்லவே
கரியமுங் கடந்து நின்ற தூரதூர தூரமே!
அமரர் புராணச் சுருக்கம்
பல கலைகள் ஓதுவகை நாலுந் தானும்
பண்ணியதோர் நால்வதே மாறு சாஸ்திரம்
புலையுடனே தத்துவங்கள் தொண்ணூற் றாறும்
அவைகளிலே பொய்களவு அதர்மஞ் சேரும்
மலையரசன் சிவன், பிர்மா, விஷ்ணு, தானும்
மாசில்லா நாதனுட வழியுங் காணார்
நிலைபெருக மோட்ச வழி காணா தாலே
நீதியற்ற மனிதரென்று நிகழ்த்தி னோமே!
பெரிய சித்தர் ஞானக் கோவை
முச்சுடரும் ஒன்றாகும் மும்மூர்த்தி யல்ல
மூவருமே ஆளுருவம் ஒன்றே யாகும்
அச்சுதா யிவர்களுமே ஆண்பெண் அல்ல
அரனுமல்ல, லிங்கமல்ல, அநாதியான
சட்சிதானந் தனையே வணக்கஞ் செய்து
சற்குருவை தரிசித்துப் பாதம் போற்றி
எச்சரிக்கை கொண்டு நட அப்பா, அப்பா!
எண்ணில்லா முக்திவழி யெய்து வாயே!
அகஸ்தியர் ஞானம் - 30
ஓடுகின்ற வகைகளெல்லாம் உரைத்துப் போட்டேன்
உலகுதனில் மார்க்கமெலாம் உகந்து சொன்னேன்
தேடுகின்ற புராணமெல்லாம் பொய்யே என்றேன்
சிவன் பிர்மா விஷ்ணுவெல்லாம் பேயே என்றேன்
ஆடுகின்ற தீர்த்தமெல்லாம் அசத்தி என்றேன்
அஞ்ஞானம் பண்ணுகின்ற அகந்தை என்றேன்
பாடுகின்ற முப்பதுக்குள் அடக்கிப் போட்டேன்
பரமகுரு சொன்னபடி பாடினேனே!
அகத்தியர் ஞானம் 30 இல் பாடல் 9
கருதினாரிப்படியே சொன்னாரப்பா
கைலாய விடமெங்கே கருவூர் எங்கே
பருதியடா உலகமது பணியின் வாழ்வு
பராபரனாராறு சொயம் பகர்ந்த சோதி
ஒருவருமே நிகராத வஸ்துவுப்பா
ஓகோ, கோ, மயங்காதே யூன்றிப் பார்த்து
திரிபொருளை யறிவினாலுணர்ந்து பார்த்து
தெரிசிப்பாய் நெறிபத்துந் தெரிவிப்பாயே!
ஔவையார் - வெண்பா
மாலும் மனிதன் மலரோனும் தான் மனிதன்
ஆலமுண்ட கண்டன் - அவன் மனிதன்
சீலமுடன் உற்று உணர்ந்த உகந்த பெரியார்
கற்றும் அறிந்தார் இல்லைகாண்.
இப்பாடல்களின் பொருள் அனைத்தும் சிவன் முதலான மும்மூர்த்திகளும், எவ்வகையிலும் வணக்கத்திற்குரிய தேவர்கள் அல்ல. இவர்கள் நம்மைப் போன்ற வெறும் மனிதர்கள். வேறு எந்த சக்தியும் இல்லை. அறிவினால் உணர்ந்து பார்ப்பீர் என்று கூறுகின்றன.
ஜைன மதத்தில் ஒரு சிவன், சைவ (இந்து) மதத்தில் ஒரு சிவன். இந்த இரட்டை சிவன்களில் யார் பெரியவன்? யார் கடவுள்? என்று ஜைனமும் - சைவமும் மோதிக் கொள்கின்றன. ஆதாரங்களைக் (பொய்யுரைகள்) கூறி போட்டி போடுகின்றனர். அத்தனையும் அலசிப் பார்த்தால் அண்டப்புளுகு - ஆகாசப்புளுகு!
சிவாய நமஹ என்றுச் சொல்லி மொட்டையும், பட்டையும் போட்டுக் கொண்டு கொட்டை உருட்டிச் செல்லும் சிவபக்தர்களே! காடை விளக்கேற்றி- கார்த்திகை தீபத்தை கொண்டாடும் சிவபக்தர்களே! சிவக்கொழுந்துகளே! நீங்கள் வணங்கும் சிவபெருமானின் சிவபுராணத்தை - ஓரளவு விளக்கியுள்ளோம்.
திருநீரணிந்தது! என்ன.. என்ன? என்று திக்கெட்டும் ஓடி திருவண்ணாமலையில் கால் பதித்து சிவ - பார்வதி லிங்கத்தை (ஆண் குறி - பெண் குறி) தொழுதிடும் சிவனடியார்களே! போடுங்கள் - போடுங்கள் - விண்ணதிர முழங்கிடுங்கள்! அண்ணாமலைக்கு அரோகரா!
(நிறைவு)

விடுதலை,12.12.16