சனி, 15 செப்டம்பர், 2018

ஆங்கிலேயர் காலத்து வழக்கில் சிக்கிய திருப்பதி கோயில்*

🔴 *மதநம்பிக்கை ஸ்s சட்டம் ஆங்கிலேயர் காலத்து வழக்கில் சிக்கிய திருப்பதி கோயில்*

(“கோயில், குளம், புண்ணியம், பாவம், சடங்கு முதலிய காரியங் களின் மூலம் கொள்ளை அடிக்கப் பட்டு விடுகின்றன” - ‘குடி அரசு’ தலையங்கம் 13.9.1931)

நீதிமன்றங்கள் சந்திக்கக்கூடிய சவால் களில் முக்கியத்துவம் பெறக்கூடியதாக மதநம்பிக்கைக்கும், பழக்கத்திற்கும் எதிராக வரக்கூடிய அரசியல் சட்ட விதிமுறைகள் அமைந்திருப்பதை எடுத்துக் கூறப்பட்டு வருவதைக் காண்கிறோம்.

நிலுவை வழக்குகள்

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் அனுமதிக்கப் படாது என்று கூறும் வழக்கும், இசுலாம் மதத் தில், கணவன், மனைவியைத்தான் விரும்பும் வகையில் ‘தலாக்’ கூறுவதன் மூலம் மண விலக்கு பெறுவது பற்றிய வழக்கும், ஓரினச் சேர்க்கைப் பற்றிய வழக்கில் கூட 'நீதிமன்றம் இந்துமத சட்டத்தின்படி வழக்கை அணுக வேண்டும் என்ற வாதமும் இதற்கு எடுத்துக் காட்டுகளாக உள்ளன.

இத்தகைய மதச்சார்புடைய வழக்குகளுக் குத் தடையாக, தொல்லையாக இருப்பது இந்திய அரசியல் சட்டமே. எந்த மதச்சடங்கு முறைகளும், மதவிழாக்களும் அரசியல் சட்ட தாக்கத்தால், பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக செயல்பட்டு வருகின்றன. மத நம்பிக்கைக்கும் சட்ட விதிகளுக்குமிடையே நிகழும் மோதல்கள் அண்மைக்கால நிகழ்வன்று. இதற்கான காரணம் அரசியல் சட்டமே என்று அதன் மீது பழிசுமத்துவது சரியாகாது. மாறாக மனித இனபரிணாம வளர்ச்சியில் இது தவிர்க்க முடியாத ஒன்று.

பல நூற்றாண்டுகளாக மதநம்பிக்கையும் அதன் வழிவந்த கோட்பாடுகளுமே சட்டங் களாக சமூகத்தை ஆட்கொண்டிருந்தது. ஆனால் அரசியல் சட்ட வழிமுறைப்படி நடைபெறும் மக்களாட்சி முறையில், புதிய சட்ட அமைப்புக்கும், பழைய அமைப்பு முறைக்கும் மோதல் ஏற்படுவது இயற் கையே. இதன் வெளிப்பாடே இன்று நீதி மன்றங்களில் நடைபெறும் வழக்குகள். ஆனால் அரசியல் சட்டமுறை நடை முறைக்கு வருமுன்பே, சட்டத்தின் வலி மையே, மதநம்பிக்கையை விட உயர் நிலையைப் பெற்றது என்று வலியுறுத்தி வந்தவர்களுமுண்டு. இதற்கு எடுத்துக் காட்டாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த திருப்பதி மகந்த் வழக்கைக் கூறலாம்.

பாலாஜியின் சொத்து

அந்த வழக்கில் விபரம் கீழே கூறப் படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலம்வரை கிழக்கிந்திய கம்பெனி, வெங்கடேஸ்வரா அல்லது சீனிவாசன் என்னும் கடவுளின் சொத்துக்களை மேற் பார்வை செய்தும் நிர்வகித்தும் வந்தது. 1817இல் இயற்றப்பட்ட சென்னை கட்டுப் பாடு சட்டம் செயலுக்கு வந்த பிறகு, கோயி லானது வருவாய்த்துறை குழுமத்தின் மேற் பார்வையில் வந்தது. இந்த மேற்பார்வை மாவட்ட ஆட்சியர் மூலம் நடைபெற்றது.

இதற்கிடையில் 1840 அளவில் இங்கிலாந் தில், இந்துக்கள், முசுலீம்களின் மத நிறு வனங்களை கிருத்துவ கிழக்கிந்திய கம் பெனி நிர்வகிப்பதை எதிர்த்து ஓர் இயக்கம் தோன்றியது. அதன் விளைவாக திருப்பதி கோயில் சீரமைப்பு, நிர்வாகம், கோயில் ஆதினத்தின் மகந்த் என்பவரிடம் ஒப் படைக்கப்பட்டது. மகந்த்தின் தலைமை அலுவலகம் திருப்பதியில் இருந்தது. திருப் பதி மகந்த் என்றே இவர் அழைக்கப் பட்டார்.

கொடிமரத்துக்கு வசூல்

திருப்பதி கோயிலுக்கு கொடிமரம் அமைக்கப்பட்டபோது பக்தர்கள், தங்க காசுகள் வாங்க நிறைய பணம் கொடுத்தார் கள். இந்த தங்கக்காசுகள் ஒரு கலசத்தில் வைக்கப்பட்டு, கொடிமரத்தின் அடியில் வைக்கப்படுவது வழக்கம். அதன்படி கல சம் புதைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கோயில் மகந்த்துக்கு எதிராக, நம்பிக்கை மோசடி, பணம் கையாடல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தங்கக் காசுகளுக்குப் பதிலாக செப்புக்காசுகள் புதைக்கப்பட்ட தாகக் குற்றம் கூறப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்க கொடி மரத்தை அடியிலிருந்து தோண்டி எடுக்க வேண்டும். இதற்கு மத நம்பிக்கை தடை யாக இருந்தது. சம்பிரதாயப்படி நடப்பட்ட கொடிமரத்தைத் தோண்டி எடுப்பது புனிதத் தன்மைக்கு எதிரானது என்பது மகந்த்தின் வாதமாக இருந்தது. அப்படி தோண்டி எடுப்பது வழிபடும் பக்தர்களின் உணர்வில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது.

தலைமை பூசாரியின் மனு

வியப்பை ஏற்படுத்தும் வகையில் கோயில் தலைமைப் பூசாரி பக்தர்களின் உணர்வுக்கு எதிராக கலசத்தைத் தோண்டி எடுக்க மனு கொடுத்து முயற்சி மேற் கொண்டார். மேஜிஸ்ட்ரேட் மனுவை ஏற்று கலசத்தை எடுக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஆய்வு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கானது வரலாற் றில் பரபரப்பூட்டும் வழக்காக அமைந்தது.

சட்ட அறிவு மேதைகள் மோதல்

இரண்டு சட்ட அறிவு மேதைகளான சுப் பிரமணிய அய்யர், ஏரல்டி கார்டன் ஆகி யோரிடையே, சட்டப்போர் நிகழ்ந்தது. சுப்பிரமணிய அய்யர் (பிறகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியானவர்) கோயில் தலைமைப் பூசாரிக்காக வாதிட்டார். எதிர் கொள்ள முடியாத சட்ட நிபுணர் நார்டன் மகந்த்துக்காக வாதாடினார். இந்த வழக்குத் தலைமை நீதிபதி ஆர்தர்கோரின்ஸ் மற்றும் நீதிபதி முத்துசாமி அய்யர் ஆகிய அமர்வு நீதிபதிகள் முன்வந்தது.

இந்த வழக்கை அருகில் இருந்து கவ னித்து வந்த மற்றுமொரு சட்ட நிபுணரும் அட்வகேட் - ஜெனரலுமாகிய எஸ்.சிவ சாமி அய்யர், தன்னுடைய கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய குறிப்பில், "நார்டன், கொடிமரத்தின் மதப் புனிதத் தன்மையைத் தன் வாதத்திற்குத் துணையாகக் குறிப்பிட்டார்.

நீதிமன்றம், புனிதத் தன்மையைக் கெடுக்க வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்தார். அப்படி செய்தால், ஆன்மிக உலகம் முழுவதும் எதிரொலிக்கும் என் றார். கொடிமரத்தைத் தோண்டுவதற்கான கழுத்துக்கு எதிரான பல வாதங்களை வைத்தார். மூன்று மணிநேரம் வாதிட்டார். அடுத்து சுப்பிரமணிய அய்யர் வாதிட்டார். அவர் ஒரு மணி நேரத்துக்குக் குறைவாக வாதத்தை வைத்தாலும் அது ஒரு மின்சாரப் பார்சலாக இருந்தது. நார்ட்டனுடைய வாதங்களை அரை மணிக்கு குறைந்த வாதத்தின் மூலம் நசுக்கிப் போட்டார். தன்னுடைய சொற்பொழிவு ஆற்றலினால், பிரமிக்கத் தக்க உரையை "வானமே இடிந்து விழுந்தாலும், நீதி நிலைநாட்டப்பட வேண்டும்" (திவீணீt யிustவீtவீணீ க்ஷீuணீt நீணீமீறீuனீ) என்ற சிறப்பான சொற்களுடன் வாதத்தை முடித்தார். அவர் ஆற்றிய உரைகளுள் இதுவே நான் கேட்ட சிறந்த உரையாகும். அவரைப் போன்றே கச்சிதமாகவும், சுருக்க மாகவும் வீரிய உரையாகவும் இருந்தது.

தங்ககாசுகள் - கோவிந்தா! கோவிந்தா!

நீதிபதி முத்துசாமி அய்யர், மாஜிட்ரேட் வழங்கியத் தீர்ப்பை உறுதிபடுத்தி தீர்வு வழங்கினார். உண்மை வெளிப்பட்டது. கலசத்தில் தங்கக்காசுகள் இல்லை. செப்புக்காசுகளே இருந்தன.

எனவே, நம் அரசியல் சட்டம் வரும் முன்னதாகவே, மதநம்பிக்கைக்கும் சட்டத் திற்குமான மோதல் வழக்குகள் நிறைந்தி ருந்த வரலாறு உண்டு என்பது தெளிவாகிறது.

(சென்னை மூத்த வழக்குரைஞர் என்.எல்.இராஜா அவர்களின் கட்டுரையின் கருத்துப்பிழிவு மொழியாக்கம், மு.வி.சோம சுந்தரம்)

நன்றி: ‘தி இந்து', 13.8.2018

http://www.viduthalai.in/component/content/article/71-headline/168076--s-------.html

கிறிஸ்தவ மதத்தில் ஜாதியுண்டா?



31. 01. 1932 - குடிஅரசிலிருந்து..

இந்து மதத்தில்தான், சாஸ்திர சம்பந்த மாகவும், தெய்வ சம்பந்தமாகவும், பலர் கொடுமைப்படுத்தப்பட்ட மக்களாய் அந்த மதத்தை விட்டு வெளியேறினா லொழிய மனிதத்தன்மை பெறமுடியாதவர் களாய் கோடிக்கணக்கான மக்கள் இருப்ப தாக உலகம் முழுதும் தெரிந்திருக்கிறது. ஆனால் மிகவும் நாகரிகம் பெற்ற மதமாக அன்பு மதமாக - சகோதரத்துவம் நிறைந்த மதமாகப் பிரசாரம் பண்ணப்பட்டு வரும் கிறிஸ்தவ மதத்தில் இத்தகைய ஜாதிக் கொடுமை இல்லை என்று பறைசாற்றப்பட்டு வருகிறது. உண்மையிலேயே அந்த மத வேதத்தின்படி - அந்த மத கர்த்தாவான யேசுநாதரின் கொள்கைப்படி அந்த மதத்தில், ஜாதி வித்தியாசம் பாராட்டவோ, ஜாதி வித்தியாசம் காரணமாகத் தாழ்த்தப்பட்ட மக்களைக் கொடுமைப்படுத்தி வைத்திருக் கவோ ஒரு ஆதாரமும் இல்லையென்பதை நாம் அறிவோம்.

இத்தகைய ஒரு மதம் ஜாதி வித்தியா சங்களும், கொடுமைகளும் நிறைந்த இந்தியாவில், அதிலும் தென்னிந்தியாவில் எந்த நிலையிலிருக்கிறது என்றுப் பார்த்தால், இந்து மதத்தில் அண்ணனாகவோ, அப்ப னாகவோ, பாட்டனாகவோதான் இருந்து வருகின்றதென்று கூறலாம். இந்து மதக்கோயில்களில் எப்படி ஜாதிக்கு ஒரு இடம் ஒதுக்கப் பட்டிருக்கிறதோ அது போலவே கிறிஸ்தவ மதக் கோயில்களிலும் ஜாதி வித்தியாசம் பாராட்டப்பட்டுத் தனித்தனி இடங்கள் ஒதுக்கப்படுகின்றனவாம். ஆனால் அரசாங்கக் கணக்கில் கிறிஸ் தவர்களுக்கு ஜாதி வாரிக்கணக்குப் போடாமல் எல்லாக் கிறிஸ்தவர்களையும் பொதுவாகக் கிறிஸ்தவர்கள் என்ற தொகுதியிலேயே சேர்க்கப்பட்டிருக்கின்றது. இக்காரணத்தால், தீண்டாத ஜாதியினராகக் கருதப்படும் கிறிஸ்தவர்கள் பொது ஸ்தாபனங்களில் ஒருவித உரிமையும் பெறமுடியாமல், எல்லா உரிமைகளையும் உயர்ந்த ஜாதியாராக இருந்து கொண்டி ருக்கும் கிறிஸ்தவர்களே அடைந்து வரு கிறார்கள்.

எப்படி இந்து மதத்தில் ஒவ்வொரு ஜாதிக்காரர்களும் தங்கள் தங்களுக்குக் கீழுள்ள ஜாதிக்காரர்களின் மேல் வெறுப்பும் வித்தியாசமும் பாராட்டி வருகின்றார்களோ அதுபோலவே கிறிஸ்தவ மதத்தில் புகுந் துள்ளவர்களும், நாயுடு, முதலியார், பிள்ளை, அய்யர், முதலிய ஜாதி வித்தியாசங்களை விடாமல் வைத்துக் கொண்டு, ஆதிதிராவிடக் கிறிஸ்தவர்களையும், மற்ற தாழ்த்தப்பட்ட வகுப்புக் கிறிஸ்தவர்களையும் வித்தியாசமாக வைத்துக் கொடுமை செய்து வருகின்றனர். இவ்வாறு செய்து வருவதைப் பற்றிய கிளர்ச்சி நீண்டநாளாக நடைபெற்றுங்கூட இன்னும் அம்மத குருமார்கள் இவ்வேற்று மைகளை ஒழித்து உண்மையான கிறிஸ்தவக் கொள்கைகளை நிலை நிறுத்த முயற்சி செய்யாமலிருந்து வருகிறார்கள்.

ஆகவே இதுவரையிலும் பொறுமை யோடு கொடுமைகளை அனுபவித்து வந்த தீண்டாத வகுப்புக் கிறிஸ்தவர்கள் இப் பொழுது கண்விழித்துக் கொண்டு அதிக ஊக்கத்துடன் கிளர்ச்சி செய்வதைக் கண்டு நாம் பாராட்டுகின்றோம். இதற்கு உதாரண மாகச் சென்ற 23. 01. 1932இல் லால்குடியில் தீண்டப்படாத கிறிஸ்தவர்கள் மகாநாடு கூடியிருப்பதைக் கூறலாம். அம்மகாநாட்டுத் தலைவர் திரு. ஞானப் பிரகாசம் அவர்களும், திறப்பாளர் திருமதி நீலாவதி ராமசுப்பிரமணியம் அவர்களும், வரவேற்புக் குழுத்தலைவர் திரு ஆரோக்கிய சாமி அவர்களும் மற்றும் உள்ள உபந்யா சகர்களான திருவாளர்கள் டி.வி.சோம சுந்தரம், டி. பி. வேதாசலம், வி. அய். முனி சாமிப்பிள்ளை முதலிய பலரும் தீண்டப் படாத கிறிஸ்தவருக்குள்ள குறைகளை எல்லாம் விளக்கமாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள். ஆகையால் இனியாவது அம்மத குருமார்கள் தீண்டாதவர்க்குள்ள குறை களை நீக்கி மதக் கொள்கைப்படி யாதொரு வேற்றுமையையும் பாராட்டாமல் அவர் களையும் நடத்துதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் அல்லது அரசாங்கத்தார் அவர்கள் விரும்புகிறபடி தீண்டப்படாத கிறிஸ்தவர்களும் மற்ற ஆதிதிராவிடர் களுக்குக் காட்டுவதைப்போல தனிச்சலுகை காட்ட முன் வரவேண்டும் என்று எடுத்துக் காட்ட விரும்புகிறோம்.

கடைசியாக, தீண்டப்படாத கிறிஸ்தவர் களுக்கும் ஒரு வார்த்தை சொல்லி முடிக்கிறோம், தீண்டப்படாத கிறிஸ்தவர் களின் குறைகள் நீங்காவிட்டால் அம்மதத் திலுள்ளவர்கள் நீக்க முற்படா விட்டால் இந்து மத ஆதிதிராவிடர்களை எந்த வகையில் தங்கள் மேல் சுமத்தப்பட்டிருக்கும் மதக் கொடுமைகளையும் ஜாதிக் கொடுமை களையும் நீக்கிக் கொள்ள விரும்புகிறார் களோ, அந்த வகையிலேயே தீண்டப்படாத கிறிஸ்தவர் களுக்கும் தங்கள் குறைகளை நீக்கிக் கொள்ள முயலுவதே சமத்துவம் பெறுவதற்கு ஏற்ற வழியாகும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

- விடுதலை நாளேடு, 15.9.18

புதன், 12 செப்டம்பர், 2018

அய்யப்பன் கதையைக் கேளீர்!

அய்ம்பதுகளில் சபரிமலையில் நிகழ்ந்த தீவிபத்து, இப்போது பலருக்கும் தெரிந்திருக்க வில்லை. அப்போது தெரிந்தவர்கள், அதை மறந்திருக்கவே மாட்டார்கள்.


சபரிமலையில் தீ விபத்து. இது விபத்தே இல்லை என்று சொல்பவர்களும் உண்டு. கேரளத்தின் காவல்துறை ஆவணங்களில் விபத்து என்றுதான் பதிவு செய்யப்பட்டி ருக்கிறது. ஆக சபரிமலையில் தீ விபத்து என்ற செய்தி, காட்டுத்தீயெனப் பரவியது.

தந்த்ரி, மேல்சாந்தி, கீழ் சாந்தி, சபரி மலைக்கு நெருக்கமாக இருந்த முக்கிய மானவர்கள், கேரள அரசு என பலவித முயற்சிகளால் கோயில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. கட்டடங்கள் புதுப்பிக்கப் பட்டன.

தீ விபத்தில் அய்யப்பன் சிலை சற்றே சேதமடைந்திருந்தது. பரசுராமனால் ஏற்படுத்தப்பட்ட  அய்யப்பன் சிலை அது. சேதமடைந்த சிலையைக் கொண்டு பூஜிக்கவோ தரிசிக்கவோ கூடாது என்கிறது ஆகம சாஸ்திரம்.

தீவிபத்துக்குப்பின்னர் பி.டி.ராஜன், நவாப் ராஜமாணிக்கம் புதிதாக ஏற்படுத்திய அய்யப்பன் சிலை

அந்த சமயத்தில், நவாப் ராஜமாணிக் கமும், பி.டி.ராஜனும் சேர்ந்து, அய்யப்பன் சிலை ஒன்றைச் செய்தார்கள்.

நவாப் ராஜமாணிக்கம்தான்  நடிகர் எம்.என். நம்பியாரை அய்யப்ப பக்தராக்கி யவர். நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை, மிகப் பெரிய நாடகக் கம்பெனி வைத்திருந்தார். அதில் சேர்ந்து நடித்து வந்தவர் நம்பியார். நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை, தீவிரமான அய்யப்ப பக்தர். அவர், எங்கெல்லாம் நாடகம் போடுகிறாரோ அங்கெல்லாம் அய்யப்பனின் படத்தை வைத்து, பூஜை போட்ட பிறகே நாடகத்தைத் தொடங்குவார். இப்படி ஊர் ஊராகச் சென்று, நாடகம் போடுகிற வேளையில், மக்களுக்குள் அய் யப்ப பக்தியை அவர்தான் பரப்பியவர்..

மதுரை பி.டி.ராஜனும், நவாப் ராஜ மாணிக்கம் பிள்ளையும் சேர்ந்து அய்யப்பன் சிலையைச் செய்து வைத்திருந்தார்கள். அதேபோல், பாலக்காடு சாமி அண்ணா என்பவரும் சிலையை செய்திருந்தார். இவர்கள் மட்டுமின்றி, கேரளத்தைச் சேர்ந்த சுவாமி விமோசனானந்தாவும் அய்யப்பன் சிலையை செய்திருந்தார்.

அதையடுத்து, குடவோலை முறைப்படி, அய்யப்பன் சந்நிதியில் சீட்டுப் போட்டு பார்க்கப்பட்டது. அதில் நவாப் ராஜமாணிக் கம் பிள்ளையும் பி.டி.ராஜனும் என பெயர் கள் வந்தன. அவர்கள் வழங்கிய சிலைதான் இன்றைக்கும் சபரிமலையில் உள்ளது.

பாலக்காடு சாமி அண்ணா, அவர் செய்த சிலையை தன்னுடைய பாலக்காட்டின் வீட்டிலேயே வைத்து பூஜித்து வந்தார். அந்த சிலை இன்றைக்கும் அவரின் வழித்தோன் றல்களான அய்யப்ப உபந்யாசகர் அரவிந்த் சுப்ரமணியம் மற்றும் அவர்களின் குடும் பத்தாரால் பூஜை செய்யப்பட்டு வருகிறது.

சுவாமி விமோசனானந்தா செய்த சிலையை, காசியில் உள்ள திலபாண்டீஸ் வரர் கோயிலில் கொண்டு சென்று வைத் தார். காசி விஸ்வநாதர் கோயிலில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள திலபாண் டீஸ்வரர் கோயிலில், பதினெட்டுப் படிகளு டன் அய்யப்பன் கோயில் அமைந்துள்ளது.

தீவிபத்தில் சேதமான அய்யப்பன் சிலை மணிமண்டப கோயில் மணியானது

சபரிமலையில், பதினெட்டுப் படிகள் ஏறியதும், அய்யப்பனின் சந்நிதி. இந்த சந்நிதிக்கு எதிரில், மணி மண்டபம். அதாவது, மணி இருக்கும் மண்டபம். இந்த கோயில்மணிதான் பரசுராமனால் ஏற்படுத் தப்பட்டு, தீ விபத்தில் சேதமடைந்த அய்யப் பன் சிலையாகும். சிலை சேதம் அடைந்த பிறகு, அந்த சிலையை அப்படியே மணி யாக்கி, சந்நிதிக்கு எதிரே கட்டிவைக்கப் பட்டது.

சபரிமலை விபத்துகள் உயிரிழப்புகள் 102 பேர் பலி

சபரி மலைக்கு சென்று 2011ஆம் ஆண்டில் ஜனவரி 14ஆம் தேதி அன்று திரும்பிய பக்தர்கள் ஜோதியை பார்த்த பின்பு தங்கள் வாகனங்களில் ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இடுக்கி மாவட்டம் வண்டி பெரியார், புல்மேடு அருகில் உப்புப் பாறை வழியாக ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்பகுதி வனப்பகுதி என்பதோடு பள்ளத்தாக்கு மிகுந்த பகுதி. நெரிசலை தவிர்க்க வாகனங்கள் வேகமாக நகர்ந்து கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது. இதில் 102 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து விசாரிக்க முதல்வர் அச்சுதானந்தன் அப் போது விசாரணைக் குழுவை அமைத்தார்.

இதுகுறித்து ஆய்வு செய்த மாநில வருவாய் முதன்மை செயலர் நிவேதிதா சரண் வெளியிட்ட அறிக்கையில், ஜீப், ஆட்டோ சரிந்ததே விபத்துக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது. ஜீப்பும், ஆட்டோவும் போட்டிபோட்டுக்கொண்டு பக்தர்களை ஏற்றும்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு, ஆட்டோ திடீரென ஜீப் மீது சாய்ந்தது. இதனால் இரு வாகனங்களுக் கிடையில் பக்தர்கள் சிக்கி உயிரிழந்தனர். சிலர் விபத்தில் சிக்காமல் இருக்க ஓடும் போது கூட்ட நெரிசலில் கீழே தள்ளப்பட்டு மற்றவர்கள் அவர்கள்மீதேறி மிதித்துக் கொண்டு ஓடியதில் உயிரிழந்துள்ளனர்.

அய்யப்பன் கோயில்

முதல் விபத்து

1952 ஜன. 14ஆம் தேதி அன்று வெடி வழிபாடு நடத்துவதற்காக அங்கு வெடி மருந்து வைக்கப்பட்டிருந்த 2 கூடாரங் களில் திடீரென தீ பிடித்ததில் 60 பேர் பலி.

2ஆவது விபத்து

1999 ஜன. 14 பம்பை ஹில்டா பகுதியில் மகரஜோதி தரிசனம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் நெரிசலில் சிக்கி 52 பேர் பலியாயினர்.

3ஆவது விபத்து

2011 ஜன. 14 அன்று நடைபெற்ற வாகன விபத்து, கூட்ட நெரிசலில் சிக்கி 102 பேர் உயிரிழந்தார்கள்.

இதுதான் அய்யப்பன் சக்தியா?

- விடுதலை ஞாயிறு மலர், 25.8.18

எதார்த்தவாதியும் கிறிஸ்தவ மத போதகரும் பேசியது

 ஓர் சம்பாஷணை 05.04.1931 -குடிஅரசிலிருந்து...


எதா : அய்யா தங்கள் வேதம் என்று சொல்லப்படும் பைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது.

போதகர் : பழைய காலத்திலே தேவ ஆவியால் ஏவப்பட்ட பல தீர்க்க தரிசிகளைக் கொண்டும் கிறிஸ்துவின் சீடர்களைக் கொண்டும் பிந்திய அப்போஸ்தலரைக் கொண்டும் எழுதப்பட்டது.

எதா : சரி தீர்க்கதரிசிகள் என்பவர் சில விடங்களில் தெய்வத்திற்கு பயப்படாத வர்கள் தானே

போதகர் : இல்லை சார் எப்பொழுதும் தெய்வத்துக்கு பயப்படுகிறவர்கள்தான்.

எதா : நல்லது அப்படியானால் ஆபிரகாம் ஒரு தீர்க்கதரிசிதானே.

போதகர் : ஆம். வாஸ்தவம்தான். ஆனால், அவ னை(ரை) சில ஆராய்சியாளர் தன் தகப்பனின் மறு மனையாட்டியின் மகளைக் கல்யாணம் செய்ததாகக் குறை கூறுவார்கள்

எதா : அதைப்பற்றி இப்பொழுது கவலை இல்லை. மானிடன் இயற்கையில் சகோ தரியைக் கல்யாணம் செய்தேதான் உற்பத்தி ஆகி இருக்கலாம்.

போதகர் : அப்படியானால் ஆபிரகாமைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியதென்ன? எதா : உண்மையாக அவன் ஒரு தீர்க்க தரிசிதானே.

போதகர் : ஆம், வாஸ்தவம்தான். ஆதி யாகமம் 2ஆம் அதிகாரம் 7ஆம் வசனத்தில் (கடவுளே) தேவனே அவன் ஒரு  தீர்க்கதரிசி என்பதாய் சொல்லியிருக்கிறார்

எதா : அந்த ஆபிரகாமே தானே ஆதியா கமம் 21ஆம் அதிகாரம் 11ஆம் வசனத்தில் இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும் பொருள்படப் பேசி யதை தாங்கள் வாசித்த துண்டா? போதகர் : அ. ஆ.. ஆம் வாசித்ததுண்டு ஆனால், அவன் மனைவி  சாரா அழகுள்ளவள். அதற்காகப் பயந்து சொல்லியதுண்டு.

எதா : மனைவி அழகானால் மனிதர்கள் மனிதர்களுக்குப் பயந்து தெய்வத்திற்குப் பயப்பட வேண்டியதில்லையா?

போதகர் :  சார் அது பழைய ஏற்பாட்டில் உள்ளது. புதிய ஏற்பாட்டில் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள்.

எதா : சரி அய்யா நான் படிக்கிறேன். அப் படிப்பட்டவர்களாலேதானே உங்கள் பைபிள் எழுதப்பட்டது. போதகர்: தெய்வமில்லாத காலமிது (என்ப தாய் முணுமுணுத்துக்கொண்டு  நழுவி விடுகிறார்.)

எதா:  பைபிள் காலத்தில் தெய்வப் பயமில்லாத இடமிருந்து இப்பொழுது காலம்  வந்து விட்டது  என்பது உங்கள் அனுபவம். ஆனால் எங்களுக்குத் தெய்வ கவலையில் லாத (காரியமே) வாழ்க்கையே வேண்டும்  என்பது எங்கள் துணிபு.

-  விடுதலை நாளேடு, 7.9.18

இந்து

10.05.1931 - குடிஅரசிலிருந்து..

ஒருவன் கோவிலுக்குப் போவது போகா மலிருப்பது. மதசின்னங்கள் அணிவது, அணியாமலிருப்பதும் உருவத்தை வழிபடுத் துவதும். வழிபடாமலிருப்பதும்.  ஆத்திகம் பேசுவது,  நாத்திகம் பேசுவது ஆகிய காரியங்கள்  எது வேண்டுமானாலும் செய்து  கொண்டு செய்யாமலிருந்து கொண்டும் இந்துவாக இருக்கலாம்.

இந்து  மதத்தில் நாஸ்திகத்திற்கு இடமுண்டு


பிறப்பினால் ஜாதி கற்பிப்பதே வருணா சிரமாகும். இதனை எல்லா இந்துக்களும் ஏற்றுக் கொள்ளுவ தில்லை. வருணா சிரமத்தை ஒப்புக் கொள்ளாதவர்களை இந்துக்கள் அல்லவென்று யாரும் தள்ளுவ தில்லை, வேதாந்த மத சங்கராச்சாரியார் வருணா சிரமத்தில் ஏன் விழ வேண்டும்? வேதத்தை ஆதாரமாகக் கொண்டு இவர் இந்து,  இவர் இந்துவல்ல என்று சொல்லும் சங்கராச்சாரியார் வேதத் தின்படி  நடக்காத வர்களையெல்லாம் இந்துவல்ல என்று விலக்குவாரா?  பார்ப்பன வக்கீல்கள் இந்துக் களாவார்களா? அவர் களை இந்துக்கள் அல்லவென்று சங்காராச் சாரியார் ஏன்  கூறவில்லை? சமரச சன் மார்க்கம் ஏற்பட்டு  வரும் இந்நாளில் இடை காலத்தில் ஏற்பட்ட வருணாசிரமத்திற்கும்  ஆதிக்கம் தேடுவது அக்கிரமமாகும்.  நால் வருணாசிரம முதலா நவின்ற கலை சரிதமெல்லாம் பிள்ளை விளையாட்டே என்பதாக திரு. முதலியார் அவர்கள் குறிப்பிட்டுஇருக்கின்றார்.

இவற்றுள் இந்து மதத்தைப் பற்றி நாம் அவ்வபோது சொல்லி வந்த பல விஷயங் களையே  திரு. முதலியார் அவர்கள் குறிப் பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. இந்து மதத்திற்கு என்று ஒரு குறிப்பிட்ட கொள்கை இல்லை என்று நாம் சொல்லி வந்ததை ஏற்றுக் கொண்டு  மேலும் கோவிலை ஒப்புக் கொள்ளாமலும் உருவ வழிபாட்டைச்  செய் யாலும்  மதச் சின்னத்தை அணியாமலும்  கடவுள் உண்டு என்பதை ஒப்புக் கொள்ளா மலும் இருப்பவர்கள் கூட இந்து மதஸ் தாரர்கள் என்பதாகவே, அது மாத்திர மல்லாமல் சமரசக்  கொள்கைகள் உடை யாரனைவரும்  இந்துக்கள் என்றே குறிப் பிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

இவற்றையெல்லாம் விடமற்றொன்று அதாவது ஒவ்வொருடைய மனச் சாட்சிக்கும் மதிப்புக்கு   கொடுப்பது இந்து  மதம் என்றும்  சொல்லி இருப்பதாகும்.

எனவே வாசகர்களுக்கும் இப்போதாவது இந்து மதம் என்பதின் கொள்கை யோக்கி யதையும் மதிப்புக்  கொடுப்பதும் இந்து மதம் என்றும் சொல்லி இருப்பதாகும். எனவே வாசர்களுக்கும் இப்போதாவது இந்து மதம் என்பதின்  கொள்கை யோக்கியதையும்  நடைமுறையின் யோக்கியதையும் அதன் பேரால் மக்களை அடிமைக் கொண்டு கசக்கிப் பிழிந்து பார்ப்பனச் சோம்பேறிகள். புரோகித அர்ச்சக சாஸ்திரி  கூட்டத்தார்கள் கொள்ளையடித்து வரும் யோக்கியதையும் விளங்கவில்லையா என்று  கேட்கின்றோம்.

- விடுதலை நாளேடு, 7.9.18