![](https://scontent.fmaa1-4.fna.fbcdn.net/v/t1.0-9/35123915_141539300054581_2842576125777936384_n.jpg?_nc_cat=100&_nc_sid=8bfeb9&_nc_oc=AQmrxwok0uKQZ1kSmaNWrJIJNuK4VTcEWjHLj_C3NMtU3IKv1Se3BSzXhuS21LtZknM&_nc_ht=scontent.fmaa1-4.fna&oh=55ed502ecabe433033408a32af9e3f14&oe=5F0BEE81)
![](https://scontent.fmaa1-4.fna.fbcdn.net/v/t1.0-9/35051752_141539336721244_3847457868697567232_n.jpg?_nc_cat=109&_nc_sid=8bfeb9&_nc_oc=AQmWJRMxQP1JXGqDOiFAQyAk89Xvo1HJAJe8J06D2BrnmtJK-iJF2vCO-t-t6edeSuw&_nc_ht=scontent.fmaa1-4.fna&oh=971da6d0137e1886593b20a7cb5de6ca&oe=5F0E66C0)
![](https://scontent.fmaa1-3.fna.fbcdn.net/v/t1.0-9/34984357_141539366721241_5531881485990100992_n.jpg?_nc_cat=107&_nc_sid=8bfeb9&_nc_oc=AQlCwhdoLWoDNgn94d6VShQcZWI695YMBdkgJK4YixOMCvVaP5e5hpFMrIcnIrKlWdc&_nc_ht=scontent.fmaa1-3.fna&oh=38f3884c2affcdb7ff751fb93df79347&oe=5F0BF078)
![](https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/35058180_141539410054570_7238757478614171648_n.jpg?_nc_cat=111&_nc_sid=8bfeb9&_nc_oc=AQkxKuGOgKwXIz0RPNLB3pWPbHoX3gKtY7p8GBl1sO5JiqBfp8ZLE_yOEhrl2MSI_G8&_nc_ht=scontent.fmaa1-1.fna&oh=97f1711c62045a605531d1b89efa8d5e&oe=5F0C3AAD)
கடவுள், மதம், சாதி மற்றும் வேதம் குறித்து பகுத்தறிவு விளக்கங்கள் இப்பகுதியில் இடம்பெறும்.
ஆதியிலே தேவன் வானத்தையும்; பூமியையும் இன்னும் பலவற்றையும் படைத்து முடிவில் ஆதாம் ஏவாள் எனும் இரண்டு பேரைப் படைத்தார். (என்ன கஞ்சத்தனம் பாருங்கள்) அவர்களுக்குக் காயீன், ஆபேல் எனும் இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். இருவரும் கர்த்தருக்குப் பூஜை செய்தார்கள். ஆபேலின் பூஜையை கர்த்தர் ஏற்றுக் கொண்டார். பொறாமை அடைந்த காயீன் ஆபேல் கொன்று விட்டான்
கோபமடைந்த கர்த்தர் காயீனை நாடு கடத்தினார்
பிதாவே! அங்கிருப்பவர்கள் என்னைக் கொன்று விடு வார்களே என்றான் காயீன் காயீனை கொல்லும் எவர்பேரிலும், ஏழு பழிசுமக்கக் கடவது என்று கர்த்தர் அருளினார். இது பைபிள் சொல்கிற கதை; முதலில் கர்த்தர் படைத்தது ஆதாம் ஏவாள் எனும் இரண்டே பேர். அவர்களின் பிள்ளைகள் இருவர். ஆக மொத்தம் நாலே பேர். அதிலும் ஒருவன் இறந்து விட்டான் பாக்கி இருப்பது மூன்றே பேர், அப்படியானால் காயீனைக் கொல்ல அங்கு யார் இருந்தார்கள்? ஒரு வேளை இந்துக்கள் இருந்தார்களா? கிறிஸ்தவர்களை மட்டும்தான் படைத் தாரா? அல்லது படிப்பவர்கள் தான் மடையர்களா?
தகவல்: சராமசாமி, சென்னை -18