திங்கள், 29 ஏப்ரல், 2019

கடவுளின் காமலீலை - சூரியன்

WEDNESDAY, OCTOBER 31, 2012


கடவுளின் காமலீலை - சூரியன்

சூரியனின் மனைவியின் பெயர் சஞ்ஞிகை. இவள் சூரியனின் தேகத்தின் சக்திக்கு ஈடுகொடுக்க முடியாமல் நீங்காத துக்கத்தில் ஆழ்ந்தாள். இவர்களுக்கு பிரஜாபதி மற்றும் யமனும் யமுனை என்னும் இரட்டைப் பெண்குழந்தைகள் உண்டு.

ஒருமுறை சஞ்ஞிகை தன் தந்தையை காணும் பொருட்டு செல்லும் போது தன்னைப் போல இன்னொரு பெண்ணை உருவாக்கி சாயாதேவி என்று பெயரிட்டாள்.

கிளம்பும் போது சாயதேவியிடம் தன் கணவனுக்கு சந்தேகம் வராதபடி எல்லா சுகத்தையும் கொடுக்க வேண்டும் எனவும் தன் குழந்தைகளையும் பேணிகாக்க  வேண்டும் எனவும் வேண்டினாள். சாயாதேவியும் சரி என் ஏற்றுக் கொண்டாள். 

இருந்தாலும் சக்களத்தி என்பதால் குழந்தைகளை சரிவர கவனிக்காமல் துன்புறுத்தினாள். இதேவேளை கணவனிடம் சொல்லாமல் வந்த மகளை நீ ஒரு பெண் குதிரையாக கடவாய் என சாபமிட்டு அனுப்பினான் சஞ்ஞிகையின் தந்தை.

மூத்தவள் குழந்தைகளை கொடுமைப்படுத்துவதை காணமுடியாத யமன் கோபித்து அவளை காலால் உதைக்க அதற்கு சாயதேவி உன் கால் புழுக்கக் கடவது என சாபமிட்டாள். யமன் இதை தனது தந்தை சூரியனிடம் தெரிவித்தான். தாயின் சாபம் நீக்கலாகாது எனக்கூறி சாயாதேவியிடம் காரணம் கேட்க அவள் தன் சுயரூபம் பற்றி சொன்னாள்.

இதைக்கண்டு கோபமுற்ற சூரியன்  சஞ்ஞிகையின் தந்தையிடம் முறையிட்டான். அவர் அமைதிகொண்டால் தக்க யோசனை கூறுவதாக சொல்ல அதற்கு சம்மதித்தான்.  உனது தேக வெப்பம் தாங்க முடியாததால் அவள் இங்கு வர என்னால் குதிரை உருவம் கொண்டு உத்திரகுரு காட்டில் இருக்கிறாள் என்றான்.

சூரியனையும் தேக வெப்பத்தை குறைத்து கூடி மகிழ வசதியாக உருவம் பெற்று பின் அவனும் குதிரை உருவம் கொண்டு சஞ்ஞிகையுடன் கூடி வாழ்ந்தான். அப்போது மூக்கின் வழியே வீரியம் வெளிப்பட்டு அதனால் அஸ்வினி தேவதைகள் பிறந்தனர். (பிரம புராணம்)

ஆதாரம் : அபிதான சிந்தாமணி பக்கம் 722 - 723.
oh podu - Blogger

கடவுளின் காமலீலை - இந்திரன்

கடவுளின் காமலீலை - இந்திரன்



1. கெளதமர் மனைவியான அகலிகையின் மேல் ஆசை கொண்டான் இந்திரன். எப்படியும் அவளை அடையவேண்டும் என ஒரு திட்டம் தீட்டினான். கெளதமர் தினமும் கங்கா ஸ்நாநத்திற்கு செல்வார் என்பதை அறிந்து கோழி கூவிவது போல் கூவினான். அதைக் கேட்டு எழுந்த கெளதமர் வீட்டை விட்டு கிளம்பினார். இந்த வேளையில் இந்திரன் கெளதமரைப் போல் உருவம் கொண்டு அவளுடன் புணர்ச்சியில் ஈடுபட்டான். அகலிகையும் இவன் தன் கணவன் அல்ல என்பதை அறிந்து கொண்டாலும் தன் அழகில் கர்வம் கொண்டவளாய் புணர சம்மதிக்கிறாள்.

கெளதமர் வருவதற்குள் கிளம்பிவிடலாம் என்று நினைத்த இந்திரன் மாட்டிக் கொண்டான். இருவரையும் பார்த்த கெளதமர் இந்திரனுக்கு ஆண்மையை இழக்குமாறும் பெண்களுக்குண்டான அநெக குறிகள் உடம்பு முழுவதும் வரவும், அகலிகைக்கும் காற்றை மட்டும் உணவாகக் கொண்டு, புழுதியோடு புழுதியாக கேட்பாரற்று கிடக்க வேண்டும் எனவும் ராமன் வந்து உனக்கு சாபவிமோசனம் தருவான் எனவும் சாபமிட்டார்.

தன் உடல் முழுவதும் பெண் குறிகளாகப் பெற்ற இந்திரன் நாணமடைந்து தாமரைத் தண்டில் ஒளிந்து கொண்டான். பின்னர் தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்க மற்றவருக்கு கண்களாகவும் இந்திரனுக்கு பெண்குறிகளாகவும் தரப்பெற்று தன்னுலகடைந்தவன். (இராமாயணம்)

2. தேவசன்மன் மனைவியாகிய உரிசையை அடைய இந்திரன் ஆசைப்பட்டான். ஒரு நாள் முனிவர் வெளியே செல்லும்போது விபுலன் என்ற சீடனிடம் மனைவியை பார்த்துக் கொள்ளுமாறு கூறினார்.

முனிவர் இல்லையென்று அறிந்த இந்திரன் அவளை அடைய வந்தான். ஆசை வார்த்தைகள் பேசி தன் வசம் இழுக்கப் பார்த்தான். இதைக்கண்ட விபுலன் இந்திரனைக் கண்டித்தான். பின் இந்திரன் தன் தவறுக்கு மன்னிப்பு வேண்டி வெளியேறினான்.

3. ஒருமுறை சலந்திரன் ஒரு பெண்ணிடம் ஆசை கொண்டான். அதே பெண்ணிடத்தில் இந்திரனும் ஆசை கொண்டு இருவரும் கடலில் குதித்து தேடினார்கள்.

4. அரம்பையர்கள் என்பது 60 ஆயிரம் பெண்டள் உள்ள தேவலோகம். அங்கே இந்திரன் அரம்பையர்களுடன் கூடி இருக்கையில் நாரதர் வந்தார். அவரை வணங்கி இங்கிருக்கும் பெண்களில் உங்களுக்கு பணிவிடை செய்ய யாரை வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்றான். நாரதர் வபு என்ற பெண்ணை தெர்ந்தெடுக்க அவளை அவருடன் அனுப்பி வைத்தான்.

5. இந்திரன் நளாயினி மேல் ஆசை கொண்டு அவளை கைலாசத்திற்கு அழைத்துச் சென்றான். அங்கே சிவனைக் கண்டு தன் வச்சிராயுத்தால் ஓங்கி தாக்க முற்பட்டான். அப்போது சிவன் திரும்பிப் பார்க்க அதனால் இந்திரன் கையும், வலது தோளும் வாதமுற்று துக்கமடைந்தவன்.

6. இந்திராணி ஒருமுறை கொலுவில் சகல போகத்துடன் இருக்கும் இந்திரனைக் கண்டு என்னால் தான் உனக்கு இந்த போகம் வந்தது எனக் கூறினாள். அதைக்கேட்ட இந்திரன் கோபமுற்று நீ பூமியில் பெண்ணாக பிறப்பாய் என சாபமிட்டான். அதற்கு இந்திராணி நீயும் இந்த பூமியில் ஆணாக பிறப்பாய் என சாபமிட்டாள்.

பின் இருவரும் புண்ணியகீர்த்தி என்பவற்கு புத்திரன், புத்திரியாக பிறந்தனர்.

7. பாரிசாதன் மனைவி வபுஷ்டமை அடைய இந்திரன் ஆசை கொண்டான். பலவகையிலும் அடைய முற்பட்டு தோல்வி கண்டான். ஒருமுறை பாரிசாதன் அசுவமேத யாகம் செய்ய முற்பட்டான். அசுவமேத யாகம் என்பது யாக குதிரையை யாகம் நடத்துவரின் மனைவியுடன் புணரவைப்பது.

இதைக் கேள்விப்பட்ட இந்திரன் குதிரையின் உடலுக்குள் புகுந்து கொண்டான். யாக முறைப்படி குதிரை வபுஷ்டமையுடன் புணர இந்திரன் திருப்தி கொண்டான். இதனால் அசுவமேத யாகம் செயலிழந்து போனது. (சிவமகா புராணம்)

ஆதாரம் : அபிதான சிந்தாமணி பக்கம் 154-159.

வியாழன், 25 ஏப்ரல், 2019

புரூரவன்_பிறப்பு



இந்த பதிவில் புரூரவன் என்பவன் எவ்வாறு பிறந்தான் என்பதைப்பற்றி அர்த்தமுள்ள ஆரிய இந்துமதம் கூறுகிறது. தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
இந்தக் கதை தேவி பாகவத புராணத்தில் முதல் ஸ்கந்தத்தில் 12வது அத்தியாயத்தில் "புரூரவன் பிறப்பு" எனும் இடத்தில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறான புராண கதைகளில் கூறப்பட்டுள்ள பாத்திரங்களைத்தான் கடவுள் என்றுநம்பி மக்கள் இன்னமும் முட்டாள்களாக இருந்துகொண்டுள்ளார்கள். இந்த புராண கதாபாத்திரங்களின் பெயர்களில்தான் தெருவிற்கு தெரு கோவில்களும் கட்டப்பட்டு சுரண்டலும் மூடநம்பிக்கைகளும் பரப்பப்பட்டுக்கொண்டுள்ளது.  அவர்களுக்காகவே அவர்கள் புராணம் எப்படிப்பட்டது என்பது தெரியப்படுத்தப்படுகின்றது.
வாருங்கள் ஆரிய புராணம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.
சுத்யும்னன் எனும் மன்னன் பெண்ணுருவமடைந்து நமது புதன் கிரகத்துடன் புணர்ந்து புரூரவன் எனும் மகனைப் பெற்றெடுத்த அறிவார்ந்த கதை.
சுத்யும்னன் எனும் அரசன் ஒருநாள் குதிரைமீதேறி மந்திரிகளை பின்தொடர்ந்துவரும்படி கட்டளையிட்டு வேட்டையாட அடர்ந்த வனம் சென்றான். அவன் அந்த வனத்தை அடைந்த மாத்திரத்தில் பெண்ணுருவம் அடைந்துவிட்டான். அவன் மட்டுமல்லாது அவன் ஏறிவந்த குதிரையும் பெண்குதிரையாகிற்று. தானும் தன்குதிரையும் பெண்வடிவமானதைக்கண்டு ஆச்சரியப்பட்டு எவ்வளவு யோசித்தும் காரணம் புலப்படாததால் தான் எவ்வாறு இந்த பெண்ணுருவில் தனது ராட்சியம் சென்று நாடாள்வது என்று அங்கேயே வாழத்தொடங்கிவிட்டான்.
நிற்க. இப்போது அவன் ஏன் பெண்ணுருவானான் என்ற காரணத்தை பார்ப்போம்.
ஒரு காலத்தில் சநகாதி முனிவர்கள் சிவபெருமானைக்காணும் விருப்பமுடையவர்களாய் ஆகாய மார்க்கமாக அந்த உத்தியான வனத்தை நோக்கி வரும்போது அவ்விடத்தில் சிவன் பார்வதியுடன் உடலுறவுசெய்யும் நேரமாக இருந்தது. அதனை அறியாது இவர்கள் சென்றனராகையால் சிவனோடு உடலுறவில் ஈடுபட்டிருந்த அம்பிகை அவர்களைக்கண்டு நாணமுற்று சிவனுடைய மடியினின்றும் எழுந்து ஆடையின்றியிருந்த தமது அங்கத்தை ஆடையினால் மறைத்துக்கொண்டு அவ்விடத்தைவிட்டு மறைவான ஓரிடத்தில் தலைவணங்கியவராய் மிகவும் வெட்கத்தோடிருந்தார். இதுகண்ட சநகாதியர்களும் வனத்தின் மறுபுறம் சென்றுவிட்டனர்.
பின்னர் சிவன் உமாதேவியைப்பார்த்து ஓ பிரியே! நீீ என்ன காரணத்தால் உடலுறவில் நாட்டமில்லாது இருக்கிறாய்? உன்னிஷ்டப்படி உடலுறவு கொள்வதற்கு இப்போது இடையூறு என்ன உண்டாகிற்று? அதனைக்கூறுவாயாயின் அவ் இடையூறைப்போக்கி உனக்கு சுகம் உண்டாக்கும்படி செய்கிறேன் என்றார்.
அதற்கு அம்பிகை, ஓ என் பிராண நாயகரே! சநகாதியர் நாம் இருவரும் உடலுறவு செய்யும் சமயத்தில் அதைக்கவனிக்காது இந்த வழியாக வந்தனர். அதனால் நாணமுற்று இருக்கிறேனன்றி வேறுகாரணமில்லை என்றார்.
அதற்கு சிவன் பார்வதிதேவியைப் பார்த்து ஓ தேவி! இன்று முதல் இந்த வனத்தில் யார் உட்பிரவேசித்தாலும் அவர்கள் பெண்ணுருவத்தை அடையக்கடவர் என்று சபித்தார். இந்த காரணத்தால்தான் சுத்யும்னன் இந்த வனம் வந்தவுடன் அவனும் குதிரையும் பெண்ணுரு அடைந்தனர்.
சரி இனி சுத்யும்ன மன்னன் எவ்வாறு கர்ப்பமானான் என்பதைப் பார்ப்போம்.
சுத்யும்னன் பெண்ணுருவோடு அவ்வனத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும்போது சந்திரன் (நமது துணைக்கோள்) புத்திரனான புதன் ஊரைச்சுற்றிக்கொண்டு அந்த வனத்தின் வழியாக போகும் தருணத்தில் அதி சுந்தரியாக பெண்ணுருவில் இருந்த இந்த மன்னனைப்பார்த்து மோகித்தான். இம்மன்னனும் அவனைப்பார்த்து மோகித்து ஓ சுந்தரா! உன்னை நான் புருஷனாககொண்டு சுகிக்கவெண்ணி இருக்கிறேன் என்று கூறியவளவில் அவனும் மோகித்தவனாய் புணர்ந்து சென்றான். பின்னர் இம்மன்னன் கர்ப்பமாகி புரூரவன் என்பவனை பெற்றதாக அர்த்தமுள்ள ஆரிய இந்துமதம் கூறுகிறது.
இந்த கதையை ஏன் கூறுகிறேன் என்றால் இவ்வாறான வேத புராண இதிகாசங்கள்தான் சில பாத்திரங்களை கடவுள்கள் என்று கற்பித்துள்ளன. இவற்றை புறந்தள்ளினால் இந்த கடவுள்கள் பெயர்கள்கூட யாருக்கும் தெரியவந்திருக்காது. சமூகமும் முட்டாள்தனமாக இவற்றின்பின்னால் சென்றிருக்கவும் வாய்ப்பில்லை. ஆக அரைகுறையாக இவற்றை தெரிந்துகொள்ளாது முற்றுமுழுதாக தெரிந்துகொள்ளுங்கள் இவை கற்பனை கதாபாத்திரங்கள் என்பது புரியும். இவற்றின்பின்னால் விழுந்துகும்பிடுவது முட்டாள்தனம் என்பதும் புரியும்.
வாசிப்பவர்களின் பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்.

நமது புதன் கிரகம் எவ்வாறு சந்திரனிற்கு பிறந்தது என்பதைப்பற்றி ஆரிய அர்த்தமுள்ள இந்துமதம் கூறியதை இதற்கு முந்தைய பதிவில் பார்த்திருப்பீர்கள். பார்க்காதவர்கள் இங்கு சென்று பார்த்துக்கொள்ளுங்கள்.
https://m.facebook.com/story.php?story_fbid=10218399962213765&id=1334506017

- வேணுகோபால சங்கர், முகநூல் பக்கம்
20.4.19

புதன் கிரகம்

புதன்



நமது புதன் கிரகம் எவ்வாறு உருவாகியது என்பதை அர்த்தமுள்ள இந்துமதம் கூறுகின்றது. வாருங்கள் தெரிந்துகொள்வோம்.
இந்தக் கதை தேவி பாகவத புராணத்தில் முதல் ஸ்கந்தத்தில் 11வது அத்தியாயத்தில் "புதனுற்பத்தி" எனும் இடத்தில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறான புராண கதைகளில் கூறப்பட்டுள்ள பாத்திரங்களைத்தான் கடவுள் என்றுநம்பி மக்கள் இன்னமும் முட்டாள்களாக இருந்துகொண்டுள்ளார்கள். அவர்களுக்காகவே அவர்கள் புராணம் எப்படிப்பட்டது என்பது தெரியப்படுத்தப்படுகின்றது.
வாருங்கள் ஆரிய புராணம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.
முன்னொரு காலத்தில் தேவகுருவாகிய பிரகஸ்பதியினுடைய மனைவி தாரை என்பவள் சந்திரனுடைய (நமது துணைக்கோள்தான்) வீட்டிற்கு சென்றாள். அவன் இவளது அழகைக்கண்டு காமமுற்றான். இவளும் அவனது முக அழகைக்கண்டு தன் அறிவிழந்தாள். இவ்வாறு இருவரும் ஒருவருக்கொருவர் அதிக மோகங்கொண்டு கிரீடித்து கொண்டிருந்தனர்.
தேவகுரு, சந்திரனிடம் சென்ற தனது மனைவி தாரை நெடுநாளாகியும் வராமையால் மிகவும் கவலையுற்று தனது மாணாக்கன் ஒருவனை சந்திரன் வீட்டிற்கு சென்று தாரையை அழைத்துவருமாறு கூறினார். அவன் சந்திரன் வீட்டிற்கு சென்று அம்மணி உம்மை உம்முடைய கணவராகிய எனது ஆசிரியர் அழைத்துவரும்படி கூறினார். வாருங்கள் என்றான். அவள் அச்சொல்லை ஏதும் கேளாதவள்போல் சும்மாவிருக்க, அக்குறிப்புணர்ந்து திரும்பிவந்த மாணாக்கன் குருவிடம்சென்று சுவாமி! அந்தம்மாள் வருவதாக தெரியவில்லை என்றான். அதைக்கேட்டவுடன் வேறு சில சீடர்களை ஒருவர்பின் ஒருவராக அனுப்பியும் அவள் வராமலேயிருக்கக்கண்டு இவள் சந்திரன் வசமுற்றிருக்கிறாள், இனி நாமே செல்வோமென்று அதிக கோபம்கொண்டு சந்திரனிடம் சென்று, ஓ சந்திரா! என்ன காரியம் செய்தாய்? என் மனைவியை இதுவரை என்னிடம் அனுப்பாத காரணம் என்ன? நான் உனக்கு குருவல்லவா? குருபத்தினியாகிய அவள் உனக்கு தாயல்லவா? உன்னைப்பார்த்தால் அவளை உனக்கு தாயாக எண்ணியிருப்பதாக தெரியவில்லை; ஆகையால் அவளால் நீ அனுபவிக்கப்பட்டாயா? உன்னால் அவள் அனுபவிக்கப்பட்டாளா? ஏ மூடா பிரம்மகத்தி செய்தவனும் (பிராமணனை கொன்றால் வரும் தோசம்) பொன் திருடினவனும் மதுபானம் செய்தவனும் குருமனைவியை புணர்ந்தவனுமாகிய இந்நால்வரும் கொடும் பாவிகள் என்றும், இவர்களை நேசிக்கிறவன் ஐந்தாவது பெரும்பாவி என்றும் தரும நூல்களில் கூறப்பட்டுள்ளதல்லவா? இந்த தாரை உன்னால் அனுபவிக்கப் பட்டிருப்பாளாயின் நீ பஞ்ச மா பாதகர்களில் ஒருவனாயிற்றே? இனி நீ தேவர்களிடம் செல்வதற்கு யோக்கியனில்லை. இப்போதாயினும் எனது மனைவியை விட்டுவிடு; நான் அழைத்துப் போகிறேன். இல்லையாகில் குருவினால் ஏற்படும் பழியை சிவபெருமானாலும் நீக்கமுடியாது என்கிறார்.
இதைக்கேட்ட சந்திரன் கூறுகின்றான். தேவகுருவே! மனைவியை பிரிந்திருக்கும் காரணத்தினால் உமக்கு அளவு கடந்த கோபம் வருகின்றது. கோபமுடைய அந்தணரை பூசிக்கக்கூடாது என்றும், கோபமில்லாத அந்தணரை விதிப்படி பூசிக்கவேண்டும் என்றும் தர்ம சாஸ்திரம் கூறுகிறதே. அதை நீர் அறியாமல் போனதென்ன? இனி நீர் அதிகமாக பேசவேண்டாம். உமது மனைவி உம்மிடம்வர இஷ்டமிருந்தால் இத்தனை சீடர்களும் நீரும் இங்கு வரவேண்டுமா? இதைத் தெரிந்துகொள்ளும் அறிவே உமக்கில்லையா? அவளுக்கு எப்போது இஷ்டமோ அப்போது உம்மிடம் வந்து சேருவாள். சிலவேளை வராமலும் இவ்விடத்திலேயே தங்கி இருந்தாலும் இருப்பாள். ஏனெனில் பெரும்பாலும் அவளுக்கு இங்கேயே சுகத்தை அனுபவிக்கவேண்டும் என்ற விருப்பம் இருக்கின்றது. அதற்கு இடையூறு செய்து நீர் கொடுக்கப்போகின்ற சுகம் என்ன? இதனை அறியாது இருக்கின்றீரே. இப்போது நான் சொல்லும் புத்தியைக் கேட்டு போவீரானால் அவள் சில காலஞ்சென்று தானாய் வந்து சேருவாள். அவள் என்னுடன் இருப்பதால் அவளுக்கு வரும் தோசமென்ன? நீர் முன்னொரு காலத்தில் இவ்விசயத்தைப்பற்றி "விபச்சாரம் செய்கின்ற பெண்ணும் வேதவிதிப்படி வாழாத அந்தணனும் தூற்றப்படமாட்டார்கள்" என்று ஒரு தர்ம சாஸ்திரம் ஏற்படுத்தி இருக்கின்றீரே. அது உமக்கில்லையோ? ஊருக்குதானா சொன்னது? நன்றாக இருக்கின்றது. இவ்வாறு சந்திரன் கூறியதும் மிக வருத்தம் அடைந்து திரும்பி தனது வீட்டிற்கு வந்தார்.
சில காலம் சென்றபின் மீண்டும் சந்திரனின் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த காவலாளி அவரை உள்ளே போகவிடாமல் தடுக்க, மிக கோபம்கொண்டு சந்திரனிக்கு தெரியப்படுத்த கூறினார். காவலாளி சந்திரனுக்கு தெரியப்படுத்தியும் சந்திரன் இவரை சந்திக்க வராததை கண்டு கோபமுற்று இவனுக்கு பலமான தண்டனை செய்யவேண்டும் என்று முடிவெடுத்து, அவன் வாசல்படியில் நின்று பெரும் கூச்சலிட்டு, அடே பாவி, தெருவில் நான் நின்றுகொண்டிருக்க நீ வீட்டில் என் மனைவியோடு தூங்கிக்கொண்டிருக்கின்றாயே, அவளை சீக்கிரம் விட்டுவிடு, இல்லையானால் கடுமையான சாபத்தினால் உன்னை சாம்பல் ஆக்கிவிடுவேன். இது உண்மை. வீணாய் கெடாதே என்றார்.
குரு வசனத்தைக்கேட்ட சந்திரன் கோபாவேசம்கொண்டு வெளியே வந்து நீரென்ன அதிக வார்த்தைகளை பேசுகின்றீரே? நீரென்ன மன்மதனோ? அழகற்ற உமக்கு அழகான தாரை எப்படி தகுதியாவாள்? உமக்கேற்றபடி அழகற்ற ஒரு பெண்ணை சுவாதீனப்படுத்திக்கொண்டு இனி சுகமாயிரும். பிச்சை எடுத்து உண்ணும் வீட்டில் இவள் கால் வைக்கவும் கூடுமா? பெண்களுக்கு தமக்கு சமமான அழகுடைய புருஷனிடத்திலேயே அன்புண்டாகுமென்று சொல்லப்பட்டிருக்கின்ற காமசாஸ்திரத்தை நீர் அறிந்தபோதிலும், நீர் ஏன் சாஸ்திரத்திற்கு முரணாக செய்கின்றீர்? வந்த வழியைப் பார்த்து செல்லும். என் அன்புக்கன்பான தாரையை விடமாட்டேன். நீர் இப்போது காமவெறிஏறி கொடுக்கும் சாபம் என்னை ஒன்றும் செய்யாது. உமது மனைவியை தரமாட்டேன். உம்மாலானதை பார்த்துக்கொள்ளும் என்றான்.
இதன்பிறகு தேவகுரு தேவர்களின் அரசன் இந்திரனிடம் முறையிட சென்றார்.
இவர் வரவைக்கண்ட இந்திரன் அவருக்குரிய மரியாதைகளை செய்து, உங்களுக்கு என்ன துக்கம் உண்டாகிற்று என்று வினவுகின்றான். அவரும் நடந்தவற்றை கூறி எனக்கு நீதான் ஏதாவது செய்யவேண்டும் என்கிறார். அதற்கு இந்திரன்; நீர் வருத்தப்படவேண்டாம். இப்பவே சந்திரனிடம் தூதுவனை அனுப்புகின்றேன். நான் செல்லாது தூதுவன் சென்றால் காமாந்தகனான சந்திரன் தாரையை அனுப்பமாட்டான். இருந்தாலும் அனுப்புகின்றேன். அவன் அனுப்பாவிட்டால் படைகளோடு சென்று போரிட்டாவது உங்கள் காரியத்தை நிறைவேற்றுகிறேன் என்று சமாதானம் கூறி ஒரு தூதுவனை அனுப்புகின்றான்.
தூதுவன் சந்திரனிடம் சென்று கூறுகின்றான்; நீ எல்லா நீதிகளையும் அறிந்தவன். நீ அறியாத தர்மம் ஒன்றில்லை. உனது தந்தையோ அத்திரிமகரிஷி. அவர் பெயரை சொன்னாலே உலகமெல்லாம் ஆச்சரியமடையும். அவரின் புகழுக்கு கெடுதிவரும்படி இவ்வாறு நடக்கலாமா? பசு பறவைகள்கூட தமது இணையை காப்பாற்றிக்கொள்ள சோம்பலின்றி ஜாக்கிரதையாக இருக்கின்றன. எல்லா அறிவோடும்கூடிய மனிதர் தமது மனைவியை பிறருக்கு கொடுத்துவிட்டு தனியே உறங்குவார்களா? இப்போது உன் மனைவியை பிறர் அனுபவிக்க நீ மனம் ஒப்புவாயா? தன்னைப்போல் பிறரையும் பார்ப்பதுதானே நீதி? உன் மனைவியை காக்க நீ எப்படி முயலுகின்றாயோ அப்படியே பிறரும் இருப்பார் என்று நீ ஏன் உணரவில்லை? உனக்கு தஷனால் கொடுக்கப்பட்ட மனைவியர் இருபத்து ஒருவர் இருக்க குருவின் மனைவியை ஏன் ஆசைப்பட்டாய்? மேனகை முதலிய தாசிகள் பலர் இருக்கின்றார்களே, அவர்களை இஸ்டப்படி அனுபவிக்கலாகாதா? நீ செய்வது அநீதி என்று நான் சொல்லவேண்டுமா?
வீணாய் கெடாதே. தாரையை அனுப்பிவிடு. இல்லாவிட்டால் யுத்தம் மூழும் என்றான்.
இதைக்கேட்ட சந்திரன் கோபம்கொண்டு இந்திரனிடம் கூறச்சொல்லி கூறுகின்றான்; ஓ இந்திரா! உலகத்தில் அநேகர் பிறருக்கு உபதேசம் செய்வதில் மட்டும் வல்லவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் அதுபோல் தாங்கள் நடப்பதில்லை. பிறர் குற்றம்கூற புகுந்தவர் அதற்குமுன் தங்கள் குற்றங்களை ஆலோசிக்கவேண்டியது அவசியம். எனக்கு அறிவுரை கூறவந்தவன் யோக்கியமானவனாக இருந்தால் பரவாயில்லை, உனக்கு எப்போதும் பிறர் தாரத்தை கவர சந்துபார்ப்பதுதான் வேலை. உன் செய்தி இப்படியிருக்க, உன் குருவாகிய பிரகஸ்பதி காமசாஸ்திரம் ஏன் செய்யவேண்டும்? அந்த சாத்திரப்படி பார்க்கும்போது நான் விரோதம் செய்ததாக ஏற்படமாட்டாது. அவருக்கு மாணாக்கராக இருக்கும் நான் அவர் சொல்லிய சாத்திரப்படி நடப்பதுதானே தருமம்? அவர் கூறிய சாஸ்திரத்தில் பெண் ஒரு புருஷனிடத்தில் அன்பு வைப்பாளாயின் அவளை ரமிக்கலாம் எனவும், வன்மையாளருக்கு எல்லா பெண்களும் சுவாதீனம் எனவும், மென்மையாளருக்கு தமக்குரிய ஒரு பெண்ணும் சுவாதீனம் இல்லை எனவும், தன் மனைவி பிறர் மனைவி என்கின்ற வேற்றுமை அறிவற்றவர்களுக்கு உண்டாகும் வீண் பிரம்மை எனவும் கூறப்பட்டிருக்கின்றன. இந்த நியாயப்படி தாரை என்மீது வைத்திருக்கின்ற அன்பிற்கு அழவேயில்லை. அதில் ஒரு அணுவேனும் குருவில் வைத்தவளன்று. அவ்வாறு என்னிடம் அன்பு வைத்திருக்கும் தாரையை அவர்கூறிய நீதிப்படி விட காரணம் இல்லை. இவ்வாறு சந்திரன் கூறியதை தூதுவன் இந்திரனிடம் சென்று கூறுகின்றான்.
இதைக்கேட்ட இந்திரன் அவன் படைகளுடன் யுத்தத்திற்கு தயாராகின்றான். இதைப்பார்த்த அசுரர்களின் குருவாகிய சுக்கிராச்சாரி (சுக்கிரன்) சந்திரனுக்கு ஆதரவாக யுத்தத்திற்கு வருகின்றார்.  இதை அறிந்த தேவகுரு சிவனை வேண்ட, சிவனும் இந்திரனுக்கு துணையானார்.
தேவ அசுர யுத்தம் பல நாட்களாக நடக்கின்றது.
இதைப்பார்த்த பிரம்மா குருவின் மனைவிக்காக இவ்வாறு யாராவது யுத்தம் செய்வார்களா என்று பார்த்து, நான் சென்று சமாதானம் செய்துவிட்டுவருவோம் என்று யுத்தகளம் செல்கின்றார்.
போர்க்களத்தில் சந்திரனைப்பார்த்து; ஓ சந்திரா! உன்னை மதி என்று வித்துவான்கள் கூறுகின்றார்களே, இனி உன்னை மதிப்பார்களா? மதிகெட்டவனே குருபத்தினியை கொடுத்துவிடு. இல்லாவிட்டால் விஷ்ணு மூர்த்தியைக்கொண்டு உன்னை நாசம் செய்துவிடுவேன் என்றுகூறி, அவன் அருகில் இருக்கும் சுக்கிரனைப்பார்த்து; உனக்கும் என்ன அறிவுகெட்டுப் போய்விட்டது? இனியாவது சண்டையை நிறுத்து என்று கூறினார். இதனால் சுக்கிரன் சந்திரனைப்பார்த்து; இனி நான் யுத்தத்திற்கு உதவ மாட்டேன். தாரையை அனுப்பிவிடு. என் தந்தை மிகவும் கோபிக்கிறார் என்றான். அசுர குரு கூறியதைக்கேட்டு சந்திரன் மிக வருத்தத்தோடு கற்பமாக இருந்த தாரையை தேவகுருவிடம் அனுப்புகின்றான்.
தாரை கற்பிணியானதால் சில நாட்களில் அழகான புத்திரனை பெறுகின்றாள். தேவ குருவும் தனக்கு குழந்தை பிறந்துவிட்டது என்று சந்தோசப்பட்டு ஜாதகாதி கர்மங்களை செய்தார். இச் செய்தியைக்கேட்ட சந்திரன் ஒரு தூதுவனை அனுப்பி; சந்திரன் வீரியத்திற்கு பிறந்தவனை உன் மகனாக எண்ணிக் கூத்தாடுகின்றாயே. அவன் உனக்கு பிறந்தவனா? உனக்கு அறிவில்லையா? என்று கேட்கச்சொன்னான். தூதுவனும் அவ்வாறே கேட்க; அவன் என்னைப்போலவே இருக்கின்றதால் என் மகன்தான் என்பதில் சந்தேகமென்ன? இவனைப்பற்றி சந்திரனுக்கு எந்த சம்பந்தமும் இல்லையென்று தூதனிடம் சொல்லியனுப்ப, முன்புபோல் சந்திரனுக்கும் தேவகுருவிற்கும் கலகம் ஏற்பட்டு தேவர்களும் அசுரர்களும் போர் புரிய, பிரம்மன் வந்து சமாதானம் செய்து சண்டையை நிறுத்தி, இதனுடைய உண்மையை அறிய தாரையிடம் சென்று; ஓ தாரையே! இப்போது பிறந்திருக்கும் உன் புத்திரன் சந்திரனுக்கு உண்டானவனா? உனது நாயகருக்கு உண்டானவனா? என்று கேட்க, தாரை நாணமுற்று, சந்திரனுக்கே என்றுகூற, பிரம்மன் தெளிவடைந்தான். அந்த பிள்ளைக்கு சந்திரன் ஜாதகாதி கர்மங்களைச் செய்து புதன் என்று பெயரிட்டான். இவர்தான் நமது புதன் கிரகம்.
இந்த கதையை ஏன் கூறினேன் என்றால்; கதையில் எது சரி எது பிழை என்று பார்ப்பதற்காக அல்ல. இவ்வாறான புராண கதாபாத்திரங்கள்தான் இன்று கடவுள்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறான புராண இதிகாச வேதங்களை புறம்தள்ளினால் இந்த கதாபாத்திரங்களின் பெயர்களே யாருக்கும் தெரியவந்திருக்காது. அவர்களை கடவுள்கள் என்றும் முட்டாள்தனமாக நம்பி ஏமாந்திருக்கவும் மாட்டார்கள். இவை கடவுள்கள் அல்ல வெறும் கற்பனை கதை காதாபாத்திரங்கள் என்று உணர்த்துவதற்காகவே.
-Venu Gopaala Shanger முகநூல் பக்கம்
25.12.18

இந்திரனின் இழி நடத்தை

தேவலோக அரசன் இந்திரனுக்கு தேவேந்திரன் என்றும் பெயர் ஒன்று உண்டு.
இவன் கல்யாணமே ஆகாதவன் ஆனாலும் :கட்டிவறை சுகத்தைக்கரை கண்டவன்.
காதல் கிழத்தியாக இந்திரனுக்கு நிரந்தரமாக இருப்பவள் இந்திராணி!
இவள் ஒரு சிரஞ்சீவிச் சிங்காரி!
எத்தனையோ பேர் இந்திர உலகின் ஆளுகைப் பொறுப்புக்கு வந்தனர் :போயினர்.
இருப்பினும் இந்திராணி மட்டும் நொந்தாளில்லை:நோவு நொடி என்று வெந்தாளில்லை.

இங்கே குறிப்பிடப்படும் இந்திரன், எத்தனையாவது பட்டக்காரன் என்று கேட்காதீர்கள்!
வகையும் தொகையும் வழவழப்புராணங்களில் தேடக்கூடாது.

குந்திபெற்றுக்குவித்த அரைடஜன் ஆண் பிள்ளைகளில் அர்ச்சுனனுக்கு அப்பன் சாட்சாத் இந்திரன்தான்.

இதெல்லாம் சாமான்யமான இந்திரத்தனம். ஒரு சாமார்த்தியமான இந்திரத்தனத்தில் நுழைவோம்.

காடொன்றில் பர்ணசாலை அமைத்து, இல்லறம் நடத்தி வந்தான் ஒரு அப்பாவி முனிவன்.
இந்த முனித்தம்பதிகளின் பெயர் கவுதமன் ---அகலிகை, இந்த கவுதமன் இந்திரனின் குரு, அகலிகையின் அள்ளிப்பருகும் ஆர்வத்தால், தோழன் சந்திரனையும் துனணக்கழைத்துக் கொண்டு துள்ளிக்குதித்தோடினான் இந்திரன், அது இருட்டு வேளை.
தனது திருட்டு வேளைக்கு இடையூறாக, அகலியை அனணத்தவாறு உள்ளே கவுதமன் கட்டிப்பிடித்துக் கண்ணயர்ந்து கிடந்ததை இந்திரன் கண்டான்.
கோழியாகி மாறி, கூரைமேல் ஏறி, கொக்கரக்கோ என்று கூவினான் இந்திரன்.
அப்பாவி முனிவனுக்குப் பொழுது புலப் போவதாக நினைப்பு, கசகசப்பை கழிவு வர, நீராடும்எண்ணத்துடன் நீர்நிலை ஒன்றிற்குப் புறப்பட்டுப் போய்விட்டான்.
கோழியின் கூவலால் ஆவலை அடக்கும் அச்சாரம் கிட்டிய களிப்பில், கவுதமனாய் உருவெடுத்து, ஒரத்தில் ஒதுங்கி நின்ற சந்திரனிடம் இந்திரன் வந்தான்.
நடந்த நிகழ்ச்சிகளை வாய்திறவாமல் நின்ற சந்திரனைப் பூனையாக மாற்றி, "களிப்புற்று, சலிப்புற்று வரும்வரை காவலாய் இரு. வாசலில் கிட" என்று சொல்லி அகலிகையின் அருகில் போனான் இந்திரன்.
காம்பெடுத்த உதிரி ரோஜாவாய்ப் படுக்கையில் பரவலாய்க்கிடந்தாள் அகலிகை. ஊறிக்கிடந்த உணர்வுகளை, உணர்ச்சி ஆறிக்கிடந்த அகலிகையிடம் பாய்ச்ச, வாரி அனணத்தான் அவளை, சினமோ, சிணுக்கமோ இல்லாமல் இந்திரனோடு இனணந்தாள் அவள்.
அள்ளியும், கிள்ளியும் படுக்கையில் இவர்கள் துள்ளித்துவண்ட வேளையில் "ஒரிஜினல் "கவுதமன் ஓடிவந்து கொண்டிருந்தான்.
நேரம் ஆகவில்லை :கோழியின் கூவலுக்கும் நியாயம் ஏதுமில்லை என்பதை உணர்ந்து ஞானதிருஷ்டியை ஏவிப்பார்த்தான் கவுதமன்.

உரிப்பானையில் சொறிப் பூனை வாய்வைத்த கதையாய் அகலிகலயின் பத்தினித்தனம் இந்திரனால் இழிவுப்படுவதைக் கண்டு, ஓடோடிவந்தான் தன் இருப்பிடத்துக்கு. வாசலில் குறுக்கும் நெடுக்குமாய் "மியாவ் "போட்டு, சந்திரன் உலாவிக்கொண்டிருந்தான். கோபம் தாளாத கவுதமன் போட்டான் ஒரு போடு   தனது யோகத் தண்டத்தால் அந்தப் பூனையின் மீது.
அந்த அடியின் வடுக்களே நிலவின் களங்கமானது :நிரந்தரமாய் நிலைத்துப் போனது.
போலி கவுதமனான இந்திரன், தனது குருநாதன் கோபத்துடன் வந்ததைப்பார்த்தும், அகலிகையை உதறினான்.
இருவரையும் பார்த்து சுண்டிச்சுருங்கினாள் முனிபத்தினி 
"குருத்துரோகம் செய்த கொடியவனே, என்மனைவியின் குறியிலே குறியாக இருந்த உன் உடம்பெங்கும் பெண் குறிகளே குடிக்கொள்ளட்டும் என்று சாபங்கொடுத்தான் முனி.
பின் என்ன சொல்ல!? இந்திரனின் உடல், அதன்பின் ஆன கோலத்தை வர்ணிக்க பட்டினத்தடிகளிடம் தான் வார்த்தைகளைக் கடன் வாங்க வேண்டும்.
"காமப் பாழி:கருவினை கழனி "
(ஆதாரம் :அபிதான சிந்தாமணி --பக்கம் 155)

பக்த கோடிகளே! ஓ! பக்த கோடிகளே!
1.கல்யாணம் ஆகாமலே கட்டிலறைக் களிப்புகளில் கரை கண்டவன் கடவுளாக இருக்கத் தகுதியானவனா?
பதவிக்குப் பலர் வருவதும், வருபவர்களின் படுக்கையறை உதவிக்கு  இந்திராணி போவதும் அருவருப்பாக இல்லையா?
அப்படியானல் இந்திராணி என்பவள் எத்தனை வயது ஆனாலும், ஈளைகட்டாது, இருமல் வராமல், தடியூன்றாமல், தள்ளாடாமல் என்றும் "பதினாறாக "இருக்க, காயகல்பம் சாப்பிட்டாளா? அது எங்கே இருக்கிறது?
2.குந்திதேவிக்கு,குயுக்தியுடன் குழந்தை தந்த கூத்து நம்பத்தகுந்ததா? அந்த அல்லிமணாளன் அர்ச்சுனனின் பிறப்பு இப்படியா "பைபிளை "க் காப்பி அடிக்க வேண்டும்?
3.மாதா,பிதா,குரு என வரிசைப்படுத்திக் களிக்கும்பெரியவர்களே! குரு பத்தினியின் கருப்பாதையை கலங்கடித்த கடவுளைக் கும்பிடலாமா?
இது போன்ற ஆபாசக்கடவுளை நம்பிடலாமா?
4.இந்திரனுக்கும் சந்திரனுக்கும் சாபங்கொடுத்தான் சபித்த முனி, போலிங் கோழியின் கேலிக்குரிய கூவலை இனங்கண்டு கொள்ள முடியவில்லையா?
சந்திரனுக்கு ஏற்பட்ட தழும்புகள்தான் இன்று அதன்மீது தோன்றும் தேமல் கோலங்கள் என்று --நிலவுப்பயணங்கள் போய்வந்துவிட்ட பின்புமா நம்புகிறீர்கள்?
சேவல்தான் கூவி எழுப்பும், கவுதமனின் காலத்திலும் --இந்திரன் வாழ்ந்த நேரத்திலும் கோழிதான் அந்த வேலையைச் செய்து கொண்டிருந்ததோ?
- ஆறாம் அறிவு  குழுவில் ராஜமோகன்
25.4.19

பிள்ளையார் பிறந்த கதை--இது அழுக்கு கதையல்ல!

நந்தவனத்தில் உலவிவந்த சிவ-பார்வதி தம்பதிகள்,ஒட்டியிருந்த படர்ந்த காட்டில்"எதற்கோ"நுழைந்தனர்.அங்கே யானைகள் இரண்டின் "கலவி "க் காட்சியைக் கண்டனர்.
கட்டுமீறிப்போன ஆசையில் கட்டிப்புரண்டனர் இந்தக் கடவுள் தம்பதிகள்.

தேவாரத்தில் சம்பந்தர் "பிடியதன்"என்று துவங்கும் பாட்டில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். (இப்பாடலை கூகிளில் சர்ச் செய்தபோது இப் பாடல் அழிக்கப்பட்டுள்ளது) .

கட்டுக்குலையாத மேனிகளில் அரும்பு கட்டியது வியற்வைத்துளிகள்.

கல்விக் கோலங்கொண்ட யானையைப் பார்த்தே மனைவிக்கு "ஆலிங்கன" ஆனணகளைப் பிறப்பித்தான் சிவன்.
எனவேதான், பிறந்த குழந்தை யானைமூஞ்சியாய் பிறந்து விட்டது.

முக்கண்ணனின் முதல் மைந்தனுக்கு இன்னொரு பிறவிக்கதையும் உண்டு.

கசமுக அசுரன் என்பவன் சாகாவரம் பெற்றவன், தேவர்களை வம்புக்கிழுத்து விளையாடுவதே இவனின் பொழுது போக்கு.
தன்னைச்சாகடிக்க யாருமில்லை என்ற தைரியத்தில் "நாமார்க்கும் குடியல்லோம் :நமனை அஞ்சோம் என்று கண்ணாமூச்சி காட்டினான் தேவர்களிடம்.
வெறுப்பும், கொதிப்பும் கொண்ட தேவர் குலம், திணறித்திண்டாடிச் சிவனை அடைக்கலம் கொண்டது.
தம்பதி சமேதரமாகத் தோட்டம் ஒன்றில் ஆட்டம் போட்டுக்கிடந்த உலகநாயகனும் நாயகியும், தற்காலிகமாகத் தங்கள் செயல்களை ஒத்திவைத்து, வதைபடும் தேவர் இனத்தைப் பரிசீலித்தனர்.
அப்போது அவர்கள் கண்களில் கலவிப்புரியும் யானைகளின் காட்சி தென்பட்டது.
அவ்வளவுதான்!
சிவனும் பார்வதியும் சும்மா இருப்பார்களா?
உடனே யானையாக உருமாறி விட்டனர்!
பிறகென்ன!?
இரும்பும் காந்தமும்தான்!!
இதன் விளைவு--பிறந்தார் பிள்ளையார்.
பிறந்தவர் யானை முகமும் ,மனித உடலுமாக இருந்தார்.
(ஆதாரம்:வலிவலம் கோவில் சிவனைப்பற்றிய திருஞானசம்பந்தர் "பிடியதன் உருவுமை "என்று தொடங்கிய பாடிய தேவாரப்பாடல்)
"வடிகொடு தனதடி வழிபடுமவரிடம்
கடிகண பதிவர வருளினன் மிகு கொடை"".

- ஆறாம் அறிவு குழுவில் ராஜமோகன்

22.4.19

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

திரௌபதியும் சுபத்திரையும், கிருஷ்ணன் மற்றும் அர்ஜினனின் களியாட்டங்களும்.

மதுவின் மயக்கத்தில் திளைத்த திரௌபதியும் சுபத்திரையும், கிருஷ்ணன் மற்றும் அர்ஜினனின் களியாட்டங்களும்.

இக் கதை மகாபாரதத்தில் ஆதிபர்வத்தில் காண்டவ தாஹ பர்வத்தில் பகுதி 224ல் கூறப்படுகிறது. வாருங்கள் கதை கேட்போம்.

இந்திரப்பிரஸ்தத்தைத் தங்கள் வசிப்பிடமாக ஆக்கிக் கொண்ட பிறகு, சில நாள் கழித்து, கிருஷ்ணனிடம் பேசிய அர்ஜுனன், "வெப்ப நாட்கள் வந்துவிட்டன ஓ கிருஷ்ணா, ஆகையால், யமுனையின் கரைகளுக்கு நாம் செல்வோம்.
கிருஷ்ணா, நண்பர்களுடன் அங்கு விளையாடிவிட்டு, மாலையில் இங்கு திரும்பி வருவோம்" என்றான். அதன் பேரில் கிருஷ்ணன், "ஓ குந்தியின் மகனே அர்ஜுனனே, அதுதான் எனது விருப்பமும். ஓ பார்த்தா, நண்பர்கள் சூழ நாம் திருப்தியாக நீர்விளையாடித் திரும்புவோம்" என்றான்.

பிறகு, ஒருவருக்கொருவர் ஆலோசனை செய்த அர்ஜுனனும், கிருஷ்ணனும், யுதிஷ்டிரனிடம் விடைபெற்றுக் கொண்டு, நண்பர்களுடன் சேர்ந்து வெளியே சென்றனர்.

உயர்ந்த மரங்களுடன் கூடிய யமுனையின் கரையில் இருக்கும் ஒரு அற்புதமான இடத்தை அடைந்தனர். பல உயர்ந்த மாளிகைகளுடன் கூடிய அந்த இடம் தேவர்களின் நகரைப் போல இருந்தது. அந்த இடத்தில் கிருஷ்ணனும், அர்ஜுனனும், எண்ணற்ற விலை உயர்ந்த உணவு வகைகளையும், மது வகைகளையும், மற்றும் இன்பத்திற்கான அனைத்துப் பொருட்களையும், மலர்வளையங்களையும், நறுமணப் பொருட்களையும் குவித்தனர். தூய கதிர்கள் கொண்ட ரத்தினங்களால் அதன் உள் அறைகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

அந்த அறைகளுக்குள் நுழைந்த ஒவ்வொருவரும் தங்கள் இன்பத்திற்குத் தகுந்தபடி விளையாடினர். அந்த விருந்தில் கலந்து கொண்ட பெண்கள் பருத்த உருண்டையான இடைகளுடனும், பருத்து ஆழமாக இருக்கும் மார்புகளையும், அழகான கண்களையும், மதுவுண்டதால் தளர்ந்த தடுமாற்றம் கொண்ட நடையுடனும் இருந்த பெண்கள் கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனின் கட்டளைப்படி அங்கே விளையாடிக் கொண்டிருந்தனர். சிலப் பெண்கள் தங்கள் விருப்படி கானகத்திலும், சிலர் நீரிலும், சிலர் அறைகளிலும் அர்ஜுனனும், கிருஷ்ணனும் வழிகாட்டியபடி விளையாடினர்.

திரௌபதியும், சுபத்திரையும் மதுவின் மயக்கம் அதிகமாகி, அங்கே விளையாடிக் கொண்டிருந்த பெண்களுக்கு விலையுயர்ந்த ஆடைகளையும் ஆபரணங்களையும் கொடுத்துக் கொண்டிருந்தனர். அப்படி வாங்கிய மங்கையரில் சிலர் ஆனந்தக் கூத்தாடினர், சிலர் பாட ஆரம்பித்தனர், சிலர் சிரித்துக் கொண்டு கேலி பேச ஆரம்பித்தனர். சிலர் இன்னும் அருமையான மதுவகைகளை குடிக்க ஆரம்பித்தனர். சிலர் ஒருவர் முன்னேற்றத்தை ஒருவர் தடுத்து, ஒருவரோடு ஒருவர் சண்டையிட ஆரம்பித்தனர். சிலர் ஒருவரோடு ஒருவர் ரகசியம் பேசினர். அந்த மாளிகைகளும், கானகமும், புல்லாங்குழல் இசையாலும், வீணை மற்றும் மிருதங்க இசையாலும் நிறைந்து வளமையான காட்சியைக் கொடுத்துக் கொண்டிருந்தன.

இவ்வாறு தொடர்கிறது மிகுதி களியாட்டங்கள்...

நான் ஏன் இந்த கதையை கூறுகிறேன் என்றால் இவ்வாறான இதிகாசங்களை மேலோட்டமாக படித்தவர்கள், இந்த கதையின் கதாபாத்திரத்தில் ஒருவனான கிருஸ்ணனை கடவுளே ஆக்கிவிட்டிருக்கிறார்கள் இன்று. அவனுக்கு கோயில்களும் அதன்மூலம் சுரண்டல்களும் மூடநம்பிக்கைகளும் சமூகத்தில் விதைக்கப்பட்டுள்ளன. ஆகவே மகாபாரத கதையில் உள்ள தவறானவற்றை மறைத்து நல்லவற்றை மட்டும் மக்களுக்கு கூறியதாலேயே மக்கள் இவர்களை தெய்வீக பிறவிகளாக ஏற்றுக்கொண்டார்கள். நான் மகாபாரதத்தின் மறைக்கப்பட்ட பக்கங்களை தந்துள்ளேன். இதன்மூலம் எல்லோரும் மகாபாரதத்தையாவது முதலில் முழுமையாக அறிந்துகொள்ளட்டும்.

#பகிருங்கள்
#Share_This
- வேணு கோபால சங்கர் - ஆறாம் அறிவு, முகநூல் பக்கம், 19.4.19

முருகனின் அருவருப்பான பிறப்பு!

முருகனின் பிறப்பு கள்ளத்தனமானதா ?

அறிவுக்குப் பொருந்துமா ?

தோழர்கள் படித்துவிட்டு எச்சைக்கு விளக்குங்கள் ..!!

#முருகன்பிறப்பு இது பக்தாள் விட்டது தான் ..!

சிவபெருமான் உமாதேவியைத் திருக்கலியாணம் செய்து, மோகங்கொண்டு அவளுடன் 100 தேவ வருஷம் (மனித வருஷத்தில் பல யுகம்) புணர்ந்து கொண்டிருந்தனர். அவ்வளவு காலம் கழிந்தும் பார்வதி கர்ப்பம் அடையவில்லை. அது கண்டு நான்முகன் முதலிய தேவர்கள் சிவனிடத்தில் வந்து, “இவ்வளவு காலம் புணர்ந்த உம்முடைய தேஜஸ்ஸாகிய விந்து வெளிப்படுமானால் உலகம் பொறுக்கமாட்டாது. உம்முடைய விந்துவை தயவு செய்து விடாமல் நிறுத்திக் கொள்ளும்” என்று வேண்டவும், அதற்கிசைந்த சிவன் தனது விந்துவை மற்றபடி யார் தரிப்பது? எங்கு விடுவது? என்று கேட்க, தேவர்கள் பூமியில் விடும்படி சொல்ல, அந்தப்படியே சிவன் பூமியின் மீது விட்டுவிட்டார். பூமி அதை தாங்க மாட்டாமல் பூமி முழுதும் கொதிகொண்டு எழ, தேவர்கள் அந்த வீரியத்தை பூமி தரிக்க முடியாது எனக் கருதி அக்கினியிடம் சென்று வேண்ட, அக்கினி வாயுவின் உதவியால் அவ்வீரியத்திற்குள் பிரவேசித்து பிரம தேவன் கட்டளைப்படி அதை கங்கையில் கொண்டு சேர்த்து, அவ்வீரியத்தைப் பெற்று ஒரு குழந்தைப் பெற வேண்டுமென்று கங்கையை வேண்ட, கங்கையும் அதற்குச் சம்மதித்து அவ்வீரியத்தைப்பெற, அவ் வீரியமானது கங்கை முழுவதும் பரவி நிறைந்துவிட, கங்கை அதை தாங்கமாட்டாமல் மறுபடியும் அக்கினியை வேண்ட, அக்கினி மனமிரங்கி கங்கையை நோக்கி “ ஏ கங்கையே! நீ அடைந்த சிவனின் வீரியத்தை தாங்க முடியாவிட்டால் பனிமலை அருகில் விட்டுவிடு” என்று சொல்ல, கங்கையும் அவ்வாறே அவ்வீரியத்தை பனிமலையின் அருகில் விட, அங்கு அது குழந்தையாகத் தோன்ற அதை இந்திரன் பார்த்து அக்குழந்தைக்கு பால் கொடுத்து வளர்க்க கிருத்திகா தேவிகளை ஏவ, அவர்கள் அதற்கு பால் கொடுத்து வளர்த்து வரலானார்கள். பல இடத்தில் சிவனது வீரியம் ஸ்கலிதமானதன் பலனாக அக் குழந்தை உற்பத்தியானதால் அக்குழந்தைக்கு ஸ்கந்தன் என்றும், கிருத்திகா தேவிகள் ஆறுபேர்களுடைய பால் சாப்பிட்டதால் கார்த்திகேயன் என்றும், மேல்கண்ட ஆறுபேரின் முலையிலும் ஆறுமுகம் கொண்டு ஏககாலத்தில் பால்குடித்ததால் ஷண்முகன் என்றும் பெயர்கள் ஏற்பட்டன.

தொடரும் ...

பி என் எம் பெரியசாமி !
- முகநூல், 19.4.18

வேதவியாசருக்கு சுகர் பிறந்த கதை.

#சுகர்

வேதவியாசருக்கு சுகர் பிறந்த கதை.

ஒருநாள் வியாசர் தியானத்தில் இருந்தபோது அவரையறியாமல் விந்து வெளிப்பட்டுவிட்டது. சிந்தி கிடந்த அந்த ‘ரேதஸ்’ஸை ஒரு கிளி என்ன பண்ணியது? கொத்தித் தின்றுவிட்டது.

அதை கொத்தித் தின்ற கிளி சும்மாயிருக்குமா?... அந்தக் கிளி கர்ப்பமாகி விட்டதாம். கிளி கர்ப்பமானால் என்ன செய்யும்? முட்டை போடும். குஞ்சு பொரிக்கும். அது இன்னொரு அழகான கிளியாகும். ஆனால்... இந்த கிளி அப்படி அல்ல. வியாஸரின் வீரியம் சாப்பிட்ட கிளியல்லவா? அதனால் கர்ப்பமான கிளி... ஒரு குட்டியைப் போட்டது. கிளி குட்டி போட்டதா?... புராணம் அப்படித்தான் சொல்கிறது. கேள்வி கேட்கப்படாது. கேட்டால் தெய்வ குற்றம் ஆகிவிடும்.

அந்த கிளிக்குட்டி(!) எப்படி இருந்ததாம்?... தலையெல்லாம் கிளிபோல இருந்ததாம். உடல் மட்டும் மனுஷ்ய பாவணையாய் அமைந்ததாம். என்னடா இது புதுக் கொடுமையாக இருக்கிறதே என்கிறீர்களா?... இது பழம்பெரும் ‘கொடுமை’.
இதை உண்மை என்று நம்பவும் ஒரு கூட்டம் இருக்கதானே செய்கிறது.

இந்த கிளிக்குட்டிதான் சுகர்.

“எம்ப்ரவ் விஷந்தம்அனுபேதம் உபதே ஹிருத்யம்தனவ பாயஹைவிரக காதரஹ ஆஹிஜாகாதேதீ தன்மயேதய தரவோ...”

#Share_This

#அர்த்தமுள்ள_ஆரிய_இந்துமதம்

-வேணு கோபாள சங்கர்- ஆறாம் அறிவு, முகநூல் பக்கம்