மதமாற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதமாற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 30 ஜூலை, 2019

மதம் மாற்றம் செய்தவர்கள் யார்?



கி.பி. அய்ந்து, ஆறு, ஏழாம் நூற்றாண்டுக ளில் தமிழ் நாட்டில் சமண சமயமும் பவுத்த மதமும் பெரிதும் செழித்து வளர்ந்திருந்தது. சைவ, வைணவ மதங்கள் முடங்கிக் கிடந் தன. மக்களில் பெரும்பாலோர் சமணராக வும் பவுத்தராகவும் இருந்தனர். நாட்டை ஆண்ட மன்னர்களும் சமண பவுத்த மதங் களைத் தழுவியிருந்தனர்.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சைவ அடி யார்களான நாயன்மார்களும், வைணவ அடியார்களான ஆழ்வார்களும் ‘பக்தி’ இயக்கத்தை ஆயுதமாகக் கொண்டு சமண பவுத்த மதங்களை அழித்திட முற்பட்டனர்.

‘சமண சமயம் பலவிதத்தில் தாக்கப் பட்டது. கொடுமைப் படுத்துதல், கழுவேற்றுதல், கொலை செய்தல், கலகம் விளை வித்தல், நில புலங்களைக் கவர்தல் முதலிய செயல்கள் நிகழ்ந்ததைக் காண்கிறோம். இந் துக்கள் சமண மதத்தை அழித்த செய்திகள் பல உள்ளன.

- மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும் (பக்கம் 68)

‘வெறுப்போடு சமணர் முண்டர் வீதியில் சாக்கியர்கள் நின்பால்

பொறுப்பரியன்கள் பேசில் போவதே நோயதாகிக்

குறிப்பெனக் கடையுமாகில் கூடு மேல் தரையை ஆங்கே

அறுப்பதே கருமங்கண்டாய் அரங்கமா நகருளானே!’

- தொண்டரடிப் பொடியாழ்வார், திருமலை, எட்டாவது பாடல்.

ஆழ்வாரின் இந்தப் பாடலின் மூலம் அக்காலத்தில் சமயப் போர் எவ்வளவு வேகம் கொண்டிருந்தது என்பது விளங்கு கிறது. இங்கு சாக்கியர்கள் என்று வருவது பவுத்தர்களைக் குறிக்கும்.

திருநாவுக்கரசர்!

தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள பாடலிபுத்திரத்தில் சிறப்புப் பெற்றிருந்த சமணப்பள்ளி இருந்தது. இங்கிருந்து தான் சர்வநந்தி என்பவர் ‘லோகவிபாகம்‘ என் னும் நூலை எழுதினார். கி.பி. 458இல் சிம்ம வர்மன் என்னும் பல்லவ மன்னன் காஞ்சிபுரத்தை அரசாண்டிருந்த போது அவ்வரச னது  இருபத்திரண்டாவது ஆட்சி ஆண்டில் ‘லோகவிபாகம்‘பாகத மொழியிலிருந்து வட மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. இதன் பிறகு நூற்று அறுபது ஆண்டுகளுக்கு பின்னர் திருமுனைப்பாடி நாட்டில் திருவா மூரில் புகழானார், மாதினியார் புதல்வராகப் பிறந்தவர் மருணீக்கியார். இவரது சமய அறிவால் சமணர்கள் ‘தருமசேனர்’ என்னும் பெயர் கொடுத்து அவரைப் போற்றினார்கள். நெடுங்காலம் சமணகுருவாக பாடலிபுத்திர சமணப் பள்ளியில் இருந்த தருமசேனர் சமண சமயத்தை விட்டு சைவ சமயத்திற்கு வந்த போதுதான் திருநாவுக்கரசர் என்ற பெயர் மாற்றம் பெற்றார்.

- மயிலை சீனி. வேங்கடசாமி, மகேந்திரவர்மன், Chennai, Page 27-29

-Mysore Archaeological Report, 1909-10, Page 112

சமண மதம் துடைக்கப் படுதல்

சமண சமயத்தவனாக இருந்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மனைச் சைவ சமயத் தில் திருநாவுக்கரசர் சேர்த்தார். அத்தோடு நின்று விடாமல், தாம் அப்பர், தருமசேனர் என்னும் பெயருடன் தங்கியிருந்த பாடலிபுத் திர சமணப் பள்ளியை இடித்துத் தள்ளவும் ஏற்பாடு செய்தார்.

பல்லவ அரசனும் சமணக் கல்லூரியை ஒழித்தான். பள்ளிகளையும் பாழிகளையும் அழித்தான். அவற்றின் சிதைவுகளைக் கொண்டு வந்து திருவதிகையிற் ‘குணதரஈச் சரம்‘ என்று தன் பெயரால் கோவில் ஒன்று கட்டினான்.

- Page 275, பல்லவர் வரலாறு

இங்கு சமணர் கோவில் இருந்தது என் பதை உறுதிப்படுத்த மஞ்சக் குப்பம் சாலை யில் யாத்திரிகர் பங்களாவுக்கு அருகில் இன் றும் சமணத்திற்கு உருவம் காணப்படுகிறது.

- South Arcot District, Gazetter, Page 369.

பெரிய புராணம்

தரும் செய்தி!

‘வீடறியாச் சமணர் மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த

காடவனுந் திருவதிகை நகரின் கட் கண்ணுதற்குப்

பாடலிபுத்திரத்தில் மண் பள்ளியொடு பாழிகளுங் கூட

இடித்துக் கொணர்ந்து குணதரவீச்சரம் எடுத்தான்.

- தெய்வப் புலவர் சேக்கிழாரடிகள் அருளிய திருத் தொண்டர் மாக்கதை, ப.இராமநாதபிள்ளை

- திருநாவுக்கரசு நாயனார் புராணம், பாடல் 146, பக்கம் 289.

திருஞான சம்பந்தருக்கனுப்பிய தூது!

‘மங்கையர்க்கரசியும் குலச்சிரையாரும் ஒரு பார்ப்பனன் மூலமாக திருஞான சம்பந்த மூர்த்திக்கு ஒரு திருமுகம் அனுப்பி, மதுரைக்கு வந்து சமண இருளைப் போக்கி சைவப் பயிர் முன் போல் தழைக்க அனுக்ர ஹிக்கும்படி வேண்டினர்.’

- கா.சு. சேஷகிரி அய்யர், சிவபிரானது 64 திருவிளையாடற்சுருக்கம், பக்கம் 84.

கழுவில் ஏற்றப்பட்ட சமணர்கள்

‘பாண்டியவரசர் குலச்சிறை நாயனாரை நோக்கி சமணரைக் கழுவிலேற்றி முறை செய்யுமாறு பணித்தார். பிள்ளையார் அவர் செய்த  சிவா பராதங் கருதி விலக்காதிருந்தார். குலச்சிறை நாயனார் முறை செய்யச் சம ணர் யாவரும் கழுவிலேறி மாண்டார்கள்.’

- சதாசிவ செட்டியார், தேவாரப் பதிகங்கள், சென்னை 1925, page 18

‘அரசர் குலச்சிறையாரை நோக்கி, ‘சமணர்களைக் கழுவிலே ஏற்றுக என்று ஆஞ்ஞாபித்தார்..... திடபக்தியுடைய அமைச் சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நிறை யாக நாட்டு வித்து அவைகளில் ஏற்ற, அதி பாதகர்களாகிய சமணர்கள் எண்ணாயிர வரும் தானாகவே ஏறினார்கள்.’

- ஏ.ஜி.கோமதி அம்மாள், திருத் தொண்டர் பெரிய புராணம், சைவம் வளர்த்த அரசி, கோவில்பட்டி, 1948, page 18

‘அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறி களை நாட்டிய பின் தோல்வியுற்று நின்ற சமணர் அனைவரும் அத்தறிகளில் ஏறி உயிர் துறந்தனர்.’

- க. வெள்ளைவாரணன்,பன்னிரு திருமறை வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1972, page 144

(கழுவில் ஏற்றப்பட்டனர் என்பதே உண்மை)

சமணர்கள் அனுபவித்த கொடுமை!

‘மன்னன் சமண விரோதியாகி, பாண் டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர் களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.’

- அ.பொன்னம்பலம், அப்பரும் சம்பந்தரும், சென்னை, 1983, page 28

‘கழுவிலேறாத சமணர்களை எல்லாம், சைவாச்சாரத்தைக் கொண்டவர்கள் ஒவ் வொருத்தராகப் பிடித்து அந்த முத்தலைக் கழுமரங்களிலே ஏற்றியிருத்திக் கொன்றார் கள். அந்த சமணர்களுக்குப் பாரம்பரியாக அடியார்களானவர்கள் சாவப்பயந்து மனங் குலைந்து விபூதி பூசிக் கொண்டார்கள். அந்த விபூதி கிடையாமல் பசுவின் கோம யத்தை எடுத்திட்டுக் கொண்டார்கள். அது வும் கிடைக்காத சிலர் பசுவின் கன்றைத் தோள் மேலே தூக்கிப் போட்டுக் கொண் டார்கள்.’

‘விபூதி, கோமயம், பசுவின் கன்று இந்த மூன்றுங் கிடையாத சிலர் விபூதி பூசின நெற்றியுடனே நெற்றியை மோதிப் பூசிக் கொள்ள கோமயத்திலுமப்படியே மோதி யிட்டுக் கொண்டும் இப்படியாகத் தங்கள் பாசங்களை வென்று பிழைக்க எண்ணின வர்களைக் கொல்லாமல் விட்டு விட்டனர்.’

- பூவை கல்யாண சுந்தர முதலியார் பொழிப்புரை, திருவிளையாடற் புராணம், சென்னை, 1925, page 494.

நாய் நரி தின்ற சமணர் உடல்கள்!

விபூதி பூசியவர்கள் உயிர் தப்பினர். அதற்கு உடன் பட மறுத்ததால், கழுவி லேற்றிக் கொல்லப்பட்டவர்களின் உடல் கள் என்ன ஆயிற்று தெரியுமா?

‘கழுவிலேறி இறந்தவர்களெல்லாம் சுற்றப்பட்ட பருந்துகளும், காக்கைகளும், நரிகளும், நாய்களும், தொடர்ந்து கவ்விப் பிடித்திழுத்துத் தின்னக் கிடந்தார்கள்.’

‘மற்றிவர் தம்மை யூற்றஞ் செய்திலர் யாருஞ் சுற்றிய சேனங்காக நரிகணாய் தொடர்ந்து கவ்விப் பற்றிநின் றிர்த்துத் தின்னக் கிடந்தனர்.’

பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம், உ.வே.சா.பதிப்பு, சென்னை, 1937, page 1195.

‘கூன் பாண்டியன் சைவத்திற் புகுந்த நாளே சமணமும் வீழ்ந்த நாளாகும். அதன் பின் புத்தமதம் திரும்பத் தலை தூக்கவே இல்லை. நம்பியாண்டார் நம்பி காலமாகிய பதினோறாவது நூற்றாண்டில் தமிழ்நாட்டி லிருந்து அவை அழிந்து போயின.’

- பெ. சுந்தரம் பிள்ளை எழுதிய ‘திருஞான சம்பந்தர் காலம்‘ என்ற ஆங்கில நூல்.

‘திருஞான சம்பந்தர் மதுரையில் எட்டு ஆயிரம் சமணரைக் கழுவில் ஏற்றினார் என்று சைவ சமய நூல்களாகிய பெரிய புராணம், திருவிளையாடற்புராணம், தக்க யாகப் பரணி முதலிய நூல்கள் கூறுவதும் இவற்றை நினைவு படுத்த மதுரைப் பொற் றாமரைக் குளத்து மண்டபத்தின் சுவற்றில் சமணரைக் கழுவேற்றும் காட்சியைச் சித்திரம் தீட்டி வைத்திருப்பதும், மதுரைக் கோவிலில் நடை பெற்று வரும் உற்சவங் களில் அய்ந்து நாள் கழுவேற்று உற்சவம் ஆண்டு தோறும் நடைபெற்று வருவதும் இவை நடைபெற்றதற்கு முதன்மையான சான்றுகளாகும்.’

- மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும், பக்கம் 68



திருமங்கையாழ்வார்

தொள்ளாற்றுப் போர் வென்ற நந்தியின் பாட்டனான பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் திருமங்கையாழ்வார் வாழ்ந் திருந்தார். அவர் சமண பவுத்த சமயங்க ளைத் தாக்கி வைணவ சமயத்தை நிலை நிறுத்தினார்.

- மாணிக்கம் பிள்ளை, பல்லவர் வரலாறு, சென்னை, பக்கம் 277

கி.பி.எட்டாம் நூற்றாண்டினரான இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் சோழ நாட்டின் ஒரு பகுதியான ஆலி நாட்டை ஆண்ட குறுநில மன்னர் திருமங்கை ஆழ்வார்.

இவர் நாகப் பட்டினத்துப் பவுத்த விகா ரத்தில் இருந்த பொன்னால் வேயப்பட்ட புத்தர் சிலையைக் கவர்ந்து வந்து அதைக் கொண்டு பல கோவில் திருப்பணிகள் செய்தார். பவுத்த சமண சமயங்கள் மீது நாயன்மாரைப் போலவே மிக்க வெறுப் புற்றவர் என்பதை இவரது பாடல்களைக் கொண்டு நன்கு உணர முடிகிறது.

- மயிலை சீனி வேங்கடசாமி, மூன்றாம் நந்திவர்மன்,சென்னை, பக்கம் அய்ம்பத்து இரண்டு.

- மா.இராசமாணிக்கம் பிள்ளை, பல்லவர் வரலாறு, பக்கம் இருநூற்று எழுபத்து ஏழு.

‘திருமங்கை ஆழ்வார் திருவரங்கம் பெரிய கோவில் விமான மண்டப கோபுராதி கைங்கரியங்கள் செய்யத் திருவுள்ளமாய்ப் பொருள் தேட எண்ணுகையில் நாகப்பட்டி னத்தில் ஒரு பொன்னாலான புத்த விக்ரஹ மிருப்பதை அறிந்து அதை அறுத்துத் திருப்பணி செய்ய நினைத்து நாகப்பட்டினம் சென்று புத்தன் கோயிலுக்குச் சென்று விக்ர ஹத்தை எடுத்து வந்துடைத்துச் சுட்டு ரைத்து  நன் பொன்னாக்கித் திருமதிள் கைங்கர்யத்துக்கு உபயோகப்படுத்தினர்.’

- நாலாயிர திவ்விய பிரபந்தம், சென்னை, பக்கம் இருபத்திஆறு.

கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை திரு மூர்த்தி மலையிலுள்ள சம ணர் கோவில் அமணலிங்கேசுவரர் என்று ஹிந்து மதக் கோவிலாக மாற்றப் பட்டது.

- புலவர் செந்தலை ந. கவுதமன், சூலூர் வரலாறு, பக்கம் 189

‘நாகராஜர் கோவில் தூண்களில் சமண சமயத் தீர்த்தங்கரர்களான பார்வத நாதரும், மகா வீரரும் தவக் கோலத்தில் நின்றும் அமர்ந்தும் காட்சி தருகின்றனர்.’

‘கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை உள்ள இடைப் பட்ட காலத் தில் நாகராஜர் கோவில் இந்து சமய கோவி லுக்குரிய மாற்றங்களைப் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.’

- எஸ். பத்மநாபன், குமரி மாவட்ட கோவில்கள், நாகர் கோவில், பக்கம் 51,52

செஞ்சியை ஆட்சி செய்து வந்த வேங்க டபதி நாயக்கர் சமணர்களுக்கு மிகுந்த கொடுமைகளைச் செய்தார். அதனைத் தாங்க முடியாத சமணர்கள் தப்பியோடினர். செஞ்சி அரசன் அந்நாட்டுச் சமணர் தலையை வெட்டிய காலத்தில் வேறு நாடு களுக்குத் தப்பிப் போய்விட்ட சமணர்களில் காங்கேய உடையாரும் ஒருவர்.

- மயிலை சீனி. வேங்கட சாமி, சமணமும் தமிழும், பக்கம் 74

திருவாரூர் திருக்குளம்

தமிழ் நாட்டிலே பெரிய அளவிலானதும் பதினெட்டு ஏக்கர் நிலப்பரப்பைக் கொண் டதுமான திருவாரூர் திருக்குளம் இப் போதும் இருக்கிறது. திருவாரூரில் சமணர் கள் செல்வாக்குடன் இருந்த காலத்தில் அந்தத் திருக்குளம் சிறியதாக இருந்தது. அத்துடன் அந்தக் குளத்தின் நான்கு பக் கங்களிலும் சமண சமயத்தவருடைய நிலங் களும், மடங்களும், பள்ளிகளும், பாழி களும் இருந்தன. அப்போது ‘தண்டியடிகள்’ என்னும் சைவ நாயனார் அந்தக் குளத்தைப் பெரிய குளமாக்கிட முயற்சி செய்தார். அங்குள்ள அரசன் சமணரை ஊரை விட்டுத் துரத்திய பின்னர் அவர்களுடைய கட்டிடங்களையும் நிலங்களையும் அழித் துப் பறித்து அந்தச் சிறிய குளத்தை இப் போதுள்ள பெரிய குளமாகத் தோண் டினான்.

‘பன்னும் பாழிப் பள்ளிகளும் பறித்துக் குளஞ்சூழ் கரைபடுத்து’

- திருத் தொண்டர் புராணம், தண்டியடிகள், பக்கம் 69

கும்பகோணம் தாலுகாவைச் சேர்ந்த திருநாகேச்சுவரர் கோயிலின் மண்டபக் கற்றூணில் உள்ள சாசனம் தென் கரைத் திமூர் நாட்டில் இருந்த மிலாடுடையார் பள்ளி என்னும் சமணக் கோவிலைக் குறிப்பிடுகிறது. திருக்கோவிலூரில் இருந்த ‘மிலாட்’ அரசனால் கட்டப்பட்ட இந்தச் சமணக் கோவில் பின்னால் இடிக்கப் பட்டது. அக் கோயிற் கற்களைக் கொண்டு இப்போதுள்ள திருநாகேசுவரத்துச் சைவக் கோயில் கட்டப் பட்டது. இவ்வூருக்கு அரு கிலுள்ள வயல்களில் சமண உருவங்கள் இன்றும் காணப்படுகின்றன.

- சமணமும் தமிழும், பக்கம் 139

நன்னிலம் ரயில் நிலையத்திற்கு கிழக்கே வர்த்தமானீச்சுவரர் கோயில் இப் போது உள்ளது. ஸ்ரீவர்த்தமானர் (மகாவீரர்) 24ஆவது தீர்த்தங்கரர். இவரது பெயரைக் கொண்டே இது பழங்காலத்தில் சமணக் கோயிலாக இருந்ததைத் தெரிந்து கொள்ள முடிகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன் னரே சைவரால் கைப்பற்றப்பட்ட இச்சம ணக் கோவில் சைவக் கோவிலாக்கப்பட்டது.

- சமணமும் தமிழும், பக்கம் 140.

அய்யகோ கிறித்தவர்கள் இந்துக்களை மதமாற்றம் செய்கிறார்கள் என்று மாரடித்து ஒப்பாரி வைக்கும் பிஜேபி, சங்கபரிவார்கள் கூட்டம் சமணர்களைக் கொன்றொழித்த கொடுமைக்கு என்ன பதில்? திருநீறு பூசச் செய்து உயிர்ப்பிச்சை செய்த அச்சுறுத் தலை எந்தப் பட்டியலில் சேர்ப்பது! சமணர் களைக் கழுவேற்றும் காட்சிகள் செய்யாறு கோயிலுக்குச் சென்றால் சிற்பங்களாக இன்றும் பார்க்கலாமே!

மேலே எடுத்துக்காட்டப்பட்டவை எல்லாம் ஆதாரப் பலங்களைக் கொண்டது என்பதை மறக்க வேண்டாம்.

- விடுதலை ஞாயிறு மலர்,27.7.19

ஞாயிறு, 4 நவம்பர், 2018

மதமாற்றத்துக்கு யார் - எது காரணம்?



மத மாற்றத்துக்கும், கீழ்மைக்கும் யார் பொறுப்பாளி? இந்தியாவிலுள்ள ஏழை மக்களிடையில் முகமதியர்கள் அதிகம் இருக்கின்றார்கள். அதற்குக் காரணம் என்ன? கத்தியையும், வாளையும் காட்டிப் பயமுறுத்தி இந்துக்கள் முகமதியர்களாக மாற்றப்பட்டார்கள் என்று சொல்வது அறிவுடைமை ஆகாது.

நம்நாட்டிலுள்ள ஜமீன்தார்களிடமிருந்தும், புரோகிதர் களிடமிருந்தும் சுதந்திரம் பெற்று வாழ்வதற்குத்தான் இந் துக்கள் முசுலிம் மதத்துக்கு மாறினார்கள்.

வங்காளத்தில் விவசாயிகளுக்கிடையில் இந்துக்களை விட முசுலிம்கள் அதிகமாக இருப்பதைக் காணலாம். அதற் குக் காரணம் என்னவென்று தெரியுமா? அக்காலத்தில் விவ சாயிகளுக்கிடையிலிருந்த ஜமீன்தார்களுடைய கொடு மையிலிருந்து விலகிக் கொள் வதற்காக இசுலாம் மதத்துக்கு மாறியுள்ளார்கள்.

தோட்டிகளையும், பறையர்களையும் இன்றைய இழி நிலைக்குக் கீழே இறக்கிக் கொண்டு வந்தவர்கள் யார்? அவர்கள் கீழ்மை அடைவதற்குப் பொறுப்பாளிகள் யார் என்னும் கேள்வி எழுமாயின் அதற்கு விடை வருமாறு:

அவர்கள் கீழ்நிலை அடைவதற்கு ஆங்கிலேயர்கள் பொறுப்பாளிகள் அல்லர்.

அவர்கள் கீழ்நிலைக்கு வந்ததற்கு நாமே பொறுப் பாளிகளாவோம். நம்முடைய துன்பத்துக்கும், நம்முடைய கீழ்மைக்கும் நாம் தாம் பொறுப்பாளிகள், மதத்தில் போலிகளும், அவநம்பிக்கை உடையவர்களும் இருக்கிறார்கள்.

மேலும் நாம் சோம்பேறிகளாக இருக்கின்றோம். செயல்புரிய வேண்டும் என்ற உற்சாகம் நம்மிடம் இல்லை. நம்மிடம் ஒற்றுமையும் இல்லை. ஒருவரை ஒருவர் நேசிக்கும் தன்மையும் இல்லை. நம்மிடம் சுயநலம் மிகவும் அதிகம். கீழ்நிலையிலுள்ள மக்களைப் புறக்கணிப்பது மதமாற்றத்துக்கு ஒரு காரணமாகும்.''

(தர்மசக்கரம் - துந்துபி ஆண்டு, கார்த்திகை மாதம் சக் கரம் -31 ஆரம் - 10).

இவ்வளவையும் சொல்லி இருப்பவர் யார் தெரியுமா?

அமெரிக்காவின் சிகாகோவில் இந்து மதம்பற்றி உரையாற்றிய அவருக்கு 125 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடும் இந்துத்துவாவாதிகளே! - அந்த விவேகானந்தர் தான்!

துட்டுக் கொடுத்துதான் மத மாற்றம் நடைபெறுகிறது என்று பேட்டி தருகிறார் திருவாளர் இராம.கோபாலர். அமெரிக்கா வரை அன்று இந்து மதத்தின் பராக்கிரமங் களைப் பறைசாற்றி வந்தவர் விவேகானந்தர் தான் இவ்வாறு கூறியுள்ளார்! முடிந்தால் பதில் சொல்லுங்கள் - பார்க்கலாம்

- விடுதலை ஞாயிறு மலர், 20.10.18

செவ்வாய், 23 ஜனவரி, 2018

காளமேகப் புலவர்



"திருக்குடந்தையிற் பிறந்து வளர்ந்த வடமனாகிய பிராமணன் ஒருவன் ஸ்ரீரங்கத்திற் பெருமாள் கோயிற் சுயம்பாகியாகிப் பரிசார கஞ் செய்துகொண்டிருக்கையில், திருவானைக்காவிலுள்ள சம்புகேசுவரர் கோயில் தாசி ஒருத்தி, மோகனாங்கி என்னும் பெயருடையவள், அதிக அழகும் ஆடல் பாடல்களில் திறமும் உடை யவளாயிருந்ததனால், இவன் அவளுடைய மோகவலையிற் சிக்கித் தனக்கு அவள் இணங்கும் பொருட்டுப் பெருமாள் பிரசாத முதலானவைகளும் அவளுக்குக் கொண்டு போய்க் கொடுத்து, அவ ளோடு சம்பந்தப்பட்டிருந்தான்.

அப்படி இருக்குமளவில், மார்கழி மாதத்திற் சம்புகேசுவரர் சந்நிதியில் மேற்படி தாசிக்குத் திருவெம்பாவை பாடும் முறை வந்தபொழுது, "உங்கையிற் பிள்ளை" என்னும் பாடலைப் பாடு கையில், அதில், "எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க" என்ற தொடரை அவள் வாயினாற்சொல்லித் தலை குனிந்து கொண்டதைப் பார்த்து, அவளுடனே கூடவிருந்த மற்ற தாசிகளெல்லாம் புன்சிரிப்புச் சிரித்துத் தங்களுக்குள்ளே, "இவள் சிவன்கோயில் தாசியாயிருந்தும் பெருமாள் கோயில் சுயம்பாகி யுடனே சம்பந்தப் படுகிறாளே, இஃதென்னை? 'படிக்கிறது திருவாசகம்; இடிக்கிறது சிவன் கோயில்' என்பதாக, வாயினாற் பேசுகிறதொன்று, நடக்கிற தொன்றா யிருக்கிறதே" என்று அவளைப் பரிகாசம் பண்ணினார்கள்.

அஃது அவளுக்கு மார்பில் தைத்து முதுகில் உருவினது போல் வருத்தத்தை விளைத்ததனால், அன்றிரவு அவ்வைணவன் வருந் தருணத்தில் தெருக்கதவைச் சார்த்தி, "உள்ளே வர வேண்டா" என்று தடுக்க, அவன் வாயிலுக்கு வெளியே நின்றபடி, "என்ன நிமித்தத்தால் இன்றைக்கு என்னைத் தடை செய்கிறாய்?" என, மோகனாங்கி, "நீர் விட்டுணு அடியார்; நான் சிவனடியாள். ஆகையால், உம் சம்பந்தம் எனக்குத் தகாது" என, அவன், 'அந்தாமரை யன்னமே! நின்னை யான் அகன்று ஆற்றுவனோ!' என்றபடி, "உன்னை நான் ஒரு பொழுதாயினும் விட்டுப் பிரிந்து சகிப்பேனோ! சகிக்க மாட்டேன்! ஆதலால், உன் தலைவாயிலிலேயே நான்று கொண்டு என் பிராணனை விட்டு விடுகிறேன்," என்றான். அவள், "இஃதேது, பழி வந்து சம்பவிக்கிறதாயிருக்கிறதே!" என்று நினைத்து, "நல்லது! நான் வேண்டுமென்பது உமக்கு அவசி யமாயிருந்தால் நீர், சிவதீட்சை பண்ணிக்கொண்டு சைவனானால் உம் விருப்பப்படி நடக்கிறேன்" என்று சொல்ல, அவன் காமப்பேய் கொண்டவனாகையால், 'பெண்கள் பால் வைத்த நேயம் பிழைப்பரோ சிறியோர் பெற்றால்?' என்ற வித மாய், அவள் உறவைக் கைவிட மாட்டாமல், "நீ சொன்னவண்ணம், சைவ சமயத்தை அனுசரிக்கிறேன்" என்று ஸ்ரீரங்கத்தை விட்டுச் சம்புகேசுவரத்திற்கு வந்து சிவதீட்சை பண்ணிக் கொண்டு அகிலாண்டவல்லி கோயிற் பரிசார கனாகி, தனக்கு அவ் விடத்தில் கிடைக்கும் வரும்படிகளில் அவளுக்குச் சிறிது கொடுத்து, மிகுந்ததைத் தன் சீவனத்திற்கு வைத்து அனுபவித்துக் கொண்டு வந்தான்."

(நூல்: "விநோத ரச

மஞ்சரி " பக்கம் 230-231 - தமிழறிஞர் வீராசாமி செட்டியார்)

ஒரு வைணவப் பார்ப்பனப் புலவனான காளமேகம் ஒரு தாசியின் மீதான விரகதாப வெறிக்காக மதம் மாறினான் என்பது வரலாறு; வைணவ ஆண்டாளுக்காக தை தை என்று குதித்தாடும் அன்பர்கள் இதற்கு என்ன பதில் சொல்வார்களோ?

- மயிலாடன்
- விடுதலை நாளேடு, 16.1.18