செவ்வாய், 21 டிசம்பர், 2021

மார்கழி மாதம் - கொக்கோகப் பஜனை!


ஞாயிறு, 16 டிசம்பர் 2012 14:58 
மார்கழி மாதம் இன்று பிறந்து விட்டது. கோயில்களில் எல்லாம் திருப்பாவைப் பாடல்கள் கத்த ஆரம்பிக்கும் (உச்சநீதிமன்ற ஆணையை யும்மீறி கூம்பு ஒலி பெருக்கியையும் பயன்படுத்து வார்கள்). ஆண்டாள் என்ற ஒரு பக்தை கட வுளையே புருஷனாக ஆக்கிக் கொள்ள வரித்துக் கொண்டு அவனோடு புணர வேண்டும் என்று விரகதாபம் எடுத்து அலைந்து புலம்பிய கேவலம் இது!
கடவுளாகிய கண்ணன் மனைவியின் மார் பகத்தில் வாய் வைத்துக் கிடந்தான் என்றெல் லாம் பாடுகின்ற ஒருபெண்மணிதான் வைணவத் தில் தலை சிறந்த பக்தைப் பெருமாட்டி!
குத்துவிளக் கெரிய
கோட்டுக்கால் கட்டிலின்மேல்
மெத்தென்ற பஞ்ச
சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல்
நப்பின்னை கொங்கைமேல் வாய்
வைத்துக் கிடந்த மலர் மார்பா!
என்று பாடுகிறார் ஆண்டாள்.
இதுகூட பரவாயில்லை. இதே  ஆண்டாளே நாச்சியார் திருமொழி என்று பாடியிருக்கிறாள்.
முத்தன்ன வெண்முறுவல்
செவ்வாயும், முலையும்
அழகழிந்தேன் நான்
புணர்வதோர் ஆசையினால் - என்
கொங்கை கிளர்ந்து குமைத்து
குதூகலித்து ஆவியை ஆகுலம்
செய்யும் அங்குயிலே
என்று பாடியுள்ள கேவலத்தை என்ன சொல்ல!
நல்முத்துக்கள் போன்ற பற்களைப் பெற்றி ருந்தேன். சிவந்த வாயையும், மார்புகளையும் பெற் றிருந்தேன். கண்ணனாகிய காதலன் என்னை வந்து புணராத காரணத்தால் என் அழகுகள் எல்லாம் கெட்டு விட்டன என்று காமவெறி பிடித்தவளாய்க் கதறுகிறாள். கொக் கோகம் பிச்சை வாங்க வேண்டும் போங்க...
இந்தக் கேவலத்தை ஆபாசத்தைக் கண்டு சகிக்காமல் வெட்கப்பட்டதாலோ என்னவோ, பழுத்த வைணவரான திரு. ராஜகோபாலாச்சாரி யார் (ராஜாஜி)  ஆண்டாள் என்னும் பக்தையே இருந்ததில்லை என்று போட்டாரே ஒரு போடு - பார்க்கலாம்.
ஆண்டாள் என்னும் ஸ்திரி இருந்ததே இல்லை. நாலாயிரதிவ்வியப் பிரபந்தத்தில் ஆண்டாள் பாடியதாகச் சொல்லப்படும் பாசுரங் கள் அவர் பாடியவை அல்ல.
பெரியாழ்வார் என்னும் ஆழ்வார் சில பாசுரங்களைப் பாடி, அப்பாசுரங்களை ஆண்டாள் என்னும் ஒரு பெயரால் வெளிப்படுத்தினார் என்று திரிவேணி இதழில் (1946 செப்டம்பர்) எழுதி விட்டார்.
பக்தி அப்படியே மனதைக் கட்டுப்படுத்து கிறதாம். கடவுளைக் கணவனாக ஆக்கிக் கொண்டு அவனோடு கட்டிப் புரள வேண்டும் - புணர வேண்டும் என்பதுதான் மனதை ஒருமுகப்படுத்தும்  யோக்கியதையா?
இந்த மாதம் பூராவும் இந்தக் கேவலமான ஆபாசத் தெருப் புழுதிகளைத்தான் பஜனையாகப் பாடப் போகிறார்கள்.  இதுபற்றி எல்லாம் எங்களைத் தவிர யார் அம்பலப்படுத்தப் போகிறார்கள்?
வெட்கம்! மகா வெட்கம்!!
(குறிப்பு: நாம் இப்படி எழுதுகிறோம். அண்ணா பெயரையும், திராவிடப் பெயரையும் வைத்துக் கொண்டுள்ள அண்ணா தி.மு.க.வின் நமது எம்.ஜி.ஆர் ஏடு திருப்பாவை, திருவெம்பாவை தூக்கிப் பிடித்து எழுதுகிறது)
விடுதலை 16.12.12 n1