ஞாயிறு, 27 டிசம்பர், 2020

தமிழில் குரான்


குரான் தமிழில்
https://truthaboutislam.net/read-quran-online-for-free-tamil/?fbclid=IwAR0xxfBCqZZsi_RUbRmNWmmeXidyuUAZ7uOFpBg1ObzI_7Y2BALn0GzLRlg#!#/en.ahmedali+quran-wordbyword+ta.tamil/1

புதன், 23 டிசம்பர், 2020

சிவ_மகாபுராணம்_கூறும்_முருகனின்_பிறப்பு


பார்வதி கல்யாண வைபவத்தைக் கேட்டுப் பரவசப்பட்டிருந்த நைமிசாரண்யவாசிகள் சூத புராணிகரை நோக்கி, மகா ஞானியே! மாபெரும் புண்ணிய சீலரே! சிவபபருமான் பார்வதி தேவியாரை மணஞ்செய்த பிறகு புத்திரனைப் பெற்று, தாராகாசுரனை எப்படி வதைத்தார் என்பதையும் கேட்க வேண்டும் என்று நாங்கள் மிகவும் ஆவல் கொண்டிருப்பதால் அதையும் விபரமாகக் கூறியருள வேண்டும் என்று கேட்டார்கள். சூதமாமுனிவர் சொல்லத் தொடங்கினார்.

நைமிசாரணிய வாசிகளே உமையாளான பார்வதிதேவியாரை திருமணஞ் செய்துகொண்ட பிறகு பார்வதி தேவியோடு  அந்தப்புரமடைந்து  வெகுகாலம் வரைக்கூடி மகிழ்ந்து லீலாவினோதங்கள் புரிந்து கொண்டேயிருந்தார்கள். தாரகாசுரனால் மிகவும் தொல்லைகளுக்குப்  பாத்திரமாகித் தாரகாசுரவதத்திற்கு  எப்போது சிவகுமாரன் உற்பத்தியாவானோ என்று ஏங்கி கிடந்த தேவர்களோ தங்கள் வேதனைகளுக்கு விமோசனம் தேடவேண்டி துடிதுடித்தார்கள். ஆனால் அந்தப்பரத்திலுள்ள தேவியோடு கூடி மகிழ்ந்து கொண்டேயிருக்கும் சிவபெருமானைக் கண்டு விண்ணப்பஞ் செய்ய  சந்தர்ப்பம் வாய்க்காததைக் கருதி பெருந் துயரத்தில்ந்தார்கள். அநேக வருஷங்கள் கழித்து தங்களைத் தாங்களே நிந்தனை செய்து கொண்டு தாரகாசுரனின் கொடுமைக்கு எப்படியும் ஒரு முடிவு கண்டாக வேண்டுமென்று தீவிர எண்ணங் கொண்டு, அக்கினி பகவானை அணுகி அக்கினி தேவனே! சிவபெருமான் பார்வதி தேவியாரை அணுகி தாரகனை சம்ஹாரம் செய்ய இன்னும் புத்திரோற்பத்தி செய்யவில்லையே  நீர் எங்களிலும் சிறந்தவராதலால் எங்கள் கவலையைச் சிவபெருமானிடம் சொல்லி தாரகனை வதைக்க வழி செய்யும்படி விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டார்கள். தேவர்கள் வேண்டுகோளைத் தாமதப்படுத்த மனமில்லாத அக்கினித்தேவன் உடனே ஒரு புறா வடிவமெடுத்து சிவபெருமான் லீலா விநோதத்தில்  மூழ்கியிருந்த அந்தப்புறத்தினுள் புகுந்து சென்றான்! அப்போது சர்வாந்தாமியான சங்கரர் அந்தப் புறா வடிவத்தை கண்டு, யாரடா அவன் கபோத வடிவோடு வந்திருப்பவன்? என் வீரியத்தை இவனே தாங்கட்டும் என்று கூறி வீரியத்தை விட புறா வடிவிலிருந்த அக்கினி தேவன் அவ் வீரியத்தை வாயில் கவ்விக்கொண்டு பறந்து சென்றான்.ஆனால் சிவனாரின் வீரிய வெப்பத்தைத் தொடர்ந்து தாங்கிப் பறக்க வலுவில்லாமல் போகவே கங்கா நதியில்  விட்டு விட்டான். கங்காநதியும் அதைத் தாங்க  முடியாமல் அதைத் தருப்பைப் புல்லில் விட்டது. அந்த தருப்பைப் புல்லில் விடப்பட்ட வீரியத்திலிருந்து அதிசுந்தரத் தோற்றமாய் கண்டதும் சகல சுகங்களையும் கொடுக்கத்தக்க வன்மையும்  உடையவராய்க்  குமார ரூபத்தில் திருமுருகன் தோன்றினார். அப்தபாது நீராட வந்த ஆறு இராஜ கன்னியர்கள் அக்குழந்தையைக் கண்டு என் குழந்தை இது! என் குழந்தை இது என்று ஒவ்வொருவரும் கூறி,அக்குழந்தைக்குப் பால் கொடுத்தார்கள். அப்போது  குமாரக் கடவுளான முருகப்பபருமான் ஆறுமுகத்தோடு ஆறு இராஜ கன்னியரிடமும் பால்பருகினார்.  இதனால்தான்,முருகக் கடவுளுக்கு  ஷாண்மாதுரன்(அறுவர் புதல்வன்) என்றும் ஆறுமுகன் என்றும் பெயர் வந்தது. 

-சிவமகா புராணம்-ஞான சம்ஹிதை

குறிப்பு: நைமிசாரண்ணியம் என்பது ஒரு வனத்தின் பெயர்.பிண்ணூட்டத்தில் நூலின் பகுதி இணைக்கப்பட்டுள்ளது.
- ஆறாம் அறிவு, தினகரன் செல்லையா முகநூல் பதிவு, 23.12.20


சுப்பிரமணியனது பிறப்பு


சனி, 12 டிசம்பர், 2020

துரோணாச்சாரி பிறப்பு கதை

மகாபாரதத்தில் பெண்களைப் பற்றி இழிவுபடுத்தியிருக்கும் சுலோகங்களைப் பற்றி எழுதிய பதிவிற்கு Durairaj Kurusamy எனும் நண்பர்,
“புராணத்தில் உள்ளது பெரும்பாலும்  எதுவும் இப்பொழுது நடைமுறையில் இல்லை.இதை சொல்வதால் என்ன பயன் உங்களுக்கு?” என கேள்வி எழுப்பியிருந்தார். 

இதே மாதிரியான கேள்விகளை மற்ற சில நண்பர்களும் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். அவர்களுக்கான பதில்தான் இப் பதிவு. 

மகாபாரதம்  துரோணாச்சாராரின் பிறப்பு குறித்து Times of India வின் தமிழ் பதிப்பான “சமயம்” இணைய தளத்தில் (www.tamil.samayam.com) 16th April 2020 வெளியான கதையை அப்படியே கீழே தருகிறேன். 

“துரோணாச்சாரியரின் பிறப்பு 
மகாபாரதத்தில் வரும் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் குருவான துரோணாச்சாரியரின் பிறப்பானது மிகவும் சுவாரசியம் நிறைந்தது. சொல்லப்போனால் உலகின் முதல் டெஸ்ட் டியூப் குழந்தை துரோணாச்சாரியர் என்றால் அது மிகையல்ல. முனிவர் பரத்வாஜருக்கும் கிருதாஜி என்ற அப்சரா என்பவருக்கும் மகனாய் பிறந்தவர் தான் துரோணர். முனிவர் பரத்வாஜர் ஒரு மாலை பொழுதில் வழிபாடு செய்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார். எப்போதும் கங்கை நதியில் குளிப்பதை வழக்கமாக கொண்டிருந்த அவர் அன்று குளிக்கும் போது ஒரு அழகான பெண் அந்த கங்கை நதியில் குளித்துக் கொண்டிருப்பதைக் கண்டு மயங்கி நின்றார்.

முதல் சோதனைக் குழாய் குழந்தை?

முனிவர் பரத்வாஜரைப் பார்த்ததும் அந்த அழகான அப்சரா கிருதாஜி ஒரு இடுப்பு துணியை உடுத்திக் கொண்டு கங்கை ஆற்றிலிருந்து வெளியே வந்தாள்‌. முனிவர் பரத்வாஜர் அந்த இந்திரனும் சொக்கிப் போகும் பேரழகில் மயங்கி நின்றார். அந்த ஈர உடையின் அழகில் மயங்கிய அவருக்குத் தானாகவே விந்து வெளியேறியது. அப்போது அந்த விந்தணுவை ஒரு களிமண் பானையில் சேகரித்துக் கொண்டு அவருடைய ஆசிரமத்தில் ஒரு இருண்ட அறையில் சேமித்து வைத்தார். அந்த பானையில் இருந்து தான் துரோணர் பிறந்தார். 'துரோணம்' என்றால் பானை என்று பொருள், அதிலிருந்து 'துரோணர்' என்பது பானையிலிருந்து பிறந்தவர் என்ற பொருளில் வழங்கப்படுகிறார்.”

இந்தியாவின் முன்னனி நாளிதழான “The Times of India”,துளியும் டெஸ்ட் டியூப் மருத்துவத்திற்கு சம்பந்த மில்லாத துரோணரின் பிறப்பை உலகின் முதல் டெஸ்ட் டியூப் குழந்தை என எழுதி நம்பவைத்து ஏமாற்றுவது எப்படி சரியானதாக இருக்க முடியும்?! 

தவிர துரோணர் அப்பாவி ஏகலைவனின் கட்டை விரலை காணிக்கையாக வாங்கி பெருமை சேர்த்தவர். மானசீகமாக குருவாக ஏற்றுக் கொண்ட சீடனுக்கு துரோகம் இழைத்து வஞ்சகமாக சீடனையே பலியாக்கியவர். இவரது பெயரில் ”துரோணாச் சாரியார் பட்டம்” என சிறந்த விளையாட்டுப் பயிற்சியாளருக்கு மத்திய அரசால் வழங்கப் படுகிறது.இது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும்?! சத்ரியர்களுக்கும் பிராம்மணர்களுக்கு மட்டுமே பயிற்சியும் மற்றவர்களை பறக்கணித்த துரோணரின்  பெயரால் பட்டம் வழங்கப்படுதிலிருந்தே வர்ணாசிரமம் எல்லாத் தளங்களிலும் ஆட்சி செய்வதை எளிதில் அறிந்து கொள்ள இயலும். 

இப்படி ஒரு கதையல்ல இரண்டு அல்ல, ஆயிரக் கணக்கில் புராணங்களில் கதைகள் உண்டு. இந்தக் கதைகளில் அறிவியல் உள்ளது ஆன்மீகம் உள்ளது என பொய்களை அள்ளி மக்களுக்கு பரப்பும் தீய சக்திகளின் வேலைகள் இருக்கும் வரை, இந்த ஏமாற்றுக் கதைகளின் உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்வதும் அவசியமாகிறது. இதுவே மக்களை விழிப்புணர்வுப் பாதைக்கு இட்டுச் செல்லும். 

Youtube சேனலில் ஒரு பெண், துரோணரின் கதையை விலாவாரியாக எடுத்துரைப்பதைக் கவனித்தேன்,ஆனால் அவரும் ஏகலைவனுக்கு துரோணர் செய்த துரோகத்தைக் கூறவில்லை.ஆனால் துரோணரின் பிறப்பினை டெஸ்ட் டியுப் பேபி என சொல்லத் தவறவில்லை. Youtube ன் link யை கீழே தந்துள்ளேன். 
அவர் கூறிய கதையின் ஆங்கில வடிவம் கீழே: 

Unheard Mythological Stories 
Rishi Bharadwaja is the father of Dronacharya and mother is an Apasara name Krithaji.
One evening Rishi Bharadwaja was getting ready to do his evening prayers. He went to the Ganga River to take his usual bath but was amazed to find a beautiful woman bathing at his usual spot in the river.
On seeing Rishi Bharadwaja, the beautiful Apsara Krithaji got out of the Ganga River wearing a single loin cloth. Rishi Bharadwaja was moved by the heavenly beauty of the Apsara.
Suddenly the most unthinkable happened - Apsara Krithaji slipped on the banks of the river and the loin cloth slipped from her body.
Rishi Bharadwaja was overpowered by the moment and he involuntarily emitted his semen. The Rishi collected this sperm in aclay pot and stored it in a dark place in his Ashram.
Drona was born in this pot.
'Dronam' means pot and 'Dronar' is one who was born from the pot.
It would not be wrong to say that Dronacharya is the first test tube baby in the world.
Dronacharya spent his youth in poverty, but studied religion and military arts together with the prince of Panchal, Drupad. Drupad and Dronacharya became close friends and Drupad, in his childish playfulness, promised to give Dronacharya half his kingdom upon ascending the throne of Panchal. For the sake of his wife and son, Dronacharya desired freedom from poverty. Remembering the promise given by Drupad, he decided to approach him to ask for help. However, drunk with power, King Drupad refused to even recognize Dronacharya and humiliated him by calling him an inferior person.
On being insulted and neglected by his fellow brother (Gurubhai- bond of studying together in an ashram) King Drupad, he went to Suryadesh and was appointed as a royal guru of the Kauravas and Pandavas. He was a master of advanced military arts, including the Devastras and during the war of Mahabharata he fought bravely on behalf of the Kauravas. After Bhisma-Pitamah, he was the army-chief of the Kauravas. He was a partial incarnation of Agni.
When the time came for Guru Dakshina,Drona asked his students to defeat Drupad and capture him alive. Duryodhan and his brothers took up the challenge first, and declared war on Drupad, however they were beaten in battle. That is when Arjun along with Bheem, attacked Drupad's army, defeated him, and bought him as a prisoner to Drona.  Drona forgave Drupad and returned half of his kingdom and made Ashwatthama king of the other half.

https://youtu.be/6SLP4QmLO2M
- தினகரன் செல்லையா , ஆறாம் அறிவு முகநூல் பதிவு, 11.12.20