கணபதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கணபதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 31 ஆகஸ்ட், 2022

உச்சிஷ்ட கணபதி

உச்சிட்ட கணபதி (சமக்கிருதம்उच्छिष्ट-गणपतिUcchiṣṭa Gaṇapatiவிநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 8வது திருவுருவம் ஆகும். காணாபத்தியத்தின் ஆறு முக்கிய பிரிவுகளுள் ஒன்றான உச்சிட்ட காணாபத்தியம் என்னும் காணாபத்தியப் பிரிவின் முதன்மைக் கடவுள் இவராகும்.


உச்சிட்ட கணபதி, 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் படம்.

திருவுருவ அமைப்புதொகு

இந்தத் திருவுருவத்தின் நிறம் குறித்து நூல்களில் வெவ்வேறு தகவல்கள் காணப்படுகின்றன. "மந்திர மகார்ணவம்" என்னும் நூலில் உச்சிட்ட கணபதியின் நிறம் சிவப்பு எனக் காணப்பட, உத்தர காமிகாகமம் கருமை என்கிறது.[1] வேறு சில நூல்கள் இத்திருவுருவத்தின் நிறம் நீலம் என்கின்றன.[2] உச்சிட்ட கணபதி வடிவத்தில் கணபதிக்கு இடப்புறத்தில் தேவியின் உருவம் காணப்படும். பல எடுத்துக்காட்டுகளில் தேவியின் உருவம் கணபதியின் இடது தொடைமீது இருக்கும் நிலையில் காட்டப்பட்டுள்ளது. பெரும்பாலும் தேவியின் உருவம் ஆடைகள் அற்ற நிலையிலேயே இருக்கும். மிக அரிதாக ஆடை அணிந்தபடி இருப்பதும் உண்டு. இவ்வடிவத்தில் கணபதிக்கு ஆறு கைகள் உள்ளன. இவற்றுள் ஐந்து கைகளில் நீலோற்பலம், மாதுளம் பழம்வீணைநெற்கதிர், அட்சமாலை என்பவற்றை ஏந்தியிருப்பார். ஆறாவது கை தேவியைத் தழுவியிருக்கும்.

- விக்கிப்பீடியாவில் இருந்து

வியாழன், 30 மே, 2019

ஆபாசத்தின் மூலம் எது? (வல்லப கணபதி)



இங்கே திறக்கப்பட்ட கண்காட்சியைப் பற்றி நண்பர் வீரமணி குறிப்பிட்டார். "இங்கேயிருக் கிற வல்லப கணபதி படத்தைப் போய் பாருங்கள். இது சிதம்பரத்திலே இல்லையா? அங்கே போய்ப் பார்த்து நாங்கள் சொல்வது சரியா இல்லையா என்று சொல்லுங்கள் என்று வீரமணி கேட்டார். நீங்கள் சிதம்பரத்தில் போய்ப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும் என்று சொன்னார். அங்கே இதே படம் சிலை வடிவத்திலே இருக்கிறது. ஆனால் அங்கேயிருக்கிற குருக்கள்மார்கள் துணியைப் போட்டு எந்த இடத்தை மறைக்கவேண்டுமோ, அதை மறைத்து வைத்திருக்கிறார்கள். ஆகவே நீங்கள் போய் பார்த்தால்கூட தெரியாது, திருவாரூர் கோயிலிலே சூடகமலாம்பிகை சன்னிதானத்தில் உத்திஷ்ட கணபதியைப் பார்த்த ஞாபகம் இருக்கிறது. வல்லப கணபதி போலத் தான் - உத்திஷ்ட கணபதியும். ஆனால் இவைகளுக்கெல்லாம் கதைகள் உண்டு, என்ன கதை?

ஆபாச விநாயகன் கதை


சூரபத்மனுக்கும் சுப்பிரமணியனுக்கும் சண்டை நடந்தது. சூரபத்மனுடைய அக்ரோணிக் கணக்கான சைன்யங்களை சுப்பிரமணியரால் தோற்கடிக்க முடிய வில்லை. காரணம் ஒரு அசுரன் செத்தால் இன்னொரு அசுரன் பிறந்து கொண்டே இருக்கிறான். சூரனுடைய தாயார் வல்லபை அவளுடைய வயிற்றுக்குள்ளேயிருந்து, பிள்ளைகள் வந்து கொண்டேயிருக்கிறார்கள். அப்படி வருகின்ற பிள்ளைகளை கொன்று குவிக்க முடியாமல் சுப்பிரமணியர் மயங்குகிறார், தவிக்கிறார், திணறுகிறார். கடைசியாக முடியாத காரணத்தால் தன்னுடைய அண்ணனை "விநாயகா என்னை வந்து காப்பாற்று" என்று அழைக்கிறார். உடனே விநாயகர் யானை முகத்துடன் ஓடோடி வந்து வல்லபையைத் தூக்கி மடியிலே உட்கார வைத்துக்கொண்டு அந்தப் பிள் ளைகள் வெளியே வர முடியாமல் தடுத்து விடுகிறார். அவ்வளவு தான் கதையை நான் சூசகமாகச் சொல்லமுடியும்.

இதை ஒரு கதை ஆக்கிப்படிக்க வேண்டுமா? ஆலயத்தில் சிலையாகவடிக்கவேண்டுமா?'' என்று நான். படித்த பிராமண வாலிபர்களைக் கேட்கிறேன். ஆஸ்தீ கர்களைக் கேட்கிறேன். ஆண்டவன் ஒன்று என்று நம்புங்கள். நான் வேண்டாமென்று சொல்லவில்லை. திருமந்திரம் எழுதிய திருமூலர் கூடச் சொன்னார் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று. இதிலே எங்களுக்கும் திராவிடர் கழக நண்பர்களுக்கும் கூடவேறுபாடு இருக்கலாம். அது வேறு விவகாரம் - ஆனால் கடவுளின் பெயரால் மக்களை இன்றைக்கு திராவிடர் கழகத்தார் கண்காட்சி நடத்தி புண்படுத்து கிறார்கள் என்று யாராவது சொல்வார்களேயானால் இன்றைக்கு அவைகளை சிலைகளாக, ஓவியங்களாக கோயில்களிலேயே வைத்து மக்கள் பார்க்கின்ற கண்காட்சிகளாக ஆக்கியிருக்கிறீர்கள். ஆண்டவன் சாபம் கொடுப்பதாக இருந்தால் முதலில் உங்களுக்கு சாபம் கொடுத்துவிட்டு அல்லவா, பிறகு திராவிடர் கழகத்தாருக்குச் சாபம் கொடுக்க வேண்டும். அந்த அளவுக்கு அல்லவா, ஆண்டவர்களை ஆபாசப்படுத்தி வைத்திருக்கிறோம். இந்த மதத்திலே அவ்வளவு பெரிய கொடுமை செய்ய என்ன காரணம்? ஏன் இவ்வளவு ஆயிரக் கணக்கான கடவுள்கள்? இவ்வளவு கடவுள்களை வைத்துக் கொண்டு இந்தச் சமுதாயம் பெற்ற பயன் என்ன? முரண்பாடு இல்லாத எந்தக் கதையாவது எந்த வழிமுறையாவது எந்த மார்க்கமாவது இருக்கிறதா?

-  கலைஞர்

- விடுதலை: 15.10.1974, பக்கம் 3

- விடுதலை ஞாயிறு மலர் 25. 5. 2019

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

யானைத் தலையுடன் பிறந்த வினாயகனாம்!

வினாயகன், கணபதி, கணநாதன், கணேசன், விக்னேஷ்வரன், கணன், பிள்ளையார் என்று பல பெயரால் வணங்கப்படும் வினாயகனின் பிறப்புக் கதைகள் ஒரே வகையாக இல்லாமல் ஒவ்வொரு புராணத்திலும் வெவ்வேறு வகையாக உள்ளது.

காணபத்யம் என்கின்ற வினாயகனை முழு முதல் கடவுளாக (பரப்பிரம்மம்) வழிபடும் பிரிவினரின் வினாயகர் புராணம் என்கிற உப புராணத்தில் மட்டுமே வினாயகனை உயர்வாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது வினாயகன்தான் முதலில் தோன்றிய கடவுள் என்றும்; சக்தி, சிவன், விஷ்ணு, பிரம்மா போன்றோரையும் படைத்து அண்ட சராசரங்களையும் படைத்ததாக கூறுகிறது.  ஆனால், வினாயகன் பிறக்கும் போதே தலையில்லாமல் முண்டமாக பிறந்ததாகவும், பார்வதியும், பரம சிவனும் யானைகள் வடிவாக மாறி புணர்ந்ததின் விளைவாக யானைத் தலையுடன் பிறந்ததாகவும், பார்வதி குளிக்கும்போது உடலில் உள்ள அழுக்கைத் திரட்டி வடிவமும் உயிரும் கொடுத்து காவலுக்கு வைத்தபோது, சிவனால் தலை அறுக்கப்பட்டு பிறகு யானைத்தலை பொருத்தப் பட்டதாகவும் இன்னும் பற்பல வகையாக வினாயகன் பிறப்பை பற்றி புராணங்கள் கூறுகின்றன.

சிவமஹா புராணத்தில் (முதல் பாகம்,ஞான சம்ஹிதை 31. கணபாலன் அவதரித்த கதை) வினாயகனின் பிறப்பு பற்றி இப்படி கூறுகிறது;
ஏவம் விசார்யஸாதேவி ஜலம் ஜக்ராஹபாணிநா
தேஹஸ்தம் ருதமாதாய த்யாத்வாரூபம் ப்ரபோஸ் ஸாபம்
நிர்மாய ப்ரணவாகாரம் சதுர்பாஹூந்த்ரி லோசனம்
ஸுக்லாம் பரதரம் விஷ்ணும் கஜவக்ரதம் ஸுவாக்ருதிம்
சிவனின் கணங்களே பார்வதிக்கும் பாதுகாவலாக இருப்பதால் அவர்களின் மீது நம்பிக்கையின்மை தோழியின் மூலமாக பார்வதிக்கு ஏற்பட்டது. இதனால் பார்வதி குளிக்கும் போது தண்ணீர்விட்டு உடலில் உள்ள அழுக்கை திரட்டி யானைத் தலையுடன் பொம்மை செய்து அதற்கு உயிரும் கொடுத்து காவலுக்கு வைத்தாள். யானைத் தலையுடன் காவலுக்கு வைக்கப்பட்டவனே வினாயகனாம். ஏன் மனிதத்  தலைபோல் வைத்தால் என்ன உடல் அழுக்கா குறைந்துவிடும்?

“பவிஷ்ய புராணம்“ என்கிற பாரசீக (பார்சி) மத ஆதரவு புராணத்தில் வினாய கனின் பிறப்பு வேறுவகையாக உள்ளது. பிரம்மனால் படைக்கப்பட்ட மனிதர்கள் எல்லோரும் இடையூறு இல்லாமல் நிம் மதியாக வாழ்ந்து வந்ததால், கடவுளை நினைப்பதைவிட்டுவிட்டார்களாம். ஆகையினால் அவர்களுக்குப்பாடம் புகட்டவேண்டி, பிரம்மா விக்னத்தை உண்டாக்குவதற்கு என்றே விக்னேஷ் வரன் என்கிற வினாயகனை படைத்தாராம். அதாவது தொல்லை கொடுப் பதற்கென்றே பிரம்மனால் படைக்கப்பட்டவன் தான் வினாயகனாம்.

ஒவ்வொரு புராணத்திலும் வினாயகன் பிறப்பைப் பற்றி வெவ்வேறு வகையாக கூறுவதால் புராணங்கள் அனைத்தும் அவரவர் இச்சைக்கேற்ப எழுதப்பட்டது என்பது தெளிவாகின்றது.
கொசுரு செய்தி ஒன்று, வைணவ(பெருமாள்) கோயில்களின் வாயிலில் தும்பிக்கை ஆழ்வார் (கடவுளல்ல) என்கிற பெயரில் சிறுமைபடுத்தப்பட்டு வினாயகன் சிலை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எப்படி பிறந்தான் என்று அறுதியிட்டு கூறமுடியாத வினாயகனுக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒருகேடா!.

- செ.ர.பார்த்தசாரதி
-விடுதலை,01.09.2016
-விடுதலை,01.09.2016,பக்கம்-2