சபரிமலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சபரிமலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 11 ஆகஸ்ட், 2025

சபரிமலை அய்யப்பன் யார்?- நேயன்


 சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவன் அய்யப்பன் என்று அறிவுக்கு ஒவ்வாத ஒரு கதையைச் சொல்லி, அண்மைக்காலமாக கேரள சபரிமலை அய்யப்பனுக்கு ஒரு மகத்துவத்தை உண்டாக்கி யுள்ளனர்.

ஆணுக்கும் ஆணுக்கும் குழந்தை பிறக்குமா?

அதுவும் பெண் வடிவில் இருந்த விஷ்ணுவின் கையைச் சிவன் பிடித்தவுடன் கையில் குழந்தை
பிறந்தது என்பது அறிவியலுக்கு ஏற்புடையதா?

இப்படிப்பட்ட முட்டாள்தனமான ஒரு புனைவை கடவுள் என்று நம்பி இந்த அறிவியல் உலகத்திலும் அலைவது சரியா? சிந்திக்க வேண்டாமா?
அய்யப்பன் என்பது கையில் பிறந்ததல்ல. அய்யனார் என்ற காவல் தெய்வமே அய்யப்பனாக ஆக்கப்பட்டுள்ளது. அய்யனார் என்பது ஒவ்வொரு ஊரிலும் உள்ள காவல் தெய்வம். அப்படிப்பட்ட ஒரு காவல் தெய்வந்தான் சபரிமலை அய்யப்பனும்.

கிராமங்களில் வீரன் வழிபாடு, அய்யனார் வழிபாடு, அம்மன் வழிபாடு என்பவை வாழ்ந்து மறைந்த பெரியோரின் வழிபாடே. நிலத்தலைவர் வழிபாடு, பெண்டிர் வழிபாடு போல, வீரர் வழிபாட்டின் ஒரு பிரிவே அய்யனார் வழிபாடு. விருத்தாசலத்தில் உள்ள கொளஞ்சியப்பர், வேடப்பர் போன்ற காவல் தெய்வமே சபரிமலை அய்யப்பனும் என்ற உண்மையை அனைவரும் கருத்தில்கொள்ள வேண்டும். ஊரைக் காப்பவர்கள் என்ற வகையிலே இக்காவல் தெய்வங்கள் வழிபடப்படுகின்றன.

தமிழகத்தின் கிராமங்கள்தோறும் அய்யனார் சாமிகள் காவல் தெய்வமாக இருப்பதைப் போலவே, ஆரியங்காவு பகுதியில் இருந்த அய்யப்பன் கோவிலும் முன்னொரு காலத்தில் எல்லை காவல் தெய்வமாக, சிறு தெய்வ வழிபாட்டில் முக்கிய பங்கு வகித்த தெய்வமாக இருந்தது. வழிபாடுகளில் இரண்டு கடவுள்-களுக்கும் அதிக அளவில் ஒற்றுமைகள் இருக்கின்றன. பழங்குடிகளின் ஊர்க்காவல் தெய்வமாக இருந்த இக்கோவில் பிற்காலத்தில் உயர்ஜாதி மலையாள இந்துக்களாலும், பந்தளம் ராஜ குடும்பத்தாலும் பராமரிக்கப்பட்டு, அக்கோவிலின் நிர்வாகத்தினை அவர்கள் ஏற்று நடத்தத் தொடங்கினார்கள் என்றும் கூறப்படுகிறது.

தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் இருக்கும் பல்வேறு அய்யப்பன் கோயில்களில் அய்யப்பன் திருமணமான கடவுளாகவே காட்சி அளிக்கிறார். அச்சன்கோவில், கோவை போன்ற கேரளத்தை ஒட்டிய தமிழ்நாட்டுப் பகுதிகளில் இருக்கும் அய்யப்பன் கோவில்களில் பெண்கள் வழிபட முழு உரிமையும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்களைத் தடுப்பது குற்றம்!

சபரிமலையில் பெண்கள் நுழையக் கூடாது என 1972ஆம் ஆண்டுதான் தடையே விதித்தார்கள். அதற்கு முன்புவரை ஆண்களைப் போலவே பெண்களும் சென்று அய்யப்பனை வழிபட்டு வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1972இல் தடை விதிக்கப்பட்டாலும் அதைப் பெரிதாக நடைமுறைப்படுத்தவில்லை.

பெண்கள் வழிபாடும்
கேரள உயர்நீதிமன்றத் தீர்ப்பும்

1990ஆம் ஆண்டு போடப்பட்ட பொது நல வழக்கின் காரணமாக 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் கோவிலுக்குள் செல்லக் கூடாது என கேரள உயர்நீதிமன்றம் 1993ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தது. அதற்குப் பிறகுதான் பெண்கள் இக்கோவிலுக்கு வருவதில்லை. ஆனால், ஆதிகாலத்தில் இருந்தே சோறுண்ணும் சடங்கிற்காக பெண்கள் இந்தக் கோவிலுக்கு வருவது வழக்கமான ஒன்றாகவே இருந்தது.
1939ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத் தில் ராணியாக இருந்தவர் அய்யப்பன் கோவிலில் வழிபாடு நடத்தி யிருக்கிறார் என்பதற்கான சான்றுகளும் கிடைக்கப் பெற்றிருக்கின்றன.

மேனாள் பிரதமரின் செயலாளர் டி.கே.ஏ.நாயரின் அனுபவம்

இந்தியாவில் இருக்கும் மற்ற கோவில்களைப் போலவே இங்கும் பெண்கள் வந்து வழிபாடு செய்து வந்தனர். பிரதமர் மன்மோகன் சிங்கின் முன்னாள் செயலாளராக பணியாற்றி வந்த டி.கே.ஏ.நாயர் இதுகுறித்து கூறுகையில், ‘‘எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் முதன்முறையாக சபரிமலை சென்றபோது நான் என் அன்னையின் மடியில் அமர்ந்திருந்தேன். அன்று எடுத்துக் கொண்ட நிழற்படம் இன்றும் எங்களிடம் இருக்கிறது’’ என்று கூறினார். அவர் காட்டிய அந்த நிழற்படத்தில் ஓர் இளம்பெண், கருவறை முன்னால் நின்றுகொண்டு கடவுளை வேண்டிக் கொண்டிருப்பதாக உள்ளது.
கேரள உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பின், சமூக நல ஆர்வலர்களும், பெண்ணுரிமைப் போராளிகளும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுத்தனர். இருதரப்பு வாதங்களும் கேட்கப்பட்டு, அதன் பிறகுதான் அனைத்துப் பெண்களும் அய்யப்பன் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. ஆனால், அத்தீர்ப்பை கொஞ்சங்கூட மதிக்காமல் அடியாட்
களை அமர்த்தி பெண்களைத் தாக்கித் தடுத்து வருகிறது பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். கூட்டம்.

பிரம்மச்சரியம், மரபு என்பது பித்தலாட்டம்

அய்யப்பன் பிரம்மச்சாரி என்பது பெரிய பித்தலாட்டம். அய்யப்பனுக்கு ஒரு பெண்டாட்டி அல்ல. இரு பெண்டாட்டி. பூரணி, புஷ்கலை என்று இரண்டு மனைவிகள். இதை மறுக்க முடியுமா?- அப்படியிருக்க அய்யப்பன் பிரம்மச்சாரி. அதனால் பெண்கள் செல்லக் கூடாது என்பது பித்தலாட்டமாகும்.
அதேபோல் பெண்கள் செல்லக்கூடாது என்பது மரபு என்பதும் பெரிய மோசடி.

பெண்ணின் மாதவிடாய் தீட்டு என்றால், அதனால் கோயில் புனிதம் கெடும் என்றால் மற்ற கோயில்களில் பெண்கள் அனுமதிக்கப்-படுவது ஏன்? அங்கு புனிதம் கெடாதா? மற்ற கோயில்களில் பெண்கள் அனுமதிக்கப்படும்-போது, அய்யப்பன் கோயிலிலும் அனுமதிப்பது-தானே சரியாகும்?
அய்யப்பன் பிரம்மச்சாரி என்ற ஒரு பொய்யைச் சொல்லி அதனால் பெண்களைச் செல்லக் கூடாது என்பது வாதப்படியே தப்பாகும்.
பெண்களுக்கு மத்தியில், உள்ளக் கட்டுப் பாட்டோடு உறுதியாய் இருப்பவனே பிரம்மச்சாரி, பெண்களே இல்லாத இடத்தில் கட்டுப்பாடுக்கும், உள்ள உறுதிக்கும் என்ன வேலை? எனவே, அய்யப்பன் பிரம்மச்சாரி என்பது மோசடி வாதம்.

மும்பையில் நீதிமன்ற ஆணை நிறைவேற்றம்!

மகாராஷ்டிராவில் உள்ள சில கோவில்களில் நூற்றாண்டு காலப் பரம்பரை வழக்கம் என்ற பெயரில் பெண்கள் நுழைவது தடை செய்யப்பட்டிருந்தது. அந்த நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள அனைத்துக் கோவில் களிலும் பெண்கள் சென்று வழிபடலாம் என்றும், அதை அரசே நேரடியாகக் கண்காணித்து தடை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்று நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.

சிங்கனாப்பூர் சனிக் கோவிலில் பெண்கள் நுழைவது தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் தடையை நீக்கியும்,
தடை செய்யும் நிருவாகத்திற்கும் நிருவாகிகளுக் கும் தனி நபர்களுக்கும் சிறைத் தண்டனை விதிக்கலாம் என்றும், இவ்விவகாரம் குறித்து மாநில அரசிடம் பதில் அளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றத்தின் அறிக்கைக்கு மகாராஷ்டிர அரசு தரப்பில் தரப்பட்ட பதில் மனுவில் கூறியுள்ளதாவது, ‘‘சிங்கனாப்பூரில் உள்ள சனிக்கோவில் பெண்கள் நுழைவதற்கு யாரும் தடை செய்ய முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக சனிக்கோவில் நிருவாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இனி பெண்கள் கோவிலுக்குள் நுழைவதை யாரும் தடை செய்ய மாட்டார்கள் என்றும், அதற்கான அறிவிப்பு விரைவில் கோவிலின் வெளியே வைக்கப்படும் என்றும், கோவிலில் நுழைவதைத் தடுப்பவர்கள் மீது 6 மாத சிறை தண்டனை குறித்து சிறப்பு சட்டமியற்றவும் ஆலோசனை செய்து வருகிறோம். கோவில் மற்றும் பொது இடங்களில் பாலின பேதம் கூடாது என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது என்று அந்தப் பதில் மனுவில் கூறியுள்ளது.

அரசின் இந்த முடிவை அடுத்து வழக்கை விசாரணை செய்துவரும் நீதிபதி வகேலா கூறியதாவது, ‘‘கோவிலுக்குள் ஆண் சென்று கடவுளைப் பூசை செய்து வழிபட முடியும் என்றால், பெண்களால் ஏன் முடியாது, ஆகவே, பாலின பேதம் ஏற்க முடியாத ஒன்றாகும். மகாராஷ்டிராவில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் பெண்கள் சென்று வழிபாடு நடத்தலாம். பெண்கள் நுழைய இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும். இதை மகாராஷ்டிர அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறினார். கோலாப்பூர், கண்பதிபுலே நகர், நாசிக், சனிசிங்னாப்பூர் உட்பட தடை செய்யப்பட்டு இருந்த 27 கோவில்களிலும் பெண்கள் சென்று வழிபடலாம். ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. காலிப் பட்டாளமும்,  கூலிப் பட்டாளமும் அங்கு சென்று ஏன் தடுக்கவில்லை?

மகர ஜோதிப் புரட்டு

மகரஜோதி என்பது தானாகத் தெரிவதல்ல, அது மனிதர்களால் ஏற்றப்படுவதுதான், சபரிமலை தேவஸ்வம்போர்டே இந்தக் காரியத்தைப் பல ஆண்டுகளாகச் செய்து வருகிறது என்பது பகுத்தறிவாளர்களின் ஆதாரப்பூர்வக் குற்றச்சாட்டு. ஆனால், இதற்கு இதுவரைக்கும் நேர்மையான எந்தப் பதிலையும் அய்யப்பன் வியாபாரிகள் சொன்னதில்லை. இந்நிலையில் இப்போது நடந்த விபத்து தொடர்பான விசாரணையில், பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி மனிதர்களால் ஏற்றப்படுகிறதா? அல்லது வானத்தில் தோன்றும் நட்சத்திரமா? என்பதை திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு விளக்க வேண்டும் என்று உத்தரவிட்டுவிட்டது.

நீதிமன்றத்துக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டதால், திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு கூட்டம் அதன் தலைவர் எம்.ராஜகோபாலன் நாயர் தலைமையில் ஜனவரி 31 அன்று நடந்தது. இதில் சபரிமலை அய்யப்பன் கோயில் மேல் சாந்தி கண்டரரு ராஜீவரரு, கன்னிபையூர் நாராயணன் நம்பூதிரி (வாஸ்து) மற்றும் பல உயர் பூசாரிகள், திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு உறுப்பினர்கள், பந்தளம் அரச குடும்பத்தினர், அய்யப்பன் கோவில் நிருவாகிகள், கட்டடக்கலை வல்லுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்வம் போர்டு தலைவர் ராஜகோபாலன் நாயர் நீண்ட நாட்களாக மறைத்து வைத்திருந்த அந்த ரகசியத்தை(?)உடைத்தே விட்டார். பொன்னம்பலமேட்டில் மகர ஜோதியை மனிதர்கள்தான் ஏற்றுகிறார்கள். இது எல்லோருக்கும் தெரியும். அதை திருவாங்கூர் தேவஸ்வம் போர்டும் அங்கீகரித்து உள்ளது எனக் கூறினார்.

-உண்மை இதழ், 16-31.12.24

வெள்ளி, 11 ஜனவரி, 2019

சபரிமலையில் பெண்கள்: மலையாள பத்திரிகை படப்பிடிப்பு



வயது வேறுபாடின்றி, பெண்கள், சபரி மலை சன்னிதானம் சென்று, தர்ம சாஸ்த் தாவை தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்றும், எப்போதும் அனுமதிக்க முடியாது என்றும், வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆனால், உண்மை அதுதானா?
2012ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி, மலையாள பத்திரிகைகள் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தன....
ஆபிரகாம், தடியூர் என்ற மலையாள பத்திரிகை நிருபர், இப்போது, அந்த செய் தியையும், அதன் பின்னர் நிகழ்ந்தவற் றையும் நினைவு கூர்கிறார்...
அன்று, சபரிமலை சன்னிதானத்தில், சில பெண்கள் கூட்டமாக வந்து, தர்ம சாஸ்த் தாவை தரிசித்ததை கண்டேன்; அந்த பெண்களுக்கு, போலீஸ் காவல் இருந்தது.. பத்திரிகையாளர் எவரையும், புகைப்படங் கள் எடுக்க, முதலில் அனுமதிக்கவில்ல; ஆனாலும், நாங்கள், பெரும் பாடுபட்டு, புகைப்படங்கள் எடுத்தோம். பத்திரிகை களில் செய்தியும் வந்தது!நாங்கள் சபரிமலை தந்திரிகளிடம், விசாரித்த போது, அந்த பெண்கள் அனைவரும், கொல்லம் நகரைச் சேர்ந்த, தொழில் அதிபர், சுனில் சுவாமி என்பவரோடு, மும்பையிலிருந்து வந்த பெண்கள் என்று தகவல் சொன்னார்கள்!
பத்திரிகை செய்திகள் வந்த உடனே, ராகுல் ஈஸ்வர், என்னை தொடர்பு கொண்டு, சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக் கூடாது.. எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை... ஆனாலும், எனது அம்மா, இதை, பிரச்சினை ஆக்க வேண்டாம்; தொழில் அதிபர் சுனில் சுவாமி, நமக்கு வேண்டியவர் என்பதால், இதை இத்தோடு விட்டு விட வேண்டும்" என்று கூறினார்.
இப்போது, சபரி மலையில், பெண்க ளுக்கு அனுமதி கொடுத்தால், தற்கொலை செய்து கொள்வோம் என்பவர்களோ, அல்லது,
சபரிமலையை, ரத்தக்களரியாக மாற்றி, பெரும் கலவரத்தை தூண்டிவிடும், எவரும், சுனில் சுவாமி, தன்னோடு வந்த, பெண்களையும் சேர்ந்து, சன்னிதானத்தில் நுழைந்து, 2 நாட்கள், சன்னிதானம், விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்து, சடங்குகளை நிறைவேற்றியதையோ, கண்டு கொள்ளவில்லை!
சுனில் சுவாமிக்கு எதிராக, எந்த வாள் முனையும் நீளவில்லை என்பது தான் விசித்திரம்...
இது மட்டுமா? 2032ஆம் ஆண்டு வரைக்கும்,  உதயாஸ்தமய பூஜை செய் யும், டிக்கட்டுகளை, மொத்தமாக, புக் செய்து விட்டு, சட்டப்படி, இப்போதும், சபரிமலை வந்து செல்கிறார், சுனில் சுவாமி!
இதற்கு எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை....
அவர்களுக்கு தெரியும்...
சர்வ வல்லமை மிக்க சுனில் சுவாமி, யாரென்று.
சுனில் சுவாமிக்கு எதிராக, எந்த வாளும் நீளாது..
என்ன காரணம் என்று, சங்கிகளுக்கு நன்றாக தெரியும்...
என்ன காரணம்?
அப்போதைய, கேரள மாநில பாஜக தலைவர், இப்போது, ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருப்பவர், சுனில் சுவாமியின், நெருங்கிய நண்பர் என்பது, சங்கிகளுக்கும் தெரியும்; ராகுல் ஈஸ்வருக்கும் தெரியும்...
யார் இந்த ராகுல் ஈஸ்வர்..? சபரிமலையில், வன்முறையை, திட்ட மிட்டு நிறைவேற்றி, தற்போது, கைது செய்யப்பட்டு, சிறையில் இருக்கிறார்...
நன்றி: பதிவர் (RaJ Mohan) 
தகவல்: பஞ்சாட்சரம், திருவண்ணாமலை
- விடுதலை ஞாயிறு மலர், 17.11.18

ஞாயிறு, 6 ஜனவரி, 2019

பார்ப்பனர் வயிற்றில் அறுத்துக் கட்டவா?

சபரிமலை சென்று இரு பெண்கள் அய்யப்பனைத் தரிசித்து விட்டார்களாம்! அடேயப்பா, எவ்வளவுக் கூச்சல்! கோயில் தீட்டுப்பட்டு விட்டதாம். சொல்லு கிறவர்கள் யார்? அர்ச்சகர்கள்தான்! இதே அய்யப்பன் கோயிலில் - அர்ச்சகர்கள் தங்கிய அறைகளில் மதுப் பாட்டில்கள் கிடந்தது எல்லாம் கண்டுபிடிக்கப்பட வில்லையா? ஒரு விபச்சாரி வீட்டில், அய்யப்பன் கோயில் பிரதம தந்திரி கண்டரரு மோகனரு கண்டு பிடிக்கப்பட்ட கதை நாற்றம் எடுக்கவில்லையா?
அப்பொழுதெல்லாம் இந்த அய்யப்பன் கடவுள் கோபித்துக் கொண்டு இடத்தைக் காலி செய்துவிட்டு வெளிநாடு ஓடி விட்டாரா? அல்லது அவமானத்தைத் தாங்க முடியாமல் தூக்க மாத்திரைதான் சாப்பிட்டாரா?
காஞ்சிபுரம் மச்சேஸ்வரன் கோயிலை தேவநாதனும், திருவல்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலை பத்ரிநாத்தும் விபச்சார விடுதியாக்கினார்களே, அந்தக் கடவுள்கள் கர்ப்பகிரகத்தைவிட்டு வெளியேறினவா?
எல்லாம் வல்லக் கடவுளுக்கு (?) ஆசாபாசம் உண்டா? ஆசாபாசம் இருந்தால் அது கடவுளா?
சிவனின் தலையிலும், பக்கத்திலும் இரு பெண்டாட்டிகள் இருக்கின்றனரே - அவர்களின் மாத விடாய்க் குறித்து சிவன் என்றைக்காவது சீறியிருப்பதாக மாதவிடாய்ப் புராணம் எழுதப்பட்டுள்ளதா?
அடப் பைத்தியங்களே! எவனோ ஒரு கிறுக்கன் எந்த காலத்திலோ உளறி வைத்ததை எல்லாம் இந்த 21ஆம் நூற்றாண்டில் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு 'தை  தை' என்று ஆடுவது எந்த நோக்கத்தில்?
இதில் எல்லாம் பார்ப்பனர்களுக்குக் கொழுத்த சுரண்டல் கொடி கட்டிப் பறக்கிறது என்பதுதானே!
இப்பொழுது சபரிமலையில் என்ன நடக்கிறது? இரு பெண்கள் அய்யப்பனைக் கும்பிட்டதால் தீட்டுக் கழித்தார்களாம் - சுத்திகரிப்பு நடந்ததால் அதன் பலன் யாருக்குப் போய் சேர்ந்திருக்கிறது?
'டைம்ஸ் ஆப் இந்தியா' ஏட்டில் நேற்று வெளி வந்ததை எடுத்துக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கருத்தூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளாரே.
'பிராமணப் போஜனம்' செய்யப்பட்டதாம்; பட்டு வேட்டியும், அங்கவஸ்திரங்களும் அளிக்கப்பட்டதாம்.நல்லது நடந்தாலும் அவாளுக்கு வேட்டைதான் - அல்லது நடந்தாலும் அவாள் வயிற்றில்தான் அறுத்துக் கட்டப்படுகிறது - எத்தகைய சாமர்த்தியமான இனம்!
கோயில் கலசம் விழுந்தால், கோபுரம் இடிந்து விழுந்தால் அல்லது கோயில் தீப்பற்றி எரிந்தால் உடனே பரிகாரங்கள் என்ன - பூஜை புனஷ்காரங்கள் என்ன - யாகங்கள் என்ன! எல்லாவற்றையும் கூட்டிக் கழித்தால் அவாளின் அர்ச்சகர்களின் வருமானத்தில்தான் போய் முடியும்!


பக்தி என்ற போதை மூளையில் ஏற்றப்பட்டால் அம்மணமாக ஆடுவதற்கும் கூடக் கூச்சப்படுவ தில்லையே, வட நாட்டு சாமியார்கள் கதை  தெரிந்தது தானே! வேப்பிலையை சேலையாகக் கட்டுவதுகூட நடந்து கொண்டுதானே இருக்கிறது. (பெரியபாளையத் தம்மன்)


என்ன வெட்கக் கேடு என்றால் எச்சில் இலையில் பக்தர்கள் உருளும் அளவுக்குக் கெட்டுப் போக வேண்டுமா?
இதில்கூட இன பேதம் உண்டு, எந்தப் பார்ப்பான் எச்சில் இலையில் உருளுவான்?
சங்கராச்சாரியார் உருளுவாரா? பக்தி முற்றிய குருமூர்த்திகள் உருளுவார்களா? இராம கோபாலனோ, எச்.சிகளோ உருளுவார்களா?
இதோ ஒரு 'தினமணி' செய்தி (8.5.2006)
கரூர் அருகே நேர்த்திக் கடனை செலுத்த எச்சில் இலைகள்மீது உருளும் விநோதத் திருவிழா நடைபெற்றது.
கரூர் அருகேயுள்ள நெரூரில் ஸ்ரீசதாசிவ பிரம்மேந் திராள் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பிரம்மேந்திராளுக்கு உற்சவ விழா நடைபெறுவது வழக்கம். 92வது ஆண்டாக உற்சவ விழா நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீசதாசிவ பிரம்மேந் திராளுக்கு சிறப்பு அபிஷேகம். இலட்சார்ச்சனை செய்யப்பட்டது. அவரது திருவுருவப் படம் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு, நெரூர் அக்ரஹாரத்தில் உள்ள பஜனை மடத்தில் வைத்து பூஜிக்கப்பட்டது.
இதையடுத்து அக்ரஹார வீதியில் பிரம்மாண்ட அன்னதானம் நடைபெற்றது. அதில் ஒரே நேரத்தில் சுமார் 500க்கும் அதிகமானோர் சாப்பிட்டனர்.
பின்னர் அனைவரும் எழுந்த பிறகு, மூடப்படாத எச்சில் இலைமீது சுமார் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரே நேரத்தில் உருண்டனர். "நெரூரில் ஜீவ சமாதி யடைந்த ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திராள். அன்னதானத்தின் போது ஒரு இலையில் அமர்ந்து உண்பார். அது எந்த இலை எனத் தெரியாததால், அனைத்து இலைகளின்மீதும் பக்தர்கள் உருண்டு நேர்த்திக் கடன் செலுத்துவது அய்தீகம்" என்றனர் பக்தர்கள்.
இவ்வாறு செய்வதன் மூலம் நினைத்த காரியங்கள் கைகூடும். வேண்டுதல்கள் நிறைவேறியதும், இலையின் மீது உருளுவோரும் உண்டு. கோயிலுக்கு வருபவர்கள் யாராயினும் சாப்பிட மாட்டேன் எனக் கூறினால், அவரைக் கட்டாயப்படுத்தியாவது சாப்பிட வைப்பது வழக்கம். காரணம், அவரது உருவில்கூட பிரம்மேந்திராள் வந்திருக்கலாம் எனக் கருதியே. இதற்காக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட வெளியூர்களிலிருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர்.
('தினமணி' 8.5.2006)
(கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்றால் மூக்குப் புடைக்கும் ஆன்மீக சிரோன்மணிகள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்களாம்?)
இதைவிட இன்னொரு அருவருப்பான தகவல் உண்டு. பரலோகம்போக வைக்கத்தில் சாப்பிட்ட எச்சில் இலையை விலைக்கு விற்று காசு சம்பாதிக்கும் சங்கதி.
'குடிஅரசு' இதழில் வெளி வந்த தகவல்கள் இதோ:
"வைக்கம் கோவிலில் பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலை ஒன்று சில சமயங்களில் 0.0.6 வீதம் விற்கப்படுகிறது. (அந்நாளில் இது அரையணா மதிப்பு)
வியாதியஸ்தர்களுக்கு வியாதி சவுக்கரியமாகி விடும் என்றும், சந்தானமில்லாத வர்களுக்குச் சந்தான விருத் தியாகுமென்றும் அங்குள்ள பிராமணரல்லாத ஜனங் களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இது தமிழ்நாட்டில் ஒரு பிராமணனுக்கு ரூ.1000, 500 என்று விகிதம் பேசி நம்ம வீட்டுக்கு அழைத்து வந்து, அவர்களுக்குப் பணத்தைக் கொட்டி பூசை செய்துஅந்தக் கால் கழுவிய தண்ணீரைச் சாப்பிட்டால் தனது பாபம் போய் விடும் என்று நம்பும்படியாக செய்கிறதை விடப் பெரிய மோசடியல்ல"
(ஆதாரம்: 'குடிஅரசு' 9.8.1925)
இதைத் தொடர்ந்து  குடிஅரசு இதழில் 'லோகோபகாரி' ஏட்டில் வந்த செய்தி இது. இதன் தலைப்பும் 'வைக்கம் எச்சிலை" தான்.
"வைக்கத்திலே பிறந்து வளர்ந்து வாழ்பவரும் வைக்கத்திலுள்ள சத்தியாக்கிரக ஆசிரமத்தின் தற்காலக் காரியதரிசியுமான ஸ்ரீமான் கே. நாராயணன் இதுபற்றி நமக்கு  எழுதியிருக்கிறார். அவர் சொல்லுவதின் சுருக்கம்: வைக்கம் எச்சிலை சகல நோய்களையும், முக்கியமாக வயிற்று நோய்களையும், மலட்டுத்தன்மையையும் நீக்கவல்ல தென்ற நம்பிக்கை பாமர ஜனங்களுக்குள் உண்டு. வைக்கத்தம்மன் கோயில் எச்சிலைகள் பரம்பரையாக வாரியர் குடும்பத்தாருக்கு உரியன. அவர்களே கோயிலில் தாழ்ந்த வேலைகளைச் செய்கிறார்கள். அவர்களே பிராமணர்கள் சாப்பிட்ட பின் இலைகளை எடுத்து அப்புறப்படுத்துகிறார்கள். அவர்கள் இலைகளை வெளியே கொண்டு போய் மொத்தமாக நாயர்களுக்கு விற்று விடுகிறார்கள். நாயர்கள் எச் சிலைகளில் உள்ளவற்றையெல்லாம் அவற்றின் சீர் கேட்டைச் சொல்ல வேண்டியதில்லை. நன்றாகக் கலந்து கடைத் தெருவுக்குக் கொண்டு போய் பகிரங்கமாக விற்கிறார்கள். நகர பரிபாலன சபைக்கும் இந்த எச்சிலை லாபத்தில் பங்கு உண்டு. ஒரு பிராமண போஜனத்தில் வரும் எச்சிலையால் வாரியருக்குச் சுமார் 10 ரூபாய் லாபம் கிடைக்கும்.
வாரியர்களிடமிருந்து வாங்கி விற்கும் நாயர்களுக்கு இன்னும் அதிக லாபம் கிடைக்கும். சில காலத்திற்கு முன் தெய்வ பக்தியுள்ள உயர் வகுப்பார் பலர் இதனை வாங்கித் தங்கள் நோய் தீருமென்று உட்கொண்டு வந்தார்கள். ஆனால், இப்பொழுது பக்தியை விடப் பசி காரணமாகவே தாழ்ந்த வகுப்பு ஜனங்கள் இந்த எச்சிலைகளை வாங்கி உண்கிறார்கள்."
('குடிஅரசு' 30.8.1925)
மானமும், அறிவும் மனிதனுக்கு அழகு என்றார் தந்தை பெரியார் ஆனால் பக்தி என்று வந்து விட்டால் மானமாவது - அறிவாவது!
சேலம் அன்னதானபட்டியில் பக்தர்கள் செருப்படி படும் செருப்படி திருவிழா இன்னும் நடைபெற்றுக் கொண்டுதானே இருக்கிறது.
இது பகுத்தறிவுக்கு அழகா என்று கேட்டால் 'சோ' போன்ற பார்ப்பனர்கள் என்ன எழுதினார்கள் தெரியுமா?
இதோ ஒரு கேள்வி - பதில்.
கேள்வி: பகுத்தறிவு என்று சொன்னால் உங்களுக்கு ஏன் கசக்கிறது?
சோவின் பதில்: ஏன் நிறுத்தி விட்டீர்கள்? "பித்தலாட்டம் என்றால் உங்களுக்கு ஏன் கசக்கிறது? மோசடி, ஏமாற்று வேலை, போலி வேடம் என்றெல்லாம் சொன்னால் உங்களுக்கு ஏன் கசக்கிறது?"  என்று கேட்க வேண்டியதுதானே! இப்போதுதானே உங்கள் கேள்வி முழுமை அடையும். ('துக்ளக்' 4.3.2009).
பகுத்தறிவைப் பித்தலாட்டம் என்று சொல்லும்  ஆசாமி அவாளின் அகராதியில் அறிவு ஜீவிகளாம்!
அந்த அறிவு ஜீவிதம் என்பது - அக்ரகாரத்துப் பக்கம் வருவாய் நதி புரண்டு ஓடுவதற்காகத்தான்.
இல்லாவிட்டால் எச்சில் இலையை விலைக்கு விற்று பணத்தை எக்கில் சொருகிக் கொள்வார்களா?
ஆதாயமில்லாமல் அக்கிரகாரக் கூட்டம் ஆற்றைக் கட்டி இறைக்காது; அறிவை அழிக்கும் வேலையில் இறங்கினால்தானே அவர்களால் அறுவடை செய்ய முடியும்!
அதனால்தான் அறிஞர் அண்ணா சொன்னார் "முதலில்லா வியாபாரம், விதைக்காது விளையும் கழனி" என்று அழகாகப் படம் பிடித்துக் காட்டினார்.
இன்று "ஆஸ்திகம்" என்பது உயர் ஜாதியினரின் நலம். இன்று "நாஸ்திகம்" என்பது பெருவாரியான தமிழ் மக்களின் நலம்" என்று தவத்திரு குன்றக்குடி அடிகளார் கூறியதுதான் (19.2.1971) இந்த இடத்தில் நினைவிற்கு வருகிறது.
பக்தியைக் பகிஷ்கரிப்பீர்!
பகுத்தறிவைப் பயன்படுத்துவீர்!
ஏன் கொளுத்த வேண்டும் மனுதர்மத்தை?

மனுதர்மம் - அத்யாயம் 5 - சுலோகம் 148: பெண் சுயவிருப்பத்தில் வாழக்கூடாது. சிறுவயதில் தந்தை கட்டுப்பாட்டிலும், பருவ வயதில் கணவன் கட்டுப்பாட்டிலும், கணவன் இறந்தபின் பிள்ளைகள் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டும். எப்போதும் தன் விருப்பத்தில் அவள் வாழக்கூடாது.
மனுதர்மம் - அத்யாயம் 5 - சுலோகம் 154: கணவன் மோசமானவனாய், கொடியவனாய் இருந்தாலும், பிற பெண்களோடு உறவு கொண்டு அலைபவனாயினும், நன்னடத்தை, நற்குணம் இல்லாதவனாயினும், பத்தினிப் பெண் என்பவள் அக்கணவனையே தெய்வமாக வழிபட்டு வாழவேண்டும்!
மனுதர்மம் - அத்யாயம் 8 - சுலோகம் 379: கொலைத் தொழில் புரிந்த மற்ற ஜாதிக்காரர்களைத் தூக்கில் போட வேண்டும், பிராமணன் கொலைக்குற்றம் செய்வானேயானால், அவனது தலை மயிரை மொட்டையடித்தலே தண்டனையாகும்.
மனுதர்மம் - அத்யாயம் 9 - சுலோகம் 19: பெண்கள் பெரும்பாலும் விபசாரிகள் என்று அநேக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மனுதர்மம் - அத்யாயம் 9 - சுலோகம் 35: ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு இவற்றில் ஆணுறுப்பே உயர்ந்தது.
மனுதர்மம் - அத்யாயம் 9 - சுலோகம் 52: மற்றவன் மனைவியிடத்தில் மனைவியில்லாத வேறொருவன் உடலுறவு கொண்டு பிள்ளை பெறலாம்!
மனுதர்மம் - அத்யாயம் 9 - சுலோகம் 60: கணவனை இழந்த பெண்ணை ஒரு ஆண் தன் உடல் முழுக்க நெய்யைப் பூசிக்கொண்டு, இரவில், இருட்டில் உடலுறவு கொண்டு பிள்ளை பெறலாம்!
மனுதர்மம் - அத்யாயம் 9 - சுலோகம் 78: கணவன் சூதாடுகிறவனாய் இருந்தாலும், குடிகாரனாயிருந்தாலும், நோயாளியாக இருந்தாலும், மனைவி அவனுக்குப் பணிவிடை செய்ய வேண்டும். இல்லையென்றால் அவளுக்கு ஆடை, அலங்காரம், படுக்கை தராமல் விலக்கி வைக்க வேண்டும்.
மனுதர்மம் - அத்யாயம் 9 - சுலோகம் 94: முப்பது வயது ஆண், அழகான 12 வயது பெண்ணையும், இருபத்து நான்கு வயது ஆண் எட்டு வயதுள்ள பெண்ணையும் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.
பெண்களை அடிமைப்படுத்தும், இழிவுபடுத்தும் இந்தக் கேடுகெட்ட, ஒழுக்கங்கெட்ட, மோசமான மனுதர்மத்தைக் கொளுத்த வேண்டாமா? கொளுத்துவோம் வாரீர்! வாரீர்!

பிப்ரவரி 7ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் மனுதர்ம எரிப்புப் போராட்டம்....

தயாராகட்டும் பட்டியல்!
தயாராகட்டும் பட்டியல்!!
- விடுதலை நாளேடு, 4.1.19

புதன், 31 அக்டோபர், 2018

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட்டதில்லையா? கடைந்தெடுத்த பொய் -இதோ ஆதாரம்!


கலி. பூங்குன்றன்
ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு ஆகம விதிகள் உள்ளன. அதன்படி சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் குறிப்பிட்ட வயதுள்ள பெண்கள் போகக்கூடாது என்பது காலம் காலமாக இருந்து வரும் சம்பிரதாயம் என்று சத்தம் போடுகிறார்களே - அது உண்மைதானா?
உண்மையன்று என்பதற்கு இதோ ஆதாரங்கள்.
சபரிமலை அய்யப்பன் பிரம்மச்சரியம் கடைபிடிக்கும் ஒரு கடவுளாம். 10 முதல் 50 வயதிலான பெண்கள் மாதாந்திர விலக்கு ஆகும் காரணத்தால் அது புனிதமற்ற தன்மை என்றும் அதனால் கோவிலில் தீட்டு உண்டாகக் கூடும் என்றும், அய்யப்பனின் பிரம்மச்சரியத்திற்கு ஒவ்வாத  செயல் என்றும் கதைக்கிறார்கள்.
தமிழகத்தின் கிராமங்கள் தோறும் அய்யனார் காவல் தெய்வமாக  கொண்டு இருப்பதைப் போலவே ஆரியங்காவு பகுதியில் இருந்த அய்யப்பன் கோவிலும் முன்னொரு காலத்தில் எல்லைக் காவல் தெய்வமாகக் கொண்டு - சிறு தெய்வ வழிபாட்டில் முக்கிய பங்கு வகித்த தெய்வமாக இருந்தது. வழிபாடுகளில் இரண்டு கடவுள்களுக்கும் அதிக அளவில் ஒற்றுமைகள் இருக்கின்றன. பழங்குடிகளின் ஊர்க்காவல் தெய்வமாக இருந்த இக்கோவில் பிற்காலத்தில் உயர் ஜாதி மலையாள இந்துக்களாலும், பந்தளம் ராஜ குடும்பத்தாலும் பராமரிக்கப்பட்டு, இக்கோவிலின் நிர்வாகத்தினை அவர்களே ஏற்று நடத்தத் தொடங்கினார்கள்.
தமிழகம் மற்றும்  கேரளத்தில் இருக்கும் பல்வேறு அய்யப்பன் கோயில்களில் அய்யப்பன் திருமணமான கடவுளாகவே காட்சி அளிக்கிறார். உதாரணம்: அச்சன்கோவில். கோவை போன்ற கேரளத்தை ஒட்டிய தமிழகப் பகுதிகளில் இருக்கும் அய்யப்பன் கோவில்களில் பெண்கள் வழிபட முழு உரிமையும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சபரிமலையில் பெண்கள் நுழையக் கூடாது என 1972ஆம் ஆண்டு தான் தேவசம்போர்டு தடை விதித்தது. அதற்கு முன்பு வரை ஆண்களைப் போலவே பெண்களும் சென்று அய்யப்பனை வழிபட்டு வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1972இல் தடை விதிக்கப்பட்டாலும் பெரிதாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அப்போது பெண்கள் உள்ளிட்ட பலர் சென்றுவர சரிவர பாதையில்லாத காரணத்தால் தார்சாலை ஒன்றும் அமைக்கப்பட்டது, அந்தச்சாலையில்தான் அப்போதைய குடியரசுத்தலைவர் வி.வி.கிரி சென்றார். 1986ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்ப்படம் அந்த கோவில் சன்னிதானத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது.  (அதில் பெண்களும் உண்டு) இதற்காக 7,500 ரூபாய் கட்டணத்தையும் பெற்றிருக்கிறது தேவசம் போர்டு.
N.S. Madhavan
@NSMlive
• 29 Sep 2018
How old are ‘very old’ customs of Sabarimala? Entry of women to the shrine was banned by law only as late as 1972. Reason: some male worshippers took offence. Before that women used to go there for worship, more so, after roads were built for a Rashtrapathi
அதன் பின்னாளில் இருந்தே பெண்கள் இக்கோவிலுக்கு வருவதில்லை. ஆனால் ஆதிகாலத்தில் இருந்தே சோறுண்ணும் சடங்கிற்காக பெண்கள் இந்தக் கோவிலிற்கு வருவது வழக்கமான ஒன்றாகும்.
1939ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ராணியாக இருந்தவர் அய்யப்பன் கோவிலில் வழிபாடு நடத்தியிருக்கிறார் என்பதற்கான சான்றுகளும் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.  முன்னாள் பிரதமரின் செயலாளர் டி.கே.ஏ நாயரின் அனுபவம் என்ன கூறுகிறது?
1972ஆம் ஆண்டிற்கு முன்பு வரை குறிப்பிட்ட வயது பெண்களுக்கு கோவிலுக்குள் அனுமதி இல்லை என்ற ஒரு சட்டம் கிடையாது. இந்தியாவில் இருக்கும் மற்ற கோவில்களைப் போலவே இங்கும் பெண்கள் வந்து வழிபாடு செய்து வந்தனர். முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் முன்னாள் செயலாளராக பணியாற்றி வந்த டி.கே.ஏ நாயர் இது குறித்து கூறுகையில், எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் முதன்முறையாக சபரி மலை சென்ற போது நான் என் அன்னையின் மடியில் அமர்ந்திருந்தேன். அன்று எடுத்துக் கொண்ட நிழற்படம் இன்றும் எங்களிடம் இருக்கிறது என்று கூறியுள்ளார். அவர் காட்டிய அந்த நிழற்படத்தில் ஒரு இளம்பெண்  கருவறையில் இருக்கும் கடவுளை வேண்டிக் கொண்டிருப்பதாக இருந்தது.
Women started arriving, though in spare numbers, at the temple as vehicles became available up to Pampa. They often arrived for the choroonu, or first meal to a child, offering which started at the temple mast was erected and sanctified.

பெண்கள் கோவிலுக்கு தலைமை யேற்று வரிசை வரிசையாக வந்தார்கள். அப்போது ஜீப்புகளில் பெண்கள் வருவதுமுண்டு, பெண்கள் தங்களின் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வருவார்கள். நடைதிறப்பு நாள்களில் அய்யப்பனுக்குச் சோறூட்டும் நிகழ்ச்சியில் பெண்கள் தான் முதலில் கலந்துகொள்வார்கள்.
The Devaswom Board had issued orders in November 1972 forbidding the entry of females aged 10 to 50 as Lord Ayyappa is celibate. The High Court later tightened the rule after a couple of trespassing incidents by women
அதன் பிறகு 1972ஆம் ஆண்டு தேவசம் போர்டு திடீரென  10 முதல் 50 வரையிலான பெண்கள் வர தடைவிதித்துவிட்டது, அப்போது இந்தத் தடை பெரிய எதிர்ப்பாக கிளம்பவில்லை. காரணம் கோவிலுக்கு வருபவர்கள் பெரும்பாலும் சாதாரண வீட்டுப்பெண்கள், ஆகையால் அவர்களுக்கு ஊடகம் மற்றும் இதர பெரிய அமைப்புகளின் ஆதரவு கிடைக்காமல் போய்விட்டது.
கடைசியாக ஒரே ஒரு கேள்வி. உருவமற்ற கடவுளுக்கு ஆண்-பெண் வேறுபாடு உண்டா? கடவுள் பரம் பொருளா? ஆணா, பெண்ணா, அலியா?
- விடுதலை நாளேடு, 31.10.18

புதன், 24 அக்டோபர், 2018

சபரிமலை... எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள்

சபரிமலை... எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... கட்டாயம் முழுதும் படியுங்கள்.. தெளிவடையுங்கள்...

உண்மை 1:
நடிகைகள் ஜெயஸ்ரீ, சுதாசந்திரன் ஆகிய இருவரும் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் குருசாமி  நடிகர் நம்பியார் உடன் சேர்ந்து, பெரும் அய்யப்ப பக்தர் ஆன கே.சங்கர் அவர்கள் இயக்கத்தில் நம்பினோர் கெடுவதில்லை என்ற படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிக்காக 1986ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 முதல் 13 வரை சபரிமலை சென்று வருகின்றனர். உடன் நடிகை மனோரமா வேறு.

பாடல் காட்சி:

https://www.youtube.com/watch?v=PMG9TXdfDho

உண்மை 2:
இளவயசுப் பொண்ணுங்க பதினெட்டாம் படி ஏறக் கூடாது..ஆனால் பின் வாசல் வழியாக சன்னதிக்கு வந்து வழிபடலாம் என்று வசனம் இருக்கிறது. பதினெட்டாம் படி அருகே நின்று கொண்டு இந்த வசனத்தை ஜெயஶ்ரீயிடம் சொல்பவர் யார் தெரியுமா?

நம்ம குருசாமி எம்.என்.நம்பியார் தான்

உண்மை 3:

இந்த படப்பிடிப்பு நடைபெற சபரிமலை தேவசம் போர்டு ரூ.7500/- படப்பிடிப்பு கட்டணமாக பெற்று இருக்கிறது.

உண்மை 4:

இந்த நிகழ்வை எதிர்த்து தான் கேரளாவில் வழக்கு தொடரப்பட்டு அது கேரளா உயர்நீதிமன்றம் வரை சென்று பெண்கள் உள்நுழைய தடை என்று முடிகிறது.

உண்மை 5:

தேவசம் போர்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் 1991 வரை ஒவ்வொரு மாதமும் மலையாள பெண்கள் சோறுண்ணு என்ற பெயரில் தங்களின் குழந்தைகளுக்கு முதல் முறை சோறுட்டும் நிகழ்வை நடை திறந்து வைக்கப்படும் 5 நாட்களில் செய்து வந்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது.

பார்க்க...பக்கம் 94, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு

இது போக என் சோறுண்ணு நிகழ்வு சபரிமலையில் தான் நடந்தது என்ற TKA Nair என்பவரின் பேட்டி...

https://timesofindia.indiatimes.com/articleshow/66003421.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst&fbclid=IwAR02Qtqv6A1ldqWoPCOnvJgzyaV8umF0RuFkVkVrjb_w5AUVI_rogffPVt0

உண்மை 6:

இந்த வழக்கில் பெண்கள் சார்பாக வாதாடிய Ravi Prakash Gupta, தீர்ப்பு அளித்த தலைமை நீதிபதி Dipak Mishra அவருடன் சேர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி Ajay Manikrao Khanwilkar ஆகிய மூவருமே இந்துக்கள் தான்.

இந்த மூவர் மட்டும் அல்ல, பெண்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள்
1. Mr. Sushendra Kumar Chauhan,adv.
2. Ms. Suman Gupta,Adv.
3. Ms. Prerna Kumari,Adv.
4. Mr. P.K. Shastri,Adv.
5. Dr. Laxmi Shashtri,Adv.
6. Mr. Rajendra Kumar Shastri,Adv.

சபரிமலை தேவசம் போர்டு சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள்
7. Mr. K.K. Venugopal, Sr.Adv.
8. Mr. Krishnan Venugopal,Adv.
9. Mr. S. Udaya Kumar Sagar,Adv.
10. Ms. Bina Madhavan,Adv.

கேரள மாநில அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள்
11. Mr. Rajinder Sachar, Sr.adv.
12. Mr. R. Sathish,Adv.

இவர்கள் 12 மட்டுமல்லாது
13. Mr. C.A. Sundaram, Sr.Adv.
14. Mr. K.V. Mohan,Adv.
15. Mr. K.V. Balakrishnan,adv.
16. Mr. Harish V. Shankar,Adv.
17. Ms. Rohini,Adv.

மொத்தம் 17 இந்துக்கள் தான் இந்த வழக்கை இருதரப்பு சார்பாகவும் நடத்தியவர்கள். அனைவரும் இந்துக்கள் தான்.

உண்மை 7:

பின்னர் ஏன் சங்கி மங்கிகள் இதை முஸ்லிம்கள் தொடர்ந்த வழக்கு என்று திரிகிறார்கள்?

டெல்லி உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடர்ந்த  Indian Young Lawyers Association என்பதின் தலைவராக இருக்கும் Naushad Ahmed Khan ஒரு முஸ்லீம்.

Chennai  Bar Association, The Bar Council of India, The Bar Association of India என பல கூட்டமைப்புகள் இங்கே இருக்கின்றன. அதில் ஒன்று தான் Indian Young Lawyers Association. அதில் யாருடைய கெட்ட நேரமோ இந்த தீர்ப்பு வரும் வேளையில் ஒரு முஸ்லீம் தலைவராக இருக்கிறார். அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சங்கி மங்கிகள் கல் எறிகிறார்கள்.

உண்மை 8:

இது என்ன Indian Young Lawyers Association மட்டும் போட்ட வழக்கா?

இல்லை.
Bhakti Pasrija Sethi,General Secretary of the Indian Young Lawyers Association,
Laxmi Shastri,
Prerna Kumari
Alka Sharma,
Sudha Pal

என வரிசைப்படுத்தப்படும் Petitioners அனைவருமே இந்துக்கள் தான்.

அதிலும் குறிப்பாக இந்த Prerna Kumari RSS இயக்கத்தின் மகளிர் கிளையான Rashtra Sevika Samiti உறுப்பினர்.

https://barandbench.com/sabarimala-case-petitioners-bhakti-pasrija-prerna-kumari/

உண்மை 9:

இந்த வழக்கு மொத்தம் 5 நீதிபதிகள் கொண்ட குழுவின் விசாரணைக்கு உட்பட்டது. தீர்ப்பில் பெண்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த Dipak Mishra, R.Nariman, DY.Chandrachud & AM.Khanwilkar நால்வரும் முஸ்லிம்கள் அல்ல.

பெண்கள் நுழையக்கூடாது என்று தீர்ப்பளித்த பெண் நீதிபதி Indu Malhotra முஸ்லீம் அல்ல.

4:1 என்ற அடிப்படையில் சபரிமலையில் பெண்கள் நுழைவது அனுமதிக்கப்பட்டது.

உண்மை 10:

இந்த தீர்ப்பை சங்கி மங்கிகள் ஆரம்பத்திலிருந்தே எதிர்த்தார்களா?

இல்லை.

வரவேற்கவே செய்தார்கள்.

Maneka Gandhi
https://www.telegraphindia.com/india/maneka-welcomes-bjp-falls-silent/cid/1670507

RSS
https://www.news18.com/news/india/rss-backs-womens-entry-in-temples-says-such-unfair-traditions-should-be-discarded-1215530.html
https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/rss-leaders-moved-sc-in-2006-seeking-entry-of-all-women-into-sabarimala/articleshow/66165404.cms
https://www.thequint.com/news/india/sabarimala-temple-verdict-supreme-court-judgment-political-reactions

உண்மை 11:

எங்கே குறுக்கே விழுந்து குழப்ப ஆரம்பித்தார்கள்?
https://www.news18.com/news/opinion/sanghs-u-turn-on-sabarimala-may-help-bjp-gatecrash-lefts-2019-party-in-kerala-1911445.html

உண்மை 12:

வேற்று மதத்தவர் சபரிமலையில் நுழையக்கூடாதா?

தாராளமாக நுழையலாம். சபரிமலை இந்து ஆகமத்துக்கு உட்பட்ட ஒரு கோயில் அல்ல. ஐயப்பனும் வேத, புராண கடவுள் அல்ல. நம்ம ஊர் கருப்புசாமி, ஐய்யனாரு, சுடலைமாடன் போன்ற ஒரு லோக்கல் கடவுள் தான்.

மேலும் இந்த வழக்கின் தீர்ப்பில் பெண்களை கோயிலுக்கு வரக்கூடாது என்ற எந்த ஆகம விதியும் இல்லை என சீராய்ந்த பிறகு தான் தீர்ப்பே பெண்களுக்கு ஆதரவாக வழங்கப்பட்டது.

அறிவராசனம் பாடிய ஜேசுதாஸ் கிறிஸ்துவர் தான். சபரிமலை போவோர் அனைவரும் அங்கிருக்கும் வாவர் சந்நிதி என்ற ஒரு இஸ்லாமிய சந்நிதியில் உணவு உட்கொள்வது காலம் காலமாக நடக்கிறது.

அதனால் கோவிலுக்கு போக வேண்டும் என்று Rehana Fathima மட்டும் அல்ல எந்த மதத்தை சேர்ந்த ஆணும் பெண்ணும் விரும்பினாலும் தாராளமாக போகலாம். கோவிலுக்கு உரிய மரியாதையை சீர்குலைக்காமல் தாராளமாக ஐயப்பனை தரிசிக்கலாம்.

அப்படி இல்லை என்றால் அவரை ஒரு கிரிமினலாக மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர, அவரை மதத்தை அடையாளமாக கொண்டு கலவரத்தை தூண்டக்கூடாது.

உண்மை 13:

தற்போதைய நிலையில் Rehana Fathima ஒரு முஸ்லீம் அல்ல. 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய ரெஹானா, ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் Manoj K Sreedhar என்ற ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறார். மதம் மாறிய பின் பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை என சொல்லியும் இருக்கிறார்.

கேரளாவை உலுக்கிய ஹாதியா ஏன் முஸ்லிம் பையனை திருமணம் செய்தார் என இவர் அழுதும் இருக்கிறார்.

இது போக சுப்ரீம் கோர்ட்டின் சபரிமலை தீர்ப்புக்கு பிறகு, ரெஹானா பாத்திமாவும், கேரள பாஜக தலைவர் கே. சுரேந்திரனும் மங்களாபுரத்தில் பலமுறை சந்தித்து பேசிய விபரத்தை கேரள பத்திரிக்கைகள் அம்பலப்படுத்தியுள்ளது.

https://malayalam.oneindia.com/social-media/sabaraimala-issue-rehana-fathima-and-k-surendran-met-so-many-times-resmi-nair-raise-alleagation/articlecontent-pf272423-212014.html?fbclid=IwAR3TRgZlsirH5XGK73WHeqs5lCc5n_EN2dwHXUs3rTckMk1GTMCHiEzxG_4

எல்லா மதத்திலும் கிரிமினல்கள் உண்டு.
எல்லா இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் கிரிமினல்கள் அல்ல.
எல்லா இந்துக்களும் சத்தியவான் சாவித்திரி அல்ல.

உண்மை 14:

இந்த உண்மைகளை நான் ஒன்றும் CBI, FBI, Mozzat போன்ற நிறுவனங்களின் துணையோடு கண்டுபிடிக்கவில்லை. A Simple Google Search throws all the details you want.

இதையெல்லாம் செய்ய தெரியாதவர்கள் யாரும் இங்கில்லை.

ஒன்று செய்ய வேண்டிய அவசியம் இல்லாதவர்கள்
இரண்டு செய்ய விருப்பமில்லாதவர்கள்

செய்ய வேண்டிய அவசியம் இல்லாதவர்களை பற்றி கவலையே இல்லை. அவர்கள் எதற்கும் யார் சார்பாகவும் நிலையெடுக்கவே போவதில்லை.

செய்ய விருப்பமில்லாதவர்கள் தான் சிக்கலே. அவர்கள் செய்யாமல் இருப்பது கூட தவறில்லை. ஆனால் தங்களுக்கு வசதியான பொய்களை மட்டும் உண்மை போல திரித்து தவறான தகவல்களை பரப்பிக்கொண்டிருப்பதால் மட்டுமே இவ்வளவு தேடல்களை செய்யவேண்டியதாகி உள்ளது.

உண்மை 15:

It's an election year.

RSS & BJP don't have any single accomplishment in their favour to seek votes from a common man.

More & more hatred against non-hindus will be lined up to polarise the hindus politically.

Facebook, Twitter, Whats App will be flooded with false and fake news, memes and posts.

By A Ag Sivakumar
- கட்செவி மூலம் வந்தது