திருப்பதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருப்பதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 26 ஜூலை, 2019

பெண்களிடம் கல்லடிபட்ட ஏழுமலையான்

திருப்பதி - திருமலை கோவில் புராணம் என்ன கூறுகிறது?

சோழ அரசன் மகன் ஆகாசராசன் மனைவி தரணி தேவி. இவர்களுக்குப் பிள்ளையில்லாததால், ஆகாச ராசன் யாகம் செய்ய எண்ணி, யாக சாலைக்கான இடத்தை உழுதான். அந்தக் கலப்பை உழவுச் சாலில் ஒரு பொன் தாமரையும், அதில் ஒரு பெண் குழந்தையும் காணப்பட்டன. அரசன் அந்தக் குழந்தையை தன் மனைவியிடம் கொடுத்து வளர்த்து வரச் செய்தான். அதற்குப் பத்மாவதி என்று பெயரிட்டான். வளர்ந்து கன்னிப் பருவமடைந்த பத்மாவதி ஒரு நாள் மலர் கொய்ய மலர் வனம் சென்றாள்.

ஏழுமலையானான நாராயண மூர்த்தி மலை யில் வேட்டையாடி விட்டு, அடிவாரத்துக்கு இறங்கியபோது, பூம் பொழிலில் பத்மாவதியைக் கண்டு, ஆசைப்பட்டு அவளை அணுகினார்.

(ஆக, ஆசாபாசம் கொண்டவர்தான் ஆண்ட வன்!)

ஓ பெண்ணே! நான் உன் பேரில் விருப்பம் கொண்டு இவ்விடம் வந்தேன். என்மீது தயையுள்ளவளாய் என்னை ஆலிங்கனம் செய்துகொள்'' என்று அவளிடம் கூறினார்.

(ஆகா, என்ன பண்பாடு!')

அந்த மங்கை, ஓய்! நீ உலகத்தில் சொல்லாத வசனங்களைச் சொல்கிறாய். என் அப்பா ஆகாச ராஜன் இதைக் கேட்டால் உன் உசி ரைப் போக்கிவிடுவார்'' என்று சீற்றத்துடன் சொன் னாள்.

அவளுடைய பேச் சைக் காதில் போட் டுக் கொள்ளாமல், நாராயணமூர்த்தி (ஏழு மலையான்) அந்தப் பத்மாவதியை அணுகினார்.

அவள், ஆத்திரமடைந்து, அவளும், தோழியர்களும் அவரைக் கற்களால் அடித்தனர். அவர் அந்தக் கல்லடிகளைப் பொறுக்கமாட்டாமல் திரும்பி வேங்கடாத்திரிக்கு (திருமலை)ச் சென்றார்.'' (இது திருமலைக் கோவில் புராணக் கதை).

கடவுள் என்றால் விரும் பாத பெண்ணை நேசிக்கவேண்டுமா? கோபம் கொண்டு அந்தப் பெண் கல்லால் அடித்தும் வெட்கப்படாதது வெட்கம் கெட்ட செயல் அல்லவா!

மாபெரும் சக்தி கொண் டவன் ஏழுகொண்டல வாடு' என்கிறார்கள்.

ஒரு பெண்ணிடம் அவர் ஜம்பம் பலிக்கவில்லையே!

- மயிலாடன்

 - விடுதலை நாளேடு, 21.7.19

திங்கள், 19 நவம்பர், 2018

குருமூர்த்தி - சங்பரிவார்களுக்குச் சவால்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலைப்


புத்தர் விகாரமாக மாற்றத் தயாரா?




அயோத்தியில் ராமன் கோயில் எழுப்புவதன் அவசியம் குறித்து திருவாளர் குருமூர்த்தி அய்யர் 'துக்ளக்'கில் (21.11.2018 பக்கம் 33,34) எழுதித் தள்ளியுள்ளார். சோம்நாத் கோயில் பிரச்சினையில் சமரசம் நடந்தது போல அயோத்தியிலும் மசூதியை வேறு இடத்தில் கட்டிக் கொள்ளலாம் என்று பூணூல் நியாயம் பேசுகிறது.

ராமன் இருக்கும் இடம் அயோத்தி என்கிறார்களே, அந்த ராமன் கோயிலை வேறு இடத்தில் கட்டினால் என்ன? அங்கும் ராமன் இருக்கத்தானே செய்வான்?

ராமன் கோயிலை இடித்துத்தான் அதன்மீது பாபர் மசூதி கட்டினார் என்று விவாதத்துக்காக ஒப்புக் கொள்வதாகவே வைத்துக் கொள்வோம்.

வரலாற்றைப் பின்னோக்கி நகர்த்தினால் எத்தனைப் பவுத்த பள்ளிகள், சமணப் பள்ளிகள் இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டன என்பதற்கு வரலாறு நெடுக ஆதாரங்கள் உண்டே!

வெகு தூரம் போவானேன்? திருப்பதி ஏழுமலையானே புத்தரின் நின்ற கோலம் என்று ஆய்வு செய்து மும்பையில் ஆய்வு நூல் வெளி வந்துள்ளதே!

“Tirupati Balaji was a Buddhist Shrine” என்ற ஒரு நூல் வெளிவந்துள்ளது. மராட்டியத்தைச் சேர்ந்த டாக்டர் கே. ஜமனாதாஸ் F.R.C.S. என்பவர் எழுதியுள்ளார். இந்நூலைப் பற்றிய குறிப்புரை இதோ: Lord Venkateswara, the presiding deity on the famous Tirumali Hills, popularly known as Balaji of Tirupati, is an important Vaishnava Shrine of South India. The Nature of Lord Venkateswara has always been a matter of dispute for centuries. Some consider Him as Vishnu some as Siva, Some as Sakti, some as Skanda and some as Harihara. In fact it was an old Buddhist shrine, murthi itself being Buddhist; and it was taken over for Brahmanic worship during the general fall of Buddhism. He was a god of tribal Buddhist and was,Vaishnavized by saints and latter sanskritized and brahmanized by pundits to his present form. The weapons on Him are not original but provided at a latter date. How this was brought about, is explained with all historical and archaeological evidences. Cults of Vitthala of pandarpur, Jagannatha of Prui, Ayappa on Sabarimala etc., which were originally Buddhist are discussed and many other Buddhist shrines which were hinduized are described and the history of India in general and South India in particular, from seventh to tenth century, during the period of fall of Buddhism and rise of Brahmanic Tirupati, is traced.”

"வெங்கடாசலபதி கடவுள் இருக்கும் திருப்பதி கோயில் என்பது தென்னகத்தில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவக் கோயிலாகும். வெங்கடாசலபதியின் வடிவம் பல நூற்றாண்டுக் காலமாகப் பிரச்சினைக்-குரியதாகவே இருந்து வந்திருக்கின்றது. சிலர் அந்தக் கடவுளை விஷ்ணு என்றும், வேறு சிலர் சிவா என்றும், சக்தி என்றும், ஸ்கந்தா என்றும், ஹரிஹரன் என்றும் பலவாறாகக் கருதுகிறார்கள். உண்மையிலேயே திருப்பதி கோயில் என்பது துவக்கத்தில் புத்தர் கோயிலாகவே இருந்தது; உள்ளே இருக்கும் மூர்த்தி சிலை என்பது புத்தபிரானே ஆவார்.

புத்த மார்க்கம் இந்தியாவில் வீழ்ச்சி அடைந்த போது, அது பார்ப்பனீயத்தால் தங்களுடைய வழிபாட்டுக்குரிய இடமாக மாற்றப்பட்டது.

புத்தர் கோயில் வைஷ்ணவ கோயிலாக இப் போதுள்ள தன்மையில் பார்ப்பன மயமாக்கப்பட்டது - அப்பொழுது இருந்த பார்ப்பனப் பண்டிதர்களால்!

தொல்பொருள் ஆய்வு, வரலாற்று ஆய்வு அடிப்படையிலே இந்தக் கருத்தை இந்நூலில் நூலாசிரியர் நிறுவியுள்ளார். பந்தர் பூர், பூரி செகந்நாதம், சபரிமலை அய்யப்பன் இவை யெல்லாமே ஒரு காலத்தில் புத்த விகார்களாக இருந்து பிற்காலத்தில் இந்துக் கோயில்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

7ஆம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரை புத்த மார்க்கம் வீழ்ச்சி அடைந்த கால கட்டத்தில் இந்தியத் துணைக் கண்டத்திலும், சிறப்பாக தென்னிந்தியாவிலும், புத்த விகாரங்கள் எல்லாம் இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டுள்ளது பற்றி இந்நூல் விவரிக்கிறது."

இதற்கு என்ன பதில்? பாபர் மசூதிக்கு  முன் ராமன் கோயில் இருந்தது; அதனால் அங்கு ராமன் கோயில் கட்டப்பட வேண்டும் என்றால் திருப்பதி ஏழுமலையான் கோயில் புத்த விகாரமாக இருந்ததே - அதன்படி ஏழுமலையான் கோயில் புத்த விகாரமாக மாற்றப்படுமா? தயார் தானா? குருமூர்த்தி - சங்பரிவார் - பிஜேபி  கம்பெனி பதில் கூறுமா?  பார்ப்போம்!

- விடுதலை நாளேடு, 17.11.18

சனி, 15 செப்டம்பர், 2018

ஆங்கிலேயர் காலத்து வழக்கில் சிக்கிய திருப்பதி கோயில்*

🔴 *மதநம்பிக்கை ஸ்s சட்டம் ஆங்கிலேயர் காலத்து வழக்கில் சிக்கிய திருப்பதி கோயில்*

(“கோயில், குளம், புண்ணியம், பாவம், சடங்கு முதலிய காரியங் களின் மூலம் கொள்ளை அடிக்கப் பட்டு விடுகின்றன” - ‘குடி அரசு’ தலையங்கம் 13.9.1931)

நீதிமன்றங்கள் சந்திக்கக்கூடிய சவால் களில் முக்கியத்துவம் பெறக்கூடியதாக மதநம்பிக்கைக்கும், பழக்கத்திற்கும் எதிராக வரக்கூடிய அரசியல் சட்ட விதிமுறைகள் அமைந்திருப்பதை எடுத்துக் கூறப்பட்டு வருவதைக் காண்கிறோம்.

நிலுவை வழக்குகள்

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் அனுமதிக்கப் படாது என்று கூறும் வழக்கும், இசுலாம் மதத் தில், கணவன், மனைவியைத்தான் விரும்பும் வகையில் ‘தலாக்’ கூறுவதன் மூலம் மண விலக்கு பெறுவது பற்றிய வழக்கும், ஓரினச் சேர்க்கைப் பற்றிய வழக்கில் கூட 'நீதிமன்றம் இந்துமத சட்டத்தின்படி வழக்கை அணுக வேண்டும் என்ற வாதமும் இதற்கு எடுத்துக் காட்டுகளாக உள்ளன.

இத்தகைய மதச்சார்புடைய வழக்குகளுக் குத் தடையாக, தொல்லையாக இருப்பது இந்திய அரசியல் சட்டமே. எந்த மதச்சடங்கு முறைகளும், மதவிழாக்களும் அரசியல் சட்ட தாக்கத்தால், பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக செயல்பட்டு வருகின்றன. மத நம்பிக்கைக்கும் சட்ட விதிகளுக்குமிடையே நிகழும் மோதல்கள் அண்மைக்கால நிகழ்வன்று. இதற்கான காரணம் அரசியல் சட்டமே என்று அதன் மீது பழிசுமத்துவது சரியாகாது. மாறாக மனித இனபரிணாம வளர்ச்சியில் இது தவிர்க்க முடியாத ஒன்று.

பல நூற்றாண்டுகளாக மதநம்பிக்கையும் அதன் வழிவந்த கோட்பாடுகளுமே சட்டங் களாக சமூகத்தை ஆட்கொண்டிருந்தது. ஆனால் அரசியல் சட்ட வழிமுறைப்படி நடைபெறும் மக்களாட்சி முறையில், புதிய சட்ட அமைப்புக்கும், பழைய அமைப்பு முறைக்கும் மோதல் ஏற்படுவது இயற் கையே. இதன் வெளிப்பாடே இன்று நீதி மன்றங்களில் நடைபெறும் வழக்குகள். ஆனால் அரசியல் சட்டமுறை நடை முறைக்கு வருமுன்பே, சட்டத்தின் வலி மையே, மதநம்பிக்கையை விட உயர் நிலையைப் பெற்றது என்று வலியுறுத்தி வந்தவர்களுமுண்டு. இதற்கு எடுத்துக் காட்டாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த திருப்பதி மகந்த் வழக்கைக் கூறலாம்.

பாலாஜியின் சொத்து

அந்த வழக்கில் விபரம் கீழே கூறப் படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலம்வரை கிழக்கிந்திய கம்பெனி, வெங்கடேஸ்வரா அல்லது சீனிவாசன் என்னும் கடவுளின் சொத்துக்களை மேற் பார்வை செய்தும் நிர்வகித்தும் வந்தது. 1817இல் இயற்றப்பட்ட சென்னை கட்டுப் பாடு சட்டம் செயலுக்கு வந்த பிறகு, கோயி லானது வருவாய்த்துறை குழுமத்தின் மேற் பார்வையில் வந்தது. இந்த மேற்பார்வை மாவட்ட ஆட்சியர் மூலம் நடைபெற்றது.

இதற்கிடையில் 1840 அளவில் இங்கிலாந் தில், இந்துக்கள், முசுலீம்களின் மத நிறு வனங்களை கிருத்துவ கிழக்கிந்திய கம் பெனி நிர்வகிப்பதை எதிர்த்து ஓர் இயக்கம் தோன்றியது. அதன் விளைவாக திருப்பதி கோயில் சீரமைப்பு, நிர்வாகம், கோயில் ஆதினத்தின் மகந்த் என்பவரிடம் ஒப் படைக்கப்பட்டது. மகந்த்தின் தலைமை அலுவலகம் திருப்பதியில் இருந்தது. திருப் பதி மகந்த் என்றே இவர் அழைக்கப் பட்டார்.

கொடிமரத்துக்கு வசூல்

திருப்பதி கோயிலுக்கு கொடிமரம் அமைக்கப்பட்டபோது பக்தர்கள், தங்க காசுகள் வாங்க நிறைய பணம் கொடுத்தார் கள். இந்த தங்கக்காசுகள் ஒரு கலசத்தில் வைக்கப்பட்டு, கொடிமரத்தின் அடியில் வைக்கப்படுவது வழக்கம். அதன்படி கல சம் புதைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கோயில் மகந்த்துக்கு எதிராக, நம்பிக்கை மோசடி, பணம் கையாடல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தங்கக் காசுகளுக்குப் பதிலாக செப்புக்காசுகள் புதைக்கப்பட்ட தாகக் குற்றம் கூறப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்க கொடி மரத்தை அடியிலிருந்து தோண்டி எடுக்க வேண்டும். இதற்கு மத நம்பிக்கை தடை யாக இருந்தது. சம்பிரதாயப்படி நடப்பட்ட கொடிமரத்தைத் தோண்டி எடுப்பது புனிதத் தன்மைக்கு எதிரானது என்பது மகந்த்தின் வாதமாக இருந்தது. அப்படி தோண்டி எடுப்பது வழிபடும் பக்தர்களின் உணர்வில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது.

தலைமை பூசாரியின் மனு

வியப்பை ஏற்படுத்தும் வகையில் கோயில் தலைமைப் பூசாரி பக்தர்களின் உணர்வுக்கு எதிராக கலசத்தைத் தோண்டி எடுக்க மனு கொடுத்து முயற்சி மேற் கொண்டார். மேஜிஸ்ட்ரேட் மனுவை ஏற்று கலசத்தை எடுக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஆய்வு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கானது வரலாற் றில் பரபரப்பூட்டும் வழக்காக அமைந்தது.

சட்ட அறிவு மேதைகள் மோதல்

இரண்டு சட்ட அறிவு மேதைகளான சுப் பிரமணிய அய்யர், ஏரல்டி கார்டன் ஆகி யோரிடையே, சட்டப்போர் நிகழ்ந்தது. சுப்பிரமணிய அய்யர் (பிறகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியானவர்) கோயில் தலைமைப் பூசாரிக்காக வாதிட்டார். எதிர் கொள்ள முடியாத சட்ட நிபுணர் நார்டன் மகந்த்துக்காக வாதாடினார். இந்த வழக்குத் தலைமை நீதிபதி ஆர்தர்கோரின்ஸ் மற்றும் நீதிபதி முத்துசாமி அய்யர் ஆகிய அமர்வு நீதிபதிகள் முன்வந்தது.

இந்த வழக்கை அருகில் இருந்து கவ னித்து வந்த மற்றுமொரு சட்ட நிபுணரும் அட்வகேட் - ஜெனரலுமாகிய எஸ்.சிவ சாமி அய்யர், தன்னுடைய கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய குறிப்பில், "நார்டன், கொடிமரத்தின் மதப் புனிதத் தன்மையைத் தன் வாதத்திற்குத் துணையாகக் குறிப்பிட்டார்.

நீதிமன்றம், புனிதத் தன்மையைக் கெடுக்க வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்தார். அப்படி செய்தால், ஆன்மிக உலகம் முழுவதும் எதிரொலிக்கும் என் றார். கொடிமரத்தைத் தோண்டுவதற்கான கழுத்துக்கு எதிரான பல வாதங்களை வைத்தார். மூன்று மணிநேரம் வாதிட்டார். அடுத்து சுப்பிரமணிய அய்யர் வாதிட்டார். அவர் ஒரு மணி நேரத்துக்குக் குறைவாக வாதத்தை வைத்தாலும் அது ஒரு மின்சாரப் பார்சலாக இருந்தது. நார்ட்டனுடைய வாதங்களை அரை மணிக்கு குறைந்த வாதத்தின் மூலம் நசுக்கிப் போட்டார். தன்னுடைய சொற்பொழிவு ஆற்றலினால், பிரமிக்கத் தக்க உரையை "வானமே இடிந்து விழுந்தாலும், நீதி நிலைநாட்டப்பட வேண்டும்" (திவீணீt யிustவீtவீணீ க்ஷீuணீt நீணீமீறீuனீ) என்ற சிறப்பான சொற்களுடன் வாதத்தை முடித்தார். அவர் ஆற்றிய உரைகளுள் இதுவே நான் கேட்ட சிறந்த உரையாகும். அவரைப் போன்றே கச்சிதமாகவும், சுருக்க மாகவும் வீரிய உரையாகவும் இருந்தது.

தங்ககாசுகள் - கோவிந்தா! கோவிந்தா!

நீதிபதி முத்துசாமி அய்யர், மாஜிட்ரேட் வழங்கியத் தீர்ப்பை உறுதிபடுத்தி தீர்வு வழங்கினார். உண்மை வெளிப்பட்டது. கலசத்தில் தங்கக்காசுகள் இல்லை. செப்புக்காசுகளே இருந்தன.

எனவே, நம் அரசியல் சட்டம் வரும் முன்னதாகவே, மதநம்பிக்கைக்கும் சட்டத் திற்குமான மோதல் வழக்குகள் நிறைந்தி ருந்த வரலாறு உண்டு என்பது தெளிவாகிறது.

(சென்னை மூத்த வழக்குரைஞர் என்.எல்.இராஜா அவர்களின் கட்டுரையின் கருத்துப்பிழிவு மொழியாக்கம், மு.வி.சோம சுந்தரம்)

நன்றி: ‘தி இந்து', 13.8.2018

http://www.viduthalai.in/component/content/article/71-headline/168076--s-------.html