வெள்ளி, 28 மே, 2021

விலக்கப்பட்ட கனியைப் படைத்தது ஏன்? -2

செவ்வாய், 25 மே, 2021

காஞ்சி மகாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

இன்றைய ஆன்மிகம்?

 அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்தானே...

உடல்நலம் பெற...

காஞ்சி மகாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்ம நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா!

பிரம்மாவைத் தோற்றுவித்தவரே!

நீயே நோய்களைப் போக்கி

நலம் தரவேண்டும்.

‘தினமலர்' ஆன்மிக மலர், 21.5.2021

அப்படியா! காஞ்சி மட சீட கோடிகள் மருத்துவர்களை நாடாமல், குருவாயூரப்பனை சேவிக்க வேண்டியதுதானே?

காமகோடியே சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்தானே!

செவ்வாய், 18 மே, 2021

தீபாவளி பற்றி தமிழறிஞர்கள் ....தீபாவளி தமிழர்க்கு உரியதன்று!


கொடுங்கலூரில் பரணித் திருவிழா தகவல்

விலக்கப்பட்ட கனியைப் படைத்தது ஏன்?

திங்கள், 17 மே, 2021

கிறிஸ்துவும் கிருஷ்ணனும் கற்பனையே

RM119
13/75
'கிறிஸ்துவும் கிருஷ்ணனும் கற்பனையே'

ஆசிரியர் 
மலையாளம் ஜோசப் இடமருகு
தமிழில் அரு.நாராயணசாமி
வெளியீடு அலைகள் 
விலை ரூ55
பக்கம் 72.

*இந்நூல் கிருஷ்ணன்- கிருஸ்து இருவரும் எப்படி இந்தியாவில் ஒரே மாதிரியாக பார்க்கப்பட்டனர். இருவரும் எங்கிருந்து உருவாகினர். எதற்காக உருவாக்கப்பட்டனர். ஏசுவின் வரலாறு என்ன என பல கோணங்களில் ஆய்வு செய்து எழுதப்பட்ட  சாரம் தான் இந்நூல்.   

*ஆசிரியரைப்பற்றி

ஆசிரியர் ஜோசப் இடமருகு அவர்கள் கேரளத்தில் கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தவர். ஆரம்பத்தில் கிறிஸ்துவ வழிபாட்டில் நம்பிக்கை கொண்டு வழிபாடு நடத்தி வந்தார். அதன் விளைவாக அம்மத நூல்களை எல்லாம் ஆர்வமுடன் வாசித்தார். பின்னாளில் விமர்சன கண்ணோட்டத்தோடு பைபிளை படிக்கத் தொடங்கிய பின் அதிலுள்ள குறைகளை கண்டு 'கிறிஸ்து ஒரு மனிதன்' என்ற நூலை எழுதி மதகுருமார்களால் திருச்சபையிலிருந்து விலக்கி  வைக்கப்பட்டார். 

இருப்பினும் ஏசு வாழ்ந்ததாகக் கருதும் ஜெருசலேம் போன்ற இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்து 'கிறிஸ்துவும் கிருஷ்ணனும் கற்பனையே'
என்னும் இந்நூலை எழுதினார்.  

ஆசிரியர் உலக சிந்தனையாளர், இந்திய நாத்திக மையத்தின் இயக்குநர், இந்திய பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் என பல சிறப்புகளை பெற்றவர்.

*நூலின் உப தலைப்புகள் 

*இந்தியாவில் கிருஸ்துவ மதம்
*ஏசுவின் கதை
*கிருஸ்துவும் ஒரு மனிதன் 
*புத்தரும் கிருஸ்துவும்
*புத்த மதம் தோன்றிய வரலாறு 
*ஏசு சரித்திரப் புருஷன் அல்ல
டூரின் பிணப்போர்வை
*கிருஸ்துவ மதத்தின் தோற்றம் 
என்னும் தலைப்புகளில் ஆய்வு செய்து இந்நூலை எழுதியிருக்கிறார்.

*நூலின் உள்ளே

கிருஸ்துவ மதம் பரப்பப்பட்ட எல்லா நாடுகளிலும் முன்பு அங்கே நிலவிய பழமையான மதங்கள் அழிந்து போயின.
கிரேக்கம், ரோமன், எகிப்திய மதங்கள் சான்று. 

அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியாவில் வளர்ந்த கிருஸ்துவம் 1500 ஆண்டுகளாக இந்தியாவில் பிரச்சாரம் செய்தும் 2.6 சதவீத மக்களை மட்டுமே கிருஸ்துவர்களாக மாற்ற முடிந்தது. காரணம் இந்திய மக்களின் இந்து மத உணர்வுகளையே தான் கிருஸ்துவர்களும் வெளியிட்டனர். 

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களால் வணங்கப்படுகிற  கிருஷ்ணனும், கிருஸ்துவும் ஏறக்குறைய ஒரே கதாபாத்திரமாக அமைந்தது தான் பிரதான காரணம். 
மேலும் இந்துவில்  சாதியில் உயர்வு தாழ்வு பார்ப்பது கிருஸ்துவத்திலும் பார்க்கப்பட்டதால் அதில் பிடிப்பு ஏற்படாமல் போனது மிக முக்கிய காரணம்.

*கிருஸ்துவும், கிருஷ்ணனும்
ஒற்றுமைகள்

*கிருஷ்ணன் யது வம்சம்
ஏசு யூத வம்சம்

*இருவர் பிறப்பிற்கும் அசரீரி தோன்றியது 

இருவரும் அரச வம்சம்

இருவரின் தாயாரும் தந்தை இல்லாமல் கர்ப்பம் தரித்தல்

இருவர் பிறக்கும் முன்பும் வானத்தில் நட்சத்திரம் தோன்றுதல்

இருவர் பிறந்த போதும் தேவர்கள், தேவ தூதர்கள் மகிழ்ச்சியில் ஆடினர்

குழந்தை கிருஷ்ணனை மாட்டு இடையர்களும்,
ஏசுவை ஆட்டு இடையர்களும் கண்டு தரிசித்தனர்

கிழக்கில் வந்த அறிஞர்கள் குழந்தை ஏசுவை வணங்கினர் 
நாரதர் குழந்தை கிருஷ்ணனை வணங்கினார்.

அரசன் கம்சன் கிருஷ்ணன் பிறப்பையும், 
அரசன் ஏரோது ஏசு பிறப்பையும் கண்டு பயந்தனர்.

இருவரையும் பாதுகாக்க வேறிடத்தில் வளர்க்கப்பட்டனர்
ஏசு எகிப்து மடூரியா(Muturea),
கிருஷ்ணன் ஸ்தலம் மதுரா

இரு குழந்தைகளும் கொல்லப்பட வேண்டும் என்பதால் அவ்வயது ஒத்த குழந்தைகளை கொல்ல இரு அரசர்களும் கட்டளையிடல்

கிருஷ்ணன் தாய் தேவகிக்கு மாயாதேவி என்றும் பெயர் உண்டு.
ஏசுவின் தாயார் மேரி. மாயாமேரி என்பதாகும்.

இருவரும் நல்லொழுக்கம் உடையவர்களாக போற்றப்படுதல்

இரு தாயாருக்கும் தோழியர் உண்டு 

கிருஷ்ணன் முன்னோடி பலராமன்
ஏசுவின் முன்னோடி ஸ்நாபகன் தோன்றல்

கிருஷ்ணன், ஏசு இருவரும் முறையே அறிஞர், மதகுருமார்களை வாக்குவாதத்தில் தோற்கடித்தல்

ஏசு பாலைவனத்தில் உண்ணாவிரதம் 
கிருஷ்ணன் காட்டில் தவம் புரிதல்

மும்மூர்த்தி தத்துவத்தில் இருவரும் இரண்டாவது அவதாரம்

இருவரும் மனித இனத்தை பாதுகாக்கவே தோன்றினர்.

ஏசு சாத்தான் என்ற பாம்பின் தலையையும், 
கிருஷ்ணன் நாகவடிவ காளிங்கனையும் அழித்தல்.

இருவரும் பாவமில்லாதவர்களாக கணிக்கப்பட்டனர்.

இருவரும் முழுநிறை தெய்வம் முழுநிறை மனிதராக பார்க்கப்பட்டனர்.

கிருஷ்ணன்,ஏசு இருவரும்  குஷ்டரோகியை குணப்படுத்தல்.

இருவரும் இறந்தவரை உயிர்பெறச் செய்தல்.

மரத்தில் இருந்த கிருஷ்ணனை வேடன் அம்பு எய்து கொன்றான்.
மரச்சிலுவையில் கிடந்த ஏசுவை படைவீரன் ஈட்டியால் குத்தினான்.

இருவர் இறப்பின் போதும் துர்நிமித்தங்கள் நடைபெற்றது.

கிருஷ்ணன் மறைவுக்குப்பின் யாதவ வம்சம் சிறப்பு அழிந்தது.
ஏசு மரணத்திற்குப்பின் யூதர்களின் சிறப்பும் முடிந்தது.

பெயர் ஒற்றுமை 

Christ - Cheistna
முதன்முதலில் இந்தியாவிற்கு வந்து சமஸ்கிருதம் படித்த கிருஸ்துவ பாதிரியார்கள் இவ்வொற்றுமையைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். 
Christna - Chrishna 
இரண்டிலும் Chr பொதுவாக வருவதால் Christ என்று எழுதும்போது குழப்பம் வரும் என்பதால் CHA என்ற ஒலிக்கு K என்ற எழுத்து சேர்த்து Krishna என்று எழுதியும் பரப்பியும் வந்தார்கள். 

இந்த ஒற்றுமையில் பார்க்கவேண்டியது ஒருவர் இன்னொரு மதத்தையோ அல்லது இருவரும் வேறு மதத்தையோ பின்பற்றி வந்திருக்க வேண்டும் என்கிறார் ஆசிரியர். 

இங்கே புத்தருக்கும், ஏசுவுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமையை விளக்குகிறார்.
நண்பர்கள் வாசித்து அறிந்துகொள்ள வேண்டுகிறேன்.
இந்தியாவில் ஆரியர்கள் கி.மு 1500ல் வருகின்றனர். அவர்கள் கி.மு.1000ல் இருக்கும்போது எந்த பதிவிலும்  கிருஷ்ணன் பெயர் இல்லை. 
கி.மு. 6ல் புத்தர் தோன்றினார். அக்காலத்திலும் கிருஷ்ணன் இல்லை. 

அதேபோல் ஏசுவின் போதனைகள் உருவாகும் 500 ஆண்டுகளுக்கு  முன்பே புத்தரின் போதனைகள் உருவாகின.

ஆக புத்தர் இந்த இருவருக்கும் முன்பு தோன்றி அவற்றின் கருத்தை உள்வாங்கி கிருஷ்ணன் - கிருஸ்து சிந்தனைகள் உருவாக்கப்பட்டது என்று மிகப்பெரிய ஆய்வை நடத்தி இந்நூலை எழுதியிருக்கிறார் ஆசிரியர். முன்னரே குறிப்பிட்ட அத்தனை தலைப்புகளையும் நான் இங்கே விவரிக்கவில்லை. நண்பர்கள் வாசித்து அறிய வேண்டுகிறேன்.

'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு' என்ற வள்ளுவரின் வரிகளுக்கேற்ப 

வாசிப்போம்! விவாதிப்போம்!
- சண்முக சாமி ராமசாமி குழு இடுகை, வாசிப்பை நேசிப்போம் முகநூல் பதிவு
18.5.21