சிவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 16 ஜூன், 2024

சிவன் வேறு; – ருத்திரன் வேறு! எதிர்வினை (119)


எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (119) 

நேயன்

வேதத்தில் குறிப்பிடப்படும் ருத்திரன் மனித இனத்தவன் என்பதை வேதமே உறுதி செய்கிறது.
1:64 முழுவதும் மருத்துக்களை நோக்கிப் பாடப்படும் பாடல்கள் வருகின்றன. அதில்வரும் 10ஆவது பாடல்,
‘‘மனிதர்களின் தலைவர்களுமான மருத்துக்கள்’’ என்று குறிப்பிடப்படுகிறது. ஆக மருத்துக்கள் மனிதர்களின் தலைவர்கள் என்பது உறுதியாகிறது.

ரிக்வேதம் 2ஆம் மண்டலம் 33 ஆவது அத்தியாயம் முதல் பாடல் ருத்திரனைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘‘மருத்துக்களின் தந்தையே!’’ என்று அழைக்கிறது.

அப்படியென்றால் என்ன பொருள்? மருத்துக்கள் மனிதர்களின் தலைவர்கள். அந்த மருத்துக்களின் தந்தை ருத்திரன் என்றால், ருத்திரன் மனிதன் என்பது உறுதியாகிறது. அப்படியிருக்கும் ருத்திரனைக் கடவுள் என்று காட்ட முற்படுவது தப்பான வாதம்.
‘‘சிவன் வேறு; ருத்திரன் வேறு. சிவன் திராவிடக் கடவுள்; ருத்திரன் ஆரியக்கடவுள். இவை இரண்டும் கலந்துவிட்டன என்று சொல்வோர் உண்டு. இது அபத்தமான கருத்து. ருத்திரன் ஆதித்தொன்ம வேர்களைக் கொண்ட ஒரு வடிவம். அதுவே பல்லாயிரம் ஆண்டுகளாகப் பெரும்

சிவதெய்வமாக விளங்குகிறது’’ என்கிறார் அரவிந்தன் நீலகண்டன்.

இவர் கூறுவது முற்றிலும் தப்பு என்பதை மேற்கண்ட ரிக் வேதப் பாடல்கள் தெளிவுபடுத்துகின்றன. ருத்திரன் மனிதர்களின் தலைவன், சிறந்த வீரன் என்ற அளவில்தான் ரிக் வேதம் கூறுகிறது. ஆனால், சிவ வழிபாடு என்பது நன்றியின்பாற்பட்ட வழிபாடாகத் தொடங்கி வளர்ந்தது.
மேலும், ரிக் வேதம் 8ஆவது மண்டலம் _ அத்தியாயம் 15ஆவது சுலோகம்,

‘‘பசு ருத்திரர்களின் அன்னையாயும், வசுக்களின் புதல்வியாயும், ஆதித்தியர்களின் சகோதரியாயும், அமிருதத்தின் நாபியாயும் இருக்கிறான்’’ என்கிறது.

இங்கு ருத்திரர்கள் என்று பன்மையில் சுட்டப்படுகிறது. எனவே, ருத்திரர்கள் ஒரு இனக்குழு என்பது உறுதியாகிறது. மனிதர்களுள் ஒரு கூட்டம்.
ஆனால், சிவ வழிபாடு என்பது வேறுபட்டது. தமிழர்களிடமிருந்த நன்றியின் பாற்பட்ட வழிபாடுகளில் ஆ-ண்-_பெண் உறுப்புகளைப் பொருத்தி வழிபாடு செய்வதும் ஒன்று. தங்களுக்குப் பயன்படுவனவற்றை வணங்குவது மட்டுமே தமிழரிடம் இருந்தது. மாறாக எந்தக் கடவுள் வழிபாடும் தென்மைத் தமிழர்களிடமில்லை.

நிலத் தலைவி வழிபாடு, நிலத் தலைவன் வழிபாடு, வீரர் வழிபாடு, பத்தினிப் பெண்டிர் வழிபாடு, குலப் பெரியோர் வழிபாடு வரிசையில் ஆண்-பெண் உறுப்பு வழிபாடும் செய்யப்பட்டது. இவையனைத்தும் பயன் தருவனவற்றை வணங்குதல் என்ற வழக்கத்தில் வந்தவை.
அந்த அடிப்படையில் வந்ததுதான் பொங்கல் விழாவும், உழவுக்கு உறுதுணையாய் இருக்கும் மழை, சூரியன், மாடு, பணியாளர்களுக்கு நன்றி சொல்வதே பொங்கல் விழா.

ஆண்-பெண் உறுப்பு இணையும் நிலையில்தான் இன்பமும் கிடைக்கும், இனமும் பெருகும். இந்த இரண்டு முதன்மைப் பயன்பாடு இதிலிருப்பதால் ஆண்-பெண் உறுப்புகளை இணைத்து வழிபட்டனர் தமிழர்கள். தமிழர்கள் உலகின் பல பகுதிகளிலும் பரவி வாழ்ந்தமையால், அவர்கள் வழிபட்ட இந்த ஆண்-பெண் உறுப்பு பொருந்திய நிலையில் உள்ள உருவங்கள், அப்பகுதிகளில் எல்லாம் கிடைத்துள்ளன.
இவ்வழிபாட்டிற்கும் ஆரியர்களின் வழிபாட்டிற்கும் எத்தொடர்பும் இல்லை. தமிழர்களுடைய தொன்மங்களைத் திரித்தும், மோசடி செய்தும், திருடியும் தங்களுடையதாக ஆக்கிக்கொண்டுள்ளவை பலப்பல.

போதி மரத்தடியில் வணங்கப்பட்ட (அரச மரத்தடியில்) புத்தர் சிலைகளை, தலையை மாற்றி, யானைத் தலையாக்கி வினாயகராக்கி, அரசமரத்தடி வினாயகர் ஆக்கியது போல, தமிழர்களுடைய பலவற்றையும் மாற்றி தங்களுடையதாக்கினர்.
அவர்கள் பிற்காலத்தில் உருவாக்கிய சமஸ்கிருதமே தமிழிலிருந்து உருவாக்கப்பட்ட
தேயாகும். ஆரியர்களுக்கென்று உரிமையானவை எதுவும் இல்லை  அவர்கள் வாழும் மண் உட்பட.

ஆண்-பெண் உறுப்புகள் வழிபாடு, உருவங்கள் தமிழர்
கள் வாழ்ந்த சிந்து சமவெளிப்-பகுதியிலும் கிடைத்துள்ளன.
ஆண்-பெண் உறுப்புகள் பொருத்தி வழிபடப்பட்ட இந்த உருவமே சிவலிங்கம் என்று பின்னாளில் ஆக்கப்பட்டது.
சிவணிய என்ற சொல்லே சிவன் என்று ஆனது. சிவணிய என்றால் பொருத்தப்பட்டது என்று பொருள். ஆண்_பெண் உறுப்பு பொருத்தப்பட்ட வடிவம். ஆகையால் அது சிவணிய வழிபாடு என்று அழைக்கப்பட்டு அதுவே சிவலிங்கம் ஆனது. லிங்கம் என்பது ஆண் உறுப்பு. பெண்ணுறுப்புக்கு முதன்மை அளிக்கப்படாமல், ஆண் உறுப்புக்கு முதன்மையளித்து லிங்கம் எனப்படுகிறது. தொல்காப்பியம் பொருளதிகாரம்,

‘‘தானே சேறலுந் தன்னொடு சிவணி
ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே’’ என்கிறது.
இதில் ‘சிவணி’ என்றால் சேர்ந்து, கூடி, பொருந்தி என்று பொருள்.
அதேபோல் தொல்காப்பியம், பொருளதிகாரம்,

‘‘ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப
வழக்கொடு சிவணிய வகைமை யானே’’ என்கிறது.
இங்கு சிவணிய என்ற சொல் பொருந்திய என்ற பொருளில் வருகிறது.
எனவே, சிவண் என்றால் பொருந்திய என்ற பொருள். அதன் அடிப்படையிலேதான் ஆண்-பெண் பொருத்தப்பட்ட உருவம் சிவண் எனப்பட்டது. அதுவே பின்னாளில் சிவன் ஆனது.

கன்னன் என்றால் கருப்பன் என்று பொருள். வடமொழியில் கிருஷ்ணன் என்று வரும். கன்னங்கரேல் என்ற சொல் வழக்கை இங்கு ஒப்பு நோக்கவேண்டும். கன்னன் என்பதே கண்ணன் என்று ஆனது போல, ‘சிவண்’ என்பது ‘சிவன்’ என்று ஆனது.
எனவே, இன்றைய சிவலிங்க வழிபாடு தொல் தமிழரின் உறுப்பு வழிபாடேயாகும். இது பயன்படுவனவற்றிற்கு நன்றி சொல்லும் வழிபாடேயன்றி கடவுள் வழிபாடல்ல.

தமிழர்களின் நன்றியின் பாற்பட்ட வழிபாடுகளையெல்லாம் கடவுள் வழிபாடாக்கி, அக்கடவுள்களுக்கு உற-வு கற்பித்து தொடர்புபடுத்தியவர்கள் ஆரிய பார்ப்பனர்கள்.
ஆரியர்களின் மேக வழிபாடு கரியமால் வழிபாடாகி, இராமன் அவதாரமாகியது _ ஆக்கப்பட்டது. தமிழர்களின் ஆண்_பெண் உறுப்பு வழிபாடு சிவலிங்க வழிபாடாக்கப்பட்டது.

நிலத்தலைவர் முருகன் கடவுளாக்கப்பட்டார். அரச மரத்து அடியில் இருந்த புத்தர் வினாயகராக்கப்பட்டார். ஆக, எல்லாவற்றையும் கடவுளாக்கி, ஒன்று சேர்த்தபோது இந்துக் கடவுள்கள் என்று காட்டுகின்றனர். எல்லாமே மோசடி. இதில் சிவனை ருத்திரன் என்பது மாபெரும் மோசடி.

தொடரும்…

சிவனும் ருத்திரனும் ஒன்றா? -எதிர்வினை (118)

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (118) – 

நேயன்

யார் இந்த தெய்வம்? வேடுவன்.கிராத உருவம் கொண்ட தெய்வம். வில்லேந்தியவன்.
ரிக் வேதத்தில், மூன்று முழுப் பாடல்கள், இந்தத் தெய்வத்தைப் பாடுகின்றன. 75 இடங்களில், ருத்ரன் குறித்த குறிப்புகள் வருகின்றன. ரௌத்ர பிரம்மன் (ரிக், 10.61.1), உக்கிரமானவன்(2.33.11), வேகமுடையவன் (1.114.4), செந்நிறத் தன்மை கொண்டவனின் காட்டுப்பன்றி (1.114.5), மருத்துக்களின் தந்தை (1.114.2.33), வேகமான அம்புகளையும் (2.33.10) வலிமையான வில்லையும் கொண்டவன் (7.46.1), வானில் ஆதவனாகவும், வளிமண்டலத்தில் மின்னலாகவும், பூமியில் நெருப்பாகவும் உறையும், அக்னி(2.1).

அவன், அழகிய உதடுகள் கொண்டவன் (ரிக்.2.33), இளைஞன் (2.33.2), மயக்குபவன்(1.114), சூரியனைப்போல் ஜொலிப்பவன்(1.43.5), பொன்னால் ஆன அணிகலன்களை அணிந்த மேனியன் (2.33), ஞானவான் (1.43.1), பாடல்களின் பதி (1.43.4), குணப்படுத்தும் மருந்துகளை வைத்திருப்பவன் (1.43.4), வைத்தியர்களுக்கெல்லாம் வைத்தியன் (2.4.4), சடாமுடி கொண்டவன் (1.114.1,5), நேரில் அமர்ந்தவன் (2.33.11), பிரபஞ்ச அதிபதி (7.46.2).
வேள்வியின் முடிவில் எஞ்சியதை ருத்திரன் ஏற்கிறான். வேள்வி முடிந்த அந்தச் சாம்பல் எஞ்சிய இடத்தில் ருத்ரன் உறைகிறான். இந்த ருத்ரனை, வேள்வியின் அரசன் என ரிக்வேதம் (4.3.1) அழைக்கிறது.

ஆனால் ருத்ரன், வாஸ்துவின் அதிபன். வாஸ்து  மிஞ்சியது. வேத வேள்வியில் எஞ்சியது மட்டுமல்ல, அதன்பின் அதுவே வேதி எனும் வேள்வித்தளமும்கூட. இது ஒரு தரிசனத்தை உள்ளடக்கியுள்ளது. நாமரூப பேதங்களுடன் விரிந்த இயக்கமான பிரபஞ்சக் காலச் சூழலின் சடங்கு குறிப்பிட, வேத வேள்வி. எனில், எது வேள்வியில் எஞ்சுகிறதோ, அதுவே சத்தியமானது. அதுவே நிரந்தரமானது. அதுவே, எல்லா சிருஷ்டிக்கும் ஆதார அடிப்படையானது. அதன் தலைவனே ருத்ரன்.
ருத்ரன், வேள்வியின் மிகுதியைக் கொள்வ-தென்பது இழிநிலை அன்று. அதுவே, மிக உயர்ந்த இறுதிச் சத்தியத்தின் குறியீடாக, பாரத மரபில் பார்க்கப்படுகிறது.

அக்னியாக ருத்ரன் இருந்து, அவனே பிரஜாபதியை சிருஷ்டியை நோக்கித் தூண்டுகிறான்.
வேள்வியில் அதுவே மீண்டும் சடங்கினைத் தொடங்கும் சக்தி கொண்ட மூலப்பொருள். முந்தைய பிரபஞ்ச சுழலில் எது எஞ்சுகிறதோ அதுவே அடுத்த பிரபஞ்ச சிருஷ்டிக்கான மூலப்பொருள்.ஒடுக்கப்பட்டனவாக, விலக்கப்பட்டனவாக, வெறுக்கப்பட்டனவாக, பெரும்பான்மைச் சமுதாயம் யாரை நினைக்கிறதோ, அந்த வடிவங்களெல்லாம் ருத்ரனுக்கு மற்ற வடிவங்களாகின்றன. சுக்ல கிருஷ்ண யஜுர் வேதத்தில் உள்ளது, ஸ்ரீ ருத்ரம்.

சிவன் வேறு; ருத்ரன் வேறு. சிவன், திராவிடக்கடவுள்; ருத்ரன், ஆரியக் கடவுள். இவை இரண்டும் கலந்துவிட்டன என்று சொல்வோர் உள்ளனர். ஆனால், ஆரிய – திராவிடக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளும் இந்தியவியலாளர்கள்கூட, இந்த இரட்டைப் பார்வையை மறுத்துள்ளனர். சமஸ்கிருத அறிஞரும் வேத தொன்மவியலாளருமான ஆர்தர் பெரிடெல் கெய்த் ( (A.B.Keith), ருத்ர- சிவன் என்பதில், திராவிட ஆரிய கூறுகளைக் கண்டறியும் முயற்சிகள் பயனற்றவை என ஒப்புக்கொள்கிறார். ஜன் கோண்டா என்பவர், வேத ருத்ரனுக்கும் வேத காலத்துக்குப் பிறகு உருவாகும் சிவன் எனும் பெரும் கடவுளின் தன்மைகளுக்கு, ஒரு சீரான தொடர்ச்சியைக் காண்கிறார். தாண்டேகர் என்பவர், இன்னமும் ஆழமான ஒரு கருத்தாக்கத்தை முன்வைக்கிறார் வேத தொன்மம், ஒரு தொன்மப் பரிணாமக் களம் மட்டுமே. அதில் இருந்து பல்வேறு தொன்மங்கள் உருவாகி, கிளைவிட்டு மேலெழுந்துள்ளன.

ஆரிய -திராவிட இனவாதக் கோட்பாட்டைக் கொண்டு, சிவ இறைக்கோட்பாட்டை அணுகுவது, உண்மையில் பெரும் அபத்தம் நிறைந்த முரண்களையே உருவாக்கும். இதற்குச் சரியான ஆதாரமாக, மறைமலை அடிகளின் திருவாசக விரிவுரையைக் காணலாம். வேதங்களை, ஆரிய நூல்கள் என அவர் இழித்துக் கூறுகிறார்

‘‘ஆரிய வேதங்களும்… இறைவனருளாற் றோன்றிய நூல்களாயின், அவ்விறைவற்குரிய பேரறிவுத் தன்மை அவற்றின்கட் காணப்படுதல் வேண்டும். மற்றும், அவை தம்மோடு தொல்காப்பியம், திருக்குறள், சிவஞானபோதம் முதலிய மெய்ந்நூற் பொருள்களை ஒப்பவைத்து நடுநின்று நோக்குவாரெவர்க்கும், மற்றித் தமிழ்மறைகளுட் காணப்படும் அரும்பெரு நுண்பொருட் பற்றி, ஆரிய வேதங்களில் ஒரு சிறிதுங் காணப்படாமை எளிது விளங்கு மாகலின், இவற்றோடொப்ப அவைகளும் இறைவனருளாற் பிறந்தனவென்றால் பொருளில் புன்மொழிகளாகுமென்க.’’
ஆக, ஒரே நூலின் இரு இடங்களில், இரு முற்றிலும் வேறான நிலைப்பாடுகளை மறைமலையடிகள் எடுப்பதை நாம் காணலாம். இங்கு, ஒரு நிலைப்பாடு முழுக்க முழுக்க, ஆழ்ந்த மறைநூல் அறிவு சார்ந்தும், மற்றொன்றோ மன_முன்முடிவுகளின் அடிப்படையிலும் அமைவதையும் நம்மால் காணமுடியும்.

ஆக, ஆதித் தொன்மை வேர்களைக் கொண்ட ஒரு படிமம்தான் வேத ருத்ரன். வரலாற்று காலங்களில், பல்லாயிரம் ஆண்டுகளாகப் பெரும் சிவ தெய்வமாகவும், அத்தெய்வத்தின் பல உருவங்களாகவும் கிளை பரப்பி, ஒரு பெரும் மக்கள் சமுதாயத்தின் ஆன்ம லட்சியமாக சிவம் இன்று விளங்குகிறது.’’ என்கிறார் அரவிந்தன் நீலகண்டன்.
ஆரியர்கள் வருகைக்குமுன், இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான், மெசபடோமியா, எகிப்து, இலங்கை மலேசியா, பர்மா, தாய்லாந்து போன்றவற்றை உள்ளடக்கிய பெரும் நிலப்பரப்பில் பரவி வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.
அப்படி வாழ்ந்த தமிழர்கள் வாழ்வில் எந்த மூடநம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும் ஜாதிப் பிரிவுகளும் இல்லை.
தங்களுக்கு எவை பயன்பட்டனவோ அவற்றை மதித்தனர். வணங்கினர்.
அப்படி அவர்கள் வணங்கியவற்றுள் ஆண் – பெண் உறுப்புகளை இணைத்து வணங்கியது முதன்மையானது.
இன்பம் பெறுவதும், இனப்பெருக்கம் செய்
வதும் ஆண் – பெண் உறுப்புகள் இணைந்த நிலையில் தான் இயலும். எனவே இன்பம், இனப்பெருக்கம் இரண்டிற்கும் அடிப்படையான ஆண்_ பெண் உறுப்புகளை இணைத்து வணங்கினர்.

நிலத்தலைவர்களை மதித்து வணங்கினர். உயர் பெண்களை வணங்கினர். குலப்பெரியோர்களை வணங்கினர். இவையே தமிழர்களின் வழிபாடாக இருந்தன. இப்படி தமிழர்கள் வாழ்ந்த நிலையில், மத்திய ஆசியாவிலிருந்து தமிழர் வாழ்ந்த நிலப்பகுதிக்குள் பிழைப்பதற்காக வந்தேறினர் ஆரியர்கள். அவர்களிடமும் தொடக்கக் காலத்தில் எந்த கடவுள் வழிபாடும் இல்லை.
நெருப்பு, காற்று, மழை, சூரியன், பூமி போன்றவற்றையே வணங்கினர். பின்னர் மழைமேகங்களுக்கு கர்த்தாவாக இந்திரனை உருவகம் செய்து வணங்கினர்.

அவர்களுக்கு நெருப்பும், இந்திரனுமே முதன்மையான தெய்வங்கள். ருத்திரன் என்ற வழிபாடு ஆரியரின் வேத காலத்தில் இருந்தது. ஆனால், தற்போதுள்ள சிவன் வழிபாட்டிற்கும் ருத்திர வழிபாட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இரண்டும் ஒன்று என்பது ஆரியர்கள் பிற்காலத்தில் தங்கள் நலத்துக்காக, ஆதிக்கத்திற்காக ஒன்றாக்கிய மோசடி!

அவர்கள் இதை மட்டுமல்ல, புத்தரின் உருவத்தை வினாயகராக மாற்றினர். தமிழரின் நிலத்தலைவர் முருகனை ஸ்கந்தன், சுப்ரமணியன் என்று மாற்றி அதற்குப் புராணங்களைப் புனைந்தனர். தமிழரின் தாய் தெய்வ வழிபாட்டை சக்தி, பார்வதி, துர்க்கை வழிபாடாக்கினர். மேக வழிபாட்டை திருமால் வழிபாடாக்கினர். எரிமலையை அருணாசலம் ஆக்கினர். அருண என்றால் நெருப்பு; அஜலம் என்றால் மலை. அதுவே அருணாஜலம் ஆக மாற்றப்பட்டது. திருவண்ணாமலை தீபம் எரிமலைத் தீயின் அடையாளம்தான்.
பின்னர் எல்லா கடவுளுக்கும் உறவு கற்பித்து சிவனுக்கு திருமால் மைத்துனர் என்று மாமன், மச்சான் ஆக்கினர்.
அதைப்போலவே ருத்திரனையும் சிவலிங்கத்தையும் தொடர்புபடுத்தி சிவன் ஆக்கினர்.
அதை இனி விளக்குவோம்.

(தொடரும்)

திங்கள், 30 ஆகஸ்ட், 2021

சிவ சிவ # லிங்க வழிபாடு

#சிவ_சிவ
#லிங்க_வழிபாடு

“சிவ-சிவ” இதன் அர்த்தம் தெரிந்தால் என்மீது உங்களுக்கு கோபம் வரும்! உங்களது  கோபம்  நியாயமானது என்றால், சிவபுராணத்தை படியுங்கள் என வேண்டி கேட்டுக் கொள்வேன். உருவ வழிபாட்டை ஆதரிக்காத வேதங்கள், லிங்க வழிபாட்டை சிஸ்ன வழிபாடு என இகழ்ந்தன.
Post vedic text வரிசையில் வரும் 18 புராணங்களில் ஒன்றான சிவ புராணம் லிங்க வழிபாட்டை புகழ்கிறது. சமரசம் செய்வதிலும், பிற கருத்துக்களை உள்வாங்கி அதைத் தனதாக்கிக் கொள்வதில் வைதீகம், வேத புராண காலத்திலிருந்தே பழகிவிட்டது என்பதற்கு லிங்க வழிபாடு சிறந்த உதாரணம். சிவலிங்க வழிபாடு பற்றிய ஆபாசமான கதையை சிவபுராணத்தில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

சிவ புராணம் நான்கு பாகங்களைக் கொண்டது. சிவ புராணம், மூன்றாவது பாகம், கோடிருத்ர சம்ஹிதை பகுதியில் பன்னிரெண்டாவது அத்தியாயம் முழுக்க முழுக்க சிவலிங்கம் உருவான கதையைக் கூறுகிறது. சுதா முனிவரும் பிரம்மாவும் உரையாடுவது போன்று இந்த அத்தியாயம் எழுதப் பட்டுள்ளது. இந்தப் புராணத்தில் ஏகப்பட்ட இடங்களில் ஆபாசம் மிகுந்துள்ளது. அதில் ஒரு sample ல் தான் இந்தப் பதிவு.இந்த அத்தியாயத்தில் உள்ளவற்றை அப்படியே எழுதினால் பலரது மனது புண்பட்டு விடுகிறது. நூல்களில் உள்ளவற்றை, உண்மையை எழுதாமலும் இருக்க முடியாது.
ஆதலால்,உள்ளதைப் பதிவிடுகிறேன், வருந்துகிறேன், வேறு வழியில்லாமல் எழுதுகிறேன்.உண்மையை உலகிற்கு உணர்த்துதல் சக மனிதனை அறியாமையிலிருந்து மீட்டெடுக்கும் வைதீகர்களையும் சேர்த்து.

இந்த நூலை  அறிஞர்கள் குழு ஒன்று சிறப்பாக ஆங்கிலத்தில் மொழிபெயத்துள்ளது.
 Prof. J.L .Shastri அவர்கள் edit பண்ணியிருக்கிறார். புகழ் பெற்ற மோதிலால் பனாரஸிதாஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. Ancient Indian Tradition & Mythology எனும் தொடர் வரிசையில் பல பதிப்புக்களாக வெளிவந்துள்ளது.

சிவபெருமான் முனிவர்களின் பக்தியை சோதிக்க அவர்கள் இல்லாத சமயத்தில் அவர்கள் வசிக்கும் காட்டுக்கு சென்று ஆடையில்லாமல் உலாவினார்.  

தனது ஆணுறுப்பை கையில் பிடித்துக்கொண்டு அருவருக்கத்தக்க செயல்களை செய்தார்.

முனிவர்களின் மனைவிகள் அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர். சிலர் உற்சாகமடைந்து அவரை அணுகினர். சிலர் அவரை தழுவினர்.  

அந்த நேரம் அங்கு திரும்பி வந்த முனிவர்கள் அதைப்பார்த்து சினம் கொண்டார்கள். வந்திருப்பது சிவன் என்பதை அவர்கள் அறியவில்லை.

“ஆணுறுப்பு அறுந்து விழுவதாக” என்று சாபமிட்டனர்!!!  

உடனே சிவபெருமானின் ஆணுறுப்பு அறுந்து விழுந்தது!!

அறுந்து விழுந்த அந்த ஆணுறுப்பு தன் அருகில் இருந்த அனைத்தையும் எரித்தது. அது பாதாள லோகம் வானுலகம் என்று எல்லா இடங்களுக்கும் நிலையில்லாமல் அலைந்தது. 

“பார்வதி ஒரு பெண்ணுறுப்பு வடிவம் எடுத்தால்தான் சிவனின் ஆணுறுப்பை ஒரு நிலையில் நிறுத்த முடியும். ஆகவே பார்வதியிடம் சென்று வேண்டுங்கள்” என்று பிரம்மா யோசனை கூறினார்.

அது போலவே அனைவரும் பார்வதியிடம் சென்று வேண்ட பார்வதியும் அவ்வாறே செய்தார். முடிவில் சிவனின் ஆணுறுப்பு நிலைத்தன்மைக்கு வந்தது. 

விஷ்ணு,பிரம்மா,தேவர்கள்,முனிவர்கள், அசையும் மற்றும் அசையாதவை அனைத்தும் சிவனை வழிபட்டு போற்றினர்.

விறைப்புடன் இருந்த சிவனின் ஆணுறுப்பு நிலைபெறத் தொடங்கியதும் உலகம் சுபீட்சம் அடைந்தது.மூன்று உலகத்திலும் சிவனின்  ஆணுறுப்பின் புகழ் பரவியது.

விறைப்புடன் உள்ள சிவனின் ஆணுறுப்பு ஹதேஸா என்றும் சிவ-சிவ என்றும் வணங்குதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது ஆனது. இதை வணங்குகிறவர்களுக்கு எல்லா நன்மையும் கூடியது.

சிவனை வணங்குபவர்கள் இந்த ஆபாச கதையை ஏற்றுக்கொள்கிறீர்களா? முனிவர்களை சோதிக்க அவர்களின் மனைவியின் முன்னால் நீங்கள் வணங்கும் சிவன் நிர்வாணமாக உலாவினார் என்று சொல்வதை ஏற்றுக்கொள்கிறீர்களா? 

இந்தக் கதைகள் வைதீகர்களே படித்திருப்பார்களா எனத் தெரியாது, ஆனால் படிக்கும்படி வைதீக அன்பர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன், இப்படியான கதைகளே முழுக்க எல்லா புராணக் கதைகளிலும், வேத நூல்களிலும், தர்ம  நூல்களிலும், ஆகம நூல்களிலும் உண்டு. இவற்றைப் படித்தால் நீங்களே இந்து வைதீகத்தின் உண்மையை உணர்வீர்கள், சக மனிதனை சமத்துவத்துடன் ஏற்றுக் கொள்வீர்கள். இப்படியான நூல்களைப் பற்றி எழுதும் நோக்கம் மனித நேயம் மலர வேண்டும் என்பதே. 

இந்த நூலை ஆங்கிலத்தில் online ல் படிக்க விரும்புகிறவர்கள் கீழுள்ள link யை அழுத்தவும். 

https://www.wisdomlib.org/hinduism/book/shiva-purana-english/d/doc226513.html

சில ஸ்லோகங்களை மட்டும் கீழே தந்துள்ளேன்:

9. In the meantime Siva himself assuming a very hideous form came there in order to test their devotion. 

10. He was very brilliant but stark naked. He had smeared ashes all over his body as the sole ornament. Standing there and holding his penis he began to show all sorts 
of vicious tricks. 

11. It was with a mind to do something pleasing to the forest-dwellers that Siva, favourite of the devotees, came 
to the forest at his will. 

12. The wives of the sages were extremely frightened at this sight. The other women excited and surprised approached the lord. 

13. Some embraced him. Others held his hands. The women were engrossed in struggling with one another. 

14. Meanwhile the great sages came there. On seeing him engaged in perverse activities they were pained and 
infuriated. 

15. The sages, deluded by Siva’s Maya and plunged in grief, began to say—“Who is this ? Who is this ?” 

16. When the naked sage did not reply, the great sages told that terrible Purusa.

17. “You are acting pervertedly. This violates the Vedic path. Hence let your penis fall on the ground.” 

Suta said :— 

18. When they said thus, the penis of that Avadhuta, who was Siva of wonderful form, fell down instantly.

19. That penis burnt everything in front; wherever it went it began to burn everything there. 

20. It went to Patala; it went to heaven; it went all over the earth; it never remained steady anywhere. 

21. All the worlds and the people were distressed. The sages became grief-stricken. Whether gods or sages no 
one had any peace or joy. 

22. All the gods and sages who did not recognize Siva became sad. They assembled together and hastened to Brahma and sought refuge in him. 

23. O brahmins, after going there, they bowed to and eulogised Brahma. They narrated what had happened to 
Brahma the Creator. 

28. As long as the penis does not become stationary there cannot be anything good in the three worlds. I am telling you the truth. 

29. O sages, you must do such things as will make the penis of Siva steady. Please ponder over this in your minds. 

32. Let the gods propitiate goddess Parvati and pray. If she can assume the form of the vaginal passage that penis will become steady.

33. O excellent sages, listen. I shall tell you the mode of procedure. Act accordingly with love and devotion. She will be thus pleased. 

35. The pot shall be invoked with Vedic mantras. It shall be worshipped according to the Vedic rituals after remembering Siva. 

36. The penis shall be drenched with that water, O great sages. When the sprinkling is made with Satarudriya mantras it will become stable. 

37. Parvati in the form of the Vaginal passage and an auspicious arrow shall form as the pedestal wherein the phallus shall be installed in accompaniment of the Vedic 
mantras.

45. O gods, O sages, you listen to my words with reverence. If my penis is supported in a vaginal passage 
there will be happiness. 

46. Except Parvati, no other woman can hold my penis. Held by her my penis will immediately become quiet. 

Suta said :— 

47. O great sages, on hearing those words the delighted sages and the gods took Brahma with them and prayed to 
Parvatl. 

48. After propitiating Parvati and the bull-bannered lord and performing the rites mentioned before, the excellent 
penis became static. 

49. The gods and the sages propitiated Parvati and Siva by the mode of procedure laid down in the Vedas for the sake of virtue. 

50. Brahma, Visnu and other gods, sages and the three worlds including the mobile and immobile beings worshipped Siva particularly. 

51. Siva became delighted and so also Parvati, the mother of the universe. That phallus was held by her in that form then. 

52. When the phallus was stabilised, there was welfare throughout the worlds. O brahmins, that phallus became 
famous in the three worlds. 

53. The phallus is known as “Hatesa”as well as “Siva- Siva.” By worshipping it, all the people become happy in every respect. 

Phallus: a penis, especially when erect(typically used with reference to male potency or dominance)
- ஆறாம் அறிவு முகநூல் குழு, தினகரன் செல்லையா முகநூல் பதிவு, 29.8.20

சனி, 28 ஆகஸ்ட், 2021

சிவபெருமான் லீலைகள்

சிவபெருமான்தான் கடவுளர்களின் தலைவன்.
இவன் யாருக்கும் பிறந்தவனல்ல.
தானாகவே தோன்றியவன்.

நதிமூலம், ரிஷிமூலம் போன்று இவன் பிறப்பு மூலத்தை ஆராயக்கூடாது.
பிரம்ம னையும் விஷ்ணுவை மும் இவன் தான் தோற்றுவித்தவன்.
இந்த இரு கடவுளும் கூட சக்தியின் முகத்திலும் தோளிலும் பிரசவமானவர்களாம்?;

'நமச்சிவாய'என்ற ஐந்தெழுத்தை பிரம்மனுக்கு போதித்ததுவனும்சிவன்தான்.

ஒருகாலத்தில் தன்னைத்தேடி ஓடிவந்த தேவர் களிடம் என்ன?ஏது?என்று கேட்க சிவனுக்குத் தாருகாவனத்து ரிஷிகளின்'தலைகனம்'புலப்பட்டது.
ரிஷிகளின் கணத்தைவிட ,ரிஷி பத்தினிகளின் கனமும் சிவனின் கவனத்துக்கு வந்தது ‌.

விஷ்ணுவை அழைத்து மோகினி உருவெடுத்து தாருகாவனத்து ரிஷிகளின் மோகத்தை ஒருகைப்பார் என்று உத்தரவிட்டான் ‌
உத்தரவு வந்தவுடன் விஷ்ணு தளுக்குக் குலுக்குடன் தத்தித்தாவினான் தாருகாவனத்திற்குள்.

மோகினி யார் மாறிய விஷ்ணு ரிஷிகளுக்கு"ருசி"களை,வழங்கி,கலங்கி கிடந்த வேளையில்,
ரிஷிபத்தினிகளின் படுக்கை அறைப்பசி,பட்டினி குறுக்குப் பருவப்பார்வையால் பதில் தெளித்து வந்தான் சிவன்.
அதுவும் சிவனாக அல்ல,பைரவர் வேடத்தில்.

தங்கள் தங்கள் மனைவிமார்கள்,எங்கெங்கே,என்னென்ன செய்கிறார்கள் என்பதை அறிய",ஞானதிருஷ்டி"யைக் கூடமுடுக்கிவிட மறந்தவாறு மோகினி காட்டிய சொர்க்கத்தில் மூழ்கிக் திளைத்தனர் ரிஷிகள்.
ரிஷிபத்தினிகளின் நிலையும் இதேதான்.

வந்தது யார் என அடையாளம் நோக்காமல்,அனணத்து மகிழ்ந்து,ஆசை தணிந்த பின்,"போச்சே கற்பு போச்சே"என்று கூவினர்.
பதிவிரதத்தில் பங்கமும்,பழுதும் பற்றிவிட்டதைப் பாருக்குணர்த்த,கூச்சலே உபாயம் எனக்கருதினர் போலும்.

பார்த்தான் சிவன்,பருவச்சுவையினைப்பருகி உருகிய பத்தினிகள் பதறிப்புலம்புவதையும்,கதறிக்குழம்புவதையும் பார்க்கப் பார்க்கப் பொறுக்கவில்லை அந்த சிவனுக்கு.

ரிஷிகளும் வந்தனர்,தமது தமது தர்மப்பத்தினிகளிடம் தரங்கெட்ட ஆட்டம் போட்டவன் சிவன் என அறிந்ததும்,'சிவனே'என்று சிலர் குந்தினர்,சிலர்"சிவ-சிவ"என்று சிலர் பொங்கினர்.

'பெரியவர் செய்தால்,பெருமாள் செய்த மாதிரி என்ற சொல்லின் மூலம் இதுதான்!தனக்குப் பிராயச்சித்தப் பரிகாரமாக இறுதியில் சிவன் சொன்னான்.
"ரிஷிகளே!'அபிசார'வேள்வி செய்யுங்கள்,ஆகட்டும் பார்க்கலாம்"என ஓடிவிட்டான்.

அபிசாரவேள்வி என்பது ஒரு பிராயச்சித்தக் காரியமாம்.
ரிஷிகள் வேள்வி செய்தனர்,என்னதான் செய்தாலும் கோபம் கொழுந்துவிடாமல் இல்லை.
உடுக்கை,அக்னி,சூலம் இவற்றை அவர்கள் ஏவ,அதனைக்கையால் பிடித்தான் சிவன்,காலங்காலமாக சுமக்கிறான்.

ஆதாரம்:அபிதான சிந்தாமணி பக்கம் 659.
- ஆறாம் அறிவு முகநூல் குழு ராஜ்மோகன் முகநூல் பதிவு, 25.8.19

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

சிவ_பார்வதி_விவாஹம்

#சிவ_பார்வதி_விவாஹம்
அல்லது 
#பார்வதி_பரிணயம்

சிவனுக்கும் பார்வதிக்கும் நடந்த விவாஹ வைபவத்தை ஶ்ரீ வாமந புராணம் விளக்குகிறது.அதில் ஒரு பகுதியை கீழே தருகிறேன்;

நந்தியினது ஆணையின்படி மகாவிஷ்ணு முதலிய சகல தேவர்களும் மகாதேவன் வசிக்கும் மந்த்ர மலைக்கு வந்து சேர்ந்தனர்.அதிதி ஸுரபி,ஸுரமை என்பவர்கள் பரமாத்மாவிற்கு விவாகத்திற் கேற்ற அலங்காரங்களைச் செய்தனர்.விருஷபாருடராகச் செல்லும் சுந்தரேசனுக்கு இருபுறத்திலும் விஷ்ணுவும் பிரம்மாவும் செல்ல, ஐராவதத்தின் மீதிருந்து இந்திரன் பின்னின்று வெண்குடை பிடிக்க, கங்கையும் யமுனையும் சாமரம் வீச,கந்தர்வகணம் பாட, கின்னரர் வாத்திய சேவை செய்ய,
அப்ஸரஸுகள் ஆட பகவான் ஆகாச வீதியில்  புறப்பட்டார்.16 கோடி ருத்ரரும்,12 கோடி ஆதித்யரும், 8 கோடி வசுக்களும்,67 கோடி கணங்களும்,24 சிவ கணங்களும் பகவானுடன் கூட கிளம்பிற்று.
ஹிமவான்(பார்வதியின் தந்தை),
சகல தேவர்களையும் மகாதேவனோடு நன்கு வரவேற்று பூஜித்து ரத்னவேதியில்(சிம்மாசனம்)பார்வதியை அமர்த்தி,வந்த வரனை அர்ச்சித்து,புலகன் பேத்தியும் என் கன்யையும் பித்ருக்களின் தௌஹித்ரியும்(மகள் வயிற்று பேத்தி) மேனையின் பெண்ணுமான பார்வதியைத் தமக்கு கன்யாதானம் செய்கிறேன்,அவளை ஏற்று அருள் புரிய வேண்டும் என்றார்.மகாதேவர் தனக்கு தாயும் இல்லை தந்தையும் இல்லை என்று கூறி தேவியை ஏற்றுக்கொண்டார்.பிரும்மா அருகிலிருந்து சகல வைதிக காரியங்களையும் செய்து வைத்தார்.பார்வதிக்குத் தோழியும்  பரமசிவனுன் பக்தையுமான மாலினி என்பவள் பரமாத்மாவினது பாதாரவிந்தங்களைப் பிடித்துக் கொண்டு தன் தோழிக்கு பூர்ண சம்பத்தை அளிக்க வேண்டும் என பிரார்த்தித்தாள்.பகவான் உமாதேவியைச் சங்க சக்ர கதா பாணியான மகாவிஷ்ணுவாகச் செய்து போதுமா? என்றார்.அதைக் கண்டு எல்லோரும் ஆனந்த்தித்தனர்.பார்வதி தேவியின் அழகைக் கண்டு சதுர்முகனுக்கு(பிரும்மாவிற்கு) மோகம் உண்டாக இந்த்ரியம் ஸ்கலநமாகி முன்பாக மணலில் விழுந்தது.அதை அவர் ஒருவரும் அறியாமல் மணலில் மறைக்க ஆரம்பித்தார். இதை ஞானக்கண்ணால் அறிந்த கைலாசநாதன்,அதிலிருந்து 88000 வாலகில்ய ரிஷிகள் ஜனிக்கப் போகின்றனர், அதைத் தடுக்காதே என்று பிரும்மனைப் பார்த்துக் கூறினார்.அங்ஙனமே மகரிஷிகள் உண்டாகி கௌரீ கல்யாண வைபவத்தைக் கண்டு சந்தோஷசித்தனர்.பரமாத்மாவினது விவாஹ வைபவத்தைக் கண்டு சகல பிராணிகளும் சந்தோஷம் அடைய உமாபதி விருஷபத்தின் மீதேறி கைலாசம் சென்றார்.

சிவனைப் பற்றிய புராண கதைகளில் விஷ்ணு பிரும்மா இருவரையும் மதிப்பிற் குறைவாகவும், விஷ்ணு பற்றிய புராணங்களில் சிவனை,பிரும்மனை அவமதித்தும்,பிரும்மனைப் பற்றிய புராணங்களில்,சிவன் விஷ்ணுவை நிந்தித்தும் கதைகள் ஏராளமாய் புணையப் பட்டுள்ளன. 

வழக்கம் போல ஆட்சேபணை தெரிவிப்பவர்களுக்கு நான் கூற விரும்புவது ஒன்றுதான்.வைதிக புராணங்கள் அனைத்திலும் இப்படியான ஆபாசமான கதைகளே உள்ளன.இவை அனைத்தும் வைதிகர்களால் மொழிபெயர்கப்பட்ட நூல்கள்.வேறு யாருடைய சொந்தச் சரக்கு அல்ல.மண்டபத்தில் எழுதிக் கொடுக்கப்பட்ட கதைகளும் அல்ல.ஆதலால்,
என்மீது கோபம் கொள்ளாமல் பொறுமையுடன் ஒரு சில வைதிக புராணங்களையாவது படியுங்கள்.உண்மையை நீங்களே உணர்வீர்கள்.

நிழற்படம்: மூன்றாண்டுகளாக வட இந்திய டிவிக்களில் தொடர்ந்து வெளிவந்த “Devon Ke Dev... Mahadev”  சீரியலின் காட்சி!

- தினகரன் செல்லையா ஆறாம் அறிவு, முகநூல் பக்கம், 24.1.21

வியாழன், 14 மே, 2020

சிவன்

கடவுள் பிறந்த கதை!
(இது புராணங்களில் இருப்பவை)

சிவன்!

சிவபெருமான் கடவுள்களின் தலைவர். இவர் யாருக்கும் பிறந்தவர் அல்ல. தானாகவே தோன்றியவர் (சுயம்பு)

பிரம்மனையும், விஷ்ணுவையும் இவரே தோற்றுவித்தார். இந்த இரு கடவுளும் சக்தியின் முகத்திலும், தோளிலும் பிரசவம் ஆனவர்கள்!

விஷ்ணுவை அழைத்தார் சிவன். மோகினி உருவெடுத்துத் தாருகாவனத்து  ரிஷிகளின் மோகத்தை ஒரு கை பார். 

ரிஷி பத்தினிகளின் படுக்கையறை பசி, பட்டினிக்குப் பருவப் பார்வையால் பதில் தெளித்தார் சிவன்.

அதுவும் சிவனாக அல்ல, பைரவர் வேடத்தில். ரிஷிகளும் வந்தனர். தமது தர்மப் பத்தினிகளிடம் தரங்கெட்ட ஆட்டம் போட்டவர் சிவன் என அறிந்ததும் 'சிவனே' என்று சிலர் குந்தினர்.  "சிவ- சிவ"என்று சிலர் பொங்கினர்.

பெரியவர் செய்தால் பெருமாள் செய்த மாதிரி என்ற சொல்லின் மூலம் இதுதான் தனக்குப் பிராயச்சித்த பரிகாரமும்!

இறுதியில் சிவன் சொன்னார். 

"ரிஷிகளே! அபிசார வேள்வி செய்யுங்கள் ஆகட்டும் பார்க்கலாம்," என ஓடிவிட்டார். அபிசார வேள்வி என்பது  ஒரு பிராயச்சித்த காரியம். சிலர் தலைக்கனம் பிடித்துத் திரிந்ததற்குக் கற்பழிப்பது என்ன முறை?                      

(ஆதாரம் : அபிமான சிந்தாமணி, 
பக்கம் - 659)
- வி.சி.வில்வம்