ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

பக்திக்கும் ஒழுக்கத்திற்கும் சம்பந்தம் இல்லை!’

ஆன்மிகம் வளர்ந்ததாகக் கூறும் குருமூர்த்தி அய்யரின் பூணூல் பார்வைக்கு அர்ப்பணம்




‘பக்திக்கும் ஒழுக்கத்திற்கும் சம்பந்தம் இல்லை!’


கேள்வி: நம் நாட்டில் இறையுணர்வு குறைந்து வருகிறதோ...?




பதில்: என் அனுபவத்துல சொல்றேன்.. பக்தி அதிகமா யிட்டிருக்கு.. கோயிலுக்குப் போகிறவங்க எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கிட்டே இருக்கு?


பழனியில் எம்பெருமான் முருகன் கோயில் உண்டிய லில் முன்னாடியெல்லாம் அஞ்சு லட்சம், ஆறு லட்சம் ரூபாதான் வந்திச்சு இப்பவோ காணிக்கைத் தொகை ரெண்டு மூணு கோடியைத் தாண்டிடுது. ... பக்தி அதிகமாக இருக்கு... ஆனால் ஒழுக்கம்தான் குறைந்துப் போயிடுச்சு!
கேள்வி: இறைவனிடத்தில் மக்களுக்குப் பக்தி அதிகமாக இருக்கிறதென்றால் ஒழுக்கமும் இருக்கிறதென்று கொள்ளலாமே?
பதில்: ஊ... ஹூம்.. அப்படியில்லை.. பக்திக்கும் ஒழுக்கத்துக்கும் சம்பந்தமே யில்லை. 


- கிருபானந்தவாரியார்,  (ஆனந்தவிகடன் 22.12.1991).


‘துக்ளக்’ பார்வையில்...


வினா: வேத மந்திரத்தை இந்த மாதிரி விலை பேசி விற்கலாமா? 


புரோகிதர் பதில்: எல்லாம் காலக் கோளாறுதான். காலம் ரொம்பத் தப்பாப் போச்சு நாங்கள்ளாம் இந்த மாதிரி வந்துட்டோம். இப்ப பிராமணனும் இல்லே. பிராமண தர்மமும் இல்லே.


வினா: நீங்க முன்னே பார்த்த மாதிரி ஜனங்களிடம் பக்தி இருக்கிறதா இப்போது? 


புரோகிதர் விடை: பக்தியாவது ஒண் ணாவது? கோவிலுக்கு வர்றவன் சாமி தரிசனத் துக்கா வர்றான்? சைட் அடிக்கன்னா வர்றான். பொம்மனாட்டிகள் மட்டும் என்ன யோக் கியம்? அவாளும் புடவை, நகை, நட்டு இதெல் லாம் போக, நேரம் இருந்தா சுவாமி அம்பாளை நெனச்சுக்கிறா! 


- ‘துக்ளக்’ 1-6-1981 இதழ் பக்கம் 32  


பக்தி தனிச் சொத்து  ஒழுக்கம் பொதுச் சொத்து


(தந்தை பெரியார் 24.11.1964 சென்னைப் பச்சையப்பன் கல்லூரி விழாவில்)


நல்ல ஒழுக்கம் இருந்தால் போதுமென்றும், கடவுள் அவசியமில்லையென்றும் சிலர் கூறுகின்றனர். அது தவறான கருத்து. கடவுள் அருள் இல்லையானால் ஒரு தனி நபருக்கோ நாட்டுக்கோ விமோசனம் ஏற்பட முடியாது.


(இப்படி சொல்லி இருப்பவர் (மறைந்த) 


காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரசுவதி ‘கல்கி’ 8.4.1958
-விடுதலை ஞா.ம.,8.7.17


தி.மு.க.வுக்கு அறிவுரை சொல்ல முன்வருகிறார் திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள்



கேள்வி: மு.க.ஸ்டாலின் குறைபாடுகள் எவ்வளவோ மாறிவிட்ட நிலையில், அவரை ஆதரிக்க உங்களுக்கு ஏன் மனம் வரவில்லை?
பதில்: தி.மு.க.வின் சிந்தனையிலும், திசையிலும் மு.க.ஸ்டாலின் மாற்றம் கொண்டு வருவார் என்கிற நம்பிக்கை எனக்கு இருந்தது. இப்போதும்கூட, இல்லை என்று சொல்லமாட்டேன். ஆனால், திராவிட சமுதாய - அரசியல் நம்பிக்கை களிலிருந்து வெகுவாக விலகி, கடந்த 50 ஆண்டுகளில் ஆன்மிக மயமாக மாறி விட்ட தமிழகத்துக்கு உகந்த, சமுதாய - அரசியல் சிந்தனை இன்னும் தி.மு.க.வில் உருவாகவில்லை. உதாரணமாக இப்போது எதற்கு ஹிந்தி எதிர்ப்பு? மேலும், அண்ணா வாலேயே கைவிடப்பட்ட திராவிட நாடு உள்பட, தி.மு.க.வின் பல கொள்கைகள் நீர்த்துப் போய்விட்டன என்றும் தெரியும். பிறகு, இப்போது அந்தக் கொள்கைகளை நினைவூட்டும் தி.மு.க.வின் சரித்திரத்தை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? இதையெல்லாம் பார்க்கும்போது, மாறுவதா, வேண்டாமா? என்று ஸ்டாலின் குழம்பு கிறார் என்று தோன்றுகிறது. 1963 இல் அண்ணா, தி.மு.க.வின் அடிப்படைக் கொள்கையைக் கைவிடத் தைரியமாக முடிவு எடுத்தது போல், தி.மு.க.வுக்கு புது வடிவம் கொடுக்க ஸ்டாலின் முன்வர வேண்டும். அண்ணா அன்று அந்த முடிவை எடுக்கவில்லை என்றால், இன்று தி.மு.க.வே இருந்திருக்காது. அதுபோல் தைரியமாக ஸ்டாலின் செய்தால், அவர் மாறுகிறார் என்று ஏற்கலாம். அப்படிப்பட்ட மாற்றம் தி.மு.க.வுக்கு நல்லது, தமிழ் நாட்டுக்கு அவசியம்.

- ‘துக்ளக்’, 5.7.2017, பக்கம் 12, 13

நரியை நனையாமல் குளிப்பாட்டுவது என்பார்களே அந்த விடயம் இந்த நரிக் கூட்டத்துக்குக் கைவந்த கலை!

கேள்வியே வஞ்சப் புகழ்ச்சி இலக்கணத்தைச் சார்ந்தது. மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் எவ்வளவோ மாறிவிட்ட நிலையில்.... என்ற பீடிகையே... உள்ளொன்று வைத்து வெளியொன்று பேசும் நோக்கம் கொண்டதே... அவர் எப்படி இருந்தார்? அவர் எவற்றில் மாறினார்? என்று திறந்து சொல்லவில்லை. பூடகமாக ஒரு கேள் வியை எழுப்புவதும், அதற்குத் திருவாளர் குருமூர்த்தி அய்யர் பாஷ்யம் எழுதத் தலைப்பட்டிருப்பதும்தான் வேடிக்கை...

(1) தி.மு.க.வின் சிந்தனையிலும், திசை யிலும் மு.க.ஸ்டாலின் மாற்றம் கொண்டு வருவார் என்கிற நம்பிக்கை எனக்கு இருந்தது. இப்போதும்கூட இல்லை என்று சொல்ல மாட்டேன் என்று குருமூர்த்தி அய்யர்வாள் எழுதுகிறார்.

தி.மு.க.வின் சிந்தனையிலும், திசையிலும் தளபதி மு.க.ஸ்டாலின் மாற்றம் கொண்டுவர வேண்டுமாம்.

தி.மு.க.வின் சிந்தனையிலிருந்து எந்த மாற்றத்தைக் கொண்டு வரவேண்டுமாம்? அதன் திசையிலிருந்து வேறு எந்தத் திசைக்குச் செல்லவேண்டுமாம்?

தி.மு.க.வின் சிந்தனை என்பது தவறானது போலவும், அதன் திசை குற்றமுடையது போலவும்,  அந்த நிலையிலிருந்து மாற்றம் கொண்டு வரவேண்டும் என்றால், இதன் பொருள் என்ன?

தி.மு.க.வின் சிந்தனை குற்றமுடையது என்பது ஒன்று - தி.மு.க.வின் சிந்தனையில் மாற்றம் கொண்டு வருவார் என்ற நம்பிக்கை தனக்கிருக்கிறது என்று சொல் லுவதன்மூலம் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான நம்பகத் தன்மையைக் குறைக்கும் குள்ளநரித்தனம் இதில் இருக்கிறதா - இல்லையா?

திராவிட சமுதாய - அரசியல் நம்பிக்கை களிலிருந்து வெகுவாக விலகி, கடந்த 50 ஆண்டுகளில் ஆன்மிக மயமாக மாறி விட்ட தமிழகத்துக்கு உகந்த, சமுதாய அரசியல் சிந்தனை இன்னும் தி.மு.க.வில் உருவாகவில்லை என்ற தன் ஆதங்கத் தையும் ‘துக்ளக்’ குறிப்பிடுகிறது.
தி.மு.க.வின் சமுதாய சிந்தனை மாறவேண்டுமாம். மாற்றம் வரவேற்கப்பட வேண்டியதுதான். மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பது அறிவியலே! ஆனால், அந்த மாற்றம் எந்த அடிப்படையில்? அது ஏமாற்றமாக இருக்கக் கூடாதே!

திராவிட இயக்கத்தின் சமுதாய சிந்தனை என்பது பிறப்பின் அடிப் படையிலான உயர்ஜாதி - தாழ்ந்த ஜாதி - பிராமண - சூத்திர வருணாசிரமத் தன்மை முற்றிலும் மண்ணும், மண்ணடி வேரோடும் வீழ்த்தப்படவேண்டும் என்பதுதான்.

இந்த வருணாசிரமத்தை இன்றளவும் கட்டிக் காக்கின்ற ஒரு கூட்டம் - இருக் கிறவரை - அதற்கான சங்கர மடங்கள் இருக்கும்வரை - அதற்கான பூணூல் அடையாளங்கள் தொடரும் வரை - ஆண்டுக்கொருமுறை அது புதுப்பிக் கப்படும் தன்மை தொடர்கிறவரை - நான் பிராமணன்தான் என்று அகங்காரமாகப் பேசும் வரை - திருப்பதி ஏழுமலையானுக்கே மூன்றரைக் கிலோவில் தங்கத்தினால் ஆன பூணூலை சங்கராச்சாரியார்கள் அணிவிக்கும்வரை - கடவுளையே தன் ஜாதி அமைப்புக்குள் கொண்டு வந்து அடைகாக்கும் வரை -

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்னும் மனித உரிமையை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்குப் பார்ப் பனர்கள் செல்லும்வரை - பூசை வேளை யில் பெரியவாள் நீஷப் பாஷையான தமிழில் பேசமாட்டார் என்ற மனப்பான்மை யும், நடைமுறையும் தொடரும்வரை - கோவிலுக்குள் வழிபாட்டு மொழியாக தமிழ் இருக்கக் கூடாது - சமஸ்கிருதம்தான் இருக்கவேண்டும் - அதுதான் தெய்வப் பாஷை - தமிழில் வழிபாடு நடத்தினால் பொருள் இருக்கும். புனிதம் இருக்காது. (‘துக்ளக்’, 18.11.1998) என்கிற பார்ப்பனீய ஆதிக்க இறுமாப்பு கட்டிக் காப்பாற்றப்படும் வரை - சங்கர மடத்தில் ஒரு சங்கராச் சாரியாராக தாழ்த்தப்பட்டவரும் வர முடியும் என்ற நிலை உறுதிப்படுத்தப்படும் வரை (பார்ப்பனரான காகா கலேல்கரின் கருத்து) -  பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவன் பிராமணன் - காலில் பிறந்தவன் சூத்திரன் என்று கூறும் மனுதர்ம சாஸ்திரத்தின் மனித விரோத சாக்கடையைத் தூக்கிப் பிடிக்கும் வரை (இப்பொழுதுகூட ‘துக்ளக்’   மனுதர்மத்தின் ‘வீரப்பிரதாபங்களை’ அள்ளி விட்டுக் கொண்டுதானே இருக்கிறது) -

பெண்களும், வைசியர்களும், சூத்திரர் களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று கூறும் கீதை இருக்கும் வரை  (கீதை அத்தியாயம் 9 சுலோகம் 32) - கீதையைத் தேசிய நூலாக்கவேண்டும் என்கிற குரல் ஒலிக்கும்வரை - முற்போக்கான பொரு ளாதார திட்டங்களைப் புராணக் குப்பைகளைக் கொண்டு வந்து போட்டு குறுக்குச்சால் ஓட்டும் முடவாதம் தொடர்கிறவரை (எடுத்துக்காட்டு: ராமன் பாலம் (ராமன் எந்த இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தான் என்று கேட்டவர் மானமிகு கலைஞர்) - இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதி ஒழிக்கப்படுகிறது என்ற சரத்து சேர்க்கப்படும்வரை (வெறும் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பது - நிஜத்தை விட்டு நிழலோடு சண்டை போடுவதுதான் - 17 ஆம் பிரிவு அதனைத் தான் கூறுகிறது) - ஆண்களுக்கு நிகர் பெண்கள் என்னும் நிலை நிலைநிறுத்தப் படும்வரை - திராவிட இயக்கத்தின் சிந்த னையில் மாற்றம் வருவதற்கான வாய்ப்பே இல்லை என்பதை குருமூர்த்தி வகையறாக் கள் நெஞ்சில் நிலை நிறுத்தட்டும்!
நியூஸ் 7 தொலைக்காட்சியில் பார்ப்பனர் தொடர்பான பிரச்சினையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட கருத்தை மீண்டும் ஒருமுறைப் படித்துப் பார்க்கட்டும் பார்ப்பனர்கள்.

“தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் வழியில் இந்தப் பேரியக்கத்தின் செயல் தலைவர் என்ற பொறுப்பில் உள்ள நான், எந்த சூழலிலும் திராவிட இயக் கத்தின் முழு மூச்சான கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பேன். அதற்காக எதையும், யாரையும் எதிர்கொள்வேன் - திராவிட இயக்கத்தை அசைத்துப் பார்க்க எந்தக் கொம்பனாலும், எந்தத் தருணத்திலும் முடியவே முடியாது என்பதே எனது உறுதியான நிலைப் பாடு” என்று தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அறுதியிட்டு உறுதியாகப் பிரகடனப்படுத்தியதற்குப் பிறகும் குருமூர்த்திகள் பூணூலையும், வாலையும் சுருட்டிக் கொள்ளட்டும்!

அண்ணா “திராவிட நாடு” கோரிக் கையைக் கை விட்டது பற்றி பெருமையாக எழுதுகிறார் திருவாளர் குருமூர்த்தி. திராவிட நாடு கோரிக்கையைக் கை விட்டாலும்  அதற்கான காரணங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன என்று அண்ணா அவர்கள் சொன்னதை குருமூர்த்திகள் வசதியாக  “பவானி ஜமக்காளம் போட்டு” மறைப்பானேன்?

50 ஆண்டுகளில் ஆன்மிக மயமாக மாறிவிட்ட தமிழகத்துக்கு உகந்த சமுதாய - அரசியல் சிந்தனை இன்னும் தி.மு.க.வில் உருவாகவில்லை என்று மெத்த வருத்தப்பட்டு கண்ணீர் உகுக்கிறார் உஞ்சி விருத்திக் கூட்டத்தைச் சேர்ந்தவர்.

ஆன்மிகமா? தமிழ்நாடு மாறி விட்டதா? ஆன்மிக மடத் தலைவரே கொலை வழக் கில் சிக்கி சிறைக் கம்பிகளை எண்ணினார். சங்கராச்சாரியார்முதல் தேவநாதன் வகையறாக்கள் (காஞ்சிபுரம் மச்சேந்திர நாதன் கோவில் குருக்கள்) சாமியார்களின் லீலைகள், சங்கதிகள் எல்லாம் சந்தி சிரிக்கின்றன.

குஜராத் பட்தாஸ் சுவாமி நாராயணண் கோவிலை ஒட்டிய குருக்களின் வீடே விபச்சார விடுதியான கதை பட விளக்கங் களுடன் பத்தி பத்தியாக பக்தியின் வண்ட வாளம் தண்டவாளத்தில் ஏறிடவில்லையா?

அய்யப்பன் கோவில் மேல் சாந்தி (அர்ச்சகர்)யின் கோவில் அறையில் சாராய பாட்டில்கள் - குவிந்து கிடக்கவில்லையா?
கோவிலுக்குப் போவது ஃபேஷனாகி விட்டது - பக்தர்களிடம் வர்த்தக மனப் பான்மை காணப்படுகிறது என்று சொன் னவர் அவாளின் பெரியவாள் ஜெயேந்திர சரசுவதி என்பதை அறிவாரா?

(1976, மே காஞ்சி அகில இந்திய இந்து மாநாட்டில்)

இவற்றைத் தொகுத்தாலே அது ஒரு தனிப் புராணம் ஆகிவிடும் - இந்த இலட்சணத்தில் கடந்த 50 ஆண்டுகாலமாக ஆன்மிகம் வளர்ந்து விட்டதாக அய்யர்வாளுக்குக் கித்தாப்பு ஒரு கேடா? இந்த நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதி இழந்து விட்டது என்று ஒப்புக் கொண்டவர் யார்? அவாளின் ராஜதந்திரி ராஜாஜிதானே!

தி.மு.க.வின் கொள்கைகளை நினை வூட்டும் தி.மு.க.வின் சரித்திரத்தை வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்று அங்கலாய்க்கிறார் அய்யர்வாள்.

இப்பொழுது புரிகிறதா அவாளின் ஆத்திரத்துக்கும், காழ்ப்புக்கும் காரணம் என்னவென்று?

தி.மு.க.வின் வரலாற்றை திராவிட இயக்க ஆய்வாளர் மானமிகு க.திருநாவுக் கரசு அவர்கள் பல தொகுதிகளை எழுதியதும், அதனை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டதும் அவர்களின் அஸ்தியில் ஜூரத்தை உண் டாக்கி விட்டது என்பது விளங்கவில் லையா? என்னதான் சாமர்த்தியமாகப் பேசினாலும், எழுதினாலும், கோணிப் பைக்குள் இருக்கும் பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டதே! 

தி.மு.க.வின் வரலாறு வெளியில் பரவினால், இளைஞர்கள் தெரிந்து கொண்டால், அது மனுதர்மக் கூட்டத்தின் அஸ்திவாரத்தைக் கலைத்துவிடுமே என்ற அச்சம்தான் அவர்களை உலுக்குகிறது என்பது அம்பலமாகி விட்டதே! ‘அருந்தொண்டாற்றிய அந்தணர் எனும் நூலை அவர்கள் எழுதலாம்’ - அதனை சங்கராச்சாரியார் வெளியிடலாமோ!

இப்பொழுது எதற்கு இந்தி எதிர்ப்பு என்று இன்னொரு கேள்வி!

இப்போது ஏன் இந்தித் திணிப்பு - சமஸ்கிருதத் திணிப்பு என்ற கேள்விக்கு இவர்கள் பதில் சொன்னால், இப்போது ஏன் இந்தி எதிர்ப்பு என்பதற்கான காரணத்தை வெகு எளிதாகவே சொல்லிவிட முடியுமே!

ஜாதி ஒழிப்பைக் கைவிட வேண்டும் -

பெண்ணடிமை எதிர்ப்புக்கு முழுக்குப் போட வேண்டும் -

இந்திக்கு ‘ஜே’ போடவேண்டும் -

சமூகநீதிக்கு நிரந்தர விடுமுறை கொடுக்கவேண்டும் -

மூடநம்பிக்கைகளை சுவீகரித்துக் கொள்ளவேண்டும் -

புராணங்களை எதிர்க்கக் கூடாது -

கோவில்களைக் கொண்டாட வேண்டும் -

தமிழ்,  தமிழ் உணர்ச்சி - தமிழன், திராவிடன் 

என்றெல்லாம் பேசக்கூடாது, எழுதக் கூடாது -

பார்ப்பனர் குறித்தோ, 

பார்ப்பனீயம் குறித்தோ பகரக் கூடாது -

மாநில உரிமை பேசக்கூடாது -

பாரத மாதாக்கி ‘ஜே’ போடவேண்டும் -

மதச் சார்பின்மைபற்றி வாய்த் திறக்கக் கூடாது -

மாறாக ராம ராஜ்ஜியத்தை ஏற்படுத்துவோம் என்று ஏக வசனம் பேசவேண்டும் -

தீண்டாமை க்ஷேமகரமானது என்னும் சங்கராச்சாரியாரை ஜெகத்குரு என்று கூறி ஜெபம் செய்யவேண்டும் -

நெற்றியைச் சுத்தமாக வைத்துக் கொள் ளக்கூடாது - மதக்குறியைத் தீட்ட வேண்டும்!

திராவிட இயக்கம் எதிர்க்கும் இவற் றையெல்லாம் கைவிட்டு, முழுக்குப் போட்டு விட்டால் தி.மு.க. செயல் தலை வரின் சிந்தனை மாற்றம் பெற்றது என்று குருமூர்த்தி வகையறாக்கள் ஒப்புக் கொள்வார்கள் - அக்மார்க் முத்திரை குத்துவார்கள் அப்படித் தானே! ஏடுகளில் அட்டைப் படம் போட்டு வாழ்த்துவார்கள்.

எப்படி இருக்கிறது?  புகழ்வது போல இகழ்வது என்கிற இடக்கர் அடக்கல் இதற்குள் பதுங்கி இருக்கிறது என்று உண்மைத் திராவிட இயக்கத் தொண் டர்கள் அறியவே செய்வார்கள். தி.மு.க. செயல் தலைவருக்கும் இவர்கள் எழுது வதன் அந்தரங்கம் என்ன என்பது நிச்சய மாகவே புரியும்.

ராஜாஜி விரித்த வலையையே அறுத் தெறிந்து உண்மைத் திராவிட முகத்தைக் காட்டிய அறிஞர் அண்ணா வின் தம்பிக்கு எல்லா வியூகங்களும் கண்டிப்பாகப் புரியவே செய்யும்! 

“ஆரிய மாயை” எனும் ஆய்வு நூலையே - வழிகாட்டும் சட்ட நூலாக தந்து சென்றுள்ளாரே  அறிஞர் அண்ணா!

ஆன்மிகம் வளர்ந்ததாகக் கூறும் குருமூர்த்தி அய்யரின் பூணூல் பார்வைக்கு அர்ப்பணம்

‘பக்திக்கும் ஒழுக்கத்திற்கும் சம்பந்தம் இல்லை!’

கேள்வி: நம் நாட்டில் இறையுணர்வு குறைந்து வருகிறதோ...?

பதில்: என் அனுபவத்துல சொல்றேன்.. பக்தி அதிகமா யிட்டிருக்கு.. கோயிலுக்குப் போகிறவங்க எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கிட்டே இருக்கு?

பழனியில் எம்பெருமான் முருகன் கோயில் உண்டிய லில் முன்னாடியெல்லாம் அஞ்சு லட்சம், ஆறு லட்சம் ரூபாதான் வந்திச்சு இப்பவோ காணிக்கைத் தொகை ரெண்டு மூணு கோடியைத் தாண்டிடுது. ... பக்தி அதிகமாக இருக்கு... ஆனால் ஒழுக்கம்தான் குறைந்துப் போயிடுச்சு!
கேள்வி: இறைவனிடத்தில் மக்களுக்குப் பக்தி அதிகமாக இருக்கிறதென்றால் ஒழுக்கமும் இருக்கிறதென்று கொள்ளலாமே?
பதில்: ஊ... ஹூம்.. அப்படியில்லை.. பக்திக்கும் ஒழுக்கத்துக்கும் சம்பந்தமே யில்லை. 

- கிருபானந்தவாரியார்,  (ஆனந்தவிகடன் 22.12.1991).

‘துக்ளக்’ பார்வையில்...

வினா: வேத மந்திரத்தை இந்த மாதிரி விலை பேசி விற்கலாமா? 

புரோகிதர் பதில்: எல்லாம் காலக் கோளாறுதான். காலம் ரொம்பத் தப்பாப் போச்சு நாங்கள்ளாம் இந்த மாதிரி வந்துட்டோம். இப்ப பிராமணனும் இல்லே. பிராமண தர்மமும் இல்லே.

வினா: நீங்க முன்னே பார்த்த மாதிரி ஜனங்களிடம் பக்தி இருக்கிறதா இப்போது? 

புரோகிதர் விடை: பக்தியாவது ஒண் ணாவது? கோவிலுக்கு வர்றவன் சாமி தரிசனத் துக்கா வர்றான்? சைட் அடிக்கன்னா வர்றான். பொம்மனாட்டிகள் மட்டும் என்ன யோக் கியம்? அவாளும் புடவை, நகை, நட்டு இதெல் லாம் போக, நேரம் இருந்தா சுவாமி அம்பாளை நெனச்சுக்கிறா! 

- ‘துக்ளக்’ 1-6-1981 இதழ் பக்கம் 32  

பக்தி தனிச் சொத்து  ஒழுக்கம் பொதுச் சொத்து

(தந்தை பெரியார் 24.11.1964 சென்னைப் பச்சையப்பன் கல்லூரி விழாவில்)

நல்ல ஒழுக்கம் இருந்தால் போதுமென்றும், கடவுள் அவசியமில்லையென்றும் சிலர் கூறுகின்றனர். அது தவறான கருத்து. கடவுள் அருள் இல்லையானால் ஒரு தனி நபருக்கோ நாட்டுக்கோ விமோசனம் ஏற்பட முடியாது.

(இப்படி சொல்லி இருப்பவர் (மறைந்த) 

காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரசுவதி ‘கல்கி’ 8.4.1958
-விடுதலை ஞா.ம.,8.7.17

மாட்டிறைச்சியும் - ஜாதி இந்துக்களும்


ரிக்வேதம் பசு புனிதமானது என்று கூறுகின்றது. புனிதமான படியால் யாகங்களில் அது வாளால் அல்லது கோடாலியால் வெட்டப்பட்டு கடவுள்களுக்கு நெய் வேத்தியமாக அளிக்கப் பட்டது. கடவுள் நெய்வேத்தியத்தைப் பிரசாதமாக பார்ப்பனர் களும் சரி, பார்ப்பனர் அல்லாத சாதி இந்துக்களும் சரி பக்தியுடன் சாப்பிட்டனர். இதை ‘தைத்திரிய பிராமணா’ என்ற வேத நூல் தெளிவாகக் கூறியுள்ளது. இது மட்டுமின்றி வீட்டிற்கு விருந்தாளி வந்தால் அவருக்கு ‘கோ உணவு’ அளிக்க வேண்டும் என்று வேத நூல்கள் கூறுகின்றன. அவ்வாறே விருந்தாளிகள் வேத காலங்களில் கௌரவப்படுத்தப்பட்டனர்.

ஆரியர்களின் ஆகப் பெரிய ரிஷியாகிய யாஜ்ஞவல்கியார் கூறுகிறார்.

“நான் அதைச்சாப்பிடுகிறேன். ஆனால் அது இளசாக இருக்க வேண்டும்"

இந்துக்கள் கோ மாமிசம் சாப்பிட்டு வந்ததை புத்த சூத்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றன. பசுக்களும் இதர பிராணிகளும் ஏராள மாகக் கொல்லப்பட்டன. இவை அனைத்தும் சமய சடங்குகளாக கருதப்பட்டன என்பதில் சந்தேகமில்லை.

இன்றைய இந்தியாவில் இந்துக்கள் மாமிச பட்சிணியாகவும், காய்கறி உணவு உண்பவர்களாகவும் பிரித்தால் மட்டும் போதாது. மாமிசம் உண்பவர்களை - மாட்டு மாமிசத்தைத் தவிர வேறு மாமி சங்களை உண்பவர்கள் என்றும், மாட்டு மாமிசம் உண்பவர்கள் என்றும் பிரிக்க வேண்டும். உணவு அடிப்படையில் - இந்துக்களைப் பிரித்தால் - பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார், தீண்டப்படாதவர்கள் எனலாம். ஆனால் வேதங்கள் கூறும் நான்கு

வர்ணங்களுக்கு இது ஒத்து வராது.

எனினும் எதார்த்த நிலையை உண்மையில் எடுத்துக் காண்பிக்கின்றது.

ஒரு காலத்தில் எல்லோருமே மாட்டு மாமிசம் சாப்பிட்டு வந்தனர். பார்ப்பனர் மாட்டு மாமிசம் உண்ணுவதை விட்டனர். பிறகு எந்த மாமிசமும் சாப்பிடுவதை விட்டு விட்டு, காய்கறி உணவு மட்டும் சாப்பிடத் தொடங்கினர். ஆனால் பார்ப்பனர் அல்லாதார் மாட்டு மாமிசம் சாப்பிடுவதை விட்டனரே தவிர, மீதியுள்ள மாமிசங்களைச் சாப்பிட்டு வந்தனர்.

அஸ்வமேத யாகம் போல், பசு யாகம் செய்த போதெல்லாம் பார்ப்பனர் அந்த மாமிசங்களைச் சாப்பிட்டு வந்தனர். உண்மை யில் ஏறத்தாழ தினசரி பார்ப்பனர் பசு மாமிசம் சாப்பிட்டு வந்தனர். பார்ப்பனர் "குருமார்கள்" ஆனபடியால், பார்ப்பனர் அல்லாதார் எல்லாச் சடங்குகளிலும் கலந்து கொள்ளும் பார்ப்பனர்களுக்கு தினசரி இலவசமாகவே மாட்டு மாமிசம் கிடைத்தது. இந்த வசதி பார்ப்பனர் அல்லாதாருக்குக் கிடைக்கவில்லை. உபநிஷத்துக்கள் கோ மாமிசம் சாப்பிடு வதை நியாயப்படுத்தின; கட்டாயப்படுத்தின. அப்படியானால் கோ மாமிசம் சாப்பிடுவதை பார்ப்பனர் எப்பொழுது கைவிட்டனர், ஏன் கைவிட்டனர் என்ற கேள்வி களுக்கு பதில் அளிக்க வேண்டும். புத்த மதத்திற்கும், பார்ப்பனீ யத்திற்கும் ஏறத்தாழ 400 ஆண்டுகள் கடுமையான சண்டைகள் நடைபெற்று வந்தன. புத்தமதம், மக்களை மிகவும் கவர்ந்தது. கடவுள் இல்லை என்பதும், பொருள் முதல் வாதமும், மக்களின் சமயமாக ஆயின. அசோக மன்னனே பவுத்தமதத்தைப் பெரிதும் ஆதரித்தவன். பார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற அசுர முயற்சி செய்து வந்தனர். பௌத்த மதம் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்து கொண்டதால், அதே வழியை பார்ப்பனர்களும் கடுமையாகப் பின்பற்றத் தொடங்கினர். இதன் நோக்கம் ஒன்றே - புத்தர் கோயில்களுக்குச் செல்லும் மக்களை தங்கள் கோயில்களுக்கு ஈர்க்க வேண்டும் என்பதே. இவ்வாறு தான் கோயில்கள் ஏற்பட்டன. பார்ப்பனீயத்தில் கோயில்கள் கிடையாது.

பவுத்தர்கள், பார்ப்பனர் சமயமுறையை எதிர்த்தனர். குறிப்பாக யாகத்தையும், யாகத்தில் குதிரை, பசு முதலியவற்றைக் கொல்வதையும் கடுமையாக எதிர்த்தனர். பசுக்கொலை எதிர்ப்பை பெருவாரியான சாதாரண மக்கள் பெரிதும் வரவேற் றனர். காரணம் விவசாயத்திற்கு மாடுகள் மிகத் தேவை யானதாலும், பெருவாரியான மக்கள் விவசாயிகளானபடியாலும், மாட்டைக் கொலை செய்வதை அவர்கள் விரும்பவில்லை. பார்ப்பனர்கள் மீது வெறுப்பு இவ்வாறு அந்தக் காலத்திலிருந்து தான் ஏற்பட்டது. இதைச் சமாளிக்கும் பொருட்டு பார்ப்பனர்கள் யாகத்தையும், பசுவை யாகத்தில் கொல்வதையும் கைவிட்டனர்.

இது மட்டுமின்றி பவுத்த பிக்குகள் செல்வாக்கிலிருந்து, மக்களைத் தங்கள் பக்கம் ஈர்க்கப் புலால் மறுத்து, எந்த மாமிசமும் திண்பவர்கள் அல்லர் என்றும், தாங்கள் காய்கறிதான் உண்பவர் கள் என்றும் வெளிப்படுத்தத் தொடங்கினர். இவ்வாறுதான் மாமிசப் பட்சிணியாக இருந்த பார்ப்பனர்கள் காய்கறி மட்டுமே தின்னும் சாகப்பட்சிணியாகத் தொடங்கினர்.

இது ஒரு புறமிருக்க, உடைந்த மனிதர்கள் கோ மாமிசம் தின்பது தீண்டாமைக்கு ஏன் இட்டுச் செல்ல வேண்டும்? பார்ப்பனர்களும், பார்ப்பனர் அல்லாதவர்களும், கோ மாமிசம் சாப்பிடுவதை விட்டுவிட்ட பின், உடைந்த மனிதர்கள் மட்டும் கோ மாமிசம் சாப்பிடுவது புதிய சூழ்நிலையை ஏற்படுத்தியது.

கோ மாமிசம் சாப்பிடாதவர்கள், பசு பவித்திரமானது அதைக் கொல்லக் கூடாது பசு மாமிசம் சாப்பிடுகிறவர்கள் சண்டாளர்கள் என்று கூறத் தொடங்கினர். ஆகவே, உடைந்த மனிதர்கள் கோ மாமிசம் சாப்பிட்டு வந்ததால் அவர்கள் சமுதாயத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டனர்.

ஆகவே, உடைந்த மனிதர்கள் கோ மாமிசம் சாப்பிட்டு வந்த காரணத்தால், தீண்டப்படாதவர்கள் என்ற நிலை ஏற்பட்டது என்கிறார் டாக்டர் அம்பேத்கர்.

-விடுதலை ஞா.ம.1.7.17

திங்கள், 14 ஆகஸ்ட், 2017

யோக்கியமாக சிந்திப்பீர்: கிருஷ்ண 'அவதாரத்தின்' யோக்கியதை என்ன? (கிருஷ்ணன் கருப்பன்)



ஆயர்குல மாதர்கள் வழக்கம் போல் யமுனா நதிக்குக் குளிக்கப் போனால் நீரும் அவர்கள் அறியாதபடி பின் தொடர்ந்து, அவர்கள் தங்கள் உடைகளைக் களைந்து கரையில் வைத்துவிட்டு ஆற்றிலிறங்கிக் குளித்துக் கொண்டிருக்கும் சமயம் பார்த்து, அவர்களின் ஆடைகளை எடுத்து மரத்தின் மீது ஏறி வைத்துக் கொண்டு, அவர்களை எல்லாம் ஆடையின்றி நிர்வாணமாகப் பரிதவிக்கவிட்டு, நீர் மரத்திலிருந்து கொண்டே, அவர்களை இரு கையையும் தலைக்கு மேல் தூக்கிக் கும்பிட்டால் தான் தருவேனென்று சொல்லுவதும், அவர்களும் வேறு வழியில்லாமல், உம்மிஷ்டப்படிச் செய்யவும், நீரும் அவர்களின் மர்மஸ்தானத்தைத் தரிசித்துப் பரவசமடைந்தவுடன் அவர்களின் புடைவைகளைத் திருப்பிக் கொடுத்ததுமான செயலிலிருந்தும் உமது வெட்கங்கெட்ட காமாந்தகாரமான செய்கையும், திருட்டுத்தனமும் விளங்கவில்லையா?

கிருஷ்ணன்:- நான் கிருஷ்ண அவதாரம் எடுக்க வேண்டியதற்கு முக்கியக் காரணம், மதுரை மாநகரில் கம்சன் என்னும் அரசன் செய்துவந்த கொடுமைகளையும், அஸ்தினாபுரியை அரசாண்டு வந்த துரியோதனாதிகள் செய்துவந்த கொடுமைகளையும் பொறுக்க முடியாமல், பூதேவி என்னிடத்தில் வந்து முறையிட்டுக் கொண்டதால், அவள் கஷ்டத்தைத் தீர்க்க வேண்டி, நான் வசுதேவருக்கும், அவர் பத்தினி ரோகிணிக்கும் புத்திரனாய்ப் பிறந்து எம் தாய் மாமனாகிய கம்சனையும் கொன்று பாண் டவர்களையும், கவுரவர்களையும், சூதினாலும், தந்திரத் தினாலும் அவர்களுக்குள்ளேயே சண்டையிடுமாறு செய்து, டில்லி மாநகரம் என்னும் குருக்ஷேத்திரப் பூமி யில் அவ்விருவருக்குமுள்ள பதினெட்டு அக்ரோணி சேனைகளையும், பதினெட்டு நாளில் மடியவைத்து, என் மனைவியின் பூமிப் பாரத்தையும் தீர்த்து வைத்தேன். இதுதான் நான் கிருஷ்ணாவதாரம் எடுத்ததற்கு முக்கியக் காரணம்.

வினா- நீர் அடிக்கடி பூமிப்பாரம் தீர்க்க வேண்டியதற் காகப் பூலோகத்தில் வந்து பிறப்பதைப் பார்க்கப் போனால், ஒரு வியாபாரி தன் கையில் பிடித்த துலாக்கோல் எந்தப் பக்கத்தில் கூடுதல் குறைச்சலாகின்றதோ அந்தப் பக்கத்தைச் சமப்படுத்தி வைத்துக் கொள்வதுபோல், பூவுலகத்தின் பாரங்களைச் சமப்படுத்த அடிக்கடி நீர் வந்து பிறப்பதாகத் தெரிகிறது. அப்படியிருந்தாலுங்கூட, நீர் பூமிப்பாரம் தீர்க்க எடுத்த அவதாரமெல்லாம் பூலோகத்தின் கண்ணுள்ள ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, அய்ரோப்பா, ஆஸ்திரேலியா முதலிய பல கண்டங்களில் ஒன்றாகிய, ஆசியாக் கண்டத்தின் ஒரு பாகமாகிய பாரத பூமியில்தானே உம் மனைவிக்குப் பூபாரம் தீர்க்க முடியாமல் போவதும், அதைத் தீர்த்து வைக்க நீர் அவதாரபுருடனாய் பூமியில் பிறந்து பல கஷ்ட நஷ்டங்களை அடைவதுமான காரியம் நிகழ்கிறது! இது உம்மோடு மட்டும் நின்றபாடில்லாமல் உம் மைத்துனராகிய சிவபெருமான் கூட இந்திய நாட்டில் அதிலும் தென் கோடியிலுள்ள தமிழ்நாட்டில் 64 அவதாரம் எடுத்திருக்கின்றார்? அதன்றி உம் மகன் பிரமனும் மன்மதனும் கூடத் தென் நாட்டில்தானே அவர்களின் திரு விளையாடல்களைப் புரிந்திருக்கின்றார்கள்? ஏன் உங்களில் யாராவது ஒருவர் மேல்நாட்டுக்குப் போய் உங்களின் திருவிளையாட்டைக் காட்டியிருக்கக் கூடாது? அங்கே போய் உங்கள் நாடகத்தை நடித்தால், செருசலத்திலுள்ள யூதர்கள், கிறிஸ்து பெருமானைச் சிலுவையில் வைத்து, தலையில் முள் முடிதரித்துக் கால், கைகளில் ஆணியடித்து வைத்தது மாதிரி அடித்து விடுவார்கள் என்ற பயமா என்ன?

விடை:- அதற்கெல்லாம் பயந்து கொண்டு நாங்கள் இந்திய மண்ணில் பிறக்கவில்லை. பின் எதனால் மற்ற நாடுகளுக்குப் போகாமல் இந்தியாவில் பிறந்தோம் என்றால், உலகத்திலேயே இந்திய நாடுதான் மற்ற தேசங்களைவிடப் புண்ணிய பூமியென்று அழைக்கப்படுவதனாலும், ஒவ்வொரு தெருக்களிலும் கோவில் குளங்கள் நிறைந்ததும், அக்கோவில்களில் குடி, கூத்தி, கொலை, சூதுவாது முதலிய அதரும கைங்கரியத்தை நடத்தி வரும் நன்நாடு ஆனதனாலும், கல்விக்கரசியாகிய சரஸ்வதி பிறந்து உலகத்திலேயே அதிகப்படியாக நூற்றுக்கு மூன்று வீதம் படித்த பண்டிதமணிகளால் நிறைந்த நாடானதனாலும், செல்வத்திற்கரசியாகிய சீதேவி பிறந்து அரைவயிற்றுக் கஞ்சிக்கு அன்னக்காவடியெடுக்கும் புண்ணிய நாடானதினாலும், வீரம் செறிந்த சத்திதேவி பிறந்து பக்தியிற் சிறந்து முக்தியை நோக்கும் மக்களைப் போல் எலும்புக் கூடும், நரம்பும், தோலுமாய் நடைப்பிணங்களாய்த் திரியும் பாரத புத்திரர்கள் பிறந்த நாடானதனாலும், ஆண், பெண் என்ற இரண்டு சாதியை இரண்டாயிரத்திற்கு அதிகமாக உற்பத்தி பண்ணும் இயந்திர நாடு ஆனதனாலும், உலக மக்களிடத்திலே காணப்படாத, தீண்டாமை, பாராமை, நெருங்காமை, தெருவில் நடக்காமை முதலிய புனித கைங்கரியத்தை உருவகப்படுத்தித் திருத்தொண்டு புரிந்த நாடானதனாலும், ஒருவருக்கொருவர் மொழியொற்றுமை இன்றிப் பன்னூற்றுக்கணக்கான படைகளையுடைய பாரத நாடானதனாலும், மண்ணில் மடிந்து போன மக்கள் பார்ப்பனர் மூலமாகத் தலைமுறை தலைமுறையாக இவ்விடமிருந்து, சாப்பாடு சம்ரட்சணையைப் பெற்றுவரும் செல்வம்பொருந்திய நாடானதனாலும், நாற்பது கோடி மக்களும் சுயமரியாதையற்று அடிமைத்தளையின் ஆபரணத்தைப் பூண்ட நாடானதனாலும், மூடநம்பிக்கைக்கும், முட்டாள் தனத்திற்கும் முதல் பரிசு பெற்ற புகழ் வாய்ந்த நாடானதனாலும், தெய்விகம் மறைந்து வைதிகம் ஓங்கி மக்களை மாக்களாக்கும் திருவருள் சுரந்த நாடானதனாலும், பார்ப்பானுக்குப் பாக்கியத்தையும், பாட்டாளி மக்களுக்குக் கஷ்டத்தையும் கொடுத்து வரும் கடவுளர் பிறந்த நாடானதனாலும், இன்னும் இதுபோன்ற புனிதகைங்கரியத்தைக் கைக் கொண்ட நன்னாடானதனாலும் நாங்கள் இதில் வந்து பிறந்தோமே அன்றி வேறு காரணத்திற்காகவல்ல!

வினா- ஆகையினால் நீர் அவதரிக்கும் போதே கடவுள் பிரிவினை, சமூகப் பிரிவினை, ஜாதிப்பிரிவினை, பாஷைப் பிரிவினை, கோத்திரப் பிரிவினை, உடற்பிரிவினை, உடைப் பிரிவினை, உணவுப் பிரிவினை, தலைப் பிரிவினை, கல்விப் பிரிவினை, ஒழுக்கப் பிரிவினை, உயர்வு - தாழ்வுப் பிரிவினை, முதலிய பல்வேறு பிரிவினைகளை உள்ளடக்கியதனால், நீர் உம் தாயார் வயிற்றிலிருந்து பிறக்கும் போதே கொலை, களவுகள், காமம், சூது, வாது முதலிய கொடிய பாதகங்களைச் செய்து தண்டனை அடைபவர்கள் வசிக்கும் காராக்கிரமாகிய ஜெயிலில் பிறந்தீர் போலும். அல்லாமலும் உம்முடைய தந்தையாகிய வாசுதேவர் உம்மைத் திருட்டுத் தனமாகக் கொண்டு போய் இடையச் சேரியாகிய ஆயற்பாடியில் போட்டு விட்டு வரவும், கோகுல வாசிகளின் தலைவனாகிய நந்தகோபாலன் கண்டெடுத்துத் தன் மனைவி யசோதையிடத்தில் கொடுத்து வளர்த்து வந்ததனால் தான், தாயில்லாப் பிள்ளையாயிற்றே என்ற அனுதாபத்தினால் ஆயர்பாடியிலுள்ள சில பெண்கள் உமக்குத் தங்கள் முலைப்பாலைக் கொடுத்துப் பிரியமாய் வளர்த்து வரும் போது, அதிலொருத்தியாகிய பூதனி (பூதகி) என்ற பெண்ணின் ஸ்தன்னியத்தைக் கூடக் கடுமையாகக் கடித்து அவளுக்கு மரண வேதனையை உண்டாக்கி விட்டீர் அல்லவா?

விடை:- ஆம் வாஸ்தவந்தான். மார்பில் பால் சுரக்காவிட்டால் சிறுவர்கள் என்ன செய்வார்களோ அதைத்தான் நானும் செய்திருக்கின்றேனே அன்றி வேறொன்று மில்லையே!

வினா- அதனால் தான் பெண்கள் உமக்குப் பால் கொடுக்காதபடி மாட்டுப்பாலைக் கொடுத்து வளர்த்து வந்திருக்கின்றார்கள். அப்படி வளர்த்துத் தான் உம்மையும் மாடு மேய்க்கும் சிறுவர்களுடன் மாடு மேய்க்கப் புலன்களுக்கு அனுப்பியதால், தங்க நிறம் போன்ற திருமேனியுடைய இராஜகுமாரனாக இருந்தும், அந்த வெயிலிலும் கானலிலும் அலைந்து திரிந்ததனால் இயல்பான பொன்னிறம்மாறி, சரீரம் கருத்துக் கரிக்கட்டை மாதிரி ஆனதனால்தானே உம்மைக் கோபாலகிருஷ்ணன் என்று பெயரிட்டு அழைத்து வந்தார்கள். (அதன் பொருளாவது: கோபசு, பாலன் சிறுவன், கிருஷ்ணன் கருப்பன் என்றபடி, மாடு மேய்க்கும் கருத்தப் பையன் என்பதுதான் அதன் அருத்தமாகும்). அப்படி இருந்தும் உமது பிறவிக் குணமாகிய திருட்டுப் புத்தி மட்டும் உம்மை விட்டபாடில்லை. சேரியிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும், யாருங்காணாதபடி உட்புகுந்து, அவர்கள் வைத்திருக்கும் பால், தயிர், வெண்ணெய் முதலியவற்றைத் திருடித் தின்றுவிட்டு ஒடுவதைக் கையும் களவுமாகக் கண்டுபிடித்து, உரலில் கட்டிவைத்துத் தயிர் கடையும் மத்தால் உம்மை அடித்திருக் கின்றார்கள். அப்படியெல்லாம் பட்டும் புத்தி வராமல், ஒவ்வோர் இடையர் வீட்டிலும் புகுந்து புருடனில்லாத சமயம் பார்த்து அப்பெண்களை யெல்லாம் கற்பழித்திருக்கிறீர் அல்லவா? இதுதானா நீர் பூவுலகில் பிறந்து பூமிபாரம் தீர்க்க வந்த நேர்த்தி?

விடை:- அவர்கள் என் மீது மட்டற்ற காதல் கொண்டு என்னை விரும்பி வந்தபடியால் தான் நான் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவர்களின் காம இச்சையை நிறைவேற்றி வைத்தே னேயல்லாது, நான் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக நடக்கவில்லை. இதனை அவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

வினா:- ஒகோ! அப்படியா சங்கதி! ஆனால் நீர் அவர்களை "பூனை மாமிசத்தைத் தள்ளினதுபோல்" தள்ளிவிட்டீராக்கும் என்றல்லவோ எண்ணினேன். அப்படியே நீர் சொல்லியது உண்மையாக இருக்குமானால், ஆயர்குல மாதர்கள் வழக்கம் போல் யமுனா நதிக்குக் குளிக்கப் போனால் நீரும் அவர்கள் அறியாதபடி பின் தொடர்ந்து, அவர்கள் தங்கள் உடைகளைக் களைந்து கரையில் வைத்துவிட்டு ஆற்றிலிறங்கிக் குளித்துக் கொண்டிருக்கும் சமயம் பார்த்து, அவர்களின் ஆடைகளை எடுத்து மரத்தின் மீது ஏறி வைத்துக் கொண்டு, அவர்களை எல்லாம் ஆடையின்றி நிர்வாணமாகப் பரிதவிக்கவிட்டு, நீர் மரத்திலிருந்து கொண்டே, அவர்களை இரு கையையும் தலைக்கு மேல் தூக்கிக் கும்பிட்டால் தான் தருவேனென்று சொல்லுவதும், அவர்களும் வேறு வழியில்லாமல், உம்மிஷ்டப்படிச் செய்யவும், நீரும் அவர்களின் மர்மஸ்தானத்தைத் தரிசித்துப் பரவசமடைந்தவுடன் அவர்களின் புடைவைகளைத் திருப்பிக் கொடுத்ததுமான செயலிருந்தும் உமது வெட்கங்கெட்ட காமாந்தகார மான செய்கையும், திருட்டுத்தனமும் விளங்கவில்லையா?

விடை:- ஆம், அந்த வாலிப காலத்தில் எப்படிப்பட்டவர்களும் தவறி நடப்பது இயற்கைதானே! அதையெல்லாம் குற்றமாகப் பாவிக்கலாமா? உலகத்தில் யார் தான் நெறியுடன் பிறந்தது முதல் இறக்கிறபரியந்தம் நேர்மையுடன் நடந்திருக்கின்றார்கள்?

விடை:- நீர் சொல்வது வியப்பாக இருக்கின்றதே! சாதாரண மக்கள் தான் தவறிழைத்தாலும் உம்மைப் போன்ற பரத்துவம் வாய்ந்த கடவுள் கூட அப்படிச் செய்வது முறையாகுமா? என்றுதான் கேட்கின்றேன். சரி, இது போகட்டும். பிறந்தது முதல் உமக்குப் பாலூட்டிச் சீராட்டிப் பாதுகாத்து வந்த நந்தகோபன் மகன், பலராமனுடன் எப்பொழுதும் பொறாமையால், நீர் செய்யும் ஒவ்வொரு குற்றத்தையும் அவன் தலையில் சுமத்திவிடுவதும், பலராமனுடைய தங்கையாகிய சுபத்திரையைத் துரியோதனனுக்குக் கொடுக்க வேண்டுமெனச் சொன்னதற்காக நீர் அதை மறுத்து, அர்ச்சுனனுக்குத் தான் கொடுக்கவேண்டும் என்று சொல்லி ஒருவருக்கொருவர் சண்டை யிட்டு மண்டையுடைத்துக் கொண்டிருக் கின்றீர்களே. இதானது உங்களுடைய சகோதரத் தன்மைக்கு ஏற்புடைத் தாகுமா என்றுதான் கேட்கின்றேன்.

விடை:- ஆம், வாஸ்தவந்தான். சுபத்திரை பலராமனுக்கு மட்டும் தங்கையல்ல. எனக்கும் அவள் தங்கைதான் என்னை நந்தகோபன் பெறாவிட்டாலும், பெற்றவன் ஒரு பிதா, வளர்த்தவன் ஒரு பிதாவென்ற நீதி வாக்கியத்தின்படி, நான் பிறந்தது முதல் என் தாய் தந்தையரைப் பார்க்காமல் நந்தகோபனையும், அசோதையரையுமே என் சொந்தத் தாய் தந்தையாக நினைத்துக் கொண்டிருந்தபடியால், அவர்கள் பெண்ணும் எனக்குச் சகோதரிதான் ஆகவேண்டும். ஆதலால், திரியோதரனுடைய சுபாவ குணங்களும், செய்கையும் எனக்குப் பிடிக்காதபடியால் தான் அவனுக்குக் கொடுக்கும்படி வாதாடினேன். இதில் என்ன குற்றம்?

கிருஷ்ணாவதாரம்-சந்தேகமானது

வினா:- இதில் குற்றமொன்றுமில்லை. நீர் நல்லெண்ணத்துடன் தான் அர்ச்சுனனுக்குக் கொடுக்கும்படி சொன்னீர்.  ஆனால், எனக்கு ஒரு பெருத்த சந்தேகம் வந்து குறுக்கிடுகிறது. அதாவது, முதலில் நீரே பலராமனாகப் பிறந்திருப்பதாக உமது சாட்சியத்தில் சொல்லி இருக்கின்றீர். இப்போது கிருஷ்ணனாகப் பிறந்ததாகவும் சொல்லுகின்றீர். இதில் நீர் கிருஷ்ணனாகப் பிறந்த வரலாறுக்கும், பலராமனாகப் பிறந்த வரலாறுக்கும், மலைக்கும் மடுவுக்குமுள்ள எவ்வளவோ வித்தியாசங்கள் காணப்படுவதும் அன்றி, நீங்களிரு வரும் உருவத்தாலும், குணத்தாலும், செய்கையாலும் மாறுபட்டவர் களாகவே காணப்படுகின்றீர்கள். அப்படி இருப்பதால், பரத்துவம் வாய்ந்த அவதாரம் பலராமானா? அல்லது கிருஷ்ணனா? என்ற சந்தேகத்திற்கு இடந்தருகிறதல்லவா? ஆகையால் இச்சந்தேகத்தைப் பற்றி என்ன சமாதானம் சொல்லப் போகின்றீர்?

விடை:- மவுனம் (பதில் சொல்லவில்லை)

வினா:- இதற்குத் தகுந்த காரணம் சொல்ல முடியாமல் மவுனம் சாதிப்புதனால் என்ன விளங்குகிறது என்றால், உமது சாட்சியமே நம்பிக்கையற்றதும், பொருத்தமற்றதுமாகவே இருக்கின்றது. உமது இராமாவதாரத்தில், பரசுராமனும், ராமனும் சண்டையிட்டதாகச் சொல்லியிருக்கின்றீர். இதில் நீங்களிருவரும் போர் தொடுத் திருக்கின்றீர்கள். நீர் எடுத்திருக்கும் பதினொரு பிறப்பில் ஒன்றை ஒளித்து விட்டு, பத்து அவதாரம்தான் என்று சொன்னீர். அல்லாமலும், இதில் நாலாவது அவதாரத்தைக் கொண்டு வந்து புகுத்திவிட்டீர். இதனால் உமது அவதார மகிமையில் கொஞ்சங்கூட நம்பிக்கை வைக்க இடமில்லாமலும் போய்விட்டது. அல்லாமலும், உம் தாய் மாமனாகிய கஞ்சனையும் நயவஞ்சகமாய்க் கொலை செய்திருக்கின்றீர். குருகுலத்து மன்னர்களையும் உம்முடைய கபடநாடகச் சூழ்ச்சியால், ஒருவருக்கொருவர் பிரிவினையை உண்டாக்கிப் பாண்டவர் பக்கம் நீர் சேர்ந்துகொண்டு, தருமமே உருவாக அவதரித்திருந்த தரும புத்திரன் மனத்தைக் கலைத்துத் தன் மாமன் சகுனியுடன் பஞ்சமா பாதகத்தில் ஒன்றாகிய சூதாட்டத்தை ஆடச் செய்தும், அதன் நிமித்தமாகத் தனது தர்மபத்தினியாகிய திரவுபதியை இராஜ சபையில் கொண்டு வந்து நிறுத்தி அவள் துகிலை உரிந்து நிர்வாணமாக விட்டு மானபங்கப்படுத்தியும், பாண்டவர் களைப் பதினான்கு வருடம் காட்டில் விரட்டிவிட்டு அவர்கள் பதினான்கு வருடம் கழித்துத் திரும்பி நாட்டுக்கு வந்தும், அவர்களுக்கு உரிய இராச்சியத்தைத் திருப்பிக் கொடுக்காமல், தூது செல்வதாகச் சென்று அவர்களுக்குள்ளேயே சண்டையை மூட்டிவிட்டு, குருக்ஷேத்திரத்திரம் என்று சொல்லக்கூடிய டில்லியில் பதினெட்டு நாள் வரையில் கடும்போரிட்டுப் பதினெட்டு அக்ரோணி சேனைகளையும் மடியவைத்து வேடிக்கைப் பார்த்துத்தானா நீர் இந்தப் பூமிப்பாரந் தீர்க்கவேண்டும்? "அரிதரிது மானிடராதலரிது" என்ற முதியோர் மொழிப்படி, மானிட ஜென்மமாகப் பிறக்கவேண்டியதற்குப் "புல்லாய்ப் பூடாகிப் புழுவாகி, கல்லாய், மரமாய், மிருகமாய், பறவை" முதலிய எத்தனையோ பிறவிகள் எடுத்துக் கடைசியில் மனிதப் பிறவி பிறக்கவேண்டி இருக்கின்றது. அப்படியிருக்க, இந்தப் பூமியிலுள்ள பாரத்தைக் குறைக்க, இந்தப் புனிதமான மானிடப் பிறவி தானே உமக்குக் கிடைத்தது. என் உலகத்தில் எண்ண முடியாத கல்மலை, கரிமலை, பனிமலை, மண்மலை, பொன்மலை, கருங்கல்மலை, செம்புராகல்மலை, சிலேட்டுமலை, சலவைக் கல்மலை, சுண்ணக் கல்மலை முதலிய எத்தனையோ வகை மலைகள் இருக்கின்றனவே! அவற்றில் சிலவற்றை எடுத்தெறிந்துவிட்டால் பூமிப்பாரம் தன்னால் குறைந்து போய்விடாதா? இதற்கு ஏன் இவ்வளவு பெரிய கஷ்டத்தைத் தேடிக்கொள்ள வேண்டும்? அல்லது இதனால் உமக்காவது போற கதிக்கு நல்ல கதி கிடைத்ததா? ஒன்றுமில்லையே! கடைசியில் "தன்னப்பம் தன்னைச் சுடும்; ஒட்டப்பம் வீட்டைச் சுடும்" என்பது போலத் தானே நீர் செய்த கபட நாடகத்திற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போல், காட்டில் வேடன் கை வில்லாலடிபட்டு நடு ஆற்றில் எறியப்பட்டு, சாளக்கிராமம் என்னும் கல்லாய்க் கிடந்து நாளது வரையில் உருண்டு கிடப்பது தானே மிச்சம். சரி, அது எப்படியாவது போகட்டும். இந்த வியாச்சியத்தைப் பற்றி உமக்கு ஏதாவது தெரியுமா?

விடை:- என் மைத்துனர் சிவபெருமான் சொன்னது தான் எனக்கும் தெரியுமேயல்லாது வேறொன்றும் தெரியாது.

வினா:- சரியிருக்கட்டும், உம் கிருஷ்ணாவதாரம் இத்துடன் முடியட்டும். அடுத்த அவதாரத்தையும் சொல்லி வாரும். அதையும் கேட்டுவிடுவோம்.

- "சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ்" நூலிலிருந்து

-விடுதலை,13.8.17