கோயில் கொள்ளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோயில் கொள்ளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

விடை உண்டா விஜயபாரதமே!



- மின்சாரம் -

பல ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆள் நடமாட்டம் இல்லாத சின்னஞ்சிறு சிறிய கோயில்களில் உண்டியல் திருட்டு நடைபெற்று வந்தன - இப்பொழுது பழைமையான பெரிய கோயில்களில் சாமி நகைகளே காணாமல் போகின்றன. பல கோயில்களில் சாமி திருமேனிகளே திருட்டுப் போய் விட்டன. கோயில்களுக்கு நமது முன்னோர்கள் எழுதி வைத்த ஏராளமான நிலங்கள், சொத்துக்கள் கொள்ளை போகின்றன. அரசும் காவல்துறையும் கோயில் சொத்துகளைப் பாதுகாக்கத் தவறி கோட்டை விட்டுள்ளனர்.

(‘விஜயபாரதம்’ ஆர்.எஸ்.எஸ்.

வார இதழ்) 27.7.2018, பக்கம் 3)

விஜயபாரதத்துக்கு ஒன்று தெரியுமா? கோயிலைக் கொள்ளையடிப்பவர்களும் பக்தர்களே என்று சொல்லியிருப்பவர் இந்துமதத்தின் தலைவரான சாட்சாத் சங்கராச் சாரிதான். காஞ்சி காமக்கோடிப் பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதிதான் என்ன சொல்லு கிறார்?

அவர் வாயாலேயே கேட்டால் விஜயபாரத கும்பலுக்கு ருசியாக இருக்குமே!

குமுதம் கேள்வி: பெரிய மற்றும் சிறு கோயில்களில் அடிக்கடி கொள்ளை, கொலை போன்ற விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுகின்றது. இதற்கு என்ன காரணம்? மக்களுக்கு கடவுள்களின் மீதுள்ள பக்தி போய் விட்டதா?

ஜெயேந்திரர் பதில்: கொலை, கொள்ளை செய்யத் துணிகிறவர்களில் அனேகப்பேர் பக்தர்களாகவே இருந்து, ஆண்டவனிடத்தில் பிரார்த்தனை செய்து கொண்டு தப்பித்துக் கொள்வதற்கு வழிதேடுகிறார்கள். நாத்திகத் திற்கும், இப்படி எடுத்து போவதற்கும் சம்பந்தம் இருப்பதாக நாம் நினைக்கவில்லை. பொதுவாக பேராசை ஜாஸ்தியாக விட்டது. பணமுடை அதிகரித்துள்ளது.

(பேட்டி: பால்யூ)

(‘குமுதம்’ - 12.9.1996)

என்ன ‘விஜய பாரத’ வீராதி வீரர்களே! வாயடைத்து நிற்கிறீர்களே என்ன சங்கதி? 150கோடி ரூபாய் மதிப்புள்ள ராஜ ராஜ சோழன், அவரின் மனைவி உலகமகாதேவி சிலைகளை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்திற்கு கடத்தியது யார்? - இப்பொழுது கையகப்படுத்தப்பட்டு தமிழகத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது அல்லவா!

அந்த சிலையைக் கடத்தியவர்கள் யார்? விலைக்கு விற்றவர்கள் யார்? வாங்கிய வர்கள் யார்? அவையும் விஜயபாரதத்தின் விலா எலும்பைக் குத்துவதாகவே இருக்கிறது.

கோயிலில் பணிபுரிந்த அதிகாரிகள் சிலர் தஞ்சையில் உள்ள சலுக்கை கிராமத்தைச் சேர்ந்த ராவ் பகதூர் சீனிவாச கோபாலாச்சாரி மூலமாக சென்னைக்குக் கடத்தப்பட்டது. பின்னர் கவுதம் சாராபாய் என்பவருக்கு கோடிக் கணக்கான ரூபாய்க்கு இரு சிலைகளும் விற்கப்பட்டன. இதை சிலை தடுப்புப் பிரிவு அய்.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்தனர். (விகடன் இணையம் -30.5.2018) (‘டெக்கான் கிரானிக்கள்’ - 2.6.2018)

ராவ்பகதூர் சீனிவாச கோபாலாச் சாரியாராம். இந்தப் பூணூல் திருமேனிக்கு விளக்கம் வேறு தேவையா? ‘விஜய  பாரதங்கள்’ தங்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைக்கப்போகின்றன?

கேள்வி: முயற்சியும் கடும் உழைப்பும் இருந்தால் தெய்வத்தின் அருள் இல்லாமல் போனாலும் வாழ்க்கையில் முன்னேறி விடலாம் என்பது சரியா?

பதில்: முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கூட இறைவன் அருள் இருந்தால் மட்டுமே நடைபெறும் என நம்புகிறதோ!

மார்க்சும், ஏங்கல்சும், விஞ்ஞானிகளும், தந்தைபெரியாரும், அண்ணல் அம்பேத் கரும் பெரிய தலைவர்களாகி இன்று வரை மதிக்கப்படுவதெல்லாம் கடவுள் அருளால் அவர்கள் பெற்ற முயற்சிதானா? அப்படி என்றால் அவர்கள் கடவுள், மதம் உள்ளிட்ட வற்றிற்கு சவுக்கடி கொடுத்து தோரணமாய்த் தொங்க விட்டார்களே - அதுவும் இறைவன் அருளால் தானா?

‘தெய்வத்தான் ஆகா தெனினும்  முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்’

என்பது குறள் (619)

கேள்வி: அடிக்கடி கனவில் பாம்பு வருகிறது. அதைத் தவிர்க்க ஏதாவது பரிகாரம் உண்டா?

பதில்: ‘நாகதோஷம் உள்ளது என்று பொருள். பாம்பு கடிப்பதாக கனவு கண்டால் செல்வம் சேரும். அருகில் உள்ள கோயி லுக்குச் சென்று நாகர் சிலைக்கோ, புற்றுக்கோ பால் ஊற்ற வேண்டும்’ என்று விஜயபாரதத் தின் ஆஸ்தான ஜோதிடர் தெரிவித்தார்.

அப்படியா! பாம்பு கடித்ததாக கனவு கண்டாலே செல்வம் சேருமா? கனவில் காணும் போதே செல்வம் சேரும் என்றால் நிஜமாகக் கடித்தால் பெரும் செல்வம் குவியுமோ!

பாம்புப் புற்றுக்கு பால் ஊற்ற வேண்டுமாம்!

இந்த ‘விஜயபாரதங்களுக்கு’ பொது அறிவோ, விஞ்ஞான அறிவோ அறவே யில்லை என்பதற்கு இந்தப் பதில் ஒன்றே போதுமே!

புற்றில் பால் ஊற்றினால் பாம்பு பால் குடிக்குமா? பிளவுண்ட நாக்கையுடைய பாம்பால் பால் குடிக்க முடியாது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாததுகள் எல்லாம் பேனா பிடிக்கின்றன.

கேள்வி: ‘கீதை’, ‘திருவாசகம்’, ‘திருக்குறள்’ சிறப் பென்ன?

பதில்: இறைவன் மனிதனுக்கு அருளியது கீதை. மனிதன் இறைவனிடம் வேண்டியது திருவாசகம். மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்.

“நான்கு வருணங்கள் என்னால் உண் டாக்கப்பட்டவை; அவரவர்களுக் குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்ய வேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வர்ண தர்ம உற்பத்தியாள னாகிய என்னால் கூட முடியாது”

(கீதை அத்தியாயம்-4, சுலோகம் 13)

“பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள்”

(கீதை, அத்தியாம் 9, சுலோகம் 32)

விஜயபாரதக்குஞ்சுகளே! இந்தக் கீதையை சூத்திரர் களும், பெண்களும், வைஸ்யர்களும் எரிக்க வேண்டுமா? ஏற்க வேண்டுமா? விவேகம் இருந்தால் பதில் சொல் பார்க்கலாம். அது ஒருபுறம் இருக் கட்டும். இந்து மதத்தை அமெரிக்கா வரை ஏற்றுமதி செய்த உங்கள் விவேகானந்தர் கீதைப்பற்றி  என்ன கூறுகிறார்?

கீதையைப் படிப்பதை விட கால்பந்து விளையாடுவது

நல்லது என்று சொன்னவரும் விவேகானந்தரே!

“கீதை என்ற நூல் மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். கீதையைச் சரிவர புரிந்து கொள்ள மிகமிக முக்கியமான பலவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.

முதன் முதலில் மகாபாரதத்தின் ஒரு பகுதியாக-  அதாவது வேத வியாசர் எழுதி யதா? அல்லது அதில் புகுத்தப்பட்டதா?

இரண்டாவதாக கிருஷ்ணன் என்பவர் சரித்திர ரீதியாக உயிர் வாழ்ந்த ஒருவரா?

மூன்றாவதாக கீதையில் கூறப்படுவது போல் குருசேத்திரப் போர் உள்ளபடியே நடந்ததா?

நான்காவதாக அர்ஜூனனும் ஏனைய வர்களும் உள்ளபடியே உயிர் வாழ்ந்தவர்கள் தானா? என்பன. கீதையைச் சங்கராச்சாரியார் எழுதி மகாபாரதத்தில் புகுத்தினார் என்று சிலர் கருதுகிறார்கள்.

எது எப்படியிருந்தாலும் சரி, யார் கீதையை வெளி யிட்டிருந்தாலும் சரி - குருசேத்திர யுத்தம் நடைபெற்றது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

யுத்தத்தில் கிருஷ்ணன் அர்ஜூனனுடன் எல்லையற்ற விவாதத்தில் இறங்கினான் என்றால் இதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? அப்படியே உரையாடினார்கள் என்றால் பக்கத்தில் ஒரு சுருக்கெழுத்தாளரை வைத்துக் கொண்டா என்ற பிரச்சினை எழுகிறது.

அர்ஜூனன், ஏனையப் பெயர்கள் பயன்படுத்தப் பட்டுள்ளனவே தவிர, இவர்கள் இருந்தனர் என்றோ, குரு சேத்திர யுத்தம் செய்தனர் என்றோ கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

(விவேகானந்தர் - ‘கீதையைப்பற்றிக் கருத் துகள்’ என்ற நூலில் (ஆதாரம்: ஏ.எஸ்.கே. எழுதிய ‘பகுத்தறிவுச் சிகரம் பெரியார்’ என்ற நூலில் - பக்கம் 117)

கீதை முட்டாள்களின் உளறல் என்றாரே- அண்ணல் அம்பேத்கர்!

பரவாயில்லையே - குறளையாவது மனிதனுக்கு மனிதன் சொன்னது என்று ஒப்புக் கொண்டதே. திருக்குறளை மனுதர்மத்தின் பிழிவு என்று சொன்ன திலிருந்து புத்தி மாறியிருப்பது வரவேற்கத்தக்கதே..

- விடுதலை ஞாயிறு மலர் 4. 8. 18

புதன், 21 மார்ச், 2018

கோயில் சொத்துக்களை கொள்ளையிடும் ஆரிய பார்ப்பனர்கள்!

"கோயில் சொத்துகளை எல்லாம் நாத்திகம் பேசும் திராவிடக் கட்சியினர் விழுங்கி வருகின்றனர். இந்து தர்மத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், அறநிலையத் துறையிடம் இருந்து கோயில்களை பிடுங்கி, சுதந்திரமான ஆன்மீகவாதிகள் அடங்கிய வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்'' என்று இந்து முன்னணி கோரி வருகிறது.
மயிலை (சென்னை) கபாலீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாடகையோ, குத்தகையோ கொடுக்காமல் அனுபவித்துக் கொண்டிருக்கும்  இந்து விரோதிகளின் பட்டியலை அக்கோயிலின் நிர்வாக அதிகாரியான பரஞ்சோதி வெளியிட்டிருக்கிறார். மொத்தம் 473 பேரில் இரண்டு பேர் மட்டுமே முஸ்லிம்கள். ஹிந்துக்கள் 471 பேரில் சில முதலியார்கள், நாடார்கள் தவிர ஆகப் பெரும்பான்மையினர்  அய்யர்-அய்யங்கார்களாகவே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வாடகை கொடுக்காத ப்ராடுகளின் பட்டியலில் முக்கியமானது பாரதிய வித்யா பவன். கதர் அணிந்த காக்கி டவுசர் பேர்வழியும்,  காந்தி கொலைக்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை அகற்றுவதில் முக்கியப் பங்காற்றியவருமான கே.எம்.முன்ஷியால் தொடங்கப் பட்ட நிறுவனம்தான் பாரதிய வித்யா பவன். இதன் முக்கியத் தூண்களில் ஒருவர் ராஜாஜி. கல்வியைப் பரப்புவது என்ற பெயரில் பார்ப்பனியத்தையும், சமஸ்கிருதத்தையும் பரப்பி வரும் இந்த ஆர்.எஸ்.எஸ். பினாமி நிறுவனம் கபாலீசுவரருக்கு வைத்திருக்கும் வாடகை பாக்கி 32 இலட்ச ரூபாய்.

அடுத்தது, மயிலாப்பூர் கிளப். ஜனவரி,1, 1903 அன்று தொடங்கப்பட்ட பெருந்தனக்காரர்களின் தனி உடைமை கிளப்பான இது,  3 அய்யர், 3 அய்யங்கார் மற்றும் ஒரு முதலியாரை உரிமையாளர்களாகக் கொண்டது. தற் போதைய இதன் தலைவர் எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார். கிரிக்கெட், டென்னிஸ் விளையாட்டுகளுக்கு மேட்டுக்குடிக் குலக்கொழுந்துகளைத் தயார்படுத்தும் பயிற்சித் திடல், உறுப்பினர்களுக்குச் சீட்டாட்டம், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், ஜிம், வட இந்தியதென் இந்திய உணவு விடுதிகள் மற்றும் 24 மணி நேர பார் போன்ற வசதிகள், சாஸ்திரி ஹால் என பல கிரவுண்டு கோயில் நிலத்தைக் குத்தகைக்கு வளைத்துப் போட் டிருக்கும் இந்த ஆன்மீக மெய்யன்பர்கள் கபாலிக்கு வைத்திருக்கும் குத்தகை பாக்கி 3.57 கோடி ரூபாய்.

'தேசியத் தலைவர்' எனப் பெத்த பேர் வாங்கிய தெலுங்கு பார்ப்பனரான நாகேஸ்வர ராவினால் ஆரம் பிக்கப்பட்டு, ஊருக்கெல்லாம் தலைவலி தைலம் தரும் அமிருதாஞ்சன்  நிறுவனம் கபாலீசுவரருக்கு வைத்திருக் கும் குத்தகைப் பாக்கி ரூ.6 கோடியே 45 இலட்சம்.

கல்விக்கும் ஒழுக்கத்துக்கும் பேர் போனதாக மெச்சிக் கொள்ளப்படுவது பி.எஸ். ஹைஸ்கூல் என்று அழைக்கப்படும்  பெண்ணாத்தூர் சுப்பிரமணிய அய்யர் மேல்நிலைப் பள்ளி. கோயிலுக்குச் சொந்தமான 76 கிரவுண்ட் நிலத்தை 1928-இல் குத்தகைக்கு எடுத்தது. பின்னர் குத்தகை ஒப்பந்தம் 1979-இல் புதுப்பிக்கப் பட்டிருக்கிறது. இன்று ஒரு கிரவுண்ட் நிலத்தின் சந்தை விலை ரூ.5 கோடிக்கும் மேலாகும். பல பிரபல உயரதி காரிகளை உருவாக்கியதாகப் பீற்றிக்கொள்ளும் இந்தப் பள்ளி, 76 கிரவுண்டுகளுக்கு ஆண்டு குத்தகையாக ரூ. 1250 ஐ மட்டும் ஒரே ஒருமுறை தந்துவிட்டு, கபாலீசு வரரைக் கோர்ட்டுக்கு இழுத்து வாய்தாவுக்கு அலைய விட்டுக் கொண்டிருக்கிறது.

மயிலாப்பூரில் காமதேனு திரையரங்குக்கு எதிரே கபாலீசுவரருக்குச் சொந்தமான 25 கிரவுண்ட் நிலத்தை ஆக்கிரமித்திருப்பவர் பார்த்தசாரதி அய்யங்கார். இன்று அந்த நிலத்தின் மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல். 1901- இல் 99 வருடக் குத்தகையாக எடுத்த அய்யங்கார், இதனை உள்குத்தகைக்கு விட்டு, அது பல கை மாறி இன்று வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் எழுப்பப்பட்டு, 35 பேர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இப்படியே போகிறது பட்டியல். முதலை வாயில் சிக்கிய இந்தச் சொத்துகளை ஒவ்வொன்றாக மீட்பதற்கு நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள். பாரம்பரியமிக்க பெரிய மனிதர்களின் கிளப் என்று கூறப்படும் மயிலாப்பூர் கிளப்பின் வாசலில், 'இது கபாலீசுவரர் கோயில் சொத்து' என்று போர்டு எழுதி வைத்திருக்கிறது இந்து அறநிலை யத்துறை. அய்யர், அய்யங்கார்வாள்கள் இதையெல்லாம் பார்த்துக் கூச்சப்பட்டு சொத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவார்களா என்ன?

அற்ப வாடகை, குத்தகை பாக்கியைக்கூடக் கொடுக் காமல், அறநிலையத்துறையை இவர்கள் கோர்ட்டுக்கு இழுப்பதன் நோக்கமே கோயில் சொத்தை விழுங்குவது தான். 'வாரியம் அமைத்து விழுங்கவேண்டும்‘ என்பது இந்து முன்னணியின் கோரிக்கை. விழுங்கியவர்களை வைத்து வாரியம் அமைக்கலாம் என்பது பாரதிய வித்யா பவனின் கருத்து போலும். படுத்திக்கினு போத்திக்கலாம். போத்திக்கினும் படுத்துக்கலாம் என்ற கதைதான்.

சிதம்பரம் நடராசர் கோயில் விசயத்தில் நடந்தது என்ன? கோயில் சொத்துகளை கொள்ளையிடும் தீட்சி தர்களை வெளியேற்றிக் கோயிலை அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வைத்தன மனித உரிமைப் பாதுகாப்பு மையமும் மக்கள் கலை இலக்கியக் கழகமும். நடராசன் சொத்துகளை நடராச தீட்சிதர் என்று கையெழுத்துப் போட்டு விற்றிருப்பதற்கான சான்றுகளும், நகைத் திருட்டு தொடர்பாக தீட்சிதர்கள் மீது உள்ள கிரிமினல் வழக்குகளின் விவரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டதன் விளைவாக சென்னை உயர் நீதிமன்றம்,கோயிலை அறநிலையத்துறையிடம் ஒப்படைத்துவிட்டது.

தீட்சிதர்களாகிய தங்களில் ஒருவர்தான் நடராசப் பெருமான் என்றும், எனவே கோயிலும் அதன் சொத்து களும் தங்கள் ஆன்மீக உரிமை என்றும் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறார்கள் தீட்சிதர்கள். சு.சாமியும் இந்து முன்னணிக் கும்பலும் தீட்சிதர்களுக்கு ஆதரவு. சிதம்பரம் கோயிலுக்கு எத்தனை ஆயிரம் ஏக்கர் நிலம், எத்தனை மனைகள், கட்டிடங்கள் இருந் தன, தீட்சிதர்கள் தின்றது போக இன்று மிச்சம் என்ன இருக்கிறது, எங்கே இருக்கிறது என்ற உண்மைகளைக் கண்டுபிடிப்பது, ஸ்விஸ் வங்கி கருப்புப் பணத்தைக் கண்டுபிடிப்பதை விடக் கடினமானது.

கோயில், மடங்களின் பேரில் இருந்த சொத்துகளை பார்ப்பன, ஆதிக்க சாதிக் கும்பல் தின்று கொழுத்ததை முடிவுக்குக் கொண்டுவர சர். டி.சதாசிவ அய்யர், பனகல் ராஜா ஆகியவர்கள் முயன்று 1927ஆம் வருடத்தில் இந்துமத தர்மபரிபாலன சட்டத்தை நிறைவேற்றினார்கள். அச்சட்டப்படி தர்மகர்த்தாக்கள் அடங்கிய வாரியம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு, கோயில் சொத்துகள் நிர்வகிக் கப்பட்டன. இச்சட்டம் நிறைவேறுவதை சத்தியமூர்த்தி அய்யர் முதல் எம்.கே.டி. ஆச்சாரி வரை அனைத்துப் பார்ப்பனிய சக்திகளும் கடுமையாக எதிர்த்தனர். 1951-இல் அன்றைய தமிழக முதல்வரான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், இந்து சமய அறநிலையத் துறை எனும் அரசுத்துறையை உருவாக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தார். அதற்காக அவரை சுதேசமித்திரன் போன்ற பார்ப்பனப் பத்திரிகைகள், வெளியே ஒரு கருப்புச்சட்டை ராமசாமி (பெரியார்),  உள்ளே ஒரு கதர்ச்சட்டை ராமசாமி என திட்டித் தீர்த்தன.

''1951க்கு முன்பு தர்மகர்த்தாக்கள் வேண்டுமென்றே நிலத் தீர்வையையோ அல்லது போர்டாருக்குச் செலுத்த வேண்டிய தொகையையோ செலுத்தாது வைத்து, கோவில் நிலங்களை ஏலத்துக்குக் கொண்டுவந்து தாங்களே தட்டிக்கொண்டு போயிருக்கிறார்கள். என்றும் தஞ்சாவூர் ஜில்லாவில் வேதாரண்ய ஈஸ்வரர் தேவஸ் தானத்துக்கு 16,000 ஏக்கர் நிலம் கொண்ட 45 கிராமங்கள் சொந்தமாக இருக்கின்றன. இருந்தும்கூட, இதன் வருஷ வருமானம் இன்று ரூ.75,000 என்றுதான் காட்டப்படுகிறது. வட ஆற்காடு  ஜில்லாவில்  ஒரு கோவிலின் தர்ம சொத்துக்கள் பூராவுமே ஒரு ஜாகீரின் சொந்த சொத்தாக மாறிவிட்டது. தஞ்சாவூர் ஸ்வர்க்கபுரம் மடத்தில் சுமார் ரூ.15,000 ரொக்கம் கையாடல் செய்யப்பட்டு, 26 ஏக்கர் நிலம் பராதீனம் ஆகியிருக்கிறது. திருச்செங்கோட்டிலும் வேதாரண்யத்திலும் நகைகள் காணாமல் போயுள்ளன என்றும் குறிப்பிட்டு, இந்து அறநிலையத் துறையின் தேவையை அன்று ஓமந்தூரார் வலியுறுத்தியுள்ளார்.

இன்று அறநிலையத்துறை இருக்கிறது. சொத்துகள் தான் இல்லை. மிகவும் அரிதாக சில அதிகாரிகள் இப் படிக் களவு போன கோயில் சொத்துகளின் பட்டியலை வெளியிடுகிறார்கள். ஒரு கபாலீசுவரர் கோயில் சொத்து விவகாரம் அரைகுறையாக வெளியே வந்திருக்கும் போதே, கொள்ளையின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் என்று தெரிகிறது. பிரிக்கப்படாத சென்னை மாகாணத்தில் 1951-இல் இருந்த பெரிய மடங்கள் 184. பெரிய கோவில்கள் 12,232. இவற்றிற்கு சுமார் 8 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருந்தன. பிரிக்கப்பட்ட பின் இவை 6 லட்சம் ஏக்கர்களாகின. அந்த நிலங்கள் மற்றும் சொத் துகள் யாரிடம் இருக்கின்றன என்ற விவரத்தை அற நிலையத்துறை வெளியிட வேண்டும். அந்த சொத்துகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு மக்களின் உடை மையாக்கப்பட வேண்டும். சென்னை உள்ளிட்ட தமிழ கத்தின் பெருநகரங்களில் விழுங்கப்பட்டுள்ள கோயில் சொத்துக்கள் பல ஆயிரம் ஏக்கர் இருக்கும். அந்தக் கோயில் சொத்துக்களைப் பறிமுதல் செய்து, அவற்றில் வீடற்ற ஏழைகளைக் குடியேற்ற வேண்டும்.
தமது மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை  அனைத்தையும் தீர்த்துக் கொள்ளவும், ஊர் சொத்தைக் கொள்ளையடிக்கவும், கடவுளின் பெயரைக் கவசமாகப் பயன்படுத்திய கயவர்களின் வாரிசுதான் இந்து முன் னணி முதலான அமைப்புகள். மயிலாப்பூர் கிளப்பையும் பாரதிய வித்யா பவனையும் இடித்துவிட்டு, கபாலீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தை மீட்போம் என்று ஒருவேளை அறநிலையத்துறை அறிவித்தால், இந்து முன்னணியினர் இரவோடு இரவாக கபாலி கோயிலையே இடித்து விட்டு, அதைச் சர்ச்சைக்குரிய இடம் ஆக்கி விடுவார்கள். கபாலிக்குக் கோயில் சொந்தம் என்று நிரூபித்த பின்னர்தானே, கோயிலுக்கு கிளப் சொந்தம் என்று பேசவே முடியும்.

- நன்றி: 'புதிய ஜனநாயகம்‘, பிப்ரவரி, 2012

- விடுதலை நாளேடு, 21.3.18