புதன், 31 ஜனவரி, 2018

ஆண்டாள் தாசி-- முழு விளக்கம்

ஆண்டாள் தாசி-- முழு விளக்க ஆதாரபூர்வமான கட்டுரை... விளக்கம் வேண்டுவோர் முழுதும் படிக்கவும்... பார்ப்பனீய புரட்டுகளை புரிந்துகொள்ளவும்...

கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ஒரு கட்டுரை ‘தினமணி'யில் (8.1.2018) வெளிவந்தது. ஆண்டாள் யார் - அவர் எத்தகையவர் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டைக் கொடுத்து எழுதியிருந்தார்.

Andal was herself a Devadasi who lived and died in srirangam temple

ஆண்டாள் என்பவர் தேவதாசியாக சிறீரங்கம் கோவிலில் வாழ்ந்து மரணமடைந்தாள் என்பது இதன் பொருள்.

இதனைச் சொல்லுவது கவிஞர் வைரமுத்தல்ல - அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக் கழகம் சுபாஷ் சந்திரமாலிக் என்பவர் எழுதி வெளியிட்ட  Indian Movement some aspects of dissent, protest and reform  நூலில் இது காணப்படுகிறது என்று கவிப்பேரரசு ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டிய பிறகு, அவர்மீது விழுந்து பிராண்டுவது ஏன்?

1978 இல் இந்த நூல் வெளியாகி உலகம் பூராவும் பரவிவிட்டதே! 40 ஆண்டுகளாக என்ன செய்தார்கள்?

திராவிடர் கழகத் தலைவர் சொன்னதுபோல, ‘ஊருக்கு இளைத்தவர்தானா இந்தப் பிள்ளையார் கோவில் ஆண்டி?'

இதில் மிக முக்கியமான நோக்கத்தக்க கருத்துண்டு. ஆண்டாள் தேவதாசிஎன்றால், இவர்களுக்கு ஏன் கோபம் குபீர் என்று கொப்பளிக்கவேண்டும்?

இந்து மதத்தில் தேவதாசி என்பது கெட்ட பொருள் கொண்டது அல்லவே! அந்த சொல்லிலேயே பொருள் இருக்கிறதே - தேவர்களுக்குத் தாசி என்று.

தேவதாசியாக இருப்பது இந்து மத சம்பிரதாயப்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட புனிதமான அம்சம்தானே!

சென்னை மாநில சட்டப்பேரவையில் நீதிக்கட்சி ஆட்சியின்போது டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களால் கொண்டு வரப்பட்ட தேவதாசி ஒழிப்பு மசோதாவுக்கு எதிராக வாயாடி சத்தியமூர்த்தி அய்யர்வாள் ஆகாயத்துக்கும், பூமிக்கும் பூணூலை முறுக்கிக் கொண்டு தாவிடவில்லையா? இந்து மத சம்பிரதாயத்தில் தலையிடுவதா? தேவர்களுக்குத் தாசியாக இருப்பது புனித செயலே என்று ஆர்ப்பரித்தாரா இல்லையா?

அன்று சட்டசபையில் நடந்தது என்ன?

திரு.சத்தியமூர்த்தி அவர்கள் விபச்சார ஒழிப்பு மசோதாவைப்பற்றிப் பேசுகையில், ‘‘பெண்கள் எவ்வளவுதான் விபச்சாரம் செய்தாலும், அதனால் யாருக்கு எவ்வளவு துன்பம் நேரிட்டு வந்தாலும் விபச் சார ஸ்திரீகளும் நம்மவர்களேயானதால் அவர்கள் விஷயத்தில் அனுகூலமாயிருக்கவேண்டுமென்று சிபாரிசு பேசினதும், ‘தேவதாசித் தொழில் போனால் மதம் போய்விடும்' என்றதும், ‘இன்று தேவதாசித் தொழிலை நிறுத்தினால், திரு.ராமசாமி நாயக்கர் நாளை அர்ச்சகத் தொழிலை நிறுத்த சட்டம் செய்ய வந்துவிடுவாரே என்று ஆத்திரப் பட்டதும் ‘மித்திரன்' தேவதாசி மசோதாவால் தேவதாசித் தொழிலுக்குக் குந்தகம் ஏற்பட்டுவிட வில்லை என்று தேவதாசிகளுக்கு வியாக்கியானம் செய்து மறுபடியும் அதே தொழிலில் இருக்க உற்சாகத்தையும், தைரியத்தையும், ஆசையையும் ஊட்டுவதையும் பார்ப்பவர்களுக்கு நாட்டின் ஒழுக்கத் திற்கோ, சுயமரியாதைக்கோ, விடுதலைக்கோ இத் தேசீயப் பத்திரிகைகளும், ‘தேசீய வீரர்'களும் அனு கூலமாயிருப்பார்களா என்பது இவர்களுடன் யோக்கி யர்கள் வந்து வேலை செய்ய முடியுமா என்பதும் தானாகவே விளங்கும்.
(‘குடிஅரசு', 10.2.1929)

தேவதாசிக்கு வக்காலத்து வாங்கிய சத்தியமூர்த்தி அய்யர் இந்து இல்லையா? இதற்கு மன்னார்குடி ஜீயர்தான் பதில் சொல்லவேண்டும்.

‘‘தேவதாசியாக இருப்பது ஆண்டவனுக்குச் செய்யும் சேவையென்றும், அப்படி தாசியாக இருந்து சேவை செய்தால் அடுத்த ஜென்மத்தில் புண்ணியம் கிடைக்கும் என்றும் திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர் வாள் இங்கு பேசினார். அப்படியானால், எங்கள் சமூகத்தவர்களே இதுவரை தாசியாக இருந்து புண் ணியத்தை அனுபவித்தது போதும் - போதும்! இனிமேல் சத்தியமூர்த்தி அய்யர்வாளைச் சேர்ந்தவர்கள் தேவ தாசியாக இருந்து அந்தப் புண்ணியத்தை அனுபவிக் கட்டும் - எங்களுக்கொன்றும் ஆட்சேபணை இல்லை'' என்று சத்தியமூர்த்தியிடம் முகத்துக்கு முகம் மொத்தி னாரே டாக்டர் முத்துலட்சுமி! வாயாடி சத்தியமூர்த்தி அய்யர் ஆயாடி என்று அடங்கிப் போய்விடவில் லையா?

சத்தியமூர்த்தி அய்யர்வாளின் இந்தக் கதையெல் லாம் காரைக்குடி அம்பிகளுக்குத் தெரியாதோ!

ஆண்டாள் தேவதாசி என்று சொல்லுவது இழிவு படுத்தக் கூடியது என்றால், இந்து மத சம்பிரதாயம் இழிவு என்பதை அவாளை அறியாமலேயே ஒத்துக் கொண்டதாக அர்த்தம்.

பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த நாட்டிய நடிகை ஸ்வர்ணமால்யா என்ற பார்ப்பனப் பெண் மகளிர் கல்லூரி விழா ஒன்றில் (30.7.2017) கடவுளின் மனைவி மார்கள், தேவதாசிகள் புனிதர்கள் என்று பேசினாரே!

இப்பொழுது கேள்வி எல்லாம் ஆண்டாளைக் காப்பாற்றப் போகிறாளா? அல்லது இந்து மதத்தைக் காப்பாற்றப் போகிறாளா? என்பதுதான்.

ஆண்டாளைக் காப்பாற்ற நினைத்தால், இந்து மதத்தில் தேவதாசி முறையை ஏற்படுத்திய இந்து மதத்தின் முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி குத்த தயாராகி விட்டார்கள் என்று பொருள்.

மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு என்று ‘தினமலரில்' இன்று ஒரு செய்தி வெளிவந்துள்ளது. தேவதாசி என்று ஆய்வு ஒன்றை மேற்கோள்காட்டி கவிப்பேரரசு எழுதியது கண்டு இவுர் எரிச்சல் அடைந்து நிதானமின்றி எழுதியுள்ளார். ஜீயர் கருத்துப்படி தேவதாசி என்பது இழிவானதாகும். ஆனால், மன்னார்குடி ஜீயருக்கு அவர் சார்ந்த மதத்தைப்பற்றிய அடிப்படை அறிவுகூட இல்லை என்பது நிதர்சனமாகத் தெரிகிறது.

மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் சுவாமிகளுக்கு அதே வைணவ மடத்தைச் சேர்ந்த மற்றொரு மடாதிபதி யோகி சிறீராமானந்த குரு (மஹா சிறீநாராயண மிஷன் கடனூர் அஞ்சல், விழுப்புரம் மாவட்டம், தொலைப்பேசி எண்: 9442464341) தேவதாசிகள்பற்றி சிலாகித்து எழுதி யதை எடுத்துக் காட்டினால், அவாளுக்குக் ‘குளிர்ச்சி யாக' இருக்கும் அல்லவா!

இதோ மடாதிபதி யோகி சிறீராமானந்த குரு பேசுகிறார்:

‘‘ஆகமங்கள் அனைத்துமே தேவதாசி பெண்களை ருத்திர கன்னிகை என்றே பெயரிட்டு அழைக்கிறது.

தேவதாசி பரம்பரையில் இரண்டு வகை உண்டு. முதலாவது வகை பதியிலார் என்பதாகும். இந்த வகையைச் சார்ந்த பெண்கள் மனிதர்கள் யாரையும் கணவனமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இறைவ னான மகாதேவனையே தனது பதியாக அதாவது கணவனாக ஏற்று வாழ்க்கையை நடத்துவார்கள். இதனால் இவர்களுக்கு நித்திய சுமங்கலிகள் என்ற பட்டமும் உண்டு.

ஏறத்தாழ தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்தணர்களைப் போலவே தேவதாசிகளும் ஆலய கருவறைக்குள் சென்று வந்தனர். இதற்கான ஆதாரங்கள் திருச்செந்தூர் சுப்ரமணியர் ஆலயத்தி லும், திருவாரூர் தியாகராஜர் ஆலயத்திலும் உள்ளன.

ஓர் ஆலயத்தில் பணிபுரியும் தேவதாசி இறந்து விட்டால், அவள் உடலை சாதாரண துணியால் மூட மாட்டார்கள். ஆலய மூல மூர்த்திக்குப் போற்றப்பட்ட புனித ஆடை மரியாதையுடன் கொண்டு வந்து  அவள் உடல்மீது போர்த்தப்படும். அன்று முழுவதும் ஆலய வழிபாடு நிறுத்தி வைக்கப்படும். இறுதி ஊர்வலத்திற்கு எடுத்துச் செல்லப்படும். அவளது உடல், கோவிலின் ராஜகோபுரத்தின் முன்னாள் சிறிதுநேரம் நின்றே மயானத்திற்குக் கொண்டு செல்லப்படும். சாதாரண மனிதர்களுக்குக் கிடைக்காத பெரும் பேறாகிய ஆலய நெருப்பு எடுத்துச் செல்லப்பட்டே அவள் சிதை எரியூட்டப்படும்!''

இவ்வளவுப் பிரமாதமாக இந்து மதக் கண் ணோட்டத்தில் ஒரு வைணவ மடாதிபதி சிலாகித்து தேவதாசிகள்பற்றிக் கூறும்போது, மன்னார்குடி ஜீய ராகட்டும், இந்துத்துவா பேர்வழிகளாகட்டும் ஏன் குதியாட்டம் போடுகிறார்கள்?

திராவிடர் கழகத் தலைவர், ‘‘ஆண்டாள் என்ற பாத் திரமே கற்பனையானது'' என்று ராஜாஜி சொன்னதை எடுத்துக் கூறியுள்ளாரே!
கவிஞர் வைரமுத்துவை காயும் கூட்டம் ராஜாஜியைக் கண்டிக்கத் தயார்தானா?

சொல்லப்போனால், ராஜாஜி கடைந்தெடுத்த வைணவர் ஆயிற்றே - ஆண்டாள்மீது அவருக்கு இல்லாத அக்கறையா இந்த அம்பிகளுக்கு?

ஆண்டாளை ஆவர்த்தனம் செய்யும் அட அய்யன்மார்களே, அய்யங்கார்மார்களே, பெண்ணான ஆண்டாள் பாடிய பாடலின் தரமென்ன? விரக தாபமெடுத்த ஒரு பெண்ணின் காமக் கூச்சலாக இல்லையா?

2009 ஆம் ஆண்டில் இராகவன் என்ற பார்ப்பனர், ஆண்டாள் ஒரு காமக்கிழத்தி (வெளியீடு கிழக்குப் பதிப்பகம்) என்று நூல் எழுதி வெளிவந்ததே - அப்பொழுதெல்லாம் இந்த அம்பிகள் எங்கே போனார்களாம்?

(ஆண்டாளின் காமக் குரோதப் பாடல்கள் பெட்டி செய்தி காண்க).

கவிப்பேரரசு எழுதியதோடு, பேசியதோடு விட்டி ருந்தால் அந்த அளவோடு முடிந்திருக்கும். பார்ப்பனர் கள் தேவையில்லாமல் சீண்டப் போய் அஸ்தி வாரத்தையெல்லாம் தோண்டக்கூடிய ஒரு நிலையை யல்லவா ஏற்படுத்தி விட்டார்கள்.

பார்ப்பான் படித்தவனே தவிர அறிவாளியல்ல என்று அண்ணல் அம்பேத்கர் காரணமில்லாமலா சொல்லுவார்?

பார்ப்பானுக்கு ஏது முன்புத்தி?

மற்றொரு கேள்விக்குத் தமிழர் தலைவர் வெகுநேர்த்தியாகப் பதில் சொல்லியுள்ளார்.

மதங்களுக்குச் சகிப்புத் தன்மை இல்லை என்பதற்கு எண்ணாயிரம் சமணர்களை, சைவர்கள் கழுவேற்றிக் கொன்றதை எடுத்துக் கூறியிருக்கிறார்.

கிறித்துவ மதத்தை எடுத்துக்கொள்ளலாம். உலகம் உருண்டை என்று சொன்ன கலிலியோ தண்டிக்கப் பட்டதுண்டு. கடவுள் உயிர்களைப் படைக்கவில்லை என்று கூறி பரிணாமத் தத்துவத்தைச் சொன்ன (Evolution) டார்வினுக்கு எவ்வளவு எதிர்ப்புகள்!

ஆனால், போப் ஜான்பால் ஃபோன்டிகால், அகாடமி

ஆஃப் சயின்ஸ்  என்ற அமைப்புக்கு அனுப்பிய செய்தி ஒன்றில், ‘டார்வினின் பரிணாம வளர்ச்சித்  தத்துவத் தினை அங்கீகரிக்கச் செய்கிறோம். டார்வின் கொள் கையைப் பள்ளிகளில் போதிக்கவேண்டும் என்று சொன்னாரே (‘The Hindu', 20.10.1996).

கலிலியோ சொன்ன உலகம் உருண்டை என்பதை யும் ஒப்புக்கொண்டவரும் (1992) இதேபோல் ஜான் பால்தான்.

ஒரு காலகட்டத்தில் செய்த தவறுக்காக வருத்தம் தெரிவித்து உண்மையை ஒப்புக்கொள்ளும் பக்கு வமும், பெருந்தன்மையும் கிறித்துவ மதத்திற்கு இருப்பதுபோல, எண்ணாயிரம் சமணர்களை சைவம் கழுவேற்றிக் கொடூரமாகக் கொன்றதே - அதற்காக சங்கராச்சாரியாரை வருத்தம் தெரிவிக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

புராணங்கள் என்றாலே புழுதி மேடுகள்தான். பூமியைப் பாயாகச் சுருட்டிக் கடலில் விழுந்தான் இரண்யாட்சதன் என்றும், மகாவிஷ்ணு வராக (பன்றி) அவதாரமெடுத்துக் கடலுக்குள் குதித்துப் பூமியை மீட்டான் என்றும், அந்தப் பூமிக்கும், பன்றிக்கும் காதல் ஏற்பட்டு, கலவியும் நடந்து நரகாசுரன் பிறந்தான் என்றெல்லாம் அறிவுக்குக் காயடிக்கும் கேவலமான மட்டமான மூடத்தனத்தை மய்யமாகக் கொண்ட தீபாவளியைக் கொண்டாடச் சொல்பவர்களும் அந்த நாளில் கங்கா ஸ்நானம் ஆயிற்றா? என்று கூறும் சங்கராச்சாரியார்களும் உழலும் ஒரு நாட்டில், ஒழுக்கத்தையும் அறிவையும்பற்றி உசாவலாமா? அப்படி உசாவினால், ‘அக்கிரமம், அக்கிரமம், நாத்திகம் பேசறாள்' என்று அம்பிகள் அலறுவார்கள் - அய்யோ பரிதாபம்!

ஆண்டாளை தேவதாசி என்று ஆதாரப்படி சொன்னதற்காக ஆவேசப்படுவோரே! காலம் காலமாக இந்து வேதங்கள், மனுதர்மம், கீதைப்படி பெரும்பாலான பார்ப்பனர் அல்லாதாரை சூத்திரர்கள் என்றும்,  வேசி மக்கள் என்றும் (மனுதர்மம் அத்தியாயம் 8; சுலோகம் 415) என்று எழுதி வைத்துள்ளீர்களே!

அதன் அடிப்படையில் சூத்திரர்கள் அர்ச்சகராகக் கூடாது என்று உச்சநீதி மன்றம்வரை சென்று முட்டுக்கட்டைப் போடுகிறீர்களே - நியாயமாக 97 சதவிகித மக்கள் விழித்துக் கொண்டால், உங்கள் நிலை என்னாகும் என்று சிந்தித்ததுண்டா?

குறிப்பு: வைரமுத்து அவர்களைக் கடித்துக் குதறும் அய்யன்மார்கள், அந்த ஆய்வுரைக்கு ஏற்பாடு செய்த - அந்தக் கட்டுரையை வெளியிட்ட ‘தினமணி' ஆசிரியர் வைத்தியநாதன்பற்றி ஒரு வார்த்தை பேசாதது ஏன்? உரசாதது ஏன்? ஏன்? அதுதான் அவாளுக்கே உரிய முழு குத்தகைக்கு எடுக்கப்பட்ட ‘இனப்பற்று!'

கொக்கோகம் தோற்றோடும் பாடலுக்குச் சொந்தக்காரர் ஆண்டாள்!

ஆண்டாள் அருளிச் செய்த நாச்சியார் திருமொழியில் உள்ளபடி....

அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
ஆதரித் தெழுந்த என்தட முலைகள்
உன்னித் தெழுந்த என்தட முலைகள்
சாயுடை வயிறும் என் தட முலைகள்
துவரைப் பிரானுக்கே! ஊனிடை யாழி சங்கு உத்தமர்க்கே! என்று உருகித் தவிப்பாராம்!

ஏக்கத்தின் உருக்கத்தால் பாடும்போது:

முத்தன்ன வெண்முறுவல்
செவ்வாயும் முலையும்
அழகழிந்தேன் நான்!
புணர்வதோராசையினால் என்
கொங்கை கிளர்ந்து
குமைத்துக்
குதூகலித்து ஆவியை ஆகுலம்
செய்யும் அங்குயிலே!
கண்ணீர்கள்
முலைக்கு வட்டில் துளி
சோரச்சோர் வேனை காமத்தீயுள் புகுந்து
கதுவப்பட்டு இடைக்கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு
இங்கிலக்காய்
நானிருப்பேனே!
என்னாகாத்திளங் கொங்கை
விரும்பித்தாம் நாள்தோறும்
பொன்னாகம் புல்குதற்கு
எனப் புரிவுடைமை
செப்புமினே!
கொங்கைமேல் குங்குமத்தின்
குழம்பழியப் புகுந்து
ஓர் நந்நாள்
தங்குமேல் என்னாவி
தங்குமென்று உரையீரே!
கொங்கைத் தலமிவை
நோக்கிக் காணீர்
கோவிந்தனுக்கல்லால்
வாயில் போகா!

(கொங்கைக்கும் செவ்வாயிற்கும் உறவு பற்றியது இது!)

காமப் பாதையில் கண்ணன் நாமம்
குற்றமற்ற முலைதன்னைக் குமரன்
கோலப்பணைத் தாளோடு
அற்றகுற்றமவைதீர அணைய
அமுக்கிக் கட்டீரே!

எப்படி அணைத்தல், அமுக்கல் வர்ணனைகள்! விரகதாபம் எடுத்த ஒரு பெண்ணின் காமப் பீறிடல்கள்தானே இவை?

கடவுளை தந்தை இடத்தில் வைத்துப் பூசிப்பவரை அறிவோம். கடவுளைத் தன் கணவனாக வரித்து அவனைப் புணர ஆசைப்படும் பக்தையைத் தூக்கிப் பிடிக்க ஜீயர்களே வருகிறார்களே!

இந்த வெட்கக்கேட்டை என்னவென்று சொல்லு வதோ!

‘ஆண்டாள்' கதை பொய் -
ஆச்சாரியார் கூறுகிறார்!

வைணவ மதத்தின் ஆழ்வார்களுள் ஒருவர் எனப் போற்றிப் புகழப் படுபவரும், ‘சூடிக் கொடுத்த நாச்சியார்' என்று கூறப்படுபவரும், மார்கழி மாதத்திலே ‘பஜனை என்ற பெயரால் பக்தர்களால் பாடப்பெறும் பாடல் களுக்கு உரிமை உடைய வர் என்று கூறப்படுபவருமான ‘ஆண்டாள்' என்ற பக்தையே கிடையாது என்று ராசகோபாலாச் சாரியார் கூறி இருக்கிறார்.

"ஆண்டாள் என்னும் ஸ்திரி இருந்ததே இல்லை. நாலாயிர திவ்விய பிரபந்தம் ஆண் டாள் பாடியதாகச் சொல்லப்படும் பாசுரங்கள் அவர் பாடியவை அல்ல. பெரியாழ்வார் என்னும் ஆழ்வார் சில பாசுரங்களைப் பாடி அப்பாசுரங்களை ஆண்டாள் என்னும் ஒரு பெயரால் வெளிப் படுத்தினார் என்று ‘‘திரிவேணி'' என்னும் ஆங்கில மாதப் பத் திரிகை யில் 1946ஆம் ஆண்டு செப் டம்பர் இதழில் ராச கோபா லாச்சாரியார் எழுதி யுள்ளார்.

ஆச்சாரியாரும் ஒரு வைணவர்தான். அவரே கூறிவிட்ட பிறகு வைணவப் பக்தர் கள், ஆழ்வார்கள் 12 பேர் என்பதை மாற்றி ஆழ்வார்கள் 11 பேர்தான் என்று ஒப்புக் கொள்வார்களா? மார்கழி பஜனையையும் மறுபரிசீலனை செய்வார்களா?

நன்றி:  இராஜன் கொச்சி மோன்
       ⚫🔴⚫
வேனுகோபால சங்கர் - ஆறாம் அறிவு முகநூல் பக்கம்,15.1.18

கல்விக் கடவுள் சரசுவதியின் யோக்கியதை பாரீர்!

கல்விக் கடவுள் சரசுவதியின் யோக்கியதை பாரீர்!

இவள்தான் சரசுவதி.

பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டு அவனால் மணக்கப்பட்டவள். ஒரு காலத்து - அகத்தியரிடம் பிறந்தவள்.

பிரம்மன் தன்னை நீக்கி யாகம் செய்ததால் நதியுருவாய் யாகத்தை அழிக்க வந்தவள்.

இவள், தன்னைச் சிருஷ்டித்துத் தன்னுடன் கூடப் பிரம்மன் வருகையில், பிரம்மனுக்கு அஞ்சி பெண் மான் உருக்கொண்டு ஓடினாள். பிரம்மன் ஆண் மான் உருக்கொண்டு தொடர, சிவமூர்த்தியால் தடையடையக் கண்டு சிவமூர்த்தியை வேண்டி, பிரம்மனைக் கணவனாகப் பெற்றவள்.

பிரம்மன் காயத்ரி, சாவித்திரி, சரசுவதி ஆகிய மூவருடன் கூடிக் கங்கா ஸ்நானத்திற்குப் போக சரசுவதி ஆகாய வழியில் பாடிக் கொண்டிருந்த வித்யாதர ஸ்திரீயின் இசையில் மனம் வைத்தனள். சரசுவதி ஒழிந்த இருவரும் தம் நாயகருடன் கங்கை அடைந்து ஸ்நானம் செய்தனர். சரசுவதி சற்று தாமதித்துப் பிரம்மதேவனிடம் சென்று, தான் வருமுன் ஸ்நானம் செய்ததுபற்றிக் கோபித்தனள்

பிரம்மன் குற்றம் உன்மீது இருக்க என்மீது பயனிலாது கோபித்தலால்...

இவள் பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டு, அவனால் மோகிப்பது கண்டு, அந்த மோக வார்த்தையுரைத்த முகத்தை நோக்கி நீ இவ்வாறு தூஷித்துக்கொண்டு இருந்ததால், ஒரு காலத்தில் சிவபெருமானையும் அவ்வாறு தூஷித்து அவரால் சிரம் அறுக்கக் கடவாய் எனச் சபித்தனள் (சிவமகா புராணம்).

(ஆதாரம்: சிங்காரவேலு முதலியார் தொகுத்துள்ள அபிதான சிந்தாமணி எனும் பெருநூலில் - பக்கம்-598).

பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டவள் சரசுவதி என்றால், அவள் பிரம்மனுக்கு மகள் அல்லவா ஆகிறாள்? மகள் சரசுவதியை அப்பன் பிரம்மன் மணப்பது எவ்வகையில் நியாயம்?

பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டவள் சரசுவதி என்று ஒரு பக்கம் சொல்லிக்கொண்டு, மறுபக்கம் ஒரு காலத்து அகத்தியரிடம் பிறந்தாள் என்றும், பிரம்மனின் யாகக் கலசத்துள் பிறந்தாள் என்றும் முரண்படக் கூறப்படும் கதைக் கருத்தின் நியாயம் என்ன?

பிரம்மனால் பெண்டாளப்படுவதை விரும்பாது, அவனை வெறுத்து ஒதுக்கி, அவனின் காம வேட்கையிலிருந்து தப்பிக்கப் பெண் மான் உருக்கொண்டு ஓடிய சரசுவதி, பின்னர் சிவமூர்த்தியை வலிய வேண்டிப் பிரம்மனைக் கணவனாகப் பெறுவானேன்?

பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டவள் ஒரு சரசுவதி - பிரம்மனின் யாகக் கலசத்துள் அவதரித்தவள் ஒரு சரசுவதி - அகத்தியருக்குப் பிறந்தவள் ஒரு சரசுவதி.

ஆக, சரசுவதி என்பது மூவரா - அல்லது ஒருவரா? சரசுவதி மூவர் எனில் - இதில் கல்விக் கடவுள் சரசுவதி யார்? கலவிக் கடவுள் சரசுவதி யார்?

ஒருத்திதான் சரசுவதி எனில், அவளுக்கு மூன்று வரலாற்றுப் பிறப்புக் கதைகள் ஏன்?

படைப்புக் கடவுள் பிரம்மனுக்கு காயத்ரி, சாவித்திரி, சரசுவதி என மூன்று மனைவியர் இருப்பது ஏற்புடைத்ததா? ஒருபுறம் சிவமூர்த்தியை வேண்டிப் பிரம்மனைக் கணவனாக அடையப் பெற்றவள் சரசுவதி எனக் கூறிக்கொண்டே - மறுபுறம் தன்னைக் காம இச்சையால் மோகிக்க வந்த பிரம்மனை சிவமூர்த்தியால் சிரம் அறுக்கக் கடவாய் என்று சரசுவதி சபித்ததாக சிவமகா புராணம் கூறுவானேன்?

எந்த ஒன்றிலும் கணவனும், மனைவியும் கலந்து பேசி - கூடி விவாதித்துக் காரியமாற்றுவதே குடும்ப உயர்வுக்கும், பெருமைக்கும் உகந்தது என்கிற இந்த எளிய உண்மை மனித இயல்பாக இருக்க - பிரம்மன் கடவுள் தன் மனைவி சரசுவதியைக் கலக்காமல் யாகம் செய்தார் என்பதும், அதற்காகக் கோபித்துக்கொண்ட சரசுவதிக் கடவுள் அந்த யாகத்தை அழித்தனள் என்பதும் கடவுள் இலக்கணத்திற்கும் - குடும்ப இலக்கணத்திற்கும் பொருத்தமுடையவைதானா?

கல்வி என்பது அறிவையும், அன்பையும், பண்பையும், பாசத்தையும், நியாயத்தையும், நேர்மையையும், உண்மையையும், ஒழுக்கத்தையும் போதிக்கின்ற ஒன்று. இந்தக் கல்விக்குக் காமாந்திரக் கிறுக்கியும், செக்ஸ் தலைவியும், மோகக் கள்ளியும், போக மினுக்கியும் ஆன குச்சு சரசுவதி எப்படிக் கடவுள் ஆக முடியும்? அவள்தான் ஆனாலும், மானமும் அறிவுமுள்ள மனித சமுதாயம் எப்படி அவளைக் கடவுளாக ஏற்றுக்கொள்ள முடியும்?

அறிவு, நாணயம், ஒழுக்கம், நேர்மை, பண்பு ஆகிய இவற்றிற்கும் சரசுவதி பற்றிய ஈனக் கதை கருத்துக்கும் எள்முனை அளவேனும் தொடர்புளதா?

அபிதான சிந்தாமணியின் தொகுப்பாசிரியர் திருவாளர் ஆ. சிங்காரவேலு (முதலியார்) பெரியார் தொண்டர் அல்லவே - திராவிடர் இயக்கத்தைச் சார்ந்தவர் அல்லவே - நாத்திகக் கொள்கையினர் அல்லவே! இவர் நூலைத் தொகுக்க - எழுதத் தொடங்கும் முன்னும், முடிக்கும்போதும் பகவானை அதாவது சிவபெருமானைத் துணைக்கு அழைத்தல்லவா காரியமாற்றி இருக்கிறார்?

இவரால், நம்மால் கல்விக் கடவுள் என்று நம்பப்படுகிற - போற்றப்படுகிற - சொல்லப்படுகிற சரசுவதிபற்றி மேற்கூறப்பட்ட கருத்துகளைத்தாதனே சொல்ல முடிகிறது?

இவரும் தானாக இட்டுக்கட்டி - கற்பனையில் சொல்லவில்லையே!

நம் முன்னோர்களால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற புராண வழிக் கருத்துகளையும் - சமய மத வழிக் கருத்துகளையும் அறிந்தும், ஆய்ந்தும், சுவைத்தும், தோய்ந்தும், உணர்ந்தும்தானே தொகுத்துரைக்கிறார்.

ஏ! பக்தத் தமிழா! இனியேனும் இவைகளைப் படித்து அறிந்தேனும் திருந்துவாயா? உலக நடப்புகளோடு பொருந்துவாயா? உன் அறியாமையையும், தவற்றையும் எண்ணி வருந்துவாயா?

----------------- குடந்தய் வய்.மு. கும்பலிங்கன் ------"விடுதலை” 16-10-2010

http://thamizhoviya.blogspot.com/2010/10/blog-post_16.html

பக்தியும் ஒழுக்கமும்?

திருமலையில் 20 முதல் 25 செக்ஸ் மய்யங்கள் இயங்கி வருகின்றன. இதில் 400 விபச்சார அழகிகள் உள்ளனர். இங்கு எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த மே மாதம் திருப்பதியில் 7604 ஆண்களிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர்களில் 268 பேருக்கு எச்.அய்.வி. கிருமி தொற்றியிருப்பது தெரிய வந்துள்ளது என்று செய்தி வெளியிட்ட தினத்தந்தி (சென்னை பதிப்பு 21.6.2008, பக்கம்: 17) மேலும் கூறுகிறது.

திருப்பதிநகரில்மட்டும்3500 அழகிகள்விபச்சாரத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் கார ணமாக, திருப்பதிக்கும், திருமலைக்கும் வரும் பக்தர்களிடம் எய்ட்ஸ் நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாடு, கருநாடக மாநில எல்லைப் பகுதிகளில் இடம் பெயர்ந்து வேலை பார்க்கும் கட்டடத் தொழிலாளர்கள்தான் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற இன் னொரு தகவலும் வெளியாகி இருக்கிறது.

எஸ்ட்ஸ்தடுப்புஅதிகாரிவெளி யிட்ட தகவலும், அது தொடர்பான புள்ளிவிவரங்களும்,ஆந்திர மாநில டி.வி.சேனல்களில் ஒளிபரப்பானது. சில சேனல்கள் கூடுதல் தகவல்களைச் சேகரித்துவெளியிட்டன.இதனால் பக்தர்கள் பெரும் அதிர்ச் சிக்குள்ளாயினர் என்றும் இதற்கிடையே ஆந்திர மாநில எய்ட்ஸ் தடுப்பு அதிகாரி சந்திரவதனனுக்கு ஆந்தி மாநில பாரதீய ஜனதா, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன என்ற தகவல்களை விலாவாரியாக தினத்தந்தி வெளியிட்டுள்ளது.

இதனைப்படித்தால் அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. எய்ட்ஸ் தடுப்பு அதிகாரி தன் கடமையைத்தான் செய்துள்ளார். அவரொன்றும் இந்துமத விரோதியும் அல்லர்.

ஓருண்மையைச் சொல்லியதற்காக அவரைப்பார்த்து உறுமுவதில் அர்த்தம் இருக்க முடியுமா? தம் கடமையை ஒழுங்காகச் செய்த ஓர் உயர் அதிகாரி மீது பாய்ந்து பிராண்டுவதில் பக்தி இருக்கலாமே தவிர பகுத்தறிவு இல்லை.

பொதுவாக கோயில் நகரங்களில் பால்வினை நோய்கள் அதிகம் என்பது இதற்கு முன்பும்கூட அதிகாரபூர்வமாக வந்துள்ள தகவல்கள்தாம். “ஹி.றி. ஜிணிவிறிலிணி ஜிளிகீழிஷி  ஹிழிஞிணிஸி கிமிஞிஷி ஜிபிஸிணிகிஜி” என்ற தலைப்பில், ‘தி பயோனிர்' ஏடு (21.7.1997) விரிவாக வெளியிட்டதுண்டு.

சுவிட்சர்லாந்து அரசின் சார் பாக அனுப்பப்பட்ட குழு ஒன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள புனித கோயில்கள் என்று சொல்லப்பட்ட காசி, ரிஷிகேஷ், அலகாபாத் முதலிய இடங்களுக்குச் சென்று நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது.

ரிஷிகேஷில் 28 பேர்களும், காசி யில் 11 பேர்களும், அலகாபாத்தில் 19பேர்களும்,லக்னோவில்16பேர் களும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட் டிருந்தனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

சென்னையில் 12.6.1976 மற்றும் 13.6.1976 ஆகிய இரு நாட்களில் பாலியல் நோய் பற்றி ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. சென்னை பொது மருத்துவமனையின் பாலியல் நோய்த் துறை இயக்குநர் டாக்டர் சி.என்.சவுமினி அக்கருத்தரங்கில் கூறிய தகவல், புண்ணியத்தலங்களின் புண்பட்ட யோக்கியதையை வெளிப்படுத்தக் கூடியதாகும். பக்தர்கள் அடிக்கடி கூடும் புண்ணியத் தலங்களில்தான் விபச்சாரம் பெரிய அளவில் நடக்கிறது. இந்தப் பகுதியில் உள்ள விபச்சாரி மூலம் சராசரி மூன்று பேர்களுக்கு இந்தநோய் பரவுகிறது.

இவற்றையெல்லாம்எடுத்துக்கூறு வதற்குக்காரணம்திருவாளர்எஸ்.குரு மூர்த்தி அய்யர்தான். துக்ளக்கில் (24.1.2018, பக்கம் 37) அவர் எழுதியது தான்.

“ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகமான மக்கள் சபரிமலைக்கு போக விரதம் இருப்பதால் சாராய வியாபாரம் குறைகிறது என்று கூறியிருக்கிறார். பகுத்தறிவு இதைச்செய்ய முடியாது. பகுத்தறிவுப் பகலவர்கள் வீரமணி போன்றவர்கள்இதைசாதிக்க முடியாது'' என்று எழுதியிருக்கிறார். சந்திரபாபு நாயுடுவின் திருப்பதி கதையே இந்த ஒழுக்கத்தில் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டத்தான் இந்த எடுத்துக் காட்டுகள்.

- மயிலாடன்

- விடுதலை நாளேடு,31.1.18

வியாழன், 25 ஜனவரி, 2018

கல்விக் கடவுள் சரசுவதியின் யோக்கியதை பாரீர்!

கல்விக் கடவுள் சரசுவதியின் யோக்கியதை பாரீர்!

இவள்தான் சரசுவதி.

பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டு அவனால் மணக்கப்பட்டவள். ஒரு காலத்து - அகத்தியரிடம் பிறந்தவள்.

பிரம்மன் தன்னை நீக்கி யாகம் செய்ததால் நதியுருவாய் யாகத்தை அழிக்க வந்தவள்.

இவள், தன்னைச் சிருஷ்டித்துத் தன்னுடன் கூடப் பிரம்மன் வருகையில், பிரம்மனுக்கு அஞ்சி பெண் மான் உருக்கொண்டு ஓடினாள். பிரம்மன் ஆண் மான் உருக்கொண்டு தொடர, சிவமூர்த்தியால் தடையடையக் கண்டு சிவமூர்த்தியை வேண்டி, பிரம்மனைக் கணவனாகப் பெற்றவள்.

பிரம்மன் காயத்ரி, சாவித்திரி, சரசுவதி ஆகிய மூவருடன் கூடிக் கங்கா ஸ்நானத்திற்குப் போக சரசுவதி ஆகாய வழியில் பாடிக் கொண்டிருந்த வித்யாதர ஸ்திரீயின் இசையில் மனம் வைத்தனள். சரசுவதி ஒழிந்த இருவரும் தம் நாயகருடன் கங்கை அடைந்து ஸ்நானம் செய்தனர். சரசுவதி சற்று தாமதித்துப் பிரம்மதேவனிடம் சென்று, தான் வருமுன் ஸ்நானம் செய்ததுபற்றிக் கோபித்தனள்

பிரம்மன் குற்றம் உன்மீது இருக்க என்மீது பயனிலாது கோபித்தலால்...

இவள் பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டு, அவனால் மோகிப்பது கண்டு, அந்த மோக வார்த்தையுரைத்த முகத்தை நோக்கி நீ இவ்வாறு தூஷித்துக்கொண்டு இருந்ததால், ஒரு காலத்தில் சிவபெருமானையும் அவ்வாறு தூஷித்து அவரால் சிரம் அறுக்கக் கடவாய் எனச் சபித்தனள் (சிவமகா புராணம்).

(ஆதாரம்: சிங்காரவேலு முதலியார் தொகுத்துள்ள அபிதான சிந்தாமணி எனும் பெருநூலில் - பக்கம்-598).

பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டவள் சரசுவதி என்றால், அவள் பிரம்மனுக்கு மகள் அல்லவா ஆகிறாள்? மகள் சரசுவதியை அப்பன் பிரம்மன் மணப்பது எவ்வகையில் நியாயம்?

பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டவள் சரசுவதி என்று ஒரு பக்கம் சொல்லிக்கொண்டு, மறுபக்கம் ஒரு காலத்து அகத்தியரிடம் பிறந்தாள் என்றும், பிரம்மனின் யாகக் கலசத்துள் பிறந்தாள் என்றும் முரண்படக் கூறப்படும் கதைக் கருத்தின் நியாயம் என்ன?

பிரம்மனால் பெண்டாளப்படுவதை விரும்பாது, அவனை வெறுத்து ஒதுக்கி, அவனின் காம வேட்கையிலிருந்து தப்பிக்கப் பெண் மான் உருக்கொண்டு ஓடிய சரசுவதி, பின்னர் சிவமூர்த்தியை வலிய வேண்டிப் பிரம்மனைக் கணவனாகப் பெறுவானேன்?

பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டவள் ஒரு சரசுவதி - பிரம்மனின் யாகக் கலசத்துள் அவதரித்தவள் ஒரு சரசுவதி - அகத்தியருக்குப் பிறந்தவள் ஒரு சரசுவதி.

ஆக, சரசுவதி என்பது மூவரா - அல்லது ஒருவரா? சரசுவதி மூவர் எனில் - இதில் கல்விக் கடவுள் சரசுவதி யார்? கலவிக் கடவுள் சரசுவதி யார்?

ஒருத்திதான் சரசுவதி எனில், அவளுக்கு மூன்று வரலாற்றுப் பிறப்புக் கதைகள் ஏன்?

படைப்புக் கடவுள் பிரம்மனுக்கு காயத்ரி, சாவித்திரி, சரசுவதி என மூன்று மனைவியர் இருப்பது ஏற்புடைத்ததா? ஒருபுறம் சிவமூர்த்தியை வேண்டிப் பிரம்மனைக் கணவனாக அடையப் பெற்றவள் சரசுவதி எனக் கூறிக்கொண்டே - மறுபுறம் தன்னைக் காம இச்சையால் மோகிக்க வந்த பிரம்மனை சிவமூர்த்தியால் சிரம் அறுக்கக் கடவாய் என்று சரசுவதி சபித்ததாக சிவமகா புராணம் கூறுவானேன்?

எந்த ஒன்றிலும் கணவனும், மனைவியும் கலந்து பேசி - கூடி விவாதித்துக் காரியமாற்றுவதே குடும்ப உயர்வுக்கும், பெருமைக்கும் உகந்தது என்கிற இந்த எளிய உண்மை மனித இயல்பாக இருக்க - பிரம்மன் கடவுள் தன் மனைவி சரசுவதியைக் கலக்காமல் யாகம் செய்தார் என்பதும், அதற்காகக் கோபித்துக்கொண்ட சரசுவதிக் கடவுள் அந்த யாகத்தை அழித்தனள் என்பதும் கடவுள் இலக்கணத்திற்கும் - குடும்ப இலக்கணத்திற்கும் பொருத்தமுடையவைதானா?

கல்வி என்பது அறிவையும், அன்பையும், பண்பையும், பாசத்தையும், நியாயத்தையும், நேர்மையையும், உண்மையையும், ஒழுக்கத்தையும் போதிக்கின்ற ஒன்று. இந்தக் கல்விக்குக் காமாந்திரக் கிறுக்கியும், செக்ஸ் தலைவியும், மோகக் கள்ளியும், போக மினுக்கியும் ஆன குச்சு சரசுவதி எப்படிக் கடவுள் ஆக முடியும்? அவள்தான் ஆனாலும், மானமும் அறிவுமுள்ள மனித சமுதாயம் எப்படி அவளைக் கடவுளாக ஏற்றுக்கொள்ள முடியும்?

அறிவு, நாணயம், ஒழுக்கம், நேர்மை, பண்பு ஆகிய இவற்றிற்கும் சரசுவதி பற்றிய ஈனக் கதை கருத்துக்கும் எள்முனை அளவேனும் தொடர்புளதா?

அபிதான சிந்தாமணியின் தொகுப்பாசிரியர் திருவாளர் ஆ. சிங்காரவேலு (முதலியார்) பெரியார் தொண்டர் அல்லவே - திராவிடர் இயக்கத்தைச் சார்ந்தவர் அல்லவே - நாத்திகக் கொள்கையினர் அல்லவே! இவர் நூலைத் தொகுக்க - எழுதத் தொடங்கும் முன்னும், முடிக்கும்போதும் பகவானை அதாவது சிவபெருமானைத் துணைக்கு அழைத்தல்லவா காரியமாற்றி இருக்கிறார்?

இவரால், நம்மால் கல்விக் கடவுள் என்று நம்பப்படுகிற - போற்றப்படுகிற - சொல்லப்படுகிற சரசுவதிபற்றி மேற்கூறப்பட்ட கருத்துகளைத்தாதனே சொல்ல முடிகிறது?

இவரும் தானாக இட்டுக்கட்டி - கற்பனையில் சொல்லவில்லையே!

நம் முன்னோர்களால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற புராண வழிக் கருத்துகளையும் - சமய மத வழிக் கருத்துகளையும் அறிந்தும், ஆய்ந்தும், சுவைத்தும், தோய்ந்தும், உணர்ந்தும்தானே தொகுத்துரைக்கிறார்.

ஏ! பக்தத் தமிழா! இனியேனும் இவைகளைப் படித்து அறிந்தேனும் திருந்துவாயா? உலக நடப்புகளோடு பொருந்துவாயா? உன் அறியாமையையும், தவற்றையும் எண்ணி வருந்துவாயா?

----------------- குடந்தய் வய்.மு. கும்பலிங்கன் ------"விடுதலை” 16-10-2010

http://thamizhoviya.blogspot.com/2010/10/blog-post_16.html