ஒற்றை பத்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒற்றை பத்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 26 ஜூலை, 2019

பெண்களிடம் கல்லடிபட்ட ஏழுமலையான்

திருப்பதி - திருமலை கோவில் புராணம் என்ன கூறுகிறது?

சோழ அரசன் மகன் ஆகாசராசன் மனைவி தரணி தேவி. இவர்களுக்குப் பிள்ளையில்லாததால், ஆகாச ராசன் யாகம் செய்ய எண்ணி, யாக சாலைக்கான இடத்தை உழுதான். அந்தக் கலப்பை உழவுச் சாலில் ஒரு பொன் தாமரையும், அதில் ஒரு பெண் குழந்தையும் காணப்பட்டன. அரசன் அந்தக் குழந்தையை தன் மனைவியிடம் கொடுத்து வளர்த்து வரச் செய்தான். அதற்குப் பத்மாவதி என்று பெயரிட்டான். வளர்ந்து கன்னிப் பருவமடைந்த பத்மாவதி ஒரு நாள் மலர் கொய்ய மலர் வனம் சென்றாள்.

ஏழுமலையானான நாராயண மூர்த்தி மலை யில் வேட்டையாடி விட்டு, அடிவாரத்துக்கு இறங்கியபோது, பூம் பொழிலில் பத்மாவதியைக் கண்டு, ஆசைப்பட்டு அவளை அணுகினார்.

(ஆக, ஆசாபாசம் கொண்டவர்தான் ஆண்ட வன்!)

ஓ பெண்ணே! நான் உன் பேரில் விருப்பம் கொண்டு இவ்விடம் வந்தேன். என்மீது தயையுள்ளவளாய் என்னை ஆலிங்கனம் செய்துகொள்'' என்று அவளிடம் கூறினார்.

(ஆகா, என்ன பண்பாடு!')

அந்த மங்கை, ஓய்! நீ உலகத்தில் சொல்லாத வசனங்களைச் சொல்கிறாய். என் அப்பா ஆகாச ராஜன் இதைக் கேட்டால் உன் உசி ரைப் போக்கிவிடுவார்'' என்று சீற்றத்துடன் சொன் னாள்.

அவளுடைய பேச் சைக் காதில் போட் டுக் கொள்ளாமல், நாராயணமூர்த்தி (ஏழு மலையான்) அந்தப் பத்மாவதியை அணுகினார்.

அவள், ஆத்திரமடைந்து, அவளும், தோழியர்களும் அவரைக் கற்களால் அடித்தனர். அவர் அந்தக் கல்லடிகளைப் பொறுக்கமாட்டாமல் திரும்பி வேங்கடாத்திரிக்கு (திருமலை)ச் சென்றார்.'' (இது திருமலைக் கோவில் புராணக் கதை).

கடவுள் என்றால் விரும் பாத பெண்ணை நேசிக்கவேண்டுமா? கோபம் கொண்டு அந்தப் பெண் கல்லால் அடித்தும் வெட்கப்படாதது வெட்கம் கெட்ட செயல் அல்லவா!

மாபெரும் சக்தி கொண் டவன் ஏழுகொண்டல வாடு' என்கிறார்கள்.

ஒரு பெண்ணிடம் அவர் ஜம்பம் பலிக்கவில்லையே!

- மயிலாடன்

 - விடுதலை நாளேடு, 21.7.19

புதன், 14 நவம்பர், 2018

திருவாளர் பன்றி அய்யர்!

பிராமணனைத் திட்டுகிறவன் பல நரகங்களில் வாழ்ந்து பின்னர் காகமாகப் பிறப்பான்.

துளசிதாஸ் இராமாயணம்

அப்படி என்றால், இப் பொழுது உயிர் வாழும் காகங்கள் எல்லாம் பார்ப்பனர்களைத் திட்டியவர்கள்தானா? கா கா என்று காகம் கரைவதெல்லாம் பார்ப்பனர்களைக் கண்ட மாதிரி திட்டும் ஒலிகள்தானா?

இப்பூவுலகில் தேவர்கள் எறும்பாகத் திரிவதாக சாஸ்திரம் சொல்கிறது. அரிசி மாவினால் கோலமிட்டால் எறும்புகள் அதை உண்டு மகிழ்ந்து ஆசி வழங்கும். ஆகவே, அரிசி மாவினால் மட்டுமே கோலம் போடுங்கள். வண்ணக் கலவைகள் விழாக் களில் இருக்கட்டும்!

- குமுதம் சினேகிதி

பிப்ரவரி , (16-29), 2012

தேவர்கள் என்றால் மிகவும் உயர்ந்தவர்கள் என்றுதானே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இப்படி எச்சில் பொறுக்கும் எறும்புகளாகத் திரி கிறார்களோ... ஒரு நாளைக்கு நம் காலில் பட்டு (சங்கராச்சாரியார் உள்பட) எத்தனைத் தேவர்கள் செத்து மடிகிறார்கள் பார்த்தீர்களா?

மகமதிய அரசனாகிய ஜகாங் கீர் தன் தந்தை அக்பருடைய ஆட்சிக் காலத்தில் அமெரிக்கா தேசத்து ஒரு கிருத்துவப் பாதிரியினால் உருளைக் கிழங்கும், புகையிலையும் இந்தியாவுக்குள் கொண்டு வந்து விளைவித்ததாக டாஜுக்' என்னும் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இதைச் சரித்திரக்காரர்களும் அங்கீகரித்து இருக்கிறார்கள். ஆனால், புகை யிலையைப்பற்றிப் பிரமாண்ட புராணத்தில் எழுதி இருப்பதைப் பாருங்கள்!

ப்ராப்தே கலியுகே கோரே       சர்வ வருணாள் சமேதராஹ

தமளாம் பாதிதம் யேனஸகச்சே       நர காரணவே.''

இதன் கருத்து: யாரொருவன் கலியுக அஞ்ஞான காலத்தில் புகையிலையை எவன் உப யோகிக்கிறானோ அவன் நரகத் திற்குப் போவான் என்பதாம்.

மேலும், பத்ம புராணம் பகருவதைக் கேளுங்கள்.

தாம்ப்ர பாணரதம் விப்ரம்தானக்        ருத்து வேதியே நரஹ

தாதாரோ நரகம் யாதிப்        ராமணோக் ராம சூக்ரஹ.''

இதன் கருத்து: தருமவான் சுருட்டுப் பிடிக்கும் பிராம ணனுக்குத் தருமம் செய்தால், அவன் நரகத்திற்குப் போவான். மேலும் அப்பிராமணன் கிராமத் தில் பன்றியாய்ப் பிறப்பான் என்பதே இதன் கருத்து.

பத்ம புராணத்தின் கூற்றுப் படி, சுருட்டுக் குடிக்கும் பிராம ணன் கிராமத்தில் பன்றி யாகப் பிறப்பான்' என்பது உண்மை யானால்,இன்றைக்குச்சேற்றுக் குட்டைகளையும்,மலக் கிடங்கு களையும் வசந்த மாளிகையாகக் கொண்டு உழன்றுத் திரியும் பன்றிகள் எல்லாம் போன ஜென்மத்தில் சுருட்டுக் குடித்த பிராமணர்கள்'தானா?

கடந்த ஜென்மத்தில்' சுருட்டுக் குடித்த சீத்தாராம சாஸ்திரிகளும், சீனுவாசாச்சாரிகளும், சீனுவாச அய்யரும், அய்யங்கார்களுமே தான் இந்தப் பன்றிக் கூட்டங்கள் என்று நாம் கொள்ளலாமா?

- மயிலாடன்

-  விடுதலை நாளேடு, 14.11.18