செவ்வாய், 21 டிசம்பர், 2021

மார்கழி மாதம் - கொக்கோகப் பஜனை!


ஞாயிறு, 16 டிசம்பர் 2012 14:58 
மார்கழி மாதம் இன்று பிறந்து விட்டது. கோயில்களில் எல்லாம் திருப்பாவைப் பாடல்கள் கத்த ஆரம்பிக்கும் (உச்சநீதிமன்ற ஆணையை யும்மீறி கூம்பு ஒலி பெருக்கியையும் பயன்படுத்து வார்கள்). ஆண்டாள் என்ற ஒரு பக்தை கட வுளையே புருஷனாக ஆக்கிக் கொள்ள வரித்துக் கொண்டு அவனோடு புணர வேண்டும் என்று விரகதாபம் எடுத்து அலைந்து புலம்பிய கேவலம் இது!
கடவுளாகிய கண்ணன் மனைவியின் மார் பகத்தில் வாய் வைத்துக் கிடந்தான் என்றெல் லாம் பாடுகின்ற ஒருபெண்மணிதான் வைணவத் தில் தலை சிறந்த பக்தைப் பெருமாட்டி!
குத்துவிளக் கெரிய
கோட்டுக்கால் கட்டிலின்மேல்
மெத்தென்ற பஞ்ச
சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல்
நப்பின்னை கொங்கைமேல் வாய்
வைத்துக் கிடந்த மலர் மார்பா!
என்று பாடுகிறார் ஆண்டாள்.
இதுகூட பரவாயில்லை. இதே  ஆண்டாளே நாச்சியார் திருமொழி என்று பாடியிருக்கிறாள்.
முத்தன்ன வெண்முறுவல்
செவ்வாயும், முலையும்
அழகழிந்தேன் நான்
புணர்வதோர் ஆசையினால் - என்
கொங்கை கிளர்ந்து குமைத்து
குதூகலித்து ஆவியை ஆகுலம்
செய்யும் அங்குயிலே
என்று பாடியுள்ள கேவலத்தை என்ன சொல்ல!
நல்முத்துக்கள் போன்ற பற்களைப் பெற்றி ருந்தேன். சிவந்த வாயையும், மார்புகளையும் பெற் றிருந்தேன். கண்ணனாகிய காதலன் என்னை வந்து புணராத காரணத்தால் என் அழகுகள் எல்லாம் கெட்டு விட்டன என்று காமவெறி பிடித்தவளாய்க் கதறுகிறாள். கொக் கோகம் பிச்சை வாங்க வேண்டும் போங்க...
இந்தக் கேவலத்தை ஆபாசத்தைக் கண்டு சகிக்காமல் வெட்கப்பட்டதாலோ என்னவோ, பழுத்த வைணவரான திரு. ராஜகோபாலாச்சாரி யார் (ராஜாஜி)  ஆண்டாள் என்னும் பக்தையே இருந்ததில்லை என்று போட்டாரே ஒரு போடு - பார்க்கலாம்.
ஆண்டாள் என்னும் ஸ்திரி இருந்ததே இல்லை. நாலாயிரதிவ்வியப் பிரபந்தத்தில் ஆண்டாள் பாடியதாகச் சொல்லப்படும் பாசுரங் கள் அவர் பாடியவை அல்ல.
பெரியாழ்வார் என்னும் ஆழ்வார் சில பாசுரங்களைப் பாடி, அப்பாசுரங்களை ஆண்டாள் என்னும் ஒரு பெயரால் வெளிப்படுத்தினார் என்று திரிவேணி இதழில் (1946 செப்டம்பர்) எழுதி விட்டார்.
பக்தி அப்படியே மனதைக் கட்டுப்படுத்து கிறதாம். கடவுளைக் கணவனாக ஆக்கிக் கொண்டு அவனோடு கட்டிப் புரள வேண்டும் - புணர வேண்டும் என்பதுதான் மனதை ஒருமுகப்படுத்தும்  யோக்கியதையா?
இந்த மாதம் பூராவும் இந்தக் கேவலமான ஆபாசத் தெருப் புழுதிகளைத்தான் பஜனையாகப் பாடப் போகிறார்கள்.  இதுபற்றி எல்லாம் எங்களைத் தவிர யார் அம்பலப்படுத்தப் போகிறார்கள்?
வெட்கம்! மகா வெட்கம்!!
(குறிப்பு: நாம் இப்படி எழுதுகிறோம். அண்ணா பெயரையும், திராவிடப் பெயரையும் வைத்துக் கொண்டுள்ள அண்ணா தி.மு.க.வின் நமது எம்.ஜி.ஆர் ஏடு திருப்பாவை, திருவெம்பாவை தூக்கிப் பிடித்து எழுதுகிறது)
விடுதலை 16.12.12 n1

வெள்ளி, 19 நவம்பர், 2021

கூறுவது என்ன? நடப்பது என்ன?

 


பைபிள்

ஏசு கிறிஸ்து ஒருவன் வலது கன்னத்தில் அடித்தால் இடது கன்னத்தையும் காட்டு என்று தான் கூறியிருக்கிறார் தனது பைபிளில்அந்தப் பைபிளை அன்றாடம் படித்து வருபவர்கள் தான் துப்பாக்கி முதல் அணுக்குண்டு வரை உற்பத்தி செய்து பல ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றனர்.

குர்ஆன்

முகமது நபி சகல மக்களையும் சமமாகக் கருது என்றுதான் கூறியுள்ளார்அதே குர்ஆனை அன்றாடம்  படித்து வரும் பாகிஸ்தான் மக்கள் தான் மத வெறி கொண்டு பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் அல்லாத மக்களைக் கொன்று குவித்து வருகின்றனர்.

வேதம்

ஹிந்து மதவேத சாஸ்திரங்களும் சகல ஆத்மாக்களும்கடவுள் அம்சம்தான்ஒரே ஆத்மாதான் எல்லா உடலிலும் இருக்கிறதுஆகவே அனைவரையும் கடவுளாகத்தான் பாவிக்க வேண்டும் என்று போதிக்கின்றன.

அப்படிப்பட்ட ஹிந்துக்கள் தான் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவித்தனர்மற்றும் இந்து மதத்தைச் சேர்ந்த உயர்ஜாதிப் பார்ப்பனர்கள்தான் உலக உத்தமர் காந்தியாரைக் கொல்லச் செய்தவர்கள்.

 10.4.1948-  குடிஅரசிலிருந்து....                       

வியாழன், 18 நவம்பர், 2021

தேவர்கள் பிறப்பு பட்டியல்

சிங்கத்திற்கு  சிங்கமகாசூரன் பிறந்தான்
புலிக்கு   வீரீஞ்சிகன் பிறந்தான்
யானைக்கு விநாயகன் பிறந்தான்
குதிரைக்கு அஸ்வத்ராமன் பிறந்தான்
கழுதைக்கு காங்கேயன் பிறந்தான்
கரடிக்கு ஜம்புவந்தன் பிறந்தான்
எருமைக்கு மகிஷன் பிறந்தான்
பசுவுக்கு கவுதமரிஷி பிறந்தான்
ஆட்டுக்கு அசமுகி பிறந்தான்
மானுக்கு ரிஷ்யசீருங்கன் பிறந்தான்
நாய்க்கு சவுநகன் பிறந்தான்
நரிக்கு கேசகம்பலன் பிறந்தான்
பன்றிக்கு நரகாசூரன் பிறந்தான்
குரங்குக்கு சம்புகன் பிறந்தான்
மயிலுக்கு கண்ணுவன் பிறந்தான்
கிளிக்கு சுகர் பிறந்தான்
பட்சிக்கு சகுனி பிறந்தான்
ஆந்தைக்கு களிநாதன் பிறந்தான்
தவளைக்கு மாண்டவ்யன் பிறந்தான்
மீனுக்கு மச்சஹந்தி பிறந்தான்
பாம்புக்கு சோமாஸ்வன் பிறந்தான்
மண்டுகத்துக்கு மண்டோதரி பிறந்தாள்
பர்வதத்திற்கு பார்வதி பிறந்தாள்
மலைக்கு வசுவதத்தன் பிறந்தான்
துரோனியில் துரோணன் பிறந்தான்
கமண்டலத்தில் அகஸ்தியன் பிறந்தான்
ஆற்றில் பீஷ்மன் பிறந்தான்
காற்றுக்கு பீமன் பிறந்தான்
புற்றில் வால்மீகி பிறந்தான்
குட்டையில் ஸ்கந்தன் பிறந்தான்
தாமரையில் பத்மை பிறந்தான்
அண்டத்தில் வாதன் பிறந்தான்
கோபக்கணலில் லட்சுமி பிறந்தாள்
சூரியனுக்கு கர்ணன் பிறந்தான்
சந்திரனுக்கு அரிச்சந்திரன் பிறந்தான்
செவ்வாய் கோளுக்கு தோஷன் பிறந்தான்
புதன் கோளுக்கு புரூரவா பிறந்தான்
வியாழன் கோளுக்கு ஜகன் பிறந்தான்
சுடலை சாம்பலில் புரீசீரவன் பிறந்தான்
சுடலை எலும்பில் சல்லியன் பிறந்தான்
முகத்தில் பிராமணன் பிறந்தான்
தோளில் சத்திரியன் பிறந்தான்
தொடையில் வைசியன் பிறந்தான்
காலில் சூத்திரன் பிறந்தான்
வாயில் வேதவல்லி பிறந்தாள்
மூக்கில் அஸ்வினி பிறந்தாள்
மனதில் மன்மதன் பிறந்தான்
தொப்பிளில் வீரவாகு பிறந்தான்
கொட்டாவியில் செந்தூரன் பிறந்தான்
தும்மலில் தூபன் பிறந்தான்
நிழலில் சுந்தரன் பிறந்தான்
கண்ணீரில் வானரன் பிறந்தான்
உந்திகமலத்தில் பிரம்மன் பிறந்தான்
வலது கால் விரலில் கக்கன் பிறந்தான்
இடது கால் விரலில் தாணி பிறந்தான்
கை பெருவிரலில் விஷ்ணு பிறந்தான்
ரோமத்தில் ரோமாஞ்சன் பிறந்தான்
பேய்க்கு காந்தாரி பிறந்தாள்
கலியுகத்திற்கு சனீஸ்வரன் பிறந்தான்
காசீப முனிவனுக்கு சூரியன் பிறந்தான்
விஷ்ணுவுக்கு ஐயப்பன் பிறந்தான்
நாரதனுக்கு 60 ஆண்டுகள் பிறந்தது
ஊர்வசிக்கு விசுவாமித்திரன் பிறந்தான்
மேனகைக்கு சாகுந்தலை பிறந்தாள்
வண்ணாத்திக்கு நாரதன் பிறந்தான்
புலைச்சிக்கு சாங்கியன் பிறந்தான்
பார்பனத்திக்கு கிருஷ்ணன் பிறந்தான்
- பழ.பிரபு, முகநூல் பதிவு, 18.11.2013

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

கிருஷ்ணன் பற்றிய புதிர்கள்



பெண்கள் அவசியம் படிக்க வேண்டும்.

மகாபாரதத்தின் கதாநாயகன் கிருஷ்ணன்.சரியாக  சொல்லவேண்டுமானால் 
கௌரவர்கள்-பாண்டவர்கள் 
சம்பந்தட்டதே மகாபாரதக் கதையாகும்.தம் மூதாதையரின் அரசாட்சி உரிமைக்காக இவ்விரு அணியினர் மேற்கொண்ட யுத்தக் கதையே மகாபாரதக் கதையாகும்.  
அவர்கள் தான் இக்கதையின் பிரதான பங்கினராய் இருந்திருக்க வேண்டும்.ஆனால் அப்படி தெறியவில்லை.கிருஷ்ணன் தான் கதாநாயகன்.இது வினோதமாய் உள்ளது.மேலும் கிருஷ்ணன் கௌரவர்கள் பாண்டவர்கள் காலங்களில் வாழ்ந்திருந்த ஆளாகவும் தெறியவில்லை.

கிருஷ்ணன் நாடான்ட பாண்டவர்களின் நண்பனாய் இருந்திருக்கிறான்.

வேறொரு நாட்டு அரசனான கம்சனுக்கும் கிருஷ்ணன் எதிரி.அருகருகே ஒரே இடத்தில், இரண்டு அரசாட்சி இருந்திருக்குமோ,
இவ்விரு அரசர்களுக்கிடையே உறவு இருந்ததாக மகாபாரதத்தில் காட்டிட எவ்வித ஆதாரமில்லை.

கிருஷ்ணன் மற்றும் பாண்டவர் பற்றி தனித்தனி கதைகள் கலந்து ஜோடிக்கப்பட்டு இடைச்செருகலாகப் பிற்காலத்தில் நுழைக்கப்பட்டிருக்கவேண்டும்.

வியசானின் கூற்றின் படி கிருஷ்ணன் மனிதர்களுள் தெய்வம்.
அவ்வளவுதான் அதனாலேயே கிருஷ்ணன் மகாபாரத கதையில் கதாநாயகன்
ஆக்கப்பட்டுருக்கின்றான். உண்மையில் கிருஷ்ணன் மனிதர்களுள் தெய்வம் என்றும் அளவுக்கு அருகதையுடையவனா.?

ஒருவேளை அவனுடைய வாழ்க்கை சுருக்கம் அவ்வித  கேள்விகளுக்குச் சரியான விடை அளிக்குமா என்று
சற்று பார்ப்போம்.

* பத்ரா மாதம் எட்டாம் நாள் நள்ளிரவில் மதுராபுரி நகரில் கிருஷ்ணன் பிறந்தான்.

* அவன் யாதவ இனத்தை சார்ந்தவன் அவன் தந்தை வாசுதேவன் இவன் மனைவி தேவகி.

கிருஷ்ணனின் பிறப்பு:

தேவிக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தை, கம்சனைக் கொன்றுவிடும் என்று வானத்திலிருந்து அசரீரி சொன்னதாய் நாரதன் மூலம்  கேள்விப்பட்ட கம்சன் தேவகியையும் அவன் கணவனையும் சிறைப்படுத்தி ஒன்றன் பின் ஒன்றாய்ப் பிறந்த அவர்களுடைய 
ஆறுகுழந்தைகளையும் கொன்றுவிடுகிறான்.
ஏழாவது குழந்தையாக பலராமன் தேவகியின் வயிற்றில் கருவாய் இருக்கும்போதே,
வாசுதேவனின் வேறோரு மனைவியான அதாவது வைப்பாட்டி ரோகிணியின் வயிற்றுக்குள் அதிசயமான முறையில் மாற்றப்படுகிறான்.

எட்டாவது குழந்தையாய் கிருஷ்ணன் பிறக்கிறான்.

கிருஷ்ணனுடைய இந்த பிறப்பே நம்பகத்தன்மையற்றதாக உள்ளது.
அதாவது எப்படி ஒரு பெண்ணீன் வயிற்றில் இருக்கும் கருவை இன்னோரு வயிற்றில் மாற்றமுடியும்.
ஓ கதைதானே மகாபாரதம் உண்மைகிடையாதல்ல அதா அள்ளிவிடுகிறார்கள்.
அப்போ கிருணஷ்ணன் மகாபாரத கதையில் ஒரு வைப்பாட்டிக்கு பிறந்த  மகனாக இவன் பிறப்பு தொடங்குகிறது.சரி

கிருஷ்ணனும் பெண்ணியமும்:

கிருஷ்ணனை பெரும்பாலும் பெண்கள் தான் வழிபடுகின்றார்கள் அனால் கிருஷ்ணன் அந்த பெண்ணியத்திடம் எந்தளவு மதிப்பு வைத்துள்ளான் என்பதை மகாபாரதமும்,
ரிவம்ச புராணமும்,
கூறுவதை பார்ப்போம்.
 
கோபிகள் அதாவது பெண்கள் ஒரு நாள் யமுனையில் குளிக்கப் போனார்கள்.நதியில் இறங்குமுன் தம் ஆடைகளைக் களைந்து கரையில் வைத்தார்கள்.பெண்கள் நிர்வணமாக குளிக்கும் பழக்கம் இன்னும் சில நாட்டில் நிலவிவருவதாக சொல்லப்படுகிறது.
அதை திருட்டுத்தனமாக பார்த்தும், நதிக்கரையில் பெண்கள் அவிழ்த்துவைத்த ஆடைகளைக் கிருஷ்ணன் எடுத்துக்கொண்டு ஓடிபோய் நதியோரம் இருந்த மரத்தின் மீது ஏறிக்கொண்டான்.
பெண்கள் இரு கைகளால் உடலை மறைத்துக்கொண்டு  ஆடைகளை திருப்பி தா கிருஷ்ணா என்று அப்பெண்கள் கேட்டபோது, இந்த பொம்பலபொறுக்கி கிருஷ்ணன் ஒவ்வொருத்தியும். அம்மரத்தருகே வந்து தனக்கு ஆடை வேண்டும்மென்று கையேந்திக் கேட்டாலோழிய அத்துணிகளைக் கொடுக்கமுடியும் இல்லையேன் தரமுடியாது என்று கூறினான். 
பெண்களும் உடைக்காக தன் உடலை மறைத்திருந்த கைகலால் யேந்தி கேட்டபின்பே இந்த கிருஷ்ணன் உடைகளை கொடுத்தானாம் என்று பகவத்கீதையில் கூறப்படுகிறது.
இந்தளவுக்கு கேவலமாக பெண்களை பாலியல் கொடுமைகள்  கிருஷ்ணன் செய்திருக்கிறான் என்பது நினைக்கும்போதே கோவமாக உள்ளது.

கிருஷ்ணன் இராசலீலையை பார்ப்போம்:

கிருஷ்ணனின் இளைய பிராயம் முழுவதும் பிருந்தாவனத்து இளம்பெண்களுடன் தகாத உறவு கொண்டு மது அருந்திக்கொண்டு பெண்களோடு தகாத நடனத்துடன் கழித்ததாகவே இதில் அமைகிறது.
கிருஷ்ணன் செய்த இத்தகைய செயலுக்கு இராசலீலை என்கிறார்கள் இதை நாம்செய்தால் விபச்சாரி,குடிகாரன்,பொம்பல பொறுக்கி என்றெல்லாம் நம்மை கூறிருப்பார்கள்.
இவனை கடவுளாக வணங்குகிறார்கள்.

கிருஷ்ணனின் திருமண வாழ்க்கையை பார்ப்போம்:

மன்னன் ருக்மாங்கதனின் மகள் ருக்குமணியைக் கிருஷ்ணன் திருமணம் செய்துகொள்கிறான்.
இராதாவோ ஏற்கெனவே திருமணம் ஆனவள்.முறைப்படி மணந்த மனைவி.ருக்குமணியை விட்டுவிட்டு இன்னோருத்தனின் மனைவியான இராதாவுடன் கிருஷ்ணன் வாழ்க்கை நடத்துகிறான்.கிருஷ்ணனுக்கு கொஞ்சம்கூட செய்தது தவறு என குற்றயுணர்ச்சி,மனஸ்தாபமோ இல்லை.இத்தோடு நிற்க்காமல் கிருஷ்ணன் பல பெண்களை மணந்துள்ளான் அவனின் மனைவிகள் ருக்குமணி,
சத்தியபாமா,ஜம்பாவதி,காளிந்தி,
மித்ரபிந்தா,சத்யா,பத்ரா,மற்றும் லஷ்மணா ஆகிய எட்டுபேர்களாவார்கள் இவர் பிரபலமானவர்கள் என்பதால் இவர்கள் பெயர் குறப்படுகிறது.
இவர்கள் எங்கு பிரபலமானவர்கள் என்றால் பிரஜோதிஷ் மன்னன் நாரகனுடைய அந்தப்புரத்தில் பிரபலமானவர்களாம்.
மீதம் பதினாறாயிரத்து நூறு மனைவிகளை கிருஷ்ணன் ஒரே நேரத்தில் மணந்தான இவனெல்லாம் கடவுள் தூ தரங்கெட்டவன்.
அப்பாவி ருக்குமணியை கைவிட்டுவிட்டு வைப்பாட்டியுடன் வாழ்கிறான்.

 கிருஷ்ணனுடைய போர் வீரம் பற்றி பார்ப்போம்:

நேர்மையான முறையிலேயே தம்மை யாரும் கொன்றிடக்கூடும்  எனும் நம்பிக்கை கொண்டிருந்த துரோணனைப் பாண்டவர்கள் தகாத வழியில் கொன்றிட அவர்களுக்குக் கிருஷ்ணன் ஆலோசனை சொன்னான்.துரோணன் ஆயுதங்களைக் கீழே போட்டிடச் செய்தால் மட்டுமே அவனைக் கொல்வது எளிதென்று ஆலோசனை கொடுக்கிறான் கிருஷ்ணன்.

ஒரு தடவை தவைபயானா எனும் ஏரியின் ஓரத்தில் பீமனுக்கும் துரியோதனக்கும் இடையில் கடுமையான போர் நடந்து கொண்டிருந்தது.
பீமன் பின் வாங்கி கொண்டிருந்தான்.
துரியோதனனுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.இந்த வேலையில் கிருஷ்ணன் அர்ஜீனன் மூலம் பீமனுக்கு நினைவூட்டுகிறான்.

"உன் எதிரியைத் தொடையை நோக்கித் தாக்கு,அவன் சாய்ந்து போவான் "என்கிறான்.

போரில் ஈடுபட்டிருக்கும் எதிரியைத் தொப்புளுக்குக் கீழே அடித்துத் தாக்குவதென்பது போர் மரபுகளுக்கெதிரானது.
அப்படித்தாக்கினாலொழிய இல்லை துரியோதனைக் கொன்றிடமுடியாது என்பதால் தகாத வழியில் துரியோதனைக் கொன்றிட பீமனுக்குக் கிருஷ்ணன் யோசனை தருகிறான் அதையே பீமனும் செய்கிறான்.கிருஷ்ணன் சிறுவயதிலேயே அவனை கொள்ளவந்த எதிரியை வீழ்த்தி கொலைசெய்தான் என்றெல்லாம் கூறினார்கள்.இவனின் போர் மரபு கோழைத்தனமாக இருக்கிறது தூ இவனெல்லம் வீரனா.

மதுவெறியன் கிருஷ்ணன்:
 
பிரபாசா எனும் புண்ணிய பூமிக்கு யாதவர்கள் பெருமளவில் போனார்கள்.அங்கே மது தடை செய்யப்பட்டிருந்தது.
இதை கிருஷ்ணன் மற்ற யாதவத் தலைவர்களும் நன்றாக அறிந்திருந்தனர்.ஆயினும் அந்தத் தடையை யாரும் பொருள்படுத்தாமல்
குடித்து போதை தலைக்கேறி சர்ச்சையில் ஈடுபட்டனர்.
பின்னர் கலவரத்தில் ஒருவர் ஒருவர் வெட்டிக்கொண்டு மாண்டனர்.
இதில் கிருஷ்ணன் பெருமளவில் தம் சொந்தமக்களான யாதவர்களை கொன்று குவித்தான்.இப்படி மதுவெறியில் திரிபவன் கடவுளா.

இப்படி தன் வாழ்க்கைய் முறைகளில் ஒழுக்கம்,நேர்மை,உண்மை,கருணை,வீரம்,என எந்த சிறப்பையும் அடையாத ஒருவன் எப்படி கடவுளாக வணங்குகின்றிர்கள்.மாறாக போதைபழக்கம்,காமவெறி,போரில் திருட்டுத்தனம்,பெண்களை ஏமாற்றுபவன்,என அனைத்து தீமைகுணம் பெற்றவனை நீங்கள் வணங்குகின்றிர்கள் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

மிகவும் தரங்கெட்ட பிறவியே  கிருஷ்ணன்.

ஆதாரங்கள்..
பகவத் கீதை,
ரிவம்ச புராணம்,
மகாபாரதம்,

மீள்பதிவு.

Che அஜித்ர,புதுவை.
ஆறாம் அறிவு முகநூல் குழு பதிவு
30.8.21

திங்கள், 30 ஆகஸ்ட், 2021

சிவ சிவ # லிங்க வழிபாடு

#சிவ_சிவ
#லிங்க_வழிபாடு

“சிவ-சிவ” இதன் அர்த்தம் தெரிந்தால் என்மீது உங்களுக்கு கோபம் வரும்! உங்களது  கோபம்  நியாயமானது என்றால், சிவபுராணத்தை படியுங்கள் என வேண்டி கேட்டுக் கொள்வேன். உருவ வழிபாட்டை ஆதரிக்காத வேதங்கள், லிங்க வழிபாட்டை சிஸ்ன வழிபாடு என இகழ்ந்தன.
Post vedic text வரிசையில் வரும் 18 புராணங்களில் ஒன்றான சிவ புராணம் லிங்க வழிபாட்டை புகழ்கிறது. சமரசம் செய்வதிலும், பிற கருத்துக்களை உள்வாங்கி அதைத் தனதாக்கிக் கொள்வதில் வைதீகம், வேத புராண காலத்திலிருந்தே பழகிவிட்டது என்பதற்கு லிங்க வழிபாடு சிறந்த உதாரணம். சிவலிங்க வழிபாடு பற்றிய ஆபாசமான கதையை சிவபுராணத்தில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

சிவ புராணம் நான்கு பாகங்களைக் கொண்டது. சிவ புராணம், மூன்றாவது பாகம், கோடிருத்ர சம்ஹிதை பகுதியில் பன்னிரெண்டாவது அத்தியாயம் முழுக்க முழுக்க சிவலிங்கம் உருவான கதையைக் கூறுகிறது. சுதா முனிவரும் பிரம்மாவும் உரையாடுவது போன்று இந்த அத்தியாயம் எழுதப் பட்டுள்ளது. இந்தப் புராணத்தில் ஏகப்பட்ட இடங்களில் ஆபாசம் மிகுந்துள்ளது. அதில் ஒரு sample ல் தான் இந்தப் பதிவு.இந்த அத்தியாயத்தில் உள்ளவற்றை அப்படியே எழுதினால் பலரது மனது புண்பட்டு விடுகிறது. நூல்களில் உள்ளவற்றை, உண்மையை எழுதாமலும் இருக்க முடியாது.
ஆதலால்,உள்ளதைப் பதிவிடுகிறேன், வருந்துகிறேன், வேறு வழியில்லாமல் எழுதுகிறேன்.உண்மையை உலகிற்கு உணர்த்துதல் சக மனிதனை அறியாமையிலிருந்து மீட்டெடுக்கும் வைதீகர்களையும் சேர்த்து.

இந்த நூலை  அறிஞர்கள் குழு ஒன்று சிறப்பாக ஆங்கிலத்தில் மொழிபெயத்துள்ளது.
 Prof. J.L .Shastri அவர்கள் edit பண்ணியிருக்கிறார். புகழ் பெற்ற மோதிலால் பனாரஸிதாஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. Ancient Indian Tradition & Mythology எனும் தொடர் வரிசையில் பல பதிப்புக்களாக வெளிவந்துள்ளது.

சிவபெருமான் முனிவர்களின் பக்தியை சோதிக்க அவர்கள் இல்லாத சமயத்தில் அவர்கள் வசிக்கும் காட்டுக்கு சென்று ஆடையில்லாமல் உலாவினார்.  

தனது ஆணுறுப்பை கையில் பிடித்துக்கொண்டு அருவருக்கத்தக்க செயல்களை செய்தார்.

முனிவர்களின் மனைவிகள் அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர். சிலர் உற்சாகமடைந்து அவரை அணுகினர். சிலர் அவரை தழுவினர்.  

அந்த நேரம் அங்கு திரும்பி வந்த முனிவர்கள் அதைப்பார்த்து சினம் கொண்டார்கள். வந்திருப்பது சிவன் என்பதை அவர்கள் அறியவில்லை.

“ஆணுறுப்பு அறுந்து விழுவதாக” என்று சாபமிட்டனர்!!!  

உடனே சிவபெருமானின் ஆணுறுப்பு அறுந்து விழுந்தது!!

அறுந்து விழுந்த அந்த ஆணுறுப்பு தன் அருகில் இருந்த அனைத்தையும் எரித்தது. அது பாதாள லோகம் வானுலகம் என்று எல்லா இடங்களுக்கும் நிலையில்லாமல் அலைந்தது. 

“பார்வதி ஒரு பெண்ணுறுப்பு வடிவம் எடுத்தால்தான் சிவனின் ஆணுறுப்பை ஒரு நிலையில் நிறுத்த முடியும். ஆகவே பார்வதியிடம் சென்று வேண்டுங்கள்” என்று பிரம்மா யோசனை கூறினார்.

அது போலவே அனைவரும் பார்வதியிடம் சென்று வேண்ட பார்வதியும் அவ்வாறே செய்தார். முடிவில் சிவனின் ஆணுறுப்பு நிலைத்தன்மைக்கு வந்தது. 

விஷ்ணு,பிரம்மா,தேவர்கள்,முனிவர்கள், அசையும் மற்றும் அசையாதவை அனைத்தும் சிவனை வழிபட்டு போற்றினர்.

விறைப்புடன் இருந்த சிவனின் ஆணுறுப்பு நிலைபெறத் தொடங்கியதும் உலகம் சுபீட்சம் அடைந்தது.மூன்று உலகத்திலும் சிவனின்  ஆணுறுப்பின் புகழ் பரவியது.

விறைப்புடன் உள்ள சிவனின் ஆணுறுப்பு ஹதேஸா என்றும் சிவ-சிவ என்றும் வணங்குதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது ஆனது. இதை வணங்குகிறவர்களுக்கு எல்லா நன்மையும் கூடியது.

சிவனை வணங்குபவர்கள் இந்த ஆபாச கதையை ஏற்றுக்கொள்கிறீர்களா? முனிவர்களை சோதிக்க அவர்களின் மனைவியின் முன்னால் நீங்கள் வணங்கும் சிவன் நிர்வாணமாக உலாவினார் என்று சொல்வதை ஏற்றுக்கொள்கிறீர்களா? 

இந்தக் கதைகள் வைதீகர்களே படித்திருப்பார்களா எனத் தெரியாது, ஆனால் படிக்கும்படி வைதீக அன்பர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன், இப்படியான கதைகளே முழுக்க எல்லா புராணக் கதைகளிலும், வேத நூல்களிலும், தர்ம  நூல்களிலும், ஆகம நூல்களிலும் உண்டு. இவற்றைப் படித்தால் நீங்களே இந்து வைதீகத்தின் உண்மையை உணர்வீர்கள், சக மனிதனை சமத்துவத்துடன் ஏற்றுக் கொள்வீர்கள். இப்படியான நூல்களைப் பற்றி எழுதும் நோக்கம் மனித நேயம் மலர வேண்டும் என்பதே. 

இந்த நூலை ஆங்கிலத்தில் online ல் படிக்க விரும்புகிறவர்கள் கீழுள்ள link யை அழுத்தவும். 

https://www.wisdomlib.org/hinduism/book/shiva-purana-english/d/doc226513.html

சில ஸ்லோகங்களை மட்டும் கீழே தந்துள்ளேன்:

9. In the meantime Siva himself assuming a very hideous form came there in order to test their devotion. 

10. He was very brilliant but stark naked. He had smeared ashes all over his body as the sole ornament. Standing there and holding his penis he began to show all sorts 
of vicious tricks. 

11. It was with a mind to do something pleasing to the forest-dwellers that Siva, favourite of the devotees, came 
to the forest at his will. 

12. The wives of the sages were extremely frightened at this sight. The other women excited and surprised approached the lord. 

13. Some embraced him. Others held his hands. The women were engrossed in struggling with one another. 

14. Meanwhile the great sages came there. On seeing him engaged in perverse activities they were pained and 
infuriated. 

15. The sages, deluded by Siva’s Maya and plunged in grief, began to say—“Who is this ? Who is this ?” 

16. When the naked sage did not reply, the great sages told that terrible Purusa.

17. “You are acting pervertedly. This violates the Vedic path. Hence let your penis fall on the ground.” 

Suta said :— 

18. When they said thus, the penis of that Avadhuta, who was Siva of wonderful form, fell down instantly.

19. That penis burnt everything in front; wherever it went it began to burn everything there. 

20. It went to Patala; it went to heaven; it went all over the earth; it never remained steady anywhere. 

21. All the worlds and the people were distressed. The sages became grief-stricken. Whether gods or sages no 
one had any peace or joy. 

22. All the gods and sages who did not recognize Siva became sad. They assembled together and hastened to Brahma and sought refuge in him. 

23. O brahmins, after going there, they bowed to and eulogised Brahma. They narrated what had happened to 
Brahma the Creator. 

28. As long as the penis does not become stationary there cannot be anything good in the three worlds. I am telling you the truth. 

29. O sages, you must do such things as will make the penis of Siva steady. Please ponder over this in your minds. 

32. Let the gods propitiate goddess Parvati and pray. If she can assume the form of the vaginal passage that penis will become steady.

33. O excellent sages, listen. I shall tell you the mode of procedure. Act accordingly with love and devotion. She will be thus pleased. 

35. The pot shall be invoked with Vedic mantras. It shall be worshipped according to the Vedic rituals after remembering Siva. 

36. The penis shall be drenched with that water, O great sages. When the sprinkling is made with Satarudriya mantras it will become stable. 

37. Parvati in the form of the Vaginal passage and an auspicious arrow shall form as the pedestal wherein the phallus shall be installed in accompaniment of the Vedic 
mantras.

45. O gods, O sages, you listen to my words with reverence. If my penis is supported in a vaginal passage 
there will be happiness. 

46. Except Parvati, no other woman can hold my penis. Held by her my penis will immediately become quiet. 

Suta said :— 

47. O great sages, on hearing those words the delighted sages and the gods took Brahma with them and prayed to 
Parvatl. 

48. After propitiating Parvati and the bull-bannered lord and performing the rites mentioned before, the excellent 
penis became static. 

49. The gods and the sages propitiated Parvati and Siva by the mode of procedure laid down in the Vedas for the sake of virtue. 

50. Brahma, Visnu and other gods, sages and the three worlds including the mobile and immobile beings worshipped Siva particularly. 

51. Siva became delighted and so also Parvati, the mother of the universe. That phallus was held by her in that form then. 

52. When the phallus was stabilised, there was welfare throughout the worlds. O brahmins, that phallus became 
famous in the three worlds. 

53. The phallus is known as “Hatesa”as well as “Siva- Siva.” By worshipping it, all the people become happy in every respect. 

Phallus: a penis, especially when erect(typically used with reference to male potency or dominance)
- ஆறாம் அறிவு முகநூல் குழு, தினகரன் செல்லையா முகநூல் பதிவு, 29.8.20

சனி, 28 ஆகஸ்ட், 2021

சிவபெருமான் லீலைகள்

சிவபெருமான்தான் கடவுளர்களின் தலைவன்.
இவன் யாருக்கும் பிறந்தவனல்ல.
தானாகவே தோன்றியவன்.

நதிமூலம், ரிஷிமூலம் போன்று இவன் பிறப்பு மூலத்தை ஆராயக்கூடாது.
பிரம்ம னையும் விஷ்ணுவை மும் இவன் தான் தோற்றுவித்தவன்.
இந்த இரு கடவுளும் கூட சக்தியின் முகத்திலும் தோளிலும் பிரசவமானவர்களாம்?;

'நமச்சிவாய'என்ற ஐந்தெழுத்தை பிரம்மனுக்கு போதித்ததுவனும்சிவன்தான்.

ஒருகாலத்தில் தன்னைத்தேடி ஓடிவந்த தேவர் களிடம் என்ன?ஏது?என்று கேட்க சிவனுக்குத் தாருகாவனத்து ரிஷிகளின்'தலைகனம்'புலப்பட்டது.
ரிஷிகளின் கணத்தைவிட ,ரிஷி பத்தினிகளின் கனமும் சிவனின் கவனத்துக்கு வந்தது ‌.

விஷ்ணுவை அழைத்து மோகினி உருவெடுத்து தாருகாவனத்து ரிஷிகளின் மோகத்தை ஒருகைப்பார் என்று உத்தரவிட்டான் ‌
உத்தரவு வந்தவுடன் விஷ்ணு தளுக்குக் குலுக்குடன் தத்தித்தாவினான் தாருகாவனத்திற்குள்.

மோகினி யார் மாறிய விஷ்ணு ரிஷிகளுக்கு"ருசி"களை,வழங்கி,கலங்கி கிடந்த வேளையில்,
ரிஷிபத்தினிகளின் படுக்கை அறைப்பசி,பட்டினி குறுக்குப் பருவப்பார்வையால் பதில் தெளித்து வந்தான் சிவன்.
அதுவும் சிவனாக அல்ல,பைரவர் வேடத்தில்.

தங்கள் தங்கள் மனைவிமார்கள்,எங்கெங்கே,என்னென்ன செய்கிறார்கள் என்பதை அறிய",ஞானதிருஷ்டி"யைக் கூடமுடுக்கிவிட மறந்தவாறு மோகினி காட்டிய சொர்க்கத்தில் மூழ்கிக் திளைத்தனர் ரிஷிகள்.
ரிஷிபத்தினிகளின் நிலையும் இதேதான்.

வந்தது யார் என அடையாளம் நோக்காமல்,அனணத்து மகிழ்ந்து,ஆசை தணிந்த பின்,"போச்சே கற்பு போச்சே"என்று கூவினர்.
பதிவிரதத்தில் பங்கமும்,பழுதும் பற்றிவிட்டதைப் பாருக்குணர்த்த,கூச்சலே உபாயம் எனக்கருதினர் போலும்.

பார்த்தான் சிவன்,பருவச்சுவையினைப்பருகி உருகிய பத்தினிகள் பதறிப்புலம்புவதையும்,கதறிக்குழம்புவதையும் பார்க்கப் பார்க்கப் பொறுக்கவில்லை அந்த சிவனுக்கு.

ரிஷிகளும் வந்தனர்,தமது தமது தர்மப்பத்தினிகளிடம் தரங்கெட்ட ஆட்டம் போட்டவன் சிவன் என அறிந்ததும்,'சிவனே'என்று சிலர் குந்தினர்,சிலர்"சிவ-சிவ"என்று சிலர் பொங்கினர்.

'பெரியவர் செய்தால்,பெருமாள் செய்த மாதிரி என்ற சொல்லின் மூலம் இதுதான்!தனக்குப் பிராயச்சித்தப் பரிகாரமாக இறுதியில் சிவன் சொன்னான்.
"ரிஷிகளே!'அபிசார'வேள்வி செய்யுங்கள்,ஆகட்டும் பார்க்கலாம்"என ஓடிவிட்டான்.

அபிசாரவேள்வி என்பது ஒரு பிராயச்சித்தக் காரியமாம்.
ரிஷிகள் வேள்வி செய்தனர்,என்னதான் செய்தாலும் கோபம் கொழுந்துவிடாமல் இல்லை.
உடுக்கை,அக்னி,சூலம் இவற்றை அவர்கள் ஏவ,அதனைக்கையால் பிடித்தான் சிவன்,காலங்காலமாக சுமக்கிறான்.

ஆதாரம்:அபிதான சிந்தாமணி பக்கம் 659.
- ஆறாம் அறிவு முகநூல் குழு ராஜ்மோகன் முகநூல் பதிவு, 25.8.19

வியாழன், 22 ஜூலை, 2021

தேவாரப் பெருமை இதுதானா?

 

12.08.1944 -குடிஅரசிலிருந்து....

மூன்றாம் திருமுறை திருஞான சம்பந்தர் தேவாரப் பதிகங்களின் திருவாலவாய்ப்பண் - கவுசிகம் என்னும் தலைப்பில், 3ஆம் பாட்டு

மண்ணகத்திலும் வானிலும் எங்குமாம்

திண்ணகத் திருவாலவா யாயருள்

பெண்ணகத்தெழிற் சாக்கியப் பேயமண்

டெண்ணற் கற்பழிக்கத் திருஉள் ளமே

என்பதாகும்இதன் கருத்து என்ன?

திருஞானசம்பந்தர் தமிழ்நாட்டில் ஆரியப் பிரசாரம் செய்தவற்கு முன்புதமிழ்நாட்டில் இருந்த மக்கள் யார்திராவிடர்கள்தானா - அல்லவா?

அந்தத் திராவிட மக்கள்தானே இந்தச் சம்பந்தர் முதலிய பார்ப்பனர்கள் பிரசாரத்தாலும்ஜாலவித்தைகளாலும் பலாத்கார கொடுமைச் செயல்களாலும் சைவர்களாக ஆனார்கள்.

இந்தத் திராவிடர்களின் (பெண்களைமனைவிகளைத்தானே கற்பழிக்கத்திரு உளமே என்று சம்பந்தர் பாடினதுஅல்லது வேறு யாரையாவதாஅல்லது இதற்கு வேறு பொருளாஎன்கின்ற விபரத்தைப் பண்டிதர்கள்சைவப் பண்டிதர்கள் அல்லது கிருபானந்த வாரியார்திரு.வி.கலியாண சுந்தர முதலியார் போன்ற சைவ அன்பர்கள் விளக்கினால் கட்டுப்பாடுடையவனாக இருப்பேன்.

வெள்ளி, 28 மே, 2021

விலக்கப்பட்ட கனியைப் படைத்தது ஏன்? -2

செவ்வாய், 25 மே, 2021

காஞ்சி மகாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

இன்றைய ஆன்மிகம்?

 அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்தானே...

உடல்நலம் பெற...

காஞ்சி மகாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்ம நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா!

பிரம்மாவைத் தோற்றுவித்தவரே!

நீயே நோய்களைப் போக்கி

நலம் தரவேண்டும்.

‘தினமலர்' ஆன்மிக மலர், 21.5.2021

அப்படியா! காஞ்சி மட சீட கோடிகள் மருத்துவர்களை நாடாமல், குருவாயூரப்பனை சேவிக்க வேண்டியதுதானே?

காமகோடியே சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்தானே!

செவ்வாய், 18 மே, 2021

தீபாவளி பற்றி தமிழறிஞர்கள் ....தீபாவளி தமிழர்க்கு உரியதன்று!


கொடுங்கலூரில் பரணித் திருவிழா தகவல்

விலக்கப்பட்ட கனியைப் படைத்தது ஏன்?

திங்கள், 17 மே, 2021

கிறிஸ்துவும் கிருஷ்ணனும் கற்பனையே

RM119
13/75
'கிறிஸ்துவும் கிருஷ்ணனும் கற்பனையே'

ஆசிரியர் 
மலையாளம் ஜோசப் இடமருகு
தமிழில் அரு.நாராயணசாமி
வெளியீடு அலைகள் 
விலை ரூ55
பக்கம் 72.

*இந்நூல் கிருஷ்ணன்- கிருஸ்து இருவரும் எப்படி இந்தியாவில் ஒரே மாதிரியாக பார்க்கப்பட்டனர். இருவரும் எங்கிருந்து உருவாகினர். எதற்காக உருவாக்கப்பட்டனர். ஏசுவின் வரலாறு என்ன என பல கோணங்களில் ஆய்வு செய்து எழுதப்பட்ட  சாரம் தான் இந்நூல்.   

*ஆசிரியரைப்பற்றி

ஆசிரியர் ஜோசப் இடமருகு அவர்கள் கேரளத்தில் கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தவர். ஆரம்பத்தில் கிறிஸ்துவ வழிபாட்டில் நம்பிக்கை கொண்டு வழிபாடு நடத்தி வந்தார். அதன் விளைவாக அம்மத நூல்களை எல்லாம் ஆர்வமுடன் வாசித்தார். பின்னாளில் விமர்சன கண்ணோட்டத்தோடு பைபிளை படிக்கத் தொடங்கிய பின் அதிலுள்ள குறைகளை கண்டு 'கிறிஸ்து ஒரு மனிதன்' என்ற நூலை எழுதி மதகுருமார்களால் திருச்சபையிலிருந்து விலக்கி  வைக்கப்பட்டார். 

இருப்பினும் ஏசு வாழ்ந்ததாகக் கருதும் ஜெருசலேம் போன்ற இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்து 'கிறிஸ்துவும் கிருஷ்ணனும் கற்பனையே'
என்னும் இந்நூலை எழுதினார்.  

ஆசிரியர் உலக சிந்தனையாளர், இந்திய நாத்திக மையத்தின் இயக்குநர், இந்திய பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் என பல சிறப்புகளை பெற்றவர்.

*நூலின் உப தலைப்புகள் 

*இந்தியாவில் கிருஸ்துவ மதம்
*ஏசுவின் கதை
*கிருஸ்துவும் ஒரு மனிதன் 
*புத்தரும் கிருஸ்துவும்
*புத்த மதம் தோன்றிய வரலாறு 
*ஏசு சரித்திரப் புருஷன் அல்ல
டூரின் பிணப்போர்வை
*கிருஸ்துவ மதத்தின் தோற்றம் 
என்னும் தலைப்புகளில் ஆய்வு செய்து இந்நூலை எழுதியிருக்கிறார்.

*நூலின் உள்ளே

கிருஸ்துவ மதம் பரப்பப்பட்ட எல்லா நாடுகளிலும் முன்பு அங்கே நிலவிய பழமையான மதங்கள் அழிந்து போயின.
கிரேக்கம், ரோமன், எகிப்திய மதங்கள் சான்று. 

அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியாவில் வளர்ந்த கிருஸ்துவம் 1500 ஆண்டுகளாக இந்தியாவில் பிரச்சாரம் செய்தும் 2.6 சதவீத மக்களை மட்டுமே கிருஸ்துவர்களாக மாற்ற முடிந்தது. காரணம் இந்திய மக்களின் இந்து மத உணர்வுகளையே தான் கிருஸ்துவர்களும் வெளியிட்டனர். 

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களால் வணங்கப்படுகிற  கிருஷ்ணனும், கிருஸ்துவும் ஏறக்குறைய ஒரே கதாபாத்திரமாக அமைந்தது தான் பிரதான காரணம். 
மேலும் இந்துவில்  சாதியில் உயர்வு தாழ்வு பார்ப்பது கிருஸ்துவத்திலும் பார்க்கப்பட்டதால் அதில் பிடிப்பு ஏற்படாமல் போனது மிக முக்கிய காரணம்.

*கிருஸ்துவும், கிருஷ்ணனும்
ஒற்றுமைகள்

*கிருஷ்ணன் யது வம்சம்
ஏசு யூத வம்சம்

*இருவர் பிறப்பிற்கும் அசரீரி தோன்றியது 

இருவரும் அரச வம்சம்

இருவரின் தாயாரும் தந்தை இல்லாமல் கர்ப்பம் தரித்தல்

இருவர் பிறக்கும் முன்பும் வானத்தில் நட்சத்திரம் தோன்றுதல்

இருவர் பிறந்த போதும் தேவர்கள், தேவ தூதர்கள் மகிழ்ச்சியில் ஆடினர்

குழந்தை கிருஷ்ணனை மாட்டு இடையர்களும்,
ஏசுவை ஆட்டு இடையர்களும் கண்டு தரிசித்தனர்

கிழக்கில் வந்த அறிஞர்கள் குழந்தை ஏசுவை வணங்கினர் 
நாரதர் குழந்தை கிருஷ்ணனை வணங்கினார்.

அரசன் கம்சன் கிருஷ்ணன் பிறப்பையும், 
அரசன் ஏரோது ஏசு பிறப்பையும் கண்டு பயந்தனர்.

இருவரையும் பாதுகாக்க வேறிடத்தில் வளர்க்கப்பட்டனர்
ஏசு எகிப்து மடூரியா(Muturea),
கிருஷ்ணன் ஸ்தலம் மதுரா

இரு குழந்தைகளும் கொல்லப்பட வேண்டும் என்பதால் அவ்வயது ஒத்த குழந்தைகளை கொல்ல இரு அரசர்களும் கட்டளையிடல்

கிருஷ்ணன் தாய் தேவகிக்கு மாயாதேவி என்றும் பெயர் உண்டு.
ஏசுவின் தாயார் மேரி. மாயாமேரி என்பதாகும்.

இருவரும் நல்லொழுக்கம் உடையவர்களாக போற்றப்படுதல்

இரு தாயாருக்கும் தோழியர் உண்டு 

கிருஷ்ணன் முன்னோடி பலராமன்
ஏசுவின் முன்னோடி ஸ்நாபகன் தோன்றல்

கிருஷ்ணன், ஏசு இருவரும் முறையே அறிஞர், மதகுருமார்களை வாக்குவாதத்தில் தோற்கடித்தல்

ஏசு பாலைவனத்தில் உண்ணாவிரதம் 
கிருஷ்ணன் காட்டில் தவம் புரிதல்

மும்மூர்த்தி தத்துவத்தில் இருவரும் இரண்டாவது அவதாரம்

இருவரும் மனித இனத்தை பாதுகாக்கவே தோன்றினர்.

ஏசு சாத்தான் என்ற பாம்பின் தலையையும், 
கிருஷ்ணன் நாகவடிவ காளிங்கனையும் அழித்தல்.

இருவரும் பாவமில்லாதவர்களாக கணிக்கப்பட்டனர்.

இருவரும் முழுநிறை தெய்வம் முழுநிறை மனிதராக பார்க்கப்பட்டனர்.

கிருஷ்ணன்,ஏசு இருவரும்  குஷ்டரோகியை குணப்படுத்தல்.

இருவரும் இறந்தவரை உயிர்பெறச் செய்தல்.

மரத்தில் இருந்த கிருஷ்ணனை வேடன் அம்பு எய்து கொன்றான்.
மரச்சிலுவையில் கிடந்த ஏசுவை படைவீரன் ஈட்டியால் குத்தினான்.

இருவர் இறப்பின் போதும் துர்நிமித்தங்கள் நடைபெற்றது.

கிருஷ்ணன் மறைவுக்குப்பின் யாதவ வம்சம் சிறப்பு அழிந்தது.
ஏசு மரணத்திற்குப்பின் யூதர்களின் சிறப்பும் முடிந்தது.

பெயர் ஒற்றுமை 

Christ - Cheistna
முதன்முதலில் இந்தியாவிற்கு வந்து சமஸ்கிருதம் படித்த கிருஸ்துவ பாதிரியார்கள் இவ்வொற்றுமையைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். 
Christna - Chrishna 
இரண்டிலும் Chr பொதுவாக வருவதால் Christ என்று எழுதும்போது குழப்பம் வரும் என்பதால் CHA என்ற ஒலிக்கு K என்ற எழுத்து சேர்த்து Krishna என்று எழுதியும் பரப்பியும் வந்தார்கள். 

இந்த ஒற்றுமையில் பார்க்கவேண்டியது ஒருவர் இன்னொரு மதத்தையோ அல்லது இருவரும் வேறு மதத்தையோ பின்பற்றி வந்திருக்க வேண்டும் என்கிறார் ஆசிரியர். 

இங்கே புத்தருக்கும், ஏசுவுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமையை விளக்குகிறார்.
நண்பர்கள் வாசித்து அறிந்துகொள்ள வேண்டுகிறேன்.
இந்தியாவில் ஆரியர்கள் கி.மு 1500ல் வருகின்றனர். அவர்கள் கி.மு.1000ல் இருக்கும்போது எந்த பதிவிலும்  கிருஷ்ணன் பெயர் இல்லை. 
கி.மு. 6ல் புத்தர் தோன்றினார். அக்காலத்திலும் கிருஷ்ணன் இல்லை. 

அதேபோல் ஏசுவின் போதனைகள் உருவாகும் 500 ஆண்டுகளுக்கு  முன்பே புத்தரின் போதனைகள் உருவாகின.

ஆக புத்தர் இந்த இருவருக்கும் முன்பு தோன்றி அவற்றின் கருத்தை உள்வாங்கி கிருஷ்ணன் - கிருஸ்து சிந்தனைகள் உருவாக்கப்பட்டது என்று மிகப்பெரிய ஆய்வை நடத்தி இந்நூலை எழுதியிருக்கிறார் ஆசிரியர். முன்னரே குறிப்பிட்ட அத்தனை தலைப்புகளையும் நான் இங்கே விவரிக்கவில்லை. நண்பர்கள் வாசித்து அறிய வேண்டுகிறேன்.

'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு' என்ற வள்ளுவரின் வரிகளுக்கேற்ப 

வாசிப்போம்! விவாதிப்போம்!
- சண்முக சாமி ராமசாமி குழு இடுகை, வாசிப்பை நேசிப்போம் முகநூல் பதிவு
18.5.21

வியாழன், 29 ஏப்ரல், 2021

'சூத்திரனுக்கு மூளை இல்லை' - ஶ்ரீலஶ்ரீ_பிரபுபதா

#சூத்திரனுக்கு_மூளை_இல்லை_ஶ்ரீலஶ்ரீ_பிரபுபதா 

#Sudras_have_no_brain_Srila_Prabhupada

உலகத்தில் அதி வேகமாய் வளர்ந்து வரும் மதவாத,இனவாத அடிப்படைவாத அமைப்பு எதுவென்றால் அது ஹரே கிருஷ்ணா அமைப்பான ISKCON தான்.

அமைதி அமைதி ....எப்படிங்க ஶ்ரீகிருஷ்ணரையும் கீதையையும் உலகமெங்கும் பரப்பும் இந்த இயக்கம் இனவாத அமைப்பாகும்?! 

ISKCON இயக்கத்தை தொடங்கியவரான பிரபுபதா அவர்களின் உரைகளை விமர்ச்சித்து  International Business Times ல் கட்டுரையாக எழுதியிருக்கிறார் Palash Ghosh அவர்கள், அதில் கீழுள்ள ஒரு சிலபகுதிகளைப் படித்துவிட்டு நீங்களே முடிவிற்கு வாருங்கள்.

“It is all [a] nonsense civilization,” he declared. “A first-class Rolls Royce car, and who is sitting there? A third-class Negro. This is going on. You will find these things in Europe and America. This is going on. A first-class car and a third-class Negro.”
Prabhupada frequently used the term “Negro” even though that word had fallen out of favor in most Anglophone nations.
The theme of black people as cursed by God and hopelessly beyond redemption appeared repeatedly in Prabhupada’s comments.

For a man who came from a country colonized by the British, Prabhupada made some rather shocking statements about imperialism, in particular as it pertained to the United States. In a discussion with a disciple named Syamasundara Dasa, Prabhupada seemed to equate the Native Americans (pejoratively called "Red Indians") of North America with the Sudras (the lowest-caste, darkest-skinned Indians of the Hindu system in India).
“Sudras [black people] have no brain,” he said. “In America also, the whole [of] America once belonged to the Red Indians. Why they could not improve? The land was there. Why [did] these foreigners, the Europeans, came and improved [it]? So sudras cannot do this. They cannot make any [improvements].”
Prabhupada apparently also deeply embraced the myth of the "Aryan" super-race and linked the ancient peoples of India to Europe and the U.S. During a talk in Australia one year prior to his death, Prabhupada declared that “the Aryans spread [to] Europe also, and the Americans, they also spread from Europe. So the intelligent class of human being, they belong to the Aryans, [the] Aryan family. Just like [Adolph] Hitler claimed that he belonged to the Aryan family.”
The Swami also equated the Dravidians, that is, the dark-skinned original inhabitants of India who now predominate in the southern part of the country, with black Africans.

பிரபுபதா அவர்கள் ஆரியர்கள் மனிதர்களில்  உயர்வானவர்கள் (super race) என்று பல இடங்களில் பேசிய பதிவுகளை இன்றும் YouTube களில் காண இயலும். ஆப்பிரிக்க இனத்தவர்களை, அமெரிக்க பழங்குடி மக்களைத் தாழ்த்தியும் இழிவாகவும் பல முறை பிரபுபதா அவர்கள் பொதுக் கூட்டங்களில் உரையாற்றியிருக்கிறார்.

ஆரியர்களை அவர் உயர்த்திப் பிடித்த காரணத்தினால் ஆரியர்கள் அதிகம் உள்ள ஐரோப்பா முழுவதிலும்  ISKCON இயக்கம் படு வேகமாய் பரவி வருவதை எளிதாக அவதானிக்க இயலும்.அதாவது ஆரியர்கள், ISKCON என்பது தங்களது சொந்த பூர்வீக மதமாக கருதத் துவங்கியிருக்கிறார்கள், அதனால் விளையக் கூடிய ஆபத்துக்களை உணராமல்.
இப்படி கருப்பு,வெள்ளை,ஆரியர்கள்,
பஞ்சமர்கள், சூத்திரர்கள் என இனவாதம் பேசி மதவாதத்தைப் பரப்பும் இந்த இயக்கம் தடை செய்யப்பட வேண்டுமல்லவா?!

ஹரே கிருஷ்ணா வின் https://vanipedia.org/
இணைய தளத்தில் அவரது பேச்சுக்களின் தமிழாக்கப் பகுதிகள் பல உண்டு, sample க்கு ஒரு பகுதி உங்களுக்காக;

“சூத்திரர்களைவிட குறைந்த அந்தஸ்துடையவர்கள் அனைவரும் பண்சமஸ், ஐந்தாவது தரத்தை சார்ந்தவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். முதல் தரம், பிராமண, இரண்டாம் தரம், க்ஷத்ரிய, மூன்றாம் தரம், வைஸிய, நான்காம் தரம், சூத்திர, மற்ற அனைவரும் - ஐந்தாம் தரம். அவர்கள் சண்டாலஸ் என்று அழைக்கப்படுகிறார்கள். சண்டாலஸ், துப்புரவாளர், காலணி தைப்பவர், இன்னும் தாழ்ந்த தரம். இன்னமும், இந்தியாவில் இந்த ஐந்தாம் தரம் மக்கள் மட்டும், அவர்கள் மாமிசம் சாப்பிடுவார்கள், பன்றி, சிலசமயம் மாடு. ஆகையால் நீங்கள் ஐந்தாம் தரம் மனிதரால் ஆட்சி செய்யப்பட்டால் நீங்கள் எவ்வாறு சந்தோஷமாக இருக்க முடியும்? அது சாத்தியமல்ல. அங்கு எவ்வாறு சமூக அமைதி ஏற்படும்?” 

இப்படியான வர்ணாசிரம பிரிவினைகளை உயர்த்தி மக்களைப் பிளவுபடுத்துவதை தொடர்ந்து ISKCON செய்து வருகிறது. 

இது தடை செய்யப்பட வேண்டிய இயக்கம் என்பதை இப்போது ஒப்புக் கொள்கிறீர்களா?!
அடுத்த முறை யாராவது ISKCON இயக்கத்தைச் சார்ந்தவர்கள் இலவசமாக கீதை அல்லது வேறு நூல்களை உங்களுக்கு வழங்க வரும்போது தவறாமல் அவர்களிடம் பிரபுபதாவின் aryans theory பற்றி கேள்வி எழுப்புங்கள்,வர்ணாசிரமம் பற்றிய அவரது கருத்துக்களை விவாதியுங்கள், சூத்திரர் சண்டாளர்களைப் பற்றிய அவரது கருத்தை எடுத்துக் கூறுங்கள்.

ISKCON கேயில்களில் வழங்கப்படும் இலவச உணவை நம்பி மோசம் போகாதீர்கள், அவர்களது உள் நோக்கத்தைப் புரிந்து கொள்ளுங்கள். 

Palash Ghosh ன் கட்டுரையின் link:
https://www.ibtimes.com/swami-prabhupada-founder-hare-krishna-movement-virulent-racist-anti-semite-1412102
- ஆறாம் அறிவு, தினகரன் செல்லையா, முகநூல் பதிவு, 30.4.21

செவ்வாய், 27 ஏப்ரல், 2021

பௌத்த சமண பெண்களை கற்பழிக்க வரம் வேண்டும்- திருஞானசம்பந்தன்

 

திருஞானசம்பந்தன் சமண பௌத்த பெண்களை கற்பழிக்க கடவுளிடம் வரம் வேண்டி பாடிய தேவாரப் பாடல்

மண்ணகத்திலும் வானிலும் எங்குமாய்த்

திண்ணகத் திருவாலவா யருள்

பெண்ணாகத் தெழில் சாக்கியர் பேயமண்

பெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே!

மதுரைவாழ் சிவனை நோக்கி திருஞானசம்பந்தன் என்னும் சின்ன பையன் (வயது 18இல் மரணம் அடைந்து விடுகிறான்) தேவாரத்தில் என்ன பாடுகிறான்?

பவுத்த, சமணர் வீட்டு அழகிய பெண்களைக் கற்பழிக்க அருள் புரிவாயாக என்பதுதான் இந்தப் பாடல். 

சமண பௌத்தர்களின் தலை அறுப்பதே தர்மம் என தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாடிய நாலாயிரம் திவ்யப் பிரபந்தம்

வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள்

நின்பால் பொறுப்பரியனகள்பேசில் போவதே நோயாகி

குறிப்பெனக் கடையுமாகில் கூடுமேல் தலையை ஆங்கே

அறுப்பதே கருமம் கண்டாய் அரங்கமாநகருளானே!

- பாடல் எண் 879

“திருவரங்கப் பெரும் கோயிலில் அருள்கின்ற பெருமானே! உனது பெருமையை மற்றவர்கள் கூறுவதைப் பொறுக்காமல், அதை வெறுத்து இந்த மொட்டை அடித்த சமணர்களும், உனது அருளை அறியாத பாக்கியமில்லாத பவுத்தர்களும், உன்னைப் பற்றி பொறுக்க முடியாத பல வார்த்தைகளைத் தொடர்ந்து கூறுவாராகில் _ ஒன்று, அந்தச் சொற்களைக் கேட்டு நான் உயிர் விட வேண்டும், அல்லது, உன்னை அவதூறு பேசுவார்களின் தலையை அப்போதே அறுத்துத் தள்ளுவதே தர்மம்.’’

இந்தப் பாட்டைப் பாடியவர் தொண்டரடிப்பொடி ஆழ்வார்.

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

எது பாவம்?


‘‘நான் ஒருமுறை நண்பர்கள் ஆறு பேருடன் தனுஷ்கோடி போயிருந்தேன். ராமேஸ்வரத்தில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தோம். மதியம் வெளியே போன இடத்துல பாட்டி ஒருத்தங்க தனியா உட்கார்ந்து பனங்கிழங்கு வித்துகிட்டிருந்தாங்க. அவங்களுக்கு எப்படியும் 75 வயசுக்கு மேல இருக்கும். அவங்க உடல் ரொம்ப தளர்ந்துபோயிருந்துச்சு. அந்த வயசிலும் சொந்த உழைப்பில் சம்பாதிக்கணும்ங்கிற வைராக்கியத்திலோ, நிர்பந்தத்திலோ, வீட்டில் சும்மா இருக்க விரும்பாமலோதான் அந்தப் பாட்டி அந்த வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கணும்.

அந்தப் பாட்டிகிட்ட போய் பனங்கிழங்கு வாங்கினேன். நாலஞ்சு பனங்கிழங்கை எடுத்துக்கொடுத்து 12 ரூபாய்னு சொன்னாங்க. 20 ரூபாய் நோட்டைக் கொடுத்தேன். அதை வாங்கி தன் சுருக்குப் பைக்குள்ள போட்டுகிட்டு மீதம் கொடுக்க வேண்டிய சில்லறையைத் துழாவிகிட்டிருந்தாங்க.

‘பரவாயில்லை பாட்டி... இருக்கட்டும்'னு சொல்லிட்டுத் திரும்பினேன். பாட்டி பதறியபடி ‘நில்லு... நில்லு... இந்தா இதை வாங்கிட்டுப் போயிரு’னு சில்லறையைத் தேடி எடுத்து என் கையில் கொடுத்தாங்க. ‘இந்தப் பாவத்தை நான் எங்கே கொண்டுபோய் கழுவுறது’ன்னு கேட்டபடியே கொடுத்ததுதான் எனக்கு மிகப்பெரிய வியப்பு. அந்தப் பாட்டியையும், அவர் சொன்ன வார்த்தையையும் என்னால் மறக்கவே முடியலை. காரணம், அந்தப் பாட்டி உட்கார்ந்திருந்த இடத்துக்கு கொஞ்ச தூரத்துலதான் இந்தியாவின் பல மாநிலங்களிலேயிருந்து வந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் பாவங்களைப் போக்கிட்டுப் போற இடம் இருக்கு. அந்த இடத்துல உட்கார்ந்துகிட்டு, ஒருத்தர்கிட்ட 8 ரூபாயை சும்மா வாங்கறதைப் போக்கவே முடியாத பாவமாக நினைச்ச அந்தப் பாட்டியை நினைச்சு நான் எப்போதும் வியப்பேன்.''

- ஓவியர் மருது, 

“அவள் விகடன்”,

16.3.2021, பக்கம் 20

எது பாவம்? எந்தக் குற்றங்களையும் துணிவாகவே செய்யலாம்! ஆனாலும், இவற்றிற்கெல்லாம் பரிகாரம் -பிராயசித்தம் உண்டு.

இராமேசுவரம் ஆனாலும், கும்பமேளாவானாலும், மகாமகம் ஆனாலும் கோவில் குளத்தில் மூழ்கினால் அனைத்துப் பாவங்களும் அக்கணமே தலை தெறிக்க ஓடும் -பாவ மன்னிப்பு எளிதில் கிடைத்துவிடும்.

ஆனால், பனங்கிழங்கு விற்கும் ஒரு பாட்டி 'பாவம்' என்று கருதுவது எதை?

பகுத்தறிவாளரான ஓவியர் மருது புத்தியில் படும்படி வெகு இலாவகமாக இடித்துக் கூறிவிட்டாரே!

 - மயிலாடன்


கும்பமேளா!


 'கும்பமேளா', 'கும்பமேளா' என்று கூக்குரல் போடுகிறார்களே - இலட்சக்கணக்கில் கூடி, அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் முழுக்குப் போடுகிறார்களே! அதன் தாத்பரியம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாமா?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இந்து வேதங்கள் மிகவும் மதிக்கப்பட்ட காலம். வேதம் என்றால் அதற்குமேல் ஒன்றும் இல்லை என்ற நிலைப்பாடு! அதனால்தான் வழக்கில்கூட 'அது என்ன வேத வாக்கா?' என்ற சொல்லாடல்!

திருப்பாற்கடலில் அமிர்தம் உண்டானதாக ஒரு கதை உண்டு அல்லவா!

அசுரர்களும், தேவர்களும் மந்திரகிரியை மத்தாகவும், வாசுகியைத் தாம்பாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்தார்களாம். மந்திரிகிரியாகிய மலை கடலில் ஆழ்ந்துவிடாதபடி விஷ்ணு கூர்ம (ஆமை) அவதாரம் எடுத்து, முதுகில் தாங்கிக் கொண்டாராம்.

அமிர்தம் கிடைத்ததாகவும், துர்வாச முனிவரின் சாபத்தால் கடலில் மறைந்து போயிருந்த சூரிய, சந்திராதி கிரகங்களும், காமதேனு, கற்பக விருட்சங்களும், மகாலட்சுமி முதலியவர்களும் மீண்டும் வெளிப்பட்டார்களாம்.

அமிர்தபானத்தினை சக்ஷிர சாகர பாற்கடலில் இருந்து எடுக்க முயற்சித்தபோது, அமிர்த பானம் இருந்த கிண்ணத்தினை அசுரர்கள் களவாடிச் சென்றுவிட்டனராம்.

அவர்களை தேவர்கள் 12 நாள்கள் துரத்திச் சென்றனராம். (12 ஆண்டுகளுக்குச் சமம்).

வானுலகிலும் சண்டை நடந்ததாம். அவ்வமயம் வானுலகிலிருந்து அமிர்தபானம் கொட்டி, பூலோகத்தில் நான்கு இடங்களில் விழுந்ததாம்.

அந்த நான்கு இடங்கள் அரித்துவாரம், பிரயாகை (அலகாபாத்), உஜ்ஜயினி, காசிகையாம்.

12 ஆண்டு போருக்குப் பின்னர், அது நடந்ததால், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளாவாம். அன்று நீராடினால் பாவங்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாகப் பறந்து ஓடிவிடுமாம்.

கடுகளவு புத்தியுள்ளவர்களாவது இதனை நம்ப முடியுமா?

சங்கராச்சாரியார்கள் வரை மூழ்குகிறார்களே - இவர்களும் பாவப் பிறவிகள்தானா?

சிந்தியுங்கள்!

 - மயிலாடன்

செவ்வாய், 23 மார்ச், 2021

இந்து மதத்தில் பெண்கள் நிலை


திங்கள், 22 மார்ச், 2021

கோயில் நகரம் என்றால்...

கிறிஸ்தவ பைபிள் புருடாக்களும் அதை மூறியடித்த அறிவியலும்

கிறிஸ்தவ பைபிள் புருடாக்களும் அதை மூறியடித்த அறிவியலும் 
******************************************
பூமி உருண்டை அல்ல தட்டை
பூமிக்கு அஸ்திவாரம் 
பூமிக்கு தூண்கள் 
பூமிக்கு நான்கு மூலைகள் 
சூரியன் தான் நகருகிறது பூமியல்லவாம்!!
விஞ்ஞான அறிவிற்கு புறம்பான 
பைபிள்  காமடிகள்
கிறிஸ்துவர்கள் வெட்கி தலை குனிய செய்யும் புனித‌ பைபிளின் வசனங்கள்  சில‌ இங்கே 
பூமிக்கு அஸ்திவாரம்? பூமிக்கு தூண்கள் உண்டு? பூமியை அஸ்திவாரங்களின் மேல் கர்த்தர் அசையாமல் நிலை நிறுத்தி அமைத்திருக்கிறார். 
பூமி சுழலுவதில்லை. கேட்பதற்கே சிரிப்பை வரவைக்கிறது 

பைபிள். சங்கீதம் . 104 :5
பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள் மேல் அதை ஸ்தாபித்தார்.

பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின் மேலாவது, சமுத்திரத்தின் மேலாவது, ஒரு மரத்தின் மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக்கண்டேன்.
வெளி 7:1 
சூரியன் தான் நகறுகிறது. பூமியல்ல‌ 
பைபிள்: யோசுவா .10:13
அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுமட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா; அப்படியே சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒருபகல் முழுதும் நடுவானத்தில் நின்றது.

க‌ல்வி அறிவு ப‌டைத்த‌ அத்த‌னை பேருக்கும் சூரியன் சுழலுவதில்லை பூமிதான் சுழ‌ன்று வ‌ருகிற‌து என்ற‌ உண்மை தெரியும்.
கோபெர்னிக‌ஸ் என்ப‌வர் இந்த‌ விஞ்ஞான‌ அறிவிய‌ல் உண்மையை முத‌ன்முத‌லாக‌ உல‌கிற்கு அறிவித்த‌ பொழுது , இந்த உண்மை புனித பைபிளுக்கு எதிரிடையாக இருந்தபடியால் கிறிஸ்த‌வ‌ ம‌த‌ குருக்க‌ள் கூக்குரல் எழுப்பி அவ‌ரை  தூற்றினார்க‌ள்.அத‌ன் தொட‌ர்பாக‌ கோபெர்னிக‌ஸ் அவ‌மானப்ப‌டுத்த‌ப்ப‌ட்டு சித்த்ர‌வ‌தை செய்யப்ப‌ட்டார்.
ஜியார்டானோ புருனோ என்ற‌ இத்தாலிய‌ர் கி.பி.1600 க‌ளில் பூமி சூரிய‌னை சுழ‌ன்று வருகிற‌து என‌ கூறிய‌த‌ற்காக‌ ரோம் நக‌ரில் சர்ச்சினால் உயிருடன் எரிக்கப்பட்டார்
பூமி உருண்டை என்னும் அறிவுபூர்வமான-ஆக்க ரீதியான கலிலியோவின் ஆராய்ச்சி உண்மைக் கருத்தை ஏற்றுக் கொண்டால் கிறித்தவ மதமும், பைபிளும்  அடிபட்டு ஆட்டங்கண்டு போகுமே  என்று எண்ணிய கிறித்தவ மத வெறியர்கள் தங்கள் மதக் கருத்துக் கோட்பாட்டைக் காக்கும் பொருட்டு அழியாத உலகப் புகழ் பெற்ற மாபெரும் விஞ்ஞானி அறிவியல் ஆய்வறிஞன் கலிலியோவை அடித்தே கொன்றார்கள் 
பூமி தட்டை!! பூமிக்கு அஸ்திவாரம் உண்டு,!! பூமிக்கு தூண்கள் உண்டு!! பூமிக்கு நான்கு மூலைகள் உண்டு.!! சூரியன் தான் நகருகுறது. பூமியல்ல‌ !! என்ற கடவுளின் வாசகங்களான  பைபிளின் இந்த வசனங்களை  நாங்கள்தான்  கல்வி அறிவை  புகட்டினோம் என்பவர்கள் தங்கள் கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பார்களா?
- தினேஷ் டுகே, முகநூல் பதிவு, 22.3.21