பாவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 13 ஆகஸ்ட், 2026

கிருத்துவர்கள் சிந்தனைக்கு! - செ.ர.பார்த்தசாரதி

  கிருத்துவர்கள் சிந்தனைக்கு!

"ஒரே மனிதனாலே பாவமும், பாவத்தினாலே மரணமும் உலகத்தில் பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவம், செய்தபடியால் மரணம் எல்லோருக்கும் வந்தது"என்று (ரோமர் 5:12)ல் இருக்கிறது.

இயேசு இறந்தார் என்று (மத்தேயு: 27:50), (15:37 மாற்கு), (லூக்கா:24:46) (யோவான் 19:30) ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளது. அப்படியாகின் முன்னால் கூறப்பட்டபடி, இயேசுவும் பாலம் செய்ததால்தான் இறந்தார் என்று தெரியவருகிறது.

போப், கிருஸ்தவர்கள் ஆகியவர்கள் கூட இறந்திருக்கிறார்கள். இறந்து கொண்டும் இருக்கிறார்கள் ஆகையால் கிருஸ்தவர்களும் பாவம் செய்தவர்கள் என்று தெளிவாகிறது.

"தான் வருமளவும் இவனிருக்க, எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றி வா’ என்றார். ஆகையால், அந்தச் சீசன் மரிப்பதில்லையென்கிற பேச்சு, சகோதரிகளுக்குள்ளே பரம்பிற்று. ஆனா லும், அவன் மரிப்பதில்லையென்று இயேசு சொல்லாமல், நான் வருமளவும் இவனிருக்க, எனக்குச் சித்தமானால், உனக்கென்னவென்று சொன்னார்". என்று (யோவான்:21:22,23 )ல் இருக்கிறது.

இயேசுவின் இரண்டாம் வருகை சமீபத்தில் இருக்கிறது" என்றுதான் கூறுகின்றனர். அப்படியானால் இயேசு மறுமுறை இன்னும் வரவில்லை என்று தெரிய வருகிறது. அப்படியாயின் ‘சீசன்’ இன்றளவும் உயிருடன் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மனிதனை யாராவது, காண்பிக்க தயாரா? 

(எசேக்கியல்: 18:4,20) மற்றும் (ரோமர்: 6:23) ல் 

''பாவத்தின் சம்பளம் மரணம்,. பாவஞ் செய்கிற ஆத்துமாவே சாகும்” என்று, தேவன் கூறியுள்ளார் என்றும் (யோவான் : 5 : 29) "பிரேத குழியிலிருந்து நன்மை செய்பவர்களை ஜீவனை அடையும் படியும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும் படியும், எழுந்திருக்கிறவர்களாக புறப்படுவார்கள்" என்றும் (மத்தேயு: 25: 32, 33, 34 41, 46)ல் "பாவம் செய்தவர்கள் பிசாசிற்காகவும், அவன் தூதர்களுக்காகவும், ஆயத்தம் பண்ணப் பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போவார்கள். நீதிமான்கள் நித்திய ஜீவனை அடைவர்" என்றும் இருக்கிறது.

எசேக்கியல், ரோமர் இரு வரும் பாவஞ் செய்கிற ஆத்துமா சாகும் என்று கூறுகின்றனர். ஆனால் யோவானும், மத்தேயுவும் “ஆத்துமா சாகாது” என்றும், “பாவம் செய்த ஆத்துமா நித்திய ஆக்கினையை அடையும், நன்மை செய்த ஆத்துமா நித்திய ஜீவனை அடையும்” என்றும் கூறுகின்றனர். இவர்களுக்குள் எப்படிப்பட் முரண்பாடு! 

(யோவான்:8:51) ல் “ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே. உங்களுக்குச் சொல்கிறேன். என்றார்’  என்று இருக்கிறது.

யோவான்: 8:51 ல்  இயேசு வார்த்தையைக் கைக்கொண்டால் மரணத்தை காண்பதில்லை’ என்று இயேசு கூறுவதாக கூறி விட்டு, 5:29 ல்

"மரணமே கிடையாது, ஆத்மாவிற்கு ஆக்கினை தான் உண்டு" என்று கூறுகிறார். 

யோவானே இப்படி முன்னுக்கு பின் முரண்பாடாக கூறுகிறார். எசேக்கியல். ரோமர், யோவான், மத்தேயு ஆகிய நால்வரும் ஒருவருக்கொருவர் முரண்பாடாக ஆத்துமாவை பற்றி கூறுகின்றனர் காரணம் என்ன. வென்று புரிகிறதா? காரணம். இதுதான் ஆத்துமா என்பது ஒன்று தனியாக இல்லை. அதனால் அதை மறைப்பதற்காக ஒவ்வொருவரும் தனக்கு தெரிந்த மட்டும் பொய்யை சொல்லி வைத்துள்ளனர். ஆகையால் கிருஸ்தவர்களும், மற்றவர்களும் கோபப்படாமல் சிந்தித்துப் பாருங்கள். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. 

குறிப்பு

: இந்திய வேத காமச் சங்கத்தாரால் வெளியிடப்பட்டு 1978 ல் வெளிவந்த புதிய ஏற்பாட்டிலிருந்து குறிப்பு எடுக்கப்பட்டுள்ளது.

- ர. பார்த்தசாரதி சென்னை-34

- உண்மை இதழ், பக்கம்-31

 இந்திய வேத காமச் சங்கத்தாரால் வெளியிடப்பட்டு 1978 ல் வெளிவந்த பரிசுத்த வேதாகமத்திலிருந்தும்  குறிப்பு எடுக்கப்பட்டுள்ளது.

- செ.ர.பார்த்தசாரதி

- உண்மை இதழ், பக்கம்-31


- விடுதலை ஞாயிறு மலர், 09.04.2015ல் மீண்டும் வெளியீடு

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

எது பாவம்?


‘‘நான் ஒருமுறை நண்பர்கள் ஆறு பேருடன் தனுஷ்கோடி போயிருந்தேன். ராமேஸ்வரத்தில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தோம். மதியம் வெளியே போன இடத்துல பாட்டி ஒருத்தங்க தனியா உட்கார்ந்து பனங்கிழங்கு வித்துகிட்டிருந்தாங்க. அவங்களுக்கு எப்படியும் 75 வயசுக்கு மேல இருக்கும். அவங்க உடல் ரொம்ப தளர்ந்துபோயிருந்துச்சு. அந்த வயசிலும் சொந்த உழைப்பில் சம்பாதிக்கணும்ங்கிற வைராக்கியத்திலோ, நிர்பந்தத்திலோ, வீட்டில் சும்மா இருக்க விரும்பாமலோதான் அந்தப் பாட்டி அந்த வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கணும்.

அந்தப் பாட்டிகிட்ட போய் பனங்கிழங்கு வாங்கினேன். நாலஞ்சு பனங்கிழங்கை எடுத்துக்கொடுத்து 12 ரூபாய்னு சொன்னாங்க. 20 ரூபாய் நோட்டைக் கொடுத்தேன். அதை வாங்கி தன் சுருக்குப் பைக்குள்ள போட்டுகிட்டு மீதம் கொடுக்க வேண்டிய சில்லறையைத் துழாவிகிட்டிருந்தாங்க.

‘பரவாயில்லை பாட்டி... இருக்கட்டும்'னு சொல்லிட்டுத் திரும்பினேன். பாட்டி பதறியபடி ‘நில்லு... நில்லு... இந்தா இதை வாங்கிட்டுப் போயிரு’னு சில்லறையைத் தேடி எடுத்து என் கையில் கொடுத்தாங்க. ‘இந்தப் பாவத்தை நான் எங்கே கொண்டுபோய் கழுவுறது’ன்னு கேட்டபடியே கொடுத்ததுதான் எனக்கு மிகப்பெரிய வியப்பு. அந்தப் பாட்டியையும், அவர் சொன்ன வார்த்தையையும் என்னால் மறக்கவே முடியலை. காரணம், அந்தப் பாட்டி உட்கார்ந்திருந்த இடத்துக்கு கொஞ்ச தூரத்துலதான் இந்தியாவின் பல மாநிலங்களிலேயிருந்து வந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் பாவங்களைப் போக்கிட்டுப் போற இடம் இருக்கு. அந்த இடத்துல உட்கார்ந்துகிட்டு, ஒருத்தர்கிட்ட 8 ரூபாயை சும்மா வாங்கறதைப் போக்கவே முடியாத பாவமாக நினைச்ச அந்தப் பாட்டியை நினைச்சு நான் எப்போதும் வியப்பேன்.''

- ஓவியர் மருது, 

“அவள் விகடன்”,

16.3.2021, பக்கம் 20

எது பாவம்? எந்தக் குற்றங்களையும் துணிவாகவே செய்யலாம்! ஆனாலும், இவற்றிற்கெல்லாம் பரிகாரம் -பிராயசித்தம் உண்டு.

இராமேசுவரம் ஆனாலும், கும்பமேளாவானாலும், மகாமகம் ஆனாலும் கோவில் குளத்தில் மூழ்கினால் அனைத்துப் பாவங்களும் அக்கணமே தலை தெறிக்க ஓடும் -பாவ மன்னிப்பு எளிதில் கிடைத்துவிடும்.

ஆனால், பனங்கிழங்கு விற்கும் ஒரு பாட்டி 'பாவம்' என்று கருதுவது எதை?

பகுத்தறிவாளரான ஓவியர் மருது புத்தியில் படும்படி வெகு இலாவகமாக இடித்துக் கூறிவிட்டாரே!

 - மயிலாடன்