சனி, 30 நவம்பர், 2019

கலியன் நாயனார்

தனது மனைவியைத் தேரடித் தெருவிலே நிறுத்தி விலை கூறினார் இந்த நாயனார்!

இந்த மாதிரியான வேலையை எந்தப் பார்ப்பனராவது செய்திருப்பார்களா? சூத்திரர்களுக்கு மட்டுந்தான் பக்தி வந்தால் புத்தி போகும்போலும்.

சரி இவர் எவ்வாறு நாயனார் ஆனார் என்று பார்ப்போமா?

புகழுடைய தொண்டை நன்னாட்டில் எல்லா வளங்களையும் தன்னகத்தே கொண்டு சிறந்து விளங்கிய ஊர் இன்றைய வடசென்னையில் இருக்கும் திருவொற்றியூர். அங்கே உள்ள சக்கரபாடித் தெருவில் எண்ணெய் வாணிபம் புரியும் வணிகர்குலத்தில் பிறந்தவர் கலியன் நாயனார்.

இவர் சிவனுக்குத் திருத்தொண்டு புரியும் நெறியில் நின்று தமது செல்வத்தைத் திருவொற்றியூர் கோயிலில் உள்ளும் புறமும் ஆயிரக்கணக்கான விளக்குகளை இரவும், பகலும் இடுகின்ற திருப்பணியில் தம்மை முழுமையாக அர்ப்பணித் திருந்தார்.

கலிய நாயனாரின் பக்தியின் மேன்மையை சோதிக்க கடவுள் உமயபங்கர் அவருக்கு வறுமையைத் தோற்றுவித்தாராம். வறுமையையும் ஒரு பெருமையாக எண்ணிய நாயனார் திருக்கோயிலில் விளக்கேற்றும் பணிக்குக் கூலி வேலை செய்து அதில் கிடைத்த காசுக்கு எண்ணெய் வாங்கி ஊற்றி விளக்கேற்றினார். ஏற்கனவே ஏராளமான செக்குகள் வைத்துச் சொந்தமாக எண்ணெய் ஆட்டி விற்று வந்தவர், பல பேர் இவரால், இவர் தொழிலால் பிழைத்து வந்தார்கள்.

இப்போது கடவுளின் கடைக்கண்ணால் ஏழையாக்கப்பட்டார். கூலிக்கு அடுத்தவர் செக்கில் வேலை பார்த்தார். அடுத்தவர் செக்கில் எண்ணெய் கடனாக வாங்கி சுமந்து ஊர் ஊராக விற்றார். அதில் கிடைத்த காசுகளை அகல் விளக்கேற்றும் திருப்பணிக்கு செலவிட்டு மகிழ்ந்தார். அந்தக் கூலி வேலையும் இப்போது கிடைக்காமல் போய்விட்டது.

யாரும் இவருக்குக் கடன்கூட தர மறுத்துவிட்டார்கள். செய்வது அறியாது வேதனைப்பட்ட கலியன் நாயனார், நாளும் விளக்கேற்றிய தொண்டு பல கஷ்டத்திலும் தடைப்பட்டு விடாமல் செய்து வந்தார். இன்றைக்கு விளக்கேற்ற பணம் இல்லையே என்று வேதனைப் பட்டார். தமது கடைசி சொத்தாக இருந்த வீட்டையும் விற்றுக் கோயிலுக்கு விளக்கேற்றினார்.

அடுத்த நாளைக்கு விளக்கேற்ற பணம் இல்லாததால் தன் வீட்டுக்கு விளக்கேற்றி வாழ்ந்த தனது மனையாளைத் தேரடித் தெருவிலே நிறுத்தி விலை கூறினான்! அதில் கிடைத்திருக்கும் பணத்திலாவது கோயிலுக்குத் தடைபடாமல் விளக்கேற்றிவிடலாம் என்று நினைத்து மனைவியை விலை கூறி விற்க துணிந்தார் இவர்.

யாரும் அவளை வாங்கத் துணியவில்லை. நல்லவர்கள் திருவொற்றியூரில் இருந்திருக்கிறார்கள்! சித்தம் கலங்கிய கலியன் நாயனார் எப்படியாவது கோயிலுக்கு தான் இதுவரை செய்துவந்த விளக்கேற்றும் பணி நிறைவேற வேண்டும் என்ற பக்தி வெறியில் தானும் தனது மனையாளும் உடலில் வாளால் தாங்களாகவே வெட்டிக் கொண்டு பீறிட்டு வரும் இரத்தத்தை அகல் விளக்கில் நினைவிருக்கும் வரையில் ஒவ்வொன்றாக நிரப்பி எரியவிட்டு கோயில் வளாகத்திலேயே உயிரை விட்டார்களாம். பாவம் அவருக்கு இரத்தத்தில் விளக்கு எரியாது என்று தெரிந்திருக்கவில்லை போலும். ஒரு சூத்திரக் குடும்பத்தின் சோகக்கதை இது!

கோயில் வளாகத்திலேயே கணவனும் மனைவியுமாய் தற்கொலை செய்து கொண்டபின் இறைவன் இவர்களுக்குப் பேரின்பப் பெருவாழ்வு மேலோகத்தில் அளித்தாராம்! கலியன் நாயனார் சிவபதம் புகுந்து சிறப்புற்றார் என்று வெங்காயக் கதையைப் பெரிய புராணம் சொல்கிறது.

இவரை அறுபத்துமூன்று நாயன்மாரில் ஒருவராக வைத்து அழகு பார்க்கிறது ஆரிய இந்துமதம். இதன்மூலம் இவர்கள் கூறவரும் செய்திதான் என்ன? 

எப்பாடுபட்டாவது ஆலயத்திற்கு தொண்டு செய்யவேண்டும், இதுவே மேலான பணி என்றும், அப்போதுதான் மேலோகத்தில் இவர்களுக்கு பேரின்ப வாழ்வை சிவன் அளிப்பார் என்றும் நம்பவைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அப்போதுதானே இருந்த இடத்தில் உண்டி வளர்க்கலாம்.
- பாலகிருஷ்ணன் அவர்கள் கட்செவி வழி பகிர்ந்தது.

வியாழன், 21 நவம்பர், 2019

ரமண ரிஷி ?


*- மயிலாடன் -*

‘தினகரன்' வசந்தம் இணைப்பில் (17.11.2019) ‘‘நினைத்தாலே நடக்கும்!'' என்ற தலைப்பில் ரமணர் அற்புதம் என்று விலா வாரியாக வாரி கொட்டியுள்ளது.
‘‘பகவான் ரமணர் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந் தார். எளிய உணவுதான். தயிர்ச் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, ‘‘நார்த்தங்காய் ஊறுகாய் இருக்கிறதா?'' என்று கேட்டார். இல்லை என்று சொன்னதுமே எந்தப் புகாரும் இல்லாமல் சாப்பிட்டு எழுந்தார்.
ஆசிரம நிர்வாகிக்கு தகவல் போனது. அவர் தர்ம சங்கடப் பட்டார். உடனடியாக மதுரையில் இருந்த பக்தர் ஒருவருக்கு,  ‘‘ஒரு கூடை நார்த்தங்காய் உடனே அனுப்பவும்'' என்று கடிதம் எழுதினார்.
கடிதத்தைப் பார்த்த ரமண ருக்குக் கோபம் வந்தது (‘மகா னுக்கு' எல்லாம் கோபம் வர லாமோ!) ‘‘இவர்களுக்கெல்லாம் முக்தி, நார்த்தங்காயில் தான் கிடைக்கும் போலிருக்கு. இல் லேன்னா இதையெல்லாமா யார் யார் கிட்டேயோ கேட்டு லெட்டர் போடுவாங்க. நமக்கு வரணும்னு விதி இருந்தா, அதுவே வரும். உங்க இஷ்டம்போல ஆசிர மத்தை நடத்துங்க!'' என்று சொல்லிவிட்டு, அந்தக் கடிதத் தைத் தூக்கிப் போட்டார்.
இந்தச் சம்பவம் நடந்து கொண்டிருந்தபோதே பக்தர் ஒருவர் இரண்டு கூடைகளோடு ஆசிரமத்துக்குள் நுழைந்தார்.
அவரை சிரித்தவாறே எதிர்கொண்ட பகவான்,
‘‘என்ன கூடையில் நார்த்தங்காயா?'' என்று கேட்டார். (எல்லாம் சொல்லி வைத்து நடக்கும்போலும்!)
அந்தப் பக்தர் ரயில்வே துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர். ரயிலில் முக வரியின்றி பார்சலுக்கு ஏற்றப் பட்டிருந்த இரண்டு கூடைகளைத் தான் ஆசிரமத்துக்கு எடுத்து வந்திருந்தார். அதற்குள் என்ன இருக்குமென்றுகூட அவருக்குத் தெரியாது. (இது முறைகேடு அல்லவா!)

அந்தப் பக்தர் சந்தோஷத் தோடு ஒரு கூடையைத் திறந்து பார்த்தார்.
நார்த்தாங்காயேதான். இன்னொரு கூடையிலே ஆரஞ்சுப் பழம் இருக்கலாம். ஆரஞ்சிலே ஊறுகாய் போட்டா சகிக்காது; இரண்டு பழங்களும் கலந்துடாம கவனமா இருங்க'' என்றார் ரமணர்
*‘‘இதெல்லாம் அற்புதமா, இல்லை என்றால் தற்செயலா நடந்ததா சாமி?''* என்று நடந்த அத்தனை சம்பவங்களையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஆசிரம நிர்வாகி  கேட்டார்.

‘‘அறிஞர்களின் இதயங்களில் பொக்கிஷமாக விளங்கும் பிரக்ஞை சிந்தாமணியாகும். கற்பகவிருட்சத்தைப்போல அது நினைக்கப்படுவது அத்தனையும் நிறைவேற்றி வைக்கும்'' என்று யோக வாசிஸ்டத்திலிருந்து ஒரு பாடலைச் சொன்னார்'' இதுதான் ‘தினகரன்' வசந்தம் தரும் செய்தி.

இந்தப் பிரக்ஞையாபதிக்கு ஆசிரமத்தில் நார்த்தங்காய் ஊறுகாய் இருக்கிறதா? இல்லையா? என்பதுகூடத் தெரியவில்லை என்பதுதான் விதர்ப்பமான கேள்வி.
அது சரி, இப்படிப்பட்ட மகான் மரணம் அடைந்தது எப்படி? குத்திக் காட்டுவது நம் நோக்கமன்று. ஆனால், மகானு மல்ல - புடலங்காயும் அல்ல. சராசரி மனிதனுக்கு ஏற்படுவது போன்ற பொல்லா நோய் வந்து மரணமடைந்ததுதான் ‘மகான்' என்ற சொல்லாடலைத் தோலுரிக்கிறது.
ரமணரின் முதுகுத்துண்டில் என்புருக்கி நோய் இருந்தது. பிறகு முதுகுதண்டுவடத்தில் சர்கோமா எனும் புற்றுநோய்க் கட்டி புறப் பட்டது. நான்கு முறை அறுவை சிகிச்சை செய்து அகற்றியும், அகலாமல் வளர்ந்த வண்ணம் இருந்தது. கதிரியக்கச் சிகிச் சைக்கும் அது கட்டுப்படவில்லை. மூலிகை சிகிச்சைக்கும் முடங்க வில்லை. ஹோமியோபதியையும் ஏற்றுக் கொள்ளவில்லை. நோய் முற்றிய நிலையில், 14.4.1950 அன்று மாலை மரணமடைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதற்குமேல் வாசகர் சிந்தனைக்கு....!

*நன்றி : "விடுதலை" நாளேடு 18.11.2019*

புதன், 13 நவம்பர், 2019

முருகன் தமிழ்க் கடவுளா? :வி.இ.குகநாதன்11/25/2017 இனியொரு

முருகன் தமிழ்க்கடவுள் என்பது காலகாலமாக இருந்துவரும் ஒரு கருத்தாயினும், அண்மைக் காலத்தில் தமிழ்த் தேசிய அரசியல் தொடர்புடைய உரையாடல்களால் மீண்டும் ஒருமுறை கவனம் பெற்றுள்ளது. அண்மையில் ஒரு தமிழ்த்தொலைக்காட்சியிலேயே (Vijay tv) “தமிழ்க்கடவுள் முருகன்” என்ற தொடர் ஒளிபரப்பப்படுமளவிற்கு இக் கருத்து பரவலடைந்துள்ளது. உண்மையில் முருகன் தமிழ்க்கடவுளா? என்ற கேள்விக்குப் பதிலளிப்பதே இக் கட்டுரையின் நோக்கம். இதற்கு நேரடியாக பதிலளிப்பதற்கு முன் சில விடயங்களைத் தெளிவுபடுத்த வேண்டியிருப்பதால், இதற்கான பதிலினை கட்டுரையின் இறுதியில் பார்ப்போம்.

பழங்காலத் தமிழர் வழிபாடுகளில் முருகன்:

முதலில் பழங்காலத்தில் தமிழர்கள் முருகனை வழிபட்டார்களா எனப் பார்ப்போம். பழைய வரலாறுகளிற்குச் சான்றாகப் பொதுவாக தொல்பொருளாய்வுச் சான்றுகளையும், பழைய இலக்கியங்களையும் கொள்வர். இவ்வாறான தொல்பொருள் சான்றாக நடுகல் வழிபாட்டினைக் காட்டி நிற்கும் நடுகற்கள் காணப்படுகின்றன. தமிழரும், அக்காலத்தில் வாழ்ந்த பிற இனத்தினரைப் போன்று, முதலில் மூதாதையோரை வழிபட்டு வந்தனர். இம் மூதாதையர் வழிபாட்டினை நினைவூட்டும் ஈம அடக்கங்கள், ஈமப்படையல்களின் எச்சங்கள் என்பன தமிழகத்தில் மட்டுமன்றி, யாழ்ப்பாணத்தில் கந்தரோடை போன்ற இடங்களிலும் அகழ்வராட்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டன (1). இத்தகைய மூதாதையர் வழிபாட்டு முறையின் ஒரு பகுதியாக மரித்தோர் நினைவாக நடுகற்கள் நடப்பட்டன. அதற்குப் பின்னரான காலப்பகுதியில் இதே முறையில் போரில் வீரச்சாவு அடைந்தவர்களிற்கு நடுகற்கள் நடப்பட்டன. மூதாதையர் நடுகல் வழிபாட்டிலிருந்தே வீரர்களிற்கான நடுகல் வணக்கமுறை தோன்றியதாக கலாநிதி கைலாசபதி நிறுவுவார்(2). பழங்காலத்தில் நடுகல் வணக்கம் தவிர வேறு கடவுள் வழிபாடு இல்லை என்பதனை மாங்குடி கிழார் “அடலருந் துப்பின்…” என ஆரம்பிக்கும் பாடலில்
“கல்லே பரவின் அல்லது
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.”

என புறநானூறில் பாடுவார் (3). இத்தகைய முன்னோர் மற்றும் வீரர்களின் நடுகல் வழிபாடும் ஒரு வகை முருக வழிபாடாகக் கருதப்பட்டது. இத்தகைய நடுகல்லான கல் தூண் என்பதையே சுருக்கி கந்து எனக்கூறிப் பின்னர் கந்தன் (ஸ்கந்தா Skanda என்பது வேறு) என அழைக்கப்பட்டது எனவும் கூறுவர். மேற்கூறியவாறு இத்தகைய நடுகல் வழிபாடு ஒரு வகைப் பழங்காலத் தமிழரின் முருக வழிபாடாகும்.

இதே போன்று குறிஞ்சி நிலத் தலைவனாகவும் முருக வழிபாடு காணப்பட்டது. இதனையே தொல்காப்பியம் “சேயோன் மேய மைவரை உலகமும்..” எனப் பாடும். அதாவது மலைசார்ந்த பகுதிகளில் தமிழர்கள்/ தமிழர்களின் முன்னோர் வாழ்ந்தபோது, அப் பகுதியின் தலைவனாக சேயோன்/ முருகன் கருதப்பட்டார். இதே போன்று இயற்கை வழிபாடான சூரிய வழிபாட்டின் மருவிய வடிவமும் மற்றொரு வகை முருக வழிபாடாயிற்று என சாரங்கபாணி எனும் அறிஞர் பரிபாடற் திறன் எனும் நூலில் “மாக்கடலினின்று நிவர்ந்தெழுந்த … செவ்வேள்” எனக் குறிப்பிட அதனை மறைமலை அடிகளாரும் பின்னர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

முருகனின் மற்றொரு வடிவம் வேலினை அடிப்படையாகக்கொண்ட வேலன் ஆகும். பழங்கால முன்னோர் வேட்டையினையும், உணவு சேகரித்தலையும் அடிப்படையாகக்கொண்டு வாழ்ந்த காலத்தில் தோன்றியதே இந்த வேலன் எனும் வடிவமாகும். வேட்டையினை முடித்து வந்தவர்கள் மீண்டுமொரு முறை வேட்டையில் நடந்தவற்றை செய்து பார்த்தனர். இதன்போது நாடகம், கூத்து என்பன தோன்றியதாகவும், இதன்போது வேலை ஏந்துபவன் வேலனாகக் கருதப்பட்டான். இவ்வாறான காலப்பகுதியில் பூசாரி வேல் ஏந்தி உருக்கொண்டதாக எண்ணிக்கொண்டு ஆடும் ஆட்டமே வெறியாட்டு என கலாநிதி க. கைலாசபதி கூறுகிறார்(4). இத்தகைய வெறியாட்டத்தின்போது வேலை ஏந்துபவரும் வேலனாகவே கருதப்பட்டார்.

மேற்குறித்த பலவகையான பழந்தமிழ் வழிபாடுமுறைகள் நமது முன்னோர்களிடம் காணப்பட்டன என்பது எவளவு உண்மையோ அதேயளவிற்கு உண்மை யாதெனில் இன்றைய நிலையிலுள்ள வழிபாடுமுறைகள் எதுவும் அன்றைய முறைகளுடன் அறவே தொடர்பற்றன என்பதாகும். இதனை விளங்கிக்கொள்வதற்கு நாம் முருகன் சுப்பிரமணிய ஸ்வாமி/ ஸ்கந்த(Skanda) ஆகிய கதையினை அறிந்துகொள்ளவேண்டும்.

ஆரியப் படையெடுப்பால் சுப்பிரமணிய ஸ்வாமியாகிய முருகன்:

இற்றைக்கு சுமார் 5000 ஆண்டுகளிற்கு முன்னர் (பொதுயுகத்திற்கு முந்திய 3000 ஆண்டளவில்/ BCE 3000) இடம்பெற்ற ஆரியப்படையெடுப் பானது இந்தியப் பழங்குடி மக்களிற்கு மட்டுமல்லாமல், அவர்களின் இயறகையோடு ஒன்றிய வழிபாட்டுமுறைகளிற்கும் இருண்ட காலத்தினைக் கொண்டுவந்தது. ஆரியப் பார்ப்பனர்கள் முதலில் அக்கினி,இந்திரன்,சோமன் போன்ற கடவுள்களிற்கே முக்கியத்துவம் கொடுத்து வழிபட்டதுடன், அவற்றையே ஏனையோரிடமும் பரப்பவும் முனைந்தனர். இதனை நாம் ரிக்,யசூர் ஆகிய வேதங்களில் அக் கடவுள்களிற்கு கொடுத்த முக்கியத்துவத்திலிருந்து அறிந்துகொள்ளலாம். இன்று இந்துக்களிடையே பரவலடைந்துள்ள எந்தவொரு கடவுளும் அன்று வேதங்களில் முக்கியம் பெற்றிருக்கவில்லை.

இதற்கு சுப்பிரமணிய ஸ்வாமியாகிய ஸ்கந்தாவும் விதிவிலக்கல்ல. ஸ்கந்தா (Skanda)என்பவர் குமார (Kumara)என்ற பெயருடன் அக்னியுடன் தொடர்புள்ளவராக ரிக் வேதத்தில் முதன்முதலில் காணப்படுகிறார்(5). வேதத்தின் மற்றொரு பகுதியில் ஸ்கந்தா ருத்திரா- Rudra (பிற்காலத்தில் சிவனாகப்போகும் ருத்திரா) உடன் தொடர்புடையவராக, சிறு குற்றவாளிகளின் (The lord of petty criminals) அதிபதியாகக் காணப்படுகிறார்(6). இவ்வாறு வேதங்களில் முக்கியத்துவமிளந்து சிறு சிறு இடங்களில் காணப்பட்ட ருத்திரா, ஸ்கந்தா போன்ற கடவுள்கள் திடீரென முக்கியத்துவம் பெற்று விஸ்வரூபம் எடுப்பதற்கு ஒரு வரலாற்றுப் பின்னனி காரணமாகவுள்ளது. பார்ப்பனியப் பிற்போக்குக் கருத்தியலிற்கு எதிராக பவுத்தப்புரட்சி ஒன்று பொ.முந்திய ஆறாம் நூற்றாண்டளவில் (BCE 6th century) ஏற்பட்டு இந்தியா முழுவதும் பரவலடைந்தது. இந்தப் பவுத்தப் புரட்சியினை எதிர்கொண்டு தமது பார்ப்பனிய ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்கு பார்ப்பனர்கள் தமது அக்கினிக்குப் பலியிட்டு வழிபடும் முறையினைக் கைவிட்டு ஆதிக்குடிகளின் வழிபாட்டுத் தெய்வங்களைத் தமது வேத காலக் கடவுள்களுடன் இணைத்து பல புராணக்கதைகளை உருவாக்கினார்கள். இந்தப் பின்புலத்திலேயே ஏனைய தொல்குடி மக்களின் வழிபாட்டுமுறைகள், வேதத்தில் வரும் ஸ்கந்தா,குமாரா போன்றவர்கள், உபநிடதங்களில் வந்த சனத்குமார் (Sanath Kumar)என்பவற்றுடன் தமிழர்களிடையே இருந்த பல்வேறுவகைப்பட்ட முருக வழிபாட்டுமுறைகளையும் இணைத்து சுப்பிரமணிய ஸ்வாமி உருவாக்கப்பட்டார். இதுவே சுப்பிரமணிய ஸ்வாமி தோன்றிய வரலாறாகும்(7). இவ்வாறான பல்வேறு கடவுளின் தொகுப்பாக அமைந்ததாலேயே வேறு எந்தக் கடவுள்களிற்குமில்லாதளவில் சுப்பிரமணிய ஸ்வாமிக்கு அதிகளவில் பெயர்கள் இருப்பதும், அவரின் பிறப்பு, வளர்ப்புடன் தொடர்புடையதாகப் பல பெற்றோர்கள் (ருத்திரா, பார்வதி, அக்கினி, கார்த்திகைப் பெண்கள்…)காணப்படு வதும் அமைந்துள்ளது.

இவ்வாறு முற்றிலும் பார்ப்பன மயப்படுத்தப்பட்ட ஸ்கந்தா என்ற போர்க் கடவுள் குப்தர் காலத்தில் இந்தியா முழுவதும் பரவலடைந்திருந்த போதும், குப்த பேரரசின் வீழ்ச்சியுடன் இந்தியாவின் ஏனைய பகுதிகளில் வீழ்ச்சியடைய, தமிழ் நாட்டில் மட்டுமே பழந்தமிழர்களின் பண்பாட்டுடன் இணைக்கப்பட்டிருந்த காரணத்தால் முக்கியத்துவமிளக்காமலிருந்தது. இந்தப் போர்க்கடவுளின் ஒன்றிணைப்பு மூலமான தோற்றத்தினை நியாயப்படுத்தும் நோக்கில் ஸ்கந்த புராண (Skanda Purana) உருவாக்கப்பட்டது. இதனையடிப்படையாகக் கொண்டு இப்புராணக்கதையினை தமிழர்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்காக கந்தபுராணம் எனும் புராணம் கச்சியப்ப சிவாச்சாரியாரால் தமிழில் இயற்றப்பட்டது.

கந்த புராணத்தின் முரண்கள்:

கந்த புராணத்தை எவளவோ சிரத்தை எடுத்து இயற்றியபோதும் அதில் பல தர்க்கரீதியான முரண்கள் காணப்படுகின்றன. குறிப்பாக சுப்பிரமணிய ஸ்வாமி சூரனை அழித்து அவனை மயில் வாகனமாகவும் சேவற்கொடியாகவும் ஆக்கியதாக கந்தபுராணம் பாடும். அவ்வாறாயின் அதற்கு முன்னரே சிறுவனாகவிருக்கும்போதே பிள்ளையாருடன் மாம்பழத்திற்கு சண்டையிட்டு மயிலேறி உலகம் சுற்றியது எவ்வாறு என்ற கேள்வி எழும். தூங்கும் குழந்தைகள் உட்பட மொத்த ஊரையே கடலுள் மூழ்கடித்தவர் ( “முஞ்சு தானை களார்ப்பொடு குழீ …” பாடல்- படத்தில் காண்க) எவ்வாறு கருணையே உருவான கடவுளாக முடியும். இவ்வாறான முரண்கள் கந்த புராணத்தில் காணப்படுவதாலேயே தமிழக கிராமப்புறங்களில் ஒருவர் நம்ப முடியாத பொய்களை/ புழுகுகளைக் கூறும்போது, “இந்தப் புழுகு கந்த புராணத்திலும் இல்லாத புழுகு” எனக் கூறுவார்கள். (இதனை சில பக்தர்கள் “கந்த புராணத்தில் இல்லாதது வேறு எந்த புராணத்திலும் இல்லை” என மாற்றிக்கூறிவருகின்ற போதிலும் முன்னையதே நாட்டுப்புற வழக்கிலுள்ளது).

முருக வழிபாட்டின் இன்றைய நிலை:

பழந் தமிழர்களிடையே காணப்பட்ட இயற்கையோடு ஒன்றியும், அவர்களுடைய வாழ்வியலுடனும் கலந்திருந்த முருக வழிபாட்டின் பல்வேறு வடிவங்களும் இன்று பார்ப்பனப் புராணக்கதைகளிற்குட்பட்டு வேறு ஒரு வடிவிலேயே உள்ளது. இன்னும் கடுமையாகப் பார்த்தால் தமிழர்களிற்கு எதிரான நிலையினை இன்றைய முருகவழிபாடு எடுத்துள்ளதனை சூரன்போர், சமசுகிரதத்திலேயே முருகனிற்கு பூசை என்ற இடங்களில் காணக்கூடியதாகவுள்ளது. தமிழர்களுடைய கோயில்களில் சமசுகிரதத்தில் பூசை நடைபெறும்போதே” தமிழ் நீசபாசை” என்பதனை ஏற்றுக்கொள்வதாகவே பொருளாகிறது. இன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் “தமிழ்க்கடவுள் முருகன்” எனும் தொடரும் முற்றுமுழுதாக ஸ்கந்த புராணக்கதையினை

அடிப்படையாகக்கொண்டுள்ளதே தவிர மாறாக பழந்தமிழர் வாழ்வியலையோ அல்லது அவர்களின் வழிபாட்டையோ சிறிதும் பிரதிபலிக்கவில்லை.

முருகன் தமிழ்க் கடவுளா? கேள்விக்கான பதில்:

இப்போது கேள்விக்கான பதில் காண்பதற்கான நேரம் வந்துவிட்டது. இங்கு பதில் காண்பதற்கு முன் கேள்வியினை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள வேண்டியுள்ளது. முருகன் பற்றித் தேவையானளவு மேலே ஏற்கனவே பார்த்துள்ளோம். அடுத்த சொல்லான தமிழ் என்பது “அ” முதலிய 247 எழுத்துக்களையுடைய நமது மொழியைக் (பழைய வட்டெழுத்துக்கள், தமிழி, பேச்சுமொழி உள்ளடங்கலாக) குறிக்கும். இறுதிச் சொல்லான கடவுள் என்பது சற்றுச் சிக்கலானது. அகராதியின் படி கடவுள்(God) என்பவர் அண்டம் (Universe) முழுவதையும் படைத்துக் காப்பவர் என்றும், அவர் எல்லாச் சக்திகளும் பொருந்தியவர்(Supreme power) என்றும்,எல்லாச் செயல்களிற்கும் காரணமானவர் எனவும் வரைவிலக்கணப்படுத்தப்படுகிறார் (Oxford dictionary). இப்போது பதிலிற்கு வந்தால் முருகன் தமிழ்க்கடவுளா என்பதற்கு முன் தமிழிற் கு எனத் தனியாகக் கடவுள் இருக்கலாமா எனப் பார்த்தால் பதில் கடவுளின் வரைவிலக்கணப்படி இல்லை என்பதேயாகும். விளங்கக் கூறின், ஒரு வாதத்திற்கு கடவுள் இருக்கிறார் எனக்கொண்டாலும் அவர் இந்த பிரபஞ்சம் முழுவதற்கும் பொதுவானவாராக இருப்பாரேயன்றி மாறாக தமிழர்களிற்கு முருகன், சமசுகிரத ஆரியரிற்கு இராமர், ஐரோப்பியரிற்கு இயேசு, அராபியரிறகு அல்லா என இருக்கமுடியாது.
இதுவரைப் பார்த்தவற்றைச் சுருக்கமாகக் கூறினால், முருகனின் (கொற்றவை போன்றவையும்) பல்வேறு நிலைகளிலான வழிபாட்டு முறைகள் எமது முன்னோர்களிடம்/பழந் தமிழர்களிடம் காணப்பட்டன. அவையெல்லாம் இன்றைய நிலையில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு உட்பட்டு முற்றுமுழுதாக உரு மாறிவிட்டன. அவற்றினை மீட்டெடுக்காமல் வெறுமனே முருகன் தமிழ்க்கடவுள் எனக்கூறுவது பார்ப்பனியத்திற்கு முண்டுகொடுக்கும் வேலையேயன்றி வேறில்லை. அவ்வாறு மீட்டாலும், அதற்குப் பின்னர்கூட , இன்றைய அறிவியல்நிலையில் “எல்லாம் வல்ல கடவுள்” என்ற வரைவிலக்கணத்திற்குள் அடைக்கத்தேவையில்லை, மாறாக பழந்தமிழ்க் கலை-பண்பாட்டு வரலாற்று அடையாளங்களாகக்கொள்ளலாம்.

துணை நின்றவை
(1)= பொ.இரகுபதி- பெருங்கற்கால யாழ்ப்பாணம்(பக்கம்6-7)
(2)= க.கைலாசபதி- பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும். (பக்கம்37)
(3)= புறநானூறு- பாடல் 335
(4)= க.கைலாசபதி- பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும். (பக்கம்172)
(5)= Pandit Pundalik Madhav (1967), translation of The Rigveda Samhita Vol 1, (p 167)
(6)= Narayan Aiyangar (1987), Kumara in Essays on Indo-Aryan Mythology Vol 1 (p 29)
(7)= Nath Vijay (2001), Acculturation Process Mythicised in Puranas and Acculturation: A Historico-Anthropological Perspective, (pp 98-99)

வெள்ளி, 8 நவம்பர், 2019

தீபாவளி பற்றி அண்ணா அவர்களின் கட்டுரை :

தமிழகத்தில் தீபாவளி நரகாசுரவதத்தைக் குறிக்கிறது அல்லவா? 

பஞ்சாபிலே அப்படிக் கிடையாது. 
நளச் சக்கரவர்த்தி, சூதாடி அரசு இழந்த இரவுதான் தீபாவளியாம்! 

இங்கே நாம், அசுரனை ஒழித்த நாளென்று ஸ்நானம் செய்து மகிழ்வது சடங்காகக் கூறப்படுகிறதல்லவா? 

பஞ்சாபிலே நடப்பது என்ன? 

சூதாடுவார்களாம், 
பண்டிகையின்போது!
 தமிழகத்து இந்து, தீபாவளியை நரகாசுரவதமாகவும், 
பஞ்சாப் இந்து அதே தீபாவளியை நளமகாராஜனுடைய சூதாட்டத் தினமாகவும் கருதுவது எதைக் காட்டுகிறது? 
வேடிக்கையல்லவா? 

லாகூரில் ஒரு ரூபாய்க்குப் 
பதினாறு அணா, 
லால்குடியிலும் அதேதான்! 

ஆனால் லாகூர் இந்து 
தீபாவளியின் போது, நரகாசுரனை நினைத்துக் கொள்ளவில்லை. 

லால்குடி இந்துவுக்கு தீபாவளி,
 நளச் சக்ரவர்த்தி சூதாடிய இரவு என்று தெரியாது. 

மான்செஸ்டரிலே உள்ள கிறிஸ்துவரை, ஏசுநாதர் எதிலே அறையப்பட்டார் என்று கேளுங்கள், 

சிலுவையில் என்பார். 

மானாமதுரையிலே மாயாண்டி, மத்தியாஸ் என்னும் கிறிஸ்துவரான பிறகு அவரைக் கேளுங்கள், 

அவரும் ஏசு சிலுவையில் அறையப்பட்டார் என்றுதான் சொல்வார்.

இங்கோ லால்குடி இந்துவின் 
தீபாவளி வேறு, 
லாகூர் இந்துவுக்கு தீபாவளி மற்றோர் காரணத்துடன் ஏற்பட்டிருக்கிறது. 

இவ்வளவோடு முடிந்ததா வேடிக்கை! – மேலும் உண்டு. 

மகாராஷ்டிர தேசத்திலே, 
தீபாவளிப் பண்டிகை எதைக் குறிக்கிறது என்று கேளுங்கள்
விநோதமாக இருக்கிறது. 

மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலியின் முடியிலே அடியை வைத்த நாளாம் தீபாவளி! 

லால்குடிக்கு லாகூர் மாறுகிறது. 
லாகூரிலிருந்து புனா போனால், 
புதுக் கதை பிறந்துவிடுகிறது. 

கூர்ஜரத்திலே தீபாவளி புது வருசத்து வர்த்தகத்தைக் குறிக்கிறதாம்! 

வங்காள தேசத்தில் காளிதேவையை இலட்சுமியாகப் பூஜை செய்யும் 
நாளாம் தீபாவளி! 

சிலர், ராமன் மகுடம் சூட்டிக் கொண்ட தினமே தீபாவளி என்று கொண்டாடுகிறார்களாம்! 

சரித்திர ஆராய்ச்சியைத் துணை கொள்ளும் சில இடங்களிலே, 
தீபாவளி என்பது 
தேவ கதைக்கான நாளல்ல; 

உஜ்ஜைனி நகர அரசன் விக்கிரமாதித்தன் பட்டம் சூடிய நாளைக் கொண்டாடும் பண்டிகையாம்! 

இவ்வளவோடு முடிந்ததா? இல்லை.

இந்திய தேசத்திலே நான்கு ஜாதிகள், சிரவணம் பிராமணருக்கு, 
நவராத்திரி க்ஷத்திரியர்களுக்கு, வைசியர்களுக்கு தீபாவளி, 
இதராளுக்கு (!!) ஹோலிப் பண்டிகை என்று சம்பிரதாயம் ஏற்பட்டிருப்பதாக மற்றோர் சாரார் கூறுகின்றனர். 

இதில் எது உண்மை? 
அறிவுடையோர் சிந்திப்பீர்!


வியாழன், 24 அக்டோபர், 2019

ஆன்மீக அரசியல் - ஆத்துமா ஆன்மிகம் ஆனது,

ஆன்மிக அரசியல்

(மோடி, அமித்ஷா இணைந்து செய்யும் அரசியல் பகுத்தறிவு அரசியல் இல்லை. நடிகர் ரஜினிக்குப்பிடித்த ஆன்மிக அரசி யல் தான்! அந்த ஆன்மிக அரசியலுக்குக் கருவாக இருக்கும் ஆத்துமா எனும் மூடநம் பிக்கை இருளை விரட்ட வெளிச்சம் தரும் பகுத்தறிவு சிந்தனைகள் இங்கே தரப்பட்டு உள்ளது)

ஆத்மா

ஆத்மா என்பதுபற்றிப் பேசப் புறப்பட் டால் பிரத்தியட்ச அனுபவத்திற்கும், அறி வுக்கும் அதீதப்பட்டதாக இருப்பவைக ளைப் பற்றியேதான் பேச வேண்டியிருக்கும்.

ஏனெனில், அது அறிவையும் அனுபவத் தையும் தூர வைத்துவிட்டு, வெறும் நம் பிக்கை மீதே ஒப்புக்கொண்டு பேசவேண் டியதாக இருக்கிறது.

எதுபோலென்றால், கடவுள் என்பதைப் போலவே. அதாவது, ஒரு வஸ்துவாக - பொருளாக இல்லாததை ஒரு சக்தியாகக் கருதி, அதாவது, “கண், மூக்கு, காது, வாய், கை, கால், உடல் ஒன்றும் இல்லாமல், கண்களுக்கும் தெரியாததாய், மனதுக்கும் அடங்காததாய் இருக்கும் ஒரு வஸ்துவே கடவுள் என்பது போல்தான் ஆத்மாவும் ஒரு வஸ்துவாக இல்லாமல், ஒரு உருவமாக இல்லாமல், சக்தியாகக்கூட இல்லாமல், “கண் களுக்குத் தெரியாததும், மனத்துக் குட்படா ததும், காரண காரியங்களைக் கொண்டுகூட ஸ்தாபிக்க முடியாததுமாய் இருக்கிற ஒரு சூட்சுமப் பொருள் என்று வழங்கப்படுகிறது. இது இந்தப்படி ஒன்று இருக்கிறது என்பதை நம்பியாக வேண்டு மேயல்லாமல், விவகா ரம், விசாரணை ஆகியவைகளைக் கொண்டு சிந்தித்துப் பார்த்து நம்புவது என்பது முடியா ததாய் இருக்கிறது.

- தந்தை பெரியார், நூல்: தத்துவ விளக்கம்

பைத்தியக்காரனுக்கு

கள் ஊற்றியது போல்

ஆத்மா இருக்கிறது; அது சாவது கிடை யாது. மனிதன் செய்த நன்மை தீமைக்கான தண்டனையை ஏற்று மோட்சம், நரகம் சென்று அனுபவிக்கிறது என்றும், அவன் ஆத்மாவானது இன்னொரு உடலுக்குச் சென்று மறு பிறவி எடுத்து இங்கு வந்து அவன் செய்த பாவத்திற்கேற்ப நாய், கழுதை, பூச்சி, புழுவாய்ப் பிறந்து அனுப விக்கிறது என்றும், மனிதன் அவனவன் விதிப்படிச் சாவான், விதிப்படிதான் நடந்து கொள்வான் என்றும் இப்படிப் பைத்தியக் காரனுக்கு கள் ஊற்றியது போல் உளறிக் கொட்டியிருக்கிறான்.

- தந்தை பெரியார்  (விடுதலை, 17,6,1970)

ஒரு பொய்யை

நிலை நிறுத்த பல பொய்

ஆத்மா என்பது ஒரு பொய். மதக் கற்பனைக்கு ஒரு பொய்ப் பாதுகாப்பே அல்லாமல் வேறல்ல. ஒரு பொய்யை நிலை நிறுத்தப் பல பொய் பேச வேண்டியிருப்பது போல், மதத் தத்துவம் என்னும் பொய்யை நிலை நிறுத்தவே ஆத்மா மோட்சம், நரகம், மறு பிறவி, விதி, தர்மம் என்பதாகப் பொய்க் களஞ்சியக் கற்பனைகளை ஏற்படுத்த வேண்டிய தாயிற்று.

- தந்தை பெரியார்

(விடுதலை, 6.3.1966)

ஆத்மா அர்த்தமற்ற வார்த்தை

ஆத்மா என்பது ஒரு வஸ்துவல்ல ; பொருள் அல்ல; அது சுதந்திரம், அறிவு, உணர்ச்சி முதலாகியவைகளை உடைய தல்ல என்பதோடு அது பெரிதும் அர்த்த மற்ற வார்த்தை என்றே நமக்குக் காணப்படு கிறது.

- தந்தை பெரியார்  (விடுதலை, 6.12.1953)

ஆத்மா எப்படி

அனுபவிக்க முடியும்?

ஆத்மா என்பது கண்ணுக்குத் தெரியா தது என்றும் சரீரம், உருவம், குணம் இல்லா தது என்றும் சொல்லப்பட்டிருக் கிறதே சரீ ரம் உருவம் இல்லாததற்கு நாம் பார்ப்பனரி டம் கொடுக்கும் அரிசி, பருப்பு, செருப்பு, விளக்குமாறு ஆகியவை எப்படிப் போய்ச் சேரும்? அவற்றை ஆத்மா எப்படி அனு பவிக்க முடியும்?

- தந்தை பெரியார்  (விடுதலை, 14.2.1954)

மனிதனை பயமுறுத்தவே ஆத்மா

உலகில் மனிதன் மட்டும் சாவது இல்லை; பிறப்பது இல்லை. ஏராளமான சீவன்கள், மிருகங்கள், மரம், செடி, கொடி கள் யாவும் மடிந்து சாகின்றன. மனிதனுக்கு எப்படி ஆத்மா இருக்கிறது என்கின்றானோ அது போன்று இவைகளுக் கெல்லாம் ஆத்மா இருக்க வேண்டுமே? அப்படி இல்லை யென்றால் அவைகளுக் கெல்லாம் இல்லாத ஆத்மா மனிதனுக்கு மட்டும் இருக்க வேண்டிய அவசியம் என்ன வென்று பார்த்தால் கடவுளிடம் மனிதனுக் குப் பயம் ஏற்பட வேண்டுமானால் அதற் கொரு வேலை வேண்டும். அதற்கு வேலை கொடுக்கவும் மனிதனைப் பயமுறுத்தவும் அயோக்கியனால் ஏற்பாடு செய்யப் பட்டது தான் ஆத்மா வாகும்.

- தந்தை பெரியார் (விடுதலை, 17.6.1970)

ஆத்மா - ஆத்மார்த்தம் - ஆன்மா - ஆன்மிகம்!

ஆத்மா என்பதைப் போல மனத்தைக் குழப்பும் சொல் - தத்துவம் உலகில் வேறு எதுவும் கிடையாது.

கடவுள், மோட்சம், நரகம், தேவதைகள், பிசாசுகள் என்ற வரிசையில் வைக்கப்பட வேண்டிய கற்பனைகளில் இதுவே முதல் இடத்தைப் பெற மிகவும் தகுதி வாய்ந்த ஒன்றாகும்!

இல்லாத ஒரு கற்பனை, மனித குலத்தை எத்தனை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக படாத பாடுபடுத்தி, மனிதனின் அறிவுத் திறனுக்கு விலங்கிட்டுள்ளதே என்று எண் ணுகையில் மிகவும் வேதனைப்பட வேண்டி யுள்ளது!

இது உண்மை அல்ல; மனிதனின் அச் சம் காரணமாக ஏற்பட்ட ஒன்று என்பதற்கு முதல் ஆதாரம், அது ஒவ்வொரு நாட்டில், ஒவ்வொரு கால கட்டத்தில், ஒவ்வொரு மதத்தவருக் கும் ஒவ்வொரு மாதிரியாகத் தோன்றி அதையொட்டி அவர்கள் எழுதி யுள்ளதும், பேசி வருவதும் போதித்து உள் ளதுமேயாகும்.

உண்மை என்றால் அது ஆளுக்கு ஆள் மாறுபட முடியாது; கூடாது!

ஆத்மாபற்றிய வரையறை, இலக்கணம், விளக்கம் ஒன்றுக்கு மற்றொன்று குழப்ப மாகவும், முரணானதாகவும் உள்ளதே!

ஆனால், பொதுவாக எல்லா மதங்களும் ஒப்புக் கொள்ளும் ஆத்மாவின் பலன், நல்லது, கெட்டது என்பதை அதுவே நிர்ண யிக்கிறது என்றும், மனித உடலில் தற்காலி கமாகக் குடியிருக்கும் அது (ஆத்மா) மனித னின் இறப்புக்குப் பிறகு அவனை விட்டு விட்டுப் போய் விடுகிறது என்பதே!

அதற்குப் பால் வேற்றுமை இல்லை. அது உடலி லிருந்து உயிர் பிரிந்தவுடன், எங்கோ சென்று தற்காலிக உறைவிடத் திலோ அல்லது மோட்சம் அல்லது நரகத் திற்கோ சென்று தங்கி விடுகிறது! அது மீண்டும் உலகில் வந்து புதுப்பிறவி ஆகிறது என்று --இம்மதங்களில் பல நம்புகின்றன.

ஆத்மா, மோட்சம், நரகம்,

மறுபிறப்பு, பிதிர்லோகம்

ஆகியவைகளைக்

கற்பித்தவன் அயோக்கியன்,

நம்புகிறவன் மடையன்,

இவற்றால் பலன் அனுபவிக்கிறவன்

மகா மகா அயோக்கியன்.

- தந்தை பெரியார்

மரணம் என்பது முடிவல்ல; அது உட லுக்குத்தான்; ஆத்மாவுக்குக் கிடையாது என்று மதவாதிகள் நம்புகின்றனர்; - கூறு கின்றனர்; பரப்புகின்றனர்!

ஆத்மா பற்றிய விசாரணை அது எப்படி மனித வாழ்வின் நல்லது கெட்டதுகளையும், நன்மை தீமைகளையும் புதுப்புதுப் பிறவி கள் - அடுத்து எடுக்க வேண்டியவைகளை யும் நிர்ணயிக்கிறது என்பதை பற்றியதே யாகும்

ஆத்மா என்பதற்கு ஆங்கிலத்தில் ஸ்பி ரிட்” (Spirit) என்று கூறுகின்றனர். அதனால் ஆத்மாபற்றிய விவாதத்தை   Spritual Enquiry of Discussion என்று படித்த பலரும் கூட கூற நாம் கேட்கிறோம்.

இந்த  என்ற செல்லே, ஒரு இலத்தீன் மொழிச் சொல் ஆகும்; இலத்தீனிய மொழிச் சொல்லில் மூச்சை இழுத்து விடுதல் என்பதைத் தான் குறிப்பதாகும் !

உடலில் மூச்சு உள்வாங்குதல், வெளி விடுதல் என்பதுதான் மனிதன் உயிருடன் வாழ்கின்றான் என்பதற்கு அடையாளம். மூச்சு நின்று விட்டால் “அவன் செத்துப் போய் விட்டான் என்கிறோம்! அதாவது மூச்சு நின்று விட்டது என்று அறிவிக்கிறோம்!

மதவாதிகள், சாமியார்கள், தத்துவ வாதிகள் ஆகிய மூவரும் காலங் காலமாகத் தொடர்ந்து இந்த விசாரணையைத் தங் களது தொழிலாகவும், தொடர் பணியாக வும், தங்களை மற்ற மனிதர்களிடத்திலிருந்து வேறுபடுத்தி உயர்த்திக் காட்டும் ஏணியா கவும் பயன்படுத்திக் கொள்ள நல்ல “மூல தனமாக“க் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்!

மத குருமார்கள், மதவாதிகள் மீது நாளுக்கு நாள் வெறுப்பு அதிகமாகி வருவ தால், அதே பெயரில் தங்களது சுரண்டல் வாழ்க்கையை நடத்தாது, “ஆன்மிகம்“ என்ற ஒரு சொற் றொடரை - ஆத்மார்த்தம்‘ என்பதனைத் தமிழ்ப்படுத்தி ஆன்மா வாக்கி, அது பற்றிய ஆராய்ச்சியினை ஆன்மிகம் என்று கூறி, மூடநம்பிக்கை என்ற விஷ உருண்டையை - சர்க்கரைப் பூச்சு பூசித் தந்து பெரும்பாலான மக்களை - விரக்தியிலும் வேதனையிலும் வாடு வோருக்கு - ஏதோ புதுவழி காட்டப் புறப் பட்டவர்களாகத் தங்களைக் காட்டிக் கொண்டு நவீனச் சாமியார் வேடத்தில் நன்கு மக்களை ஏமாற்றுகின்றனர்!

- கி.வீரமணி, நூல்: ஆத்மா ஓர் ஆராய்ச்சி

மரணத்திற்குப் பிறகு மறுவாழ்வு உண்டா?

நீங்கள் நம்புகிறீர்களா?

நம்பவில்லை; நம்புவதற்கு ஆதாரமில்லை.வாழ்வை உணரும் கருவிதான் உடம்பு.

அய்ம்பூதங்களோடு உடம்புக்குள்ள தொடர்பனுவம்தான் வாழ்வு.

ஒவ்வொரு புலனும் ஓர் உலகம்.

செவிப்புலன் இழந்தால் ஒலி செத்துப் போகிறது.

விழிப்புலன் இழந்தால் ஒளி உலகம் இருண்டு போகிறது.

உடம்பேகழிந்துபோனால் உணர முடியுமா உலக வாழ்வை? மரணத்திற்குப் பிறகு என்ன நேர்கிறது உடம்புக்கு?

மூச்சு நின்ற 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டையிடுகின்றன சடலத்தில்.. 60 மணி நேரத்தில் இட்ட முட்டையிலிருந்து லார்வாக்கள் வெளிவருகின்றன. நகங்கள் கழன்று விடுகின்றன - மூன்று நாட்களில், ஈறுகள் தொலைகின்றன.

நான்கு நாட்களில். அய்ந்தே நாட்களில் திரவமாய் உருகித் தேங்கிவிடுகிறது மூளை. ஆறே நாட்களில் மொத்த உடம்பும் பச்சை பூத்துப்போக, வாயுக்களால் வீங்கி வெடிக்கிறது வயிறு கழன்று கபாலத்துக்குள் விழுந்து விடுகின்றன கண்கள்.

இரண்டே மாதங்களில் உடம்பே அழுகி உருகித் திரவப் பொருளாகிவிட என்னை அடையாளம் தெரிகிறதா என்று எஞ்சி நிற்கிறது எலும்பு

வாழ்வின் கருவியாகிய உடம்பே அழியும் போது எங்ஙனம் சாத்தியம் இன்னொரு வாழ்வு?

உயிர் அழியாது எனில் அது என்ன திடப்பொருளா திரவப் பொருளா - இன்னொரு பாண்டத்தில் இட்டு வைக்க? மரணத்திற்குப் பிறகு வாழ்வு என்பது வசதியான கற்பனை என்றே கருதுகிறேன்.

மனித குலம் வாழும்போதே வாழ்வ தற்கு என்ன வழி என்றே ஏங்குகிறேன்.

- கவிப்பேரரசு வைரமுத்து

நூல் : பாற்கடல்

- விடுதலை ஞாயிறு மலர் 19 10 19

வெள்ளி, 11 அக்டோபர், 2019

பிள்ளையார் 'குணக்களஞ்சியம்'

மயிலாடன்




இந்தத் தலைப்பில் ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜய பாரதம்‘ பிள்ளையாரின் குண விஷயங்களை வித்தாரமாக எழுதித் தள்ளியுள்ளது.

1. பிள்ளையாரை மனதார நினைத்தாலே போதும் விக்கினங்களிலிருந்து காப்பார் (விக்னேஷ்வரான விநாயகன் உண்டியலை அபேஸ் செய்தபோது அவர் சக்தி எங்கே போனதாம்?).

2. அரக்கர்களை அழித்தவன் ஆதலால் பிள்ளையாரை நினைத்தால் வீரம் கிட்டும் (கடவுளின் வேலை சண்டை போடுவதும், அழிப்பதும் தானா?)

3. விநாயகரின் பெரிய தலையே அவர் ஞானம் உடையவர் என்பதற்கு அடையா ளம். (பெரிய தலை இருந்தால் ஞானம் என்று எந்த முண்டம் சொன்னது?).

4. பார்ப்பதற்கே ஒரு கம்பீரம் நிறைந்த அழகிய உருவம் கொண்டவர் பிளளையார் (பிள்ளையார் போல குழந்தை பிறந்தால் கொஞ்சுவார்களா - கழுத்தை முறித்துக் கொல்லுவார்களா?).

5. சமதிருஷ்டி உடையவரை மீறி உள்ளே நுழைந்த தந்தையானாலும் தடுக்கக் கூடியவர் (பார்வதி தேவியார் குளிக்கும்போது உடலின் அழுக்கைத் திரட்டி உருவாக்கப்பட்டவர் தான் பிள்ளை யாராம் - இருக்கட்டும். பார்வதி தேவி குளிக்கும் இடத்திற்கு சிவன் சென்ற போது அவனைத் தடுத்து நிறுத்தினான் பிள் ளையார் என்பதைத்தான் ‘விஜயபாரதம்‘ இப்படி எழுதியிருக்கிறது. அந்த சக்தி பிள்ளையாருக்கு இருந்தால் தடுத்த பிள்ளையாரின் கழுத்தை ஒரே வெட்டாக வெட்டித் தள்ளினானே சிவன், அப் பொழுது இந்தப் பிள்ளையாரின் சக்தி ‘லீவு’ எடுத்துக் கொண்டு போய் விட்டதா?)

6. உதவும் குணம் உடையவராம் இந்த விநாயகர், அகத்தியரின் கமண்டலத்தில் அடைபட்டு ஆணவம் நீங்கப் பெற்ற காவிரியை மீண்டும் ஓட வைத்தவர் (காவிரி பிரச்சினைக்காக இவ்வளவுப் போராட்டம் ஏன்? விநாயகனுக்குக் கொழுக்கட்டை வைத்துப் பூஜை போட்டால் தமிழ்நாட்டில் காவிரி கரை புரண்டு ஓட இவ்வளவு எளிதான வழி இருக்கிறதே - இதனை ‘விஜயபாரதம்‘ கையாண்டு கருணை மழை பொழிய செய்யக் கூடாதா?)

7. புதுமையாக சிந்தித்தார்: தாய் தந் தையை சுற்றி வந்தாலே அகில உலகையும் சுற்றி வந்த பேறு கிடைக்கும் என உணர்த் தியவராம் இந்தத் தொந்தி கணபதி. (ஒரு மாங்கனிக்காக விநாயகனும் முருகனும் சண்டை போட்டபோது, எனது முடியை முதலில் தொட்டு வருபவர்களுக்குத்தான் இந்த மாங்கனி என்றாராம் அப்பா சிவன். முருகன் மயிலேறி பறந்தானாம். விநாய கனோ தன் தாய் தந்தையரைச் சுற்றி முதலில் வந்தானாம். இதைத்தான் இப்படி ஜோடிக்கிறது ஆர்.எஸ்.எஸ். ஏடு. இதில் விநாயகனின் தந்திரம் இருக்கிறதே தவிர போட்டியை வெல்லும் ஆற்றல் இல் லையே! சரி, விநாயகன் அறிவாளி என்றால் அவன் சகோதரன் முருகன் பரம முட்டாளா?)

8. தியாகம் : மகாபாரதம் எழுதுவதற்கு அழகிய தன் தந்தத்தையே உடைத்தவர் (தந்தத்தினால் அவ்வளவு பெரிய மகா பாரதத்தை எழுத முடியுமா என்பது ஒருபுறம் இருக்கட்டும். தன் சக்தியால் ஒரு எழுது கோலை உருவாக்கிக் கொள்ள வேண்டியதுதானே?)

9. நம்பிக்கை: விநாயகர் தன்னை நம்பியவர்களை எப்பொழுதும் கைவிடுவ தில்லை. உதாரணமாக வள்ளியை மணக்க உதவி புரிந்தது. (சகோதரனுக்காக எந்த வேலையைச் செய்துள்ளார் பார்த்தீர்களா? ஒரு வள்ளியைக் கை பிடிக்கக் கூட சகோதரன் முருகன் கையாலாகாதவனா?)

10. எளிமை: ஒரு குழந்தைகூட விநாயகனை எளிதாக வரைந்து விட முடியும். (யானை முகம், பெருத்த தொந்தி, தந்தம், வாகனமான மூஞ்சுறு இவை அத்தனையும் கொண்ட ஓர் உருவத்தை எளிதாக வரைந்து விட முடியுமா? இவர் எளிமையான கடவுள் என்றால் மற்ற இந்து மதக் கடவுள்கள் கடுமையானவர்கள் தானா?)

11. புலனடக்கம்: அதாவது யானையை அடக்க அதன் பாகன்கள் அங்குசத்தைப் பயன்படுத்துவர், ஆனால் அந்த அங்கு சத்தையே தன் ஆயுதமாகத் தரித்தவராம். ஒருவனது கட்டுப்பாடே அவனை சிறந்த தலைவனாக்கும் என உணர்த்துபவர் விநா யகராம். (தன் தும்பிக்கையால் வல்லபை என்ற பெண்ணின் குறியில் என்ன செய்தார் என்பதுதானே இவர்களின் புராண லட் சணம்!).

ஒரு கடவுளச்சியின் உடல் அழுக்கி லிருந்து பிள்ளையார் உருவம் போல ஒரு பிள்ளை என்றால், இந்த அசிங்கத்தை அநாகரிகத்தை என்னவென்று சொல்லு வது?

அழுக்கிலிருந்து பிள்ளை பிறக்குமா?

இந்த ஆபாச - அருவருப்புக் கற்பனைக் கடவுளுக்கு எத்தனை எத்தனை இலட்ச ணங்களை - ஆர்.எஸ்.எஸ். ஏடு வரிந்து கட்டிக் கொண்டு எழுதுகிறது.

கேட்பவன் கேனையனாக இருந்தால் எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டியது என்று கூறுவானாம். இதற்குப் பொருத்த மானது - ‘விஜயபாரத’த்தின் அளப்புகள்!

- விடுதலை ஞாயிறு மலர், 5 .10 .19

செவ்வாய், 8 அக்டோபர், 2019

புரட்டாசி சனிக்கிழமை



தந்தை பெரியார்


புரட்டாசி சனிக்கிழமை உற்சவங்களும், திருப்பதி முதலிய நூற்றுக் கணக்கான 'சனிக்கிழமை பெருமாள்கள்' உள்ள ஊர்களின் உற்சவங்களும் சனிக்கிழமை பிடிப்பதன் மூலம் அவரவர்கள் வீட்டில் ஏராளமாய் சமைத்துக் கொண்டு சோம்பேறி களையும், அயோக்கியர்களையும் மெனக் கெட்டு தேடிப்பிடித்து வந்து அவர்களுக்கு வயிறு நிறையவும் போட்டு மற்றும் மூட்டை கட்டிக்கொண்டும் போகக்கூடிய அளவு மேற்கொண்டும் போட்டு கஞ்சாவுக்கோ கள்ளுக்கோ , சூதாடா வோ கையில் பணமும் கொடுத்து இவ்வளவு போதாமல் அந்த நாளெல்லாம் பட்டினி கிடந்து அந்தச் சோம்பேறிகளின் காலிலும் விழுந்து மாலை 3 மணி சுமாருக்குச் சாப்பிடும் பண்டிகையிலோ விரதத்திலோ கடுகளவும் அறிவு இருக்கிறதா? என்று கேட்கின்றேன்.

புரட்டாசி சனிக்கிழமை வந்தால் தங்களுக்குப் பட்டை நாமம் போட்டுக் கொண்டும், செம்புக்கும் நாமத்தைப் போட்டுக்கொண்டும் துளசி, அரளிப் பூவையும் அந்தச் செம்புக்கு சுத்திக் கொண்டும் 'வெங்கிடாஜலபதி கோவிந்தா' என்றும் , 'நாராயணா கோவிந்தா' என்றும் கூப்பாடு போட்டு அரிசியோ காசோ வாங்கிக்கொண்டு போவதில் ஏதாவது பலன் உண்டா என்றுதான் கேட்கிறேன்.

மற்றும், திருப்பதிக்குப் போகின்றேன் என்றுசொல்லிக்கொண்டு தலை மயிரும், தாடிமயிரும் வளர்த்து, வெறும் மஞ்சள் நனைத்த துணி கட்டிக்கொள்வதும், மேளம் வைத்துக்கொள்வதும், பெண்பிள்ளைகள் சுற்றத்தாரை அழைத்துக் கொள்வதும், வருஷமெல்லாம் பணம் உண்டியில் போட்டுப் பணம் சேர்ப்பதும் அல்லது வேண்டுதலையின் மேல் இவ்வளவு பணம் என்று கடன் வாங்கியாவது எடுத்துக் கொள்வதும் அல்லது வியாபாரத்திலோ அல்லது வேறு வரும்படி யிலோ இலாபத்தில் பங்கு என்று கணக்கு வைத்து எடுத்துச் சேர்த்துக் கொள்வதும் ஆன பண மூட்டையைக் கட்டிக்கொண்டு, கடைவா யிலும் நாக்கிலும் வெள்ளிக் கம்பியைக் குத்திக் கொண்டு போதாக் குறைக்குத் தெருவில் கூட்டமாய், 'கோவிந்தா கோவிந்தா கோவிந்தா' என்று கூப்பாடு போட்டு வீட்டுக்கு வீடு, கடைக்குக் கடை காசு பணம் வாங்கி, ஒரு பகுதியை இரயி லுக்குக் கொடுத்துத் திருப்பதி போவதும், அங்கு முழங்கால் முறிய மலை ஏறுவதும் ஆண்களும், பெண்களும் தலை மொட்டை அடித்துக் கொள்வதும், அந்த மலைச்சுனைத் தண்ணீரில் குளிப்பதும், அங்கு பட்டை நாமம் போட்டுக் கொள்வதும் கொண்டு போன பணத்தை உண்டியலில் காணிக் கையாகக் கொட்டுவதும், ஆண்களும் பெண்களும் நெருக்கடி யில் இடிபடுவதும் பிடிபடுவதும், வெந்ததும் வேகாததுமான சோற்றைத் தின்பதும், மற்றும் பல சோம் பேறிகளுக்கும், மேக வியாதிக்காரர்களுக் கும், வேக வைத்தோ விலைக்கு வாங்கியோ போடுவதும், விறகுக் கட்டைகளிலும் வேர் களிலும் செய்த மாமணி மாலைகளையும் வாங்கிக் கழுத்தில் போட்டுக்கொள்வதும், மலைக் காய்ச்சலோடு மலையில் இருந்து இறங்கி வருவதும், வீட்டுக்கு வந்து "மகேஸ்வர பூஜை" நடத்துவதும், பிராமண சமாராதனை செய்வதும் தவிர , மற்றபடி இவைகளால் ஏதாவது செய்தவனுக்கோ கூடப்போன மக்களுக்கோ நாட்டுக்கோ ஒழுக்கத்திற்கோ மதத்திற்க்கோ கடுகளவு நன்மை உண்டாகின்றதா என்று கேட் கின்றேன்.

திருப்பதிக்குப் போய்வந்த பிறகாவது யாராவது தங்கள் துர்க் குணங்களையோ கெட்ட செய்கைகளையோ விட்டு விட்ட தாக அதாவது திருப்பதி யாத்திரையானது இம்மாதிரிக் குணங்களை விடும்படி செய் ததாகவாது நம்மில் யாராவது பார்த் திருக்கின்றோமா என்று கேட்பதுடன் இம் மாதிரியான அறிவீனமான காரியத்திற்கு நமது நாட்டில் வருடத்திற்கு எத்தனை கோடி ரூபாய் செலவாகிறது என்பதை எந்தப் பொருளாதார இந்தியத் தேசிய நிபுணராவது கணக்குப் போட்டார்களா? என்றுதான் கேட்கிறேன்.

- விடுதலை நாளேடு 29 .9.19

வெள்ளி, 4 அக்டோபர், 2019

பண்டிகைகளின் பின்னணி

இந்து மதத்தில் பண்டிகைகளுக்குக் குறைச்சலே இல்லை.

சிறீ அனுமத் ஜெயந்தி, கெர்ப்போட்ட நிவர்த்தி, தை அமாவாசை, மாசி மகம், சிறீ மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், சிறீ ராம நவமி, மதுரை சிறீ மீனாட்சி திருக்கல்யாணம், சிறீ கள்ளழகர் எதிர் சேவை, அட்சய திருதியை (தங்கம் வாங்க சிறந்த நாள்), சிறீ மத் சங்கர ஜெயந்தி, வைகாசி விசாகம், ஆடிப் பெருக்கு, வரலட்சுமி விரதம், சங்கரன் கோவில் தபசுக் காக்ஷி, ஆவணி அவிட்டம், காயத்ரி ஜெபம், சிறீ மகா சங்கடஹர சதுர்த்தி, கோகுலாஷ்டமி, சிறீ விநாயகர் சதுர்த்தி, ஓணம் பண்டிகை, சர்வ மகாளய அமாவாசை, நவராத்திரி, சரசுவதி பூஜை / ஆயுத பூஜை, விஜய தசமி, தீபாவளி, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை இத்தியாதி... இத்தியாதி... இத்தியாதி...

பெரும்பாலும் இந்து மதப் பண்டிகைகள் எல்லாம் அசுரர்களை அழிப்பது என்ற மய்யப்புள்ளியை வைத்துச் சுழலுவதாகவே இருக்கும். தீபாவளி என்றால், நரகாசுர வதம், கந்த சஷ்டி என்றால், சூரபத்மன் வதம் - நவராத்திரி என்றால், மகிஷாசூரன் வதம், ஓணம் என்றால் மாவலி வதம்.

அசுரன் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் திராவிடர்கள் தான் என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுகிறார்கள். ஆரியர் - திராவிடர் போராட்டத்தைச் சித்தரிப்பதுதான் இந்த இதிகாச, புராணங்கள் என்பவை.

திராவிடர்களான அசுரர்களை அழிக்கவே கடவுள் அவதாரம் எடுத்ததாக எழுதித் தள்ளியுள்ளார்கள். அப்படி சூழ்ச்சியால் கொல்லப்பட்ட நாளை பண்டிகையாக்கி, கொல்லப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களையே பண்டிகையாகக் கொண்டாட வைத்துவிட்டனர் என்பது எத்தகைய அவலம்!

ஆண்டு முழுவதும் ஏராளமான பண்டிகைகளைக் குவித்து வைத்துள்ளனர். திராவிடர்களின் அறிவையும், மானத்தையும் இழக்கச் செய்வதுடன், அவர்கள் அரும்பாடுபட்டுச் சம்பாதித்த பொருளை ஒரே நாளில் நாசப்படுத்தும் ஏற்பாடாகவும் இதனைக் கருதவேண்டும்.

ஒரு கடைசிக் கடவுள் கல் உள்ளவரைக்கும் பார்ப்பன ஆதிக்கத்தை, பார்ப்பனீயத்தை ஒழிக்க முடியாது என்று தந்தை பெரியார் தெரிவித்த கருத்து கல்லுப் போன்ற மிகப்பெரிய உண்மையாகும்.

புரட்டாசியில் நவராத்திரி என்று கூறி ஒன்பது நாள்களை நாசப்படுத்துகிறார்கள். மூன்று நாள் பார்வதிக்கு - 3 நாள் லட்சுமிக்கு - 3 நாள் சரசுவதிக்காம். முறையே சக்தி, செல்வம், கல்விக்கு இந்தக் கடவுள்கள் அதிபதியாம். ஒன்பது நாள்களும் கொலு வைத்து நாள்தோறும் பூஜைகளை நடத்தி மடமைத்தனத்துக்கு மகுடாபிசேகம் செய்கிறார்கள்.

முன்னொரு காலத்தில் மகிஷாசூரன் என்ற எருமை ரூபமான அசுரனும் (அப்படி ஒருவன் இருக்க முடியுமா?), அவனின் பரிவாரங்களும் உலகை இம்சித்துக் கொண்டிருந்தனராம் (உலகத்தையே இம்சித்து இருந்தால் மற்ற மற்ற நாடுகளில் மகிஷா சூரனையும், அவன் பரிவாரங்களையும் மற்ற நாட்டுக்காரர்கள் என்ன செய்தார்களாம்?). அந்தக் கஷ்டம் பொறுக்க முடியாமல் தேவர்கள் பார்வதியிடம் முறையிட்டனராம். (ஏன் பரமசிவன், விஷ்ணு எல்லாம் இருந்தார்களே!). பார்வதி தேவி ஒன்பது நாட்கள் சிவனைக் குறித்துத் தவமிருந்து அவனிடமிருந்து தக்க சக்தியைப் பெற்று ஒன்பதாம் நாள் மகிஷாசூரனைக் கொன்று பரிவாரங்களை நாசம் செய்தாராம். மகிஷா சூரனைக் கொன்றதால், பார்வதிக்கு மகிஷாசூரமர்த்தினி என்று பெயரும் வந்து சேர்ந்ததாம்.

பார்வதி தவமிருந்து விழித்த ஒன்பதாம் நாளில் வேண்டிய வரங்களை சிவன் அருளினாராம். இந்த நவராத்திரியின் சூட்சமத் தத்துவம் இதுதானாம்.

இடையே இடைச் செருகல். லட்சுமி - செல்வத்தின் அதிபதி அவளை வேண்டினால் செல்வம் பெருகுமாம்.

கல்விக் கடவுளான சரசுவதியை வேண்டிக் கொண்டால் கல்வியில் சிறந்து விளங்கலாமாம்!

சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்காதே - சூத்திரன் படித்தால் நாக்கை அறு என்று என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு இன்னொரு பக்கத்தில் சரசுவதி பூஜை கொண்டாடக் கட்டளை இடுவதும், அப்படி சரசுவதியைப் பூஜை செய்தால் கல்வி ஒளி கிடைக்கும் என்பதும் பச்சையான முரண்பாடு அல்லவா!

கல்விக்கென்று கடவுள் இருக்கும் நாட்டில் தற்குறிகளாக மக்கள் கிடந்தது ஏன்? திராவிட இயக்க மும், தந்தை பெரியாரும் அயராது பாடுபட்டதால், நீதிக்கட்சி ஆட்சியால், காமராசர் காட்டிய ஆர்வத்தால், தொடர்ந்து நடைபெற்று வந்த திராவிடர் இயக்க ஆட்சியால் கல்வி வளர்ந்ததே தவிர, சரசுவதி பூஜையாலா? மக்களுக்குக் கல்வி கிடைத்தது? எத்தனை நூறு ஆண்டுகாலமாக சரசுவதி பூஜை கொண்டாடப்படுகிறது!

அப்பொழுதெல்லாம் ஏன் பெரும்பான்மை மக்களுக்குக் கல்வி கிடைக்கவில்லை? சரசுவதி பெண் கடவுளாக இருந்து பெண்கள் அறவே கல்வியில்லாத களர் நிலமாக ஆக்கப்பட்டது ஏன்? ஏன்?

செல்வத்துக்கென்று ஒரு கடவுள் இலட்சுமி இருக்கும் இந்த நாட்டில் வறுமைக்கோட்டுக்கும் கீழே மக்கள் உழலுவது ஏன்? நாள் ஒன்றுக்கு 20 ரூபாய் வருமானம் உள்ளவர்கள் 77 சதவிகிதம் என்று அரசு புள்ளி விவரம் கூறும் பரிதாப நிலை ஏன்? இரவு சாப்பாடு இல்லாமல் படுக்கைக்குச் செல்லுவோர் இந்தியாவில் 20 கோடி பேர் என்ற நிலை ஏன்? ஏன்?

இவை எல்லாம் எதைக் காட்டுகின்றன? இந்தக் கடவுள்கள் வெங்காயங்கள் எல்லாம் கற்பிக்கப் பட்டவை - மக்களை முட்டாளாக்கி அவர்களின் அறிவை, உழைப்பை, பொருளை முற்றிலும் சுரண்டும் சூழ்ச்சி என்பதல்லாமல் வேறு என்னவாம்?

உழவர் திருவிழா (பொங்கல்), மக்களுக்காகப் பாடுபட்ட தலைவர்கள், சிந்தனையாளர்களைக் குறிக்கும் நாள்களை நன்றித் திருவிழாவாகவும், அவர்களின் சிந்தனைகளைப் புதுப்பிக்கும் வரலாற்று நாளாகவும் கொண்டாடுவதைப் புரிந்துகொள்ளலாம்.

மக்களை மொட்டை அடிக்கும் பண்டிகைகளைத் தடை செய்தால், அது உண்மையிலேயே மக்கள் நல அரசாக இருக்க முடியும் - சிந்திப்பீர்!

- விடுதலை நாளேடு, 4.10.19