வெள்ளி, 1 டிசம்பர், 2023

இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது ஏன்? எதற்கு?


தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இந்திய ஒன்றிய பி.ஜே.பி. அரசின் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் மாநில அரசு இந்து மத நிறுவனங்களை ஆக்கிரமித்து, அவற்றின் வருவாயை மாநில செலவி னங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள் என்று பிரச்சாரம் செய்திருக்கிறார்.

தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசைப்பற்றி போகிற இடங்களில் எல்லாம் புழுதி வாரித் தூற்றிக் கொண்டு இருக்கிறார். காரணம் இண்டியா கூட்டணிக்கு தி.மு.க. முதுகெலும்பாக இருப்பது தான்.

அதேபோல ஒன்றிய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதராமனும் தமிழ்நாட்டில் இந்துக் கோயில்கள் தி.மு.க. அரசால் கொள்ளை அடிக்கப்படுகின்றன என்று பேசிச் சென்றுள்ளார்.

சமூகநீதிக்கான சரித்திர நாயகராம் நமது மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தக்க வகையில் பதில் கூறி யுள்ளார்.

ரூ.5,500 கோடி கோயில் சொத்துக்களை மீட்டெடுத்தது திமுக அரசு; இத்தகைய அரசைப்பற்றித்தான் பக்தியின் பெயரால் பகல் வேஷம் போடுகிறவர்கள் குறை கூறுகிறார்கள் என்று ஆதாரத்தோடு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் நமது முதலமைச்சர்.

தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு பி.கே. சேகர்பாபு அவர்களும் புள்ளி விவரங்களோடு  - புழுதிவாரித் தூற்றுபவர்களுக்குத் தக்க வகையில் பதிலடி கொடுத்து, 'வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ' என்று பேச வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட கோயில்களில் இடையில் பார்ப்பனர்கள் அர்ச்சகர்களாக உள்ளே புகுந்து கோயில்களைத் தங்கள் உடைமையாக்கிக் கொண்டு கோயில் சொத்துகளைக் கொள்ளை அடித்தனர்.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு இந்துக் கோயில்கள் கொண்டு வரப்பட்டதற்கு காரணமே  - கோயில் சொத்துக்கள் பார்ப்பனர்களால் கொள்ளை அடிக்கப்பட்டதுதான்.

பிரிட்டிஷ் ஆட்சியின் போது கோவில் நிதிகளின்மீது கட்டுப்பாடுகளைக் கொண்டு வர 1817ஆம் ஆண்டு சட்டம் க்ஷிமிமிஆவது பிரிவு, கோவில்களை நிர்வகிக்கும் அதிகாரத்தை ரெவ்ன்யூ போர்டுக்குள் கொண்டு வந்தது.

19ஆம் நூற்றாண்டின் மத்தியில் இந்திய மதங்களில் தலையிடுவ தில்லை என்னும் பொதுக் கொள்கையை வகுத்துக் கொண்டு கோவில்களை நிர்வகிக்கும் அதிகாரத்திலிருந்து பிரிட்டிஷ் ஆட்சி தன்னை விடுவித்துக் கொண்டது.

இததான் சந்தர்ப்பம் என்று கோயில்களில் பார்ப்பனர் கொள்ளை என்பது - கேள்வி கேட்பாரின்றி தலைவிரித்தாடியது.

இத்தகைய சூழலில் தான் நீதிக்கட்சி ஆட்சியில் இந்து அற நிலையத்துறை என்ற அரசு அமைப்பு உருவாக்கப்பட்டது.

நீதிக்கட்சியை உருவாக்கிய மூவேந்தர்களுள் மூலவரான டாக்டர் சி. நடேசனார் சட்டப் பேரவையில் பேசும்போது குறிப்பிட்டார்.

"கோயில் நிதிகளை ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் நிர்வகிக்கிறார்கள் இதனால் அவ்வகுப்பாருள் இருக்கின்ற வேலை யில்லாதவர்கள் பயன் அடைகிறார்கள். அதே வகுப்பைச் சேர்ந்த வழக்குரைஞர்களும், மிகப் பெரும் அளவில் பயன் பெறுகிறார்கள். பேச்சு வழக்கில் இல்லாத இறந்த மொழியான சமஸ்கிருதத்தைக் கற்பிக்க பாடசாலைகளை நடத்துகிறார்கள் - ஆனால் எல்லா சமயங்களாலும் போற்றப் பெறுகிற மொழியான தமிழைப் புறக்கணிக்கிறார்கள்" என்று அப்பட்டமான உண்மை களை சட்டப் பேரவையில் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்தார்.

'இந்து' ஏடு இதனை எதிர்த்து எழுதியதுண்டு.

இந்து சமய அறநிலையத்துறை மசோதா நீதிக்கட்சி அமைச் சரவையினால் பானகல் அரசர் சென்னை மாநிலப் பிரதமராக இருந்தபோது (Premier) 1923ஆம் ஆண்டு ஏப்ரலில் நிறைவேற்றப்பட்டது.

பார்ப்பனர்களும், மடாதிபதிகளும் கடுமையாக எதிர்த்தனர். இதனால் வைசிராய் ஒப்புதல் தரக் கால தாமதம் ஆனது.

1923ஆம் ஆண்டு நீதிக்கட்சி வெற்றி பெறவே இந்த மசோதா 1924ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டது. வைசியராயின் ஒப்புதல் பெற்று 1925ஆம் ஆண்டு ஜனவரியில் சட்டமாக்கப்பட்டது.

அப்போது சென்னை மாநிலக் காங்கிரஸ் தலைவராக இருந்த தந்தை பெரியார், நீதிக்கட்சியின் இந்த சட்டத்திற்குத் தம் ஆதரவையும், பாராட்டையும் தெரிவித்தார்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தச் சட்டத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

முழுக்க முழுக்க மலை விழுங்கி மகாதேவர்களாக இருந்த பார்ப்பனர்களின் கையை விட்டு கோயில்கள் சென்றுவிட்ட காரணத்தால், இந்த இந்து அறநிலையத்துறை ஒழிக்கப்பட்டு இந்துக்கள் கையில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கூக்குரல் போடுகின்றனர். பிஜேபியும் - ஆர்.எஸ்.எஸ். வட்டாரமும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து இந்து அறநிலையத்துறையை ஒழிப்பதே என்று சூளுரைக்கின்றனர்.

இதுபற்றி இந்து அறநிலையத்துறையில் பல்லாண்டுக் காலம் பணியாற்றி ஓய்வு பெற்ற சிறீரங்கம் கோயில் இணை ஆணையராக இருந்த செயராமன் என்ன கூறுகிறார்? 

"இந்து சமய அறநிலையத்துறை சட்டம் சில திருத்தங்களுடன் உருவாக்கப்பட்டபோது 1959இல் பூஜ்ஜியமாக இருந்து முதலீடு இன்றைக்குத் தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் இருந்து, நிலை முதலீடாக மூன்றாயிரம் கோடி ரூபாய்க்கு மேலாக வைப்புத் தொகை வங்கிகளில் உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு வட்டியாக ரூ.300 கோடி வருமானம் கிடைக்கிறது. ஒரு ரூபாய்க் கூடக் கடன் கிடையாது. அதுபோல கோவில்களுக்குச் சொந்தமான தங்கம், வெள்ளி போன்றவை வங்கிகளில் பல டன்கள் உள்ளன" (புதிய தலைமுறை - 8.8.2018) என்று குறிப்பிட்டுள்ளாரே!

இந்த நிலை மாற வேண்டும்; கோயில் சொத்துக்கள் முழுவதையும்  தங்கள் வயிற்றில் அறுத்துக் கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்து அறநிலையத்துறையை ஒழிக்க வேண்டும் என்று கூப்பாடு போடுகிறார்கள் - உஷார்! உஷார்!!

இதில் ஒரு வெட்கக் கேடு என்னவென்றால் கேரளம், கருநாடகம், ஆந்திரா, தெலங்கானா, பீகார், ஒடிசா, புதுச்சேரி மாநிலங்களிலும் இதே இந்து அறநிலையத்துறை செயல்பட்டு வருகிறது.

பா.ஜ.க. ஆளும் மகாராட்டிரம், உ.பி. ம.பி. மற்றும் ராஜஸ்தான் (காங்கிரஸ்) மாநிலங்களிலும் பப்ளிக் டிரஸ்ட் ஆக்ட் என்ற அரசு  நிர்வாகத்தின்கீழ்தான் கோயில்கள் இருக்கின்றன.

குஜராத் சோமநாதர் ஆலயத்தின் அறங்காவலர் குழுத் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். உறுப்பினர்களாக எல்.கே. அத்வானி, அமித்ஷா இருக்கின்றனர் என்பதை மறந்து விட்டுப் பேசுகிறார்களே எப்படி?

சனி, 18 நவம்பர், 2023

முனிவர்கள் பிறப்பு மூலம்

சிங்கத்திற்கு  சிங்கமகாசூரன் பிறந்தான்
புலிக்கு   வீரீஞ்சிகன் பிறந்தான்
யானைக்கு விநாயகன் பிறந்தான்
குதிரைக்கு அஸ்வத்ராமன் பிறந்தான்
கழுதைக்கு காங்கேயன் பிறந்தான்
கரடிக்கு ஜம்புவந்தன் பிறந்தான்
எருமைக்கு மகிஷன் பிறந்தான்
பசுவுக்கு கவுதமரிஷி பிறந்தான்
ஆட்டுக்கு அசமுகி பிறந்தான்
மானுக்கு ரிஷ்யசீருங்கன் பிறந்தான்
நாய்க்கு சவுநகன் பிறந்தான்
நரிக்கு கேசகம்பலன் பிறந்தான்
பன்றிக்கு நரகாசூரன் பிறந்தான்
குரங்குக்கு சம்புகன் பிறந்தான்
மயிலுக்கு கண்ணுவன் பிறந்தான்
கிளிக்கு சுகர் பிறந்தான்
பட்சிக்கு சகுனி பிறந்தான்
ஆந்தைக்கு களிநாதன் பிறந்தான்
தவளைக்கு மாண்டவ்யன் பிறந்தான்
மீனுக்கு மச்சஹந்தி பிறந்தான்
பாம்புக்கு சோமாஸ்வன் பிறந்தான்
மண்டுகத்துக்கு மண்டோதரி பிறந்தாள்
பர்வதத்திற்கு பார்வதி பிறந்தாள்
மலைக்கு வசுவதத்தன் பிறந்தான்
துரோனியில் துரோணன் பிறந்தான்
கமண்டலத்தில் அகஸ்தியன் பிறந்தான்
ஆற்றில் பீஷ்மன் பிறந்தான்
காற்றுக்கு பீமன் பிறந்தான்
புற்றில் வால்மீகி பிறந்தான்
குட்டையில் ஸ்கந்தன் பிறந்தான்
தாமரையில் பத்மை பிறந்தான்
அண்டத்தில் வாதன் பிறந்தான்
கோபக்கணலில் லட்சுமி பிறந்தாள்
சூரியனுக்கு கர்ணன் பிறந்தான்
சந்திரனுக்கு அரிச்சந்திரன் பிறந்தான்
செவ்வாய் கோளுக்கு தோஷன் பிறந்தான்
புதன் கோளுக்கு புரூரவா பிறந்தான்
வியாழன் கோளுக்கு ஜகன் பிறந்தான்
சுடலை சாம்பலில் புரீசீரவன் பிறந்தான்
சுடலை எலும்பில் சல்லியன் பிறந்தான்
முகத்தில் பிராமணன் பிறந்தான்
தோளில் சத்திரியன் பிறந்தான்
தொடையில் வைசியன் பிறந்தான்
காலில் சூத்திரன் பிறந்தான்
வாயில் வேதவல்லி பிறந்தாள்
மூக்கில் அஸ்வினி பிறந்தாள்
மனதில் மன்மதன் பிறந்தான்
தொப்பிளில் வீரவாகு பிறந்தான்
கொட்டாவியில் செந்தூரன் பிறந்தான்
தும்மலில் தூபன் பிறந்தான்
நிழலில் சுந்தரன் பிறந்தான்
கண்ணீரில் வானரன் பிறந்தான்
உந்திகமலத்தில் பிரம்மன் பிறந்தான்
வலது கால் விரலில் கக்கன் பிறந்தான்
இடது கால் விரலில் தாணி பிறந்தான்
கை பெருவிரலில் விஷ்ணு பிறந்தான்
ரோமத்தில் ரோமாஞ்சன் பிறந்தான்
பேய்க்கு காந்தாரி பிறந்தாள்
கலியுகத்திற்கு சனீஸ்வரன் பிறந்தான்
காசீப முனிவனுக்கு சூரியன் பிறந்தான்
விஷ்ணுவுக்கு ஐயப்பன் பிறந்தான்
நாரதனுக்கு 60 ஆண்டுகள் பிறந்தது
ஊர்வசிக்கு விசுவாமித்திரன் பிறந்தான்
மேனகைக்கு சாகுந்தலை பிறந்தாள்
வண்ணாத்திக்கு நாரதன் பிறந்தான்
புலைச்சிக்கு சாங்கியன் பிறந்தான்
பார்பனத்திக்கு கிருஷ்ணன் பிறந்தான்
 - பழ.பிரபு முகநூல் பதிவு,17.11.2013

செவ்வாய், 7 நவம்பர், 2023

அர்ச்சகர் பிரச்சினை - பல்வேறு தகவல்கள் (பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி... )

 

 (இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

அர்ச்சகர் பிரச்சினை - பல்வேறு தகவல்கள்

தொகுப்பு: மின்சாரம்

5

பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி... 

ஆன்மிகப் பணியில் சத்தியபாமா

‘பெண்கள் கோயில் கருவறைக்குள் செல்லக் கூடாது’, ‘சாமி சிலைகளை பெண்கள் தொட்டால் தீட்டு’ என்றெல்லாம் சொல்லி ஆன்மிகத்தில் பெண் களுக்கு இந்தச் சமூகம் காலம் காலமாகப் பூட்டி வந்த கைவிலங்கு, ‘பெண்களும் அர்ச்சகராகலாம்’ என்ற தமிழ்நாடு அரசின் உத்தரவால் உடைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கடந்த பத்து ஆண்டுகளாக 243 பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சியையும், 108 பெண் களுக்கு தமிழ் வேதங்களை முழங்கி குடமுழுக்கு செய்யும் பயிற்சியையும் கொடுத்திருக்கும் சேலம் மாவட்டம், மேச்சேரியில் வசிக்கும் சத்தியபாமா பற்றி அறிய நேர்ந்தபோது, ஆச்சரியமாகிப் போனோம்.

‘சத்தியபாமா அறக்கட்டளை’ மற்றும் ‘அரசயோகி கருவூரார் தமிழின குருபீடம் தமிழ்வேத ஆகம பயிற்சி பாடசாலை’யின் நிறுவனர் சத்தியபாமாவிடம் பேசினோம். “எனக்கு சொந்த ஊர், சேலம் மாவட்டத் தில் உள்ள மேச்சேரி. திருமணமாகி, மூன்று பிள்ளைகள் இருக்காங்க. சின்ன வயசுல இருந்தே ஆன்மிகத்தில் எனக்கு மிகுந்த ஈடுபாடு. ஆனா, பெண்களை கோயில் கருவறைக்குள்ள அனுமதிக்க மறுக்கிற வழக்கங்க ளுக்கு எதிராக மனதில் பல கேள்விகள் எழும். ஆதி காலத்துல பெண்கள் கருவறை வரை சென்று வழிபடும் உரிமை இருந்திருக்கு. பக்தி வளர்த்த நாயகிகளுக்கு, கோயில்களில் சிலைகள் இருக்கு. திருவரங்கம் கோயிலில் உள்ள ஆண்டாள் நாச்சியார், தமிழ் பாக்கள் பாடி வைணவ வழிபாட்டை வளர்த்த பெண். தஞ்சை இராசராச சோழன் கட்டிய பெரிய கோயிலில், சோழ னின் சகோதரி குந்தவை நாச்சியாருக்கும் முக்கியத் துவம் கிடைக்குது. இப்படி, பெண்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கோயில் பூசைகள், மந்தி ரங்கள் ஓதுவதில் முக்கியத்துவம் இருந்ததை அறிய லாம்’’ என்று ஆதிச் சான்றுகள் சொல்லி ஆரம்பித்தார் சத்தியபாமா.

``காலப்போக்குல, பெண்களை கோயில் கருவறைக் குள்ள அனுமதிக்க மறுத்த பிற்போக்குத்தனம் ஆன் மிகத்தில் நுழைந்தது. அது என்னை ரொம்ப நாள் உறுத்திட்டே இருந்ததால, கடந்த 2007 முதல் பெண் களின் கோயில் கருவறை உரிமை, தமிழ்வேத வழிபாட்டு முறைன்னு ஆழமா இறங்கிக் கத்துக்கிட் டேன். சென்னை, காரனோடையில் சமாதியாகியிருக் கும் 12ஆவது பதினெண் சித்தர் பீடாதிபதி அரசயோகி கருவூராரை குருவாக ஏற்றுக்கொள்ளும் பாக்கியம் கிடைத்தது. 23 ஆண்டுகளுக்கு முன்பு இறைவனடி சேர்ந்த அவர், ‘பெண்களை மாதவிடாயின் காரண மாக தீட்டாகக் கருதுகிறார்கள். ஆனால், பெண்கள் சிவபூசை செய்யலாம்’னு சொல்லியிருக்கிறார். அவர் வழியில் இது தொடர்பா இன்னும் பல விடயங்களைக் கத்துக்கிட்டேன்’’ என்பவர், தன் பயிற்சி முறை பற்றி கூறினார்.

6

``காலம் காலமாக நம் கிராமத்துக் கோயில்கள்ல நம்ம அப்பத்தாக்கள், அம்மத்தாக்கள் பூசை பண் ணினாங்க. இப்போகூட சில இடங்கள்ல வயதான ஆத்தாக்கள்தான் பூசை பண்ணுறாங்க. இடைப்பட்ட காலத்துலதான், பெண்களுக்கான கோயில் கருவறை உரிமை மறுக்கப்பட்டது. அதை மாற்றும் விதமா, பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை செயல் படுத்த, 2010இல் இந்த அறக்கட்டளையை ஆரம்பிச்சு பெண்களுக்கு பூசாரி பயிற்சி, குட முழுக்கு செய்யும் பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சேன். ஆரம்பத்தில், பத்து வாரப் பயிற்சியாகக் கொடுத்தோம். இப்போ மூன்று நாள்கள் பயிற்சியாகத் தர்றோம். கடந்த பத்து ஆண்டு களில் பெண் அர்ச்சகர்கள் குழுவைக் கொண்டு, 20 கிராமக் கோயில்கள்ல தமிழ்வேத முறைப்படி குட முழுக்கு விழாக்கள் நடத்தி யிருப்பதை எங்களோட பெரிய சாதனையாகப் பார்க்குறோம்.

எங்ககிட்ட கத்துக்கிட்ட இன்னும் சில பெண்கள், தங்களோட குலதெய்வக் கோயில்கள்ல பூசை பண்றாங்க. இதுவரை 243 பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சியும், 108 பெண்களுக்கு குடமுழுக்கு பயிற்சியும் கொடுத்திருக்கோம். மருத்துவத்துறை, காவல்துறை, கல்வித்துறைன்னு பல துறைகள்ல பணிபுரியும் பெண் களும் இங்கு வந்து குலதெய்வ வழிபாடு பயிற்சி எடுத் திருக்காங்க. இப்போ ‘பெண்களும் அர்ச்சகராகலாம்’னு அரசே அறிவித்திருப்பதால், பெரிய சந்தோசத்தில் இருக்கோம். இனி பெண்கள், அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களிலும் கருவறையில் பூசை செய் யும் காட்சிகள் காணக் கிடைக்கணும்’’ என்றார் நெகிழ்ச் சியுடன்.

சமீபத்தில் கரூரில் சத்திய பாமாவின் அமைப்பு சார்பில், தமிழ் அமைப்புகள் உதவியோடு 30 பெண் களுக்கு மூன்று நாள்கள் அர்ச்சகர் பயிற்சி கொடுக்கப் பட்டு, சான்றிதழும் வழங்கப்பட்டன. அவர் களில் சிலரிடம் பேசினோம்.

உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் பவ்யா. “எங்க ஊரு தேனி மாவட்டம் தேவதானப்பட்டி. உசிலம்பட்டியில பூக்கடை வெச்சிருக்கோம். என் வீட்டுக்காரர் தேவ தானப்பட்டியில் உள்ள ஆத்தோர சுந்தர விநாயகர் கோயிலுக்கு பரம்பரை பூசாரியா இருக்காரு. உசிலம் பட்டி மாதரை பத்ரகாளியம்மன் கோயில்லயும் பத்து ஆண்டுகளாக பூசாரியா இருக்காரு. சத்தியபாமா அம்மா அர்ச்சகர் பயிற்சி தர்றதை பத்தி, என் கொழுந் தனார் என்கிட்ட சொன்னாரு. எனக்கு இதுல ஆர்வம் இருக்குறதால, முயற்சி எடுத்து கலந்துக்கிட்டேன். மந் திரம் சொல்றது, நைவேத்தியம் செய்வது, தீபாராதனை காட்டுறது, ஹோமம் வளர்க்குறது, தீர்த்த கலசம் ரெடி பண்றது, ஹோமகுண்டம் போடுறதுனு எல்லா பூசை முறை களையும் சொல்லிக்கொடுத்தாங்க. தமிழ்வேத மந்திரங்கள் அடங்கிய புத்தகத்தையும் தந்திருக்காங்க. வீட்டுல 48 நாள்கள் கலசத்தை வெச்சு, மந்திரங்களை ஓதி பூசை பண்ணினா, எல்லா மந்திரங்களும் மனப் பாடம் ஆகிடும்னு சொல்லி யிருக்காங்க. வீட்டுல கலச பூசையை ஆர்வமா பண்ண ஆரம்பிச்சுட்டேன்’’ என்றார்.

7

கேரள மாநிலம், வண்டிபெரியார் பகுதியில் வசிக்கிறார் செல்வி. ‘`நான் ஏற்கெனவே சத்தியபாமா அம்மா கிட்ட பயிற்சி எடுத்திருக்கேன். இப்போ மூணு நாள்கள் பயிற்சியில மறுபடியும் வந்து கலந்துக்கிட்டேன். கருவறை உயிர்ப்பு மந்திரம், சிவயோக பயிற்சி, காப்பு மந்திரம், குருமந்திரம், சந்நிதான மந்திரம், கிரகநிலை மந்திரம், குலதெய்வ மந்திரம், அந்தந்தக் கிழமைக்குரிய மந்திரம்னு பல பயிற்சிகள் கொடுத் தாங்க’’ என்றார் பரவசத்துடன்..

சென்னையைச் சேர்ந்த மீனா நமச்சிவாயத்துக்கு வயது 57. ‘`இளம் வயதில் இருந்தே ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகம். தேவாரம், திருவாசகம் பாடல்கள் எனக்கு அத்துபடி. அதையெல்லாம் சொல்லி வீட்டு பூசைகள் பண்ணுவேன். விரும்பி அழைக்கிறவங்க வீடு களுக்குப் போய், ‘இல்லந்தோறும் திருவாசகம்’னு பாடல்களைப் படித்து பூசை பண்ணுவேன். ஆதம் பாக்கம் முத்துமாரியம்மன் கோயில்ல பெண்கள் கூடி பூசைகள் செய்து, வழிபாடு நடத்துவோம். ஆனாலும், கருவறையில சிவனை வழிபடணும் என்பது என் ஏக்கம். இந்த நிலையில, முத்துமாரியம்மன் கோயில் குருக்கள் விக்னேஷ் மூலமா கரூர்ல அர்ச்சகர் பயிற்சி கொடுப்பதைக் கேள்விப்பட்டு ஆர்வமா கலந்துக்கிட் டேன். அர்ச்சகர் பயிற்சி யோடு, ஆன்மிகத்துல இன்னும் பல விஷயங்களையும் புரியவெச்சாங்க.

பெண்கள் சில கோயில்களுக்குள்ள நுழையவே இன்னும் தடை இருக்கும் சூழ்நிலையில, ‘பெண்களும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற தமிழ்நாடு அரசின் சமீபத்திய அறிவிப்பு எங்களுக்கு எல்லாம் பெரும் உற்சாகம் கொடுத்திருக்கு. கடவுளின் அருளை பெண் கள், ஆண்கள் வழியாதான் பெறணுமான்னு என் மனசுல இருந்த ஆறாத கேள்வி, இப்போதான் சமாதானம் ஆகியிருக்கு. எனக்கு தமிழ்வேத மந்திரங்கள் ஓதி சிவ பூசை செய்ய ஆசை. அந்த வாய்ப்பு கிடைச்சா ஜென்ம பாக்கியம் அடைவேன்” என்றார் உணர்ச்சி மேலிட.

பெண்களின் குரல்கள் மீண்டும் கோயில் கரு வறைகளில் ஓங்கி ஒலிக்கட்டும்.

- ‘அவள் விகடன்', 14.9.2021

- - - - -

சபரிமலைக்கு பக்தனாக வந்த நான் 

இன்று சபரிமலையில் அர்ச்சகர்

யது கிருஷ்ணா தன் வயதொத்த மற்ற குழந்தைகளில் இருந்து வேறுபட்ட அரிதான குழந்தையாக இருந்தான். அவனை கோவிலுக்கு கட்டாயப்படுத்தி அழைத்து செல்ல வேண்டியதில்லை. கோவில்களில் பின்பற்றப் படும் சடங்குகளால் ஈர்க்கப்பட்ட யது தனது ஆறாவது வயதிலேயே வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலில் தன்னாலான உதவிகளை செய்து வந்தான். இரண் டாண்டுகளுக்கு முன்னர் திருவிதாங்கூர் தேவசம் போர்டு நடத்திய அர்ச்சகர் நியமனத் தேர்வில் மொத்தமுள்ள 62 இடங்களில் 4 ஆவது இடத்தை பெற்று, திருவிதாங்கூர் தேவசம் போர்ட் நிர்வகிக்கும் 1200 கோவில்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒருவர் முதல் முறையாக அர்ச்சகராக தேர்வு செய்யப் பட்டார்.

அதன்படி 2017 ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட புலையர் வகுப்பைச் சார்ந்த இளைஞரான இவர் பத் தினம்திட்டா மாவட்டத்தின் வலஞ்சவட்டம் கிராமத் தில் அமைந்துள்ள மணப்புரம் மஹாதேவா ஆலயத் தின் கர்ப்ப கிரகத்தில் நுழைந்து வரலாறு படைத்தார். அர்ச்சகராக நியமிக்கப்பட்டு இரண்டாண்டுகள் கடந்த நிலையில் இம்மாதம் (டிசம்பர்) சபரிமலையில் சிறப்பு அலுவல் நிமித்தமாக தெரிவு செய்யப்பெற்றுள்ளார். "சபரிமலைக்கு அய்ந்து முறை பக்தனாக வந்துள்ள நான் இன்று இங்கேயே பணி செய்வதென்பது உண்மையில் நல்வாய்ப்புத்தான்" எனக் கூறும் யது கிருஷ்ணாவின் பெற்றோர்கள் தினக் கூலிகள் ஆவர்.

8
தன் பன்னிரண்டாவது வயதில் திருச்சூரில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள வடக்கு பரவூரில் அமைந் துள்ள சிறீ குரு தேவ வைதீக தந்த்ர வித்யா பீடத்தில் சேர்ந்து சமஸ்கிருதத்தையும் தந்த்ர சாஸ்திரத்தையும் பயின்றார். அர்ச்சகராக நியமிக்கப்பட்ட பின்னர் படிப்பை தொடர முடியாமல் நிறுத்திய யது கிருஷ்ணா "சமஸ்கிருதத்தில் முனைவர் பட்டம் பெறவேண்டும் என்பதே தற்பொழுது என் விருப்பம்" என தன் விருப்பத்தை தெரிவிக்கிறார். தான் அடைய எண்ணிய இலட்சியங்களை அடைவதற்கு தனக்கு "ஜாதி" எவ்விதத்திலும் தடையாக இருக்கவில்லை எனக் கூறும் யது அர்ச்சகராக தான் பொறுப்பேற்றதும் உயர் ஜாதி பிரிவைச் சார்ந்த பலர் ஒன்றிணைந்து தான் அர்ச்சகர் பணியை சிரத்தையுடன் செய்யவில்லை என புகார் அளித்தனர். எனினும் விசாரணைக்கு பிறகு அவர்கள் அளித்த குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பது வெளியானது என்று கூறுகிறார். "அர்ச்சகராக பொறுப்பேற்றது முதல் எவ்விதமான கசப்பான அனுபவங்களையும் தான் பெறவில்லை" எனக் கூறும் யது வருங்காலத்தில் புகழ்பெற்ற கோவில் ஒன்றின் தலைமை அர்ச்சகராக ஆக வேண்டும் என நம்பிக்கை கொண்டிருக்கிறார்.

- ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா', 29.12.2019

திங்கள், 2 அக்டோபர், 2023

தேவநாதன், பத்ரிநாத், சாமியார் ஆசாராம் யார்? யார்?"துக்ளக்" பதில் சொல்லுமா?

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

தேவநாதன், பத்ரிநாத், சாமியார் ஆசாராம் யார்? யார்?

"துக்ளக்" பதில் சொல்லுமா?

கவிஞர் கலி.பூங்குன்றன்

5

4.10.2023 நாளிட்ட ‘துக்ளக்'கில் வெளி வந்துள்ள கேள்வி - பதில்களுக்கு இங்கு பதிலடிகள் தரப்படுகின்றன.

கேள்வி: நீங்கள் இந்தியனா, பாரதியனா?

பதில்: பாஸ்போர்ட்டில் இந்தியன், மனதில் பாரதியன்.

நமது பதிலடி: அப்பா யார் என்று கேட்டால் இப்படிதான் பதில் சொல்லுவார்களோ!

- - - - -

கேள்வி: குலம் கோத்திரம் பார்க்கப்படுவதன் நோக்கம் என்ன?

பதில்: குலம், கோத்திரம் என்பது ஒருவரின் கலாசார விலாசம். கலாசார முறையில் உறவு தேடுபவர்களுக்கு அவசியமானது அது.

நமது பதிலடி: அது என்ன கலாசாரம்? பார்ப்பான் பிச்சை எடுத்து சாப்பிட வேண்டும். கும்பகோணத்தில் பிச்சைக்காரப் பார்ப்பனத் தெரு என்றே ஒன்று இருக்கிறதே!

இதுபற்றி குருமூர்த்தியின் மகா பெரியவாள் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி கூறியுள்ளாரே! (காஞ்சி காமக்கோடி சங்கராச் சாரியார் உபந்நியாசங்கள் முற்பகுதி).

குருமூர்த்தி அய்யர் உட்பட குடுமி வைத்துக் கொள்வதில்லை. பஞ்சகச்சம் வைத்து வேட்டிக் கட்டுவதில்லை. சர்.சி.பி.ராமசாமி அய்யர் மாட்டு நாக்கைத்தான் ருசித்து சாப்பிடுவாராம்.

கணவனை இழந்த பாப்பாத்தி அம்மாள் மொட்டை பாப்பாத்தி என்று அழைக்கப்படுவதுண்டா?

"வேலைக்குச் செல்லும் பெண்கள் ஒழுக்கக் குறைவானவர்கள்" என்று மறைந்த சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கூறினாரே - பார்ப்பனப் பெண்களும் அந்தப் பட்டியலில் வரமாட்டார்களா?

பெண்களில் 30 சதவீதத்தினர் தான் பெண்மை உள்ளவர்கள் என்று இதே குருமூர்த்தி சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்ளவில்லையா?

இவற்றில் எதுவெல்லாம் குலம், கோத்திரம் என்று சீர்புரிந்து வாய்ப்பாடு கூறுமா ‘துக்ளக்'?

"கிரேதாயுகக் காலங்களில் ராக்ஷதர்கள் எல்லாம் கலியுகக் காலத்திலும் பாப்பார ஜாதியில் பிறப்பார்கள், கெட்ட அசிங்கங்களைச் செய்வார்கள்! என்று தேவி பாகவதத்தில் பரமேஸ்வரராலும், மகாபாரத்தில் பீஷ் மாச்சாரியாராலும் கூறப்பட்டிருக்கிறது. அவ்வாக்கி யங்களை இக்காலத்துப் பார்ப்பனர்கள் நிர்ணயப்படுத்து கிறார்கள் போலும்! மேற்படி நூல்களைப் பற்றி யானெ ழுதுவது மிகையே! ஏனெனில் ‘குடிஅரசில்' நமது கைவல்யம் கை வலியாது கணக்கற்றவை வரைந்து கொண்டே வருகிறார்" - ஒரு நிருபர் (‘குடிஅரசு', 13.1.1929).

இங்கே எல்லாம் கோத்திரம் எங்கே போயிற்று?

சதாசிவம் - எம்.எஸ்.சுப்புலட்சுமி கல்யாணம் எந்தக் கோத்திரத்தைச் சார்ந்தது? ராஜகோபாலாச்சாரி யாரும் - காந்தியாரும் சம்பந்தியானது எந்த வகைக் கோத்திரம்?

அமெரிக்கா சென்று ‘பிராமணிசத்தை' பரப்புரை செய்து வந்த விவேகானந்தர் மனோன்மணியம் சுந் தரனாரின் விருந்தினராகத் தங்கியிருந்தபோது ‘நீங்கள் எந்தக் கோத்திரம்'? என்று விவேகானந்தர் கேட்க ‘திராவிடக் கோத்திரம்' என்று முகத்திலடித்தாற்போல சுந்தரனார் பதிலடி கொடுத்தாரே - இதற்கு என்ன பதில் குருமூர்த்தியாரே?

- - - - -

கேள்வி: பெண்களிடம் நீங்கள் வியந்தது என்ன?

துக்ளக் பதில்: குடும்பம் குழந்தைகள்தான் வாழ்க்கை என்று நினைப்பதிலிருந்து திருமணம் இல்லாமல் ஒரு ஆணுடன் சேர்ந்து வாழ்வது வரை, உடல் முழுவதும் மறைத்து உடை உடுப்பதிலிருந்து, உடல் முழுவதும் தெரியும்படி உடை உடுப்பது வரை - பெண்கள்தான் எத்தனை விதமாக இருக்கிறார்கள் என்று வியந்திருக்கிறேன்.

நமது பதிலடி: பெண்கள் எப்படி உடை உடுத்து கிறார்கள், உடல் பாகங்கள் தெரிகிறதா என்பது வரை உற்றுப் பார்ப்பதுதான்  குருமூர்த்தி வேலையா?

6

சின்ன வயதில் வெண்ணெய்யைத் திருடி வாலிப வயதில் பெண்ணைத் திருடியவன் தானே இவாளின் கிருஷ்ண பகவான்.

ஆடைகளை அவிழ்த்துக் கரையில் வைத்துவிட்டு, குளத்தில் குளிக்கப் போன பெண்களின் உடைகளைத் திருடி, மரக் கிளையில் ஏறி உட்கார்ந்து கொண்டு பெண்களை இரசித்த காமுகனைக் கடவுள் என்று கொண்டாடி அத்தகைய படங்களை அசூயை இன்றி வீட்டில் மாட்டி வைத்து பூமாலை சாத்தி நமஸ்காரம் செய்யும் கும்பல் பெண்களின் தனிப்பட்ட உடைகளைப் பற்றி ஆராய்ச்சியில் மூழ்குவது வெட்கக்கேடு அல்லவா!

சாமியார் ஆசாராம் ஆசிரமத்தின் யோக்கியதை என்ன? 

"எங்கள் கடவுள் கிருஷ்ணன் செய்ததைத்தான் நான் செய்தேன்" என்று நீதிமன்றத்திலேயே சொல்ல வில்லையா? மன உளைச்சல் ஏற்படும்போது எல்லாம் சாமியார் ஆசிரமத்துக்குச் செல்லுவதாக மோடிஜி சொல்லவில்லையா?

காஞ்சிபுரத்தில் கோயில் கருவறைக்குள்ளேயே பெண்களைக் கரு உறச் செய்பவன் தா«ன் இவர் களுக்குத் தேவநாதன்.

மடத்துக்கு வந்த பெண்ணின் கையைப் பிடித்து இழுத்தவர்தானே இவாளுக்கு ஜெகத்குரு. வெட்கக் கேடு. அவருக்கான விழாவில்தானே ஆளுநர் கலந்து கொண்டு ஆன்மிகம் பேசுகிறார்.

- - - - -

கேள்வி: ஏன் என்ற கேள்வி இல்லாமல் வாழ்க்கை இல்லை என்கிறது தத்துவம். உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனையாக ஏற்பட்ட ‘ஏன்' தாக்கம் பற்றி?

துக்ளக் பதில்: ஏன் என்ற கேள்வி தொடர்கதை. அதனால் வாழ்க்கைத் திருப்பமும் தொடர் கதை. ஏன் என்ற கேள்வி நின்றால்தான் அதனால் ஏற்படும் வாழ்க்கைத் திருப்பங்களும் நிற்கும். மனிதன் சிந்திக்கும் வரையில் அந்தக் கேள்வி தொடர்கதை. வாழ்க்கைத் திருப்பங்களும் தொடர்கிறது.

நமது பதிலடி: ஏன், எதற்கு, எப்படி, என்று கேள்வி கேள் என்று தந்தை பெரியார் சொன்னபோது கசந்தது; இப்பொழுது அது இனிக்கிறதோ - எங்கு முட்டியும் கடைசியில் ஈரோட்டுச் சந்திப்பில் வந்துதான் சேர வேண்டும்.

- - - - -

கேள்வி: அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கம்யூனிஸ்ட்டுகள், வேலையின்மை, விலைவாசி உயர்வு என்ற பிரச்சினைகளையே சொல்கிறார்களே, வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லையா?

துக்ளக் பதில்:  அதனால்தான் 60 ஆண்டுகளுக்கு முன் நாட்டில் காங்கிரஸுக்கு அடுத்த கட்சியாக இருந்த அவர்கள் இன்று சரிந்து திமுகவிடம் பணமும் கேட்கும் கட்சியாக விட்டார்கள்.

நமது பதிலடி: நீங்களும்தான் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கடவுள், மதம், பக்தி, யோகம், சம்பாராதனை, ஸநாதனம் என்று பேசி வருகிறீர்கள்.

கடைசியில் என்ன? உங்களின் குருநாதர் ‘சோ' ராமசாமி சொன்னாரே - கோயிலுக்கு எதுக்குப் போறான் ‘சைட்' அடிக்கத்தானே போகிறான்.

(‘துக்ளக்', 1.6.1981, பக். 32)

கம்யூனிஸ்ட்டுகள் வேலை வாயப்பு, விலைவாசி உயர்வு பற்றி பேசுவது, போராடுவது மக்கள் நலனைச் சார்ந்தது. குருமூர்த்தி கூட்டம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலமாகக் கூவுவது பக்தியின் பெயரால் ஒழுக்கக் கேட்டை வளர்ப்பதும், சுரண்டல் கொள்ளை நடத்துவதும்தானே!

- - - - -

7

கேள்வி: தமிழகத்தில் முதன்முதலாக மூன்று பெண் அர்ச்சகர்கள் தேர்வானதை, "கருவைச் சுமக்கும் பெண்கள் கருவறைக்குள்" என்று முதல்வர் புகழ்ந் திருக்கிறாரே?

துக்ளக் பதில்: கருவைச் சுமக்கும் பெண் அர்ச்சகர்கள் கருவறையில் இருக்கும் கோயிலில் ஸ்டாலின் குடும்பத்தினர் நேர்த்திக்கடன் செய்தபிறகு, ஸ்டாலின் பேசியது உண்மையா அல்லது எதுகை மோனைக்காகவா என்பது தெரிந்து விடும்.

நமது பதிலடி: கேள்விக்கும் - பதிலுக்கும் ஏதாவது சம்பந்தா சம்பந்தம் இருக்கிறதா? இந்தப் பாணிக்குப் பெயர்தான் பார்ப்பனத்தனம் என்பது.

கோயிலுக்குப் பெண்கள் செல்லுவதற்குத் தடையில்லை. ஆனால் கோயில் கருவறைக்குள் பெண்கள் செல்லத் தடை இருக்கிறது இவாளின் ஸநாதனத்தில். அதை உடைத்துப் பெண்கள் கருவறைக்குள் செல்ல வைத்தது என்பது ஸநாதனத்துக்கு விழுந்த சவுக்கடி தானே!

கோயிலுக்குள் ஆண் சாமி, பெண் சாமி இருக்கிறதே - அது எப்படியாம்?

தேவநாதன் (காஞ்சிபுரம்), சிறீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பத்ரிநாத் கதைகளுக்கு என்ன பதில்?

குஜராத் மாநிலம் தபோயில் உள்ள சுவாமி நாராய ணன் கோயில் - அக்கோயிலுக்குள்ளேயே இருந்த குடிலிலேயே அர்ச்சகப் பார்ப்பனர் சந்த் தேவ்வல்லம், பக்தைகளிடம் ஆடிய சல்லாபம் சாதாரணமா? 

‘சந்தோஷ்' பத்திரிகை படத்துடன் வெளியிட்டதே!

- - - - -

8
கேள்வி: இறைவனை நாம் அடைய வேண்டுமா? இறைவன் நம்மை அடைய வேண்டுமா?

பதில்: எங்கும் வியாபித்த பிரும்மம் (எனும் இறைவன்) நம்முள் இருக்கிறான் என்ற நிலையை நாம் அடையும்போது, இறைவன் நம்முள் உறைகிறான். இறைவனுள் நாம் உறைகிறோம். இதை இரண்டறக் கலந்த நிலை என்கிறார்கள் - ஆன்மிகப் பெரியோர்கள்.

நமது பதிலடி: நேரடியாகப் பதில் சொல்ல முடியாவிட்டால் யாரோ ஆன்மிகப் பெரியோர்கள் என்று தப்பித்துக் கொள்வது அறிவு நாணயமா?

எங்கும் வியாபித்த இறைவனுக்குக் கோயில் கட்டுவானேன் - அர்ச்சகர் ஏன்? ஆறுகால பூஜை ஏன்? கடவுளுக்கு மனைவி, வைப்பாட்டி ஏன்? குழந்தைகள், குட்டிகள் ஏன்? கடவுள்களுக்குள் சண்டைச் சச்சரவுகள் ஏன்? கொலைகள் ஏன்?

இப்படி இறைவனைப் பற்றிக் கூறும் கூட்டத் திற்கிடையே மதமாச்சாரியங்கள் ஏன்? ஒரே மதத்தில் அடி தடிகள் ஏ ன்? நாமச் சண்டைகள் ஏன்? ஏன்? ஏன்? ஏன்?

ஊரை ஏமாற்றுவதற்கும், சுரண்டலுக்குமான ஏற்பாடுகள்தான் இவை என்று நாணயமாக ஒத்துக் கொள்ளட்டும்!

புதன், 27 செப்டம்பர், 2023

மயிலாப்பூர் முண்டககண்ணியம்மன் கோவிலில் பெண் ஓதுவார் நியமனம்


14
சென்னை,செப்.27- தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோவில்களில் 39 ஓதுவார்களை நியமித்து உள்ளார். இதில் 10 ஓதுவார்கள் பெண்கள். இந்த நிலையில் கடந்த 25-ஆம் தேதி மேலும் 5 பெண் ஓதுவார்கள் உள்பட 20 ஓதுவார்கள் கோவில்களில் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டது.

அந்த வகையில் பெரம்பலூர் மாவட் டம், குன்னத்தைச் சேர்ந்த அருண்ராஜ் என்பவரது மனைவி சி.சிவரஞ்சனி, சென்னை மயிலாப்பூர் முண்டக கண்ணியம்மன் கோவி லில் ஓதுவாராக நியமிக் கப்பட்டு பொறுப்பேற்று கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பெரம்பலூர் அரசு இசை பள்ளியில் ஆசிரி யர் நடராஜனிடம் 3 ஆண்டுகள் படிப்பான தேவாரம் பயின்றுள் ளேன். ஏற்கெனவே பி.எஸ்சி., பி.எட். பட்டப் படிப்பும் படித்து உள் ளேன். கோவில்களில் ஓதுவார் பணிக்கு விண் ணப்பித்து இருந்தேன். இந்து சமய அறநிலை யத்துறை அமைத்துள்ள கமிட்டி நடத்திய தேர் வில் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்டு உள்ளேன். அறநிலை யத்துறையில் இன்னும் அதிகம் பெண் ஓது வார்கள் பணிக்கு வர வேண்டும். தமிழ்நாடு அரசின் வெற்றிப்பய ணம் தொடர வேண்டும்' என்றார்.

ஞாயிறு, 19 மார்ச், 2023

ஆரியர்கள் அயோக்கியத்தனம் / விஷ்ணு புராணம்

 ஆரியர்கள் அயோக்கியத்தனம்

• Viduthalai

ஆரியர்கள் எவ்வளவு அயோக்கியர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?

நம் நாட்டில் பிழைக்கவந்த -  குடியேறிய ஆரியர்கள் எவ்வளவு அயோக்கியர்கள் என்பதையும் நம்மை மனிதத் தன்மை யோடு வாழவிடாமல் செய்து, அவ்வளவு கொடுமையும், அட்டூழியமும் செய்திருக் கிறார்கள் என்பதையும் உணரவேண்டு மானால் அவர்களால் எழுதப்பட்ட புராண இதிகாசங்களைப் பார்த்தால் நன்றாய் விளங்கும்.

வேதத்திலும் சாஸ்திர உபநிஷதங்களி லும் ஏராளமான அயோக்கியத்தனங்களும், கொலைபாதகங்களும் இருந்தாலும் அவைகளைச் சரியானபடி ஆதாரத்தோடு வெளிப்படுத்துவது என்பது என் போன்ற வர்களுக்கு அவ்வளவு சாதாரண காரியம் அல்ல என்றாலும், புராண இதிகாசங்கள் என்பவைகளைக் கொண்டு தக்க ஆதா ரங்களோடு வெளிப்படுத்துவது எளிதான காரியமேயாகும்.

புராணம் என்றால் பழைய கதை என்பது அகராதியில் பொருள். என்றாலும் புராணங்கள் என்றால் பழைய கதை என்று திரு.முன்ஷியே பல இடங்களில் குறிப் பிட்டிருக்கிறார்.

சாதாரணமாக ‘புராண’ என்கின்ற சொல்லுக்கே பழையது என்பது பொருள். இந்தியில் ஆனாலும், உருதுவில் ஆனாலும், நவா என்றால் புதியது; புராணம் என்றால் பழையது. இது சாதாரணச் சொல்! ஆகவே, அப்படிப்பட்ட பழங்கதை என் னும் பேரால் பார்ப்பனர் எழுதி வைத் திருக்கும் பாகவதம், விஷ்ணு புராணம் ஆகிய புராணங்களில் காணப்படும் கருத் துகள் சிலவற்றை, எடுத்துச் சொல்லுவோம். அதில் இருந்து ஆரியர்களின் மத ஆதா ரங்களின் அக்கிரமங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

விஷ்ணு புராணம்

விஷ்ணு புராணத்தில் ஓர் இடத்தில் அதாவது ஓர் அத்தியாயத்தில் காணப்படு வதாவது:

தேவர்கள் எல்லாம் விஷ்ணுவிடம் சென்று, “மகாவிஷ்ணுவே! பூலோகத்தில் அசுரர்கள், ராட்சதர்கள் எல்லோரும் ஜப, தபங்கள், தானதர்மங்கள் செய்து ஒழுக்கத் தோடு நடந்து வருகின்றார்கள். இதனால்  தேவர்களாகிய - பிராமணர்களாகிய எங் களுக்கு மரியாதை இல்லாமல் போய்விடு கிறது. எங்களை மக்கள் மதிப்பதில்லை. தேவர்கள், பிராமணர்கள் என்பதற்காகவே நாங்கள் அடைந்துவந்த பெருமைகளையும் உரிமைகளையும் அடைய முடிவதில்லை. அவற்றில் அவர்களும் உரிமையும் பங்கும் கேட்கிறார்கள். அதனால் எங்களுக்குக் குறைந்துவிடுகின்றன. இதனால் நாங்கள் எங்கள் பெருமையை இழக்கவேண்டி இருக்கின்றது. ஆதலால் எங்களைக் காப் பாற்றி அருளவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.

இதற்கு விஷ்ணு பகவான் சொல்லு கிறார்: ‘நான் என் உடலில் இருந்து ஒரு மாயா மோகனை உண்டாக்குகின்றேன்; அவன் மக்களிடம் சென்று “தான தர்ம, ஜபதபம் செய்வதில் பிரயோஜனம் இல்லை. மக்கள் ஒழுங்காக அறிவின்படி நடந்தால் போதும்’’ என்று சொல்லிவிடுவான். அப் பொழுது நான் அவர்களை “நீங்கள் எல் லோரும் வேத சாஸ்திரப்படி நடவாமல் அறிவின்படி நடந்தவர்கள், விஞ்ஞானத்தை பிரதானமாய்க் கொண்டவர் கள். ஆதலால் நரகத்தில் இருக்கத் தகுந்த வர்கள்’’ என்று சொல்லி நரகத்தில் போட்டு அழித்துவிடுகிறேன்’’ என்று சொல்லி விட்டார்.

அதன்மீது அந்த மாயாமோகன் மக்க ளுக்குப் பகுத்தறிவைப் போதித்து, எல்லோ ரையும் வேத மார்க்கத்தைவிட்டு பகுத்தறி வுப்படியே நடந்து, எல்லா மக்களும் நரகத்திற்கு அனுப்பப்பட்டுவிட்டார்கள் என்றும் அதன் பயனாய் உலக போக போக்கியங்கள் யாவும் ஆரியர்களுக்கும் பார்ப்பனர்களுக்குமே கிடைத்து அவர்கள் சுகவாசியாக வாழ்ந்தார்கள் என்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

குறிப்பு: அந்த மாயாமோகன் போதித்த கொள்கைகள் புத்தியைப் பொறுத்த கொள்கை. ஆனதனால் அந்த மாயா மோகனுக்குப் புத்தன் என்று பெயர் ஏற்பட்டதாகவும் அதிலே இருக்கின்றது. இது விஷ்ணு புராணத்தில் உள்ளபடி தொகுக்கப்பட்டது.

- தந்தை பெரியார்


செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

இதுதான் கடவுள் பக்தியா? ஒழுக்கத்திற்கு பாடமா? / குலசேகர ஆழ்வார் பாடுகிறார்


குலசேகர ஆழ்வார் பாடுகிறார்

கிருஷ்ண - லீலை!

"ஒரு கையால் ஒரு முலை முகம் நெருடா

வாயிலே முலையிருக்க

நஞ்சமார்தரு சுழிமுலை அந்தோ சுவைத்து  நீ

அருள் செய்து வளர்ந்தாய்

கஞ்சன் நான் கவர் கருமுகிலந்தாய்

கடைப்பட்டேன் வறிதே முலை சுமந்து

சங்கு தங்கு முன்கை நங்கை

கொங்கை தங்கலுற்றவன்

பண்ணை வென்ற இன்சொல் மங்கை

கொங்கை தங்க பங்கயக்

கண்ண! நின்ன வண்ண மல்ல தில்லை

எண்ணும் வண்ணமே என்றும்

கொங்கை பாலமுது உண்டவன்

மாதர் வாயமுதம் உண்டவன்

என்று கண்ணனையும்

ஆடகத்து பூண் முலையுடையவள் யசோதை"

- குலசேகர ஆழ்வார்

பக்த கோடிகளே, கொஞ்சம் சிந்தியுங்கள் - கோபப்படாமல்!

கண்ணன் பெருமை இதுதானா?

ராமனுக்கும் - தமிழர்களுக்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை!


கம்பன் வடமொழியில் இருந்து தமிழில் இராமாயணத்தை மொழிபெயர்த்து எழுதும் வரை தமிழர்களுக்கு ராமன் இராமாயணம் குறித்து அறியாது - தெரியாது - ராமனை கடவுளாக தமிழர்களிடையே காட்ட 14 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு சைவ வைணவ பக்தி இலக்கியங்கள் அதிகம் பரவிய போது வெகுஜன ஈர்ப்பிற்காக கிராமங்கள் தோறும் ராமாயண கதாகாலட்சேபம் நடத்தினர்.

அத்தகைய ராமாயண கதாகாலட்சேபம் சூரியன் மறையும் மாலை வேளையில் துவங்கி விடிய விடிய சூரியன் வரும் வரை நடக்கும்.

காலை முதல் மாலை வரை விவசாயம், மற்றும் பிற தொழில்கள் செய்து உழைத்து வாழும் மக்கள், மாலை வேளையில் இப்படி தெருக்கூத்து, நாடகம் பார்க்க உட்கார்ந்து விடுவார்கள். தெருக்கூத்து, நாடகங்களை பார்க்கும் வழக்கம் உள்ள தமிழ் மக்கள், விடிய விடிய நடக்கும் ராமாயண கதாகாலட்சேபத்தில் தூங்கி வழிவர். காரணம், தெருக்கூத்து மற்றும் நாடகங்களில் கதையை நகர்த்திச் செல்லவும், நடிகர்களுக்கு அடுத்த காட்சியில் நடிப்பதற்கான ஒப்பனை மற்றும், உடைகளை மாற்றுவதற்கான கால அவகாசத்தை தருவதற்காகவும் கட்டியங்காரன் என ஒருவர் வருவார். (இந்தக் கட்டியங்காரர்கள் தான் இன்றைய நவீன திரைப்படங்களில் நகைச்சுவை நடிகர்களாக பரிணமித்துள்ளனர்). அவர் பார்வையாளர்களை சோர்வடையாமலும், தூங்க விடாமலும் பார்த்துக் கொள்வார்.

ஆனால், ராமாயண கதாகாலட்சேபத்தில் அப்படி இருக்காது. தமிழ்நாடு நிலம் மற்றும் வாழ்வியலோடு ஒட்டும் உறவும் இல்லாத - மண்ணோடு கொஞ்சம் கூட  தொடர்பில்லாத கதையில் மக்கள் தங்களை தொடர்புபடுத்திக் கொள்ள முடியாமல் தூங்கி விடுவர். ஆனாலும் பவுத்த சமண தாக்கங்களை மக்களிடமிருந்து அகற்றியே தீரவேண்டும் என்று உறுதியோடு இருந்த அன்றைய பக்தி இலக்கிய பரப்புரைஞர்கள் ராமாயண கதாகாலட்சேபத்தை தொடர்ந்து நடத்தி வந்தனர். மக்களும் தொடர்ந்து போய் தூங்கி விட்டு வந்தனர்.

இப்படி ராமாயண கதாகாலட்சேபத்துக்கு போய் தூங்கி விட்டு வந்தவனிடம் சீதைக்கு ராமன் யாரென்று கேட்டால் சித்தப்பா என்றானாம். இது தான் விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா ஆன கதை.

இப்படி பக்தி இயக்க காலம் தொட்டே, தமிழர்களிடம் இராமனை அவதாரப் புருஷனாக காட்ட முயன்ற பார்ப்பனர்கள் தொடர்ந்து தோற்றுக்கொண்டே இருக்கின்றனர்.  தமிழர்களும் பக்தி இயக்க காலம் தொட்டு இன்று வரை இராமனை ஏற்றுக் கொள்ளாமல் மட்டம் தட்டியே வந்து இருக்கின்றனர்.

சீதைக்கு ராமன் சித்தப்பன்....

இதை, சீதைக்கு ராமன் சித்தப்பா, குதிரைக்கு பிறந்தவன் கோதண்ட ராமன், சாப்பாட்டு ராமன், சந்தேக ராமன் என தமிழில் புழங்கி வரும் பழமொழி மற்றும் சொலவடைகளை வைத்தே அறியலாம். 

தனது 3ஆவது அவதாரமான வராஹ அவதாரத்தில் பூமாதேவிக்கு நரகாசுரனை பெற்றுக் கொடுத்தவன் விஷ்ணு. அதே விஷ்ணுவின் 8ஆவது அவதாரமான ராமனுக்கு மனைவியாக சீதையை பெற்றுக் கொடுத்தவள் பூமாதேவி.

அதாவது 3ஆவது அவதாரத்தில் தனது புருஷனாக இருந்தவனுக்கு 8ஆவது அவதாரத்தில் தனது மகளை மனைவியாக்கியவள் பூமாதேவி. அப்போ, சீதைக்கு பூமாதேவி அம்மா என்றால், சீதைக்கு இராமனும் சித்தப்பா தானே!?

சாப்பாட்டு ராமன்

14 ஆண்டு வனவாசம் முடியும் நாளில் ராமன் திரும்பி வந்து அயோத்தி அரியணையை ஏற்கவில்லை எனில் தான் தீயில் விழுந்து உயிர் துறப்பதாக சபதம் எடுத்தவன் பரதன். 14 வருட வனவாசம் முடியும் நாளும் வந்தது.  அப்போது தான் இலங்கையில் ராவண வதம் முடித்து விட்டு அயோத்திக்கு வந்து கொண்டிருந்தான் ராமன். வந்தவன் நேரே போய் தன் தம்பி பரதனின் உயிரைக் காப்பாற்றி இருக்க வேண்டும் - ஆனால் ராமன் செய்த செயல் என்னவென்றால் அறுசுவை உணவு உண்பதற்காக பரத்வாஜ முனிவனிடம் சென்று இத்தனை ஆண்டுகாலமாக சுவையான உணவை சாப்பிடவில்லை. ஆகவே நெய்யோடு அமுத சுவை கொண்ட உணவு வகைகளை  தாருங்கள் என்று கேட்கிறான். அவன் கேட்ட உணவு வகைகளை சமைத்துப் படைக்க நேரம் ஆகும். ஆகவே தனது ஆசிரமத்துக்கு வந்த ராமனை பரத்வாஜ முனிவன், தன்னோட ஆசிரமத்தில் அன்றைய இரவு தங்கி மறுநாள் மதிய உணவு சாப்பிட்டு விட்டுத் தான் போக வேண்டும் என்று கட்டளையிடுகிறான்.

பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தின் சுவை மிகுந்த உணவுகள் குறித்து நன்கு அறிந்த ராமன் பகல் உணவு - இரவு உணவு, மறுநாள் காலை, மதிய உணவு என வயிறு புடைக்க சாப்பிட்டுவிட்டு உண்ட களைப்பில் உறங்கிப்போனான். இடையில் தான் சரியான நேரத்தில் செல்லாவிட்டால் தம்பி தீயில் விழுந்து செத்துப்போவேன் என்று கூறியது நினைவிற்கு வர, போனாப் போகுது என அனுமனை பரதனிடம் அனுப்பி தான் வந்துக் கொண்டிருப்பதாக தகவல் சொல்லச் சொல்கிறான்.

இந்த நிலையில் தனது அண்ணன் குறிப்பிட்ட நாளில் வாராததால் தன்னுடைய மனைவிகளை சதிக்கு அனுப்பிவிட்டு தானும் தீயில் குதிக்க தயாரானான் பரதன். ஆனால் அவனது தாயார் கைகேயி அவன் உயிர் துறக்கவேண்டாம் என்று அவனைத் தடுத்துக்கொண்டு இருந்த போது அனுமன் அங்கு வருகிறான். ராமன் வருவதைக்கூறுகிறான்.

அதாவது, தம்பியின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் சுவையான சோற்றுக்கு ஆசைப்பட்டு அலைந்த ராமனைத் தான் இன்று வரை சாப்பாட்டு ராமன் என கலாய்க்கின்றனர் தமிழர்கள்.

சந்தேக ராமன்

ராவண வதம் முடிந்து சீதையை அயோத்திக்கு அழைத்து வந்து அரசாட்சி செய்து கொண்டிருந்தான் ராமன். நாடும் நாட்டு மக்களும் தனது ஆட்சியில் எப்படி இருக்கிறார்கள் என்பதை அறிய மாறுவேடத்தில் நகர்வலம் வருகிறான். ஒரு சலவைத் தொழிலாளியின் வீடு அருகே அவன் வரும் போது அந்த வீட்டில் இருக்கும் சலவைத் தொழிலாளிக்கும் அவனது மனைவிக்கும் சண்டை நடக்கிறது, அதை அவன் கேட்க நேரிடுகிறது.

சலவைத் தொழிலாளியின்.மனைவி தனது பிறந்த வீட்டுக்கு சென்று விட்டு குறித்த நாளில் வராமல், நாட்கள் பல கடந்து திரும்பி வந்ததால், அவளிடம் சண்டை போடுகிறான் சலவைத் தொழிலாளி. “எவ்வளவோ நாட்கள் மாற்றான் வீட்டில் இருந்த சீதையை அப்படியே ஏற்றுக் கொண்ட ராமன் போல, உன்னையும் ஏற்றுக் கொள்ள நான் என்ன அந்த மானங்கெட்ட மடராமனா?” என சண்டையில் தன் மனைவியிடம் கேட்டு விடுகிறான். அதைக் கேட்ட ராமன் சீதையின் கற்பின் மேல் சந்தேகம் கொள்கிறான். அவளை தீயில் இறங்கி தன் கற்பை நிரூபிக்க சொல்கிறான். ஒரு வேளை, சீதையின் கற்புக் குறித்து சலவைத் தொழிலாளி இல்லாமல், வேறு எந்த மேல் ஜாதிக்காரனோ பேசி இருந்தால் கண்டு கொள்ளாமல் இருந்து இருப்பானோ என்னவோ, அந்த ராமன்.

தனது ஆட்சியில் இருக்கும் ஒரு கீழ் ஜாதிக்காரன் சீதையின் கற்பைக் குறித்து சொன்னதை பொறுக்க முடியாமல் சீதையின் கற்பை சந்தேகப்பட்டு தீக்குளிக்க சொல்கிறான். அதை ஊரார் மத்தியிலும் நிரூபிக்க சொல்கிறான். கட்டிய மனைவியின் கற்பையே சந்தேகப்பட்டு அவளை தீக்குளிக்க சொன்ன ராமன் அது முதல் சந்தேக ராமன் ஆனான்.

ராமன் நமக்கான கடவுள் இல்லை....

 எழுத்தாளர்களாக இருக்கும் மேல்தட்டு வர்க்கம் தங்களின் பெண்ணியம் பேசும் கதைகளில், கதை நாயகிகளை சந்தேகப்படும் கணவன்களை “சந்தேக ராமன்”கள் என எழுதி வந்ததே இதற்கு சாட்சி. வடநாட்டவர் கூட்டத்துக்கு வேண்டுமானால் இந்த அவதார புருஷன் அயோத்தி ராமனாக இருக்கலாம்.  ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்கு ராமன் என்றுமே சாப்பாட்டு ராமன், சந்தேக ராமன், அயோக்கிய ராமன் தான். வடநாட்டில் தான் ஜெய் சிறீராம். இங்கே தமிழ்நாட்டில் சரியான சாப்பாட்டு ராமனாக இருக்கியே என்பதுதான். தமிழ்நாட்டில் வடக்கே இருந்து பிழைக்கவந்த ஒற்றைக்கோடு நாமம் போட்ட பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரும் தங்கள் வீடுகளில் ராமனின் படத்தையோ, சிலையையோ வைத்து வழிபட மாட்டார்கள். அப்படி வழிபட்டால் ராமனைப் போல குடும்பத்தை விட்டு பிரிய நேரிடும் என காரணம் சொல்வார்கள். உண்மைக் காரணம் ராமன் நமக்கான கடவுள் அல்ல, அவன் வடநாட்டின் மேல்தட்டு மக்கள் தங்களின் லாபத்திற்காக உருவாக்கிய ஒன்று. இன்று அதையே அரசியல் லாபக்கணக்கிற்கும் பயன்படுத்துகிறார்கள்.