மின்சாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மின்சாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 2 செப்டம்பர், 2024

கோகுலாஷ்டமியா? - மின்சாரம்

 


Published August 26, 2024, விடுதலை நாளேடு

மின்சாரம்

இன்று கடவுள் கிருஷ்ணன் பிறந்த நாளாம். பிறப்பு இறப்பு அற்றவர் உருவம் அற்றவர் கடவுள் என்று ஒரு பக்கத்தில் வாய்ப்பறை கொட்டுவோர் அதற்கு நேர் எதிராக அறிவு நாணயமற்ற முறையில் கடவுள் பிறந்தார் என்றும், இந்த உருவத்தில் உள்ளார் என்றும், அந்தக் கடவுளுக்கும் பெண்டாட்டிகள், வைப்பாட்டிகள், பிள்ளை குட்டிகள் உண்டு என்றும் கூறும் அபத்தத்தை ஆபாசத்தை என்னவென்று சொல்ல!
கடவுள் சண்டை போட்டார்; கொலை செய்தார் விபச்சாரம் செய்தார்; சூழ்ச்சி செய்தார்; தந்திரம் செய்தார் என்றெல்லாம் கடவுள்கள் இந்து மதத்தில் கற்பிக்கப்பட்ட திலிருந்து இந்து மதத்தின் சாக்கடை நாற்றத்தையும் இவ்வாறெல்லாம் தெருப்புழுதியாக எழுதி வைத்துள்ள ஆசாமிகளின் ஆபாச சேட்டைகளையும் ஆறறிவுள்ள மனிதர்கள் எண்ணிப் பார்க்கவேண்டாமா?

இன்றைக்குக் கிருஷ்ண ஜெயந்தி என்று கொண்டாடு கிறார்களே இந்தக் கிருஷ்ணன் எப்படிப் பிறந்தானாம்?
தேவர்கள் எல்லாம் போய் உலகில் அதர்மம் அதிகமாகிவிட்டது; இராட்சதர்கள் தொல்லை பொறுக்க முடியவில்லை; அதைப் போக்க வலிமையுள்ள ஒருவனை எங்களுக்கு அளிக்கவேண்டும் என்று விஷ்ணுவைக் கேட்டார்களாம். உடனே விஷ்ணு தன் மார்பிலிருந்து இரண்டு மயிரைப் பிடுங்கிக் கொடுத்தானாம். அந்த இரண்டு மயிரில் ஒன்று கறுப்பு நிறமாம்; மற்றது வெண்மை நிறமாம். கறுப்பு மயிர் கிருஷ்ணனாகவும், வெள்ளை மயிர் அவன் அண்ணனாகவும் ஆயினவாம் இவ்வாறு கூறுவது இந்து மதத்தின் அபிதானகோசம்தான்.
எவ்வளவுக் காட்டுமிராண்டித்தனத்தில் கடவுளின் கீழ்த்தர உற்பத்தி நடந்திருக்கவேண்டும்?
கடவுள்தானே தேவர்களையும், ராட்சதர்களையும் படைத்தான் என்கின்றனர். அப்படி இருக்கும்போது கடவுளால் படைக்கப்பட்ட ராட்சதன், கடவுளால் படைக் கப்பட்ட இன்னொரு தேவர்களை எப்படித் துன்புறுத்துவான்? கடவுளின் வளர்ப்பு சரியில்லையா?

எந்த அவதாரம் எடுத்தாலும் ராட்சதனைக் கொன்றான் ராட்சதனைக் கொன்றான் என்று எழுதி வைத்துள்ளார் களே, அந்த ராட்சசன் வம்சம் அழிந்து போய்விட்டதா அல்லது தொடர்கிறதா?
வரலாற்று ஆசிரியர்கள் எல்லாம் பார்ப்பன பி.டி. சீனிவாசய்யங்கார் உள்பட, இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று விநியோகம் செய்து வந்த விவேகானந்தர் வரை ராட்சதர்கள் என்று இதிகாசங்களிலும், வேதங்களிலும், புராணங்களிலும் சொல்லப்படுபவர்கள் எல்லாம் திராவிடர்கள் என்று எழுதியுள்ளார்களே இதன் பொருள் என்ன?
திராவிடர்களை இழிவுபடுத்த, மட்டந்தட்ட, கொன் றொழிக்க, இட்டுக்கட்டி எழுதப்பட்ட சரக்குகள்தான் இவை என்பது விளங்கவில்லையா?

நாட்டில் நடப்பது ஆரியர் திராவிடர் போராட்டம் என்று தந்தை பெரியார் சொன்னதும் தேவர்கள் அரக்கர்கள் போராட்டமே இன்றைய தமிழ்நாட்டின் நிலை என்று சி. ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) 18.9.1953 அன்று திருவொற்றியூரில் பேசியதும் இதனை நிரூபிக்கின்றனவே!
பார்ப்பனர்களுக்காகப் போரிட்டவர்களுக்கு விழா கொண்டாடும்போது அவர்களை எதிர்த்துப் போரிட்ட திராவிடர்கள் என்ன செய்யவேண்டும்? அந்தக் கடவுள் களை வீதிக்கு வீதி போட்டுக் கொளுத்தவேண்டாமா?
தந்தை பெரியார் இராமன் படத்தை எரிக்கச் சொன்னதும், பிள்ளையார் பொம்மைகளை வீதிகளில் போட்டு உடைக்கச் சொன்னதும் இந்த அடிப்படையில் தானே?
புத்த மார்க்கத்தை ஒழிக்கத்தான் கிருஷ்ண அவதாரம் கற்பிக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையைக் கொஞ்சம் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.

புத்தர் ஒழுக்க நெறிகளைப் போதித்தார் கட்டுப் பாடுகளை, நியதிகளை வரையறுத்தார். ஆரியர்களின் யாகங்களை எதிர்த்தார். அவர்கள் வகுத்த வருணாசிரம அமைப்பை நிர்மூலப்படுத்தினார்.
அந்த ஒழுக்க நெறிகளுக்கு மாறாக ஆபாச உணர் வையும், விபச்சாரத்தையும் ஊக்குவிக்கும் வகையில் ஒரு கதாபாத்திரத்தை (கிருஷ்ணனை) உருவாக்கி கவர்ச்சியைக் காட்டி மக்களை மதிமயங்கச் செய்த ஏற்பாடுதான் இது.
சினிமாக்காரர்களைக் காட்டியும், பாலுணர்வைத் தூண்டும் சமாச்சாரங்களை ஒளிபரப்பியும் மக்களை இப்பொழுது திசை திருப்பவில்லையா? மதி மயக்கம் செய்யவில்லையா? இந்த ஒழுக்கங்கெட்ட விவகாரங்களை இந்து மதத்தின் கிருஷ்ணாவதாரத்திலிருந்து கற்றுக் கொண்டவர்கள்தான் இவர்கள்.

குளிக்கும் பெண்களின் ஆடைகளைத் திருடிச் செல்வ தும், நிர்வாணமாகக் கரைக்கு வந்து இரு கைகளையும் உயரே தூக்கிக் கும்பிட்டால்தான் ஆடைகளைக் கொடுப் பேன் என்று அடாவடித்தனம் செய்ததும் தான் கிருஷ்ணக் கடவுளின் சிறப்பாம்.
இந்தக் கேவலமான கடவுளின் பிறந்த நாள் என்று கூறி அரசு விடுமுறை வேறு விடுகிறது. செல்வி ஜெயலலிதா ஆரம்பித்து வைத்த இந்த விடுமுறை இப்பொழுதும் தொடர்வது நியாயந்தானா?


வெள்ளி, 23 ஏப்ரல், 2021

கும்பமேளா!


 'கும்பமேளா', 'கும்பமேளா' என்று கூக்குரல் போடுகிறார்களே - இலட்சக்கணக்கில் கூடி, அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் முழுக்குப் போடுகிறார்களே! அதன் தாத்பரியம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாமா?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இந்து வேதங்கள் மிகவும் மதிக்கப்பட்ட காலம். வேதம் என்றால் அதற்குமேல் ஒன்றும் இல்லை என்ற நிலைப்பாடு! அதனால்தான் வழக்கில்கூட 'அது என்ன வேத வாக்கா?' என்ற சொல்லாடல்!

திருப்பாற்கடலில் அமிர்தம் உண்டானதாக ஒரு கதை உண்டு அல்லவா!

அசுரர்களும், தேவர்களும் மந்திரகிரியை மத்தாகவும், வாசுகியைத் தாம்பாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்தார்களாம். மந்திரிகிரியாகிய மலை கடலில் ஆழ்ந்துவிடாதபடி விஷ்ணு கூர்ம (ஆமை) அவதாரம் எடுத்து, முதுகில் தாங்கிக் கொண்டாராம்.

அமிர்தம் கிடைத்ததாகவும், துர்வாச முனிவரின் சாபத்தால் கடலில் மறைந்து போயிருந்த சூரிய, சந்திராதி கிரகங்களும், காமதேனு, கற்பக விருட்சங்களும், மகாலட்சுமி முதலியவர்களும் மீண்டும் வெளிப்பட்டார்களாம்.

அமிர்தபானத்தினை சக்ஷிர சாகர பாற்கடலில் இருந்து எடுக்க முயற்சித்தபோது, அமிர்த பானம் இருந்த கிண்ணத்தினை அசுரர்கள் களவாடிச் சென்றுவிட்டனராம்.

அவர்களை தேவர்கள் 12 நாள்கள் துரத்திச் சென்றனராம். (12 ஆண்டுகளுக்குச் சமம்).

வானுலகிலும் சண்டை நடந்ததாம். அவ்வமயம் வானுலகிலிருந்து அமிர்தபானம் கொட்டி, பூலோகத்தில் நான்கு இடங்களில் விழுந்ததாம்.

அந்த நான்கு இடங்கள் அரித்துவாரம், பிரயாகை (அலகாபாத்), உஜ்ஜயினி, காசிகையாம்.

12 ஆண்டு போருக்குப் பின்னர், அது நடந்ததால், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளாவாம். அன்று நீராடினால் பாவங்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாகப் பறந்து ஓடிவிடுமாம்.

கடுகளவு புத்தியுள்ளவர்களாவது இதனை நம்ப முடியுமா?

சங்கராச்சாரியார்கள் வரை மூழ்குகிறார்களே - இவர்களும் பாவப் பிறவிகள்தானா?

சிந்தியுங்கள்!

 - மயிலாடன்

புதன், 4 செப்டம்பர், 2019

"வீரமணி என்ன நினைத்திருப்பார்?" குருமூர்த்தி பதிலுக்குப் பதிலடி!



கேள்வி: அத்திவரதரையே சுற்றி வந்த தமிழக மக்களின் கூட்டத்தைப் பார்க்கும்போது வீரமணி என்ன நினைத்திருப்பார்?

பதில்: ஒரு ஆயிரம் கருப்புச் சட்டை போட்டவர்கள்கூட இல்லாத தி.க.வின் ஹிந்து கடவுள் எதிர்ப்பு, எப்படி அத்திவரதரையும், அய்யப் பனையும் சுற்றும் கோடிக்கணக்கான பக்தர்களை உருவாக்கியிருக்கிறது என்று நினைத்து, நினைத்து ஆச் சரியப்பட்டிருப்பார்.

('துக்ளக்' 4.9.2019, பக்கம் 17)

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி என்ன நினைத்திருப்பார்?

கல்லையும், மரத்தையும் காட்டி மக்களைச் சுரண்டும் இந்தப் பார்ப் பனீயத்தின் பித்தலாட்டத்தைப் பற்றி நினைத்திருப்பார்.  இந்தப் புரோகித சுரண்டலுக்கு எப்படி முடிவு கட்ட லாம் என்று யோசித்திருப்பார். பக்தி தனிச் சொத்து ஒழுக்கம் பொதுச் சொத்து என்ற தந்தை பெரியாரின் கருத்தினை மக்கள் மத்தியில் மேலும் கொண்டு செல்ல வேண்டும் என்று திட்டம் போட்டிருப்பார்.

பக்திப் போதையேறி சுருண்டு கிடக்கும் மக்களின் நிலையை எண்ணிப் பரிதாபப்பட்டு இருப்பார்.

பக்தியின் பெயரால் பொருளும், பொழுதும் இப்படி நாசமாக்கப்பட்டு வருகிறதே என்று பொறுப்புடன் சிந்தித்துப் பார்த்திருப்பார்.

அத்திவரதரை மய்யப்படுத்தி நடந்த கொள்ளைதான் எத்தனை எத்தனை! அத்திவரதரைத் தரிசிக்க சிறப்புப் பாஸ்கள் என்று சொல்லி கள்ளச் சந்தையில் ரூ.8000/-க்கு விற்கப்பட்டதே,  47 நாள்களில் இந்த வகையில் ரூ.1175 கோடி கொள்ளை நடந்துள்ளதே, அத்திவரதர் என்னும் மரக்கட்டைக்கு முன் அமர வைக்க ரூ.50 ஆயிரம், நிற்க வைப்பதற்கு ரூ.20 ஆயிரம், போட்டோ எடுத்துக் கொள்வதற்கு ரூ.10 ஆயிரம் என்று வசூல் வேட்டை நடந்திருக்கிறதே - இந்தப் பக்தியைப்பற்றி பெருமைப் பேசுவதற்குக் கிஞ்சிற்றும் 'துக்ளக்' வகையறாக்களுக்கு வெட்கம் இல்லையே!

பக்திஒழுக்கக் கேட்டைத்தானே வளர்த்து வருகிறது - இந்த மக்களை நேர் வழிக்கு - பகுத்தறிவுப் பாட் டைக்கு எப்படி கொண்டு வருவது என்பதுபற்றி சிந்தித்து இருப்பார்.

மகா மகக் குளத்தில் 28 சதம் மலக் கழிவும், 40 சதம் சிறுநீர்க் கழிவும் இருந்தது என்று தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவரே அறிக்கை கொடுத்துள்ளதையும் நினைத்துப் பார்த்து, நம் மக்களின் மூளை இப்படி சுகாதாரமற்ற சகதியாகி இருக்கிறதே - இதற்கு என்ன மாற்று என்றும்  திட்டம் போட்டிருப்பார்.

மருத்துவமனைகள் பெருகி என்ன பயன்? நோயாளிகள் அதிகரிக்கத் தானே செய்கிறார்கள் என்று குருமூர்த் திகளால் விளக்கம் சொல்ல முடியுமா?

பக்தியின் நடப்பும், யோக்கியமும் தான் எத்தகையன? இதோ அவாள் ஆதாரத்தைக் கொண்டே நொறுக்கித் தள்ளுவோம்!

'சோ'வின் பார்வையில் பக்தி

கேள்வி: அரசியல்வாதி ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்? ஆன்மிக வாதி ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்? நடிகராவதற்கு என்ன தகுதி வேண்டும்?

சோவின் பதில்: அரசியல்வாதி ஆவதற்குப் பொய் சொல்லத் தெரிய வேண்டும். ஆன்மிகவாதியாவதற்கு பொய்யை அருள் வாக்காக்க தெரிந் திருக்க வேண்டும். நடிகராவதற்கு உண்மையாகவே நடிக்கத் தெரிந் திருக்க வேண்டும்.

('துக்ளக்' 26.10.2016 பக்கம் 23)

இதைவிடஆன்மிகத்தைக் கேவலப்படுத்த முடியுமா?

கேள்வி: நீங்க முன்னே பார்த்த மாதிரி ஜனங்களிடம் பக்தி இருக் கிறதா இப்பொழுது?

சோவின் பதில்: பக்தியாவது ஒண்ணாவது? கோவிலுக்கு வர்றவன் சாமி தரிசனத்துக்கா வர்றான்? சைட் அடிக்கன்னா வர்றான். பொம் மனாட்டிகள் மட்டும் என்ன யோக் கியம்! அவாளும் புடவை, நகை, நட்டு இதெல்லாம் போக நேரம் இருந்தா சுவாமி அம்பாளை நெனச்சுக்கிறா!

('துக்ளக்' 1.6.1981 பக்கம் 32)

ஆயிரம் கருப்புச்சட்டை போட் டவர்கள்கூட இல்லாத தி.க. என்று எழுதி அற்ப சந்தோஷப்படும் 'துக்ளக்குகள்' திருச்சி கருஞ்சட்டைப் பேரணியையும், குடந்தை திராவிடர் மாணவர் கழக பவள விழா மாநாட்டுப் பேரணியையும், சேலம் திராவிடர் கழகப் பவள விழா மாநாட் டையும் பார்க்காத - அறிந்திராத  குருடர்களே!

தொகுப்பு: மின்சாரம்
-  விடுதலை நாளேடு, 1. 9 .19

சனி, 5 ஜனவரி, 2019

விஜயபாரதத்தின் 'விளக்கெண்ணெய்' 'வெண்டைக்காய்ப்' பதில்கள்!

மின்சாரம்


ஆர்.எஸ்.எஸ். வார இதழான விஜயபாரதத்தின் (4.1.2019) கேள்வி - பதில்கள் இங்கே...

கேள்வி: ஹோம குண்டத்தில் பட்டுப் புடவைகள், பழங்கள், நாணயங்கள் போடுவது வீண்தானே?

பதில்: அக்னியில் நிவேதனம் செய்வதை தெய்வம் ஏற்று நமது எண்ணங்களை பூர்த்தி செய்யும் என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கை. இதுதான் பதில்.

ஓ, அப்படியா? முன்னோர்கள் நம்பிக்கை எல்லா வற்றையும் அப்படியே ஏற்றுக் கொண்டுதான் வாழ் கிறோமா? முன்னோர்கள் போல்தான் முன் குடுமி வைத்துள்ளார்களா? பஞ்சகச்சம் போய் பேண்ட், சூட் வந்தது எல்லாம் எப்படி?

ஏன் கோயில்களில் தீவட்டியைத் தானே முன் னோர்கள் பிடித்து வந்தனர். இன்று வெள்ளைக்காரன் கண்டுபிடித்த நியான் விளக்கு வந்தது எப்படி?

ஆள் வடம் பிடித்து இழுத்து முட்டுக்கட்டைகள் போட்டு நிறுத்தப்பட்டத் தேர்களுக்கு ஹைட்ராலிக் பிரேக் வந்தது எப்படி?

அது சரி கடவுளுக்குத் தான் உருவம் இல்லையே. கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் ஆயிற்றே! அவர் எப்படி அக்னிபகவான் ஆனார்? இரவு உணவு இல்லாமல் 20 கோடி பேர் வாழும் ஒரு நாட்டில் உணவுப் பொருள்களை நெருப்பில் கொட்டுவதும், குழவிக் கல்லுக்குப் பாலாபிஷேகம் செய்வதும்தான் முன்னோர்கள் வழியா?

பாட்டன் வெட்டியது என்பதற்காக உப்புத் தண்ணீர்க் கிணற்றைப் பயன்படுத்தி சமைக்க முடியுமா?

அக்னி - தெய்வமாம்; நாம் கொடுக்கும் பொருள்களை ஏற்று நமது எண்ணங்களைப் பூர்த்தி செய்யுமாம்.

இதற்கு அரசாங்கமே தேவையில்லையே! அரசாங்கமே அக்னியை வளர்த்து ரிசர்வ் வங்கியில் உள்ள ரூபாய்க் கட்டுகளையும், தங்கக் கட்டிகளையும் நெருப்பில் போட்டு  நமது கயிலாயநாதன் பிராந்தியங் களைக் கைவசம் வைத்துள்ள சீனாவிலிருந்து மீட்க வேண்டியதுதானே! 'ரபேல்' வம்புகள் எல்லாம் தேவையில்லையே!

என்ன சாமர்த்தியம்! முட்டாள்தனமாகவும், சிறுபிள்ளைத்தனமாகவும் ஒன்றை செய்வது - அது பற்றிக் கேள்வி கேட்டால் நமது முன்னோர்களின் நம்பிக்கை என்னும் படுதாவுக்குள் மூஞ்சைப் பதுக்கிக் கொள்வது இவை எல்லாம் முற்றிவிட்ட பைத்தியத்தின் கிழிசல் இல்லாமல் வேறு என்னவாம்?

«««


அடுத்த கேள்வி: பாவ புண்ணியம் என்பதெல்லாம் உண்மையா?

பதில்: பலரை தவறுகள் செய்யாமல் தடுப்பது இந்தப் பாவ புண்ணியம் என்ற நம்பிக்கைதான் காரணம்.

பார்த்தீர்களா - பார்த்தீர்களா? இங்கும் நம்பிக்கை வந்து குதித்துவிட்டதை.

தவறு செய்யாமல் தடுக்கிறதாம். இந்தப் பாவ புண்ணியம் நம்பிக்கை. அப்படியென்றால் காஞ்சி ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் ஏன் கம்பி எண்ணி னார்கள்?

நாதுராம் கோட்சே ஏன் காந்தியைக் கொன்றான்? கீதை வாக்கியத்தை எடுத்துக்காட்டிதானே காந்தியைக் கொன்றது தர்மம்தான் என்று நீதிமன்றத்தில் கூற வில்லையா! பாவம் செய்து விட்டு அதற்குக் கழுவாயும்/பிராயச் சித்தமும் வைத்த பின்னர் பாவம் செய்ய அஞ்ச வேண்டிய அவசியம் எங்கேயிருந்து குதிக்கிறது?

12 வருடம் பாவம் செய்தவன் கும்பகோணம் மகா மகக் குளத்தில் ஒரு முழுக்குப் போட்டு விடுவதாலேயே பாவங்கள் போகும் என்றால் பாவம் செய்ய பயப்பட வேண்டிய அவசியம் என்ன? குறைந்த முதலீடு - கொள்ளை லாபம் தானே இந்த ஏற்பாடு (மகாமகக் குளத்தில் 28 விழுக்காடு மலம், 40 விழுக்காடு மூத்திரம் என்பது தஞ்சை மாவட்ட ஆட்சியர் பரிசோதனைக்குப் பின்னர் கொடுத்த அறிக்கை) இதனால் இ.கோலி, ஓ157-எச்7 பாக்டீரியாக்களால் உணவை நஞ்சாக்கும் - மஞ்சள் காமாலை போன்ற நோய்களை உருவாக்கும். இது அல்லாமல் என்னென்ன பொருளைக் கொடுத்தால், அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன் கிடைக்கும் என்ற பட்டியல் வேறு.

பக்தி முட்டாள்தனத்துக்கும், சுரண்டலுக்கும் - ஒழுக்கக்கேட்டுக்கும் அளவேயில்லையா?

«««




கேள்வி: திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் என்ன விசேஷம்?

பதில்: தர்பாரண்யேஸ்வரரை சனி பகவான் வழிபட்ட தலம். மேடையில் வாய் கிழிய நாத்திகம் பேசும் தி.க., தி.மு.க., கம்யூனிஸ்ட் தோழர்கள்கூட தங்களது அரசியல் வாழ்க்கையில் ஏற்படும் தொல்லைகளிலிருந்து விடுபட சனீஸ்வரரை நாடி செல்கிறார்கள்.

முதல் கேள்விக்கு அளித்த பதில்தான் இதற்கும். "ஒன்றே கடவுள் அவன் உருவம் அற்றவன்" என்று சொன்னபின் அக்னி பகவான் எங்கே வந்தான்? சனி பகவான் எப்படி வந்தான்? விநாயகன் வந்த விதம் எப்படி? அவன் சகோதரன் சுப்பிரமணியன், தோப்பனார் சிவனும், தாயார் பார்வதியும் என்று கடவுளுக்குக் குடும்பங்கள், கூத்தியாள்கள் வந்த தெல்லாம் எப்படி? (மதுரையில் அழகர் வண்டியூருக் குப் போவது, சீரங்கப் பெருமாள் உறையூருக்குப் போவது)

ஓசை உள்ள கல்லை நீர்

உடைத்து இரண்டாய் செய்துமே

வாசலில் வைத்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்

பூசனைக்கு பதித்த கல்லில் பூவும் நீரும் சாத்துறீர்

ஈசனுக்கு உகந்தகல் எந்தக் கல்லு சொல்லுமே?

என சிவவாக்கிய சித்தரின் பாடலுக்கு 'விஜயபாரதம்' பதில் சொல்லட்டும் பார்க்கலாம்.

சனீஸ்வரனை எந்த தி.க.காரன் நாடி செல்லுகிறான்? விஜயபாரதத்துக்குச் சற்றேனும் அறிவு நாணயமிருந்தால் ஆளைக் குறிப்பிட்டுச் சொல் லட்டும் பார்க்கலாம். அழி - பழி என்பது ஆரியத்தின் பிதுரார்தசொத்து போலும்!

இப்படிதான் சனீஸ்வரன் கோயில் பற்றி ஒரு 'புரூடா' விட்டார்கள்!

திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்குமேலே பறக்கும் செயற்கைக்கோள்கள் பாதிக்கப்படுகின்றன என்று ஒரு கதை கட்டி விட்டனர். இதுபற்றி 'சன்' தொலைக்காட்சி பேட்டியில் (24.11.2015 காலை 8.00 - 8.30 மணி) சந்திராயன் புகழ் மயில்சாமி அண்ணாதுரை என்ன கூறினார்? "கிட்டத்தட்ட 10 இந்திய செயற்கைக் கோள்கள் பூமியைச் சுற்றிக் கொண்டு இருக்கின்றன. அதில் ஒன்றிரண்டாவது திருநள்ளாறுக்கு மேலே போயாகனும். இது போலவே புரளிகளை செய்கிறார்கள் என்பதற்காக எங்கள் குழுவினர் ஆய்வு செய்து பார்த்தோம். திருநள்ளாறில் இந்திய செயற்கைக்கோள்கள் எதற்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்பட்டதில்லை" என்று அழுத்தமாகப் பதிவு செய்தாரே - பார்ப்பனப் பித்த லாட்டத்திற்கு உச்ச வரம்பே இல்லையா?

«««


கேள்வி: எனது விருப்பம் நிறைவேறினால் நான் கடவுளுக்கு மொட்டை போடுகிறேன் என வேண்டுதல் செய்வது சரிதானே?

பதில்: எல்லாம் நம்பிக்கைதான் காரணம் எப்படியோ பக்தி இருந்தால் சரி....

பார்த்தீர்களா - இங்கும் அந்த நம்பிக்கை மூடுதிரை வந்து குதித்து விட்டதே. நம்பிக்கையை நம்பினால் நம்ப வைத்துக் கழுத்தறுத்து விடுவார்கள்.

மொட்டை போடுவதற்கு நாணயமான பதில் உண்டா? நம்பிக்கைதான் காரணமாம். நம்பிக்கையில் இரண்டு வகை உண்டு. ஒன்று தன்னம்பிக்கை - வாழ்வை உயர்த்துவது - இன்னொன்று மூடநம்பிக்கை - இன்னும் கெட்டுப் போறேன் என்ன பந்தயம் கட்டுகிறாய் என்பது. கெட்டுப் போவது என்று முடிவு செய்து விட்டால் பந்தயம் வேறு கட்ட வேண்டுமா?

கடைசியாக என்ன எழுதுகிறது விஜயபாரதம்? எப்படியோ பக்தி இருந்தால் சரி என்கிறது. இங்கேதான் கோணிப் பைக்குள்ளிருக்கும் பூனைக்குட்டி வெளியே வருகிறது.

பக்தி வந்தால் புத்தி போய் விடும் அல்லவா! புத்தி போனால் மாட்டு மூத்திரம், சாணி, பால், தயிர், வெண்ணெய் இவற்றைக் கலக்கிப் பார்ப்பானுக்குத் தட்சணை கொடுத்து மொடக் மொடக்கென்று பயபக்தி யோடு பஞ்சகவ்யம் என்று குடிப்பான் அல்லவா! அதுதான் எப்படியோ பக்தி இருந்தால் சரி என்பது.

ஆனால் ஒன்று - இந்த மூத்திரக் கலவையைக் கண்டிப்பாக சங்கராச் சாரி குடிக்க மாட்டார் - விஜய பாரதத் தார்கள் குடிக்க மாட்டார்கள். இராம. கோபாலனோ,  இல. கணேசனோ, 'எச்'சகளோ குடிக்கவே மாட்டார்கள்.

அடி மாட்டுப் பக்தி கொண்ட 'சூத்திரனும்', 'பஞ்சமனும்' தான் குடித்துத் தொலைவான். இந்த அஸ்தி வாரத்தில் தான் அவாளின் 'ரேக்ளா' ஜாம் ஜாமென்று ஓடுகிறது.



«««


கேள்வி: பெண்களின் சக்தி வாய்ந்த ஆயுதம் எது?

பதில்: பொதுவாக மனைவி, அம்மா, ஆகியோர் கடைசியில் பயன்படுத்தும் ஆயுதம் கண்ணீர்தான்.

எப்படிப்பட்ட பதில்? பெண்கள் என்றாலே கண்ணீர் தானாம். அவாளின் இந்துத்துவா அகராதியில் இதுதான் பொருள். அழுமூஞ்சி என்கிறார்களா? கோழை என்கிறார்களா? அழுது சாதிப்பவர்கள் என்கிறார்களா?

பெண்களை அய்ந்தாம் வருணத்தவர்களுக்கும் கீழேதானே வைக்கிறது இந்து மதம். மனுதர்மம் ஒன்ப தாம் அத்தியாயம் 19ஆம் சுலோகத்தைக் கேளுங்கள் - கேளுங்கள்.

"மாதர்கள் பெரும்பாலும் விபசார தோஷமுள்ளவர் களென்று அனேக சுருதிகளிலும், சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன" - இதுதான் மனுதர்மம். அதன் மறுபதிப்புதானே விஜயபாரதத்தார்கள்.

தன்னைப் பெற்ற தாயும், உடன் பிறந்த சகோதரியும், பெற்றெடுத்த மகளும் அந்தப் பெரும்பாலோரில் அடங்குவார்கள் என்றால் இந்த வெட்கக் கேட்டை என்னென்று சொல்ல! அதனால்தான் அந்த மனு தர்மத்தைக் கொளுத்தும் போராட்டத்தை வரும் பிப்ரவரி 7ஆம் தேதி அறிவித்துள்ளார் தமிழர் தலைவர். (பெண்களே திரண்டு எழுவீர் என்பதே கழகத்தின் வேண்டுகோள்)

«««


கேள்வி: 'தேசம் காப்போம்' என்ற பெயரில் திருமாவளவன் ஒரு மாநாடு ஏற்பாடு செய்துள்ளாரே?

பதில்: அது சரி.. 'தேசம்' என்ற சொல்லே சமஸ் கிருதமாச்சே!

இதுதான் பதில், கேள்வி எதைக் குறிக்கிறது? பதில் எங்கே போகிறது?

பந்தை அடிக்க முடியாதவர்கள் காலை அடிப்பார்களே - அந்தக் கெட்ட நடத்தைதான் (Foulgame) இவாளுடையது.

அந்த சொல்லில்தான் பிரச்சினை.... மற்றபடி அந்த மாநாட்டை 'விஜயபாரதம்' வரவேற்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?

சமஸ்கிருதமாச்சே என்று அவர்கள் சொல்லுவது அவாளின் உள்ளுணர்வின் தாண்டவம் - அதனைக் கக்கி விட்டார்கள் பார்த்தீர்களா? என்னதான் மூடி மறைத்தாலும் பார்ப்பனத்தனம் முண்டியடித்துக் கொண்டு வெளியில் வந்துவிடுகிறதே!

- விடுதலை நாளேடு, 5.1.19