ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

உடைந்த_திரித்துவம்.

இறைவன் சர்வ வல்லமையுள்ளவன். பரிபூரணமானவன். மனிதனை படைத்த இறைவன் அவனுக்கு வழிகாட்ட மனிதர்களில் இருந்தே தன் தூதர்களை தேர்ந்தெடுத்தான்.

மனிதர்கள் தங்களது அறியாமையாலும், அத்தூதர் மீது கொண்ட பாசத்தாலும்  தங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களையே இறைவனுக்கு சமமாக்குகின்றனர். இறைவனால் அனுப்பப்பட்ட  அத்தூதர்களையே இறைவன் என்று சொல்பவர்களை நம்மால் காணமுடிகிறது. இதுப்போன்று இறைவன் என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்ட நபர் தான் இயேசு.

இயேசு தன் வாழ்நாளில் தான் இறைவன் என்று எப்போதும் சொல்லியது இல்லை. இருந்தாலும் அவர் மேல் கண்மூடித்தனமான நம்பிக்கையால் அவரையே இறைவனுக்கு சமமாக்குகின்றனர். இயேசு உட்பட அனைத்து தீரக்கதரிசிகளாலும் போதிக்கப்பட்ட ஒரே இறை கொள்கை  இயேசுவின் காலத்திற்கு பிறகு சில கிறிஸ்தவர்களால்  திரித்துவமாக வழிகேடாயிற்று. ஆயினும் அவர்கள் வேதம் என்று நம்பும்  பைபிளும் திரித்துவத்திற்கு எதிராக தான் நிற்கிறது.

பிதா குமாரன் பரிசுத்த ஆவி இந்த மூவரும் தனித்தனி நபர்களாக இறைத்தன்மையில் சமமானவர்களாக உள்ளனர் என்று சில கிறிஸ்தவர்கள் கூறி கொண்டாலும் இதற்கான ஆதாரம் பைபிளில் எங்கும் இல்லை. இந்த திரித்துவத்திற்கு முரணாண போதனைகளை தான் இயேசு போதித்துள்ளார்.

எல்லா தீர்க்கதரிசிகளாலும் பரிசுத்த ஆவி அறியப்பட்டு இருந்தாலும் இயேசுவுக்கு பிறகே அவரது விசுவாசிகளால் பரிசுத்த ஆவிக்கு இறைத் தன்மை கொடுக்கப்பட்டு திரித்துவத்தின் ஒரு நபரானார். பிதா குமாரன் பரிசுத்த ஆவி இம்மூவரும் இறைத்தன்மையில் சமம் என்று கிறிஸ்தவர்கள் நம்பினாலும் பைபிள்  வேறு விதமாக போதித்துள்ளது.

மத்தேயு 21:10. அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள்.

11. அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.

இயேசுவோடு  வாழ்ந்த அவரது விசுவாசிகள் யாவரும் இயேசுவை தீரக்கதரிசி என்றே நம்பியதாக பைபிள் சொல்கிறது. இயேசுவும் தன் வாழ்நாளில் எப்போதும் தன்னை  கர்த்தருக்கு சமமானவர் என்று சொல்லவில்லை. கர்த்தர் ஒருவரையே வணங்குபவராக இயேசு இருந்தார்.

39. சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். (மத்தேயு 26)

யோவான் 14:28 ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.

மேற்கண்ட பைபிள் வசனத்தில் சிந்திக்கும் மக்களுக்கு நற்போதனை நிச்சயம் உள்ளது. இயேசு கர்த்தரின் அடியாராக வாழ்ந்து அவரையே இயேசு வணங்கினார் என்பதற்கு போதுமான சான்றாகவும் உள்ளது .

இயேசுவை பற்றி தவறாக பேசினால் அது அவர்களுக்கு மன்னிக்கப்படும் ஆனால்  பரிசுத்த ஆவியை பற்றி தவறாக பேசினால் இம்மையிலும் மறுமையிலும் அது மன்னிக்கப்படாது என்று இயேசு கூறுகிறார்.

அதாவது;

மத்தேயு 12:32. எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.

திரித்துவத்தின் ஒரு பாகமாக விளங்கும் இயேசுவை தவறாக பேசினால் அது மன்னிக்கப்படுமாம். மற்றொரு பாகமான பரிசுத்த ஆவியை தவறாக பேசினால் அது மன்னிக்கப்படாதாம். என்ன ஒரு ஏற்றத்தாழ்வு? கிறிஸ்தவர்கள் சிந்திக்க மாட்டார்களா? இந்த வசனத்தில் அவர்கள் நம்பும் திரித்துவம் உடைந்து விட்டது.

உண்மையில் இயேசு யார்?

11. அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.(மத்தேயு 21)

30. "நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான். (குர்ஆன் 19)

உண்மையில் இயேசு யார் என்ற கேள்விக்கு பைபிளும் குர்ஆனும் சொல்லும் ஒரே பதில் அவர் இறைவனால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசி என்பதே.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

⭐⭐எமது தளம் பற்றி⭐⭐

✍இஸ்லாத்திற்கெதிராக அவதூறுகளை பரப்பி வரும் கிறிஸ்தவர்களுக்கு தகுந்த மறுப்பு கொடுக்கும் தளம் இது.

✍இன்னும் அவர்கள் நம்பும் அசத்தியத்தை பைபிளை கொண்டு நிரூபிக்கும் தளம் இது.

✍மாற்று மதத்தவர்களுக்கு  இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு  கொடுக்கும் தளம் இது.

✍எமது பக்கத்தை Like செய்து எம்மோடு இணைந்திருங்கள்.

- சத்தியத்தை நோக்கி, முகநூல் பக்கம்
15.2.18

வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

ஹிந்து திருமணங்களில் சப்தபதி - ஏழு அடி எடுத்தல் ஏன்?

 

ஹிந்து திருமணங்களில் சப்தபதி - ஏழு அடி எடுத்தல் ஏன்?
ஆரியர் ஒழுக்கமும் - டாக்டர் அம்பேத்கரின் அரிய விளக்கமும்

பள்ளிக் கூடங்களில் மாணவரிடையே பொது ஒழுக்கம், நல்லொழுக்கம் போதிப்பதற்கு _ மத்திய சி.பி.எஸ்.இ. பாடத் திட்டங்களைக் கொண்ட பள்ளிகளில் மறைமுகமாக ஹிந்துத்வாவைப் புகுத்த _ ஆர்.எஸ்.எஸ். ஆணைப்படி இராமகிருஷ்ணா மிஷன் அமைப்புடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மத்தியக் கல்வித்துறை போட்டிருப்பது அரசியல் சட்டத்தின் கோட்பாடான மதச்சார்பின்மைக்கு முற்றிலும் விரோத மானதாகும்.

இவர்களின் ஒழுக்கம் எப்படிப்பட்டது தெரியுமா?

மேலும், இவர்கள் பள்ளி மாணவர்களிடம் திணிக்க முயலும், ஹிந்து வேதங்கள், புராண, இதிகாசங்கள் என்பவைகள், ஆரியர்களின் ஒழுக்கத்தையும், ஒழுகலாறுகளையும் உள்ளடக்கியதோடு, (ஆரியச்) சுரர்களாகிய அவர்கள், (குடிக்காத) அசுரர்கள் என்ற திராவிடரோடு பண்பாட்டுப் படையெடுப்பை ஒட்டி நிகழ்த்தியப் போர்களை அடிப்படையாகக் கொண்ட கற்பனைகளேயாகும்!

அப்போது ஆண்ட பிரிட்டிஷ்காரர்களை தங்கள் வயப்படுத்தி, தங்களது மநுதர்மம், மற்றும் வேதக் கலாச்சரத்தையே இந்து (லா) சட்டம் ஆக்கி, இன்றுவரை மற்ற மக்கள் மீது திணித்து வருகின்றனர்.

இந்தப் பண்பாட்டுப் படையெடுப்புக்கு எதிரான புரட்சிகளில் ஒன்று, திருமண முறைகளில் சடங்கு சம்பிரதாயங்களைத் தங்களது (ஆரிய) ஒழுக்கத்தையொட்டி ஏற்பாடு செய்ததை எதிர்த்து, தந்தை பெரியார் அவர்களது சுயமரியாதைத் திருமண முறை அமைதிப் புரட்சியை ஏற்படுத்தியது!

எடுத்துக்காட்டாக, காலங்காலமாக, இந்து திருமண முறை பெண்ணடிமையை வற்புறுத்தி, ஆணாதிக்கப் பிறவி பேதத்தைப் பூண்போட்டுக் காப்பாற்றி வருவதற்கு தங்கள் சடங்குகள், சம்பிரதாயங்களை, தங்களது மொழி _ சமஸ்கிருதம் மூலம் பரப்பி நிலைபெறச் செய்து, சட்டக் கட்டாயம் ஆக்கிவிட்டனர்.

இதை டாக்டர் அம்பேத்கர், ‘ஹிந்து மதத்தின் புதிர்கள்’ என்ற தலைப்பில் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

“ஆரியர்கள் தங்களைவிடச் சிறந்த சந்ததிகளைப் பெறவேண்டும் என்ற பெரும் ஆசை பிடித்து ஆட்டப்பட்டவர்கள் என்று தோன்றுகிறது. இதற்காக அவர்கள் தங்கள் மனைவிகளை மற்றவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். ரிஷிகளை ஆரியர்கள் உயர்ந்த காளைகளாகக் கருதியதால் அந்தப் பெண்கள் பெரும்பாலும் அவர்களிடம் அனுப்பப் பட்டார்கள். இத்தகைய வழக்கத்தில் சம்பந்தப்பட்ட ரிஷிகளின் எண்ணிக்கை மிகப் பெரியது. உண்மையில் ரிஷிகள் இந்த ஒழுக்கக்கேட்டை ஒரு வாடிக்கையான வியாபாரமாகவே ஆக்கியிருந்தார்கள். மன்னர்களும் கூடத் தங்கள் மனைவிகளைக் கருவுறச் செய்யுமாறு ரிஷிகளைக் கேட்டுக் கொண்டார்கள். இப்போது நாம் தேவர்களைப் பார்ப்போம்.

தேவர்கள் மிகவும் சக்தி வாய்ந்த, பாலியல் ஒழுக்கம் மிகவும் குறைந்த ஒரு சமுதாயமாக இருந்தனர். அவர்கள் ரிஷிகளின் மனைவி களையும் தொல்லை செய்தார்கள். இந்திரன் கௌதம ரிஷியின் மனைவி அகல்யாவைக் கற்பழித்த கதை அனைவரும் அறிந்ததே. ஆரியப் பெண்களிடம் அவர்கள் செய்த ஒழுக்கக் கேடான செயல்கள் சொல்ல முடியாதவை. தேவர்கள் சமுதாயம் ஆரிய சமுதாயத்தின் மீது மிக ஆரம்ப காலத்திலிருந்தே மேலாதிக்கம் நிறுவிக் கொண்டதாகத் தோன்றகிறது. இந்த மேலாதிக்கம் கீழ்த்தரமாகப் போய், ஆரியப் பெண்கள் தேவர்களின் காம இச்சையைத் திருப்தி செய்வதற்கு விபசாரிகளைப் போல் நடந்துகொள்ள வேண்டியிருந்தது. தனது மனைவியை ஒரு தேவன் வைத்திருந்து அவனால் அவள் கருவுற்றால் ஒரு ஆரியன் அதைப் பற்றிப் பெருமைப்பட்டான். மகாபாரதத்திலும், ஹரி வம்சத்திலும் ஆரியப் பெண்களிடம் இந்திரன், யமன், நசத்யா, அக்கினி, வாயு முதலான தேவர்களுக்குப் பிறந்த மகன்கள் பற்றி மிகப் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. தேவர்களுக்கும் ஆரியப் பெண்களுக்கும் இடையே எவ்வளவு பெரிய அளவில் தவறான உறவுகள் இருந்து வந்துள்ளன என்பதைக் காண மிக வியப்பாக உள்ளது.

நாளடைவில் தேவர்களுக்கும், ஆரியர் களுக்கும் இடையிலான உறவுகள் ஒரு நிலைப்பட்டன. இது நிலப்பிரபுத்துவ முறையைப் போன்ற உறவாக இருந்தது என்று தோன்றுகிறது.

தேவர்கள் ஆரியர்களிடமிருந்து இரண்டு உரிமைகளைப் பெற்றுக் கொண்டார்கள்.

முதலாவது உரிமை யக்ஞம். இது ஆரியர்கள் தேவர்களுக்கு அவ்வப்போது அளித்த விருந்து. ராட்சசர்கள், தைத்திரியர்கள், தானவர்கள் ஆகியோருக்கெதிரான சண்டைகளில் தேவர்கள் தங்களுக்கு அளிக்கும் பாதுகாப்புக்காக ஆரியர்கள் இந்த விருந்துகளை அளித்தார்கள். இவை தேவர்கள் கறந்து கொண்ட நிலப் பிரபுத்துவக் கப்பங்களே. இவற்றை இவ்வாறு புரிந்து கொள்ளவில்லை என்றால் அதற்கு முக்கியமான காரணம், தேவர்கள் என்ற சொல் ஒரு சமுதாயத்தைக் குறிப்பதாகப் பொருள் கொள்ளாமல் கடவுள் என்ற கருத்தைத் தரும் சொல்லாகப் பொருள் கொண்டதேயாகும். இது முற்றிலும் தவறானது.

ஆரியர்களிடம் தேவர்கள் பெற்றுக் கொண்ட இரண்டாவது உரிமை ஆரியப் பெண்களைத் தாங்கள் முதலில் அனுபவிக்கும் உரிமையாகும். இது மிக ஆரம்ப காலத்திலேயே முறைப்படுத்தப்பட்டு விட்டது. ருக்வேதம்  X  85, 40இல் இதைப்பற்றிக் குறிப்பிடப்படுகிறது. ஆரியப் பெண்ணின்மேல் முதல் உரிமை சோமாவுக்கும், இரண்டாவதாக கந்தர்வாவுக்கும், மூன்றாவதாக அக்கினிக்கும், கடைசியாக ஆரியனுக்கும் இருப்பதாக அது கூறுகிறது. ஒவ்வொரு ஆரியப் பெண்ணும் ஒரு தேவனுக்கு அடைமானமாக்கப்படுகிறாள். அவள் பருவமடைந்ததும் அவளை முதலில் அனுபவிக்கும் உரிமை அந்தத் தேவனுக்கே உண்டு. அவளை ஒரு ஆரியனுக்கு மணம் முடிப்பதற்கு முன் அந்தத் தேவனுக்கு உரிய கொடையைக் கொடுத்து அவனது உரிமையைத் தீர்த்து அவளை மீட்கவேண்டும். இந்த முறை இருந்தது என்பதற்கு மிகத் தெளிவான நிரூபணம் ஆஷ்வலாயன கிருஹ்ய சூத்திரத்தில் காணப்படுகிறது. அதன் முதல் அத்தியாயம் 7ஆவது கண்டிகையில் திருமணச் சடங்கு நடைமுறை விவரிக்கப்படுகிறது. இதைக் கவனமாக ஆராய்ந்தால் திருமணத்தில் ஆர்யமன், வருணன், புஷன் ஆகிய மூன்று தேவர்கள் வந்திருப்பதாகக் காண முடிகிறது. மணப்பெண்ணின் மீது தங்களுக்கு உள்ள முதல் உரிமை காரணமாகவே இவர்கள் வந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. மணமகன் செய்யும் முதல் செயல் மணப் பெண்ணை ஒரு அம்மிக்கல்லின் அருகே அழைத்து வந்து அதன் மேல் ஏறி நிற்கச் செய்வதாகும். அப்போது அவன் ‘இந்தக் கல்லை மிதி, கல்லைப் போல் உறுதியாயிறு. எதிரிகளை வெல், பகைவர்களைக் காலின் கீழ் மிதித்துவிடு’ என்று சொல்லுகிறான். அவன் தன்னுடைய பகைவர்களாகக் கருதும் மூன்று தேவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து அவளை விடுவிப்பதற்காக இதைச் செய்கிறான் என்பதே பொருள். தேவர்கள் கோபமடைந்து மணமகளைக் கைப்பற்றச் செல்கிறார்கள். மணமகளின் சகோதரன் குறுக்கிட்டுத் தாவாவைத் தீர்த்து வைக்க முயலுகிறான். அவன் மணமகளைத் தன் உள்ளங்கைகளைச் சேர்த்துக் குழிவாக வைத்துக் கொள்ளக் கூறுகிறான். அவளுடைய கைகளில் அவன் தானியப் பொரியை நிரப்பி அதன்மேல் நெய்யை ஊற்றி அதை ஒவ்வொரு தேவனுக்கும் மூன்று முறை கொடுக்கச் சொல்லுகிறான். இவ்வாறு கொடுப்பது ‘அவதனம்’ என்று கூறப்படுகிறது. மணப்பெண் அவதனம் கொடுக்கும்போது அவன் சொல்லும் வார்த்தைகள் குறிப்பிடத் தக்கவை. அவன் கூறுகிறான், “இந்தப் பெண் இந்த அவதனத்தை ஆர்யமன் தேவனுக்கு அக்கினியின் மூலம் கொடுக்கிறாள். எனவே, ஆர்யமன் இந்தப் பெண்ணின் மேல் தனது உரிமையைக் கைவிட்டு மணமகன் அவளைப் பெறுவதைத் தடுக்காமலிருக்க வேண்டும்.’’ மற்ற இரண்டு தேவர்களுக்கும் மணமகள் இதேபோலத் தனித்தனியாக அவதனங்கள் கொடுக்கிறாள். அவதனம் கொடுக்கப்பட்டபின் மணமகனும் மணமகளும் தீயைச் சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இது சப்தபதி எனப்படுகிறது. இது முடிந்தபின் திருமணம் முழுமையடைந்து செல்லத்தக்கதாக ஆகிறது. இவையெல்லாம் ஆரியர்கள் தேவர்களுக்கு முற்றிலுமாகக் கீழ்ப்பட்டு இருந்ததையும், தேவர்களும் ஆரியர்களும் ஒழுக்கத்தில் தாழ்ந்து போயிருந்ததையும் மிகத் தெளிவாக வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

இந்துத் திருமணத்தில் சப்தபதிதான் மிக முக்கியமான அம்சம் என்பதையும், அது இல்லாமல் சட்டப்படி திருமணம் இல்லை என்பதையும் வழக்குரைஞர்கள் அறிவார்கள். ஆனால் சப்தபதி ஏன் அப்படி முக்கியமானது என்பதை அறிந்தவர்கள் மிகச் சிலரே. காரணம், தெளிவாகத் தெரிகிறது. மணப்பெண்ணின் மீது முதல் உரிமை கொண்டிருந்த தேவன் அவதனம் கொடுக்கப்பட்டதில் திருப்தியடைந்து அவளை விட்டுவிடத் தயாராயிருக்கிறானா என்பதைச் சோதிக்கும் நடைமுறையே அது. சப்தபதியில் நடந்துசெல்லும் தூரம் வரை மணமகன் மணப்பெண்ணைத் தன்னுடன் அழைத்துச் செல்வதை அந்தத் தேவன் அனுமதித்தால், அவன் தனக்குக் கொடுக்கப்பட்ட இழப்பீட்டில் திருப்தியடைந்து விட்டான் என்றும், அவனது உரிமை தீர்ந்து போய்விட்டது என்றும், அந்தப் பெண் மற்றொருவனின் மனைவியாவதற்குச் சுதந்திரம் பெற்றுவிட்டாள் என்றும் கருதப்படுகிறது. சப்தபதிக்கு வேறு எந்தப் பொருளும் இருக்க முடியாது. ஒவ்வொரு திருமணத்திற்கும் சப்தபதி இன்றியமையாத சடங்காக இருப்பது, தேவர்களிடையேயும் ஆரியர்களிடையேயும் இருந்த இந்த ஒழுக்கக்கேடு எல்லோரிடமும் பரவி யிருந்ததையே காட்டுகிறது.

இத்தகைய ஒழுக்கக் கேட்டு முறையிலிருந்து அறிவையும், பெண்ணினத்தின் சுதந்திரத்தை, சமத்துவத்தை காத்தளித்தது தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம்.

சுயமரியாதைத் திருமணத்தைச் சட்ட வடிவமாக்கி, பிறவி இழிவைத் துடைத் தெறிந்தது திராவிடர் ஆட்சி. அறிஞர்அண்ணா தலைமையிலான தி.மு.க. ஆட்சி.

இது ஒரு சிறு எடுத்துக்காட்டு. ஒழுக்கச் சிதைவிலிருந்த நாட்டை, மக்களைக் காப்பாற்றி உயர்த்தியது இந்த இயக்க ஆட்சியில்தான்!

எனவே, ஆரியம் ஒழுக்கக்கேட்டை பரப்பியதோடு, ‘புனிதப்படுத்தியது! அதன் மூலம் பெண்களைக் கேவலப்படுத்தியது. ஆனால், திராவிடமோ, அவர்களின் உரிமை, மானம், சுயமரியாதையைக் காப்பாற்றி, ஒழுக்கத்தையும் பாதுகாத்தது!

ஆரியம்_திராவிடம் இரு இனங்கள் என்பதையும், இரு வேறு தத்துவங்கள் என்பதையும் இப்பொங்கல் என்ற ‘திராவிடர் திருநாளில்’ நினைவில் நிறுத்துவோம்!

இப்படிப் பண்பாட்டுச் சிதைவுகளை நாம் சீர்செய்து, ஆரியப் பண்பாட்டு ஊடுருவலை அகற்றிவரும் நிலையில், மீண்டும் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி பள்ளிகளில் பண்பாட்டுச் சீரழிவை மாணவர்கள் மத்தியில் புகுத்தும் முயற்சியையும் நாம் முறியடித்தாக வேண்டும்!

கி.வீரமணி,

ஆசிரியர், உண்மை

16-31.1.18

கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி மகா சிவராத்திரி என்ற பெயரில் மயானத்தில் எலும்புக் கடிப்பு



அறிவுக்கு பொருந்தாத புராணக் கற்பனைக் கதைகளையொட்டி, மகாசிவராத்திரி, மயானக் கொள்ளை எனும் மூடத்தனங்கள் பக்தி வெறி யாட்டங்கள் பல்வேறு இடங்களிலும் நடை பெற்று வருகின்றன.

மயானக் கொள்ளைக்கான புராணக்கதை

துவக்கத்தில் பிரம்மனுக்கு அய்ந்து தலைகள் இருந்தனவாம். சிவனின் மனைவியான பார்வதி பிரம்மனின் அய்ந்து தலைகளைக் கண்டு சிவன் என்று நினைத்து வணங்கினாளாம்.

இதனைக் கண்டு பிரம்மன் நகைத்ததால் சினம் கொண்ட பார்வதி, சிவனிடம் முறையிட்டா ளாம். ஆவேசமடைந்த சிவன் பிரம்மனின் ஒரு தலையை கொய்துவிட்டானாம். அப்போது கொய்யப்பட்ட பிரம்மனின் தலை சிவனின் கையிலேயே ஒட்டிக்கொண்ட தாம். பிரம்மனின் கபாலத்தையே பிச்சைப் பாத்திரமாகக்கொண்டு சிவன் பிச்சையெடுத்தானாம். மண்டையோடான அந்த கபாலத்தில் போடப்படும் உணவெல்லாம் கபாலமே விழுங்கிவிட்டதாம்.  ஆகவே, உலகுக்கே படியளக்கும் சிவனுக்கே உணவு கிட்டவில்லையாம். இந்தக் கபாலம் சிவனுக்குப் படைக்கும் உணவை உண்டு விடுவதால், பசி யால் பித்து பிடித்து காடுமலைகளில் அலைந்து திரியும் சிவன், மகா சிவராத்திரியன்று மயானத் தில் இருந்தானாம்.

இந்த நிலையில், பிரம்மாவின் தலை கொய்யப்பட்டதற்கு பார்வதியே காரணமானவள் என்று கோபம்கொண்ட சரஸ்வதி, 'கொடிய உருவத்துடன் நீ இடம் இல்லாமல் அலைந்து புற்றையே வீடாக கொண்டு வாழ்வாய்' என பார்வதிக்கு சாபமிட்டாளாம்.

அதனால், பார்வதி பூவுலகில் பல இடங் களுக்குச் சென்று முடிவில் மலையரசனுக்கு உரிமையான ஓர் நந்தவனத்தில் தவம் இருக்கத் தொடங்கினாளாம். அங்கு காவலுக்கு இருந்த மீனவக் காவலாளி தடுத்தும் புற்றால் தன்னை மூடிக் கொண்டு அங்காள பரமேஸ்வரியாகக் கோவில் கொண்டாளாம். மலையரசன் புற்றை கலைக்க முற்பட, அவன் தன் ஆற்றலை இழந்துவிட்டானாம். மலையனூர் கோயிலில் பருவத குல மீனவ சமூகத்தினரே பூசாரிகளாக உள்ளனர். இந்தக் கோவிலுக்கு சிவன் வர, அங்காள பரமேஸ்வரி சிவன் கையிலிருந்த கபாலத்தில் சுவையான உணவை இட்டாளாம். எல்லாவற்றையும் கபாலம் விழுங்கிவிட, மகாலட்சுமி கூறியபடி, அம்மன் மூன்றாவது கவளத்தைக் கைதவறியதுபோல கீழே போட் டாளாம். உணவின் சுவையால் கவரப்பட்ட கபாலம், அதை உண்ண சிவனின் கரத்தைவிட்டு நீங்கி கீழே போனது. பிரம்ம கபாலம் மீண்டும் சிவனின் கைகளை அடைய முடியாதபடி அதைத் தன் காலால் மிதித்து பூமியில் ஆழ்த்தி விட்டாளாம். இந்தப் புராணத்தையொட்டி, அம்மன் கோயில்கள் உள்ள ஊர்களில் மயானக் கொள்ளை நடந்து வருகிறது

மயானக் கொள்ளை நடை பெறும் நாளில் கோவிலில் இருந்து அம்மன் உருவச்சிலை ஊர்வலமாக எடுத்துச் செல் லப்பட்டு, மயானப் பகுதியில் பக்தர்கள் அளிக்கின்ற நாண யங்கள், காய்கறிகள், உணவு பொருட்கள் வாரி இறைக் கப்படுகிறது. சில பகுதிகளில் எருமை மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் திருவிழாவின் பெயரால்  வெட்டப்படுகின்றன.

"சாமி' வந்து ஆடுவதாகக் கூறி ஆக்ரோசத் துடன் ஆடுபவர்கள், உயிர்க்கோழி மற்றும் இறைச்சி, எலும்புகளை வாயால் கடித்தபடி ஆட்டம் போடுகின்றனர். சென்னையின் பல பகுதிகளிலும், மேல்மலையனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் அங்காளம்மன் கோயில்களில் மயானக் கொள்ளை நடைபெற்றது.

சுடுகாட்டிலிருந்து மனித எலும்புகளை பூசாரி கடித்தபடி ஆட்டம்



அங்காளம்மன் கோயிலிருந்து அம்மன் உருவ சிலையுடன் மயானப் புறப்பாடு நடந்தது. அம்மன் சிலை ஊர்வலத்தில் முன்னதாக பூசாரிகள் பிரம்மனின் கபாலத்துடன் ஆட்டம் போட்டபடி சென்றனர். அங்காளம்மன் சிலை யுடன் மயானம் செல்லும் வழி நெடுகிலும் கூடியிருந்த பக்தர்கள் நாணயங்கள், காய்கனிகள், உணவு பொருட்கள், தானியங்களை வாரி இரைத்தனர். படையலிட்டு குவியலாக வைத் திருந்த உணவு பொருள்களை பூசாரிகளும், பொதுமக்களும் கொள்ளை (எறி) விட்டனர்.

கோவையில் சொக்கம்புதூர் மயானத்தில் களிமண்ணால் அமைக்கப்பட்ட மாசாணியம்மன் உருவத்தை வைத்து மேளதாளம் முழங்க நள் ளிரவு பூஜைகள் நடத்தப்பட்டன. மாசாணியம் மனின் இருதயத்தில் இருந்து கைபிடி மண்ணை எடுத்த பூசாரி, மனித எலும்புகளை எடுத்து வாயில் கடித்து ஆர்ப்பரித்து பெருங்கூச்சலுடன் மயான கொள்ளையில் ஆட்டம் போட்டார்.

சிவராத்திரி 'மஞ்சு விரட்டு' 
காளை முட்டி ஒருவர் பலி

செங்கம் அருகே, மகா சிவராத்திரியை முன்னிட்டு நடந்த, மஞ்சு விரட்டில், காளை முட்டியதில் ஒருவர் பலியானார். திருவண்ணா மலை மாவட்டம், செங்கம் அடுத்த நவாப் பாளையம் கிராமத்தில், சிவராத்திரியை முன் னிட்டு, மஞ்சு விரட்டு நடந்தது. மஞ்சு விரட்டில் பங்கேற்ற, கெங்காபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 42) என்பவர்  உயிரிழந்தார்.

திருவிழா ஊர்வலத்தை வேடிக்கை பார்த்த 
சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு



வந்தவாசி சன்னதித் தெருவில் அங்காளம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு  மயானக் கொள்ளை திருவிழா நடைபெறும்.  அதன்படி, வந்தவாசி சின்ன தெருவைச் சேர்ந்த கவுதம் (13) மற்றும் உசேன் (11) ஆகிய இருவரும், சன்னதி தெருவில் உள்ள தனியார் கட்டடத்தின் மாடியில் இருந்தபடி ஊர்வலத்தை வேடிக்கை பார்த்தனர். கட்டடத்தையொட்டி சென்ற மின்சார கம்பியின்மீது கவுதமின் கால் தவறுதலாகப் பட்டது. இதில், மின்சாரம் பாய்ந்து கவுதம் மற்றும் அருகில் நின்றிருந்த உசேன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.  இருவரையும் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கவுதம் ஏற்கெனவே இறந்துவிட்டான். உசேன் ஆபத்தான நிலையில் இருப்பதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

சிவராத்திரியில் 'ஜக்கி'யின் வியாபாரம்

‘ஈசனுடன் ஓர் இரவு’ நிகழ்வு  எனும் பெயரில் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ் பக்தி வியாபாரத்தை நடத்தி வசூல்வேட்டை நடத்தியுள்ளார்.

இரவு முழுவதும் மக்கள் விழித்திருக்கும் வண்ணம் துள்ளலான இசை நிகழ்ச்சிகளை வழங்க ஆரம்பித்தது  ஈஷா. இசை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகளுடன்  ஈசனுடன் ஓர் இரவு எனும் சிவராத்திரி விழாவை நடத்தியுள்ளார். விழாவில் கலந்துகொள்வதற்கு அனைவரும் அனுமதிக்கப்படவில்லை. பணம் செலுத்த வாய்ப்பில்லாத பக்தர்கள் தடுப்புக்கட்டைகளுக்கு வெளியே நிறுத்தப்பட் டனர்.

“கங்கா ரூ. 50,000, யமுனா ரூ.20,000, நர்மதா ரூ.5,000, கோதாவரி ரூ.1,000, கடைசியாக காவிரி ரூ.500 என்று நதிகளின் பெயரில் கட்டணம் வசூலிக்கப் பட்டு, அதன் அடையாள மாக ஒரு பட்டையை ‘வாட்ச் போல’ கையில் ஒட்டிவிட்டார்கள்.

ரூ.50,000 கட்டணம் செலுத்தியவர்கள் ஆதி யோகி சிலைக்கு அருகில் உட்கார்ந்து பார்க்க லாம் என்றும், ரூ.20,000 மற்றும் ரூ. 10,000 கட்டணம் செலுத்தியவர்கள் சற்று பின்னால் இருந்து காணலாம் என்றும் திரையரங்க வரிசை போல் அமைத்திருந்தனர். ரூ.5,000 செலுத்திய வர்கள் எல்.சி.டி. திரைக்கு முன்பாக மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

கட்டணம் ஏதும் செலுத்தாதவர்கள் தடுப்புக் கட்டைகளுக்கு அப்பால், அமர வேண்டும். நாற்காலிகள்கூட கிடையாது. வெறுமனே தரை யில் அமர வேண்டும். அதன்படி அழைத்து வரப்பட்ட மக்கள் அமர்ந்திருந்தனர். இலவசப் பகுதியில் ஒரு எல்.சி.டி திரைகூட இல்லை. பலர் அசதியில் சிவராத்திரி என்றுகூட பார்க் காமல் படுத்துத் தூங்கிவிட்டார்கள். எண்ணற்ற  ஜோசியக்காரர்கள் நடைபாதைகளை ஆக்கிரமித் திருந்தார்கள். திருப்பூர் போன்ற பல ஊர்களிலி ருந்தும் ஈஷா யோகா மய்யத்தின் ஏற்பாட்டின் பேரில் வந்தவர்கள்   பெரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

கேள்விகளுக்கு பதில்கள் இல்லை

'விகடன்' இணையத்தில் குறிப்பிட்டுள்ள தாவது:  இது தொடர்பாக ஈஷா யோகா மய்யத் தினரிடம் விளக்கம் பெற முயற்சித்தோம். மின்னஞ்சல் மூலமாக ஈஷா யோகா மய்யத்தி னரிடம் கீழ்கண்ட கேள்விகளை அனுப்பினோம். 
1. 'இறைவன் முன் அனைவரும் சமம்’ என முழங்கும் ஈஷா, நன்கொடை என்கிற பெயரில் அதிக நன்கொடை கட்டியவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளித்தது. ஆர்வத்தோடு மட்டும் வந்த ஏழைகளுக்கு அளித்த ட்ரீட்மென்ட் சரியா?

2. இருக்கையில் அமர்ந்து ஈசனுடன் ஓர் இரவு நிகழ்வை கொண்டாடுவதற்கு குறைந்த பட்சம் 500 ரூபாய் நன்கொடை. அதைக் கூட செலுத்த முடியாதவர்கள் என்ன செய்வது?

3. எல்லோருக்கும் இலவசமாக வழங்கப் படும் என ஈஷாவால் அறிவிக்கப்பட்ட ருத் திராட்சை கூட நன்கொடை அளித்தவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டிருக்கிறதே... ஏன்?

4. 'நதிகளை மீட்போம்' என்ற திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது ஈஷா. ஆனால், புட்டி யில் தண்ணீர் விற்பனை செய்யும் பன்னாட்டு தண்ணீர் நிறுவனத்தின் தயாரிப்புகளை நிகழ் வில் வழங்கியது, ‘நதிகளை மீட்போம்’ திட்டத் துக்கே முரணாக இருக்கிறதே! இது தொடர்பாக மேலதிக தகவல்களைப் பெற விரும்புகிறோம்!

இந்தக் கேள்விகளுக்கான பதில்களையும் அது   தொடர்பான விவாதத்தையும் ஈஷா யோகா மய்யத்தினரிடம் மேற்கொள்ள முயன் றோம். இது தொடர்பாக ஈஷா யோகா மய்ய மக்கள் தொடர்பு அதிகாரிகளிடமும் பேசினோம். 'பதில் அனுப்புவார்கள்' என்று மட்டும் சொன் னார்கள். ஆனால், இந்தக் கட்டுரைப் பதிப்பிக் கப்படும் வரை பதில் அளிக்கவில்லை. தொலை பேசி உரையாடலிலும் மதிப்பான பதில் கிடைக்கவில்லை என்று "விகடன் இணையத் தில்" தெரிவிக்கப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 16.2.18