வியாழன், 26 ஏப்ரல், 2018

ஆபாசமே இந்துமதம்

ஆபாசமே இந்துமதம் - இந்துக்கடவுள்களின் ஒழுக்கக்கேடான தகாத உடலுறவுகள் - இதன் மூலம் இந்துமக்களுக்கு இந்துமதம் என்ன சொல்ல வருது....?

1. குந்தி – ( திருமணத்திற்கு முன் கள்ளஉறவு)
குந்தி திருமணத்திற்கு முன்பே சூரியனிடம் கள்ளஉறவு கொண்டமையால் பெற்றெடுத்த கர்ணனை ஆற்றில் விட்ட கதை அனைவரும் அறிந்ததே. திருமனத்திற்கு பின்பு ஐந்து பிள்ளைகள் பெற்றாலும் எவையுமே அவள் கணவன் பாண்டுவுக்கு பிறந்ததில்லை மகாபாரதம் படித்தவர்களுக்கு நல்லாவே தெரியும்.

2. பத்மை - (தகப்பன் மகள் உறவு)
சிவன் பார்வதி திருமணத்தில் பிரம்மா புரோகிதனாக இருந்து விவாக ஓமம் செய்தான். பார்வதி ஓமகுண்டத்தை இடது கையால் முந்தானையை பிடித்து சுற்றிவருகையில் அவளுடைய தொடை பிரமனின் கண்ணில்பட்டது. அதை பார்த்தவுடன் பிரம்மா மோகத்தால் இந்திரியம் (விந்து) ஸ்கலிதமாயிற்று. அந்த இந்திரியத்தை குலத்திலுள்ள தாமரை பூவில் விட அதில் பத்மை என்ற புத்திரி பிறந்தாள்.
பத்மை அழகில் மயங்கி மோகம்கொண்டு அவள் சம்மதிக்க மறுக்கவே சமாதான வேத மந்திர வாக்கியத்தை சொல்லுகிறான்.

" மாதாமுபைத்ய கசாரமுபைய, புத்ரார்த்தீக சகாமார்த்தி நாபாத்திரலோகா நாஸ்தீத ஸ்ரவம்பரவோ விந்து ஹாம் தஸ்மாத் புத்தார்த்தம் மாதரம், ஸூரஞ்சதி,ரோஹதி"

இதன் விளக்கம் :-
புத்திராத்த நிமித்தம் தாய், தமக்கை, மகன், பிள்ளை யாருடனும் கூடலாம்.
" தாயிடமும் மகளிடமும் படுத்து படுத்து பிள்ள பெத்துக்கிலாம் இதுதாங்க இந்துமத யோக்கியதை"

3.  (தாய், மகன் உறவு) - திருவிளையாடல் புராணம்..
அவந்தி என்ற ஊரில் ஒரு பார்ப்பான் வாழ்ந்து வந்தான். அவனுடைய மனைவி ஒப்பில்லா அழகுடையவள். அவளது மகன் வளர்ந்து வாலிபன் ஆனதும், அவனது தாயின் மேலேயே ஆசை கொண்டான்.
அவளும், நாணம், வெட்கம் எல்லாவற்றையும் விட்டு, தன்னுடைய மகனிடம் உடலுறவு கொண்டாள். இதற்கு இடையூறாக இருந்த அவளுடைய கணவனை (தகப்பனை) கொன்றான். இந்த பாவத்தை கழிக்க சிவராத்திரி நாளில் சிவனடியார்களுக்கு பணி செய்து சூரியன் உதிக்கும் முன் அருகம்புல்லை பசுமாட்டிற்கு கொடுத்து மூன்று காலமும் நீராடி108 முறை கோவிலை வலம் வரவேண்டும் என்று திருவிளையாடல் புராணம் 26ஆவது திருவிளையாடல் மாபாதகம், தீர்த்தபடலம். கூறுகிறது.

4.  லட்சுமி - (சகோதரனிடம் காமம்)
சமுத்திர தேவனின் செல்வ புதல்வி லட்சுமிதேவி தன் ககோதரன் அசுவனைக் கண்டு காமம் கொண்டாள்.
இதை கண்ட விஷ்ணு கோபம் கொண்டு "கவர்ச்சி மிக்க கண்களைக் கொண்டுள்ள காமகி! நீ யாரைப் பார்க்கிறாய்? நான் சொல்லும் வார்த்தைகள் கூட உன் காதில் விழவில்லையா? காமக் கடலில் நீயும் மூழ்கி விட்டாயா?" என்று கோபத்துடன் சீறினான்.

அவள் கணவன் கேட்டதற்கு பதிலளிக்காது பெண்குதிரை வேஷம் எடுத்த தன் சகோதரனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டாள். இந்த புணர்ச்சியில் பிறந்த வம்சமே 'ஹெய்ஹயகானாக்கள்' என்று அழைக்கப்ட்டனர்.
ஆதாரம் - தேவிபாகவாத புராணம் (6,17,53)

5.  (சொந்தங்களுடன் உடலுறவு) மனுசாஸ்திரம்..
ஆண் பிள்ளை இல்லாமல், ஒரு குலம் நசிந்து போனால், அப்போது அந்தப் பெண், தன்கணவர்,மாமனார் முதலியோரின் உத்தரவு பெற்றுக்கொண்டு, தன் மைத்துனர் அல்லது தன்கணவனுக்கு ஏழு தலைமுறைக்குட்பட்ட
பங்காளி களுடன் புணர்ந்து ஒரே ஒரு பிள்ளையைபெற்றுக் கொள்ள வேண்டும்.
(மனு அத்தியாயம் 9; சாஸ்திரம் 59)

6. (அண்ணியுடன் உறவு) பிரகஸ்பதி முனிவர்.
இந்து மதத்தில் தேவர்களிக்கெல்லாம் குருவான பிரகஸ்பதி தனது அண்ணன் மனைவி கர்ப்பமாக இருந்த போது, அண்ணன் இல்லாத வேளையில் முறைகேடாக உறவு கொண்டுடான். அதில் பிறந்த குழந்தைதான் (த்வஜாபுத்திரன்) பரத்வாஜா ஆவர்.
இந்த மகன் தந்தையை மிஞ்சிய காம வெறியன். இந்த பரத்வாஜா கிராதிஸி அப்ஸரா என்ற பெண்ணை நினைத்து விந்து வெளியேறிய போது உருவனவரே, வேதவிற்பன்னர் துரோணர். எப்படி இருக்கு இந்துமத ரிஷிகள், முனிவர்களின் யோகியதைகள்.
(ஆதாரம் - மகாபாரதம் ஆதிபர்வம் அத் 131, ஸ்கந்த 9 அத் 20 )

7.  சிவன், விஷ்னு -(ஓரினச்சேர்க்கை)
விஷ்னுவின் மோகினி அவதாரக் கதை ஏகம் இருந்தாலும், சிவன் மோகினியின் மேல் கொண்ட காமத்தால் உடலுறவு கொண்டு ஐயப்பன் பிறந்தாக கூறப்படுதல் ஆண் ஓரகினச் சேர்க்கை தானே!.

8. விஷ்ணு, நாரதர் - ( ஓரினச்சேர்க்கை)
மகா விஷ்ணுவும் நாரதரும் கலவி (homosex) செய்ததில்அவர் இரண்டு பேருக்கும் அறுபத்திரெண்டு குழந்தைகள் பிறந்தது. அந்தக் குழந்தைகள் ஒவ்வொன்றுக்கும் பெயர் வைத்தார்கள். அதுதான் 62 தமிழ் வருடங்கள்.

9. சூரியபகவான்,அருணன் - (ஓரினச்சேர்க்கை)
சூரியனின் ரத சாரதியின் பெயர்அருணன். இவன் இந்திரலோக வினோதங்களைக் காண்பதற்கு என்றுபெண் வேடம் பூண்டு அங்குச் சென்றான். இதைக் கண்ட இந்திரன் பெண் வேடத்திலிருந்த அருணனை மோகித்துப் புணர்ந்தான் இதனால் வாலி என்பவன் பிறந்தானாம்.

இந்நிகழ்ச்சியால் அருணன் வேலைக்குத் தாமதித்து வர, சூரியன் காரணம் கேட்டு,
நடந்ததையறிந்து, மீண்டும் அருணனைப் பெண் வேடத்தில் வரச் செய்ய, அவன் அப்படியே வர, அவனைச் சூரியன் புணர்ந்தான் அதனால் சுக்ரீவன் பிறந்தானாம்.

10. ராமன் பிறப்பு - Animal sex (மிருக்கங்களுடன் புணர்ச்சி)..
தசரதன் புத்ர காமேஷ்டி யாகம் செய்தான்.
அந்த யாகத்தில் குதிரையுடன் மூன்று பட்ட மகிஷிகளும் ஓர் இரவை கழித்துள்ளார். வெட்டுண்ட குதிரையுடன் ஒரு இரவு முழுவதும் மூன்று மனைவியரும் கட்டிப் புரண்டதாக வால்மீகி ராமாயணத்தில் எழுதப் பட்டுள்ளது. அதன் பிறகே நான்கு புதல்வர்கள் பிறந்துள்ளனர்.

11.  விஷ்னு - (மாற்றான் மனைவியுடன் உறவு). சலந்தரன் எனும் அசுரனின் மனைவி பிருந்தை. அவன் சிவனுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, விஷ்னு சலந்திரனாக வந்து பிருந்தையுடன் இருந்தாக கூறப்படுகிறது. அவள் இட்ட சாபமே ராம அவதாரத்தில் சீதையை ராவணன் கவர்ந்து செல்ல காரணம் என்கின்றார்

12.  பாஞ்சாலி – (அண்ணி கொழுந்தன் உறவு அல்லது ஐந்து பேருடன் உறவு)..
திரௌபதி என்பது உண்மையான பெயர் பாண்டவர்கள் ஐவருக்கும் மனைவியானதால் பாஞ்சாலியாக மாறிப்போனது. ஆனால் சிலர் தர்மனின் மனைவி என்று அறிவி்க்கப்பட்டாலும், ஐந்து பேருக்கும் மனைவியாக கலவி சுகம் கொடுத்திருக்கிறாள். ஆதாரம் - மகாபாரதம்.

13.  ருமை - (தம்பியின் மனைவியுடன் உறவு)
சுக்ரீவனின் மனைவி ருமை. ஆனால் சுக்ரீவனை வஞ்சித்துவிட்டு அண்ணன் வாலி ருமையுடன் வாழ்ந்ததாக ராமயணம் கூறுகிறது.

14.  விவச்சாரிகளிடம் உறவு - மனுசாஸ்திரம்
சுலோகம்-
வேஸ்யாதர்சனம் புண்யம்
ஸ்பர்சனம் பாவ நாசனம்
சும்பனம் சர்வ தீர்த்தானம்
மைதுனம் மோட்ச சாதனம்

விளக்கம் :-
வேசிகளை (விபசாரிகளை)ப் பார்ப்பது புண்ணியம். அவர்களைத் தொட்டால் நீங்கள் செய்த பாவமெல்லம் போய்விடும்.
கார்ப்பரேசன் குழாய் தண்ணீரை ஒரு செம்பில் வைத்துக் கொண்டு புரியாத மந்திரங்களை, கங்கா, யமுனா, சரஸ்வதி, கோதாவரி, காவேரி என்று சொல்லிக்கொண்டு மா இலையால் வீடு முழுவதும் தெளிக்கிறாரே புரோகிதர் அந்த சகல தீர்த்தங்களும், அந்த விபச்சாரிகளை முத்தமிடும் பொழுது வாயில் ஊறும் எச்சிலுக்கு சமமாகும். அதற்கும் மேல் விபச்சாரிகளை புணர்வது மோட்சத்திற்கு வழியாகும்.

15.  இது எந்தமாதிரி உறவுனே தெரியல.. படித்துவிட்டு நீங்களே ஒரு பேரு வைங்க நண்பர்களே..

கலைவாணி, சரஸ்வதி என்ற பெண் கடவுள்கள், தமது கன்னி வயதில் விஷ்ணுவின் காதலிகளாக இருந்தனர்.

இவர்களுக்கிடையில் யார் விஷ்ணுவின் காதலியாக தனித்து இருப்பது என்ற சண்டையின் போது, விஷ்ணுவின் மனைவி லட்சுமி தலையிட்டு, "ஒரு மனிதன் ஒரு மனைவியை வைத்துக்கொண்டு இன்பம் அனுபவிக்க முடியாதபோது அதிகமான மனைவிகளை வைத்திருத்தல் அவனைப்பற்றி என்னவென்று சொல்வது என்று கணவனை குற்றம் சாட்டி, தீர்வாக, கலைவாணியை சிவனிடம் படுக்கும் படியும், சரஸ்வதியை பிரமாவிடம் படுக்கும் படியும் கூறி சக்களத்தி சண்டைக்கு தீர்வு கண்டாள். ஆதாரம் - தேவிபாகவாத புராணம் 47,49,53.

இப்படி ஆபாச வக்கிரங்களை கொப்பளிக்கும் இந்துமதத்தின் யோக்கியதைகளை திட்டாம வேற என்ன சொல்ல..?

மதம் என்பது மனிதனை ஒருபோதும் அறிவாக சிந்திக்க விடாது. மதம் மனிதனை மூடனாக்கும், முட்டாளக்கும், குருடர்களாக்கும் இந்த பாதிப்பில்தான் மனிதன் அறிவிழந்து மதவெறியோடு வன்முறையில் செயல்பட்டுக்கொண்டிருகிறார்கள்.

மதத்தின் வக்கிரங்களையும், மடத்தனத்தையும்  ஆதாரத்தோடுதான் பதிவிடுகிறேன். இது உண்மை என்று தெரிந்தும், அறிவாக சிந்திக்காமல் ஆபாசமான வார்த்தைகளால் என்னை திட்டி உங்கள் ஆபாச மதத்தை காப்பாற்றிக்கொள்ள பார்க்கிறீர்கள்.

சிந்திப்பதனாலேயே மனிதன் விலங்குகளிடமிருந்து வித்தியாசப்படுகிறான்.
கொஞ்சமாவது மனிதனாக சிந்திக்க பழகுங்கள் நண்பர்களே...
- டக்ளஸ் முத்துக்குமார், முகநூல் பதிவு, 26.4.18

வியாழன், 19 ஏப்ரல், 2018

முருகனின் பிறப்பு

முருகனின் பிறப்பு கள்ளத்தனமானதா ?

அறிவுக்குப் பொருந்துமா ?

தோழர்கள் படித்துவிட்டு எச்சைக்கு விளக்குங்கள் ..!!

#முருகன்பிறப்பு இது பக்தாள் விட்டது தான் ..!

சிவபெருமான் உமாதேவியைத் திருக்கலியாணம் செய்து, மோகங்கொண்டு அவளுடன் 100 தேவ வருஷம் (மனித வருஷத்தில் பல யுகம்) புணர்ந்து கொண்டிருந்தனர். அவ்வளவு காலம் கழிந்தும் பார்வதி கர்ப்பம் அடையவில்லை. அது கண்டு நான்முகன் முதலிய தேவர்கள் சிவனிடத்தில் வந்து, “இவ்வளவு காலம் புணர்ந்த உம்முடைய தேஜஸ்ஸாகிய விந்து வெளிப்படுமானால் உலகம் பொறுக்கமாட்டாது. உம்முடைய விந்துவை தயவு செய்து விடாமல் நிறுத்திக் கொள்ளும்” என்று வேண்டவும், அதற்கிசைந்த சிவன் தனது விந்துவை மற்றபடி யார் தரிப்பது? எங்கு விடுவது? என்று கேட்க, தேவர்கள் பூமியில் விடும்படி சொல்ல, அந்தப்படியே சிவன் பூமியின் மீது விட்டுவிட்டார். பூமி அதை தாங்க மாட்டாமல் பூமி முழுதும் கொதிகொண்டு எழ, தேவர்கள் அந்த வீரியத்தை பூமி தரிக்க முடியாது எனக் கருதி அக்கினியிடம் சென்று வேண்ட, அக்கினி வாயுவின் உதவியால் அவ்வீரியத்திற்குள் பிரவேசித்து பிரம தேவன் கட்டளைப்படி அதை கங்கையில் கொண்டு சேர்த்து, அவ்வீரியத்தைப் பெற்று ஒரு குழந்தைப் பெற வேண்டுமென்று கங்கையை வேண்ட, கங்கையும் அதற்குச் சம்மதித்து அவ்வீரியத்தைப்பெற, அவ் வீரியமானது கங்கை முழுவதும் பரவி நிறைந்துவிட, கங்கை அதை தாங்கமாட்டாமல் மறுபடியும் அக்கினியை வேண்ட, அக்கினி மனமிரங்கி கங்கையை நோக்கி “ ஏ கங்கையே! நீ அடைந்த சிவனின் வீரியத்தை தாங்க முடியாவிட்டால் பனிமலை அருகில் விட்டுவிடு” என்று சொல்ல, கங்கையும் அவ்வாறே அவ்வீரியத்தை பனிமலையின் அருகில் விட, அங்கு அது குழந்தையாகத் தோன்ற அதை இந்திரன் பார்த்து அக்குழந்தைக்கு பால் கொடுத்து வளர்க்க கிருத்திகா தேவிகளை ஏவ, அவர்கள் அதற்கு பால் கொடுத்து வளர்த்து வரலானார்கள். பல இடத்தில் சிவனது வீரியம் ஸ்கலிதமானதன் பலனாக அக் குழந்தை உற்பத்தியானதால் அக்குழந்தைக்கு ஸ்கந்தன் என்றும், கிருத்திகா தேவிகள் ஆறுபேர்களுடைய பால் சாப்பிட்டதால் கார்த்திகேயன் என்றும், மேல்கண்ட ஆறுபேரின் முலையிலும் ஆறுமுகம் கொண்டு ஏககாலத்தில் பால்குடித்ததால் ஷண்முகன் என்றும் பெயர்கள் ஏற்பட்டன.

தொடரும் ...

பி என் எம் பெரியசாமி !
முகநூல் பதிவு
19.4.18

புதன், 18 ஏப்ரல், 2018

ஹிந்து திருமணங்களில் சப்தபதி

ஹிந்து திருமணங்களில் சப்தபதி - ஏழு அடி எடுத்தல் ஏன்?
ஆரியர் ஒழுக்கமும் - டாக்டர் அம்பேத்கரின் அரிய விளக்கமும்

பள்ளிக் கூடங்களில் மாணவரிடையே பொது ஒழுக்கம், நல்லொழுக்கம் போதிப்பதற்கு _ மத்திய சி.பி.எஸ்.இ. பாடத் திட்டங்களைக் கொண்ட பள்ளிகளில் மறைமுகமாக ஹிந்துத்வாவைப் புகுத்த _ ஆர்.எஸ்.எஸ். ஆணைப்படி இராமகிருஷ்ணா மிஷன் அமைப்புடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மத்தியக் கல்வித்துறை போட்டிருப்பது அரசியல் சட்டத்தின் கோட்பாடான மதச்சார்பின்மைக்கு முற்றிலும் விரோத மானதாகும்.

இவர்களின் ஒழுக்கம் எப்படிப்பட்டது தெரியுமா?

மேலும், இவர்கள் பள்ளி மாணவர்களிடம் திணிக்க முயலும், ஹிந்து வேதங்கள், புராண, இதிகாசங்கள் என்பவைகள், ஆரியர்களின் ஒழுக்கத்தையும், ஒழுகலாறுகளையும் உள்ளடக்கியதோடு, (ஆரியச்) சுரர்களாகிய அவர்கள், (குடிக்காத) அசுரர்கள் என்ற திராவிடரோடு பண்பாட்டுப் படையெடுப்பை ஒட்டி நிகழ்த்தியப் போர்களை அடிப்படையாகக் கொண்ட கற்பனைகளேயாகும்!

அப்போது ஆண்ட பிரிட்டிஷ்காரர்களை தங்கள் வயப்படுத்தி, தங்களது மநுதர்மம், மற்றும் வேதக் கலாச்சரத்தையே இந்து (லா) சட்டம் ஆக்கி, இன்றுவரை மற்ற மக்கள் மீது திணித்து வருகின்றனர்.

இந்தப் பண்பாட்டுப் படையெடுப்புக்கு எதிரான புரட்சிகளில் ஒன்று, திருமண முறைகளில் சடங்கு சம்பிரதாயங்களைத் தங்களது (ஆரிய) ஒழுக்கத்தையொட்டி ஏற்பாடு செய்ததை எதிர்த்து, தந்தை பெரியார் அவர்களது சுயமரியாதைத் திருமண முறை அமைதிப் புரட்சியை ஏற்படுத்தியது!

எடுத்துக்காட்டாக, காலங்காலமாக, இந்து திருமண முறை பெண்ணடிமையை வற்புறுத்தி, ஆணாதிக்கப் பிறவி பேதத்தைப் பூண்போட்டுக் காப்பாற்றி வருவதற்கு தங்கள் சடங்குகள், சம்பிரதாயங்களை, தங்களது மொழி _ சமஸ்கிருதம் மூலம் பரப்பி நிலைபெறச் செய்து, சட்டக் கட்டாயம் ஆக்கிவிட்டனர்.

இதை டாக்டர் அம்பேத்கர், ‘ஹிந்து மதத்தின் புதிர்கள்’ என்ற தலைப்பில் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

“ஆரியர்கள் தங்களைவிடச் சிறந்த சந்ததிகளைப் பெறவேண்டும் என்ற பெரும் ஆசை பிடித்து ஆட்டப்பட்டவர்கள் என்று தோன்றுகிறது. இதற்காக அவர்கள் தங்கள் மனைவிகளை மற்றவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். ரிஷிகளை ஆரியர்கள் உயர்ந்த காளைகளாகக் கருதியதால் அந்தப் பெண்கள் பெரும்பாலும் அவர்களிடம் அனுப்பப் பட்டார்கள். இத்தகைய வழக்கத்தில் சம்பந்தப்பட்ட ரிஷிகளின் எண்ணிக்கை மிகப் பெரியது. உண்மையில் ரிஷிகள் இந்த ஒழுக்கக்கேட்டை ஒரு வாடிக்கையான வியாபாரமாகவே ஆக்கியிருந்தார்கள். மன்னர்களும் கூடத் தங்கள் மனைவிகளைக் கருவுறச் செய்யுமாறு ரிஷிகளைக் கேட்டுக் கொண்டார்கள். இப்போது நாம் தேவர்களைப் பார்ப்போம்.

தேவர்கள் மிகவும் சக்தி வாய்ந்த, பாலியல் ஒழுக்கம் மிகவும் குறைந்த ஒரு சமுதாயமாக இருந்தனர். அவர்கள் ரிஷிகளின் மனைவி களையும் தொல்லை செய்தார்கள். இந்திரன் கௌதம ரிஷியின் மனைவி அகல்யாவைக் கற்பழித்த கதை அனைவரும் அறிந்ததே. ஆரியப் பெண்களிடம் அவர்கள் செய்த ஒழுக்கக் கேடான செயல்கள் சொல்ல முடியாதவை. தேவர்கள் சமுதாயம் ஆரிய சமுதாயத்தின் மீது மிக ஆரம்ப காலத்திலிருந்தே மேலாதிக்கம் நிறுவிக் கொண்டதாகத் தோன்றகிறது. இந்த மேலாதிக்கம் கீழ்த்தரமாகப் போய், ஆரியப் பெண்கள் தேவர்களின் காம இச்சையைத் திருப்தி செய்வதற்கு விபசாரிகளைப் போல் நடந்துகொள்ள வேண்டியிருந்தது. தனது மனைவியை ஒரு தேவன் வைத்திருந்து அவனால் அவள் கருவுற்றால் ஒரு ஆரியன் அதைப் பற்றிப் பெருமைப்பட்டான். மகாபாரதத்திலும், ஹரி வம்சத்திலும் ஆரியப் பெண்களிடம் இந்திரன், யமன், நசத்யா, அக்கினி, வாயு முதலான தேவர்களுக்குப் பிறந்த மகன்கள் பற்றி மிகப் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. தேவர்களுக்கும் ஆரியப் பெண்களுக்கும் இடையே எவ்வளவு பெரிய அளவில் தவறான உறவுகள் இருந்து வந்துள்ளன என்பதைக் காண மிக வியப்பாக உள்ளது.

நாளடைவில் தேவர்களுக்கும், ஆரியர் களுக்கும் இடையிலான உறவுகள் ஒரு நிலைப்பட்டன. இது நிலப்பிரபுத்துவ முறையைப் போன்ற உறவாக இருந்தது என்று தோன்றுகிறது.

தேவர்கள் ஆரியர்களிடமிருந்து இரண்டு உரிமைகளைப் பெற்றுக் கொண்டார்கள்.

முதலாவது உரிமை யக்ஞம். இது ஆரியர்கள் தேவர்களுக்கு அவ்வப்போது அளித்த விருந்து. ராட்சசர்கள், தைத்திரியர்கள், தானவர்கள் ஆகியோருக்கெதிரான சண்டைகளில் தேவர்கள் தங்களுக்கு அளிக்கும் பாதுகாப்புக்காக ஆரியர்கள் இந்த விருந்துகளை அளித்தார்கள். இவை தேவர்கள் கறந்து கொண்ட நிலப் பிரபுத்துவக் கப்பங்களே. இவற்றை இவ்வாறு புரிந்து கொள்ளவில்லை என்றால் அதற்கு முக்கியமான காரணம், தேவர்கள் என்ற சொல் ஒரு சமுதாயத்தைக் குறிப்பதாகப் பொருள் கொள்ளாமல் கடவுள் என்ற கருத்தைத் தரும் சொல்லாகப் பொருள் கொண்டதேயாகும். இது முற்றிலும் தவறானது.

ஆரியர்களிடம் தேவர்கள் பெற்றுக் கொண்ட இரண்டாவது உரிமை ஆரியப் பெண்களைத் தாங்கள் முதலில் அனுபவிக்கும் உரிமையாகும். இது மிக ஆரம்ப காலத்திலேயே முறைப்படுத்தப்பட்டு விட்டது. ருக்வேதம்  X  85, 40இல் இதைப்பற்றிக் குறிப்பிடப்படுகிறது. ஆரியப் பெண்ணின்மேல் முதல் உரிமை சோமாவுக்கும், இரண்டாவதாக கந்தர்வாவுக்கும், மூன்றாவதாக அக்கினிக்கும், கடைசியாக ஆரியனுக்கும் இருப்பதாக அது கூறுகிறது. ஒவ்வொரு ஆரியப் பெண்ணும் ஒரு தேவனுக்கு அடைமானமாக்கப்படுகிறாள். அவள் பருவமடைந்ததும் அவளை முதலில் அனுபவிக்கும் உரிமை அந்தத் தேவனுக்கே உண்டு. அவளை ஒரு ஆரியனுக்கு மணம் முடிப்பதற்கு முன் அந்தத் தேவனுக்கு உரிய கொடையைக் கொடுத்து அவனது உரிமையைத் தீர்த்து அவளை மீட்கவேண்டும். இந்த முறை இருந்தது என்பதற்கு மிகத் தெளிவான நிரூபணம் ஆஷ்வலாயன கிருஹ்ய சூத்திரத்தில் காணப்படுகிறது. அதன் முதல் அத்தியாயம் 7ஆவது கண்டிகையில் திருமணச் சடங்கு நடைமுறை விவரிக்கப்படுகிறது. இதைக் கவனமாக ஆராய்ந்தால் திருமணத்தில் ஆர்யமன், வருணன், புஷன் ஆகிய மூன்று தேவர்கள் வந்திருப்பதாகக் காண முடிகிறது. மணப்பெண்ணின் மீது தங்களுக்கு உள்ள முதல் உரிமை காரணமாகவே இவர்கள் வந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. மணமகன் செய்யும் முதல் செயல் மணப் பெண்ணை ஒரு அம்மிக்கல்லின் அருகே அழைத்து வந்து அதன் மேல் ஏறி நிற்கச் செய்வதாகும். அப்போது அவன் ‘இந்தக் கல்லை மிதி, கல்லைப் போல் உறுதியாயிறு. எதிரிகளை வெல், பகைவர்களைக் காலின் கீழ் மிதித்துவிடு’ என்று சொல்லுகிறான். அவன் தன்னுடைய பகைவர்களாகக் கருதும் மூன்று தேவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து அவளை விடுவிப்பதற்காக இதைச் செய்கிறான் என்பதே பொருள். தேவர்கள் கோபமடைந்து மணமகளைக் கைப்பற்றச் செல்கிறார்கள். மணமகளின் சகோதரன் குறுக்கிட்டுத் தாவாவைத் தீர்த்து வைக்க முயலுகிறான். அவன் மணமகளைத் தன் உள்ளங்கைகளைச் சேர்த்துக் குழிவாக வைத்துக் கொள்ளக் கூறுகிறான். அவளுடைய கைகளில் அவன் தானியப் பொரியை நிரப்பி அதன்மேல் நெய்யை ஊற்றி அதை ஒவ்வொரு தேவனுக்கும் மூன்று முறை கொடுக்கச் சொல்லுகிறான். இவ்வாறு கொடுப்பது ‘அவதனம்’ என்று கூறப்படுகிறது. மணப்பெண் அவதனம் கொடுக்கும்போது அவன் சொல்லும் வார்த்தைகள் குறிப்பிடத் தக்கவை. அவன் கூறுகிறான், “இந்தப் பெண் இந்த அவதனத்தை ஆர்யமன் தேவனுக்கு அக்கினியின் மூலம் கொடுக்கிறாள். எனவே, ஆர்யமன் இந்தப் பெண்ணின் மேல் தனது உரிமையைக் கைவிட்டு மணமகன் அவளைப் பெறுவதைத் தடுக்காமலிருக்க வேண்டும்.’’ மற்ற இரண்டு தேவர்களுக்கும் மணமகள் இதேபோலத் தனித்தனியாக அவதனங்கள் கொடுக்கிறாள். அவதனம் கொடுக்கப்பட்டபின் மணமகனும் மணமகளும் தீயைச் சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இது சப்தபதி எனப்படுகிறது. இது முடிந்தபின் திருமணம் முழுமையடைந்து செல்லத்தக்கதாக ஆகிறது. இவையெல்லாம் ஆரியர்கள் தேவர்களுக்கு முற்றிலுமாகக் கீழ்ப்பட்டு இருந்ததையும், தேவர்களும் ஆரியர்களும் ஒழுக்கத்தில் தாழ்ந்து போயிருந்ததையும் மிகத் தெளிவாக வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

இந்துத் திருமணத்தில் சப்தபதிதான் மிக முக்கியமான அம்சம் என்பதையும், அது இல்லாமல் சட்டப்படி திருமணம் இல்லை என்பதையும் வழக்குரைஞர்கள் அறிவார்கள். ஆனால் சப்தபதி ஏன் அப்படி முக்கியமானது என்பதை அறிந்தவர்கள் மிகச் சிலரே. காரணம், தெளிவாகத் தெரிகிறது. மணப்பெண்ணின் மீது முதல் உரிமை கொண்டிருந்த தேவன் அவதனம் கொடுக்கப்பட்டதில் திருப்தியடைந்து அவளை விட்டுவிடத் தயாராயிருக்கிறானா என்பதைச் சோதிக்கும் நடைமுறையே அது. சப்தபதியில் நடந்துசெல்லும் தூரம் வரை மணமகன் மணப்பெண்ணைத் தன்னுடன் அழைத்துச் செல்வதை அந்தத் தேவன் அனுமதித்தால், அவன் தனக்குக் கொடுக்கப்பட்ட இழப்பீட்டில் திருப்தியடைந்து விட்டான் என்றும், அவனது உரிமை தீர்ந்து போய்விட்டது என்றும், அந்தப் பெண் மற்றொருவனின் மனைவியாவதற்குச் சுதந்திரம் பெற்றுவிட்டாள் என்றும் கருதப்படுகிறது. சப்தபதிக்கு வேறு எந்தப் பொருளும் இருக்க முடியாது. ஒவ்வொரு திருமணத்திற்கும் சப்தபதி இன்றியமையாத சடங்காக இருப்பது, தேவர்களிடையேயும் ஆரியர்களிடையேயும் இருந்த இந்த ஒழுக்கக்கேடு எல்லோரிடமும் பரவி யிருந்ததையே காட்டுகிறது.

இத்தகைய ஒழுக்கக் கேட்டு முறையிலிருந்து அறிவையும், பெண்ணினத்தின் சுதந்திரத்தை, சமத்துவத்தை காத்தளித்தது தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம்.

சுயமரியாதைத் திருமணத்தைச் சட்ட வடிவமாக்கி, பிறவி இழிவைத் துடைத் தெறிந்தது திராவிடர் ஆட்சி. அறிஞர்அண்ணா தலைமையிலான தி.மு.க. ஆட்சி.

இது ஒரு சிறு எடுத்துக்காட்டு. ஒழுக்கச் சிதைவிலிருந்த நாட்டை, மக்களைக் காப்பாற்றி உயர்த்தியது இந்த இயக்க ஆட்சியில்தான்!

எனவே, ஆரியம் ஒழுக்கக்கேட்டை பரப்பியதோடு, ‘புனிதப்படுத்தியது! அதன் மூலம் பெண்களைக் கேவலப்படுத்தியது. ஆனால், திராவிடமோ, அவர்களின் உரிமை, மானம், சுயமரியாதையைக் காப்பாற்றி, ஒழுக்கத்தையும் பாதுகாத்தது!

ஆரியம்_திராவிடம் இரு இனங்கள் என்பதையும், இரு வேறு தத்துவங்கள் என்பதையும் இப்பொங்கல் என்ற ‘திராவிடர் திருநாளில்’ நினைவில் நிறுத்துவோம்!

இப்படிப் பண்பாட்டுச் சிதைவுகளை நாம் சீர்செய்து, ஆரியப் பண்பாட்டு ஊடுருவலை அகற்றிவரும் நிலையில், மீண்டும் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி பள்ளிகளில் பண்பாட்டுச் சீரழிவை மாணவர்கள் மத்தியில் புகுத்தும் முயற்சியையும் நாம் முறியடித்தாக வேண்டும்!

கி.வீரமணி,

ஆசிரியர், உண்மை

- உண்மை இதழ், 16-31.1.18