திங்கள், 20 ஜூலை, 2015

மகாபாரதத்தில் பசு விருந்து வெகு ஜோர்!

பார்ப்பனர்கள் தாங்கள்தான் காலம் காலமாக பசுவைத் தெய்வமாகப் போற்றி வருபவர்கள் எனவும் பசுவைக் காப்பாற்றுவது, மனுதர்மம், இந்து தருமமாகும் என்று கூப்பாடு போடு வதும் நகைப்பிற்கிடமானதாகும். இவர் களது முன்னோர்களாகிய ரிஷிகள், முனிவர்கள் போன்ற எல்லா ஆரியர் களுக்கும் பசுக்கள்தான் விருந்து நடத்த ஆகார மாமிசமாக பயன்படுத்தப்பட்டி ருக்கிறது.
இது அவர்களது நூல்கள் பலவற்றிலும் காணப்படுகிறது. ஆனால், இத்தனைக் காலமும் சும்மா யிருந்துவிட்டு தேர்தலும் நெருங்கி ஒரு பார்ப்பனரல்லாதவர் நாட்டைத் தலைமைதாங்கி நடத்துகிற நிலை உருவாகி விட்டதைக் கண்டதும் வயிற் றெரிச்சல் பொறுக்காமல் இந்து தர்மத்தைக் காப்பாற்றுகிறோம். என்ற மயக்குப் பெயரில், அயோக் கியர்களை பசுவதைத்தடை என்ற பெயரில் உசுப்பி விட்டு காலித்தனங்களில் இறங்கியுள்ளனர்.
இன்றைய பார்ப்பனர்களின் முன் னோர்கள் மாட்டு மாமிசம், அதுவும் வெறும் பசுமாமிசமாக விருந்து நடத்தி, கூட்டங் கூட்டமாக ருசித்து சாப் பிட்டு ஆனந்தித்ததை, அவர்களது அய்ந்தாவது வேதமான மகாபாரதத் திலேயே  கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.
துரோணபர்வம் 67-1-2ல், கண்டுள்ளது.
ஸ்ங்க்ருதி நந்தி தேவம் சம்நதம் ஸஞ்ஜய ஸீஸ்தரும   ஆஸன் த்விஸத் ஸாஹஸ்தரா லஸ்ய
ஸீதா மகாத்ம நண க்ருஹா நாப்யா சுதாத்வப்ராந்
அதி தீந் பரிவேஷ காஹா
சாந்தி பர்வம் 27-28ல்,
தத்ர ஸ்மஸூதாஹ க்ரோ ஸாந்த
ஸூம்ருஷ்ட மணி குண்டலாக
ஸூபம் பூயிஷ்ட மஸ் நீத்வம நாத்ய
மாம்ஸம் யதா புரா.
இந்த ஸ்லோகங்களின் கருத்துப்படி அரசர்களின் மாளிகைகளில், பார்ப் பனர்களுக்கு விருந்து படைப்பதற் கென்றே 2000 சமையற்காரர்கள் இருந்தனர்.
நாளொன்றுக்கு இரண்டா யிரம் பசுக்கள் வீதம் கொல்லப் பட்டன. இப்படியிருந்து பசு மாமிச ருசியில் மந்தை மந்தையாக பார்ப்பனர் கள் வந்து சமாளிக்க முடியாமல் போய் விட்டதால் அவர்களைப் பார்த்து சமையற்காரர்கள் மாமிசம் குறைவாக இருக்கிறபடியால் தயவு செய்து சூப்பை அதிகமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்ட நிலைமை ஏற்பட்டதாம்.
இந்த நூல் தவிர மற்ற நூல்களிலும் இதற்கு நிறைய ஆதாரம் காணலாம். இந்த பசுமாமிச விருந்தைப் பற்றி காளிதாசனும் தன்னுடைய மேகதூதத் தில் குறிப்பிட்டிருக்கிறான். அவற்றில் மாதிரிக்கு ஒன்று.
வ்யாலம் பேதாஹ ஸுபித நயாலம் பஜாம்
மானயிஷ்யஸ்ந் ஸரோதோ மூர்ததியா புவி பரிணதாம்
நந்தி தேவஸ்ய கீர்த்திம் (மேகனைதம் 1-45)
பசு மாமிசத்தை வெளுத்துக்கட்டி யது மட்டுமல்லாமல், தங்கள் கூட்டம் தின்ற பசுக்களின் எண்ணிக்கையை கூறிக்கொள்வதைப் பெரிய பெருமை யாக எண்ணியிருந்தனர்.
இவர்களது அரசனாக இருந்த நந்திதேவன் என்ற பார்ப்பன மன்னனின் விருந்து சாலை மகா பிரசித்தி பெற்றிருந்தது. இவ னுடைய நாட்டின் தலைநகரம் சர்மண் வதி (சம்பல்) நதிக்கரையில் இருந்தது.
இந்த நதிக்கு சர்மண்வதி என்ற பெயர் வந்ததுமே போதும், பார்ப்பனர்கள் பசு மாமிசத்திலேயே ஊறிக்கிடந்ததை தெரிவிப்ப தற்கு நந்தி தேவனுடைய அரண்மனையில் நாள்தோறும் ஆயிரக் கணக்கான பசுக்கள் கொல்லப்பட்டு அவைகளின் தோல்கள் மலைமலையாக சமையற் கட்டிற்குப் பக்கத்திலேயே குவிக்கப்பட்டிருக்குமாம்.
அந்த ஈரத்தோல்களி லிருந்து கசியும் நீர் ஓர் நதியாகவே பெருகி ஓடிற்றாம். தோலிலிருந்து வெளிப்பட்டு ஓடியதால் அதற்கு சர்மண்வதி (சர்ம-தோல், ணவதி-வெளிப்பட்டு ஓடுதல்) என்ற பெயர் ஏற்பட்டதாம்.
இதைக் கருத்தாகக் கொண்டதே:
நாக்ஜோ மஹா நஸே பூர்வ
நந்தி தேவஸ்ய வைத் வேஜே!
அஹந்ய ஹநி பத்யேதே த்வே ஸஹஸ்த்ரே கவாம் ததா
ஸாமாம்ஸ தத தோஹ் மந்நங்
நந்தி தேவஸ்ய நித்ய ஸஹ
அதுலா கிர்த்திர் பவந் நபஸ்ய
த்விஜ ஸத்தம்
(வனபர்வம் 208-1-10)
மஹா நதி சர்மராஸே நதிக் லேதாத்
ஸங்ஸ்நஜே யதஹ ததஸ் சர்மண்வதி த்யேவம்
விக்யாதாஸா மஹா நதி (சாந்தி பர்வம் 29-23) இந்த நந்தேவனின் தம்பிதான் பார்ப்பன மகரிஷியாக இருந்த கௌரிவித் என்பவர்.
சுராபானம் அருந்தியவர் பார்ப்பனர் இவ்வாறு பசுக்களின் இனமே அழிந்திருக்கக் கூடிய அளவுக்கு தின்றுவிட்டு, சுரா மதுவைக்குடித்து விட்டு, வெறியாட்டம் ஆடிக் கொண்டிருந்த பார்ப்பனக் கூட்டத்தை அன்றே திராவிட இனம் வெறுத்தது; விரட்டியடித்தது.
இத்தகைய திராவிட மக்களிடமிருந்து தங்களை ரட்சித்துத் தங்களது சுகானுபவத்தைக் கெடுக்காமல் காப்பாற்றிய அரசர்களை அன்றைய பார்ப்பனர் தெய்வமாகக் கொண்டாடி னர் இந்தக் காரணத்தினால்தான் வால்மீகியும் சுங்க வம்சத்து சக்ரவர்த்தி புஷ்யமித்திரனைத் தனது ராமாயண காவியத்தில் ராமனாக, கடவுள் அவ தாரமாக ஆக்கி வைத்தான்.
காளி தாஸனும் தான் எழுதிய ரகுவம்சத்தில் ரகுவாக அரசன் சந்திரகுப்தனையும், குமார சம்பவத்தில் குமாரனாக குமார குப்தனாகவும் வர்ணித்து வைத்தார்.
உலகத்திலேயே மிக அதிக எண்ணிக் கையில் மாடுகள் இருப்பது இந்தியாவில் தான், ஆனால் வெட்கக்கேடு என்ன வென்றால் உலகத் திலேயே எலும்பும் தோலுமாக மிகக்குறைந்த அளவில் பால் கொடுக்கும் மாடுகள் நிறைந் துள்ள நாடு நமது பெருமைமிக்க இந்தியாவில்தான்.
செலவு செய்வதில் பாதியளவுகூட கொடுக்காத பசுக்கள் தான் தற்சமயம் இங்கு மிகுதி. கொஞ்சம் மாடுகள் தற்சமயம் தோலுக்காக, மாமிசத்திற்காகக் கொல்லப்படுவதையும் நிறுத்திவிட்டால் வெறும் மரப்பு மாடுகளும், எலும்பு மாடுகளும் மனி தனது பயிரையும் சேர்த்து வீணடித்துக் கொண்டுதானே இருந்துவரும்.
வட இந்தியப் பார்ப்பனர் மாமிச பட்சணிகளே! தென் இந்தியப் பார்ப் பனரும் யாகம் செய்கையில் உண் கின்றனர்.
ஆகையால் இந்த கோட்சே கும்பல் களும்  பார்ப்பன இனத்திற்கு ஏகபோக மான ஆர்ய சமாஜ் ஜனசங்க, க.து. க்களும் பசுவதைத்தடை  என்று கூச்சல் போடுவது மக்களை மடையர்களாக எண்ணி நடத்தும் பச்சை அயோக்கியத் தன வெறியாட்டமாகும். ஆகையால் இந்த பசுவதைத் தடைப்போராட்டம் என்ற பெயரில் காமராசரை கூட்ட மாகச் சென்று தாக்கவே திட்டமிட்டுக் காரியமாற்றுகின்றனர்.
(விடுதலை 23-_11_-1966)
(விடுதலை ஞாயிறு மலர் 11-_4_-2015)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக