கடவுள், மதம், சாதி மற்றும் வேதம் குறித்து பகுத்தறிவு விளக்கங்கள் இப்பகுதியில் இடம்பெறும்.
வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026
இராமாயணம் ஒரு கட்டுக்கதை! - செ.ர.பார்த்தசாரதி, சென்னை
புதன், 19 ஆகஸ்ட், 2026
இயேசுவின் விண்ணேற்றம் - செ.ர.பார்த்தசாரதி
இயேசுவின் விண்ணேற்றம்
- செ.ர.பார்த்தசாரதி
ஏசு சிலுவையில் அறையப்பட்டு, இறந்த பின் கல்லறையில் வைக்கப்பட்டு பிறகு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்றும் பிறகு 40 ஆம் நாள் விண்ணுலகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார் என்றும் கிறித்தவர்கள் நம்புகின்றனர்.
கடைசியாக விண்ணுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக சொல்லப்படும் இடம் இப்பொழுது முகமதியரிடம் இருக்கிறது. விண்ணுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக சொல்லப்படும் நாளின் போது (இரண்டு நாள்கள்) மட்டும் கிறித்தவர்களிடம் ஒப்படைக்கின்றனர். மற்ற நாள்களில் எல்லாம் முஸ்லீம்களின் மசூதியாக இருக்கிறது.
'ஏசு சிலுவையில் அறையப்படவுமில்லை. மூன்றாம் நாள் உயிர்த்தெழவுமில்லை. சிலுவையில் அறையப்படுவது போல் ஒரு தோற்றத்தை கடவுள் (அல்லா) ஏற்படுத்தினார் என திருக்குர்ஆனில் உள்ளது.(திருக்குர்ஆன் அன்-நிஸா (An-Nisa) 4ஆவது அத்தியாயத்தின் 157-வது வசனம்)
முஸ்லீம்கள் (அகமதியா பிரிவு) ‘இயேசு யூதர்களிடமிருந்து தப்பித்து இமய மலைப் பகுதியில் வந்து வாழ்ந்து பிறகு இயற்கையாக மரணமுற்றார்’ என்றும் அவருடைய சமாதி காஷ்மீரில் உள்ளது’ என்றும் கூறுகின்றனர்.
குர்ஆனுக்கு முந்தைய 'தவ்ராத்' வேதத்தில், ‘இயேசுவின் சமாதி, முகமது நபியின் சமாதியின் அருகில் வைக்கப்பட வேண்டும்’ என்று இருப்பதாக ‘அல்ஹதீஸ்' என்ற முஸ்லீம்களின் வேத நூலில் உள்ளது. (திர்மிதீ,வசனம் 3,617)
ஆகையினால்தான் இன்றளவும் முகமது நபியின் சமாதியின் அருகில் எதுவும் வைக்கப்படாத காலியான சமாதி ஒன்று இருப்பதாக முஸ்லீம்கள் கூறுகின்றனர்.
'இயேசு உயிர்த்தெழுந்து 40ஆம் நாள் விண்ணுலகம் சென்று விட்டார் என்பது உண்மையாயின் 'தவ்ராத்'தில் சொல்லப்பட்ட வசனம் பொய்யாகிவிடுகிறது.காலியாக உள்ள சமாதி . அடைக்கப்படாமலே 'தவ்ராத்' வேதம் பொய் என்று நிரூபித்துக் கொண்டிருக்கும்.
முஸ்லீம்கள் சொல்வதுபோல் காஷ்மீரில் அவர் இருப்பினும், 'தவ்ராத்' வசனம் பொய்யாகிவிடுகிறது.
இவையெல்லாம் போகட்டும், ‘விவிலியம்' (பைபிள்) என்ன சொல்கிறது என பார்ப்போம்.
'பதினோரு சீடர்களும் இயேசு குறித் திருந்த கலிலேயாவிலே உள்ள ஒரு மலையில் இயேசுவை சந்தித்தனர். அங்கிருந்து அவர் மறைந்தார்" என மத்தேயு கூறுகிறார். (28:16)
மாற்குவும் ‘கலிலேயாவில் பதினொரு வரும் உணவருந்திக் கொண்டிருந்தபோது, இயேசு வந்து அவர்களுடன் பேசிவிட்டு பரலோகம் சென்றார் என்றும் கூறுகிறார். (16:7,14,19)
ஆனால் லூக்காவோ 'எருசலேம் அருகிலுள்ள பெத்தானியாவில் சீடர்களை ஆசீர்வதித்துவிட்டு பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்' என்று கூறு கின்றார். (24:50,51)
யோவானோ கலிலேயாவிற்கு அருகிலுள்ள திபேரியக் கடற்கரையில் சீடர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது இயேசு வந்து, அவர்களை அழைத்து, பேசிக்கொண்டே சென்றார் (யோவா: 21)
அப்போஸ்தலரோ, ‘எருசலேமுக்கு பக்கத்தில் ஒரு ஓய்வு நாள் பிரயாண தூரத்திலிருக்கிற ஒலிவ மலையிலிருந்து பரலோகத்திற்கு அவரை ஒரு மேகம் எடுத்துக் கொண்டது' என்கிறார். அப்போஸ்தலர் (1: 1,9,12)
இந்த அப்போஸ்தலர் (1: 3) மட்டும் தான் ‘இயேசு உயிர்த்தெழுந்து 40 ஆம் நாள் மேலே எடுத்துக் கொள்ளப்பட்டார்’ என்று கூறுகிறார். மற்றவர்கள் நாள் கணக்கைச் சொல்லவில்லை.
பக்கம் -13
மத்தேயுவும், அப்போஸ்தலரும் கலிலேயாவில் உள்ள மலையில், இயேசு பரமேறிச் சென்றதாக கூறுகின்றனர்.
ஆனால் யோவானோ கலிலேயாவிற்கு அருகிலுள்ள திபேரியக் கடற்கரையிலிருந்து பரமேறிச் சென்றதாக கூறுகிறார்.
இதைவிட அதிசயம் என்னவென்றால் பழைய பாலஸ்தீன தேசத்தில், ஒரு கோடியில் கலிலேயோ இருக்கிறது. இதன் எதிர் கோடியில் எருசலேம் இருக்கிறது. இதன் அருகிலுள்ள பெத்தானியா விலிருந்து இயேசு பரமேறிச் சென்றதாக லூக்கா சொல்கிறார்.
ஏதோ பக்கத்து ஊர்களை சொன்னாலும் பரவாயில்லை. சம்பந்தா சம்பந்தமில்லாமல் கூறுகின்றனர்.
இயேசுவை சிலுவையில் அறைந்த போது, அவர் அருகில் இரு கள்ளர்களையும் அறைந்திருந்தனராம். அவர்களில் ஒருவன் இயேசுவை திட்டினானாம், மற்றவன் வாழ்த்தினானாம்.. வாழ்த்தியவனைப் பார்த்து "இன்றே நீ என்னுடனே கூடப் பரலோகத்திலிருப்பாய்' என்று சொன்னாராம்.
இந்த வசனப்படி 'இயேசு 40ஆம் நாள் மேலே சென்றார்' என்பது பொய் யாகிறது. இயேசுவை அறையப்பட்ட அன்றே மேலுலகம் சென்றுவிட்டார் என்பது தெளிவாகிறது.
இதிலிருந்து பைபிள் வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டு இருக்கின்றதனால், இயேசு பரமேறிச் சென்றதாகச் சொல்லப்படுவது எல்லாம் பொய்யான கட்டுக்கதை என்பதை அறியலாம்.
வியாழன், 13 ஆகஸ்ட், 2026
சீதை சிறை வைக்கப்பட்டது எங்கே! - மூலிகை மன்னன் செ.ர.பார்த்தசாரதி
சீதை சிறை வைக்கப்பட்டது எங்கே!
- மூலிகை மன்னன் செ.ர.பார்த்தசாரதி

இலங்கை நாட்டில் நுவரெலியா என்ற இடத்தில் ‘சீதை அம்மன்’ கோயில் என்ற பெயரில் அண்மைக் காலத்தில் கட்டப்பட்ட கோவில் ஒன்று உள்ளது.
இக்கோவிலை 1982 ல் ரூ.10 இலட்சம் செலவில் பெரிய அளவில் எடுத்துக் கட்ட தமிழ் அமைச்சர் (அப்போதைய) இராஜதுரை அவர்கள் திட்டமிட்டிருந்தார். ஆனால், இதுவரை அத்திட்டம் நிறைவேறாமல் இருந்தது.
ஆனால், தற்போது இலங்கை அரசு, வெளிநாட்டு பயணிகளை கவர சீதை அம்மன் கோயிலை புதுப்பித்து பெரிய அளவில் கட்ட திட்டமிட்டுள்ளது.
இந்த அறிவிப்பை கேட்டவுடன் இரண்டு பக்கமிருந்தும் வலிமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஒரு பக்கம் புத்த மதத்தைச் சேர்ந்த சிங்களவர்கள்; 'இந்து மத, கோயிலை பெரிய அளவில் விளம்பரப் படுத்த கூடாது' என்றும்; மறுபக்கம் இலங்கை நாட்டின் தொல்குடி மக்களான தமிழர்கள்; இராவணனை இணையற்ற வீரனாக கருதுவதால், 'இராவணனின் எதிரி யான 'இராமன்' சம்பந்தப்பட்ட கோயிலை பெருமைப் படுத்த கூடாது’ என்றும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இக்கோயிலைப் பற்றி அலசுவோம்!'குட்டித்தீவை எட்டிப்பார்த்தேன்' என்ற நூலில் இருந்து)
“நுவரெலியாவில் இருந்து கதிர்காமம் நோக்கி இறங்கு முகமாக செல்லும் சாலையின் ஓரத்தில் ஒரு பள்ளத்தில் 'சீதை அம்மன்’ கோயில் என்ற பெயரில் இக்கோயில் உள்ளது.
இது, தம் ஊர் கிராமக் கோயில்கள் போல் சிறிய கோயில், அது சமீபத்தில் தான் கட்டப்பட்டிருக்க வேண்டும். பார்த்தால் மூன்று மலைகள் தெரிகின்றன. நடுவில் இருக்கும் மலை நல்ல உயரம்: இரு புறமும் சிறிய மலைகள்.
அந்த உயரமான மலையில் தான் இராவணன் சீதையை சிறை வைத்து இருந்தான் என்று சொல்லப்படுகிறது.
அந்த மாலைக்கு ‘சீதா எலியா’ என்று பெயர். சிங்கள மொழியில் ‘எலியா’ என்றால் மலை, சீதை சிறையில் இருந்த மலை என்பதால் ‘சீதா எலியா' என்று பெயர் ஏற்பட்டது.
சீதையை அசோகவனத்தில் சிறை வைத்ததாக நாம் படித்து இருக்கிறோம். ஆனால்; இந்த மலையில் அசோக மரமே கிடையாது. வேறு மரங்களும் இல்லை. ஆட்கள் செல்ல வசதியும் இல்லை”
அசோக மரம்
மேற்கண்ட செய்திகள் 'இராணி' வார ஏட்டின் ஆசிரியர் குரும்பூர் குப்புசாமி (அ.மா.சாமி) அவர்கள் இலங்கையைச் சுற்றிப் பார்த்து விட்டு வந்து 'குட்டித் தீவை எட்டிப்பார்த்தேன்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியாகும்.
ஆட்கள் செல்ல வசதி இல்லாத, மரங்களே இல்லாத ஒரு மலையைக் காட்டி ‘இங்குதான் சீதை'யை சிறை வைத்தனர்; என்று சொன்னால் யார் தான் நம்புவார்கள்! குரும்பூர் குப்புசாமி அவர்களுக்கு மனசாட்சி உறுத்தியதால் உண்மையை எழுதியுள்ளார்.
இராமாயணத்தில் அரண்மனையை ஒட்டியுள்ள அசோகவனத்தில் சீதையை சிறை வைத்ததாகத்தான் உள்ளது. ஆனால் இலங்கையில் ஒரு மொட்டையான மலையைக் காட்டி: இதுதான் சீதை சிறை வைக்கப்பட்ட இடம் என்கிறார்கள் என்பதிலிருந்து; இராமாயண கதையை உண்மை என்று காட்ட, தற்காலத்தில் இட்டுக் கட்டப்பட்ட இடமே நுவரெலியாவும் ‘சீதை அம்மன்' கோயிலும் ஆகும் என்பதை அறிய முடிகிறது.
- விடுதலை ஞாயிறு மலர், பக்கம் V , 18.4.1999
கிருத்துவர்கள் சிந்தனைக்கு! - செ.ர.பார்த்தசாரதி
கிருத்துவர்கள் சிந்தனைக்கு!
"ஒரே மனிதனாலே பாவமும், பாவத்தினாலே மரணமும் உலகத்தில் பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவம், செய்தபடியால் மரணம் எல்லோருக்கும் வந்தது"என்று (ரோமர் 5:12)ல் இருக்கிறது.
இயேசு இறந்தார் என்று (மத்தேயு: 27:50), (15:37 மாற்கு), (லூக்கா:24:46) (யோவான் 19:30) ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளது. அப்படியாகின் முன்னால் கூறப்பட்டபடி, இயேசுவும் பாலம் செய்ததால்தான் இறந்தார் என்று தெரியவருகிறது.
போப், கிருஸ்தவர்கள் ஆகியவர்கள் கூட இறந்திருக்கிறார்கள். இறந்து கொண்டும் இருக்கிறார்கள் ஆகையால் கிருஸ்தவர்களும் பாவம் செய்தவர்கள் என்று தெளிவாகிறது.
"தான் வருமளவும் இவனிருக்க, எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றி வா’ என்றார். ஆகையால், அந்தச் சீசன் மரிப்பதில்லையென்கிற பேச்சு, சகோதரிகளுக்குள்ளே பரம்பிற்று. ஆனா லும், அவன் மரிப்பதில்லையென்று இயேசு சொல்லாமல், நான் வருமளவும் இவனிருக்க, எனக்குச் சித்தமானால், உனக்கென்னவென்று சொன்னார்". என்று (யோவான்:21:22,23 )ல் இருக்கிறது.
இயேசுவின் இரண்டாம் வருகை சமீபத்தில் இருக்கிறது" என்றுதான் கூறுகின்றனர். அப்படியானால் இயேசு மறுமுறை இன்னும் வரவில்லை என்று தெரிய வருகிறது. அப்படியாயின் ‘சீசன்’ இன்றளவும் உயிருடன் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மனிதனை யாராவது, காண்பிக்க தயாரா?
(எசேக்கியல்: 18:4,20) மற்றும் (ரோமர்: 6:23) ல்
''பாவத்தின் சம்பளம் மரணம்,. பாவஞ் செய்கிற ஆத்துமாவே சாகும்” என்று, தேவன் கூறியுள்ளார் என்றும் (யோவான் : 5 : 29) "பிரேத குழியிலிருந்து நன்மை செய்பவர்களை ஜீவனை அடையும் படியும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும் படியும், எழுந்திருக்கிறவர்களாக புறப்படுவார்கள்" என்றும் (மத்தேயு: 25: 32, 33, 34 41, 46)ல் "பாவம் செய்தவர்கள் பிசாசிற்காகவும், அவன் தூதர்களுக்காகவும், ஆயத்தம் பண்ணப் பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போவார்கள். நீதிமான்கள் நித்திய ஜீவனை அடைவர்" என்றும் இருக்கிறது.
எசேக்கியல், ரோமர் இரு வரும் பாவஞ் செய்கிற ஆத்துமா சாகும் என்று கூறுகின்றனர். ஆனால் யோவானும், மத்தேயுவும் “ஆத்துமா சாகாது” என்றும், “பாவம் செய்த ஆத்துமா நித்திய ஆக்கினையை அடையும், நன்மை செய்த ஆத்துமா நித்திய ஜீவனை அடையும்” என்றும் கூறுகின்றனர். இவர்களுக்குள் எப்படிப்பட் முரண்பாடு!
(யோவான்:8:51) ல் “ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே. உங்களுக்குச் சொல்கிறேன். என்றார்’ என்று இருக்கிறது.
யோவான்: 8:51 ல் இயேசு வார்த்தையைக் கைக்கொண்டால் மரணத்தை காண்பதில்லை’ என்று இயேசு கூறுவதாக கூறி விட்டு, 5:29 ல்
"மரணமே கிடையாது, ஆத்மாவிற்கு ஆக்கினை தான் உண்டு" என்று கூறுகிறார்.
யோவானே இப்படி முன்னுக்கு பின் முரண்பாடாக கூறுகிறார். எசேக்கியல். ரோமர், யோவான், மத்தேயு ஆகிய நால்வரும் ஒருவருக்கொருவர் முரண்பாடாக ஆத்துமாவை பற்றி கூறுகின்றனர் காரணம் என்ன. வென்று புரிகிறதா? காரணம். இதுதான் ஆத்துமா என்பது ஒன்று தனியாக இல்லை. அதனால் அதை மறைப்பதற்காக ஒவ்வொருவரும் தனக்கு தெரிந்த மட்டும் பொய்யை சொல்லி வைத்துள்ளனர். ஆகையால் கிருஸ்தவர்களும், மற்றவர்களும் கோபப்படாமல் சிந்தித்துப் பாருங்கள். சிந்திப்பீர்! செயல்படுவீர்!.
குறிப்பு
: இந்திய வேத காமச் சங்கத்தாரால் வெளியிடப்பட்டு 1978 ல் வெளிவந்த புதிய ஏற்பாட்டிலிருந்து குறிப்பு எடுக்கப்பட்டுள்ளது.
- ர. பார்த்தசாரதி சென்னை-34
- உண்மை இதழ், பக்கம்-31
இந்திய வேத காமச் சங்கத்தாரால் வெளியிடப்பட்டு 1978 ல் வெளிவந்த பரிசுத்த வேதாகமத்திலிருந்தும் குறிப்பு எடுக்கப்பட்டுள்ளது.
- செ.ர.பார்த்தசாரதி









