வியாழன், 19 பிப்ரவரி, 2015

ஆண்டாள் என்று ஒருவர் இருந்தாரா?

மார்கழி மாதம் - போட்டிப் போட்டுக் கொண்டு சில நாளேடுகள்

நாள்தோறும் ஆண்டாள் 

பாடியதாக திருப்பாவையிலிருந்து பாடல்களை வெளியிட்டு

வருகின்றன. உண்மையிலே 

ஆண்டாள் என்ற பக்தை இருந்தாளா? இல்லை என்று மறுப்பவர் யார்

தெரியுமா? வைணவப் 

பக்தரான சாட்சாத் ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) தான் அப்படி

சொல்லுகிறார் இதோ அவர்.

ஆண்டாள் என்னும் ஸ்திரி இருந்ததே இல்லை. நாலாயிர பிரபந்தத்தில்

ஆண்டாள் பாடியதாகச் 

சொல்லப்படும் பாசுரங்கள் அவர் பாடியவை அல்ல. பெரியாழ்வார்

என்னும் ஆழ்வார் சில 

பாசுரங்களைப் பாடி அப்பாசுரங்களை ஆண்டாள் என்னும் ஒரு பெயரால்

வெளிப்படுத்தினார் 

என்று திரிவேணி என்னும் ஆங்கில மாதப் பத்திரிகையில் (1946

செப்டம்பர் இதழில்) 

எழுதினாரே! இதற்கு என்ன பதில்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக