ஞாயிறு, 25 அக்டோபர், 2015

பாரதியின் சூத்திர தர்மம்!


ஜனங்களுக்குள் சூத்திர தர்மம் குறைந்து போனால், அப்போது பிராமணர் - _ சூத்திரத் தர்ம போதனை யையே முதல் தொழிலாகக் கொண்டு நாட்டில் உண் மையான சூத்திரர்களை அதிகப்படுத்த வேண்டும் என்கிறார் பாரதி (ஞான ரதம் பக்.88)
இந்து தர்மத்தின்படி மனுவில் கூறப் பட்டுள்ள சூத்திரத் தன்மை ஏழு வகைப் படுமாம்.
1. யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன், 2. யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப் பட்டவன். 3. பிராமணனி டத்தில் பக்தியினால் ஊழி யஞ் செய்பவன், 4. விபச்சாரி மகன், 5. விலைக்கு வாங்கப் பட்டவன், 6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன், 7. தலை முறை தலைமுறையாக ஊழி யஞ் செய்பவன் (மனு அத்.8, சு. 415).
மேலும், சூத்திரன் படிக்கக் கூடாது, வேதம் ஓதக்கூடாது, அப்படி அவன் படித்தால் நாக்கை அறுக்கவும், காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவும் வேண்டும் என்றும்,
சூத்திரன் மற்ற மூன்று வருணத் தாருக்கும் பொறாமையின்றிப் பணி செய்வதை முக்கியமான தர்மமாகக் கொள்ளல் வேண்டும். இவன் பிரா மணனை அடுத்த சூத்திரன் என்று ஒரு வனுக்குப்பெயர் வந்தால் அதே அவ னுக்குப் பாக்கியம்.
சூத்திரனைக் கூலி கொடுத்தோ, கொடுக்காமலோ பிராமணன் வேலை வாங்கலாம். பிராமணனுக்குத் தொண்டு செய்யவே சூத்திரனைப் பிரம்மா படைத்திருக்கிறார்.
சூத்திரன் தன் தொழிலை விட்டு உயர் குலத்தோனுடைய தொழிலைச் செய்தால் அவன் பொருள் முழுவதும்  பறித்துக் கொண்டு அரசன் அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும்.
மேலே குறிப்பிட்ட தன்மைகளில் பாரதி சூத்திரத் தர்மத்தைக் கடை பிடிக்க வேண்டும் என்று கூறுவது நோக்கத்தக்கது.
-விடுதலை,8.11.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக