புதன், 24 மே, 2017

பெண்களை புராணக் கதைகளைப் படிக்கவிடக் கூடாது


15-6-1943, விடுதலையிலிருந்து...

பெண்களுக்கு இன்றுள்ள புராணக் கதைகளைக் கேட்கவோ படிக்கவோ சிறிதும் இடம் கொடுக்கப்படாது. கற்பு என்றால் அதற்கு அறிவுக்கேற்ற அல்லது இருவர் நலனுக்கேற்ற கருத்துக் கொள்வதே இல்லை. கற்பு என்றால் நடைப்பிணமாய் இருக்க வேண்டும். வாய், கண், செவி ஆகிய மூன்று யந்திர உணர்ச்சிகூட இருக்கக் கூடாது என்ற பொருளே கொடுக்கப்படுகிறது. இதனால் யாருக்காவது பயன் உண்டா? கற்பு என்பதற்கு இது அழுத்த மானால் குருட்டுப் பெண்ணும் மொண்டி ஊமைப்பெண்ணும் மேலானதாகும்.
-விடுதலை,19.5.!7

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக