ஞாயிறு, 21 மே, 2017

புனித’ கங்கை என்னும் சாக்கடை


பார்ப்பனர்கள் தங்கள் சுயநலத்திற்காக இந்திய மக்களை அறியாமைக்குழியில் பல்லாயிரம் ஆண்டு களாக ஆழ்த்திவருகிறார்கள். புண்ணியம் என்று ஆசை காட்டியும், பாபம் என்று அச்சுறுத்தியும் மக்களை மடமையினின்றும் மீள வழிஇல்லாமல் செய்துவருகிறார்கள். கல்வி, வேறு நாடுகளில் அறிவைப் பரப்பும் சாதனம்; ஆனால் இங்கு மூடநம்பிக்கைக்குத் துணைபோகிறது. ரேடியோ, டி.வி. போன்றவை மக்களை மேலும் பகுத்தறிவுள்ளவர்களாக ஆக்க மேலை நாடு களில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த விஞ்ஞான சாதனங்கள் நம் நாட்டில் மக்களை மேலும் மடையர்களாக்கவே பயன் படுத்தப்படுகின்றன.
பசுவை கோமாதா என்றும், மாட்டு மூத்திர வகையை பஞ்ச கவ்யம் என்றும், பெருச்சாளியை கணபதியின் வாகனம் என்றும், யானையை பிள்ளையாரின் அவதாரம் என்றும், புலியை அய்யப்பனின் வாகனம் என்றும், மயிலை முருகனின் வாகனம் என்றும், சேவலை அவனதுவெற்றிக்கொடி என்றும், காகத்தை சனிபகவான் வாகனம் என்றும் பலகாறும் திரும்பத் திரும்பச் சொல்லிச் சொல்லி கல்வி அறிவற்ற , சூத்திர, பஞ்சமர்களை அஞ்சி அஞ்சிச் சாகும்படி செய்து வருகிறார்கள் பார்ப்பனர்கள்
இத்தகைய முழு மூட நம்பிக்கைகளில் ஒன்றுதான் கங்கை புனிதமான நதி என்று பார்ப்பனர்கள் புளுகுவதும்.
சாக்கடையெல்லாம் கங்கையில்
கங்கை என்றும் புனித ஆறு, யாராலும் களங்கப்படுத்த முடியாதது; கங்கை நீர் எந்தக் கிருமியாலும் அசுத்தப்படுத்த முடியாதது என்ற மூடநம்பிக்கை மக்களிடையே உள்ளது.
இது உற்பத்தியாகும் இடத்திலிருந்து கடலில் கலக்கும் நிலை வரையில் 2,525 கி. மீ. தூரம் பாய்கிறது.
‘பாபம் போக்கும்‘ காசி நகரத்தின் சாக்கடை நீர் முழுதும் கங்கையில் தான் நாள்தோறும் கலக்கிறது. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் காசியில் மட்டும் 20 மில்லியன் காலன் சாக்கடை நீர் கங்கையில் கலக்கிறது. நாள்தோறும் 400 பிணங்கள் கங்கைக் கரையில் எரிக்கப்பட்டு, கங்கை நதியில் கரைக்கப்படுகின்றன. ஆண்டுதோறும், பயன் படுத்தப்பட முடியாத 9,000 கிழட்டுப் பசுக்கள் கங்கையில் வீசி எறியப்படுகின்றன. காசியில் 2 லட்சம் மக்கள் பட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலில் உண்டாகும் ரசாயனக் கழிவுநீர் முழுவதும் கங்கையில்தான் நாள் தோறும் கலக்கிறது.
இப்படிச் சாக்கடைநீரும், ரசாயனக் கழிவுநீரும், செத்த மனிதர்களும், ஆடுமாடுகளும் மிதக்கும் “புனித” கங்கை நீரைத்தான் சொம்புகளில் அடைத்து, நாடு முழுதும் மக்கள் எடுத்துச் செல்கிறார்கள். நாள் ஒன்றுக்கு இந்தச் சாக்கடை கங்கையில் 70 ஆயிரம் பேர் மோட்சத்திற்குப் போவதற்காக நீராடுகிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், காசிவாசிகள் மருந்து கலக்கப்பட்ட சாக்கடை நீரைத்தான் குடிக்கிறார்கள் .
இதன் விளைவாகத்தான் 1927, 1963, 1970 ஆகிய ஆண்டுகளில் காசியிலும், சுற்றுப்புறங்களிலும் மிகக் கொடுமையான தொத்து நோய்கள் வெடித்துப் பரவின.
கங்கோத்ரியிலேயே கலப்படம்
பாவம்போக்கும் காசியில்தான் கங்கை இந்தப் பாடு படுகிறது என்று நினைக்காதீர்கள். அதன் உற்பத்தி இடமான கங்கோத்ரியில் இதை விட அதிகமான அசிங்கம் கலக்கிறது. அங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள் அனைவருக்கும் கக்கூசாகப் பயன்படுவது இந்தப் புனித கங்கை தான்!
இந்தச் சாக்கடைக் கங்கையின் யோக்கியதையை இந்திய அரசின் இன்னொரு புள்ளிவிவரமும் அம்பலப் படுத்துகிறது. இந்தியாவில் குழந்தைகள் மரணம் 1000-க்கு 94 சதவீதமாகும். ஆனால் காசியையும், அதைச்சுற்றி யுள்ள பகுதிகளிலும் குழந்தை மரண விகிதம் 1000-க்கு 133.94 ஆகும். இதற்குக் காரணம் ‘கங்கை மாதாவின்’ சாக்கடை மகிமைதான்.
காசியை அடுத்து, கங்கையை மேலும் சாக் கடைஆக்குவதுகாஜியாபாத்நகரிலுள்ளபொதுத் துறை நிறுவனங்களாகும். இந்நகரிலுள்ள தொழிற்சாலை களிலிருந்து கழிவுப்பொருள்களில் ‘ஓபியம்‘ மிக உயர்ந்த அளவில் உள்ளது. இந்தப் பகுதியில் ஒடும் கங்கை நீரைத் தொடர்ந்து குடிக்கும் குரங்குகள் கூட போதைப்பழக்கத்திற்கு அடிமைப்பட்ட மனிதர்களைப் போல ஆகிவிடுகின்றன என்றால் இந்த நீர் மனித உபயோகத்திற்கு லாயக்கானதா என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்.
பீகார் மாநிலத்தில் கங்கை பாய்கையில் துர்காபூர், பொகரோ, பிலாய், டாடா ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய தொழிற்சாலைகளிலிருந்தும், இன்னபிற உரத் தொழிற் சாலைகளிலிருந்தும் ஏராளமான அளவில் அம்மோனியா, சயனைடு, நைட்ரேட், நைட்ரைட் பீனால் முதலியவை ஏராளமான அளவில் கங்கையில் கலக்கின்றன. இத னால் பீகார் மாநிலத்தில் விவசாயம் பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது.
சடலங்களின் மிதப்புகள் 
பாட்னாவில் மட்டும், ஒவ்வொரு நிமிடமும் 34 முதல் 41 வரை உடல்கள் எரிக்கப்பட்டுக் கங்கையில் கலக்க விடப்படுகின்றன.
பாட்டா செருப்புத் தொழிற்சாலையிலிருந்தும் , மக்வெல் சாராய வடிகட்டும் தொழிற்சாலையிலிருந்தும் வெளியாகும் கழிவுகள் யாவும் கங்கையில்தான் கலக்கின்றன. எனவே, தண்ணீர் அசுத்தத்தைத் தடுக்கும் கழகம் (ஷ்ணீtமீக்ஷீ றிஷீறீறீutவீஷீஸீ சிஷீஸீtக்ஷீஷீறீ ஙிஷீணீக்ஷீபீ)  மேற்படி தொழிற்சாலைகள் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறது.
இன்னொரு பயங்கரமான உண்மை தாபா என்ற நகரில் நடத்திய பரிசோதனையில் வெளியாகி இருக்கிறது
அதாவது, இங்கு கழிவுநீரைக்கொண்டு உற்பத்தியாகும் காய்கறிகளிலுள்ள பூச்சிகளும், புழுக்களும் தண்ணீரில் வேக வைத்த பிறகுகூடச் சாவதில்லையாம்! எத்துணைக் கொடுமை!
பீகாரை அடுத்து கங்கை பாயும் மாநிலம் மேற்கு வங்கம் இங்கு சிமிதிஸிமி (சிமீஸீtக்ஷீணீறீ மிsறீணீஸீபீ திவீsலீமீக்ஷீவீமீs ஸிமீsமீணீக்ஷீநீலீ மிஸீstவீtutமீ) என்ற ஆராய்ச்சி நிலையம் இருக்கிறது. இதனுடைய ரகசிய அறிக்கையின்படி, ஹூக்ளி ஆற்றில் பிடிக்கப்படும் மீன்களைச் சாப்பிட்டால் பயங்கர விளைவுகள் ஏற்படும் என்று தெரிகிறது. காரணம், இந்த மீன்கள் எல்லாம் அந்த அளவுக்கு கழிவு, ரசாயனப் பொருள்களால் பாதிக்கப் பட்டுள்ளதே ஆகும். இந்த அறிக்கையை வெளியிட்டால் மக்களிடையே ஏற்படும் விளைவு களை எண்ணி அதிகாரிகள் இந்த அறிக்கையை இன்னும் ரகசியமாகவே வைத்திருக்கிறார்கள்.
கங்கை நதியினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நகரம் கல்கத்தாதான்! இங்கு கங்கை பாயும் சமவெளி யில் மட்டும் 296 தொழிற்சாலைகள் உள்ளன. இந்த ஆலைகளின் கழிவுப் பொருள்கள் அனைத்தும் கங்கையில் கலப்பதால் அதன் விளைவுகளை எண்ணிப் பார்த்தால் உள்ளம் நடுங்கவே செய்யும்,
மக்களின் சுகாதாரத்திற்குப் பயங்கரக் கெடுதலை விளைவிக்கும் கங்கையைப் புனித ஆறு என்றுமக்களை ஏமாற்றிப் பல்லாயிரம் பார்ப்பனர்கள் வயிறு பிழைத்து வருகின்றனர். இதைப் போலவே, மக்களின் பகுத்தறி வுக்குப் படுபயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் புராணப் புளுகுகளை சமயம், பக்தி என்ற பெயரால் பரப்பி இந்தியாவை மீளா அடிமைப்படுகுழியில்ஆழ்த்தித் தங்கள் வயிற்றை நிரப்புவதுடன், தங்கள் ஆதிக்கத்தையும் பலப்படுத்தி வருகின்றனர்.
- டாக்டர் ஹஷ்மீ
தமிழில்: ம.வீ.கி.சாமி
‘விடுதலை‘, 6.7.1985
-விடுதலை,21.5.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக