வியாழன், 21 நவம்பர், 2019

ரமண ரிஷி ?


*- மயிலாடன் -*

‘தினகரன்' வசந்தம் இணைப்பில் (17.11.2019) ‘‘நினைத்தாலே நடக்கும்!'' என்ற தலைப்பில் ரமணர் அற்புதம் என்று விலா வாரியாக வாரி கொட்டியுள்ளது.
‘‘பகவான் ரமணர் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந் தார். எளிய உணவுதான். தயிர்ச் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, ‘‘நார்த்தங்காய் ஊறுகாய் இருக்கிறதா?'' என்று கேட்டார். இல்லை என்று சொன்னதுமே எந்தப் புகாரும் இல்லாமல் சாப்பிட்டு எழுந்தார்.
ஆசிரம நிர்வாகிக்கு தகவல் போனது. அவர் தர்ம சங்கடப் பட்டார். உடனடியாக மதுரையில் இருந்த பக்தர் ஒருவருக்கு,  ‘‘ஒரு கூடை நார்த்தங்காய் உடனே அனுப்பவும்'' என்று கடிதம் எழுதினார்.
கடிதத்தைப் பார்த்த ரமண ருக்குக் கோபம் வந்தது (‘மகா னுக்கு' எல்லாம் கோபம் வர லாமோ!) ‘‘இவர்களுக்கெல்லாம் முக்தி, நார்த்தங்காயில் தான் கிடைக்கும் போலிருக்கு. இல் லேன்னா இதையெல்லாமா யார் யார் கிட்டேயோ கேட்டு லெட்டர் போடுவாங்க. நமக்கு வரணும்னு விதி இருந்தா, அதுவே வரும். உங்க இஷ்டம்போல ஆசிர மத்தை நடத்துங்க!'' என்று சொல்லிவிட்டு, அந்தக் கடிதத் தைத் தூக்கிப் போட்டார்.
இந்தச் சம்பவம் நடந்து கொண்டிருந்தபோதே பக்தர் ஒருவர் இரண்டு கூடைகளோடு ஆசிரமத்துக்குள் நுழைந்தார்.
அவரை சிரித்தவாறே எதிர்கொண்ட பகவான்,
‘‘என்ன கூடையில் நார்த்தங்காயா?'' என்று கேட்டார். (எல்லாம் சொல்லி வைத்து நடக்கும்போலும்!)
அந்தப் பக்தர் ரயில்வே துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர். ரயிலில் முக வரியின்றி பார்சலுக்கு ஏற்றப் பட்டிருந்த இரண்டு கூடைகளைத் தான் ஆசிரமத்துக்கு எடுத்து வந்திருந்தார். அதற்குள் என்ன இருக்குமென்றுகூட அவருக்குத் தெரியாது. (இது முறைகேடு அல்லவா!)

அந்தப் பக்தர் சந்தோஷத் தோடு ஒரு கூடையைத் திறந்து பார்த்தார்.
நார்த்தாங்காயேதான். இன்னொரு கூடையிலே ஆரஞ்சுப் பழம் இருக்கலாம். ஆரஞ்சிலே ஊறுகாய் போட்டா சகிக்காது; இரண்டு பழங்களும் கலந்துடாம கவனமா இருங்க'' என்றார் ரமணர்
*‘‘இதெல்லாம் அற்புதமா, இல்லை என்றால் தற்செயலா நடந்ததா சாமி?''* என்று நடந்த அத்தனை சம்பவங்களையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஆசிரம நிர்வாகி  கேட்டார்.

‘‘அறிஞர்களின் இதயங்களில் பொக்கிஷமாக விளங்கும் பிரக்ஞை சிந்தாமணியாகும். கற்பகவிருட்சத்தைப்போல அது நினைக்கப்படுவது அத்தனையும் நிறைவேற்றி வைக்கும்'' என்று யோக வாசிஸ்டத்திலிருந்து ஒரு பாடலைச் சொன்னார்'' இதுதான் ‘தினகரன்' வசந்தம் தரும் செய்தி.

இந்தப் பிரக்ஞையாபதிக்கு ஆசிரமத்தில் நார்த்தங்காய் ஊறுகாய் இருக்கிறதா? இல்லையா? என்பதுகூடத் தெரியவில்லை என்பதுதான் விதர்ப்பமான கேள்வி.
அது சரி, இப்படிப்பட்ட மகான் மரணம் அடைந்தது எப்படி? குத்திக் காட்டுவது நம் நோக்கமன்று. ஆனால், மகானு மல்ல - புடலங்காயும் அல்ல. சராசரி மனிதனுக்கு ஏற்படுவது போன்ற பொல்லா நோய் வந்து மரணமடைந்ததுதான் ‘மகான்' என்ற சொல்லாடலைத் தோலுரிக்கிறது.
ரமணரின் முதுகுத்துண்டில் என்புருக்கி நோய் இருந்தது. பிறகு முதுகுதண்டுவடத்தில் சர்கோமா எனும் புற்றுநோய்க் கட்டி புறப் பட்டது. நான்கு முறை அறுவை சிகிச்சை செய்து அகற்றியும், அகலாமல் வளர்ந்த வண்ணம் இருந்தது. கதிரியக்கச் சிகிச் சைக்கும் அது கட்டுப்படவில்லை. மூலிகை சிகிச்சைக்கும் முடங்க வில்லை. ஹோமியோபதியையும் ஏற்றுக் கொள்ளவில்லை. நோய் முற்றிய நிலையில், 14.4.1950 அன்று மாலை மரணமடைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதற்குமேல் வாசகர் சிந்தனைக்கு....!

*நன்றி : "விடுதலை" நாளேடு 18.11.2019*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக