திங்கள், 22 மார்ச், 2021

கிறிஸ்தவ பைபிள் புருடாக்களும் அதை மூறியடித்த அறிவியலும்

கிறிஸ்தவ பைபிள் புருடாக்களும் அதை மூறியடித்த அறிவியலும் 
******************************************
பூமி உருண்டை அல்ல தட்டை
பூமிக்கு அஸ்திவாரம் 
பூமிக்கு தூண்கள் 
பூமிக்கு நான்கு மூலைகள் 
சூரியன் தான் நகருகிறது பூமியல்லவாம்!!
விஞ்ஞான அறிவிற்கு புறம்பான 
பைபிள்  காமடிகள்
கிறிஸ்துவர்கள் வெட்கி தலை குனிய செய்யும் புனித‌ பைபிளின் வசனங்கள்  சில‌ இங்கே 
பூமிக்கு அஸ்திவாரம்? பூமிக்கு தூண்கள் உண்டு? பூமியை அஸ்திவாரங்களின் மேல் கர்த்தர் அசையாமல் நிலை நிறுத்தி அமைத்திருக்கிறார். 
பூமி சுழலுவதில்லை. கேட்பதற்கே சிரிப்பை வரவைக்கிறது 

பைபிள். சங்கீதம் . 104 :5
பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள் மேல் அதை ஸ்தாபித்தார்.

பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின் மேலாவது, சமுத்திரத்தின் மேலாவது, ஒரு மரத்தின் மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக்கண்டேன்.
வெளி 7:1 
சூரியன் தான் நகறுகிறது. பூமியல்ல‌ 
பைபிள்: யோசுவா .10:13
அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுமட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா; அப்படியே சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒருபகல் முழுதும் நடுவானத்தில் நின்றது.

க‌ல்வி அறிவு ப‌டைத்த‌ அத்த‌னை பேருக்கும் சூரியன் சுழலுவதில்லை பூமிதான் சுழ‌ன்று வ‌ருகிற‌து என்ற‌ உண்மை தெரியும்.
கோபெர்னிக‌ஸ் என்ப‌வர் இந்த‌ விஞ்ஞான‌ அறிவிய‌ல் உண்மையை முத‌ன்முத‌லாக‌ உல‌கிற்கு அறிவித்த‌ பொழுது , இந்த உண்மை புனித பைபிளுக்கு எதிரிடையாக இருந்தபடியால் கிறிஸ்த‌வ‌ ம‌த‌ குருக்க‌ள் கூக்குரல் எழுப்பி அவ‌ரை  தூற்றினார்க‌ள்.அத‌ன் தொட‌ர்பாக‌ கோபெர்னிக‌ஸ் அவ‌மானப்ப‌டுத்த‌ப்ப‌ட்டு சித்த்ர‌வ‌தை செய்யப்ப‌ட்டார்.
ஜியார்டானோ புருனோ என்ற‌ இத்தாலிய‌ர் கி.பி.1600 க‌ளில் பூமி சூரிய‌னை சுழ‌ன்று வருகிற‌து என‌ கூறிய‌த‌ற்காக‌ ரோம் நக‌ரில் சர்ச்சினால் உயிருடன் எரிக்கப்பட்டார்
பூமி உருண்டை என்னும் அறிவுபூர்வமான-ஆக்க ரீதியான கலிலியோவின் ஆராய்ச்சி உண்மைக் கருத்தை ஏற்றுக் கொண்டால் கிறித்தவ மதமும், பைபிளும்  அடிபட்டு ஆட்டங்கண்டு போகுமே  என்று எண்ணிய கிறித்தவ மத வெறியர்கள் தங்கள் மதக் கருத்துக் கோட்பாட்டைக் காக்கும் பொருட்டு அழியாத உலகப் புகழ் பெற்ற மாபெரும் விஞ்ஞானி அறிவியல் ஆய்வறிஞன் கலிலியோவை அடித்தே கொன்றார்கள் 
பூமி தட்டை!! பூமிக்கு அஸ்திவாரம் உண்டு,!! பூமிக்கு தூண்கள் உண்டு!! பூமிக்கு நான்கு மூலைகள் உண்டு.!! சூரியன் தான் நகருகுறது. பூமியல்ல‌ !! என்ற கடவுளின் வாசகங்களான  பைபிளின் இந்த வசனங்களை  நாங்கள்தான்  கல்வி அறிவை  புகட்டினோம் என்பவர்கள் தங்கள் கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பார்களா?
- தினேஷ் டுகே, முகநூல் பதிவு, 22.3.21

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக