ஞாயிறு, 4 நவம்பர், 2018

மதமாற்றத்துக்கு யார் - எது காரணம்?



மத மாற்றத்துக்கும், கீழ்மைக்கும் யார் பொறுப்பாளி? இந்தியாவிலுள்ள ஏழை மக்களிடையில் முகமதியர்கள் அதிகம் இருக்கின்றார்கள். அதற்குக் காரணம் என்ன? கத்தியையும், வாளையும் காட்டிப் பயமுறுத்தி இந்துக்கள் முகமதியர்களாக மாற்றப்பட்டார்கள் என்று சொல்வது அறிவுடைமை ஆகாது.

நம்நாட்டிலுள்ள ஜமீன்தார்களிடமிருந்தும், புரோகிதர் களிடமிருந்தும் சுதந்திரம் பெற்று வாழ்வதற்குத்தான் இந் துக்கள் முசுலிம் மதத்துக்கு மாறினார்கள்.

வங்காளத்தில் விவசாயிகளுக்கிடையில் இந்துக்களை விட முசுலிம்கள் அதிகமாக இருப்பதைக் காணலாம். அதற் குக் காரணம் என்னவென்று தெரியுமா? அக்காலத்தில் விவ சாயிகளுக்கிடையிலிருந்த ஜமீன்தார்களுடைய கொடு மையிலிருந்து விலகிக் கொள் வதற்காக இசுலாம் மதத்துக்கு மாறியுள்ளார்கள்.

தோட்டிகளையும், பறையர்களையும் இன்றைய இழி நிலைக்குக் கீழே இறக்கிக் கொண்டு வந்தவர்கள் யார்? அவர்கள் கீழ்மை அடைவதற்குப் பொறுப்பாளிகள் யார் என்னும் கேள்வி எழுமாயின் அதற்கு விடை வருமாறு:

அவர்கள் கீழ்நிலை அடைவதற்கு ஆங்கிலேயர்கள் பொறுப்பாளிகள் அல்லர்.

அவர்கள் கீழ்நிலைக்கு வந்ததற்கு நாமே பொறுப் பாளிகளாவோம். நம்முடைய துன்பத்துக்கும், நம்முடைய கீழ்மைக்கும் நாம் தாம் பொறுப்பாளிகள், மதத்தில் போலிகளும், அவநம்பிக்கை உடையவர்களும் இருக்கிறார்கள்.

மேலும் நாம் சோம்பேறிகளாக இருக்கின்றோம். செயல்புரிய வேண்டும் என்ற உற்சாகம் நம்மிடம் இல்லை. நம்மிடம் ஒற்றுமையும் இல்லை. ஒருவரை ஒருவர் நேசிக்கும் தன்மையும் இல்லை. நம்மிடம் சுயநலம் மிகவும் அதிகம். கீழ்நிலையிலுள்ள மக்களைப் புறக்கணிப்பது மதமாற்றத்துக்கு ஒரு காரணமாகும்.''

(தர்மசக்கரம் - துந்துபி ஆண்டு, கார்த்திகை மாதம் சக் கரம் -31 ஆரம் - 10).

இவ்வளவையும் சொல்லி இருப்பவர் யார் தெரியுமா?

அமெரிக்காவின் சிகாகோவில் இந்து மதம்பற்றி உரையாற்றிய அவருக்கு 125 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடும் இந்துத்துவாவாதிகளே! - அந்த விவேகானந்தர் தான்!

துட்டுக் கொடுத்துதான் மத மாற்றம் நடைபெறுகிறது என்று பேட்டி தருகிறார் திருவாளர் இராம.கோபாலர். அமெரிக்கா வரை அன்று இந்து மதத்தின் பராக்கிரமங் களைப் பறைசாற்றி வந்தவர் விவேகானந்தர் தான் இவ்வாறு கூறியுள்ளார்! முடிந்தால் பதில் சொல்லுங்கள் - பார்க்கலாம்

- விடுதலை ஞாயிறு மலர், 20.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக