வியாழன், 26 மே, 2022

பிரசவ வேதனையும்-மதமும்!

 


மருத்துவக் கலை விஞ்ஞான அடிப் படையில் அமையத் துவங்கிய காலத்தில்தான் மயக்க மருந்து களும் (Anaesthetics) அறிமுகமா யின. இன்னும் குறிப்பாகச் சொல் லப் போனால் அறுவை சிகிச்சை முறை நடைமுறைக்கு வந்த போது தான் மயக்க மருந்துகளும் பயன் படுத்தப்பட்டன. இதற்கு முன்பும் மயக்க மருந்துகள் ஓரளவு பயன் படுத்தப்பட்டது உண்மையே. ஆனால், சிகிச்சையின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக மயக்க மருந்து ஆகியது இப்போது தான்.

நோயின் வேதனையில் மனிதன் துன் புறக்கூடாது; அவனது வேதனையை அவன் உணராமல் இருக்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணம் காரணமா கவே இம்மருந்துகள் பயன்படுத்தப்பப்பட்டன.

இம்மருந்துகள் மிகவும் பயன்பட்டது பிரசவத்துறையில்தான், மனித குலத்தின் வேதனை மிக்க அனுபவமாகப் பிரசவம் கருதப்பட்டது. அதற்கு மத சம்பந்தமான தொடர்பும் அமைக்கப் பட்டிருந்தது. அதா வது பிரசவ வேதனை என்பது பெண்க ளுக்கு ஆண்டவனால் விதிக்கப்பட்ட தண்டனைகளில் ஒன்று; அதை மறக்கச் செய்யும் வண்ணம் யாராவது மயக்க மருந்து பயன்படுத்தினால் அது ஆண்டவனைத் தூஷித்ததற்குச் சமமாகும் என்று மதவாதி கள் கூறிவந்தார்கள்.

வேதனையை மறக்கக்கூடிய மயக்க மருந்து கொடுக்க முன்வரும் மருத்துவர் மட்டுமின்றி அம்மருந்தைத் துணிச்சலாக உட்கொள்ள முன்வரும் நோயாளிகள், குறிப்பாக பிரசவ வேதனையில் துடிக்கும் தாய்மார்களும் கூட மதவாதிகளின் தண் டனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

1591-ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறோம். பிர சவ வேதனையில் துடிதுடித்த பெண் ஒருத்தி மருத்துவரிடம் மன்றாடி தனக்கு மயக்க மருந்து தரும்படி கேட்டுக் கொண்டாள். இத்தகவல் மதத் தலைவர்களுக்குத் தெரிந்து போயிற்று.  அப்பெண் மீது தெய்வ நிந்தனைக் குற்றச்சாட்டைச் சுமத்தி அவருக்கு மரண தண்டனை விதித்தார்கள் அந்த மதவெறி யர்கள். பிரசவ வேதனை யில் துடிக் கத் துடிக்க அப்பெண்மணி மனித மத வெறியர்களால் உயிரோடு எரிக்கப் பட்டாள். எத்தனைக் கோரம்! எத்தனைக்  கொடூரம்!! (Dalyell) என்பவர் எழு திய Darker Superstitions of Scotland என்ற நூலில் இது விளக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு மதவெறியர்கள் கூறிய வாதத்துக்குக் கிறிஸ்தவ வேதாகமத்தில் ஆதாரம் உண்டா?

பைபிளில் ஆதிமனிதன் ஆதாம், ஆதி மனுஷி ஏவாள் பற்றிய ஏதேன் தோட்டத்துக் கதை இங்கே மதவாதிகளின் ஆதாரமாகப் பயன்படுகிறது.

சும்மா கிடந்த சிட்டுக் குருவிக்குச் சோற்றைப் போட, அது கொண்டையைக் கொண்டையை ஆட்டிக் கொண்டு கொத்த வந்த கதை போல சும்மா இருந்த ஆதாமிற்கு ஏவாள் பாலுணர்ச்சியை உண்டாக்க (நன்மை - தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைத் தானும் புசித்து அவனுக்கும் கொடுத்தது. வேறென்ன?) அதன் விளை வாக தேவன் சாபம் கொடுக்கிறார்.

ஏவாளுக்குக் கொடுத்த சாபம் என்ன தெரியுமா? நீ வேதனையோடே பிள்ளை பெறுவாய்! என்பது தான் அந்தச் சாபம்.

பெண்ணென்று பிறந்துவிட்டால் அவள் தாய்மைப் பேறு பெறவேண்டும் என்றால் வேதனையில்லாமல் அது நடக் காது என்று தேவன் சாபம் கொடுத்திருக் கும்போது, அந்த வேதனையே வரப்பிர சாதம் என்று தலைவணங்கி ஏற்பது தான் கடமை; தர்மம். இதை விடுத்து வேத னையை உணராமல் தடுக்க யார் முயன் றாலும் அது தேவ நிந்தனை ஆகும். தேவகோபத்துக்குப் பாத்திரமாவது முறை யல்ல; அல்லவா? - இவ்வாறுதான் அன் றைய மதவாதிகள் நம்பினார்கள்! அதன் விளைவாகவே ஸ்காட்லாந்து கர்ப்பிணி எரிக்கப்பட்டாள்.

மேற்கண்ட சாபம் - பைபிளில் ஆதியாகமம் 3ஆவது அத்தியாயம் 16ஆம் வசனத்தில் உள்ளது.

வியாழன், 19 மே, 2022

'காஞ்சி மகானின்' ''சபலம்!''


 'குமுதம்வார இதழ்  கிட்டத்தட்ட ஆன்மிக இதழாகவே மாறிவிட்டதுஒரு தமிழன் கையில் இருந்து வளர்ந்து வந்த குமுதம்இப்பொழுது ஒரு பார்ப்பனர் கையில் பலமாக சிக்கினால் என்ன ஆகும்?

'காஞ்சி மகான்புகழ் பாடத்தானே ஆரம்பிக்கும்ஒவ்வொரு வார இதழிலும் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் புகழ் அற்புதங்களை, 'அற்புதமாகக்கற்பனைப்படுத்தி சரடு சரடாக அள்ளி விடுவதுதான் அதன் பிழைப்பு.

ஒரு கதையைக் கேளுங்கள்:

''பரமாச்சாரியார் பட்டினியாய் இருந்தது ஏன்?'' என்பது தலைப்பு. ('குமுதம்', 30.3.2022, பக்கம் 96-98) திடுதிப்பென சங்கராச்சாரியார் உபவாசம் இருக்க ஆரம்பித்தாராம்இரண்டுமூன்று நாட்களாய் உபவாசம் தொடர்ந்ததாம்.

காஞ்சிமடப் பக்தர்கள் படபடத்தார்களாம்.

பெரியவர் இப்படி சாப்பிடாம இருக்கிறப்போ சிறீமடத்துல உள்ள நாம வேளை தவறாம சாப்பிடுறதை நினைச்சா மனமே கலங்குது'' - இப்படி ஆளாளுக்கு ஒன்றைப் பேசி மனம் கலங்கி குழம்பி வருந்தினார்களாம். (ஆனால்பக்தர்கள் சாப்பிடுவதை மட்டும் நிறுத்தவில்லை என்பது முக்கியம்).

''பெரியவாஎங்களில் யார் என்ன தப்பு செய்திருந்தாலும் மன்னியுங்கள்பிட்சை (உணவுஎடுத்துக் கொள்ளுங்கள்'' என்று பக்தர்கள் கெஞ்சினார்களாம்.

காஞ்சியார் என்ன பதில் சொன்னார்?

''தினமும் சந்திர மவுலீஸ்வர பூஜையில் சுவாமிக்கு நைவேத்யம் செய்யற சமயத்துல அந்தப் பிரசாதத்தோட பேரைச் சொல்றது பூஜா விதிபோன வாரத்துல ஒரு நாள் அப்படி நைவேத்யம் செய்தப்போ அந்தப் பட்சணத்தின் பெயரைச் சொன்னபோதுஎதிர்பாராத விதமா அதன் ருசியை நினைச்சி என் நாக்கில் ஜலம் வந்திடுத்துஅந்த நொடியே,ஒரு சன்யாசி இப்படி நாவடக்கம் இல்லாமல் இருக்கலாமாஅந்தத் தவறுக்குத்தான் இந்த உபவாசம்!'' என்றாராம்.

ஆககாஞ்சி மகான் ஜெகத்குரு சபலத்திற்கும்நாவடக்கம் இன்மைக்கும் உரியவர்தான்இதில் என்ன பெரிய மகான் - ஜெகத்குரு - வெங்காயம்!

மயிலாடன்

புதன், 30 மார்ச், 2022

வெற்றிலையில் ஏன் காம்பை கில்லிவிட்டு வெற்றிலை போடுகிறோம் யாருக்காவது தெரியுமா????


இராமாயணத்தில் உள்ள உட்கதையில் வரும் கதைதான் இந்த கதை

தேவேந்திரனை அழைத்து மன்மதன் விருந்து ஒன்றை கொடுத்தான்

அந்த விருந்து மிகவும் தடபுடலாகவும் ஆட்டமும் பாட்டமுமாக இருந்தது

திலோதமா ஊர்வசி ரம்பா போன்றவர்களின் ஆட்டம் பாட்டம் படு ஜோராக இருந்தது "படு ஜோர்னா நிர்வான நடனம்" ஒரே குஜால்தான் 

ஒரு வழியாக விருந்து முடிந்தது
விருந்து முடிந்த கையோடு மன்மதன் தேவேந்திரனுக்கு தாம்பூலம் கொடுத்தார் மன்மதன்

அந்த தாம்பூலத்தில் உள்ள வெற்றிலையை ருசிபார்த்தார் தேவேந்திரன் 

வெற்றிலையின் ருசியை உணர்ந்த தேவேந்திரன் இது போல ருசியை நான் அனுபவித்தது இல்லை என்று சொல்ல இனிமேல் இந்த வெற்றிலை தேவலோகத்திர்க்கு தேவை என்றார் 

தேவேந்திரன் மன்மதனிடம் ஒரு கோரிக்கையை வைத்தார் நீங்கள் எப்படியாவது இந்த வெற்றிலையை தேவலோகத்திர்க்கு அனுப்பி வைக்கவேண்டும் என்றார் 

 தேவேந்திரனின் கோரிக்கையை "ஆசையை" மன்மதன் ஏற்றுக்கொண்டார் எனவே தினமும் தேவலோகத்திர்க்கு வெற்றிலையை பணியாட்க்கள் மூலம் அனுப்பி வைத்தார்

வெற்றிலையை எடுத்துகொண்டு சென்ற பணியாட்க்கள் திரும்பி வரும்போதும் அதே வெற்றிலையை எடுத்து வருகிறார்கள்
தேவலோகம் போவதர்க்குள் அந்த வெற்றிலை வாடிவிடுகிறது என்று

வரும் வெற்றிலை வாடிபோய் இருந்தால் அந்த வெற்றிலை வேண்டாம் என்று தேவேந்திரன் திருப்பி அனுப்பிவிடுகிறான்

இதனை கேட்டு கவலை அடைந்த மன்மதன் நாட்டில் தன்டோரா போட சொல்கிறார் யார் வெற்றிலையை வாடாமல் தேவலோகம் கொண்டுபோய் சேர்க்கிறார்களோ அவர்களுக்கு தக்க சன்மானம் {பரிசு} வலங்கப்படும் என தன்டோரா {விளம்பரம்} போட உத்தரவு போடுகிறார்  

இதை கேள்விபட்ட ஒரு பெண் ஒருவள் இந்த வெற்றிலையை நான் கொண்டுபோய் சேர்க்கிறேன் என்றாள்

மன்மதனுக்கு ஒரு சின்ன சந்தேகம் வந்தது யார் யாரோ பெரிய பெரிய பயில்வான் கூட எடுத்து சென்று தோல்வி அடைந்துவிட்டான் நீ எப்படியம்ம எடுத்து செல்வாய் என்று கேட்க அந்த பெண் உங்களுக்கு ஏன் அந்த கவலை நான் எடுத்து செல்கிறோன் என்று சொல்லி வெற்றிலையை எடுத்து செல்கிறாள் 


ஒரு வழியாக அந்த பெண் தேவலோகம் போய் சேர்ந்தாள் அவளை கண்ட தேவேந்திரனுக்கு ஆச்சரியம் பெரிய பெரிய பயில்வான் கூட எடுத்துகொண்டு வரமுடியவில்லை நீ எப்படி எடுத்து வந்தாய் என்று கேட்க நீங்கள் முதலில் எனக்கு கொடுக்க வேண்டிய பரிசை கொடுங்கள் நான் சொல்கிறேன் என்று சொல்கிறாள் 
உடனே தேவேந்திரன் அவளுக்கு சேர வேண்டிய பரிசை கொடுக்க உத்தரவுவிடுகிறார்

பரிசை பெற்றுக்கொண்ட அந்த பெண் வெற்றிலைய்டை வாடமல் எப்படி எடுத்து வந்தேன் என்று தேவேந்திரனுக்கு சொல்கிறாள்

மன்னரே வெற்றிலையின் காம்பை எப்போதுமே "ஈரப்பதம்" உள்ள இடத்தில் வைத்திருந்தால் வெற்றிலை வாரமல் வதங்காமல் இருக்கும்
எனவேதான் நான் என் உடம்பில் ஈரப்பதம் உள்ள இடத்தில் வைத்து எடுத்து வந்தேன் என்றால்
இதனால்தான் வெற்றிலை வாடாமல் இருந்தது என்றால் 

இதை கேட்ட தேவேந்திரன் அடிபாவி அங்க பொய் இதை வைத்திருந்தியா? என கோவம் கொள்ள 

உடனே நாட்டில் ஒரு உத்தரவை போட்டான் இந்த வெற்றிலையை "அந்த" இடத்தில் வைத்ததாள் இனி இங்கே யாரும் வெற்றிலை  போடக்கூடாது என சொல்லி உத்தரவிட்டார் 

பூலோகத்தில் போடுவார்களே அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்க அதர்க்கும் ஒரு உத்தரவை போட்டார் 

அசிங்கமான"அந்த"இடத்தில் வைத்திருந்ததால் இனி  வெற்றிலை போடுகிறவர்கள் காம்பை கிள்ளிவிட்டு வெற்றிலை போட வேண்டும் என்று உத்தரவு போட்டார்

எனவேதான் நம் மக்கள் வெற்றிலையை போடும்போது காம்பை கிள்ளிவிட்டு போடுகிறார்களாம்
வெறும் காம்பை மட்டும் திண்பவரும் உண்டு மறந்துவிடாதீர்

எனவே தோழர்களே இந்த கதைகளை பாருங்கள் உட்க்கதையாக இருந்தாலும் அதிலும் எப்படிப்பட்ட மோசமான ஆபாச கதைகள் நீங்கள் பின்பற்றும் ஒவ்வொரு இந்துமத பண்டிகைகளிலும் ஆபாசம் நிறைந்து இருக்கிறது   தெரிந்தும் இதை நாம் பின்பற்றலாமா? சிந்தியுங்கள் நன்றி வணக்கம்


                               -ஈரோட்டு பூகம்பம்-
முகநூல் பக்கம்

செவ்வாய், 21 டிசம்பர், 2021

மார்கழி மாதம் - கொக்கோகப் பஜனை!


ஞாயிறு, 16 டிசம்பர் 2012 14:58 
மார்கழி மாதம் இன்று பிறந்து விட்டது. கோயில்களில் எல்லாம் திருப்பாவைப் பாடல்கள் கத்த ஆரம்பிக்கும் (உச்சநீதிமன்ற ஆணையை யும்மீறி கூம்பு ஒலி பெருக்கியையும் பயன்படுத்து வார்கள்). ஆண்டாள் என்ற ஒரு பக்தை கட வுளையே புருஷனாக ஆக்கிக் கொள்ள வரித்துக் கொண்டு அவனோடு புணர வேண்டும் என்று விரகதாபம் எடுத்து அலைந்து புலம்பிய கேவலம் இது!
கடவுளாகிய கண்ணன் மனைவியின் மார் பகத்தில் வாய் வைத்துக் கிடந்தான் என்றெல் லாம் பாடுகின்ற ஒருபெண்மணிதான் வைணவத் தில் தலை சிறந்த பக்தைப் பெருமாட்டி!
குத்துவிளக் கெரிய
கோட்டுக்கால் கட்டிலின்மேல்
மெத்தென்ற பஞ்ச
சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல்
நப்பின்னை கொங்கைமேல் வாய்
வைத்துக் கிடந்த மலர் மார்பா!
என்று பாடுகிறார் ஆண்டாள்.
இதுகூட பரவாயில்லை. இதே  ஆண்டாளே நாச்சியார் திருமொழி என்று பாடியிருக்கிறாள்.
முத்தன்ன வெண்முறுவல்
செவ்வாயும், முலையும்
அழகழிந்தேன் நான்
புணர்வதோர் ஆசையினால் - என்
கொங்கை கிளர்ந்து குமைத்து
குதூகலித்து ஆவியை ஆகுலம்
செய்யும் அங்குயிலே
என்று பாடியுள்ள கேவலத்தை என்ன சொல்ல!
நல்முத்துக்கள் போன்ற பற்களைப் பெற்றி ருந்தேன். சிவந்த வாயையும், மார்புகளையும் பெற் றிருந்தேன். கண்ணனாகிய காதலன் என்னை வந்து புணராத காரணத்தால் என் அழகுகள் எல்லாம் கெட்டு விட்டன என்று காமவெறி பிடித்தவளாய்க் கதறுகிறாள். கொக் கோகம் பிச்சை வாங்க வேண்டும் போங்க...
இந்தக் கேவலத்தை ஆபாசத்தைக் கண்டு சகிக்காமல் வெட்கப்பட்டதாலோ என்னவோ, பழுத்த வைணவரான திரு. ராஜகோபாலாச்சாரி யார் (ராஜாஜி)  ஆண்டாள் என்னும் பக்தையே இருந்ததில்லை என்று போட்டாரே ஒரு போடு - பார்க்கலாம்.
ஆண்டாள் என்னும் ஸ்திரி இருந்ததே இல்லை. நாலாயிரதிவ்வியப் பிரபந்தத்தில் ஆண்டாள் பாடியதாகச் சொல்லப்படும் பாசுரங் கள் அவர் பாடியவை அல்ல.
பெரியாழ்வார் என்னும் ஆழ்வார் சில பாசுரங்களைப் பாடி, அப்பாசுரங்களை ஆண்டாள் என்னும் ஒரு பெயரால் வெளிப்படுத்தினார் என்று திரிவேணி இதழில் (1946 செப்டம்பர்) எழுதி விட்டார்.
பக்தி அப்படியே மனதைக் கட்டுப்படுத்து கிறதாம். கடவுளைக் கணவனாக ஆக்கிக் கொண்டு அவனோடு கட்டிப் புரள வேண்டும் - புணர வேண்டும் என்பதுதான் மனதை ஒருமுகப்படுத்தும்  யோக்கியதையா?
இந்த மாதம் பூராவும் இந்தக் கேவலமான ஆபாசத் தெருப் புழுதிகளைத்தான் பஜனையாகப் பாடப் போகிறார்கள்.  இதுபற்றி எல்லாம் எங்களைத் தவிர யார் அம்பலப்படுத்தப் போகிறார்கள்?
வெட்கம்! மகா வெட்கம்!!
(குறிப்பு: நாம் இப்படி எழுதுகிறோம். அண்ணா பெயரையும், திராவிடப் பெயரையும் வைத்துக் கொண்டுள்ள அண்ணா தி.மு.க.வின் நமது எம்.ஜி.ஆர் ஏடு திருப்பாவை, திருவெம்பாவை தூக்கிப் பிடித்து எழுதுகிறது)
விடுதலை 16.12.12 n1

வெள்ளி, 19 நவம்பர், 2021

கூறுவது என்ன? நடப்பது என்ன?

 


பைபிள்

ஏசு கிறிஸ்து ஒருவன் வலது கன்னத்தில் அடித்தால் இடது கன்னத்தையும் காட்டு என்று தான் கூறியிருக்கிறார் தனது பைபிளில்அந்தப் பைபிளை அன்றாடம் படித்து வருபவர்கள் தான் துப்பாக்கி முதல் அணுக்குண்டு வரை உற்பத்தி செய்து பல ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றனர்.

குர்ஆன்

முகமது நபி சகல மக்களையும் சமமாகக் கருது என்றுதான் கூறியுள்ளார்அதே குர்ஆனை அன்றாடம்  படித்து வரும் பாகிஸ்தான் மக்கள் தான் மத வெறி கொண்டு பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் அல்லாத மக்களைக் கொன்று குவித்து வருகின்றனர்.

வேதம்

ஹிந்து மதவேத சாஸ்திரங்களும் சகல ஆத்மாக்களும்கடவுள் அம்சம்தான்ஒரே ஆத்மாதான் எல்லா உடலிலும் இருக்கிறதுஆகவே அனைவரையும் கடவுளாகத்தான் பாவிக்க வேண்டும் என்று போதிக்கின்றன.

அப்படிப்பட்ட ஹிந்துக்கள் தான் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவித்தனர்மற்றும் இந்து மதத்தைச் சேர்ந்த உயர்ஜாதிப் பார்ப்பனர்கள்தான் உலக உத்தமர் காந்தியாரைக் கொல்லச் செய்தவர்கள்.

 10.4.1948-  குடிஅரசிலிருந்து....                       

வியாழன், 18 நவம்பர், 2021

தேவர்கள் பிறப்பு பட்டியல்

சிங்கத்திற்கு  சிங்கமகாசூரன் பிறந்தான்
புலிக்கு   வீரீஞ்சிகன் பிறந்தான்
யானைக்கு விநாயகன் பிறந்தான்
குதிரைக்கு அஸ்வத்ராமன் பிறந்தான்
கழுதைக்கு காங்கேயன் பிறந்தான்
கரடிக்கு ஜம்புவந்தன் பிறந்தான்
எருமைக்கு மகிஷன் பிறந்தான்
பசுவுக்கு கவுதமரிஷி பிறந்தான்
ஆட்டுக்கு அசமுகி பிறந்தான்
மானுக்கு ரிஷ்யசீருங்கன் பிறந்தான்
நாய்க்கு சவுநகன் பிறந்தான்
நரிக்கு கேசகம்பலன் பிறந்தான்
பன்றிக்கு நரகாசூரன் பிறந்தான்
குரங்குக்கு சம்புகன் பிறந்தான்
மயிலுக்கு கண்ணுவன் பிறந்தான்
கிளிக்கு சுகர் பிறந்தான்
பட்சிக்கு சகுனி பிறந்தான்
ஆந்தைக்கு களிநாதன் பிறந்தான்
தவளைக்கு மாண்டவ்யன் பிறந்தான்
மீனுக்கு மச்சஹந்தி பிறந்தான்
பாம்புக்கு சோமாஸ்வன் பிறந்தான்
மண்டுகத்துக்கு மண்டோதரி பிறந்தாள்
பர்வதத்திற்கு பார்வதி பிறந்தாள்
மலைக்கு வசுவதத்தன் பிறந்தான்
துரோனியில் துரோணன் பிறந்தான்
கமண்டலத்தில் அகஸ்தியன் பிறந்தான்
ஆற்றில் பீஷ்மன் பிறந்தான்
காற்றுக்கு பீமன் பிறந்தான்
புற்றில் வால்மீகி பிறந்தான்
குட்டையில் ஸ்கந்தன் பிறந்தான்
தாமரையில் பத்மை பிறந்தான்
அண்டத்தில் வாதன் பிறந்தான்
கோபக்கணலில் லட்சுமி பிறந்தாள்
சூரியனுக்கு கர்ணன் பிறந்தான்
சந்திரனுக்கு அரிச்சந்திரன் பிறந்தான்
செவ்வாய் கோளுக்கு தோஷன் பிறந்தான்
புதன் கோளுக்கு புரூரவா பிறந்தான்
வியாழன் கோளுக்கு ஜகன் பிறந்தான்
சுடலை சாம்பலில் புரீசீரவன் பிறந்தான்
சுடலை எலும்பில் சல்லியன் பிறந்தான்
முகத்தில் பிராமணன் பிறந்தான்
தோளில் சத்திரியன் பிறந்தான்
தொடையில் வைசியன் பிறந்தான்
காலில் சூத்திரன் பிறந்தான்
வாயில் வேதவல்லி பிறந்தாள்
மூக்கில் அஸ்வினி பிறந்தாள்
மனதில் மன்மதன் பிறந்தான்
தொப்பிளில் வீரவாகு பிறந்தான்
கொட்டாவியில் செந்தூரன் பிறந்தான்
தும்மலில் தூபன் பிறந்தான்
நிழலில் சுந்தரன் பிறந்தான்
கண்ணீரில் வானரன் பிறந்தான்
உந்திகமலத்தில் பிரம்மன் பிறந்தான்
வலது கால் விரலில் கக்கன் பிறந்தான்
இடது கால் விரலில் தாணி பிறந்தான்
கை பெருவிரலில் விஷ்ணு பிறந்தான்
ரோமத்தில் ரோமாஞ்சன் பிறந்தான்
பேய்க்கு காந்தாரி பிறந்தாள்
கலியுகத்திற்கு சனீஸ்வரன் பிறந்தான்
காசீப முனிவனுக்கு சூரியன் பிறந்தான்
விஷ்ணுவுக்கு ஐயப்பன் பிறந்தான்
நாரதனுக்கு 60 ஆண்டுகள் பிறந்தது
ஊர்வசிக்கு விசுவாமித்திரன் பிறந்தான்
மேனகைக்கு சாகுந்தலை பிறந்தாள்
வண்ணாத்திக்கு நாரதன் பிறந்தான்
புலைச்சிக்கு சாங்கியன் பிறந்தான்
பார்பனத்திக்கு கிருஷ்ணன் பிறந்தான்
- பழ.பிரபு, முகநூல் பதிவு, 18.11.2013

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

கிருஷ்ணன் பற்றிய புதிர்கள்



பெண்கள் அவசியம் படிக்க வேண்டும்.

மகாபாரதத்தின் கதாநாயகன் கிருஷ்ணன்.சரியாக  சொல்லவேண்டுமானால் 
கௌரவர்கள்-பாண்டவர்கள் 
சம்பந்தட்டதே மகாபாரதக் கதையாகும்.தம் மூதாதையரின் அரசாட்சி உரிமைக்காக இவ்விரு அணியினர் மேற்கொண்ட யுத்தக் கதையே மகாபாரதக் கதையாகும்.  
அவர்கள் தான் இக்கதையின் பிரதான பங்கினராய் இருந்திருக்க வேண்டும்.ஆனால் அப்படி தெறியவில்லை.கிருஷ்ணன் தான் கதாநாயகன்.இது வினோதமாய் உள்ளது.மேலும் கிருஷ்ணன் கௌரவர்கள் பாண்டவர்கள் காலங்களில் வாழ்ந்திருந்த ஆளாகவும் தெறியவில்லை.

கிருஷ்ணன் நாடான்ட பாண்டவர்களின் நண்பனாய் இருந்திருக்கிறான்.

வேறொரு நாட்டு அரசனான கம்சனுக்கும் கிருஷ்ணன் எதிரி.அருகருகே ஒரே இடத்தில், இரண்டு அரசாட்சி இருந்திருக்குமோ,
இவ்விரு அரசர்களுக்கிடையே உறவு இருந்ததாக மகாபாரதத்தில் காட்டிட எவ்வித ஆதாரமில்லை.

கிருஷ்ணன் மற்றும் பாண்டவர் பற்றி தனித்தனி கதைகள் கலந்து ஜோடிக்கப்பட்டு இடைச்செருகலாகப் பிற்காலத்தில் நுழைக்கப்பட்டிருக்கவேண்டும்.

வியசானின் கூற்றின் படி கிருஷ்ணன் மனிதர்களுள் தெய்வம்.
அவ்வளவுதான் அதனாலேயே கிருஷ்ணன் மகாபாரத கதையில் கதாநாயகன்
ஆக்கப்பட்டுருக்கின்றான். உண்மையில் கிருஷ்ணன் மனிதர்களுள் தெய்வம் என்றும் அளவுக்கு அருகதையுடையவனா.?

ஒருவேளை அவனுடைய வாழ்க்கை சுருக்கம் அவ்வித  கேள்விகளுக்குச் சரியான விடை அளிக்குமா என்று
சற்று பார்ப்போம்.

* பத்ரா மாதம் எட்டாம் நாள் நள்ளிரவில் மதுராபுரி நகரில் கிருஷ்ணன் பிறந்தான்.

* அவன் யாதவ இனத்தை சார்ந்தவன் அவன் தந்தை வாசுதேவன் இவன் மனைவி தேவகி.

கிருஷ்ணனின் பிறப்பு:

தேவிக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தை, கம்சனைக் கொன்றுவிடும் என்று வானத்திலிருந்து அசரீரி சொன்னதாய் நாரதன் மூலம்  கேள்விப்பட்ட கம்சன் தேவகியையும் அவன் கணவனையும் சிறைப்படுத்தி ஒன்றன் பின் ஒன்றாய்ப் பிறந்த அவர்களுடைய 
ஆறுகுழந்தைகளையும் கொன்றுவிடுகிறான்.
ஏழாவது குழந்தையாக பலராமன் தேவகியின் வயிற்றில் கருவாய் இருக்கும்போதே,
வாசுதேவனின் வேறோரு மனைவியான அதாவது வைப்பாட்டி ரோகிணியின் வயிற்றுக்குள் அதிசயமான முறையில் மாற்றப்படுகிறான்.

எட்டாவது குழந்தையாய் கிருஷ்ணன் பிறக்கிறான்.

கிருஷ்ணனுடைய இந்த பிறப்பே நம்பகத்தன்மையற்றதாக உள்ளது.
அதாவது எப்படி ஒரு பெண்ணீன் வயிற்றில் இருக்கும் கருவை இன்னோரு வயிற்றில் மாற்றமுடியும்.
ஓ கதைதானே மகாபாரதம் உண்மைகிடையாதல்ல அதா அள்ளிவிடுகிறார்கள்.
அப்போ கிருணஷ்ணன் மகாபாரத கதையில் ஒரு வைப்பாட்டிக்கு பிறந்த  மகனாக இவன் பிறப்பு தொடங்குகிறது.சரி

கிருஷ்ணனும் பெண்ணியமும்:

கிருஷ்ணனை பெரும்பாலும் பெண்கள் தான் வழிபடுகின்றார்கள் அனால் கிருஷ்ணன் அந்த பெண்ணியத்திடம் எந்தளவு மதிப்பு வைத்துள்ளான் என்பதை மகாபாரதமும்,
ரிவம்ச புராணமும்,
கூறுவதை பார்ப்போம்.
 
கோபிகள் அதாவது பெண்கள் ஒரு நாள் யமுனையில் குளிக்கப் போனார்கள்.நதியில் இறங்குமுன் தம் ஆடைகளைக் களைந்து கரையில் வைத்தார்கள்.பெண்கள் நிர்வணமாக குளிக்கும் பழக்கம் இன்னும் சில நாட்டில் நிலவிவருவதாக சொல்லப்படுகிறது.
அதை திருட்டுத்தனமாக பார்த்தும், நதிக்கரையில் பெண்கள் அவிழ்த்துவைத்த ஆடைகளைக் கிருஷ்ணன் எடுத்துக்கொண்டு ஓடிபோய் நதியோரம் இருந்த மரத்தின் மீது ஏறிக்கொண்டான்.
பெண்கள் இரு கைகளால் உடலை மறைத்துக்கொண்டு  ஆடைகளை திருப்பி தா கிருஷ்ணா என்று அப்பெண்கள் கேட்டபோது, இந்த பொம்பலபொறுக்கி கிருஷ்ணன் ஒவ்வொருத்தியும். அம்மரத்தருகே வந்து தனக்கு ஆடை வேண்டும்மென்று கையேந்திக் கேட்டாலோழிய அத்துணிகளைக் கொடுக்கமுடியும் இல்லையேன் தரமுடியாது என்று கூறினான். 
பெண்களும் உடைக்காக தன் உடலை மறைத்திருந்த கைகலால் யேந்தி கேட்டபின்பே இந்த கிருஷ்ணன் உடைகளை கொடுத்தானாம் என்று பகவத்கீதையில் கூறப்படுகிறது.
இந்தளவுக்கு கேவலமாக பெண்களை பாலியல் கொடுமைகள்  கிருஷ்ணன் செய்திருக்கிறான் என்பது நினைக்கும்போதே கோவமாக உள்ளது.

கிருஷ்ணன் இராசலீலையை பார்ப்போம்:

கிருஷ்ணனின் இளைய பிராயம் முழுவதும் பிருந்தாவனத்து இளம்பெண்களுடன் தகாத உறவு கொண்டு மது அருந்திக்கொண்டு பெண்களோடு தகாத நடனத்துடன் கழித்ததாகவே இதில் அமைகிறது.
கிருஷ்ணன் செய்த இத்தகைய செயலுக்கு இராசலீலை என்கிறார்கள் இதை நாம்செய்தால் விபச்சாரி,குடிகாரன்,பொம்பல பொறுக்கி என்றெல்லாம் நம்மை கூறிருப்பார்கள்.
இவனை கடவுளாக வணங்குகிறார்கள்.

கிருஷ்ணனின் திருமண வாழ்க்கையை பார்ப்போம்:

மன்னன் ருக்மாங்கதனின் மகள் ருக்குமணியைக் கிருஷ்ணன் திருமணம் செய்துகொள்கிறான்.
இராதாவோ ஏற்கெனவே திருமணம் ஆனவள்.முறைப்படி மணந்த மனைவி.ருக்குமணியை விட்டுவிட்டு இன்னோருத்தனின் மனைவியான இராதாவுடன் கிருஷ்ணன் வாழ்க்கை நடத்துகிறான்.கிருஷ்ணனுக்கு கொஞ்சம்கூட செய்தது தவறு என குற்றயுணர்ச்சி,மனஸ்தாபமோ இல்லை.இத்தோடு நிற்க்காமல் கிருஷ்ணன் பல பெண்களை மணந்துள்ளான் அவனின் மனைவிகள் ருக்குமணி,
சத்தியபாமா,ஜம்பாவதி,காளிந்தி,
மித்ரபிந்தா,சத்யா,பத்ரா,மற்றும் லஷ்மணா ஆகிய எட்டுபேர்களாவார்கள் இவர் பிரபலமானவர்கள் என்பதால் இவர்கள் பெயர் குறப்படுகிறது.
இவர்கள் எங்கு பிரபலமானவர்கள் என்றால் பிரஜோதிஷ் மன்னன் நாரகனுடைய அந்தப்புரத்தில் பிரபலமானவர்களாம்.
மீதம் பதினாறாயிரத்து நூறு மனைவிகளை கிருஷ்ணன் ஒரே நேரத்தில் மணந்தான இவனெல்லாம் கடவுள் தூ தரங்கெட்டவன்.
அப்பாவி ருக்குமணியை கைவிட்டுவிட்டு வைப்பாட்டியுடன் வாழ்கிறான்.

 கிருஷ்ணனுடைய போர் வீரம் பற்றி பார்ப்போம்:

நேர்மையான முறையிலேயே தம்மை யாரும் கொன்றிடக்கூடும்  எனும் நம்பிக்கை கொண்டிருந்த துரோணனைப் பாண்டவர்கள் தகாத வழியில் கொன்றிட அவர்களுக்குக் கிருஷ்ணன் ஆலோசனை சொன்னான்.துரோணன் ஆயுதங்களைக் கீழே போட்டிடச் செய்தால் மட்டுமே அவனைக் கொல்வது எளிதென்று ஆலோசனை கொடுக்கிறான் கிருஷ்ணன்.

ஒரு தடவை தவைபயானா எனும் ஏரியின் ஓரத்தில் பீமனுக்கும் துரியோதனக்கும் இடையில் கடுமையான போர் நடந்து கொண்டிருந்தது.
பீமன் பின் வாங்கி கொண்டிருந்தான்.
துரியோதனனுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.இந்த வேலையில் கிருஷ்ணன் அர்ஜீனன் மூலம் பீமனுக்கு நினைவூட்டுகிறான்.

"உன் எதிரியைத் தொடையை நோக்கித் தாக்கு,அவன் சாய்ந்து போவான் "என்கிறான்.

போரில் ஈடுபட்டிருக்கும் எதிரியைத் தொப்புளுக்குக் கீழே அடித்துத் தாக்குவதென்பது போர் மரபுகளுக்கெதிரானது.
அப்படித்தாக்கினாலொழிய இல்லை துரியோதனைக் கொன்றிடமுடியாது என்பதால் தகாத வழியில் துரியோதனைக் கொன்றிட பீமனுக்குக் கிருஷ்ணன் யோசனை தருகிறான் அதையே பீமனும் செய்கிறான்.கிருஷ்ணன் சிறுவயதிலேயே அவனை கொள்ளவந்த எதிரியை வீழ்த்தி கொலைசெய்தான் என்றெல்லாம் கூறினார்கள்.இவனின் போர் மரபு கோழைத்தனமாக இருக்கிறது தூ இவனெல்லம் வீரனா.

மதுவெறியன் கிருஷ்ணன்:
 
பிரபாசா எனும் புண்ணிய பூமிக்கு யாதவர்கள் பெருமளவில் போனார்கள்.அங்கே மது தடை செய்யப்பட்டிருந்தது.
இதை கிருஷ்ணன் மற்ற யாதவத் தலைவர்களும் நன்றாக அறிந்திருந்தனர்.ஆயினும் அந்தத் தடையை யாரும் பொருள்படுத்தாமல்
குடித்து போதை தலைக்கேறி சர்ச்சையில் ஈடுபட்டனர்.
பின்னர் கலவரத்தில் ஒருவர் ஒருவர் வெட்டிக்கொண்டு மாண்டனர்.
இதில் கிருஷ்ணன் பெருமளவில் தம் சொந்தமக்களான யாதவர்களை கொன்று குவித்தான்.இப்படி மதுவெறியில் திரிபவன் கடவுளா.

இப்படி தன் வாழ்க்கைய் முறைகளில் ஒழுக்கம்,நேர்மை,உண்மை,கருணை,வீரம்,என எந்த சிறப்பையும் அடையாத ஒருவன் எப்படி கடவுளாக வணங்குகின்றிர்கள்.மாறாக போதைபழக்கம்,காமவெறி,போரில் திருட்டுத்தனம்,பெண்களை ஏமாற்றுபவன்,என அனைத்து தீமைகுணம் பெற்றவனை நீங்கள் வணங்குகின்றிர்கள் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

மிகவும் தரங்கெட்ட பிறவியே  கிருஷ்ணன்.

ஆதாரங்கள்..
பகவத் கீதை,
ரிவம்ச புராணம்,
மகாபாரதம்,

மீள்பதிவு.

Che அஜித்ர,புதுவை.
ஆறாம் அறிவு முகநூல் குழு பதிவு
30.8.21