வியாழன், 23 பிப்ரவரி, 2017

சோதனைக் குழாய் மூலம் கருத்தரிக்கும் முறை பாகிஸ்தான் இஸ்லாமிய நீதிமன்றம் அங்கீகாரம்

இஸ்லாமாபாத், பிப்.23 சோத னைக் குழாய்கள் மூலம் கருத்த ரிக்கும் முறைக்கு பாகிஸ்தானின் இஸ்லாமிய நீதிமன்றம் சட்டப் பூர்வ அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதையடுத்து, அங்கு மருத் துவக் குறைபாடுகள் காரணமாக கருத்தரிக்க முடியாமல் தவித்து வரும் ஏராளமான தம்பதியருக்கு செயற்கைக் கருத்தரிப்பு முறை யில் குழந்தை பாக்கியம் கிடைப் பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தானின் ஷரியா நீதிமன்றம் செவ்வாய்க் கிழமை தெரிவித்ததாவது:

கணவரின் விந்தணுவும், மனைவியின் அண்ட அணுவும் மருத்துவமுறையில் பிணைக்கப் பட்டு கரு உருவாக்கப்பட்டு, அந்தக் கரு மீண்டும் அந்த மனைவியின் கருப்பைக்குள் வைக்கப்பட்டால் அது சட்டத் துக்கு உள்பட்டதே ஆகும்.

அந்த மருத்துவமுறையை குரானின் போதனைகளுக்கு எதிரானதாகக் கருத முடியாது

சோதனைக் குழாயில் உரு வாக்கப்படும் கரு, முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ள கணவன் - மனைவியின் உயிரணுக் களால் உருவாக்கப்பட்டால் மட் டுமே, அந்த முறைக்கு சட்டப் பூர்வ அங்கீகாரம் வழங்கப்படும்.

பரிந்துரைக்கப்பட்ட மருத் துவ முறைகளைக் கொண்டு கணவரும், மனைவியும் செயற் கைக் கருத்தரிப்பு முறையைக் கையாண்டால், பிறக்கும் குழந்தை அவர்களது சட்டப் பூர்வமான குழந்தை என்ற அங்கீகாரத்தைப் பெறும் என்று அந்த நீதிமன்றம் தெரிவித்தது.
-விடுதலை, 23.2.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக