திங்கள், 30 அக்டோபர், 2017

மகாபாரதத்தை எழுதியவரும் சொன்னவரும் சுருக்குப்போட்டுக்கொள்ளவேண்டும்


பாரதக் கதையைத் தோலுரித்துக்காட்டி தமிழர் தலைவர் விளக்கம்



மகாபாரதத்தை எழுதியவரும், சொன் னவரும் சுருக்குப் போட்டுக் கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு ஜாதி வருண பேதங்கள் தலைதூக்கி ஆடுகின்றன என்பதை ஆதாரத்துடன் எடுத்துக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விளக்கவுரை யாற்றினார்.

ராஜதர்மம் எழுபத்தி மூன்றாவது அத்தியாயத்தில் உள்ளதைச் சொல்லு கின்றேன். "அரசன் அறம் பொருள்களைச் சேர்ப்பது மிக்க கடினமென்றறிந்து பொன் னிறமாவது, செந்நிறமாவது கருநிறமாவது உடையவரும், நோயற்றவரும் சுகமுள்ள வரும், கோபமில்லாதவரும், ஆசையில் லாதவரும் எல்லா விசயங்களின்றும் இந்திரியங்களை வென்றவரும் பல சாஸ் திரங்களைக் கற்றவரும் அறிவுள்ளவரு மான பிராம்மணரை சீக்கிரம் புரோகித ராகச் செய்து கொள்ள வேண்டும். "புரோ கிதனாக பிராமணரை வை” என்று சொன்னால் சரியாகப் போய்விட்டது. இதில் நமக்கு ஒரு சந்தேகம் வருகிறது. நிறத்தைப் பற்றி ஏன் சொல்லுகின்றார்கள்? பொன்னிறமாக இருந்தாலும் வைத்துக் கொள், செந்நிறமாக இருந்தாலும் வைத்துக் கொள். கருநிறமாக இருந்தாலும் வைத்துக்கொள் என்று ஏன் சொல்ல வேண்டும்?. இது சந்தேகத்திற்குரிய ஓர் விசயம்.  உங்களுக்கே அதை விட்டு விடு கின்றேன் (சிரிப்பு கைதட்டல்). அவர்கள் எப்படிப்பட்ட ஆளாக இருந்தாலும் பிராமணர்களைத்தான் புரோகிதர்களாக வைத்துக் கொள்ள வேண்டும்.

"ஓ! அரசனே! தர்மபுத்தியுள்ளவரும் மந்திரசக்தியுள்ள வருமான புரோகிதர் எந்த அரசர்களிடமிருக்கிறாரோ அவர் கட்கு அறம் பொருளின்பங்கள் பயன் படுவது திண்ணம். ஓ! யுதிஷ்டிரா! இவ் விசயத்தில், சுக்ராசாரியர் கூறின சுலோ கங்களைத் தெரிந்து கொள் அவற்றின் பொருள்.

புரோகிதனல்லா அரசன் எச்சிலுக்கு ஒப்பாவான் ராட்சர்களும், அசுரர்களும், பிசாசர்களும் சர்பங்களும் பறவைகளும் பகையாளிகளும், புரோகிதனல்லாத அரசனைக் கொல்லுவார்கள் என்பது அதர்வ வேதமறிந்து பிராமணன் எவ்வித யாகங் களிலும் அரசனுக்குப் பிரம்மத்வ மென்னும் வேலையைச் செய்ய வேண் டும். அதர்வ வேதத்தில் சொல்லியபடி எல்லாக் கர்மங்களையும் செய்விக்க வேண்டும்!

எந்த ராஜாவாவது இதைக் கேட்ட பிற்பாடு புரோகிதனை வைக்காமல் இருப்பார்களா?

எவ்வளவு பெரிய அளவுக்கு அப் பொழுதே பிளாக்மெயில் செய்திருக் கிறார்கள் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். பார்ப் பனர்கள் பய முறுத்தியிருக்கிறார்கள். அச்சுறுத் தியிருக் கிறார்கள். ஆனால், பல இடங்களில் பார்ப்பனர்கள்தான் மற்றவர்களைக் கொன் றிருக்கின்றார்கள். புஷ்ய முத்ர சுங்கன் போன்ற பழைய வரலாற்றை எடுத்து படித் துப் பார்த்தால் உங்களுக்குத் தெளிவாகத் தெரி யும்.

ராஜதர்மம் எழுபத்தி இரண்டாவது அத்தியாயத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது “ஓ! அரசர்களிற் சிறந்தவனே! பிரம்ம தேவரின் முகத்திலிருந்து பிராமணன் சிருஷ்டிக்கப் பட்டான். அவர் கைகளிலிருந்து சத்திரியனும் தொடைகளிலிருந்து வைசியனும் சிருஷ்டிக் கப்பட்டார்கள். ஒ! பரதஸ்ரேஷ்டனே! பிறகு, மூன்று வர்ணத்தார்களுக்கும் பணிவிடை செய்ய வேண்டி நான்காவது ஜாதியான சூத்திரர்களை பிறப்பித்தார்.

பிராமணன் பூமியில் பிறக்கும் போதே எல்லா பிராணிகளுக்கும் தர்மமென்னுங் கோசத்தை ரட்சிக்கச் சக்தி பெற்றவனாயும், பிறக்கிறான்.

பிறவியினால் பிராமணனாக இருக்க வேண்டும் என்று சொல்லுகின்றார்கள். யார் வேண்டுமானாலும் பிராமணனாகலாம் என்று சொல்லுவது பித்தலாட்டமானது.

ஏற்கெனவே இறையனார் அவர்கள் பேசும் பொழுது ஒன்றைச் சொன்னார்கள். மகாபாரதத்தில் “அனுசாசன பருவத்தில்” ஓர் செய்தி சொல்லப்பட்டிருக்கின்றது.

“சூத்திரர்களிடத்தில் புசிப்பவன், பூமியின் மலத்தையே புசிப்பவனாகிறான். சூத்திரர் களிடத்தில் புசிப்பவன் பூமியின் மலத்தையும் அதிலுள்ள மனிதர்கள், ஜந்துக்களின் ஜல, மலங்களையும் புசித்தவனாவான்.. சூத்திர னிடத்தில் போஜனம் செய்யும் பிராமணர்கள் பூமியின் மலத்தை புசிப்பவரே. சூத்திரனிடம் நேசிக்கும் பிராமணனும், சத்திரியனும், வைசியனும் (ஸ்ந்தியாவந்தனம் முதலிய) கர் மங்களை நன்கு செய்து வந்தாலும் நரகத்தில் வேகவைக்கப்படுகிறார்கள்” என்று எழுதி வைத்திருக்கின்றார்கள்.

அது மட்டுமல்ல எப்படிப்பட்ட உணவு? "குலத்தையும், சாமர்த்தியத்தையும் மகிமை யையும் விட்டு நாய் போன்ற விலங்கு ஜாதி யாகப் பிறக்கிறான். வைத்தியனது அன்னத் தைப் புசித்தால் அது மலத்திற்குச் சமமானது. விபச்சாரியின் அன்னம் மூத்திரம் போன்றது” இவைகள் எல்லாம் எவ்வளவு அசிங்கமான வார்த்தைகள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

மூத்திரம் என்று சொல்லட்டும். அது என்ன விபச்சாரியின் மூத்திரம் என்பது. அதற்கு என்ன தனி "அசிடிட்டி இருக்கின்றதா? இல்லை. தனி டிகிரி இருக்கிறதா? அப்படி யானால் அவர்கள் எவ்வளவு கொச்சைப் படுத்துகிறார்கள் பாருங்கள்.

எனவே “சூத்திரனுடன் ஒரு பந்தியில் சேர்ந்து சாப்பிடும் பிராமணனுக்குச் சாஸ் திரப்படி, பாவம் உண்டாகிறது” என்று சொல் லப்பட்டிருக்கின்றது.

இந்த பாவத்திலிருந்து வெளியே வர வேண்டுமானால் பிராயச்சித்தம் செய்ய வேண்டும். அப்படி பிராயச்சித்தம் செய்ய வேண்டுமானால், ஏராளமான பார்ப்பனர் களுக்குச் சாப்பாடு போட வேண்டும் என்று இப்படி ஏராளமான செய்திகளைச் சொல்லி வைத்திருக்கின்றார்கள்.

கணபதி சாஸ்திரி எழுதிய மகாபாரதம் மட்டும் 1,180 பக்கங்கள். நான் தொடக்கத்தில் பெஞ்சமின் வாக்கர் எழுதிய நூலிலிருந்து சொன்னேன். பிராமண தத்துவத்தைப் பரப்புவதற்காகத்தான் மகாபாரதத்தை எழுதினார்கள் என்று கணபதி சாஸ்திரி எழுதிய நூல் 1180 பக்கங்கள். ஆனால் யோக்கியர் 'சோ' ‘மகாபாரதம் பேசுகிறது' என்ற தலைப்பில் இரண்டு வால்யூம்களை எழுதியிருக்கின்றார்.

சோ அவர்கள் இவ்வளவு பெரிய புத்த கத்தைப் போட்டு 500 ரூபாய்க்கு விற்றிருக் கின்றார். 'சோ' எழுதிய நூலில் சாந்தி பருவத்திற்கு எத்தனை பக்கங்களை ஒதுக்கி எழுதியிருக்கின்றார் என்றால், 93 பக்கங்கள்.

சோ எழுதிய நூலில் இந்த மாதிரி பகுதி இருக்கிறதா? என்றால் இல்லை. ஏனென் றால் அந்த செய்திகளை எல்லாம் இந்த நூலில் போட்டால் இந்த கால கட்டத்தில் வெளியே வரமுடியாது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். எனவே மகாபாரதத்தை சுருக்கிய பெருமை நமக்கு உண்டு.

மகாபாரதத்திற்குச் சுருக்குப் போடுகின்ற தன்மையும் நமக்கு உண்டு (பலத்த கைதட்டல்). மகாபார தத்தை எழுதியவரும், சொன்னவரும் சுருக்குப் போட்டுக் கொள்ள வேண்டும் (பலத்த கைதட்டல்).

மகாபாரதத்தில் உள்ள எல்லா பகுதி களையும் நண்பர் சிவராசன், இறையன் ஆகியோர்களை வைத்து எடுக்கச் சொன் னேன்.

சாந்தி பருவத்தில் ராஜதர்மம்தான் மிக முக்கிய மானது என்றால் அதில் உள்ள வாசகங்களையாவது இந்த பார்ப்பனர்கள் கையாள வேண்டாமா? அதை எல்லாம் எடுத்து விட்டார்கள். இது மட்டும் 107 பக்கங்கள் கொண்டது. 180 பக்கமாக சொல்லப்பட்ட மகாபாரதத்தில் உள்ள செய்திகளை 93 பக்கமாக குறைத்து அதில் உள்ள பல சங்கதிகளைச் சாப்பிட்டு விட்டார் சோ அவர்கள்.

அதே மாதிரி வர்த்தமான் பதிப்பகத்தின் சார்பில் இப்பொழுது போட்டிருக்கின்ற வியாசபாரதத்தில் 107 பக்கங்கள்தான் இருக்கிறது. எனவே நாம் உரையாற்றினா லும், ஆய்வுரையாற்றினாலும், ஆற்றா விட் டாலும், பெரியார் அவர்களுடைய கண் களுக்குத் தெரிகிறார் (பலத்த கைதட்டல்). இந்த இயக்கம் தெரிகிறது (பலத்த கைதட் டல்). ஆகவே இதனுடைய தாக்கம் என் பதிருக்கின்றதே அவர்களை அறியாம லேயே உள்ளே புகுந்திருக்கின்றது.

எனவேதான் மகாபாரத ஆராய்ச்சி என்ற நூலை நீங்கள் விரைவில் எதிர் பாருங்கள் என்று கூறி என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன் இத்தனை நாட்களும் தொடர்ந்து வந்து ஆதரவு காட்டிய நண்பர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
- ‘விடுதலை’, 13.2.2004

‘விடுதலை ஞாயிறு மலர்’, 21.10.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக