புதன், 28 மார்ச், 2018

“இந்து மதத்தை ஒழித்துவிடுவதே மேல்” சுவாமி ராமதீர்த்தாவின் வாக்கியம்

01.04.1928- குடிஅரசிலிருந்து...

இந்திய சட்டசபையில் குழந்தைகள் விவாகத் தடுப்பு மசோதாவின் மேல் விவாதம் நடக்கையில் சென்னை பிரதிநிதிகளான அய்யங்கார் கூட்டத்தைச் சேர்ந்தவரும் சட்ட சபை பிரயாணச் செலவிலேயே பெரிதும் வாழ்க்கை நடத்து கிறவருமான ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியார் அவர்கள் மேற்கண்ட மசோதாவை எதிர்த்துப் பேசும்போது இந்தியாவின் செல்வாக்குள்ள சனாதனதர்மி களின் பிரதிநிதியாகவே, தான் அச்சபையில் இருப்பதாகவும், எவ்வித சீர்திருத்தமும் சட்டத்தின் மூலம் செய்யக்கூடாதென்றும், மதத்தில் தலையிட யாருக்கும் இடம் கொடுக்கக் கூடாதென்றும், அதிலும் சர்க்கார் தலையிட கொஞ்சமும் இடம் கொடுக்கக் கூடாதென்றும், சர்க்காரை மிரட்டிப் பேசும் போது அதற்குப் பதில் சொல்லக் கிளம்பிய ஸ்ரீமான் ஈஸ்வரன் சரண்முன்ஷி அவர்கள், வைதீகர்களில் சிலர் இம் மசோதவை எதிர்த்தாலும், ஏராளமான பொது ஜனங்கள் இம் மசோதாவை ஆதரிக்கிறார்கள் என்றும், ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியார் இம் மசோ தாவை எதிர்ப்பதன் இரகசியம் எனக்கு விளங்கவில்லை என்றும், இன்று இந்து மதம் அடைந்திருக்கும் கேவல நிலைக்கு ஸ்ரீ ஆச் சாரியார் போன்ற வர்களே காரணம் என்றும், இந்து மதம் முன்னேற்றத்திற்குத் தடையா யிருக்கு மானால் அதை ஒழித்து விடுவதே மேல் என்று சுவாமி ராமதீர்த்தர் கூறியிருக் கின்றார் என்று கூறினாராம்.

இந்து மதத்தை காப்பாற்றத் தோன்றியிருப்பதாய் நடிக்கும் நமது தமிழ்நாடு பத்திரி கையோ அல்லது ஒரு ஸ்ரீ வரதராஜுலுவோ இந்திய சட்டசபையிலும் இருந்திருந்தால் முன்ஷி ஈஸ்வரசரணரின் நயவஞ்சகம் என்றோ அல்லது ஈஸ்வரசரணர் பிரச்சாரம் என்றோ தலையங்கம் கிளம்பி யிருக்கும். அவைகள் அருகிலில்லாதது ஸ்ரீ ஈஸ்வர சரணர் நல்லகாலமே ஆகும். தவிர பொது ஜனங்களின் பிரதிநிதி என்று சொல்லி சட்ட சபைக்குப் போய் அதனால் வயிறு வளர்க்கும் ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியர் இப்போது தாம் சனாதன வைதீகர்களின் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ளும் அயோக்கியத்தனத்தை அறிந்து அவருக்குப் பொது ஜனங்கள் தக்க புத்தி கற்பிப்பார்களா என்றும் கேட்கின்றோம்.

சர் பாத்ரோ ஆச்சாரியார்

சென்னை சட்டசபையில், பாலிய விவா கத்தை தடுக்க ஸ்ரீமதி முத்துலட்சுமி அம்மா ளால் கொண்டுவரப்பட்ட ஒரு சிபார்சு தீர்மானம் விவாதத்திற்கு வந்த காலத்தில்

சர். பாத்ரோ அவர்கள் அத்தீர்மானத்திற்கு எதிரிடையாய் அதாவது மதத்தில் சர்க்கார் பிரவேசிக்கக்கூடாது என்று பேசியிருக்கிறார். இது யோக்கியமா என்று கேட்கிறோம். இந்த சம்பவம் பார்ப்பனரல்லாதார் கட்சிக்கே ஒரு பெரிய மானக்கேடு என்று சொல்லுவோம். மனிதர்கள் அரசியலில் கரணம்போடுவதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. ஏனென்றால் அரசியல் என்றாலே அயோக்கியதனம், கேப்பமாறித்தனம், தேசத்துரோகம் என்ப வைகள் நமது அகராதி அர்த்தம். காங்கிரஸ் கொள்கை முதல்கொண்டு, அதை ஆரம்பித்த பெரியார்கள் என்பவர்கள் முதல் கொண்டு, அதில் உள்ள தலைவர்கள் என்பவர்கள் முதல்கொண்டு, எல்லாவற்றிலும் பெரும்பான் மையார்கள் அந்த எண்ணத்தைக் கொண்டே ஆரம்பித்து நடத்திவரப்படுகின்றது என்பதே நமது முடிவு.

ஆனால் சமுக சீர்திருத்த விஷயத்திலாவது மேல்கண்ட குணங்கள் இல்லாமல் யோக்கி யமாய் நடந்து கொள்ள வேண்டாமா என்று கேட்கிறோம். சர்பாத்ரோ பிரம்ம சமாஜி என்று சொல்லிக் கொள்ளுபவர் உண்மையில் அவருக்கு மதத்தில் சர்க்கார் பிரவேசிக்கக் கூடாது என்கின்ற அபிப்பிராய மிருக்குமா னால் தேவஸ்தான சட்டம் செய்ததைப் பற்றியும், யூனிவர்சிடியில் செய்ததைப் பற்றியும் மன்னிப்பு கேட்டுக் கொண்டு மரியாதையாக பார்ப்பன ரல்லாதார் கட்சியை விட்டு வெளியில் போய்விடும்படியாக வேண்டிக்கொள்ளு கிறோம்.

ஸ்ரீ பாத்ரோ ஆச்சாரியாரைவிட ஸ்ரீவரத ராஜூலு அய்யங்காரே மேல் என்று ஜனங்கள் நினைக்கும் படி நடந்து கொண்டதற்கு நாம் மிகுதியும் பரிதாபப்படுகிறோம். தமிழ்நாடு பத்திரிகையின் புரட்டு

தமிழ்நாடு பத்திரிகை 6000 பிரதி வெளியாகின்றது என்று சூழ்ச்சி அறிக்கை வெளியானதைப் பற்றி நாம் முன்னமேயே அச் சூழ்ச்சிக்கு ஆதரவாய் இருந்த சர்க்கார் அதிகாரிகளையும் கண்டித்து எழுதியி ருந்தோம். இப்போது சர்க்காரார் இனி அம்மாதிரி நடந்து கொள்ளுவதில்லை என்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கின்றார்கள்.

மேற்படி அறிக்கை வெளியிடப்பட்ட காலத்தில் தமிழ்நாடு தினசரிப் பத்திரிகை ஆரம்பிக்கவே இல்லை. வாரப்பத்திரிகை அவ்வளவு இருந்ததாக அவர்களே சொல் லுவதும் இல்லை.

ஆகவே இப்புரட்டு சர்க்காருக்கு தாராளமாய் வெளிப்படுத்தப்பட்டு விட்டதால் சர்க்கார் 23.03.1928இல் ஒரு அறிக்கை வெளியிட்டு அதிக ஜஸ்டிஸ் பத்திரிகை இந்த இரண்டு வருஷமாய் அதிகமாய்க் கொண்டு வருவதை ஒப்புக் கொண்டு இனிமேல் விவகாரத்திற்கு இடம் கொடுக்கத் தக்கதான பத்திரிகைகளின் எண்ணிக்கைகளைப் பற்றி வெளிப் படுத்துவதில்லை என்றும் தெரிவித்து விட்டார்கள்.

இதிலிருந்து ஸ்ரீ வரதராஜுலு வின் சூழ்ச்சி நிஜமா அல்லது நாயக்கரின், கண்ணப்பரின் பொறாமை நிஜமா? என்பதை முடிவு செய்யும் வேலையை பொது ஜனங்களுக்கே விட்டு விடுகின்றோம்.

-  விடுதலை நாளேடு, 24.3.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக