வெள்ளி, 11 ஜனவரி, 2019

கொள்ளைக்கார - அய்யப்பக் கடவுள்



நம் நாட்டைப் பொறுத்தவரை சீசனுக்கு ஒரு கடவுள். இது அய்யப்பன் சீசன்!' எங்கு பார்த்தாலும் அய்யோ அப்பா' என்ற அவலக் குரல்கள் கேட்கத் துவங்கி விட்டன. தமிழ் நாட்டில் மூலை முடுக்குகளில் எல்லாம். கூழாங்கற்கள் - கடவுள்களாகப் பெருகிக் கிடக்கின்றன. இவற்றிற்கெல்லாம் சக்தி இல்லையென்று கருதித்தான் கேரள மாநில கடவுளையும் கடன் வாங்குகிறார்கள் போலும்!
அய்யப்பன் ஒரு கொள்ளைக்காரனே!
அய்யப்பன் சபரிமலைப் பகுதியில் உள்ள பம்பா என்னும் ஆற்றங்கரையில் சிறு குழந்தைப் பருவத்தில் கண்டெடுக்கப் பட்டான். ஒழுக்கந் தவறியவள் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் பெற்றுத்தூக்கி யெறிந்து விட்டுச் சென்றிருக்கிறாள். வேட்டைக்குக் காட்டிற்கு சென்றவர்கள் இந்த ஊர் பேர் தெரியாத குழந்தையைக் கண்டெடுத்து, அரசனிடம் சேர்ப்பித்தனர். அரசனோ புத்திர பாக்கியம்' இன்றி வருந்திக்கொண்டி ருந்தான். இந்த நிலையில் இந்தக் குழந் தையை எடுத்து, சீராட்டிப் பாராட்டி வளர்த் தான்-மணிகண்டன் என்று பெயருமிட்டான்.
இதற்கிடையில் அரசன் மனைவி கரு வுற்று. ஒரு ஆண் குழந்தையை ஈன்றுவிட் டாள். இருவரும் வளர்ந்து பெரியவர்களான பிறகு, இளவரசுப் பட்டம் யாருக்கென்று சர்ச்சை எழுந்தபோது, ராணி, தன் வயிற்றுப் பிள்ளைக்கே நான் இளவரசுப்பட்டம் என்று கூறினாள். வேறு வழியின்றி மணி கண்டன் தன் பிறந்த வீட்டுக்கே - அதாவது காட் டுக்கே சென்று விட்டான், அவனோடு அவனது தோழர்களும் சென்றனர். நாளடை வில் இந்தக் கூட்டம் கொள்ளைக் கூட்ட மாக, உருவெடுத்தது, வழிப்பறியில் தீவிர மாயினர். அந்தக் கூட்டத்திற்கு மணிகண் டன் தலைவனானான். சுற்றுப்புறங்களில - இவர்கள் கொள்ளையடிக்கச் சென்ற போது, மணிகண்டனை கண்ட பொது மக்கள், அய்யோ அப்பா'' என்று கூச்சல் போட்டனர். அந்தக் கூச்சலே நாளடைவில் அவனுக்கே பெயராகிவிட்டது. இரவில் திருடச் செல்லவும், காட்டில் மறைந்து வாழவும் கருப்புடைகளை மேலும் கீழும் அணிந்து கொண்டனர். ஆளுக்கொரு தீப்பந்தமும் தடியும் வைத்துக் கொண் டனர்.
கொள்ளைக்கூட்டத் தலைவனான அய்யப்பன் முதுமை அடைந்து நோயால் மாண்டான். உடனே அவனது சகத் தோழர்கள் அவனுக்கு மலை உச்சியில் நடுகல் நட்டுக் கோயிலும் எழுப்பினர். அந்தக் கோயிலுக்குச் செல்ல பதினெட்டுப் படிகளும் வெட்டி வைத்தனர். அய்யப்ப னின் முன்னோடியாக இருந்த கருப்பு'' என்பவன் மாண்டதும் அந்தப் படிக் கட்டுக் குப் பக்கத்தில் புதைத்துப் பதினெட்டாம் படிக் கருப்பு'' என்று ஒரு 'தெய்வமாக்கினர்.
மலைவாசிகள் இறந்தவர்களைப் புதைத்துக் கல்நட்டு ஆண்டுக்கொருமுறை படையல்போட்டு, ஆடிப்பாடிக் களிப்பது வழக்கம். இந்த முறையிலேயே அமைந்தது தான் இந்த அய்யப்பன் கோயிலும் பூசையும். இப்படியொரு கர்ண பரம்பரைச் செய்தி!
பக்தர் ஒருவரின் முக்கிய வேண்டுகோள்

முக்தி தரும் நகரேழில் முக்கியமாம் கச்சி தனில் புண்ணிய கோட்டி விமானத்தின் கீழே அக்னியில் அவதாரம் செய்த சிறீவரதராஜ பெருமாள் கோவிலில் அத்தி மரத்தினாலான பழைய மூலவர் சின்னம் ஆன காரணத்தால் முன்புறம் உள்ள புஷ்கரணிகுளத்திலுள்ள மண்டபத்தில் அத்திமரம் தண்ணீருக்கு மேலே மிதந்து வராமாலிருக்க சில நாகம் உருக்கொண்ட பாராங் கற்களை வைத்து மூழ்கடிக்க செய்துள்ளார்கள். இந்த பின்ன மான அத்தி மரத்தினாலான "அத்தி வரதரை" 48 வருடங் களுக்கு ஒரு முறை குளத்திலுள்ள தண்ணீர் கால்லாவற்றையும் இறைத்து வெளியே கொண்டு வந்து சுத்தம் செய்து பொது மக்கள் தரிசனத்திற்காக 48 நாட்கள் காட்சிப் பொருளாக வைப்பார்கள். இந்த பின்னமான அத்திமர சிலைக்கு எந்த விதமான பூஜை, புனஸ்காரங்கள் ஏதும் கிடையாது. ஆனால் கோவிலில் சில பூஜாரிகள் கற்பூர ஹாரத்தி தட்டை ஏந்தி கொண்டு, வரும் பக்தர்களிடம் பண வசூல் செய்வதற்காகவும், புஷ்பம், வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் நெய்வேத்யம் செய்வதற்காகவும் நிற்கிறார்கள். இந்த பின்னமான அத்தி வரதர் சிலைக்கு பூஜை சேவை சாத்துமறை ஏதும் கிடையாது. வரும் 2019 ஆம் ஆண்டு ஆனி மாதத்தில் இந்த அத்தி வரதரை குளத்திலிருந்து வெளியே எடுக்க போவதாக, தெரிகிறது. ஆகையால் இந்த அத்தி வரதர் சிலையை காட்சிப் பொருளாக ஏதோ ஓர் மண்டபத்தில் வைத்து பக்த கோடிகள் வலம் வர செய்ய வேண்டும். இந்த சிலையை வைத்து கோவிலில் உள்ள பூஜாரிகளோ, நுழைவு கட்டணமோ, உண்டியோ வைக்கக் கூடாது. தங்கள் வசூலுக்காக எடுப்பதானால் அத்தி வரதரை குளத்திலிருந்து எடுக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். இந்த அத்தி வரதரை நம்பி நிறைய பேர்கள் கனவுலகத்தில் பேராசை கொண்டுள்ளார்கள். ஆகவே இந்த கடிதத்தை படித்து இதற்கு ஒரு நல்ல நியாயமான முறையில் நடத்துமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு திருக்கோயில் ஆகம பூசாரிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள 205 பேர்களை சாதி சமய வேறின்றி இந்த நிகழ்ச்சியின் பணியில் அமர்த்தி அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டுகிறோம். இதனால் தமிழ்நாடு அறநிலையத் துறைக்கும் நல்ல பெயர் கிடைக்கும்.

இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள, திருக்கோயிலில்
அக்கறை உள்ள பக்தர்கள்.
பக்தி என்பது பிசினஸ் என்ற காஞ்சி சங்கராச் சாரியார் - மறைந்த ஜெயேந்திரர் வாய்க்கு ஒரு கிலோ சர்க்கரையை போட வேண்டும்.

ஒரு புராண - புளுகு புத்திரனே அய்யப்பன்
அடுத்த ஒரு புராண அண்டப் புளுகைக் கேளுங்கள்! பத்மாசூரன் என்பவன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து ஒரு வரம் வேண்டினான். சிவனும் முன்யோ சனை இன்றி கேட்ட வரத்தினைத் தருவ தாக வாக்களித்தான். நான் யார் தலையில் கை வைத்தாலும் அவன் தலை பஸ்பமாகி விடவேண்டும் என்று வேண்டினான். சிவனும் அவ்வாறே அளித்தான். வரத்தைப் பெற்ற பத்மாசூரன் சிவன் தலையிலேயே கையை வைத்துப் பரீட்சித்துப் பார்க்க விரும்பினால், சிவன் ஓடினான்; விட வில்லை பத்மாசூரன்'விடாதே பிடி' என்று விரட்டினான்.
இந்த நிலையில் தனது மைத்துனருக்கு மோசம் விளைந்ததே என்று கருதி, அதிலிருந்து அவனைக் காப்பாற்ற வேண்டி விஷ்ணு, மோகினி உருவெடுத்து எதிரே வந்தான். பத்மாசூரன் மதிமயங்கி மோகி னியிடம் நெருங்கினான். 'இப்படி வந்தால் இணங்கமாட்டேன்; குளித்து சுத்தமாய் வரவேண்டும்' என்று கூற, குளிக்கச் சென்று தன் தலையைத் தேய்த்தபோது, பத்மாசூரன் தலை எரிந்து பஸ்பமாகி விடுகிறான்.
பிறகு, பயந்து ஒளிந்திருந்த சிவனை விஷ்ணு அழைத்து நடந்ததை கூறினாள். சிவனுக்குச் சபலம் ஏற்பட்டது. அந்த மோகினி உருவத்தை மீண்டும் காட்டச் சொன்னான். விஷ்ணு மீண்டும் மோகினி உருவெடுத்தாள் அவ்வளவு தான் சிவன் நிலை குலைந்தான். அவனோடு கூடினான். வெளி வந்த இந்திரியத்தைக் கையிலே பிடித்தால்.  ரிஷிப்பிண்டம் இராத் தங்காது' என்றபடி கையிலே - பிள்ளை பிறந்தது. கையிலே பிறந்ததால் 'கையப்பன்' என்றும், நாளடைவில் அய்யப்பன் என்றும் மரு விற்று என்று இப்படியொரு கதை. அரிக்கும் அரனுக்கும் பிறந்ததால் அரிஹரப் புத்திரன்' என்ற பெயரும் உண்டு என்பர்.
சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!
முதல் கதையின்படி கொள் ளைக் கூட்டத்தலைவன் அய்யப்பன், இரண்டா வது கதையின்படி அசிங்கத்திலும் ஆபாசத் திலும் பிறந்தவன்" அய்யப்பன். ஆணுக்கும் ஆணுக்கும் கலவி நடந்தது-பிள்ளை பிறந் தது என்ற ஆபாசத்தைப் பக்தியாக்கிய நாடு உலகில் உண்டா?
கடுகத்தனை அளவுக்குக்கூடப் பொருத்த மற்ற இந்த ஆதாரத்தின் அடிப்படையில் இருக்கின்றதா 'அய்யப்பன்' சங்கதிக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம், பக்திவேஷம் என்றால், இது அசல் வெட்கக்கேடு அல் லவா? பாமரர்கள் மட்டுமல்ல, படித்தவர் களும் பட்டதாரிகளும்கூட அய்யோ அப்பா சரணம்'' என்று காட்டுக் கூச்சலிட்டு, அலைகின்றார்கள் என்றால், அவர்களை என்ன பெயரிட்டு அழைப்பது?
அய்யப்பனுக்குச் சக்தி இருந்தால் அந்தக் கோயில் சமீபத்தில் தீப்பற்றி எரிந் ததே, எங்கே போயிற்று அந்த சக்தி? நக்சல் பாரிகள் கடவுள் மறுப்பு சுலோகத்தை அந் தக் கோயில் சுவர்களில் எழுதிய போதும், ஒட்டியபோதும் எங்கே போனான் அந்த அய்யப்பன்?
அய்யப்ப பக்தர்களே! சிந்தியுங்கள்! ஆழ்ந்து சிந்தியுங்கள்!! தெளிவு பெறுங் கள் - திருத்தம் அடையுங்கள்.
-  விடுதலை ஞாயிறு மலர்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக