வியாழன், 16 ஆகஸ்ட், 2018

மகாபாரதத்தில் சத்தியவதி கதை


#சத்தியவதி

இந்த கதை மகாபாரதத்தில் ஆதிபர்வத்தில் ஆதிவம்சாவதரணப் பர்வத்தில் கூறப்படுகிறது. மகாபாரதத்தை நம்புபவர்கள் இதையும் நம்பித்தான் ஆகவேண்டும்.

ஒரு நாள் மன்னன் உபரிசரன் தனது தேரில் வானத்தில் பறந்து சென்றுகொண்டிருக்கும்போது,

அவனது தலைநகரத்தின் அருகிலே சுக்திமதி என்ற ஆறு ஓடியது. அந்த ஆறானது, காமத்தால் பித்துப்பிடித்ததும், உயிரையுடையதுமான கோலாஹல மலையால் தாக்கி அணைக்கப்பட்டிருந்தது.

மலையின் தவறான முயற்சியைக் கண்ட உபரிசரன், தனது காலால் அந்த கோலாஹல மலையை ஓங்கி உதைத்தான். மன்னன் உதைத்ததனால் கோலாஹல மலையின் அணைப்பிலிருந்து ஆறு வெளியே வந்தது. ஆனாலும் அந்த மலை, அந்த நதியிடம் இரட்டையரான ஒரு மகனையும் ஒரு மகளையும் பெற்றெடுத்தது.

கோலாஹலத்தின் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்த உபரிசரனுக்கு நன்றிக்கடனாக, தன் பிள்ளைகளை அந்த ஆறு அவனுக்கே கொடுத்தது.

உபரிசரன் அந்த ஆற்றின் மகனைத் தனது படைகளுக்குத் தலைவனாக நியமித்தான். மகள் கிரிகையை உபரிசரன் மணந்துகொண்டான்.

மனைவி கிரிகை, தனது தீட்டுக்காலம் முடிந்து, குளித்துத் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, உடலுறவுக்கான தனது நிலையை உபரிசரனிடம் தெரிவித்தாள். ஆனால், அதே நாளில் பித்ருக்கள், உபரிசரனிடம் வந்து, தங்கள் சிரார்த்தத்திற்காக ஒரு மானைக் கொன்று கொடுக்கச் சொன்னார்கள்.

மன்னனும் பித்ருக்களின் கட்டளையை மதிக்காமல் இருக்கக்கூடாது என்று எண்ணி, லட்சுமிபோன்ற அழகுடைய கிரிகையை நினைத்துக் கொண்டே தனியாக வேட்டைக்குக் கிளம்பிப் போனான்.

வேட்டைக்கு சென்ற மன்னனுக்கு கிரிகையின் நினைப்பால் காமம் தலைக்கேறி இன்புற்றபோது அவன் வீரியம் வெளிப்பட்டது. வெளிப்பட்ட வீரியம் வீணாகக் கூடாது என்று நினைத்து, உடனே அதனை இலையில் ஏந்தினான். அதை மூடி கட்டினான்.

துரிதமாகச் செல்லக்கூடிய ஒரு பருந்து, தனக்கு மிக அருகே ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதை மன்னன் கண்டான். பருந்திடம் சென்று, இனிமையானவனே, இந்த எனது விந்தை எனது மனைவி கிரிகைக்காக எடுத்துச் சென்று, அவளிடம் இதைக் கொடுப்பாயாக. அவளது பருவம் வந்துவிட்டது என்றான்.

பருந்து, மன்னனிடம் அதைப் பெற்றுக் கொண்டு, வானத்தில் வேகமாகப் பறந்தது. அப்படிப் பறந்து செல்கையில், மற்றொரு பருந்தால் இது பார்க்கப்பட்டது. முதலில் சென்ற பருந்து இறைச்சியையெடுத்துச் செல்கிறது என்று நினைத்து, இரண்டாம் பருந்து அதை நோக்கிப் பறந்தது. இரு பருந்துகளும் வானத்தில் தங்கள் அலகால் சண்டையிட்டுக் கொண்டன. அப்படி அவை சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, அந்த விந்து யமுனையின் நீரில் விழுந்தது.

அத்ரிகை என்ற பெயர் கொண்ட அப்சரஸ் ஒருத்தி ஒரு #பிராமணனின் சாபத்தால் மீனாகப் பிறந்து அந்த நீரில் வசித்து வந்தாள். உபரிசரனின் விந்து பருந்தின் பிடியில் இருந்து நீரில் விழுந்ததும், அந்த மீன் அதை விழுங்கிவிட்டது.

சில காலங்களுக்குப் பிறகு, அந்த மீன், மீனவர்களால் பிடிக்கப்பட்டது. அப்பொழுது அந்த மீன் விந்தை விழுங்கிப் பத்து மாதங்கள் ஆகியிருந்தன. அந்த மீனின் வயிற்றிலிருந்து, ஓர் ஆணும், ஒரு பெண்ணுமாக மனித வடிவில் குழந்தைகள் வெளியே வந்தன. இதை மீனவர்கள் உபரிசரனிடம் கூறினார்கள்.

ஆண் குழந்தை உபரிசரனால் எடுத்துக் கொள்ளப்பட்டான். பெண் குழந்தையை எடுக்க மறுத்துவிட்டான். அந்த குழந்தையை மீனவர்களே வளர்த்தார்கள். அந்த குழந்தைதான் சத்தியவதி.

இந்த சத்தியவதிதான் நதியை படகில் கடக்கும்போது பராச முனிவனால்
"எனது ஆசைக்கு இணங்கினாலும், நீ கன்னியாகவே இருப்பாய்" என்றுகூறி
ஏமாற்றப்பட்டு அதன்பலனாக வேதவியாசனை பெற்றெடுத்த தாய். இதையும் அந்த மகாபாரதமே கூறுகிறது.

இந்த மகாபாரதம்தான் கிருஸ்ணன் என்ற பாத்திரத்தையும் கூறுகிறது. மேலே உள்ள கதையை உண்மை என்று ஏற்றுக்கொண்டவர்கள், கிருஸ்ணனை கடவுள் என்று ஏற்றுக்கொண்டதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

- வேணுகோபால சங்கர் - ஆறாம் அறிவு முகநூல் பதிவு (25.2.18)

சபரிமலை அய்யப்பனும் மாதவிடாய் ‘தீட்டு’ம்!

 


சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு வழிபடும் உரிமை இல்லை என்ற முறை அரசியல் சட்ட விரோதம் என்பதையும், ஆண்_பெண் சமத்துவ முறைக்கு முரணானது என்பதையும் சுட்டிக்காட்டி 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு வழக்கின் தலைமை நீதிபதி, மற்ற நீதிபதிகள் விசாரணையில் கேள்வி கேட்டுள்ளனர்; அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகளுக்கு இது எதிரானது என்றும் கூறியுள்ளனர்!

அதனால், மூத்த வழக்குரைஞர் மதிப்பிற்குரிய திரு.கே.பராசரன் அவர்களை வைத்து, பழமைவாதிகள் இந்த சம்பிரதாயத்தை காப்பாற்றிட, இவர்களை (10 வயது முதல் 50 வயதுக்குள் உள்ள பெண்கள் _ மாதவிடாய் _ ‘தீட்டு’ என்ற காரணம் கூறி அனுமதிக்கக் கூடாது என்று ஒரு புது விளக்கம் தந்து, எப்படியாவது இந்த சம்பிரதாயத்தை உடைக்கக் கூடாது; பழைய தடையே நீடிக்க வேண்டும் என்று வாதாடியுள்ளனர்.

மூத்த வழக்குரைஞர், “இதில்(Gender Bias) ஆண்_பெண் பேத வெறுப்பு _ பெண்களை வெறுக்கும் மனப்போக்குடன் கூறவில்லை என்றும், பழைய சம்பிரதாயத்தில் இது ஒரு மரபாக காக்கப்படுதல் வேண்டும்’’ என்று வாதாடியுள்ளார்!

மற்றொரு கோயில் ஆதரவு தரப்பு வழக்குரைஞர், “அய்யப்பன் ஒரு திருமணமாகாத கடவுள்; அதற்காகத்தான் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு அனுமதி இல்லை’’ என்றும் வாதாடியிருக்கிறார்!

திருமணமாகாத கடவுள்களை எல்லாப் பெண்களும் ஹிந்து மதத்தில் தரிசித்து வணங்குவதில்லையா?

பிள்ளையார் _ விநாயக் கடவுள் (Bachelor)) திருமணமாகாதவர்தானே எல்லா வயதுப் பெண்களும் அங்கு அனுமதிக்கப்படுகின்றனரே, அது சரியானால், இவ்வாதம் எடுபடக்கூடிய வாதமா? அசல் கேலிக்கூத்து அல்லவா?

பழைய சம்பிரதாயங்கள் பாதுகாக்கப் பட்டுள்ளன என்றால், கோயில் கருவறைக்குள் மின்சார விளக்கு ஏற்றலாமா? ஏர்_கண்டிஷன் வசதி உட்பட திருப்பதி உட்பட பல கோயில்களில் நடைமுறைப் படுத்தப்படுகிறதே!

இதே கேரளத்தில் பகவதியம்மன் கோயிலில் ‘தீட்டு’ _ மாதவிடாய்ப் பொருளை வைத்தே திருவிழா (செங்களட்சேரி என்று நினைவு) நடைபெறுகிறதே அது சரியா?

இப்படி பலப்பல கேள்விகள் எழும். நமது அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளில் மதச் சுதந்திரம் என்பது 25ஆவது பிரிவில“Subject to public order,
morality, and health and to the other provisions of this part” ” என்று 25ஆவது பிரிவுலும், 26ஆவது பிரிவில்,“Subject ot whole order, morality and health” என்று இருப்பதால், கட்டுப்பாடற்ற முழு மதச் சுதந்தரம் அல்ல; இதன்படி பெண்களைக் கூட ஒரு குறிப்பிட்ட வயதினர் என்று பிரிப்பது ஏற்கக் கூடியதல்ல.

வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பு எதிர்பார்க்கும் நிலையில், 5 நீதிபதிகள் கொண்ட அமர்பு, அரசியல் சட்டத்தின்படி உரிய தீர்ப்பை வழங்கி, மக்கள் தொகையின் சரி பகுதியான பெண்களுக்குரிய வழிபாட்டு உரிமையை நிலைநாட்டும் என்று நம்புகிறோம்!

- கி.வீரமணி,

ஆசிரியர், ‘உண்மை’

 -------------------------------------------------------------------------------------------------------------------------------------------


 


அய்யப்பன் பிரம்மச்சாரியா?


கேரளாவில் அய்யப்பன் கோயிலுக்குள் ஏன் பெண்களை அனுமதிக்கவில்லையென்றால், அய்யப்பன் பிரம்மச்சாரி எனவே, பெண்கள் செல்லக் கூடாது என்கின்றனர்.அய்யப்பன் பிரம்மச்சாரி என்பதே தப்பு, மோசடி. அய்யப்பனுக்கு ஒன்றல்ல இரண்டு மனைவிகள் - பூரணி, புஷ்கலை என்று இரண்டு மனைவிகள்!

 

அதிலும் புஷ்கலை சவ்ராஷ்டிரா பெண். ஒரு நெசவாளியின் மகள்! ஆச்சரியமாக இருக்கிறதா? அய்யப்பன் புஷ்கலையைத் திருமண-முடித்த புராணம் இதோ:சவ்ராஷ்ட்ரா பட்டு நெசவாளி திருவாங்கூர் மகாராசாவிற்கு பட்டுத் துணிகள் விற்க தன் மகள் புஷ்கலையை அழைத்துக் கொண்டு சென்றார். அவ்வாறு செல்லும் வழியில் அரியங்காவு (கிக்ஷீவீணீஸீளீணீஸ்u) என்ற இடத்திற்கு வரும்போது இரவு வந்துவிட்டது. எனவே, இரவு அங்குள்ள அய்யப்பன் கோயிலில் தங்கினர்.

மறுநாள் காலை தன் மகளை அழைத்துக் கொண்டு திருவாங்கூர் செல்ல பட்டு வியாபாரி தயாரான போது, “அப்பா நீங்கள் திருவாங்கூர் சென்று திரும்பி வரும் வரை நான் இந்தக் கோயிலிலே இருக்கிறேன். என்றாள்.

கோயில் குருக்கள் பொறுப்பில் மகளை விட்டுவிட்டு, திருவாங்கூர் நோக்கி காடுவழியே சென்றார். செல்லும் வழியில், யானை வந்து விரட்டியது.அஞ்சி நடுங்கிய வியாபாரி அய்யப்பனை வேண்டினார். அப்போது ஒரு வாலிப வேட்டைக்காரன் வந்து யானையை விரட்டி, வியாபாரியைக் காப்பாற்றினான்.

 

மகிழ்ச்சியடைந்த பட்டு வியாபாரி, ஒரு நல்ல பட்டுத்துணியை வேடனுக்குக் கொடுத்தார். பட்டை அணிந்த வேடன், “நான் உங்கள் பெண்ணை மணம் செய்து கொள்ள விரும்புகிறேன்!’’ என்று சட்டென்று சொல்ல, வியாபாரிக்கு வியப்பு மேலிட்டது. தனக்கு பெண் இருப்பது எப்படி இந்த வேடனுக்குத் தெரியும்? என்று திகைத்தார்.அப்போது அந்த வேடன் நாளை உங்களை அரியங்காவு கோயிலில் சந்திக்கிறேன் என்றான்.

பட்டு வியாபாரி மன்னனுக்குத் துணியைக் கொடுத்துவிட்டு, அரியங்காவு கோயிலுக்கு வந்து, மகளைத் தேடினார். மகளைக் காணவில்லை. அய்யப்பன் குருக்களின் கனவில் தோன்றி நான் புஷ்கலையை அவள் பக்திக்காக ஏற்றுக் கொண்டேன் என்று கூறியதை, குருக்கள் வியாபாரியிடம் சொன்னார்.

வியாபாரி கோயில் கதவைத் திறந்து அய்யப்பனைப் பார்த்தார். முதல்நாள் வேடனுக்குக் கொடுத்த பட்டுத்துணி அய்யப்பன் அணிந்திருந்தார்.’’ என்கிறது அந்தப் புராணம். புஷ்கலையை அய்யப்பன் திருமணம் செய்துகொண்டதை கடந்த 200 ஆண்டுகளாக மார்கழி மாதம் கொண்டாடுகிறார்கள்.

இந்த அய்யப்பனுக்கு பூரணி என்ற மனைவியும் உண்டு. அது மட்டுமல்ல, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அக்ரகாரம் தெருவில், ஆதிபுரீஸ்வரர் கோயிலில் அய்யப்பன் இரு மனைவிகளுடன் உள்ளார். எனவே, அய்யப்பன் பிரம்மச்சாரி என்று சொல்லி பெண்களைத் தடுப்பது பித்தலாட்டம், சட்டவிரோதம், மனித உரிமை மீறல் ஆகும்.

- உண்மை இதழ், 1-15.8.18

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

சபரிமலை அய்யப்பனும் மாதவிடாய் ‘தீட்டு’ம்!

 


சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு வழிபடும் உரிமை இல்லை என்ற முறை அரசியல் சட்ட விரோதம் என்பதையும், ஆண்_பெண் சமத்துவ முறைக்கு முரணானது என்பதையும் சுட்டிக்காட்டி 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு வழக்கின் தலைமை நீதிபதி, மற்ற நீதிபதிகள் விசாரணையில் கேள்வி கேட்டுள்ளனர்; அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகளுக்கு இது எதிரானது என்றும் கூறியுள்ளனர்!

அதனால், மூத்த வழக்குரைஞர் மதிப்பிற்குரிய திரு.கே.பராசரன் அவர்களை வைத்து, பழமைவாதிகள் இந்த சம்பிரதாயத்தை காப்பாற்றிட, இவர்களை (10 வயது முதல் 50 வயதுக்குள் உள்ள பெண்கள் _ மாதவிடாய் _ ‘தீட்டு’ என்ற காரணம் கூறி அனுமதிக்கக் கூடாது என்று ஒரு புது விளக்கம் தந்து, எப்படியாவது இந்த சம்பிரதாயத்தை உடைக்கக் கூடாது; பழைய தடையே நீடிக்க வேண்டும் என்று வாதாடியுள்ளனர்.

மூத்த வழக்குரைஞர், “இதில்(Gender Bias) ஆண்_பெண் பேத வெறுப்பு _ பெண்களை வெறுக்கும் மனப்போக்குடன் கூறவில்லை என்றும், பழைய சம்பிரதாயத்தில் இது ஒரு மரபாக காக்கப்படுதல் வேண்டும்’’ என்று வாதாடியுள்ளார்!

மற்றொரு கோயில் ஆதரவு தரப்பு வழக்குரைஞர், “அய்யப்பன் ஒரு திருமணமாகாத கடவுள்; அதற்காகத்தான் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு அனுமதி இல்லை’’ என்றும் வாதாடியிருக்கிறார்!

திருமணமாகாத கடவுள்களை எல்லாப் பெண்களும் ஹிந்து மதத்தில் தரிசித்து வணங்குவதில்லையா?

பிள்ளையார் _ விநாயக் கடவுள் (Bachelor)) திருமணமாகாதவர்தானே எல்லா வயதுப் பெண்களும் அங்கு அனுமதிக்கப்படுகின்றனரே, அது சரியானால், இவ்வாதம் எடுபடக்கூடிய வாதமா? அசல் கேலிக்கூத்து அல்லவா?

பழைய சம்பிரதாயங்கள் பாதுகாக்கப் பட்டுள்ளன என்றால், கோயில் கருவறைக்குள் மின்சார விளக்கு ஏற்றலாமா? ஏர்_கண்டிஷன் வசதி உட்பட திருப்பதி உட்பட பல கோயில்களில் நடைமுறைப் படுத்தப்படுகிறதே!

இதே கேரளத்தில் பகவதியம்மன் கோயிலில் ‘தீட்டு’ _ மாதவிடாய்ப் பொருளை வைத்தே திருவிழா (செங்களட்சேரி என்று நினைவு) நடைபெறுகிறதே அது சரியா?

இப்படி பலப்பல கேள்விகள் எழும். நமது அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளில் மதச் சுதந்திரம் என்பது 25ஆவது பிரிவில“Subject to public order,
morality, and health and to the other provisions of this part” ” என்று 25ஆவது பிரிவுலும், 26ஆவது பிரிவில்,“Subject ot whole order, morality and health” என்று இருப்பதால், கட்டுப்பாடற்ற முழு மதச் சுதந்தரம் அல்ல; இதன்படி பெண்களைக் கூட ஒரு குறிப்பிட்ட வயதினர் என்று பிரிப்பது ஏற்கக் கூடியதல்ல.

வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பு எதிர்பார்க்கும் நிலையில், 5 நீதிபதிகள் கொண்ட அமர்பு, அரசியல் சட்டத்தின்படி உரிய தீர்ப்பை வழங்கி, மக்கள் தொகையின் சரி பகுதியான பெண்களுக்குரிய வழிபாட்டு உரிமையை நிலைநாட்டும் என்று நம்புகிறோம்!

- கி.வீரமணி,

ஆசிரியர், ‘உண்மை’

 -------------------------------------------------------------------------------------------------------------------------------------------


 


அய்யப்பன் பிரம்மச்சாரியா?


கேரளாவில் அய்யப்பன் கோயிலுக்குள் ஏன் பெண்களை அனுமதிக்கவில்லையென்றால், அய்யப்பன் பிரம்மச்சாரி எனவே, பெண்கள் செல்லக் கூடாது என்கின்றனர்.அய்யப்பன் பிரம்மச்சாரி என்பதே தப்பு, மோசடி. அய்யப்பனுக்கு ஒன்றல்ல இரண்டு மனைவிகள் - பூரணி, புஷ்கலை என்று இரண்டு மனைவிகள்!

 

அதிலும் புஷ்கலை சவ்ராஷ்டிரா பெண். ஒரு நெசவாளியின் மகள்! ஆச்சரியமாக இருக்கிறதா? அய்யப்பன் புஷ்கலையைத் திருமண-முடித்த புராணம் இதோ:சவ்ராஷ்ட்ரா பட்டு நெசவாளி திருவாங்கூர் மகாராசாவிற்கு பட்டுத் துணிகள் விற்க தன் மகள் புஷ்கலையை அழைத்துக் கொண்டு சென்றார். அவ்வாறு செல்லும் வழியில் அரியங்காவு (கிக்ஷீவீணீஸீளீணீஸ்u) என்ற இடத்திற்கு வரும்போது இரவு வந்துவிட்டது. எனவே, இரவு அங்குள்ள அய்யப்பன் கோயிலில் தங்கினர்.

மறுநாள் காலை தன் மகளை அழைத்துக் கொண்டு திருவாங்கூர் செல்ல பட்டு வியாபாரி தயாரான போது, “அப்பா நீங்கள் திருவாங்கூர் சென்று திரும்பி வரும் வரை நான் இந்தக் கோயிலிலே இருக்கிறேன். என்றாள்.

கோயில் குருக்கள் பொறுப்பில் மகளை விட்டுவிட்டு, திருவாங்கூர் நோக்கி காடுவழியே சென்றார். செல்லும் வழியில், யானை வந்து விரட்டியது.அஞ்சி நடுங்கிய வியாபாரி அய்யப்பனை வேண்டினார். அப்போது ஒரு வாலிப வேட்டைக்காரன் வந்து யானையை விரட்டி, வியாபாரியைக் காப்பாற்றினான்.

 

மகிழ்ச்சியடைந்த பட்டு வியாபாரி, ஒரு நல்ல பட்டுத்துணியை வேடனுக்குக் கொடுத்தார். பட்டை அணிந்த வேடன், “நான் உங்கள் பெண்ணை மணம் செய்து கொள்ள விரும்புகிறேன்!’’ என்று சட்டென்று சொல்ல, வியாபாரிக்கு வியப்பு மேலிட்டது. தனக்கு பெண் இருப்பது எப்படி இந்த வேடனுக்குத் தெரியும்? என்று திகைத்தார்.அப்போது அந்த வேடன் நாளை உங்களை அரியங்காவு கோயிலில் சந்திக்கிறேன் என்றான்.

பட்டு வியாபாரி மன்னனுக்குத் துணியைக் கொடுத்துவிட்டு, அரியங்காவு கோயிலுக்கு வந்து, மகளைத் தேடினார். மகளைக் காணவில்லை. அய்யப்பன் குருக்களின் கனவில் தோன்றி நான் புஷ்கலையை அவள் பக்திக்காக ஏற்றுக் கொண்டேன் என்று கூறியதை, குருக்கள் வியாபாரியிடம் சொன்னார்.

வியாபாரி கோயில் கதவைத் திறந்து அய்யப்பனைப் பார்த்தார். முதல்நாள் வேடனுக்குக் கொடுத்த பட்டுத்துணி அய்யப்பன் அணிந்திருந்தார்.’’ என்கிறது அந்தப் புராணம். புஷ்கலையை அய்யப்பன் திருமணம் செய்துகொண்டதை கடந்த 200 ஆண்டுகளாக மார்கழி மாதம் கொண்டாடுகிறார்கள்.

இந்த அய்யப்பனுக்கு பூரணி என்ற மனைவியும் உண்டு. அது மட்டுமல்ல, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அக்ரகாரம் தெருவில், ஆதிபுரீஸ்வரர் கோயிலில் அய்யப்பன் இரு மனைவிகளுடன் உள்ளார். எனவே, அய்யப்பன் பிரம்மச்சாரி என்று சொல்லி பெண்களைத் தடுப்பது பித்தலாட்டம், சட்டவிரோதம், மனித உரிமை மீறல் ஆகும்.

- உண்மை இதழ், 1-15.8.18

சபரிமலை அய்யப்பனும் மாதவிடாய் ‘தீட்டு’ம்!

 


சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு வழிபடும் உரிமை இல்லை என்ற முறை அரசியல் சட்ட விரோதம் என்பதையும், ஆண்_பெண் சமத்துவ முறைக்கு முரணானது என்பதையும் சுட்டிக்காட்டி 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு வழக்கின் தலைமை நீதிபதி, மற்ற நீதிபதிகள் விசாரணையில் கேள்வி கேட்டுள்ளனர்; அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகளுக்கு இது எதிரானது என்றும் கூறியுள்ளனர்!

அதனால், மூத்த வழக்குரைஞர் மதிப்பிற்குரிய திரு.கே.பராசரன் அவர்களை வைத்து, பழமைவாதிகள் இந்த சம்பிரதாயத்தை காப்பாற்றிட, இவர்களை (10 வயது முதல் 50 வயதுக்குள் உள்ள பெண்கள் _ மாதவிடாய் _ ‘தீட்டு’ என்ற காரணம் கூறி அனுமதிக்கக் கூடாது என்று ஒரு புது விளக்கம் தந்து, எப்படியாவது இந்த சம்பிரதாயத்தை உடைக்கக் கூடாது; பழைய தடையே நீடிக்க வேண்டும் என்று வாதாடியுள்ளனர்.

மூத்த வழக்குரைஞர், “இதில்(Gender Bias) ஆண்_பெண் பேத வெறுப்பு _ பெண்களை வெறுக்கும் மனப்போக்குடன் கூறவில்லை என்றும், பழைய சம்பிரதாயத்தில் இது ஒரு மரபாக காக்கப்படுதல் வேண்டும்’’ என்று வாதாடியுள்ளார்!

மற்றொரு கோயில் ஆதரவு தரப்பு வழக்குரைஞர், “அய்யப்பன் ஒரு திருமணமாகாத கடவுள்; அதற்காகத்தான் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு அனுமதி இல்லை’’ என்றும் வாதாடியிருக்கிறார்!

திருமணமாகாத கடவுள்களை எல்லாப் பெண்களும் ஹிந்து மதத்தில் தரிசித்து வணங்குவதில்லையா?

பிள்ளையார் _ விநாயக் கடவுள் (Bachelor)) திருமணமாகாதவர்தானே எல்லா வயதுப் பெண்களும் அங்கு அனுமதிக்கப்படுகின்றனரே, அது சரியானால், இவ்வாதம் எடுபடக்கூடிய வாதமா? அசல் கேலிக்கூத்து அல்லவா?

பழைய சம்பிரதாயங்கள் பாதுகாக்கப் பட்டுள்ளன என்றால், கோயில் கருவறைக்குள் மின்சார விளக்கு ஏற்றலாமா? ஏர்_கண்டிஷன் வசதி உட்பட திருப்பதி உட்பட பல கோயில்களில் நடைமுறைப் படுத்தப்படுகிறதே!

இதே கேரளத்தில் பகவதியம்மன் கோயிலில் ‘தீட்டு’ _ மாதவிடாய்ப் பொருளை வைத்தே திருவிழா (செங்களட்சேரி என்று நினைவு) நடைபெறுகிறதே அது சரியா?

இப்படி பலப்பல கேள்விகள் எழும். நமது அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளில் மதச் சுதந்திரம் என்பது 25ஆவது பிரிவில“Subject to public order,
morality, and health and to the other provisions of this part” ” என்று 25ஆவது பிரிவுலும், 26ஆவது பிரிவில்,“Subject ot whole order, morality and health” என்று இருப்பதால், கட்டுப்பாடற்ற முழு மதச் சுதந்தரம் அல்ல; இதன்படி பெண்களைக் கூட ஒரு குறிப்பிட்ட வயதினர் என்று பிரிப்பது ஏற்கக் கூடியதல்ல.

வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பு எதிர்பார்க்கும் நிலையில், 5 நீதிபதிகள் கொண்ட அமர்பு, அரசியல் சட்டத்தின்படி உரிய தீர்ப்பை வழங்கி, மக்கள் தொகையின் சரி பகுதியான பெண்களுக்குரிய வழிபாட்டு உரிமையை நிலைநாட்டும் என்று நம்புகிறோம்!

- கி.வீரமணி,

ஆசிரியர், ‘உண்மை’

 -------------------------------------------------------------------------------------------------------------------------------------------


 


அய்யப்பன் பிரம்மச்சாரியா?


கேரளாவில் அய்யப்பன் கோயிலுக்குள் ஏன் பெண்களை அனுமதிக்கவில்லையென்றால், அய்யப்பன் பிரம்மச்சாரி எனவே, பெண்கள் செல்லக் கூடாது என்கின்றனர்.அய்யப்பன் பிரம்மச்சாரி என்பதே தப்பு, மோசடி. அய்யப்பனுக்கு ஒன்றல்ல இரண்டு மனைவிகள் - பூரணி, புஷ்கலை என்று இரண்டு மனைவிகள்!

 

அதிலும் புஷ்கலை சவ்ராஷ்டிரா பெண். ஒரு நெசவாளியின் மகள்! ஆச்சரியமாக இருக்கிறதா? அய்யப்பன் புஷ்கலையைத் திருமண-முடித்த புராணம் இதோ:சவ்ராஷ்ட்ரா பட்டு நெசவாளி திருவாங்கூர் மகாராசாவிற்கு பட்டுத் துணிகள் விற்க தன் மகள் புஷ்கலையை அழைத்துக் கொண்டு சென்றார். அவ்வாறு செல்லும் வழியில் அரியங்காவு (கிக்ஷீவீணீஸீளீணீஸ்u) என்ற இடத்திற்கு வரும்போது இரவு வந்துவிட்டது. எனவே, இரவு அங்குள்ள அய்யப்பன் கோயிலில் தங்கினர்.

மறுநாள் காலை தன் மகளை அழைத்துக் கொண்டு திருவாங்கூர் செல்ல பட்டு வியாபாரி தயாரான போது, “அப்பா நீங்கள் திருவாங்கூர் சென்று திரும்பி வரும் வரை நான் இந்தக் கோயிலிலே இருக்கிறேன். என்றாள்.

கோயில் குருக்கள் பொறுப்பில் மகளை விட்டுவிட்டு, திருவாங்கூர் நோக்கி காடுவழியே சென்றார். செல்லும் வழியில், யானை வந்து விரட்டியது.அஞ்சி நடுங்கிய வியாபாரி அய்யப்பனை வேண்டினார். அப்போது ஒரு வாலிப வேட்டைக்காரன் வந்து யானையை விரட்டி, வியாபாரியைக் காப்பாற்றினான்.

 

மகிழ்ச்சியடைந்த பட்டு வியாபாரி, ஒரு நல்ல பட்டுத்துணியை வேடனுக்குக் கொடுத்தார். பட்டை அணிந்த வேடன், “நான் உங்கள் பெண்ணை மணம் செய்து கொள்ள விரும்புகிறேன்!’’ என்று சட்டென்று சொல்ல, வியாபாரிக்கு வியப்பு மேலிட்டது. தனக்கு பெண் இருப்பது எப்படி இந்த வேடனுக்குத் தெரியும்? என்று திகைத்தார்.அப்போது அந்த வேடன் நாளை உங்களை அரியங்காவு கோயிலில் சந்திக்கிறேன் என்றான்.

பட்டு வியாபாரி மன்னனுக்குத் துணியைக் கொடுத்துவிட்டு, அரியங்காவு கோயிலுக்கு வந்து, மகளைத் தேடினார். மகளைக் காணவில்லை. அய்யப்பன் குருக்களின் கனவில் தோன்றி நான் புஷ்கலையை அவள் பக்திக்காக ஏற்றுக் கொண்டேன் என்று கூறியதை, குருக்கள் வியாபாரியிடம் சொன்னார்.

வியாபாரி கோயில் கதவைத் திறந்து அய்யப்பனைப் பார்த்தார். முதல்நாள் வேடனுக்குக் கொடுத்த பட்டுத்துணி அய்யப்பன் அணிந்திருந்தார்.’’ என்கிறது அந்தப் புராணம். புஷ்கலையை அய்யப்பன் திருமணம் செய்துகொண்டதை கடந்த 200 ஆண்டுகளாக மார்கழி மாதம் கொண்டாடுகிறார்கள்.

இந்த அய்யப்பனுக்கு பூரணி என்ற மனைவியும் உண்டு. அது மட்டுமல்ல, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அக்ரகாரம் தெருவில், ஆதிபுரீஸ்வரர் கோயிலில் அய்யப்பன் இரு மனைவிகளுடன் உள்ளார். எனவே, அய்யப்பன் பிரம்மச்சாரி என்று சொல்லி பெண்களைத் தடுப்பது பித்தலாட்டம், சட்டவிரோதம், மனித உரிமை மீறல் ஆகும்.

- உண்மை இதழ், 1-15.8.18

சபரிமலை அய்யப்பனும் மாதவிடாய் ‘தீட்டு’ம்!

 


சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு வழிபடும் உரிமை இல்லை என்ற முறை அரசியல் சட்ட விரோதம் என்பதையும், ஆண்_பெண் சமத்துவ முறைக்கு முரணானது என்பதையும் சுட்டிக்காட்டி 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு வழக்கின் தலைமை நீதிபதி, மற்ற நீதிபதிகள் விசாரணையில் கேள்வி கேட்டுள்ளனர்; அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகளுக்கு இது எதிரானது என்றும் கூறியுள்ளனர்!

அதனால், மூத்த வழக்குரைஞர் மதிப்பிற்குரிய திரு.கே.பராசரன் அவர்களை வைத்து, பழமைவாதிகள் இந்த சம்பிரதாயத்தை காப்பாற்றிட, இவர்களை (10 வயது முதல் 50 வயதுக்குள் உள்ள பெண்கள் _ மாதவிடாய் _ ‘தீட்டு’ என்ற காரணம் கூறி அனுமதிக்கக் கூடாது என்று ஒரு புது விளக்கம் தந்து, எப்படியாவது இந்த சம்பிரதாயத்தை உடைக்கக் கூடாது; பழைய தடையே நீடிக்க வேண்டும் என்று வாதாடியுள்ளனர்.

மூத்த வழக்குரைஞர், “இதில்(Gender Bias) ஆண்_பெண் பேத வெறுப்பு _ பெண்களை வெறுக்கும் மனப்போக்குடன் கூறவில்லை என்றும், பழைய சம்பிரதாயத்தில் இது ஒரு மரபாக காக்கப்படுதல் வேண்டும்’’ என்று வாதாடியுள்ளார்!

மற்றொரு கோயில் ஆதரவு தரப்பு வழக்குரைஞர், “அய்யப்பன் ஒரு திருமணமாகாத கடவுள்; அதற்காகத்தான் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு அனுமதி இல்லை’’ என்றும் வாதாடியிருக்கிறார்!

திருமணமாகாத கடவுள்களை எல்லாப் பெண்களும் ஹிந்து மதத்தில் தரிசித்து வணங்குவதில்லையா?

பிள்ளையார் _ விநாயக் கடவுள் (Bachelor)) திருமணமாகாதவர்தானே எல்லா வயதுப் பெண்களும் அங்கு அனுமதிக்கப்படுகின்றனரே, அது சரியானால், இவ்வாதம் எடுபடக்கூடிய வாதமா? அசல் கேலிக்கூத்து அல்லவா?

பழைய சம்பிரதாயங்கள் பாதுகாக்கப் பட்டுள்ளன என்றால், கோயில் கருவறைக்குள் மின்சார விளக்கு ஏற்றலாமா? ஏர்_கண்டிஷன் வசதி உட்பட திருப்பதி உட்பட பல கோயில்களில் நடைமுறைப் படுத்தப்படுகிறதே!

இதே கேரளத்தில் பகவதியம்மன் கோயிலில் ‘தீட்டு’ _ மாதவிடாய்ப் பொருளை வைத்தே திருவிழா (செங்களட்சேரி என்று நினைவு) நடைபெறுகிறதே அது சரியா?

இப்படி பலப்பல கேள்விகள் எழும். நமது அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளில் மதச் சுதந்திரம் என்பது 25ஆவது பிரிவில“Subject to public order,
morality, and health and to the other provisions of this part” ” என்று 25ஆவது பிரிவுலும், 26ஆவது பிரிவில்,“Subject ot whole order, morality and health” என்று இருப்பதால், கட்டுப்பாடற்ற முழு மதச் சுதந்தரம் அல்ல; இதன்படி பெண்களைக் கூட ஒரு குறிப்பிட்ட வயதினர் என்று பிரிப்பது ஏற்கக் கூடியதல்ல.

வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பு எதிர்பார்க்கும் நிலையில், 5 நீதிபதிகள் கொண்ட அமர்பு, அரசியல் சட்டத்தின்படி உரிய தீர்ப்பை வழங்கி, மக்கள் தொகையின் சரி பகுதியான பெண்களுக்குரிய வழிபாட்டு உரிமையை நிலைநாட்டும் என்று நம்புகிறோம்!

- கி.வீரமணி,

ஆசிரியர், ‘உண்மை’

 -------------------------------------------------------------------------------------------------------------------------------------------


 


அய்யப்பன் பிரம்மச்சாரியா?


கேரளாவில் அய்யப்பன் கோயிலுக்குள் ஏன் பெண்களை அனுமதிக்கவில்லையென்றால், அய்யப்பன் பிரம்மச்சாரி எனவே, பெண்கள் செல்லக் கூடாது என்கின்றனர்.அய்யப்பன் பிரம்மச்சாரி என்பதே தப்பு, மோசடி. அய்யப்பனுக்கு ஒன்றல்ல இரண்டு மனைவிகள் - பூரணி, புஷ்கலை என்று இரண்டு மனைவிகள்!

 

அதிலும் புஷ்கலை சவ்ராஷ்டிரா பெண். ஒரு நெசவாளியின் மகள்! ஆச்சரியமாக இருக்கிறதா? அய்யப்பன் புஷ்கலையைத் திருமண-முடித்த புராணம் இதோ:சவ்ராஷ்ட்ரா பட்டு நெசவாளி திருவாங்கூர் மகாராசாவிற்கு பட்டுத் துணிகள் விற்க தன் மகள் புஷ்கலையை அழைத்துக் கொண்டு சென்றார். அவ்வாறு செல்லும் வழியில் அரியங்காவு (கிக்ஷீவீணீஸீளீணீஸ்u) என்ற இடத்திற்கு வரும்போது இரவு வந்துவிட்டது. எனவே, இரவு அங்குள்ள அய்யப்பன் கோயிலில் தங்கினர்.

மறுநாள் காலை தன் மகளை அழைத்துக் கொண்டு திருவாங்கூர் செல்ல பட்டு வியாபாரி தயாரான போது, “அப்பா நீங்கள் திருவாங்கூர் சென்று திரும்பி வரும் வரை நான் இந்தக் கோயிலிலே இருக்கிறேன். என்றாள்.

கோயில் குருக்கள் பொறுப்பில் மகளை விட்டுவிட்டு, திருவாங்கூர் நோக்கி காடுவழியே சென்றார். செல்லும் வழியில், யானை வந்து விரட்டியது.அஞ்சி நடுங்கிய வியாபாரி அய்யப்பனை வேண்டினார். அப்போது ஒரு வாலிப வேட்டைக்காரன் வந்து யானையை விரட்டி, வியாபாரியைக் காப்பாற்றினான்.

 

மகிழ்ச்சியடைந்த பட்டு வியாபாரி, ஒரு நல்ல பட்டுத்துணியை வேடனுக்குக் கொடுத்தார். பட்டை அணிந்த வேடன், “நான் உங்கள் பெண்ணை மணம் செய்து கொள்ள விரும்புகிறேன்!’’ என்று சட்டென்று சொல்ல, வியாபாரிக்கு வியப்பு மேலிட்டது. தனக்கு பெண் இருப்பது எப்படி இந்த வேடனுக்குத் தெரியும்? என்று திகைத்தார்.அப்போது அந்த வேடன் நாளை உங்களை அரியங்காவு கோயிலில் சந்திக்கிறேன் என்றான்.

பட்டு வியாபாரி மன்னனுக்குத் துணியைக் கொடுத்துவிட்டு, அரியங்காவு கோயிலுக்கு வந்து, மகளைத் தேடினார். மகளைக் காணவில்லை. அய்யப்பன் குருக்களின் கனவில் தோன்றி நான் புஷ்கலையை அவள் பக்திக்காக ஏற்றுக் கொண்டேன் என்று கூறியதை, குருக்கள் வியாபாரியிடம் சொன்னார்.

வியாபாரி கோயில் கதவைத் திறந்து அய்யப்பனைப் பார்த்தார். முதல்நாள் வேடனுக்குக் கொடுத்த பட்டுத்துணி அய்யப்பன் அணிந்திருந்தார்.’’ என்கிறது அந்தப் புராணம். புஷ்கலையை அய்யப்பன் திருமணம் செய்துகொண்டதை கடந்த 200 ஆண்டுகளாக மார்கழி மாதம் கொண்டாடுகிறார்கள்.

இந்த அய்யப்பனுக்கு பூரணி என்ற மனைவியும் உண்டு. அது மட்டுமல்ல, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அக்ரகாரம் தெருவில், ஆதிபுரீஸ்வரர் கோயிலில் அய்யப்பன் இரு மனைவிகளுடன் உள்ளார். எனவே, அய்யப்பன் பிரம்மச்சாரி என்று சொல்லி பெண்களைத் தடுப்பது பித்தலாட்டம், சட்டவிரோதம், மனித உரிமை மீறல் ஆகும்.

- உண்மை இதழ், 1-15.8.18

இந்து மதம் 07.06.1931 - குடிஅரசிலிருந்து....

இந்து மதம், இஸ்லாமானவர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் கொள்கையில் எவ்வளவு கெடுதியோ அதைவிடப் பல மடங்கான கெடுதிகளை பார்ப்பனரல்லாத மக்களுக்கு  காரியத்தில் விளைவிக் கின்றது.  அதைவிடப் பன்மடங்கே தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் விளைவிக்கின்றது.

இஸ்லாம் ஆனவர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இந்து மதத்தால் யாதொரு கெடுதியும் இல்லை என்று சொல்லலாம்.  இஸ்லாமியரையும், கிறிஸ்தவரையும். இந்துக்கள் வேறாகக் கருதுகின்றார்கள்.

தங்கள் சமுகத்திற்கு எதிராய் கருதுகின்றார்கள் என்பதைத் தவிர வேறில்லை.  பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பயனாய் அவர்கள் பார்ப்பன ரொழிந்த இந்துக்களைவிட சற்று அதிகமாக நிலையில் லாபமே அடைந்திருக் கிறார்கள்.

ஆனால், இந்துமதம் காரணமாக பார்ப்பனரல்லாதாரும் தீண்டா தாரும் இழிவாய் நடத்தப்படுவதுடன் சுயமரியாதை இல்லாத முறையிலும், சுதந்திரமில்லாமலும் நடத்தப்படுகிறார்கள்.

மேலும் இவர்களைப் பார்ப்பனர்கள் அடிமையாக்கிக் கொண்டும், இவர்களது கஷ்டத்தின் பயன்களை அனுபவித்துக் கொண்டும் இவர்களைத் (பார்ப்பனரல்லாதாரையும், தீண்டாதாரையும்) தலை யெடுக்கச் செய்யாமலும் செய்து வருகிறார்கள்.

இந்து மதம் என்பதாக ஒன்று இருப்பது இஸ்லாமானவர்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் மற்றொரு விதத்தில் லாபகரமானதென்றே சொல்லலாம். எப்படியெனில் மேற்கண்ட இரண்டு மதமும் இரண்டு சமுக எண்ணிக்கையிலும் பெருக்க மேற்படுவதற்கு இந்து மதமே காரணமாயிருக்கின்றது.

இந்தியாவில் இந்து மதமில்லாமல் வேறு புத்த மதம், கிறிஸ்து மதம் ஆகியவை இருந்திருந்தால் இஸ்லாம் மதம் சமுக எண்ணிக்கை இவ்வளவு பெருகி இருக்காது.

அதுபோலவே, வேறு மதங்கள் இருந்திருந்தால் கிறிஸ்து மத சமுக எண்ணிகையும் இவ்வளவு பெருகி இருக்காது.  ஆகவே அவ் விஷ யத்தில் இந்து மதம்  இருப்பது முஸ்லீம், கிறிஸ்தவ மதங்களுக்கு லாபமேயாகும்.

ஆகையால், இந்து மதத்தை ஒழிக்க வேண்டியதென்பது இந்திய பார்ப்பனரல்லாத மக்களுக்கும், அவர்களில் தீண்டப்படாதார் என்கின்ற மக்களுக்கும் தான் மிகவும் அவசியமானது என்று சொல்லுவோம்.

இதோடு ஏழைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் கூட சமத்துவமும், பொது உடைமை தத்துவமும் ஏற்பட வேண்டுமானால் முதலில் இந்து மதம் ஒழிய வேண்டியது மிகவும் அவசியமாகும்.

- விடுதலை நாளேடு,10.8.18