ஞாயிறு, 6 நவம்பர், 2016

ஆகமமும் மதம் மாறிய புத்தர் கோயில்களும்


ஆகமமும் மதம் மாறிய புத்தர்  கோயில்களும்

பொறியாளர்
ப.கோவிந்தராசன் BE,MBA,MA,MA


மனு சாஸ்திரம் அரசர்களையும் பொது மக்களையும் தங்கள் கட்டுப் பாட்டில் வைத்துக் கொள்ள ஆரியர் களால் உருவாக்கப்பட்டது. அதேபோல் கடவுள்களை உருவாக்க முதலில் வேதங்களையும் பல நூறு ஆண்டு களுக்குப் பின்னர் புராணங்களையும், இராமாயணத்தையும், மகாபாரதத் தையும் உருவாக்கினார்கள்.
பக்தி என்ற பெயரால் கோவில்களையும் பின்னர் அந்த கோவில்களை நிர்வகிக்க ஆக மத்தை பயன்படுத்தினார்கள். இத்தகைய ஆரியர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டவும் பிற மதங்களை அழிக்கவும் கோயில்களை எவ்வாறு பயன்படுத் தினார்கள் என்பதையும் தொகுத்து அளிக்கப்படுகிறது
2. ஆகமத்தின் வரலாறு:-
மெசபடோமிய நாகரிக காலத்தில் கோயில்கள் களிமண்ணைக் கொண்டும் செங்கல்லைக் கொண்டும் கட்டப் பட்டன. ஆகையால் கோயில்கள் அடிக்கடி பழுது பார்க்கப்பட்டன என் றும் சில குறிப்பிட்ட கால இடை வெளியில் (குடமுழுக்குப் போல) புதுப் பிக்கப்பட்டன என்றும் வரலாற்று நூல்கள் கூறுகின்றன (பக்73 நூல்-ஹிஸ்டரி வெளியீடு டி.கே. பப்ளிகேசன். தொகுப்பு ஆடம் ஹார்ட்- டேவிஸ் )
இது போல சிந்து சமவெளி காலத் தில் மாடிக் கட்டடங்கள் பொது குளியல் இடங்கள் தானியக் கிடங்குகள் கட்டுவதற்கும் செங்கலைப் பயன்படுத் தினார்கள். காளி, பசுபதி போன்ற தெய்வங்களையும் வணங்கினார்கள்.
எனவே சிந்து வெளி மக்கள் விக்கிரக ஆராதனை செய்ய கோவில்களை கட்ட செங்கலை   பயன்படுத்தியிருக்க வேண்டும். மேலும் திட்டமிட்டு நகரங் களை உருவாக்கிய சிந்துவெளி மக்கள் கோவில்களை கட்டுவதற்கு ஆகமம் போன்ற விதி முறைகளை கடைப்பிடித் திருக்க வேண்டும். எனவே ஆரியர்கள் ரிக் வேதம் உருவாக்குவதற்கு முன்னரே ஆகமம் தோன்றியிருக்க வேண்டும்.
வேத மதத் தோற்றத்தின் பின்பு எழுதப்பட்ட வரலாற்று நூல்களின்படி பல்லவர்கள் காலம் கிபி 575 வரை கோயில்கள் குகைக் கோயில்களாகவே இருந்தன. கருங்கல் செங்கல் போன்ற வற்றை பயன்படுத்தவில்லை. எனவே கோயில்கள் கட்டப்படவில்லை. ஆனால் அவை பாறைகளை குடைந்து உருவாக்கப்பட்டன.
இதனால் மகேந்திர வர்ம பல்லவர் காலம் (கிபி 615முதல் 630) வரை கோயில் கட்டுமானக்கலை தோன் றவில்லை என அறியலாம். இதனால் ஆகமமும் தோன்றவில்லை இதை விளக்க மகேந்திர வர்மன் உருவாக்கிய குடைவறை கோயில்கள் உள்ள  இடங் கள் மண்டகப்பட்டு மாமண்டூர்
மகேந்திரவாடி தளவானுர் பல்லா வரம் சீயமங்கலம் சிராப்பள்ளி ஆகும். (நூல் -மகேந்திரர் குடை வறைகள் ஆசிரியர்.-- மு.நளினி இரா. கலைக் கோவன்) மகேந்திரனுக்குப் பின் ஆட்சி செய்த நரசிம்ம பல்லவன் காலத்தில் (கி.பி 630 முதல் 681 வரை)தான் முதன் முதலாக செங்கல் மற்றும் கருங்கல்லால் ஆன கோயில்கள் கட்டப்பட்டன.
இதுவே சோழர் காலத்தில் மலையே இல்லாத தஞ்சைப் பகுதியில் மலை போல்  உயர்ந்த கோபுரங்கள் அமையக் காரணமாகும். இவ்வாறு அமைக்கப் பட்ட கோயில்கள் உள்ள கர்ப்ப கிரகம் குடைவரை கோயில்களில் உள்ளது போல் மிகச் சிறியதாக இருக்கும்.
இந்த கருவறைக்குள் செல்லவும் தமிழால் ஓதி வழிபடவும் அனைத்து ஜாதியினரும் பல்லவர் காலத்தில் அனுமதிக்கப்பட் டனர். இதன் பின்னர் சோழர்கள் ஆட் சியில் கருவறைக்குள் பாரப்பனர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
எனவே ஆகமம் சோழர்கள் காலத்தில் தான். தோன்றியிருக்க வேண்டும் மற்றும் ஜாதி பேதம் அதிகரித்து இருக்க வேண்டும். இதனை விளக்கும் பாடல் சிலவற்றை காணலாம் ( பக்கம் 206 நூல் -தமிழர் நாகரிக வரலாறு- ஆசிரியர்- முனைவர் -இறையரசன்)
1. சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்
கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்
ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக் கரந்தார்க் கன்பானாகில்
அவர் கண்டீர் யாம் வணங்கும் கடவுளாரே- (திருநாவுக்கரசர்)
2. சாதிப் பிரிவினிலே தீ மூட்டுவோம்
சந்தை வெளியினிலே கோல் நாட்டுவோம்
பறைச்சி யாவதேதடா பணத்தியாவதேடா
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டிருக்குதோ.
(சிவ வாக்கியர்)
3. காணப்பா சாதிகுலம் எங்கட்கில்லை
கருத்துடனே எங்குலம் சுக்கிலந்தான்மைந்தா
தோணப்பா தோணமற் சாதிபேதஞ்
சொல்லுவான் சுருக்குமாகச் சுருண்டு போவான் (காகபுசுண்டர்)
(நூல் ஆசிரியர் முனைவர் இறைய ரசன் நூல்-- தமிழர் நாகரிக வரலாறு)
3. ஆகமத்தின் வகைகள்
ஒவ்வொரு மதத்திற்கும் உரிய முதன்மை கடவுளை வழிபடுவதற்கு ஏற்றவாறு  ஆகமங்கள் உருவாக்கப்பட் டுள்ளன. அவை
1. சைவம் (சிவன்) 2. வைணவம் (விஷ்ணு) 3. பவுத்தம் (புத்தர்) 4. சாக்தம் (பெண் தெய்வங்கள்) 5. பாகவதம் (வசுதேவர்)
சைவ மதத்தில் உள்ள பிரிவுகள்--- ஆகமவாதிகள் சுத்த சைவம்; வீரசைவம் கபாலிகர் (கிபி 13ஆம் நுற்றாண்டு) காளாமுகர். வைணவ மதத்தில் உள்ள பிரிவுகள் --பாகவதம் (வசுதேவர்) பஞ்சராத்ரா அல்லது 5 ராத்திரிகள் (நாராயணன்). மேலும் வடகலை (சமஸ்கிருத மொழிக்கு முன்னுரிமை) தென்கலை (தமிழ் மொழிக்கு முன்னு ரிமை).
பின்னர் பஞ்சராத்ராவுடன் பாகவதம் இணைந்தது.
இதில் மகாயானப் பிரிவை சேர்ந்த பவுத்தர்கள் புத்தரை தெய்வமாகக் கருதி வணங்கினார்கள். இந்த மகாயானம் மூன்றாம் கனிஷ்கர் காலத்தில் (கிமு 100 முதல் கிபி.200 வரை) பிரிந்தது. மகாயானத்தைச் சேர்ந்தவர்கள் புத்த ஆகமத்தை பாலி மொழியில் எழுதி னார்கள்.
சிவ ஆகமம் மற்றும் வைணவ ஆகமம் முதன் முதலில் தமிழ் கிரந்த எழுத்துக்களில் பல்லவர் காலத்துக்குப் பின்னர் எழுதப்பட்டது. அப்போது இந்து மதம் தோன்றவில்லை. எனவே இந்து கோயில்களுக்கு என்று தனியே ஆகமம் இதுவரை எழுதப்படவில்லை.
அதே சமயத்தில் வட இந்தியாவில்  ஆகமம் எதுவும் இயற்றப்படவில்லை. இதனால் பெரும்பாலான கோயில்கள் ஆகம விதிகளின்படி கட்டப்பட வில்லை எனவரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள் மேலும் வடஇந்தியா விலிருந்து பல்லவ மற்றும் சோழ மன்னர்கள் பலரால் அழைத்து வந்த பிராமணர்களுக்கு ஆகமத்தைப் பற்றி தெரிய வாய்ப்பு இல்லை எனக் கூற லாம்.
பின்னர் தமிழும் சமஸ்கிருதமும் அறிந்தவர்களால் ஆகமங்கள் சமஸ் கிருதத்தில் மொழிமாற்றம் செய்யப் பட்டன.  பின்னர் வைணவ மதம் வடகலை தென்கலை என இரு பிரிவுகள் மொழி அடிப்படையில் தோன்றின. தென்கலை பிரிவில் தமிழ் மொழிக்கு முதலிடம் தரப்படுகின்றது.
வடகலைப்பிரிவில் சமஸ்கிருத்திற்கு முன்னுரிமை தரப்படுகிறது ஆழ் வார்கள் காலத்தில் (கிபி 8-ஆம் நூற் றாண்டில் வாழ்ந்த ஆண்டாள், தன் காதலை தமிழ் பாசுரங்களின் மூலம் வெளிப்படுத்தி ரங்கநாதரை மணந்து கொண்டது இங்கே நினைவு கூரலாம்.
4. ஆகமத்தின் கூறுகள்  ஆகமம் என்றால் கோவில் கட்டியதிலிருந்து வழிபாட்டு முறை முதலான  எல்லா கூறுகளிலும் காலங் காலமாக கடைப் பிடிக்கப்படும் மரபுகளைக் குறிப்ப தாகும்.ஆகமங்கள் என்பவை 1. மதக் கோட்பாடுகள் 2. கோயில்  அமைப்பு கட்டுமானம் பராமரிப்பு. 3. யோகா 4. வழிபாடு மற்றும் சடங்குகள் ஆகிய கூறுகளை கொண்டவை ஆகும்.
ஆகமம் ஆரியர் வருகைக்கு முன்பே  கோயில்கள் உருவாகின என புத்த மதக் கோயில்கள்ஆகமத்தின் அடிப் படையில் கட்டப்பட்டவை எனக் கருதலாம். ஒவ்வொரு அரசர்கள் காலத்திலும் கடவுள் கொள்கைகளில் கடவுள்களின் வடிவமைப்பு மற்றும் கோயில் கட்டுமானம் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டன அதனால் ஆகமங்கள் எவ்வாறு மாற்றம் அடைந் தன என்பதை இனி காணலாம்
5. புத்தமதம் வலுவிழத்தலும் பிராமண மதம் வளர்ச்சியும் பேரரசன் அசோகனின் மவுரிய சாம்ராஜ்யம் அவனது மறைவுக்குப் பின் வலிமை குன்றியது. பின்னர் கிபி 185-ல் சிறு சிறு அரசுகளாகப் பிரிந்தது அப்போது புத்த மதம் மன்னர்களின் ஆதரவு இல் லாததினால் நலிவடைந்தது. இதை சீன யாத்திரிகர் யுவான் சுவாங் (629-_645) தனது பயண நூலில் கீழ்க்கண்ட வாறு கூறியுள்ளார் வட இந்தியா முழுமைக்கும் புத்த மதம் உயிர்ப்புடன் இருப்பதை சிறிதும் காண முடிய வில்லை.
புத்த கோயில்களும் விகாரங் களும் பாழடைந்து பயனற்று உபயோ கிப்போர் இல்லாமல் வெறிச்சோடியி ருந்தன. பால மன்னர்களும் ஹர்ஷ வர்த்தனரும் ஆண்ட பகுதிகளில் புத்தமதம் பாதுகாப்புடன் இயங்கி வந்தது. ஆனால் இந்தியா வின் வட மேற்குப் பகுதியில் ஹூணரகள் படை யெடுப்பால் பல புத்த விஹாரங்கள் மற்றும் கோயில்களும் அழிக்கப் பட்டன. பல புத்தத் துறவிகள் கொல் லப்பட்டனர்.
பின்னர் ஆட்சி செய்த குப்தர்கள் (கிபி 320 கிபி.550) பிராமண மதத்தையும், கடவுள்களையும் ஆதரித் தார்கள் (நூலாசிரியர் ஆர.சி.மஜும் தார். நூல் ஏன்சியன்ட் இந்தியா பக்கம் 427_-428).
(தொடரும்)
-விடுதலை ஞா.ம.,19.3.16
ஆகமமும் மதம் மாறிய புத்தர்  கோயில்களும் (2)

பொறியாளர்
ப.கோவிந்தராசன் BE,MBA,MA,MA


6. ஆகமும் மதம் மாறிய புத்தர் கோயில்களும்
6.1 ஆந்திர பிரதேச கோயில்கள்
ஆந்திர மாநிலத்தில் உள்ள கோயில் களில் முதன்மையானது திருப்பதி சிறீ வெங்கடேசுவரா சாமி வாரி கோயில். இந்தக் கோயிலில் வழிபாட்டுச் சடங்குகள் எல்லாம் வைகானச ஆகமம்  மற்றும் மகாராத்ர ஆகமம் ஆகிய இரண்டு ஆகமங்களின் அடிப் படையில் செய்யப்படுகின்றன. இந்த முறையை தொடங்கியவர் சிறீ இராமானுஜர் (1017-_1037) ஆகும். ஆகம முறை யில் இந்த திருமலா கோயில் கட்டப் பட்டுள்ளதா இல்லையா என்பதை அறிய கீழ்க்கண்ட விவரங்கள் மூலம் அறியலாம்
6.1.1. நிலம்-- திருமலா கோயில் அமைக்க  சிறீநிவாசன் என்ற கடவுள் வராகசாமி என்ற கடவுளிடம் 16.2 ஏக்கர் நிலம் கேட்டார். இதற்கு சம்மதித்த வராகசாமி சிறீநிவாசனுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி வராகசாமி (கடவுள்) சிறீநிவாசனுக்கு (கடவுள்) மேற்படி நிலத்தை தானமாகக் கொடுக்க வேண் டும் அதற்குப் பதிலாக சிறீநிவாசன் (கடவுள்) தன்னுடைய முதல் தரிச னத்தை தன்னுடைய கோயிலில் இருக் கும் வராகசாமி கடவுளுக்கு தருவார் மேலும் சிறீநிவாசன் தன்னுடைய கோயில் உண்டியலில் தன் பக்தர்களால் தரப்படும் காணிக்கைகளை வராகசாமி கடவுளுக்கு தரவேண்டும்.
இந்த ஒப்பந் தத்தின்படி இன்று வரை வராகசாமி கடவுளுக்கு காணிக்கைகள் அளிக்கப்படு கின்றது என்று திருமலா தேவஸ்தானம் கூறுகின்றது.எனவே திருமலா கோயில் சொத்துக்கள் அனைத்தும் முதலில் வராகசாமிக்குத்தான் சொந்தம். பிறகு அவரால் சிறீனிவாசன் கடவுளுக்கு தரப்படும்.
6.1.2. தற்போதுள்ள பெரிய திரு வாசல் 50 அடி உயரம் கொண்டது. இதன் உயரமான 50 அடிக்கு 13-ஆம் நூற்றண்டிலிருந்து கொஞ்சங் கொஞ்ச மாக உயர்த்தப்பட்டது.
6.1.3. சங்கா நிதி மற்றும் பத்மாநிதி என்ற) இரு தேவதைகள் திருமலா தேவஸ்தானம் சொத்துக்களை பாதுகாக்கிறார்கள். இந்த இரு தேவதை சிலைகளும் கிருஷ்ணதேவராயரின் சகோதரர் அச்சுத ராயரால் அமைக்கப் பட்டன (14ஆம் நூற்றாண்டு)
6.1.4. வெங்கடேவரா சன்னதிக்கு முன்பு மூன்று வெண்கல சிலைகள் உள்ளன. அவை 1.கிருஷ்ண தேவராயர் 2. அவரின் முதல் மனைவி 3. அவரின்  இரண்டாவது மனைவி. ஆனால் தஞ்சையில் ராஜராஜன் சிலை அவன் கட்டிய பெரிய கோயிலுக்கு வெளியே உள்ளது.மேலும் திருப்பதியில் சிலைகள் வைத்தவர் கிருஷ்ண தேவராயர் தஞ்சை யில் சிலை வைத்தவர் சாமானியர் கருணாநிதி. இதற்கு எல்லாம் காரணம் ஆகமமே.
6.1.5. சந்திரகிரியை  கிபி. 1570-ல் ஆண்ட மன்னன் வெங்கடபதி ராஜு சிறீநிவாசக் கடவுளுக்கு பல விலை உயர்ந்த பரிசுப் பொருள்களைக் காணிக்கையாக வழங்கியதால் அவ ருக்கு கோயிலுக்கு உள்ளே பெரிய திருவாசல் அருகே செப்பு சிலை வைக்கப்பட்டுள்ளது
6.1.6. டோலோத்சவம் கிபி 1351-ல் தொடங்கப்பட்டது
6.1.7. சிறீராமானுஜர் (1017-_1037) வெங்கடேஸ்வரா கோயிலில் பல மேம் பாடுகளையும் வழிபாட்டு முறைகளில் பல சீர் திருத்தங்களையும் செய்தார். இவர் தென்கலைப் பிரிவை சேரந்தவர் (தமிழ் மொழிக்கு முன்னுரிமை தரப் படும்.  உம்- சிறீ ஆண்டாள்.) திருப்பதி கோயில் முதலில் எந்தப்பிரிவையும் சேரவில்லை.  பின் தென்கலை பிரிவை சேர்ந்தது. ஏனென்றால் ராமானுசர் காலத்திற்குப் பின்தான் வடகலை தென் கலை என்ற பிரிவுகள் வலுப்பெற்றன.
6.1.8. முஸ்லீம் படையெடுப்பினால் சீரங்கப் பட்டினத்திலிருந்து சிறீ ரங்கநாதரின் மூலவிக்ரகம் கிபி 1320 மற்றும் 1369 என இருமுறை  பெயர்த்து எடுக்கப்பட்டு திருப்பதி கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் படையெடுப்பு முடிந்து திரும்பவும் சீரங்கப்பட்டினம் எடுத்து செல்லப்பட டது.
6.1.9. மொகலாய மற்றும் ஆங் கிலேயர் (கிபி 1700) தாக்குதலில் இருந்து திருப்பதி கோயிலையும் வெங்கடேசுவரா கடவுளையும் பல முறை காப்பாற்றியவர் ராஜா தோடர் மால டில்லி சுல்தானின் மூத்த அமைச் சர் இவரது சிலையும் இவருடைய தாயார் மற்றும் மனைவியின் சிலைகளும் கொடிக் கம்பம் அருகே அமைந்துள்ளன.
6.1.10. போக சீநிவாச மூர்த்தி (சிலை) தான் உத்சவ விக்ரகம்ஆகும். (மூல விக்ரகம் நிலையானது). இதை பல்லவ ராணி சாம வாயி-- ஆல் கிபி 614-ல் வழங்கப்பட்டது. இந்த உத்சவ மூர்த்தி தினமும் படுக்கை அறைக்கு எடுத்து செல்லப்பட்டு அதிகாலையில்  பள்ளி யெழுச்சிப் பாடிய பின் மூலவிக்ரகம் அருகே திரும்பவும் வைக்கப்படும் இந்த உத்சவ மூர்த்திதான் முதன் முதலாக நான்கு கைகளுடன்அமைக்கப்பட்டது
6.1.11. நிசாம் ஆட்சி காலத்தில் 1929-ல் அமைச்சராக இருந்த சிறீராம் துவாரக தாஸ் என்பவர் கோயிலின் முக்கிய வாசலில் வௌளியிலான கதவுகளை அமைத்தார்.
6.1.12. கோயிலில் உள்ள மூலவிக்ர கத்தின் பெயர்கள் வெங்கடேச சுவாமி பாலாஜி சிறீநிவாசன் ஆகும். இந்த மூல விக்கிரகம் (சுயம்பு) உள்ள கருவறையை வலம் வர பாதை ஒன்று தொடக்க காலத்தில் இருந்தது. பின்னர் கிபி1250-ல் சுற்றுசுவர் எழுப்பி அந்த பாதை மூடப்பட்டது இவ்வாறு கோயில் அமைப்பை மாற்ற ஆகம விதிகள் அனுமதிக்.கிறதா என்ற ஐயம் ஏற்படுகின்றது. மேலும் சுயம்புவாக தோன்றியது என்று சொல்லுவதால்  மூல விக்ரகம் தோன்றியபடியே இருக்கும் எனவே எந்த வித மாற்றமும் இல்லாமல. நின்ற கோலத்தில் மூலவிக் கிரகம் அமைந்துள்ளது சுயம்புவாக தோன்றிய விக்கிரகங்கள் எல்லாம் ஆகமத்தின்படி இருக்காது.
6.1.13 டில்லியிலிருந்து படையெடுத்து வந்த மாலிக்கபூரால் திருப்பதி உள்ளிட்ட பல கோயில்களில் இருந்த விக்கிரகங்கள் மற்றும் செல்வங்கள்  கொள்ளையடிக்கப்பட்டதால் ஆகமத்தினால் கோயிலுக்கு மற்றும் விக்கிரகங்களுக்கு பாதுகாப்பு எதுவும் இல்லை. எனவே பாதுகாப்பு தர புது ஆகமம் உருவாக்க வேண்டும்
6.1.1.4. இரண்டாம் குலோத்துங்கன் தில்லை நடராசர் கோயிலில் இருந்த பெருமாளை அகற்றி கடலில் எறிந் தான் .அந்த சிலையை மீட்ட ராமா னுசர் திருப்பதி கோயிலில் சேர்த்தார். இதனால் சினம்கொண்ட குலோத்துங் கனுக்குப் பயந்து ராமானுசர் கொய்சள மன்னனிடம் அடைக்கலம் புகுந்தார்.
6.2. தமிழ் நாட்டு கோயில்கள்
புத்த மதம் அசோகர் காலத்தில் கிமு300-ல் தமிழ்நாட்டிற்கு வந்த காலத்தில் தமிழ்நாட்டில் எந்த ஒரு மதமும் தோன்றவில்லை. ஆனால் தொல் காப்பியத்தில் கூறியவாறு இந்திரன முருகன் மால் மாயோன் சேயோன் கொற்றவை போன்ற கட வுள்களை திணைகளின் அடிப்படை யில் பிரிக்கப்பட்டு வழிபாடு செய்தனர்.இதுவே தமிழ்நாட்டில் ஆகமத்தின் தொடக்கம்.
என்பதினை தொல்காப்பியத்தின் மூலம் அறிய லாம். மேலும் கோவில் கட்டும் பழக்கம் தொல்காப்பியர் காலத்தில் இருந்ததாகத் செய்திகள் ஏதும் இல்லை. ஆனால் சிலப்பதிகார காலத் தில் அதாவது கடைச் சங்க காலத்தில்  (கிமு 400 முதல் கிபி 200 வரை) கண்ணகிக்கு கோயில் கட்டப்பட்டது. இருந்த போதிலும் கோவில்கள் பெரிய அளவில் ஆகம விதிகளின் படி கட்டப்பட்டது பிற்கால சோழர்களின் (கிபி-850_-1200) காலத்தில் தான்.
சோழநாட்டில் கற்பாறைகள் இல் லாத காரணத்தால் செங்கற்களைப் பயன்படுத்திசுதை (மண்சிலை ) வேலைகள் உடன் கூடிய உயரமான கோபுரங்களை கொண்ட கோயில் (மணிக்கோயில்) களை அமைத்தனர். அரசர்கள் தங்கள் வெற்றியை கொண்டாடும் வகையில்  தங்களு டைய மதத்தினை வளர்க்க கோயில் கள் கட்டினார்கள். மேலும் தமிழ் நாட்டிற்குள் பரவிய வடஇந்திய மதங்களில் (வைதீக பிராமண மதம் புத்த சமண மதங்கள் அசீவக மதம்) ஒன்றான புத்த மதக் கோயில்களும் கட்டபட்டன.
யுவான் சுவாங் என்ற சீன யாத்திரிகர் கிபி 640-ல் காஞ்சிபுரத்திற்கு நரசிம்ம பல்லவன் காலத்தில் வந்தார் அவர் தனது பயணக் குறிப்பில் கீழ்க்கண்ட செய்திகளைக் கூறியுள்ளார். அசோக ரால் கட்டப்பட பவுத்த விகார் மற்றும் ஸ்தூபிகள் காஞ்சிபுரம்சோழ நாட்டிலும் பூம்புகார் மயூரப்பட்டிணம் மற்றும் மதுரை (அசோகனின் உறவினர் மகேந்திரர்) ஆகிய இடங் களில் காணப் பட்டன. அவற்றில் சில சிதைவடைந்திருந்தன. சில வைதீக பிராமணர்களால் கவரப்பட்டன. இந்த கால கட்டத்தில் நடந்த நிகழ்வுகளை பின் வருமாறு மயிலை சீனி.வேங்கடசாமி தனது நூலில் (பவுத்தமும் தமிழும்) கூறியுள்ளார்.

(தொடரும்)
-விடுதலை ஞா.ம.,26.3.16
ஆகமமும் மதம் மாறிய புத்தர் கோயில்களும் (3)
பொறியாளர்
ப.கோவிந்தராசன்
6.2.1.வைதீக பிராமண மதம் யாகங்களை உயிர் கொலைகள் செய் வதை நிறுத்திக்கொண்டு கொற்றவை முருகன் திருமால் சிவன் போன்ற திராவிட தெய்வங்களை தன் மதத் தெய்வங்களாக ஏற்றுக் கொண்டு புதிய உருவம் பெற்று விட்டது. (பக்கம் 37)
6.2.2. இந்தப் புதிய மதத்தைச் சார்ந்த சம்பந்தர் பவுத்தர்களுடன் வாதப் போர் செய்து அவர்களை தோற்கடித்து சைவராக்கிய வரலாறும் மாணிக்க வாசகர் சிதம்பரத்தில் பவுத்தருடன் வாதம் செய்து அவர்களை தாமிர பரணிக்கு (1972-ல் இலங்கை என மாறி யது) துரத்திய வரலாறும் திருமங்கை ஆழ்வார் கிபி 800-ல் நாகப்பட்டினத்துப் பவுத்த ஆலயத்திலிருந்து பொன்னால் அமைந்த புத்தர்சிலையைக் கவர்ந்து சென்று அந்தப் பொன்னைக் கொண்டு திருவரங்கத்தில் திருப்பணியை செய்த வரலாறும் பவுத்த மதத்தின்  வீழ்ச் சியைக் காட்டுகின்றன. (பக்கம் 37-38) இங்கு மாணிக்க வாசகர் கோயில் கட்டி யதையும் கடவுள் நரியைப் பரியாக்கி யதும் நினைவு கூரத்தக்கது.
6.2.3. இன்னும் காஞ்சிபுரத்தில் கச்சீஸ் வரர் கோயில் என்று வழங்கும் ஆலயம் பூர்வத்தில் புத்தர் கோயிலென தெரி கிறது. (பக்கம்51 பவுத்தமும் தமிழும் மற்றும் பக்கம் 126 திருக்குறளும் சைவ சித்தாந்தமும் தி.ந. அநந்த நயினார் 1932.)
6.2.4. காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தின் வெளி மதில் சுவரில் பல புத்தரின் உருவங்கள் காணப்படுகின்றன. இது கிருஷ்ணதேவராயரால் 1509-ல் கட்டப்பட்டது. பழைய புத்த கோயில் களை இடித்து இந்த மதில் சுவர் கட்டியிருக்க வேண்டும்.
6.2.5. காஞ்சி காமாட்சியம்மன் கோயில் ஆதியில் பவுத்தரின் தாரா தேவியின் ஆலயமாக இருந்தது. (பக்கம் 52)
6.2..6.புத்த கோயில்கள் பிற்காலத்தில் சாஸ்தா அல்லது அய்யப்பன் கோயிலாக மாறின. சாஸ்தா என்ற சொல் புத்தரைக் குறிக்கும் சாஸ்தா என்றால் சாஸ்திரி அல்லது கற்றவன் என்று பொருள். (பக்கம் 149_-150) சாஸ்தா என்ற பெயர் சாத்தன் என்றும் பின்னர் சாத்தனார் என்றும் அதன் பின்னர் அய்யனார் என்றும் மாறியது.
6.2.7.ஆதியில் புத்த கோயிலாக இருந்த ஆலயங்கள் பின்னர் தர்மராஜா கோயில் எனவும் கிராம சிறு தெய்வங் களின் (முனீஸ்வரன்) கோயிலாகவும் மாறின.
6.2.8. தாரா தேவி மங்கல தேவி சிந்தாதேவி போன்ற பவுத்த  தெய் வங்களின கோயில்கள் கிராம சிறு தெய் வங்களின் கோயில்களாக (தர்மராஜா வின் மனைவி திரவுபதி) மாறின
6.3. கேரள கோயில்கள். நலிவுற்ற புத்த மத்தை பிராமணர்கள் கைப்பற்றிய பின்பு புத்தமதக் கோயில்கள் பல பிரா மணர்கள் வசம் வந்தன. நலிவடைந் திருந்த ஆரியர்களின் வேதமதம் பிராமண மதமாக கிபி 6-ஆம் நூற்றாண் டில் மாறியது வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள் (நூல்: -ஹிஸ்டரி தொகுப்பு ஆசிரியர்-ஆடம்  ஹாரட் - டேவிஸ்பக்கம் 143) இத்தகைய  பிராமண  மதம் புத்த மதக் கொள்கை களையும் ஏற்றுக் கொண்டது. கவுதமப் புத்தரையும் 9-வது அவதாரமாக ஏற்றுக் கொண்டார்கள். இந்த மாற் றங்கள் புத்த மதக் கோயில்கள் கட்டிடங்கள் வரலாற்றுச் சின்னங்கள். மற்றும் நூல்கள் ஆகியவை  பிராமணர்கள் வசப்படுத்துவதற்கு உதவி புரிந்தன. மேலும் தர்மம் சாஸ்தா சரணம். சங்கம். போன்ற சொற்கள் பிராமண மதத்தில் பயன்பாட்டுக்கு வந்தன. மக்கள் மாமிச உணவு.காம உணர்வு.போதைப் பொருள்கள் போன்ற வற்றை தவிர்த்து  கடுமையான விரதங்களைக் கடைப்  பிடித்து  உடல் உடை உள்ளம் ஆகியவற்றை தூய்மை செய்து கொண்டு யாத்திரை சென்று கடவுளை வழிபட்டனர். உதாரணம்- காசி மற்றும் தீரத்த யாத்திரை சபரிமலை அய்யப்பன் தரிசனம்.
கேரளாவில் தற்போது உள்ள அம்மன் கோயில்கள் பகவதி கோயில் கள் சாஸ்தா கோயில்கள் முதலானவை முற்காலத்தில் பவுத்த கோயில்களாக இருந்தவை ஆகும்  என மயிலை நா. வேங்கடசாமி தனது நூலில் கூறுகிறார் (பக்கம் 39மு75 நூல். பவுத்தமும் தமிழும் கேரளக் கோயில்களில் முதன்மை யானது. சபரிமலை அய்யப்பன்  கோயில் ஆகும். இந்த அய்யப்பனை வணங்கும் பக்தர்களுக்கும் பவுத்த துறவி களுக்கும் உள்ள ஒற்றுமையை விவரிக்கிறார்  முனைவர் எஸ்.என்.சதாசிவன் தனது நூலில் (சோசியல் ஹிஸ்டரி ஆப் இந்தியா) கீழ் கண்டவாறு
6.3.1.அய்யப்பன் கோவிலில் உள்ள 18 படிகள் புத்தரின் 18 பெயர்களைக் குறிக்கின்றது. மேலும் புத்தரின் 18 போதனைகளைக் குறிக்கின்றது. இந்த 18 போதனை கடைப்பிடித்தால் ஒருவர் நிர்வாணத்தை அடையலாம் அதாவது அய்யப்பனைத் தரிசிக்கலாம் (பக்கம் 129)
.6.3.2.சாஸ்தா என்றால் காப்பவன் அல்லது போதிப்பவன் என்று பொருள். எனவே புத்த மதத்தில் புத்தரை தர்ம சாஸ்தா என்றும் தர்மராஜா என்றும் அழைக்கிறார்கள். பிராமண மதத்தில் தர்ம கிருஷ்ணா தர்ம ராமன் என்ற பெயர்கள் வழக்கத்தில் இல்லை. தர்மம் என்ற சொல் பவுத்தர்களால் பரப்பப்பட்டது.
6.3.2. இந்த புத்தகோவிலை பவுத் தர்களிடமிருந்து மறவர்கள் கைப்பற்றி னார்கள். பல பவுத்த துறவிகள் மறவர்களால் கொல்லப்பட்டனர் மறவர்களிடமிருந்து பந்தள மகாராசன் மீட்டார். பௌத்தராக இருந்த மகா ராசா பிராமண மதத்திற்கு மாறினார். பின்னர் பிராமணர்கள் அவரை சத்ரியராக அங்கீகரித்தனர். அய்யப்பன் கோவில் நிர்வாகம் பந்தள மகாராசன் வசம் வந்தது. இவரது ஆட்சிகாலத்தில்  புத்தர் கோயில் அய்யப்பன் (தர்ம சாஸ்தா) கோயிலாக மாற்றப் பட்டது. மேலும் பல தகவல்களை சாஸ்தா கோயிலை நிர்வகிக்கும் உரிமைக்காக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களிலிருந்துப்  பெறலாம்.
6.3.3. மாவேலிக்கரா மாவட்டத்தில் உள்ள கண்டியுரில் இருந்த புத்தன் கோயில் மாவலி மன்னரும் அவரது குடும்பத்தினரும் வணங்குவதற்காக கட்டப் பட்டது. இந்த மன்னர் புத்த மதத்தைச் சார்ந்தவர். இவரது மறைவுக் குப்பின் (இவர் வாமன அவதாரத்தில் விஷ்ணுவால் கொல்லப்பட்டவர் என்று கருத வாய்ப்பு உள்ளது.) கி.பி 15ஆம்  நூற்றாண்டில் இங்கிருந்த புத்த கோயில் சிவன் கோயி லாக மாற்றப்பட்டது. (பக்கம் 133 எ சோசியல் ஹிஸ்டரி ஆப் இந்தியா)
இவ்வாறு இந்தியாவில் உள்ள பல கோயில்கள் முதலில் புத்தர் கோயிலாக  புத்தமதத்தினரால் கட்டப்பட்டு பின்னர் புத்த மத வீழ்ச்சி அடைந்த தால் சைவ வைணவ கோயிலாக மாறின. புத்தர் வாழ்ந்த காலத்தில் சைவ வைணவ மதங்கள் தோன்ற வில்லை. இதன்படி மதம் மாறிய புத்த கோயில்கள் சைவ வைணவ ஆகமங் களால் கட்டப்பட்டவை அல்ல.
7. முடிவுரை:
கோயில் கட்டுவதையும் விக்கிரகங் களை வணங்குவதையும் ஆதி சங்கரர் எதிர்த்தார் ஏனென்றால் எங்கும் எதிலும் நிறைந்த கடவுளை ஓரு கோயில் வளாகத்திலோ விக்கிரகத் திலோ இருப்பதாக நம்புவது சரியல்ல என்று அவர் கருதினார். சங்கரர் தர்க்க வாதத்தில் சிறந்தவர். மற்றும் சைவமதத்தைச் சார்ந்தவர். இவர் இளமையிலேயே கி.பி.830-ல் இமய மலையில் உள்ள கேதார் நாத்தில் சந்தேகத்திற்கு உரிய சூழ்நிலையில் இறந்து போனார். இவர் புத்த மதத் தின் வழியில் சைவ மதத்தை வளர்த் தார். பல சங்கர மடங்களை (பூரி.துவா ரகா சிருங்கேரி) உருவாக்கினார்.
சங்கரருக்கு பின் வாழ்ந்த இராமானுஜர் (1017 -1037) சங்கரரின் அத்வைத தத்துவத்திற்கு எதிராக விசிஷ்டாத்வைதம் என்ற புதிய தத்துவத்தை பரப்பினார். இவர் வைணவ மதத்தில் தென்கலைப் பிரிவை சார்ந்தவர் இவர் கோயில் கட்டுவதையும் விக்கிரக ஆராதனை யையும் சடங்குகளையும் திருவிழாக் களையும் ஆதரித்தார். இவர் பல புத்த கோயில்களை வைணவக் கோயிலாக மாற்றினார். அவைகளில் குறிப்பிடத் தக்கவை ---திருப்பதியில் இருந்த மகாயானப்பிரிவை சார்ந்த புத்தமத கோயிலை வெங்கடேஸ்வரா கோயி லாக மாற்றியது மற்றும் கீழ் திருப் பதியில் இருந்த புத்த மத பெண் தெய்வத்தின் கோயிலை பத்மாவதி தாயார் கோயிலாக மாற்றியது ஆகும். திருப்பதி கோயிலுக்கு ராமானுஜர்  செய்த சேவைகளைப் போற்றும் வகையில் அவருக்கு கோயிலுக்கு உள்ளே ராமானுஜரின் உருவச்சிலை வழிபாடு செய்வதற்காக அமைக்கப் பட்டுள்ளது.
மேலே விவரித்தபடி பல கோயில்கள் ஆகமங்களை கடைப்பிடிக் காமல் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் பக்தர்கள் கூட்டம் கோயில் ஆகமத்தின் படி கட்டப்பட்டதா இல்லையா அர்ச்சகர் பிராமணரா இல்லையா அர்ச்சகர் சொன்ன மந்திரத்தை கடவுள் புரிந்து கொண்டாரா என்று எல்லாம் சிந்திப்பது இல்லை மேலும் சில கடவுள் கள் செல்வாக்கு இழப்பதால் புதுப்புது கடவுள்கள் உருவாகின்றன (ராமன் கிருஷ்ணன் கார்த்திகேயன் இலட்சுமி.   கோயில்களை ஆதரிக்கும் அரசர்கள் மதம் மாறுவதால் கோயில்களும் மதம் மாறுகின்றன. அதே போல் மதமாறு கின்ற கோயில்கள் ஆகம விதிகளுக்கு முரண்பட்டவை பல மன்னர்களால் சிறிது சிறிதாக கட்டப்பட்ட கோயில் களும் ஆகமத்திற்கு முரணானது. எனவே ஆகமத்திற்கும் கடவுள் பக்திக்கும் தொடர்பு இல்லை எனக் கூறலாம்.
தற்போது சுதந்திர இந்தியாவில்  பல நூறு மன்னர்களின் ஆட்சி ஒழிக்கப்பட்டு அவர்களின் சமஸ்தானங்கள் எல்லாம் பறிக்கப்பட்டு இந்திய யூனியனில் சேர்க்கப் பட்டன மற்றும் அந்த மன்னர்களுக்கு வெறும் மானியம் மட்டும் வழங்கப்பட் டது. பின்னர் அந்த மானியமும் 1974-_75-ல் ஒழிக்கப்பட்டது. மேலும் தனியாரால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட வங்கிகள் மற்றும் போக்குவரத்து கழகங்கள் நாட்டுடைமையாக்கப்பட் டதால் மன்னர்களாலும் பெரும் வணிகர்களாலும் கட்டப்பட்ட கோயில் களை இந்திய அரசு மாநில அரசு
மற்றும் அறநிலையத்துறை மூலம் நிர்வகிக்கலாம். .இந்த கோயில்களுக்கு எல்லாம் பொதுவான புதிய ஆகமத்தை உருவாக்கலாம். புத்தர் காலப் பள்ளிகளே தற்போது கல்விச் சாலைகளாக அமைந் துள்ளன. இந்த கல்விச்  சாலைகளைப் போல கோவில் கட்டுவதற்கான அனுமதி வழங்குவதற்கும் நிர்வகிப்பதற்கும் தேவையான கல்வி முறையை கற்பிக்கவும் ஒரு பல்கலைக் கழகம் அமைக்கலாம். இதனால் அங்கீரிக்கப்படாத கோயில் களையும் நடைபாதை கோயில்களையும் தடுக்கலாம். இதற்கு கர்ப்பத் தடையை முதலில்  எதிர்த்த போப் ஆண்டவர் மதவாதிகள் பின்னாளில் ஏற்றுக் கொண் டதை கூறலாம்.            
(நிறைவு)
-விடுதலை ஞா.ம.,2.4.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக