சனி, 15 செப்டம்பர், 2018

கிறிஸ்தவ மதத்தில் ஜாதியுண்டா?



31. 01. 1932 - குடிஅரசிலிருந்து..

இந்து மதத்தில்தான், சாஸ்திர சம்பந்த மாகவும், தெய்வ சம்பந்தமாகவும், பலர் கொடுமைப்படுத்தப்பட்ட மக்களாய் அந்த மதத்தை விட்டு வெளியேறினா லொழிய மனிதத்தன்மை பெறமுடியாதவர் களாய் கோடிக்கணக்கான மக்கள் இருப்ப தாக உலகம் முழுதும் தெரிந்திருக்கிறது. ஆனால் மிகவும் நாகரிகம் பெற்ற மதமாக அன்பு மதமாக - சகோதரத்துவம் நிறைந்த மதமாகப் பிரசாரம் பண்ணப்பட்டு வரும் கிறிஸ்தவ மதத்தில் இத்தகைய ஜாதிக் கொடுமை இல்லை என்று பறைசாற்றப்பட்டு வருகிறது. உண்மையிலேயே அந்த மத வேதத்தின்படி - அந்த மத கர்த்தாவான யேசுநாதரின் கொள்கைப்படி அந்த மதத்தில், ஜாதி வித்தியாசம் பாராட்டவோ, ஜாதி வித்தியாசம் காரணமாகத் தாழ்த்தப்பட்ட மக்களைக் கொடுமைப்படுத்தி வைத்திருக் கவோ ஒரு ஆதாரமும் இல்லையென்பதை நாம் அறிவோம்.

இத்தகைய ஒரு மதம் ஜாதி வித்தியா சங்களும், கொடுமைகளும் நிறைந்த இந்தியாவில், அதிலும் தென்னிந்தியாவில் எந்த நிலையிலிருக்கிறது என்றுப் பார்த்தால், இந்து மதத்தில் அண்ணனாகவோ, அப்ப னாகவோ, பாட்டனாகவோதான் இருந்து வருகின்றதென்று கூறலாம். இந்து மதக்கோயில்களில் எப்படி ஜாதிக்கு ஒரு இடம் ஒதுக்கப் பட்டிருக்கிறதோ அது போலவே கிறிஸ்தவ மதக் கோயில்களிலும் ஜாதி வித்தியாசம் பாராட்டப்பட்டுத் தனித்தனி இடங்கள் ஒதுக்கப்படுகின்றனவாம். ஆனால் அரசாங்கக் கணக்கில் கிறிஸ் தவர்களுக்கு ஜாதி வாரிக்கணக்குப் போடாமல் எல்லாக் கிறிஸ்தவர்களையும் பொதுவாகக் கிறிஸ்தவர்கள் என்ற தொகுதியிலேயே சேர்க்கப்பட்டிருக்கின்றது. இக்காரணத்தால், தீண்டாத ஜாதியினராகக் கருதப்படும் கிறிஸ்தவர்கள் பொது ஸ்தாபனங்களில் ஒருவித உரிமையும் பெறமுடியாமல், எல்லா உரிமைகளையும் உயர்ந்த ஜாதியாராக இருந்து கொண்டி ருக்கும் கிறிஸ்தவர்களே அடைந்து வரு கிறார்கள்.

எப்படி இந்து மதத்தில் ஒவ்வொரு ஜாதிக்காரர்களும் தங்கள் தங்களுக்குக் கீழுள்ள ஜாதிக்காரர்களின் மேல் வெறுப்பும் வித்தியாசமும் பாராட்டி வருகின்றார்களோ அதுபோலவே கிறிஸ்தவ மதத்தில் புகுந் துள்ளவர்களும், நாயுடு, முதலியார், பிள்ளை, அய்யர், முதலிய ஜாதி வித்தியாசங்களை விடாமல் வைத்துக் கொண்டு, ஆதிதிராவிடக் கிறிஸ்தவர்களையும், மற்ற தாழ்த்தப்பட்ட வகுப்புக் கிறிஸ்தவர்களையும் வித்தியாசமாக வைத்துக் கொடுமை செய்து வருகின்றனர். இவ்வாறு செய்து வருவதைப் பற்றிய கிளர்ச்சி நீண்டநாளாக நடைபெற்றுங்கூட இன்னும் அம்மத குருமார்கள் இவ்வேற்று மைகளை ஒழித்து உண்மையான கிறிஸ்தவக் கொள்கைகளை நிலை நிறுத்த முயற்சி செய்யாமலிருந்து வருகிறார்கள்.

ஆகவே இதுவரையிலும் பொறுமை யோடு கொடுமைகளை அனுபவித்து வந்த தீண்டாத வகுப்புக் கிறிஸ்தவர்கள் இப் பொழுது கண்விழித்துக் கொண்டு அதிக ஊக்கத்துடன் கிளர்ச்சி செய்வதைக் கண்டு நாம் பாராட்டுகின்றோம். இதற்கு உதாரண மாகச் சென்ற 23. 01. 1932இல் லால்குடியில் தீண்டப்படாத கிறிஸ்தவர்கள் மகாநாடு கூடியிருப்பதைக் கூறலாம். அம்மகாநாட்டுத் தலைவர் திரு. ஞானப் பிரகாசம் அவர்களும், திறப்பாளர் திருமதி நீலாவதி ராமசுப்பிரமணியம் அவர்களும், வரவேற்புக் குழுத்தலைவர் திரு ஆரோக்கிய சாமி அவர்களும் மற்றும் உள்ள உபந்யா சகர்களான திருவாளர்கள் டி.வி.சோம சுந்தரம், டி. பி. வேதாசலம், வி. அய். முனி சாமிப்பிள்ளை முதலிய பலரும் தீண்டப் படாத கிறிஸ்தவருக்குள்ள குறைகளை எல்லாம் விளக்கமாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள். ஆகையால் இனியாவது அம்மத குருமார்கள் தீண்டாதவர்க்குள்ள குறை களை நீக்கி மதக் கொள்கைப்படி யாதொரு வேற்றுமையையும் பாராட்டாமல் அவர் களையும் நடத்துதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் அல்லது அரசாங்கத்தார் அவர்கள் விரும்புகிறபடி தீண்டப்படாத கிறிஸ்தவர்களும் மற்ற ஆதிதிராவிடர் களுக்குக் காட்டுவதைப்போல தனிச்சலுகை காட்ட முன் வரவேண்டும் என்று எடுத்துக் காட்ட விரும்புகிறோம்.

கடைசியாக, தீண்டப்படாத கிறிஸ்தவர் களுக்கும் ஒரு வார்த்தை சொல்லி முடிக்கிறோம், தீண்டப்படாத கிறிஸ்தவர் களின் குறைகள் நீங்காவிட்டால் அம்மதத் திலுள்ளவர்கள் நீக்க முற்படா விட்டால் இந்து மத ஆதிதிராவிடர்களை எந்த வகையில் தங்கள் மேல் சுமத்தப்பட்டிருக்கும் மதக் கொடுமைகளையும் ஜாதிக் கொடுமை களையும் நீக்கிக் கொள்ள விரும்புகிறார் களோ, அந்த வகையிலேயே தீண்டப்படாத கிறிஸ்தவர் களுக்கும் தங்கள் குறைகளை நீக்கிக் கொள்ள முயலுவதே சமத்துவம் பெறுவதற்கு ஏற்ற வழியாகும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

- விடுதலை நாளேடு, 15.9.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக