புதன், 12 செப்டம்பர், 2018

இந்து

10.05.1931 - குடிஅரசிலிருந்து..

ஒருவன் கோவிலுக்குப் போவது போகா மலிருப்பது. மதசின்னங்கள் அணிவது, அணியாமலிருப்பதும் உருவத்தை வழிபடுத் துவதும். வழிபடாமலிருப்பதும்.  ஆத்திகம் பேசுவது,  நாத்திகம் பேசுவது ஆகிய காரியங்கள்  எது வேண்டுமானாலும் செய்து  கொண்டு செய்யாமலிருந்து கொண்டும் இந்துவாக இருக்கலாம்.

இந்து  மதத்தில் நாஸ்திகத்திற்கு இடமுண்டு


பிறப்பினால் ஜாதி கற்பிப்பதே வருணா சிரமாகும். இதனை எல்லா இந்துக்களும் ஏற்றுக் கொள்ளுவ தில்லை. வருணா சிரமத்தை ஒப்புக் கொள்ளாதவர்களை இந்துக்கள் அல்லவென்று யாரும் தள்ளுவ தில்லை, வேதாந்த மத சங்கராச்சாரியார் வருணா சிரமத்தில் ஏன் விழ வேண்டும்? வேதத்தை ஆதாரமாகக் கொண்டு இவர் இந்து,  இவர் இந்துவல்ல என்று சொல்லும் சங்கராச்சாரியார் வேதத் தின்படி  நடக்காத வர்களையெல்லாம் இந்துவல்ல என்று விலக்குவாரா?  பார்ப்பன வக்கீல்கள் இந்துக் களாவார்களா? அவர் களை இந்துக்கள் அல்லவென்று சங்காராச் சாரியார் ஏன்  கூறவில்லை? சமரச சன் மார்க்கம் ஏற்பட்டு  வரும் இந்நாளில் இடை காலத்தில் ஏற்பட்ட வருணாசிரமத்திற்கும்  ஆதிக்கம் தேடுவது அக்கிரமமாகும்.  நால் வருணாசிரம முதலா நவின்ற கலை சரிதமெல்லாம் பிள்ளை விளையாட்டே என்பதாக திரு. முதலியார் அவர்கள் குறிப்பிட்டுஇருக்கின்றார்.

இவற்றுள் இந்து மதத்தைப் பற்றி நாம் அவ்வபோது சொல்லி வந்த பல விஷயங் களையே  திரு. முதலியார் அவர்கள் குறிப் பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. இந்து மதத்திற்கு என்று ஒரு குறிப்பிட்ட கொள்கை இல்லை என்று நாம் சொல்லி வந்ததை ஏற்றுக் கொண்டு  மேலும் கோவிலை ஒப்புக் கொள்ளாமலும் உருவ வழிபாட்டைச்  செய் யாலும்  மதச் சின்னத்தை அணியாமலும்  கடவுள் உண்டு என்பதை ஒப்புக் கொள்ளா மலும் இருப்பவர்கள் கூட இந்து மதஸ் தாரர்கள் என்பதாகவே, அது மாத்திர மல்லாமல் சமரசக்  கொள்கைகள் உடை யாரனைவரும்  இந்துக்கள் என்றே குறிப் பிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

இவற்றையெல்லாம் விடமற்றொன்று அதாவது ஒவ்வொருடைய மனச் சாட்சிக்கும் மதிப்புக்கு   கொடுப்பது இந்து  மதம் என்றும்  சொல்லி இருப்பதாகும்.

எனவே வாசகர்களுக்கும் இப்போதாவது இந்து மதம் என்பதின் கொள்கை யோக்கி யதையும் மதிப்புக்  கொடுப்பதும் இந்து மதம் என்றும் சொல்லி இருப்பதாகும். எனவே வாசர்களுக்கும் இப்போதாவது இந்து மதம் என்பதின்  கொள்கை யோக்கியதையும்  நடைமுறையின் யோக்கியதையும் அதன் பேரால் மக்களை அடிமைக் கொண்டு கசக்கிப் பிழிந்து பார்ப்பனச் சோம்பேறிகள். புரோகித அர்ச்சக சாஸ்திரி  கூட்டத்தார்கள் கொள்ளையடித்து வரும் யோக்கியதையும் விளங்கவில்லையா என்று  கேட்கின்றோம்.

- விடுதலை நாளேடு, 7.9.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக