கடவுள், மதம், சாதி மற்றும் வேதம் குறித்து பகுத்தறிவு விளக்கங்கள் இப்பகுதியில் இடம்பெறும்.
வியாழன், 14 மே, 2020
அக்கினி பகவான்
செவ்வாய், 28 ஏப்ரல், 2020
ஆபாசமே இந்துமதம் - இந்துக்கடவுள்களின் தகாத உடலுறவுகள்
வெள்ளி, 3 ஏப்ரல், 2020
மார்கழியில் ஆண்டால் மார்க்கச்சை
உலகப் பணக்காரர்களைத் தரம் பிரித்துப் பட்டியலிடும் பணியைச் செய்துவரும் ஃபோர்ப்ஸ் ஏடு வெளியிடும் செய்திகளை வெளியிட்டு மகிழும் இந்திய ஏடுகள் வசதியாக ஒன்றை மறந்துவிடுகின்றன. மறைத்து விடுகின்றன. மிகப்பெரிய பணக்காரன் திருப்பதியில் இருக்கிறான் என்பதைத் தெரிவிக்கவில்லை. அதனால் ஃபோர்ப்ஸ் ஏடு அதை வெளியிடுவதில்லை. முதலாளிகளைக் கடுமையாகப் பேசுவதற்காகவே பிறந்தவர்கள் அல்லது பிறப்பிக்கப்பட்டவர்கள் என்று பேசும் இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் இதைப் பற்றிப் பேச மாட்டார்கள். காரணம் அந்தப் பணக்காரன், கடவுள் என்று கற்பிக்கப்பட்டிருக்கிறான். இவர்களுக்கு அதனிடம் அச்சம். கல் முதலாளிபற்றி வாய் திறக்க மாட்டார்கள். அது கிடக்கட்டும்.
திருப்பதியில் இருக்கும் உலக மகா பணக்காரன் பாலாஜி வெங்கடாசலபதி _ முதல் ஏதும் போடாமலே கோடிக்-கணக்கான கோடிகள் சம்பாதித்துக் கொண்டிருக்கிறான். பணத்தைச் செலவு செய்ய வழி தெரியாமல் கல்லையெல்லாம் தங்கத்தால் மூடிக்கொண்டிருக்கிறான். மதில் சுவரையெல்லாம் தங்கத்தால் கட்டிக்கொண்டு இருக்கிறான்.
குவைத் மன்னர்களும் சவூதி மன்னர்களும் தங்கள் அரண்மனைகளில் தங்கக் குளியலறை, தங்கத் தண்ணீர்க்குழாய், தங்கத்தட்டுகள், தங்க நாற்காலி என்று வைத்திருப்பவர்கள் என்று கண்டனம் செய்பவர்கள் திருப்பதியானைப் பற்றிப் பேசுவதில்லை. பிரான்சு நாட்டின் லூயி மன்னர்களின் ஆடம்பரம்பற்றி எழுதுபவர்கள், வர்சேல் அரண்மனையின் ஆடம்பரங்கள்பற்றி எழுது-பவர்கள்கூட தங்கக்கட்டில்பற்றி எழுதுவார்களே தவிர, ஏழுமலையானைப்பற்றி எழுதுவதில்லை.
காரணம் இந்த உலக மகா பண முதலாளி கடவுளாக்கப்பட்டிருக்கிறான்.
இருந்தாலும் இவன் கடன்காரனாம். தன் கல்யாணத்திற்காகக் கடன் வாங்கினானாம். (அப்படி ஒரு கல்யாணம் இவனுக்குத் தேவையா?) கடனுக்கான வட்டியைத் தருவதற்காகத்தான் இவனுக்குக் கோடிக்கணக்கான கோடி ரூபாயைக் கொட்டிக் குவிக்கிறார்களாம்! உலக மகாபணக்காரனுக்கே கடன் கொடுத்த பணக்காரன் குபேரனாம்! இந்த கந்துவட்டிக்காரன் பிரபஞ்ச மகா பணக்காரன் என்று ஏன் ஃபோர்ப்ஸ் எழுதுவதில்லை? இவர்கள் ஏன் எழுதக் செய்வதில்லை? விசாரிக்க வேண்டும். சரி, ஏழுமலையான் விவகாரத்திற்கு வருவோம்.
இவ்வளவுப் பணம் இருந்தும் இவனை எழுப்ப ஓர் அலாரம் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற அறிவே கிடையாது. இவனைத் தூக்கத்திலிருந்து எழுப்பக் குரல் கொடுப்பதற்கு என்றே சம்பளம் கொடுத்து ஆள்களை வைத்து இருப்பதால் அவர்கள் இந்தத் தூங்குமூஞ்சியைப் பாட்டுப்பாடி எழுப்புகிறார்கள். இந்தப் பாட்டைத்தான் சுப்ரபாதம் என்று வடமொழியில் கூறுகிறார்கள். இசைத்தட்டு, இசைநாடா என்று வந்திருக்கும் இதனை எல்லாக் கோயில்களிலும் மார்கழி மாதத்தில் ஒலிக்கச் செய்கிறார்கள்.
நமக்கும் தூக்கம் கெட்டுவிடும். மார்கழி மாதக் குளிரில் கதகதப்புக்குத் துணிப்போர்வை, உயிர்ப்போர்வையுடன் தூங்கிக் கொண்டிருக்கும்-போது இக்கூச்சல் எரிச்சலைக் கிளப்பும்.
இந்த எரிச்சல் இனிமேல் ஏழுமலையானுக்கு ஏற்படாதாம். சுப்ரபாதம் இந்த மார்கழி மாதத்தில் ஏழுமலைக்கோயிலில் பாடப்பட மாட்டாதாம். பதிலுக்குத் திருப்பாவை, திருவெம்பாவை பாடப்படுமாம். நப்பின்னைக் கொங்கைமேல் கைவைத்துக் கிடந்தவனைத் தமிழில் பாடி எழுப்பப் போகிறார்களாம். தமிழ்த் தேசியங்களுக்குப் பக்திப் பிரவாகத்தோடு, பாஷைப் பிரவாகமும் பொங்கி ஓடும்! பாஷை, பிரவாகம் இரண்டுமே வடசொல், தமிழ்ச்சொல் அல்ல! நமக்குத் தெரியும். தமிழுக்கு அடுத்துத் தேசம், தேசியம் என்று சொல்லிக் கொள்பவர்களுக்காக எழுதவேண்டி நேரிட்டது.
நம் தமிழர்கள் க்ஷமிக்க வேணும்!
நப்பின்னையின் கொங்கைகளைப்பற்றி மட்டுமே ஆண்டாள் எனும் பெண் பாடியிருப்பதாக யாரும் கருதிக் கொள்ளாதீர்கள். நம் இலக்கியவாதிகள் மாபெரும் சபைகளிலே சிலாகித்துப் பேசும் பக்தி இலக்கியம் பலவற்றையும் பாடுகிறது. நாயகன் _ நாயகி பாவம் என்றெல்லாம் இவர்கள் வர்ணிக்கும் ஆண்டாளின் விரகதாபம் (காம வெளி என்று தமிழில் கூறலாம்) எந்த எல்லையைத் தொட்டது என்பதை ஆண்டாளின் கவிதை மூலமே பார்க்கலாமா?
அவரைப் பிராயம் தொடங்கி
ஆதரித் தெழுந்த என் தடமுலைகள்
துவரை பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுதேன்...
என்கிறாள். பெரிய மார்பகங்கள் அவனுக்கே என உறுதிபடக் கூறுகிறாள். தமிழில், ஆண்டாள் அந்த உறுப்பைக் குறிப்பிட்டு விட்டாலும் நான் எழுத வெட்கப்பட்டு மார்பகம் எனக் குறித்துள்ளேன். இடக்கரடக்கலுக்குப் பிற-மொழிகள் வசதியாக வாய்த்திருக்கின்றன.
ஊனிடை ஆழிசங்கு உத்தமர்க்கென்று உன்னித்து எழுந்த என் தடமுலைகள்
என்று அந்த உறுப்புகள் வளர்ந்த கதையைக் கூறுகிறாள்.
முலைகள் எனத் தம் கவிதைத் தொகுப்புக்குப் பெயர் வைத்த கவிஞரைத் தம் பாண்பாட்டுப் பாதுகாப்பு எழுதுகோல்களால் குத்திச் சீண்டிய மாரல் போலீஸ்காரர்கள் (ஒழுக்கக் காவலர்கள்) இதற்கு ஏன் மூச்சு விடுவதில்லை? ஓ! இது கடவுளின் பேரால் நடக்கிறதா?
சாயுடைவயிறும் என் தடமுலையும்
திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்
தரணியில் தலை புகழ் தரக்கற்றியே
என்ன வகை ஆசை பாருங்கள், திருமணம் ஆகாத பெண்ணுக்கு! மேலேயும் கீழேயும் அவன் தடவிக் கொடுக்க வேண்டுமாம்! ஏன் தடவிக் கொடுக்க வேண்டுமாம்?
முத்தன்ன மெம்முறுவல் செய்யும் வாயும்
முலையும் அழகழிந்தேன் நான்
இவன் தடவிக் கொடுக்காததால், அந்த உறுப்புகளின் அழகே அழிந்து விட்டனவாம்! அழகைப் பெறத் தடவிக் கொடுக்க வேண்டியது தேவைதானே!
பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப்
புணர்வதோர் ஆசையினால்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகலித்து
ஆவியை ஆகுலம் செய்யும்...
என் அகத்து இளம் கொங்கை விரும்பித்தாம் நாள்தோறும்
பொன்னாகப் புல்குவதற்கு என்புரிவுடமை செய்யுமினோ
ரங்கமன்னாரோடு உடல் உறவு கொள்ள வேண்டுமாம்! அந்த ஆசை மனதில் மேலோங்கி வளர்ந்துவிட்டதால், மார்பகம் வருந்துகிறதாம், குதூகலிக்கிறதாம், உயிரை எடுக்கிறதாம், ஆகவே எதையாவது செய்து நாள்தோறும் நாராயணனைப் புணர்வதற்கு உத்தரவாதம் கொடுங்களேன் என்று பெண் (ஆண்டாள்) கேட்கிறாள்! இது பக்தியா? ஆபாச ஆசைகளின் வெளிப்பாடு அல்லவா?
கொங்கைமேல் குங்குமத்தின் குழம்
பழியப் புகுந்து ஒரு நாள்
தங்குமேல் என் ஆவி தங்குமென்று உரையீரே
மார்பகத்தில் பூசப்பட்டிருக்கும் குங்குமம் குழைய, அழியத் தொட்டு அழுத்தினால் ஒழிய என் ஆவி உடலில் தங்காது என்பதை அரியிடம் கூறுங்களேன் என்ற வேண்டுகோளைப் பக்தர்களிடம் விடுக்கிறாள்!
குற்றமற்ற முலை தன்னைக் குமரன்
கோலப் பனைத் தோளோடு
அற்ற குற்றம் அவைதீர
அணைய அமுக்கிக் கட்டீரே
என்ற விபரீதமான வேண்டுகோளை வைக்கிறாளே! இவளுடைய மார்பகத்தோடு அவனுடைய தோள்கள் எப்போதும் சேர்ந்திருக்கும் வகையில் சேர்த்துக் கட்டுங்களேன் என்று கேட்கிறாளே! வெட்கங்கெட்டு இப்படிப் பேசுகிற பெண்ணை யாராவது கேட்டிருக்கிறீர்களா? இந்நாட்டின் பக்தி வேகம், மோகமாகி மாறி இப்படியெல்லாம் புலம்பச் சொல்கிறதே!
அதனால்தான் பெரியார், பக்தியைவிட ஒழுக்கம் முக்கியம் என்றார்.
ஆண்டாளின் வேண்டுகோளை ஆண்டவன் நிறைவேற்றவில்லை. பக்தர்களும் கூட்டி வைக்கவில்லை கோவிந்தனோடு! என்ன செய்வாள் அவள்?
உள்ளே உருகினை வேனை
உளவோ, இவளோ என்னாத
கொள்ளைக் கொள்ளிக் குறும்பனைக்
கோவர்த்தனனைக் கண்டாக்கால்
கொள்ளும்பயன் ஒன்றில்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில்
எறிந்தென் அழலைத் தீர்வேனே
எனப் பாடிவிட்டாள்! இவ்வளவு ஆசை வைத்திருக்கும் என்னை இருக்கிறாளா, போய்விட்டாளா எனக்கூடப் பார்க்காத இந்த கோவர்த்தனனை (அவன் கண்ணில் கொள்ளி வைக்க...)ப் பார்த்தேன் என்றால்.... எதற்கும் பிரயோசனப்படாத இந்த மார்பகங்களை வேரோடு (மரவள்ளிச் செடியின் வேரைக்கிழங்கு என்று சொல்கிறோம்) பிடுங்கி அவன் மேலே விட்டெறிந்து, என் எரிச்சலைத் தீர்த்துக் கொள்வேன் என்றே கூறிவிட்டாள். பாவம், காமம் என்ன பாடுபடுத்துகிறது பாருங்கள்!
அதிவீரராமனின் கொக்கோகப் பாடல்களைப் படித்துத் தெரிந்து கொண்டு பாடியிருப்பாளோ? வாத்ஸ்யாயனின் காமசூத்திரத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆண்டாள் காலத்திலேயே வந்துவிட்டதோ? இவ்வளவு அசிங்கமாக, ஆபாசமாகப் பாடிய ஆண்டாளைத்தான் ரங்கமன்னார் கல்யாணம் பண்ணிக் கொண்டாராம்! (திருவில்லிப்புத்தூரில் கடவுளின் பெயர் ரங்கமன்னார்) என்ன பாடுபட்டாரோ? என்ன பாடுபடுத்தினாரோ?
கர்ப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ
மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கிறேன் சொல்லாழி வெண்சங்கே
எனக் கேட்டவள் ஆண்டாள்! மாதவனின் வாய் நாறுமா? கர்ப்பூரம் போல் மணக்குமா? எனக்குச் சொல் என்று சங்கைக் கேட்கிறாள்! இந்தச் சங்கு (பாஞ்சசன்யம்) கிருஷ்ணன் தன் வாயில் வைத்து ஊதும் சங்கு. ஆகவே அதற்கு அவன் வாயின் நாற்றம் தெரியும் அல்லவா? பல்லாயிரம் பெண்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கடவுள் வாயில் வைத்துக் கொள்கிறாராம் சங்கை! ஆகவே இந்தச் சங்கை கெட்ட (வெட்கங்கெட்ட) கேள்வியாம்! விரிவுரை வேறு தருகிறாள் ஆண்டாள்!
பெண்ணின் வருத்தம் அறியாத
பெருமான் அறையின் பீதக
வண்ண ஆடைகொண்டு எந்தன்
வாட்டம் தணிய வீசீரே!
ஆராஅமுது அணையான்தன்
அமுதவாயில் ஊறிய
நீர்தான் கொணர்ந்து புலராமே
பருக்கி இளைப்பைத் தீரீரே!
நெடுமால் ஊதி வருகிற
குழலின் தொளைவாய் நீர்கொண்டு
குளிர முகத்துத் தடவீரே!
அவன் மார்பு அணிந்த வனமாலை
மார்பிற் கொணர்ந்து புரட்டீரே
அவன்
அடிபட்டான் பொடிதான் கொணர்ந்து பூசீர்காள்!
என்றெல்லாம் பாடுகிறாள் ஆண்டாள்!
கண்ணன் இடுப்புத் துணியால் வீசிறுங்கள். அவன் வாய் எச்சிலை எனக்குக் குடிக்கக் கொடுத்து என் தாகம் தணியுங்கள். அவன் புல்லாங்குழலிலிருந்து வழியும் எச்சிலால் என் முகத்தைத் துடையுங்கள். (சிவப்பழகு கிரீமா அது?) அவன் மார்பில் போட்டிருந்த மாலையை என் மார்பில் போட்டுப் புரட்டி எடுங்கள். அவன் காலடி மண்ணால் என் உடல் மீது பூசுங்கள். (லக்மே பவுடரோ?)
மனிதர்களின் உளவியல்பற்றி ஆய்ந்து சிக்மண்ட் ஃபிராய்டு எழுதிய நூல், உலகின் போக்கை மாற்றிய முப்பெரும் நூல்களில் ஒன்று என்பார்கள் அறிஞர்கள். அந்த நூலில் அவர் விளக்கிய உளவியல் ஆசைகள், கோளாறுகள் பலவகை. தம் மனதின் ஆசைகளை ஆண்களும் பெண்களும் வெளிப்படுத்தும் செயல்வகைகளை விவரித்-திருப்பார். அவையெல்லாம் ஆண்டாளின் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. அதிகமாக ஆண்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள்தான் வெளிவரும். பெண்கள் வெளிப்படுத்துவதில்லை. வெளிப்படுத்துவதைச் சமூகம் அனுமதிக்கவில்லை. அத்தகைய மரபு மீறிய செயலை ஆண்டாள் எழுத்து வடிவிலேயே செய்திருக்கிறாள். பக்தியின் பெயரால் அது சகித்துக் கொள்ளப்படுகிறது. அனுமதிக்கப்-படுகிறது.
இந்த காமக் கவிதைகளைக் கோதைத் தமிழ் என்கிறார்கள். பகவத் கீதை என்கிறார்கள். காமக்கொடூரன் கண்ணன் பாடியது பகவத் கீதையாம். காமவெறியள் பாடியது பகவதி கீதையாம். ஏகாதசியன்று இவளுக்கு 108 புடவைகள் போர்த்துகிறார்கள். அவள் பாடிய முலைகள் உள்பட முழுவதும் மூடப்படுமோ?
ஆனாலும் இவளை வெம்பல் எனப் பாடியுள்ளார் மணவாள மாமுனி. பாடலைப் படியுங்கள்.
அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தஞ்செயலை விஞ்சிநிற்கும் தன்மையளாய் _ பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளை பக்தியுடன் நானும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து.
பிஞ்சிலே பழுத்தது வெம்பல். அதனை யாரும் தின்பதில்லை தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால் திருப்பாவை, நாச்சியார் வாய்மொழி என்று தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்கள்.
இம்மாதிரியான தமிழ்ப் பாடல்களைப் பாடிச் சங்கீதத்தை வளர்க்க வேண்டும் என்று அண்மையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த தினமணி நாளேட்டின் ஆசிரியர் பைத்தியநாதன்கூட பேசியிருக்கிறார். தமிழில் இவர் வைத்தியநாதன். வடமொழியில் (வ எழுத்து இல்லாததால்) பைத்தியநாதன். (இந்தச் சொல்லுக்கும் அவரது செயல்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று நம்புங்கள்)
புரிந்த மொழியில் இந்த வகைக் கடவுள் பாடலைப் பாடுவதற்குப் பதிலாக, புரியாத மொழியில் கடவுளைப் பற்றிப் பாடலாம் என்பதாக, வருத்தப்பட்டுப் பெரியார் கூறினார். தமிழ் இசைக்காக 1931இல் தனி மாநாடு கூட்டியவர் பெரியார். 1941இல் அண்ணாமலை அரசர், ஆர்.கே.சண்முகம், கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை அணைத்துப் போரிட்டு வென்றவர் பெரியார்! அவர் இப்படிக் கூறிடும் வகையில் உள்ள தமிழ்ப் பாடல்களை விடுத்து நல்ல பாடல்களை எழுதலாமே! ஏற்கெனவே அப்படி எழுதப்-பட்டிருக்கும் புரட்சிக்கவிஞரின் பாடல்களைப் பாடலாமே!
பாரதியாரின் மனைவி தன் காலம் முடிவதை உணர்ந்த நிலையில் தம் மகளை அழைத்துப் பாடச் சொல்லி, அதனைக் கேட்டவாறே இறந்தார் என்ற செய்தி தெரிவிக்கும் இன்னொரு செய்தி. செல்லம்மாள்பாரதி கேட்டு, அவர் மகள் பாடிய பாடல் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய பாடல் துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா
அப்பேர்ப்பட்ட இனிய, பொருள் பொதிந்த இசைப் பாடல்களை நிறைய எழுதிக் குவித்தவர் புரட்சிக் கவிஞர்.
அவற்றைப் பாடாமல் தவிர்த்தவர்கள் உண்டு. அவற்றைப் பாட மறுத்தவர்களும் உண்டு. அவற்றைத் துக்கடா என்ற தலைப்பில் இசைத்தவர்களும் உண்டு. மார்கழி மாதம் என்பதால் இதனையும் எழுதவேண்டி வந்தது.
- உண்மை இதழ், 1-15.1.13
திங்கள், 2 மார்ச், 2020
ஆண்டாள் பற்றி தந்தைபெரியார்....
ஞாயிறு, 1 மார்ச், 2020
மகா சிவராத்திரியின் மகா யோக்கியதை!!
- தந்தை பெரியார்
ல பிராணிகளை வேட்டையாடி கொன்று தின்பது வழக்கம், அந்தப்படி ஒரு நாள் காட்டில் வேட்டையாடி இரை தேட சென்றதில் அவனுக்குக் கொல்ல ஒரு பிராணியும் கிடைக்கவில்லை. அவன் மனக் கலக்கமடைந்து சோர்ந்து திரிந்தான். அந்நேரத்தில் அந்தக் காட்டில் ஒரு புலி, அவன் கண்ணுக்குத் தென்பட்டது. நேரமும் சற்று இருட்டி விட்டது. என்றாலும் வேடன் புலியைக் கண்டு ஓடினான். புலி விரட்டிற்று. வேடன் உடனே அங்கு இருந்த ஒரு மரத்தின்மீது அவசரமாக ஏறிக் கொண்டான்.
புலி அவனைப் பார்த்த வண்ணமே மரத்தடியில் சிறிது நின்று கொண்டிருந்து படுத்துக் கொண்டது. வேடன் அந்தப் புலியை விரட்டுவதற்காக ஆக மரத்திலிருந்த சிறு கிளைகள் தழைகள் முதலியவற்றைப் பிடுங்கி கீழே எறிந்தான். அப்போது சிறு மழைத்தூரல் விழுந்து கொண்டு இருந்ததால் அத்தழைகள் சிறிது நனைந்து விழுந்தன. இப்படியே பயந்து கொண்டு இரவு முழுதும் தூங்காமல் செய்து கொண்டு இருந்தான். சிறிது வெளிச்சம் படும்படி வானம் வெளுக்க ஆரம்பித்தவுடன் புலி ஓடிவிட்டது. இந்த நிலையில் வேடன் கீழிறங்கி வீட்டிற்குப் போய்விட்டான். பிறகு அதேதொழிலாக இருந்து சில நாள் பொறுத்துச் செத்தான். சிவன் உடனே அவனுக்குக் கைலாயத்தில் இடம் கொடுத்துவிட்டார். காரணம் என்னவென்றால்,
அந்த வேடன் தினம் உயிர்களைக் கொன்று வதை செய்து சாப்பிடுபவனாகவும், விற்பவனாகவும் இருந்தாலும், அவன் அன்றிரவு தான் பறித்துப் போடுகின்ற தழை, வில்வத்தழை என்று அறியா திருந்ததாலும், அப்போது அந்த மரத்தடியில் இருந்த ஒரு சிவலிங்கத்தின் மீது விழுகிறது என்பது தெரியாமல் போட்டிருந்ததாலும், அவனுக்குச் சிவ பக்தி, ஒழுக்கம் என்பவை சிறிதும், இல்லாமல் இருந்தாலும், அவனுக்குத் தெரியாமல் வில்வத்தழை நீரில் நினைந்து சிவலிங்கத்தின் மீது பட்டிருப்பதால், அவனுக்குக் கைலாயத்தில் இடம் கொடுக்க வேண்டியது அவசியம் என்று சிவன் கருதி மோட்சம் கொடுத்தான் என்பது இதன் கருத்து.
எதற்கு ஆக இக்கதை கற்பிக்கப்பட்டது என்றால், எவ்வளவு அயோக்கியனானாலும் இந்த விரதத்தை கொண்டாடினால் மோட்சம் கிடைக்கும் என்று மக்கள் கருதி இந்த விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்பதேயாகும். இதனால் நாம் அறியக்கிடப்பது என்னவென்றால், எவ்வளவு அயோக்கியனும் ஆரியமதத்தில் சேர்ந்தால் நன்மை அடைவான் என்கின்ற அளவுக்கு இது மதப்பிரசாரமாகும் என்பதுதான்.
இப்படியானால் ஆரிய (இந்து) மதம் காரணமாக எவனுக்காவது ஒழுக்கமேற்பட முடியுமா? எவனாவது ஒழுக்கத்தைப் பற்றிக் கவலைப்பட முடியுமா?
ஆரிய மதமும் ஒன்றே தான் என்பது அறியத்தக்கது. ஆதலால் திராவிட மக்கள், இந்த முட்டாள் தனமானதும் அயோக்கியத் தனமானதுமான இப்படிப்பட்ட மதம், சாஸ்திரம், கடவுள், பக்தி, விரதம், பூசை முதலியவற்றை நன்றாய் வெறுக்க வேண்டுமென்பது, இதனால் விளங்குகிறது.
-தந்தை பெரியார் - “விடுதலை”, 9.2.1953
- - - - -
புலித்தோல் அரைக்கு இசைத்து வெள்ளெருக்கம்பூ சடைக்கு முடிந்து
சுடலைப் பொடிப்பூசி கொன்றைப் பூச்சூடி தும்பை மாலை அணிந்து
மண்டை ஓடு கையேந்தி எலும்பு வடம் தாங்கி
மான், மழு, ஈட்டி, சூலம் கைபிடித்து
கோவண ஆண்டியாய் விடை (மாடு) ஏறி
ஒரு காலைத் தூக்கிக்கொண்டு பேயோடு ஆடுகிறவன்.. காட்டுமிராண்டியாய் இல்லாமல் நகரவாசி, நாகரிகக்காரனாக இருக்க முடியுமா ?
லம்பாடி நரிக் குறவனுக்கும், இந்தச் சிவனுக்கும் என்ன மாற்றம் ?
சைவர்களே..!
சைவப் புலவர்களே..!
அருள்கூர்ந்து கூறுங்கள்.
இந்தக் காட்டுமிராண்டிக்கால சிவனுக்குத்தான் மகா சிவராத்திரி யாம்..!!
இவன் யோக்கியதை என்ன தெரியுமா ?
தாரு காவனத்து ரிஷிப் பத்தினி களின் கற்பைச் சூறை யாடியதால், ரிஷிகள் கொடுத்த சாபத்தினால் அவன் சிசுனம் (ஆண் குறி) அறுந்து வீழ, அதனைப் பார்வதி தாங்கிக் கொண்டாளாம் -அது தான் சிவலிங்க உருவம் என்பது..!!
- ஈ.வெ.ரா.
(விடுதலை,18.7.1956)
- விடுதலை நாளேடு 20 2 20
சனி, 29 பிப்ரவரி, 2020
திராவிட மதம் வேறு ஆரிய மதம் வேறு ஆதி ஆரியப் பார்ப்பனரின் - பிரித்தாளும் சூழ்ச்சி (திராவிடச் சேய்)
(வாசக நேயர்களே,
ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.
இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.
திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)
கட்டுரையாளர் பற்றி....
திராவிடச்சேய் என்னும் பெயரில் 19.4.1940 'விடுதலை' இதழில் வெளிவந்த கட்டுரை இது. ஜாதி, மதம், வருணம் முதலியவற்றால் விளையும் கேட்டினை எடுத்துரைக்கின்றது. திராவிட மதம் ஆரிய மதத்திலிருந்து வேறுபட்டது என்பதை விளக்கும் கட்டுரை இது. திராவிட மதத்தை ஆரிய புரோகிதர்கள் தம்வசப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளைப் பட்டியலிடுகிறது. அரசர்களைத் தம் கைப்பாவை ஆக்கிக் கொண்ட சாதுர்யத்தையும் வெளிப்படுத்துகிறது.
சமயத்தைப் பற்றியோ சாதியைப் பற்றியோ, மதத்தைப் பற்றியோ வருணத்தைப் பற்றியோ நமக்கு அக்கறையில்லை; சமயம் சங்கடத்தை விளைவிப்பது; சாதி, ஒற்றுமையைக் குலைப்பதும், தம் மனிதனை அடிமையாக்குகிறது; வருணம் மனிதவர்க்கத்தின் சக்தியை ஒடுக்குகிறது என்பதே எமது அபிப்பிராயம். துஷ்டச்சிறுவரை பூச்சாண்டி காட்டி அடக்கு வதுபோல, மனிதச்சட்டத்திற்கும், நீதிக்கும் நியாயத்திற்கும் கட்டுப்படாதவனை கண்ணுக்குத் தெரியாதகடவுளைக் காட்டி அதனால் பயப்படுத்தி வந்திருக்க வேண்டுமென்பதே பகுத்தறிவில் கண்ட உண்மை. ஆனால் பிற்காலத்துப் போக்கு எப்படியாயிற்று? அக்கிரமத்தையொடுக்கத் தோற்று விக்கப்பட்ட பொய்க் கடவுள் அக்கிரமங்களை பல கோடி மடங்கு அதிகமாகச் செய்ய பற்றுக் கோடாகிவிட்டது. சமய மென்பது ஜனங்கள் நலன் பெற்று நடக்கவழிகாட்டும் ஒரு சட்ட இலாகா. பிற்காலத்திலோ, சமயம், குடி, கொலை, கொள்ளை, விபசாரம், அக்கிரமம், அநியாயம், மோசடி, வஞ்சனை, சூது முதலியன செய்து, ஒரு பிரிவினர் வயிறு வளர்க்கும் பொது ஜனத்துரோக இலாகாவாயிற்று. இந்த சமயமும் சாத்திரமும், கடவுளும் கோவிலும் தோன்றிய அந்த நாள் முதல் இந்த நிமிஷம் வரை சமயத்தின் பேராலும், சாமியின் பேராலும் நடந்து வரும் அக்கிரமங்கள், அநியா யங்கள், கொலைகள், பகற்கொள்ளைகள், மோசடிகனை எண்ணத்தான் முடியுமா? மனதில் எண்ணத்தான் கூடுமா?
ஜனசமூக அழிவிற்குக் காரணமென்ன?
ஜனசமூக அழிவுக்கும் செல்வநாசத்திற்கும் இந்த சமய சாதி கலகந்தான் மறுக்க முடியாத காரணமென்பதை நீண்ட நாள் உலகச் சரித்திரமே கூறும்.
இருந்தும், நல்லதை விடுத்து அல்லதைக் கொள்வதே மனிதர்களுக்கு சகஜமாகிவிட்டது. கஷ்டத்தை விலைக்கு வாங்குவதே மானிட சுபாவமாயிருக்கிறது. நல்லது செய்வா ரைக் கரிப்பதும் சுயநலத்தால் நல்லவன் போல் மாய நாடகம் நடித்து பின்னர் தலையில் கல்லைப் போடுகிறவர்களை நம்புவதும் உலக வழக்கமாகிவிட்டது.
இந்த இலக்கணப்படி கெடுதியை விளைவிக்கும் சாதி சமயங்களில் மனித வர்க்கம் நம்பிக்கை கொண்டிருக்கிறது. இன்னும் அதே நம்பிக்கை தான். பகுத்தறிவு இயக்கங்கள் என்ன பாடுபட்டும், இந்த மூட நம்பிக்கையை ஒழிப்பது மலையைத் தகர்ப்பது போல் கஷ்ட சாத்தியமாக இருக்கிறது. மதத்தின் சூதுச் சட்டங்களால் பகுத்தறிவு இழந்து மாக்களா கிய மக்கள் பகுத்தறிவையும் சுயமரியாதையையும் - பூர்ண மாகப் பெற்று மக்களாக இன்னும் எத்தனை காலமாகுமோ அறிய முடியவில்லை.
இத்துறையில் சுருக்காக வெற்றிபெற வேண்டுமானால், பைத்தியக்காரனை அவன் போக்கிலேயே விட்டுத் திருப்பு வதுபோல மதப்பித்து கொண்டவர்களை, மதத்தின் பேரைக் கூறியே உண்மையுணரச்செய்ய வேண்டும். காந்தியாரும் இந்த உண்மையை உணர்ந்து தான் போலும் அரசியலில் கடவுள் பேரை உதவிக்கு அழைக்கிறார். ஆத்ம கட்டளை, கடவுள் உத்திரவு என்று கூறி பாமரமக்கள் கண்ணில் மண் தூவி காங்கிரசின் பேரால் ஏகபோக சர்வாதிகார ஆட்சி நடத்த முயலுகிறார்.
இந்த ஏமாற்று வயிற்றுப் பிழைப்பு சமயங்களின் யோக்கி யதைகளை பகுத்தறிவு உடையவர்களை ஆராய்ந்து உண்மை உணரும்படி விட்டுவிடுகிறோம்.
இப்போது ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டுள்ளது, திராவிட மதம் ஆரிய மதம் தானா? திராவிடர்கள் தமக்குள் கட்டு திட்ட சட்டமான தனிப்பட்ட மதம் இல்லையா? திரா விடருக்கு சுய அறிவு இருந்ததா, அல்லது ஆரியப் பார்ப்ப னரிடம் விலைக்கு வாங்கிக்கொண்டனரா என்பதுவே.
திராவிட மதம் தனிப்பட்டது
திராவிட மதம் ஆரிய மதத்தினின்றும் தனிப்பட்டது. ஆரியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு பல நூற்றாண்டு களுக்கு முன்னரே திராவிட மக்கள், பகுத்தறிவுக்கும் மக்கள் நன்மைக்கும் ஏற்றதோர் இயற்கைச் சமயத்தைக் கையாண்டு வந்திருக்கின்றனரென்பது ஆதித் தமிழ்ப் பெருங் காவியங் களாலும், அகப்பொருள் புறப்பொருள் போன்ற நூற்களா லும் தெளியக் கிடக்கிறது. திரா விட மதமென்பது இயற்கை மதம். இயற்கைச் சக்தியே, மனிதர் வாழ்வதற்கு சாதக மான இயக்கச் சக்தியெனக் கண்டு அச்சக்திகளைதகுந்தபடி உப யோகத்திற்குள் கொண்டு வரவும், அச் சக்திகளை விபரீத வழிகளில் பயன் படுத்திக் கொள்ளாமல் தடைப்படுத்தவும் சில கட்டு திட்ட சட்டங்களை ஏற்படுத்தி அச்சக்திகளுக்கும் திருமால், முருகன், சிவன் என்ற தனித் தனிப் பெயர் களைக் கொடுத்து பூசித்து வந்திருக்கின்றனர். இப்பெயர்கள் விவ சாயத்திற்கான நீர், நிலம், காற்று, உஷ்ணம் ஆகியவை களையே குறிப்பிடுவனவாகும். கண்ணுக்குத் தெரியாத உலகத்திலுள்ள சூதுக் கடவுளைக் குறிப்பிடுவனவல்ல. எனவே நமது மூதாதைகள் என திராவிடப் பெரியோர் இயற்கைச் சக்திகளை ஒழுங்கு பெற பயன்படுத்திக் கொள்ள இப்போது மின்சாரம் நீராவி முதலியவற்றின் உபயோகத்திற்கு ஏற்பட்ட கட்டுத்திட்டங்கள் போன்று ஏற்படுத்திக் கொண்ட சட்ட நியதிகளே சமயமாகுமென்பது பகுத்தறிவில் காணும் தீர்ப்பு. தெய்வம் என்றால் பயன் தரும் சிறந்த சக்தி என்றே பொருள் கொள்ளப்படும். எனவே மக்கள் பிழைப்பதற்கு பயன்தரும் இயற்கைச் சக்தியே தெய்வம் அல்லது கடவுளா கிறது. இதற்குச் சான்றுகள் பழங்காலத் தமிழ் நூல்களிலும் இக்காலம் கிடைக்கும் சரித்திர நூல்களிலும் பரவிக் கிடக் கின்றன.
இந்த ஆதி இயற்கை வழிபாடு தெய்வச்சமயநெறி திகழ்ந்த காலத்து கொடுமைப்படுத்தும்பிரிவுபடுத்தும் சாதிப் பிரிவுகளும் இல்லை. எல்லாரும் சரிநிகர் சகோதரப்பான் மையே கொண்டிருந்தனர். மேலும் ஒழுக்கத்திற் சிறந்தோ ரையும் அறிவிற்சிறந்தோரையும் பொதுநலத்தொண்டு செய் வோரையும் மேன் மக்களெனவும் மரியாதை செலுத்தி வந்தனர்.
ஆரிய மதப்படையெடுப்பு
இவ்விதம் அமைதியும் அன்பும் கொண்டு வாழ்ந்த திராவிட மக்களுக்குள்ளே சாதிசமயப்பாகுபாடுகளும் வேற்றுமைகளும் பூசல்களும் எப்போது உண்டாயின! இப்போதிருப்பது திராவிட மதமா? என்பன தெளிவுபட வேண்டும்.
இப்போது இத்திராவிட நாட்டில் பரவி நிற்கும் இந்துமதம் அசல் திராவிட மதம் அல்ல என்று உறுதியாகக் கூறலாம். ஆரிய மதக்கலப்பில் மயங்கியதோர் சூது மதம் தான் இப்போது உள்ளது.
கி. மு. இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டு வாக்கில், வடநாட்டு ஆரிய மதங்களான சைன மதம், பிராமண மதம், பவுத்தமதம், ஆசீவக மதம் நான்கும் தென்னாட்டை நாடி வந்தன. அக்காலத்தில் தமிழ் நாட்டில் வழங்கப்பட்ட மதம் வடநாட்டு மத சம்பந்தமற்ற கவிதை தனி மதமாகும்.
வடநாட்டு மதங்களான இந்த நான்கு ஆரிய மதங்களும் திராவிட நாட்டில் புகுந்த காலத்தில் தான் மதப்பூசல்களும் வந்தன. பல வியாபாரிகள் ஒரே சரக்கை ஒரே இடத்தில் விற்க முற்பட்டால், என் சரக்கு மேல், உன் சரக்கு கீழ் என போட்டிப் பூசல் நேரிடுவது சகஜம் தானே. அதே போலத் தான் ஆரியமதங்கள் நான்கும் தத்தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட தத்தமது சிறப்பைக் கூறி பூசலிட்டு பேரம் செய்யத் தொடங்கின. அன்று தொடங்கிய சண்டை இன்று வரை நாமச்சண்டை விபூதிச் சண்டை சோற்றுச் சண்டை யாகத் தொடர்கிறது.
பற்பல உபாயங்களால் திராவிட நாட்டுப் பெருங்குடி மக்களைத் தத்தம் மதத்தில் சேர்த்து அவர்கள் நிழலில் சிறப் பும் செல்வாக்கும் தேடிக்கொள்ள முயற்சித்தனர். இப்பெருங் குடி மக்களையும், மதத்தின் பேரால் ஒருவருடன் ஒருவர் போர் புரியும்படியும் சூதிழைத்தனர். பற்பல சமயங்களிலும் குடி, கலகங்களும் செற்றமும் ஏற்பட்டன.
இதற்குச் சான்று, மணிமேகலையில்,
"ஒட்டிய சமயத்துறு பொருள் வாதிகள்
பட்டி மண்டபத்துப்பாங்கறிந் தேறுமின்
பற்றா மாக்கள் தம்முடனாயினும்
செற்றமும் கலாமும் செய்யாதகலுமின்"
என்ற குறிப்பிலிருந்து அறியக் கிடைக்கிறது.
இந்து சமயத்தோற்றம்
பவுத்த மதம் தனக்குள்ளேயே ஏற்பட்ட அறுவகைப் பிரிவுகளால் வலிமையிழந்தது. பிறந்த இடத்தை மறந்து பிறரிடத்தில் வாழவேண்டியதாயிற்று. கி.பி. நான்கு அய்ந்து நூற்றாண்டுகளில் பவுத்தம் குன்றியது. ஜைனமும் தலை தூக்கித் தணிந்தது.
ஆடுவாராடி ஒடுங்கிய பின் வந்து மூன்று நூற்றாண்டு களுக்குப் பின் வைதீக மதமெனும் பிராமண மதம் தலை தூக்கத் தொடங்கிற்று.
உயிர்க்கொலையும் சாதிப்பிரிவும்
வைதீக மதத்தின் கொள்கைகள்படி, யாகத்தில் உயிர்க் கொலை செய்யும் வழக்கம் எங்கும் பரவிற்று, மேலும் இம் மதத்தை இங்கு தூக்கிக் கொண்டுவந்தவர்களாகிய வேத வித்துக்களாம் ஆரியப் பிராமணர் உயர் ஜாதி என்றும் வலியுறுத்தப்பட்டது.
அது மட்டுமா? தம் வேதப்புரட்டுகளை திராவிடர் அறிந்து கொண்டால் எங்கே தம் வயிற்றுப் பிழைப்பில் மண் விழுந்து விடுமோவென அஞ்சி வேதங்களுக்குத் தெய்வத் தன்மையும் கற்பனை செய்தனர். அதாவது கடவுளே அவர்கள் நேரில் அந்த வேதங்களை ஒப்புவித்ததாகவும் பிறரிடம் கூறவோ, கொடுக்கவோ கூடாதென கடவுளே தம் வாயார கட்டளையிட்டதாகவும் அக்கட்டளையை மீறி னால் கண் கெடும் மண்டை வெடிக்குமென்றும் பயங்கர பயத்தை கிளப்பிவிட்டு மதத்தின் பேரால் சர்வ போகங்கள் அனுபவித்து வர முயற்சித்தனர்.
இருபிறப்புத் தந்திரம்
இந்தவித சுயநலக் கட்டுப்பாடுகளை சுய அறிவுள்ள திராவிடர் விரும்பவில்லை. பிராமணர் சரக்கும் இங்கு விலைபெற முடியவில்லை பிழைப்பில் மண் விழுந்தது. சோற்றுக்கு வகையற்று காட்டுக்குச் சென்று தவம் செய்த தாகக் கூறி காய் கிழங்குகளையும் இலை சருகுகளையும் தின்ன வேண்டிய கதியேற்பட்டது.
எத்தனை காலம் தான் பட்டினியிருக்க முடியும். இதனால் தமது வர்க்கம் அழிவது கண்டு ஆரியரும் வேறொரு தந்திரத்தைக்கையாண்டனர்.
அய்ந்தாவது நூற்றாண்டுக்குப் பின்னர் தமது மதக் கொள்கைகளை மாற்றி தம் மதத்திற்கு பொன் முலாமும் சர்க்கரைப் பூச்சும் பூசத்தொடங்கினர். கடவுள் பெயரால் உயிர்க்கொலை செய்வதை திராவிடர் வெறுத்தனர். அத னால் அந்த சடங்கை ஆரியர் தம் மதத்திலிருந்து நீக்கினர். திராவிடத் தெய்வங்களான திருமால் சிவன் முருகன் இவைகளை தம் மதக் கடவுள்களாக ஏற்றுக் கொண்டு சம்மந்தி உறவுகொண்டாடத் தொடங்கினர். சிவனுக்கும் திருமாலுக்கும் தம் வடநாட்டிலே பெண்டாட்டிகளைத் தோற்றுவித்தனர்.
ஆர்ப்பாட்ட வெறியாட்டுகளை விடுத்துத் திராவிடர் விரும்பும் அன்பு அல்லது பக்தி மார்க்கத்தையும் மேற் கொண்டனர். உண்மையைக் கூறுமிடத்து திராவிட மதத்தி லிருந்த நல்ல கொள்கைகளை எல்லாம் திருடி தம் மதத்தில் புகுத்திக் கொண்டு உங்கள் மதம் எங்கள் மதத்தில் அடங்கியிருக்கிறதெனக் கூறி ஏமாற்றி தன் வசப்படுத்தினர் வஞ்சக தந்திரத்தில் மிகுந்த ஆரியப் புரோகிதர்கள். மேலும் திராவிட பாஷைகளையும் கற்றனர்; திராவிடப் பெண்களை யும் கொண்டு திராவிட பூமியில் ஆரியப் பயிர்களை விதைக்கலாயினர். ஆரிய பூமியில் திராவிட விதைகளை நட்டால் எங்கு திராவிடப் பயிர் பெருகிவிடுமோ என்று பயந்து, திராவிடர் ஆரியப் பெண்களைத் தீண்டினாலும் தீண்டின திராவிடர் கொலை செய்யப்படவேண்டுமென மனுதர்ம சாஸ்திரம் முதலியவைகளையும் தோற்றுவித்தனர். தப்பித்தவறி ஆரிய நிலத்தில் (பெண்) திராவிடமுளை முளைக்க ஆரம்பித்திருப்பதாகக் கண்டால் அந்த ஆரிய நிலமும் தீயிட்டுச் சாம்பலாக்கப்படும். ராவணப் பெரியாரிட மிருந்து மீட்கப் பட்ட சீதையை நெருப்பில் புகச்சொன்னதும் இக்கொள்கையை வலியுறுத்துகிறது.
மேற்காட்டிய வரலாற்றால் திராவிட நாட்டில் அரிய மதமான வைதீகப்பிராமணமதமெனும் இந்துமதம் (இந்து என்ற ஆரிய மொழிக்கு திருடர் என்று யாரோ பொருள் கற்பித்திருப்பதாக படித்த ஞாபகம்) எப்படி முக்காடிட்டுப் புகுந்து ஆதிக்கம் செலுத்தலாயிற்று; எப்படி திராவிடரின் இயற்கைச் சமயம் உருவழிந்தது என்பது தெள்ளத் தெளிவு படுகிறது.
படிக்கக்கூடாத பாஷை
ஆரிய மதம், குடியையும், உயிர்க்கொலையையும் அத் துடன் விபசார விருத்தியையும் கொள்கைகளாகக் கொண் டிருந்த தென்பதற்கு இதிகாச புராணங்களே சாட்சிகளாகும். இந்தக் கொடுமைகளை திராவிட மக்கள் விரும்பினாரில்லை. இந்தக் கொள்கைகளை விடவும் ஆரியர் மனம் இடம் தரவில்லை. அதனால் மற்றொரு தந்திரம் செய்தனர். இந்த இருபிறப்பு மதக்கொள்கைகளை எல்லாம் சமஸ்கிருதத்தில் எழுதிக் கொண்டனர். அப்பாசைக்கும் தெய்வீகத்தைக் கற்பித்தனர்.
திராவிடர் படிக்கக்கூடாதென்றும் தெய்வச்சீற்ற பயங் காட்டி தடைப்படுத்தினர். தப்பித்தவறி ஆரிய வேத பாராய ணத்தை திராவிடர் காதால் கேட்டுவிட்டாலும், கேட்ட ரகசி யத்தை வெளியில் சொல்ல முடியாமல் நாக்கைத் துண் டித்தோ மற்றும் பலவகை சித்திரவதைத் தண்டனைகளுக் குட்படுத்தியோ வந்தனர். இதற்கு சட்டங்களும் வகுத்தனர். அரசர்களையும் தமது கைப்பாவையாக்கிக் கொண்டனர்.
தற்காலப் பெரியார் தடிப்புரை
இவ்வாறாக திராவிட சமய நெறிகளை அழித்து, ஆரிய மாக்கினர். ஆரியப் பிராமணர் இந்தப் பிராமணர்களின் சந்ததியாராகக் கொள்ளப்படும் தற்கால பிராமணப் பெரி யார்கள் சிலர் தாங்கள் ஆரியர்கள் என்று கூறிக் கொள்வ தில் பெருமை கொள்ளுவதுடன் திராவிட மதம் என்ப தில்லை. ஆரிய மதத்தைத்தான் திராவிடர் - சூத்திரர் அனுஷ்டிக்கச் செய்யப்பட்டனர். திராவிடர் முன்னர் மதமற்ற காட்டுமிராண்டிகனாக (குரங்குகளென்றும் கரடிக ளென்றும் ராட்சசரென்றும் ராமாயணம் முதலியவற்றில் கூறப்பட்டுள்ளது) இருந்தனர். நாங்கள் தெய்வ அருள் கொடுத்து ஆரிய தேஜஸ் கொடுத்தோம் என்று வாதமிடு கின்றனர்.
ஆனால் சில ஆரியப் பெரியோர்கள் (சுயநலத்தாலோ பரநலத்தாலோ அறியோம்) "நானும் ஒரு தமிழன் தான்" என்று தமிழ் கூட்டங்களில் கூறிக்கொள்ளுகின்றனர். மாஜி பிரதம மந்திரியான தோழர் ஆச்சாரியசாமிகளும் ஒரு முறை இந்த அருள்பாட்டை திருவாய் மலர்ந்தருளினா ரென்றும் பத்திரிகை வாயிலாக அறியக் கிடைக்கும் பெரும் பாக்கியத்தைப் பெற்றதாக நினைவில்படுகிறது. ஓர்ஷிப்புல் மேயர் சாஸ்திரிகளும் ஒரு தடவை தமது அரசியல் கனவே கவேதோப்பாக்யான பாராயணத்திலும் இந்தக்கருத்தைப் பிரதி பிம்பிக்கத் திருவுள்ளம் பற்றியதாகவும் கூறக்கேள்வி. தோழர் ஆச்சாரியார் ஆரியச்சம்பந்தியும் தமது திராவிட சம்பந்தியின் கொள்கைகளை வலியறுத்தி மேற்கைச்சாத் திடுவது போல் "ஹிந்துக்கள் எல்லோரும் இந்துக்கள் தான். ஆனால் மேல் கீழ்ச்சாதி என்ற வருணாச்சிரம தர்ம பாகு பாடுகள் தெய்வப் பிறப்பு தான்" என்று மகாத்மியம்படிக்கிறார்.
இந்தப் பெரியார்களின் கூற்று எவ்வளவு தூரம் உண்மை எவ்வளவு தூரம் கலப்பற்ற உண்மை என்பதனை பகுத்தறி வாளர் தம் ஆராய்ச்சித் தீர்ப்புக்கு விட்டு விடுகிறோம்.
- 'விடுதலை', 19.4.1940
சனி, 22 பிப்ரவரி, 2020
சரஸ்வதி குறித்து அபிதான சிந்தாமணி
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கூறும் புராண சரஸ்வதியின்
கும்பியைப் புரட்டும் ஆபாசக் கதை இதுதான்
சரஸ்வதி குறித்து அபிதான சிந்தாமணியில் கூறப்பட்டுள்ளதாவது:
சரஸ்வதி - A
1. பிரமனால் சிருட்டிக்கப்பட்டு அவனால் மணக்கப்பட்டவள். வித்யாதிஷ்டான தேவதை. இவள் வெண்ணிறமாய், வெள்ளை வஸ்திரம் கைகளில் ஜப மாலை, புத்தகம், வீணை, எழுத் தாணி தரித்து எழுந்தருளியிருப்பள் எ-ம்., இவளுக்கு ஒரு கரத்தில் ஜபமணி, மற்றொன்றில் புத்தகம், இருகரங்களில் வீணை எ-ம், இவட்குப் பிரமவித்தை முகம், நான்கு வேதமும் கரங்கள், எண்ணும் எழுத்தும் கண்கள், சங்கீதசாகித்தியம் தனங்கள், ஸ்மிருதி வயிறு, புராண இதிகாசங்கள் பாதங்கள், ஓங்காரம் யாழ் எனவுங் கூறுப.
2. தக்ஷயாகத்தில் காளியால் மூக்கறுப்புண்டு மீண்டும் பெற்றவள்.
3. இவள் தன்னைச் சிருட்டித்துத் தன்னுடன்கூடப் பிரமன் வருகையில் பிரமனுக்கு அஞ்சிப் பெண்மான் உருக்கொண்டு ஓடினள். பிரமன் ஆண்மான் உருக் கொண்டு தொடர்ந்து சிவமூர்த் தியால் தடையடையக் கண்டு சிவமூர்த்தியை வேண்டிப் பிரமனைக் கணவனாகப் பெற்றவள்.
4. பிரமன் தன்னை நீக்கி யாகஞ்செய்ததால் நதி யுருவாய் யாகத்தை அழிக்க வந்தவள்.
5. ஒரு காலத்து அகத்தியரிடம் பிறந்தவள்.
6. பிரமன் காயத்திரி, சாவித்திரி, சரஸ்வதி மூவரு டன் கூடிக் கங்காஸ்நானத்திற்குப் போக சரஸ்வதி ஆகாய வழியில் பாடிக்கொண்டிருந்த வித்யாதர ஸ்திரீயின் இசையில் மனம் வைத்திருந்தனள். சரஸ்வதி ஒழிந்த இருவரும் தம் நாயகருடன் கங்கையடைந்து ஸ்நானஞ் செய்தனர். சரஸ்வதி சற்றுத் தாமதித்துப் பிரம தேவனிடஞ்சென்று தான் வருமுன் ஸ்னானஞ் செய்தது பற்றிக் கோபித்தனள். பிரமன் உன்மீது குற்றம் இருக்க என்மீது பயனிலாது கோபித்தலால் (48) அக்ஷரவடிவாகிய நீ உலகத்தில் நாற்பத்தெட்டுப் புலவர் உருவாகத் தோன்றிச் சிவமூர்த்தியை பணிந்து அவர் தந்த சங்கப்பலகையில் இருந்து வருக எனச் சாபம் ஏற்றவள்.
7. ஒரு யாகத்தில் இவள் வரத் தாமதித்ததால் பிரமன் இடைக்குலக் கன்னிகையைத் தாரமாகப் பெற்ற தால் இவளால் தேவர் சபிக்கப்பட்டனர் என்ப.
8. இவளும் இலக்குமியும் மாறு கொண்டு தங்களில் உயர்ந்தார் யாரென்று பிரமனைக் கேட்கப் பிரமன் இலஷ்மிதேவி என்ன மாறுகொண்டு நதியுருவாயினள்.
9. பிரமன் யாகஞ்செய்ய அந்த யாக கலசத்துக்குள் தோன் றியவள், புலத்தியரை அரக்கனாகச் சபித் தவள். சரத் காலத்தில் பூசிக்கப்படுதலால் சாரதை எனவும் பெயர்.
10. இவள் பிரமனால் சிருட்டிக்கப்பட்டு அவரால் மோகிப்பக்கண்டு, அந்தமோகவார்த்தையு ரைத்த முகத்தை நோக்கி நீ இவ்வாறு தூஷித் துக் கொண்டிருந்ததால் ஒரு காலத்தில் சிவ பெருமானையும் அவ்வாறு தூஷித்து அவரால் சிரம் அறுபடக் கடவையெனச் சபித்தனள். (சிவமகா புராணம்)
11. இவளும், கங்கை, லஷ்மி முதலியவர்களும் விஷ்ணுபத்னிகள். ஒரு கால் விஷ்ணு கங்கை யிடம்அதிக ஆசை கொண்டு அவளுடன் நகைமுகமாயிருந்தலைக் கண்ட சரஸ்வதி, பொறாமை கொண்டு லஷுமியை நோக்க லஷ்மி கங்கைக்குச் சார்பாயிருத்தலைக் கண்டு இவள் லஷ்மியைச் செடியாகவும் நதியாகவும் போகச் சபித்தாள். கங்கை சரஸ்வதியை நதியுரு வமாகவெனச் சபித்தாள். பின் ஸரஸ்வதி கங்கையை நோக்கி நீயும் நதியுருவமாய் உலகத்தவரது பாபத்தைச் சுமக்க என்றனள். லஷ்மியிதனால் தர்மத்வஜருக்கு குமாரியாகித் துளசியாகவும், பத்மாவதியெனும் நதியாகவும் பிறந்தனள். கங்கையும் சரஸ்வதியும் நதிகளாகப் பிரவகித்தனர். லஷ்மி சங்கசூடனை மணந்தனள். கங்கை சந்தனுவை மணந்தனள். சரஸ்வதி பிரம பத்தினி ஆயினள். சரஸ்வதி பாரத வருஷத்தில் நதியாக வந்தபடியால், பாரதி, பிரமனுக்குப் பத்தினியானதால் பிராம்மி, வாக்குகளுக்குத் தேவியாதலால் வாணி, அக்னியைப்போல் பாவத்தைக் கொளுத்தி யாவருங்காண மஞ்சணிறம் பெற்றிருத்தலின் சரஸ்வதியென அழைக்கப்படுகின்றனள். இந்த (3) தேவியரும் பூலோகத்தில் கலி (5000) வருஷஞ்சென்றபின் தங்கள் பதமடைவர். (தேவி-பா.)
- "அபிதான சிந்தாமணி", பக்கம் 723-724