வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

கபாலி!

வைஷ்ணவர்கள் சுவர்க்கம் வேண்டி பட்டினி கிடக்கும் வைகுண்ட ஏகாதசியைப்போல சைவர்கள் என்று கருதக் கூடியவர்களின் சிவராத்திரியை தை, மாசி குளிர்காலங்களில் கொண்டாடுவார்கள்.

சைவம்-வைணவம்என் பதுஇந்துமதத்துக்குள்போட் டிக் கடைகள்தான். பெயரள வில்தான்இந்துமதம்-அதற்குள் ஆயிரத்தெட்டு போட்டிகள், முரண்பாடுகள், அடிதடிகளுக்குப் பஞ்சமே இல்லை.

அதுவும் இந்த சிவன் இருக்கிறானே - அவன் உருவத் தைப் பார்த்தாலே தெரிந்துவிடும் - ஒரு காட்டுமிராண்டிக் கடவுள் என்பது.

சிவன்பற்றி தந்தை பெரியார் படம் பிடிக்கிறார்.

புலித்தோல் தரைக்கு இசைத்து

வெள் ளெ ருக்கம்பூ சடைக்கு முடிந்து

சுடலைப் பொடிப் பூசி

கொன்றைப் பூச்சூடி

தும்பை மாலை அணிந்து

மண்டை ஓடு கையேந்தி

எலும்பு வடந்தாங்கி

மான், மழு, ஈட்டி, சூலம் கைபிடித்து

கோவண ஆண்டியாய் விடை(மாடு) ஏறி

ஒரு காலைத் தூக்கிக் கொண்டு

பேயோடு ஆடுகிறவன்

காட்டுமிராண்டியாய் இல்லாமல்

நகரவாசி - நாகரீகக்

காரனாய் இருக்க முடியுமா?

லம்பாடி நரிக்குறவனுக்கும்

இந்தச் சிவனுக்கும் என்ன

மாற்றம் சைவர்களே!

சைவப் புலவர்களே

அருள்கூர்ந்து கூறுங்கள்.

- ஈ.வெ.ரா.

(‘விடுதலை', 18.5.1956)

இடுப்பில்புலித்தோல்,உடல் முழுவதும்சுடுகாட்டுச்சாம்பல், மண்டை ஓடு கையில், மழு, ஈட்டி, சூலம் வகையறாக்கள் ஆயுதங்கள்-காளைமாட்டு வாகனம்- இப்படி இருப்ப வன்மனிதக்காட்டுவிலங் காண்டிக்காலத்தில் உருவகப் படுத்தப்படுபவனாகத் தானே இருக்க முடியும். கபாலி என்றால் மண்டை ஓட்டைக் கையில் ஏந்தியவன் என்று பொருள்?

Man Created God in his own image - மனிதன் தன் னைப் போலவே தன்னால் உண்டாக்கப்பட்ட கடவுளையும் கற்பித்தான் என்பது இதுதான்.

மகாவிஷ்ணு பிற்காலத்தில் தோற்றுவிக்கப்பட்டவன்; அவன் கையில் சங்கு சக்கரம் இருக்கிறது. கொஞ்சம் வளர்ச்சி அடைந்த காலகட்டத்தில் இவன் உருவாக்கப்பட்டவன் என்கிறார் தந்தை பெரியார்.

மனிதன் மிருகங்களோடு மிருகமாய் காட்டுக் குகைகளில் வாழ்ந்து வேட்டையாடிப் புசித்துக் கொண்டிருந்த காட்டு விலங்காண்டிக் காலத்தில் உருவகப்படுத்தப்பட்ட கட வுளை, ஒரு நாள் கண் விழித்து, விரதம் இருந்து பூஜித்தால் சொர்க்கம் கிடைக்கும் என் றால், இதன் பொருள் என்ன? இவன் சிந்தனை இன்னும் காட்டுவிலங்காண்டிக் காலத்தில் சஞ்சரித்துக் கொண்டு கிடக்கிறது என்பதுதானே!

- மயிலாடன்
- விடுதலை நாளேடு, 16.2.18

வியாழன், 15 பிப்ரவரி, 2018

மகாசிவராத்திரி

முதல் கதை

‘மகாசிவராத்திரி' தொடர் புடைய இரு புராணக் கதை களைப் பார்ப்போம்...

ஏழைக் குடியானவன் ஒரு வன் விறகு பொறுக்க காட்டுக்குச் சென்றான். வேலையில் கண் ணும் கருத்துமாய் இருந்ததால் நேரம் போனது தெரியவில்லை. இருட்டிவிட்டது. விலங்குகளின் சத்தம் கேட்டு பயந்தவன், ஒரு மரத்தின் மீது ஏறினான். கிளைகளுக்கு நடுவில் அமர்ந் தான். 'தூங்கினால் கீழே விழுந்து விடுவோமே?' என்று பயந்தான்.

தூக்கம் வராமல் இருக்க... மரத்தில் இருந்த இலைகளைப் பறித்து சிவனின் பெயரை உச்சரித்தபடி கீழே போட ஆரம்பித்தான். இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்தவன், பொழுது புலர்ந்ததும் மரத்தைப் பார்த்தான். அமர்ந்திருந்தது ‘வில்வம்'.

அவன் போட்ட இலைகள் அனைத்தும் மரத்தின் கீழ் லிங்கத்தின் மீது குவிந்திருந்தது. அன்று மகாசிவராத்திரி என்பதும் அவனுக்குத் தெரியாது. பலனை எதிர்பார்க்காமல் செய்த பூஜை, இறைவனை மனம் குளிரச் செய் தது. அவனுக்கு காட்சித் தந்து அருளினார். அவன் பெரும்பேறு பெற்றான் என்கிறது புராணம்..

மற்றொரு கதை

ஒருமுறை பிரம்மனும், மகா விஷ்ணுவும் தங்களுக்குள் யார் சிறந்தவர் என்று விவாதித்தனர். அது அவர்களுடைக்கிடையே சண்டையாகமாறியது.அப் போது, எதிரில் லிங்கத் திருமேனி தோன்றியது. அதன் உச்சி அல்லது அடி பாகத்தை காண்பவரே உயர்ந்தவர் என்று லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட அசரீரி கூறியது.

லிங்கத்தின் மேல் பகுதியை நோக்கி சென்றார் பிரம்மன். விஷ்ணு பகவான், கீழ் பாகத்தை நோக்கினார். இருவராலும் எங்கே முடிகிறது என்பதைக் காண முடியவில்லை. மகாவிஷ்ணு இதனை ஒத்துக்கொண்டார். ஆனால், பிரம்மன்... லிங்கத்தின் மேல் பாகத்தை தான் கண்ட தாக பொய் சொல்ல, அதற்குச் சாட்சியாக தாழம்பூவை கொண்டு வந்தார்.

இதனைக் கேட்டு சிவ பெருமான் கோபமுற்று, ‘இனி பூலோகத்தில் உன்னை வணங்க மாட்டார்கள்' என்று சபித்தார். அனைத்துக்கும் தொடக்கமாக (ஆதி) விளங்கும் அவருக்கு முடிவே (அந்தம்) இல்லை, என்று புராணம் கூறுகிறது.

மகாசிவராத்திரி தரிசன பலன்

ரிஷிகளும், மன்னர்களும் நடத்தும் ‘அசுவமேதயாக' புண் ணியத்தை மகாசிவராத்திரி தரிசனம் தரும்.

வாழ்நாளில் ஒருவர் செய்த பாவங்கள், சிவனை நான்கு கால பூஜை செய்து வழிபடுவதால் நீங்கும்.

தொடர்ந்து 24 ஆண்டு கள்மகாசிவராத்திரிவிரதம் இருப்பவரின் 21 தலைமுறை களும் நற்கதி அடைந்து முக்தி அடைவார்கள்.

- வாராந்திர ‘ராணி‘ 18.2.2018, பக்கம் 30

இந்த இரு கதைகளும் எதைக் காட்டுகின்றன?

முதல் கதை கடவுள் தற் பெருமைக்காரர் என்பதைக் காட்டவில்லையா?

இரண்டாவது கதை கடவுள் களுக்குள்ளும் போட்டி உண்டு என்பதையும், கடவுள் பொய் சொல்லக் கூடியவர் என்பதையும் விளக்கவில்லையா?

மும்மலங்களையும் அறுப் பது (ஆணவம், கன்மம், மாயை) என்ற யோக்கியதை இந்துக் கடவுள்களுக்குக் கிடையாதா?

பக்தி ஒழுக்கத்தை வளர்க் குமா சொல்லுங்கள்!

- மயிலாடன்

- விடுதலை நாளேடு, 13.2.18

மடமைகளைப் பரப்பவே சிவராத்திரி



மகா பிரளயம் ஏற்பட்டதால் உலகமே மூழ்கிப் போனது. திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை மீட்டான். அதன்பொருட்டு சற்றே கர்வமும் கொண்டான். மீண்டும் பூலோகத்தில் உயிர்களை உற்பத்தி செய்ய நினைத்த திருமால், தன் நாபிக் கமலத்திலிருந்து பிரம்மாவைத் தோற்றுவித்தான்.  படைக்கும் திறனை பிரம்மாவுக்கு அளித்துவிட்டு பரமதிருப்தியுடன் பாற்கடலுக்குச் சென்று உறக்கத்தில் ஆழ்ந்தான். விஷ்ணுவின் கட்டளைப்படி பிரம்மா சகல ஜீவராசிகளையும் படைத்து உலகத்தை நிரப் பினான். பின்னர், மூவுலகங்களையும் சுற்றிப்பார்த்து தன் படைப்பின் வினோதங்களைக் கண்டு மகிழ்ச் சியடைந்தான்.

இத்தனை உயிர் வர்க்கங்களைப் படைத்த தன்னை விட, இந்த உலகத்தில் வேறு யாரும் சிறந்த வரில்லை என்று ஆணவம் ஏற்பட்டது.

பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும்

ஏற்பட்ட மோதல்

நானே முழுமுதற் கடவுள் என்று மார்தட்டிக் கொண்டான் பிரம்மா. இதனால் பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் சண்டை ஏற்பட்டது. பிரம்மனே ! வீண் அகங்காரம் பிடித்து அலையாதே. உலகங்களில் உயிர்களைத் தோற்றுவித்தது நீதான். அதில் சந் தேகமில்லை. ஆனால், கடலையும் கடல் சூழ்ந்த பூமியையும், திசைகளையும் மலைகளையும், இன்னும் பல உலகங்களையும் மேலான உயிர்களையும் படைத்தவன் நான்தான். ஏன், பிரம்மனாகிய உன்னை உருவாக்கியவனும் நான்தான். உயிர்களைப் படைக்கும் சக்தியை உனக்குத் தந்தவனும் நான்தான். எனவே, என்னுடன் மோதாதே. உன்னிலும் பெரியவன் நான்தான் என்பதைப் புரிந்து கொள்' என்றான் விஷ்ணு. மோதலால் இந்த. வாக்குவாதம் நீண்டு கொண்டே போனது. இந்திரன் முதலான தேவர்களும், வசிஷ்டர் முதலான ரிஷிகளும் சமாதானம் செய்து வைக்க முயற்சித்து தோற்றுப்போனார்கள்.

வாக்குவாதம் முற்றி, பிரம்மனும் விஷ்ணுவும் யுத்தம் செய்யவே தொடங்கிவிட்டார்கள். இருவரும் ஒருவர்மீது ஒருவர் அஸ்திரங்களைச் செலுத்திக் கொண்டிருந்த போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

இருவருக்கும் இடையே ஒரு பெரியஅக்னிப் பிழம்புவானளாவத்தோன்றியது.அந்தஅக்னிப் பிழம்பில் பிரம்மா, விஷ்ணு இருவரின் அஸ்திரங் களும், பாணங்களும் கலந்து மறைந்தன.

ஆதியும் அந்தமும் தெரியாத அந்த ஜோதிப் பிழம்பைக் கண்டு விஷ்ணுவும், பிரம்மனும் கலக்க மடைந்தார்கள். அப்போது அந்த அக்னிப் பிழம்பின் நடுவிலிருந்து ஓர் அசரீரி குரல் கேட்டது.

‘உங்களில் யார் இந்த ஜோதியின் அடியையோ முடியையோ முதலில் கண்டு வருகிறீர்களோ அவரே பெரியவர். அவரே பரப்பிரம்மம்' என்று கூறியது.

திருமால் வராக (பன்றி) அவதாரம் எடுத்து பூமியைத் துளைத்துக் கொண்டு அக்னிப் பிழம்பின் அடியைக் காணப் புறப்பட்டதுபோல், பிரம்மன் அன்னப் பறவை உருவம் கொண்டு ஜோதியின் முடியைக் காணப்பறந்தான்.

இருவரும் போய்க்கொண்டே இருந்தபோதிலும்,  அடியையும், முடியையும் இருவராலும் காண முடிய வில்லை. விஷ்ணு தன் தோல்வியை ஒப்புக்கொண்டு பாதாளத்திலிருந்து பூலோகத்துக்குத் திரும்பிவிட்டான்.

அன்னப்பறவையாக மாறிப் பறந்து கொண்டிருந்த பிரம்மனும் சோர்ந்து போனான்.

அப்போது தாழம்பூ மடல் ஒன்று மேலிருந்து கீழே விழுந்து கொண்டிருந்தது. அது ஜோதி வடி வாகிய சிவனின் சிரசிலிருந்துதான் கீழே வந்து கொண்டிருந்தது.

பிரம்மன் அந்தத் தாழம்பூவிடம், ஜோதியின் முடியைத்தான் கண்டுவிட்டதாகத் தன்னுடன் வந்து பொய்சாட்சி கூறுமாறு கேட்டுக்கொண்டு திரும்பவும் புறப்பட்ட இடத்துக்கே வந்து சேர்ந்தான்.

விஷ்ணுவிடம், அக்னிப் பிழம்பின் முடியைத் தரிசித்து விட்டதாக பிரம்மன் பொய்யுரைத்தான்.

அக்னிப் பிழம்பிலிருந்து சிவன் தோன்றி விஷ் ணுவுக்கு சக்ராயுத வரம் அளித்து, பொய்யுரைத்த பிரம்மனுக்கு என தனியே வழிபடும் கோயில் பூலோகத்தில் இருக்காது என்றும்,  தாழம்பூ பூஜைகளில் பயன்படுத்த கூடாது என்றும் சாபமிட்டானாம்.

பிரம்மா, விஷ்ணு இருவருமே இந்த ஜோதி சொரூபம் தங்களுக்கும் மேலான சக்தியே என்பதை மட்டும் தெளிவாகப் புரிந்து கொண்டார்களாம்.

‘அனைத்துக்கும் மேலான பரம்பொருளே! தங்களின் பெருமையையும் சக்தியையும் நாங்கள் உணர்ந்து கொண்டோம். கருணையுடன் தாங்கள் எங்களுக்குத் தரிசனம் தந்து அருள்பாலிக்க வேண்டும் பெருமானே' என்று அடிபணிந்தனராம்.

ஜோதியின் சுடர் ஒளிக்குள்ளிருந்து சூலமும் உடுக் கையும் ஏந்தியவனாக, புலியாடை அணிந்தவனாக, சந்திரனை ஆபரணமாகக் கொண்டு, சிரசில் கங்கை யைத் தாங்கியவனாக அருள்பாலிக்கும் வடிவுடன் சிவன் அவர்களுக்குக் காட்சி கொடுத்தானாம்.

திருமாலே! நான்முகனே! உங்களுக்குள் எதற்காக இந்த வீண் சச்சரவு? தேவையற்ற அகந்தையை மனத்தில்வளர்த்துக்கொண்டுமற்றவருடன் நம்மை ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கினால், கலக்கமும் குழப்பமுமே மிஞ்சும். நிர்மலமான மனத்துடன் தத்தம் கடமையைச் சரிவரச் செய்பவர் எல்லோருமே பெரியவர்கள்தான்' என்று அறிவுரை கூறி ஆசீர்வதித் தானாம்.

அத்துடன் சிவதத்துவத்தையும் திருமாலுக்கு உபதேசித்தானாம். திருமால் அதை பிரம்மனுக்கு உபதேசித்தானாம். இந்தவிதமாக விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் இடையே ஒளி வடிவாக, சிவன் விசுவரூப தரிசனம் தந்த காலம் மாசி மாதமும் தேய்பிறைச் சதுர்த்தசியும் கூடிய இரவுக் காலம். அதாவது, அதுதான் மகா சிவராத்திரி காலம் என்று புராணக்கதை அளந்துள்ளனர்.

திருமாலும், பிரம்மனும் பூமியை மய்யமாகக் கொண்டே அடிமுடியைத் தேடினார்களாம்.  அறி வியல் வளர்ச்சிக்கு முந்தைய காலகட்டத்தில் அறிவுக்கு பொருத்தமில்லாத புரட்டுகளை, மக்க ளின் அறிவைப் பாழ்படுத்தும் வகையில் அளந்த கதையாகத்தான் புராணக் கதைகள் உள்ளன.

அறிவுக்கு பொருத்தமில்லாதது

அண்டவெளியில்கோள்கள் யாவும் சூரியனை மய்யமாகக்கொண்டு சுற்றி வருகின்றன. அப்படி இருக்கையில், பூமியைமட்டுமே மய்யப் புள்ளியாகக் கொண்டு அடிமுடி தேடிய கதை அறிவுக்கு பொருத்தமில்லாததுதானே.

புவியில் உள்ள அனைத்துவித கனிமங்கள் குறித்தும் செயற்கைக்கோள் பதிவுகள் படம்பிடித்து காட்டுகின்றன.

அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள நிலையில், இன்னமும் அடி, முடி காண முடியாதவன் என்று கூறிக்கொண்டு, அதற்கு கற்பனைக் கதை களைக் கூறிக்கொண்டு, அதற்காக வழிபாடுகள் என்று காலத்தையும், பொருளையும், சிந்தனையையும் பாழாக்கலாமா?
- விடுதலை நாளேடு, 13.2.18

திங்கள், 12 பிப்ரவரி, 2018

எது நிஜம்?

இறந்தவர்களுக்குத் திதி கொடுக்க வேண்டு மென்றால் இறந்து போனவர்களின் ஆத்மாவைப் பற்றி  மூன்று வித மாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.

1. இறந்துபோகும் ஜீவனின் ஆத்மா, மற்றொரு சரீரத்தைப் பற்றிக்கொண்டு விடுவதாக,

2. இறந்துபோன ஜீவனின் ஆத்மா இறந்தவுடன் பிதிர் லோகத்தில் அங்கு இருப்பதாக, (பிதிர்களாய்  இல்லாத ஆத்மா எங்கிருக்குமோ!)

3. இறந்துபோன ஜீவனின் ஆத்மா அதனதன் செய் கைக்குத் தகுந்தபடி மோட்சத்திலோ நரகத்திலோ  பலன் அனுபவித்துக் கொண்டிருப்பதாக, ஆகவே இந்த மூன்று விஷயத்தில் எது நிஜம்? எதை உத்தேசித்து திதி கொடுப் பது? இதுதவிர ஆத்மா என்பது கண்ணுக்குத் தெரியாதது என்றும், சரீரம் உருவம், குணம் இல்லாதது என்றும் சொல் லப்பட்டிருக்கிறதே? சரீரம், குணம் இல்லாததற்கு நாம் பார்ப்பானிடம் கொடுக்கும் அரிசி, பருப்பு, செருப்பு, விளக் குமாறு ஆகியவை எப்படிப் போய்ச் சேரும்? அவற்றை ஆத்மா எப்படி அனுபவிக்க முடியும்?
-  தந்தை பெரியார்

- விடுதலை நாளேடு,9.2.18

வியாழன், 8 பிப்ரவரி, 2018

திருவிளையாடலா...? தெருவிளையாடலா...?

இரா.கண்ணிமை

உலகையே உண்டாக்கியவன் - பாருக்கே படியளந்தவன் என்று பக்தர் குழாம் கூறுகின்ற சிவபெருமானின் விளையாட்டிற்குப் பெயர்தான் திருவிளையாடலாம்... அந்தப் புராணத்தில் - ஆமாம் அது எந்தப் புராணத்தை விரிக்கின்றதோ தெரியவில்லை! அவனது அறுபத்து நான்கு திருவிளையாடல்களும் விளக்கப்பட்டு - மக்களின் உள்ளத்தில் கலக்கப்பட்டிருக்கிறது. “அடேயப்பா! இத்தகு வன்மையா சிவனுக்கு?” - என்று பக்தர்களின் பக்தி - முத்தி பித்தத்திற்கு வழிகோலியிருக்கிறது.

படிக்கப் படிக்க பக்திரசம் சொட்டும் - இல்லை பித்துரசம் கொட்டும் சிவனின் தெரு விளை யாடல்களில் - இருபத்தாறாவது விளையாடல் இதோ!

குலோத்துங்கன் என்பான் அரசோச்சிய நாளில் - அவந்தி எனும் ஊரில் ஒரு சவுண்டிப் பார்ப்பனன் இருந்தான். அந்த ஆரியக் கிறுக்கனுக்கு அழகான மனைவி! அனைத்திலும் கெட்டிக்காரி. ஆமாம் அதில்தான் கைதேர்ந்தவர்கள் ஆயிற்றே அவர்கள்! இவர்கட்கு ஒரு பிள்ளை இருந்தான். இளைஞனான அவன் பருவத்தின் துடிப்பும், தனிமையின் தவிப்பும் மேலிடவே தாயின் அழகில் மயங்கி அவளைக் காதலித்தான்.

பல நாள் தாயும் - சேயும் கள்ளக் காதல் நடத்தி வந்ததை - ஒரு நாள் தன் தந்தை பார்த்ததைக் கண்டு விட்டான். காதலுக்குத் தடையாக வந்த தந்தையை தந்திரத்தால் கொன்றுவிட்டான் - மகன். ஊரார் அறிந்து விட்டால் மானம் - வானமேறுமே என்று தன் காதலியாம் தாயுடன் வெளியூருக்குப் புறப்பட்டான். செல்லும் வழியில் வழிப்பறிக் கொள்ளையர்கள் அவர்களை மிரட்டி - எடுத்துச் சென்ற பொருள்களையும் - பார்ப்பனத்தியையும் கைப்பற்றிக் கொண்டு அவனை அங்கிருந்து விரட்டி விட்டார்கள்.

பைத்தியம் பிடித்தவனாய் அந்தப் பார்ப்பன இளைஞன் - ஊர்தோறும், தெருதோறும், நாய் போல அலைந்துத் திரிந்தான். இறுதியில் மதுரையை அடைந்தான். அங்கு திருவிளையாடல்களுக்காகவே கட்டப்பட்டிருக்கும் கோயிலின் கோபுரத்தின் கீழே சிவனும் - பார்வதியும், வேடன் - வேட்டுவத்தி உருவம் கொண்டு சூதாடிக்கொண்டிருந்தார்கள். இதுவும் ஒரு திருவிளையாடலே!

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் என்ற பண் பாட்டிற்குப் புறம்பான - பார்ப்பனத் தாயை புணர்ந்து - தந்தையையும் கொன்று - மனு(அ)தர்மத்தின் வழியிலே சென்ற பார்ப்பன இளைஞன்பால் பரமசிவன் பரிதாபப்பட்டு - பாசத்தோடு அன்புரைகள் கூறி அரவணைத்துத் தேற்றினானாம். அந்த மொழிப்படி அவன் அங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் மூன்று மாதம் குளித்து சிவனின் அருள்பெற்று - அடியானாகி மோட்சத்தை அடைந்தானாம்.

இப்பொழுது கூட மதுரைக்குச் செல்லுபவர்கள் பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி சிவவழிபாடு செய்யத் தவறுவதில்லை. எவ்வளவு பெரிய சாதனை பார்த்தீர்களா!

இந்த பொய்யுரையால் மக்கள் தெளிவது என்ன என்று நோக்கும்போது - எத்தகு தீச்செயல் செய்தாலும் - பாவ மன்னிப்புச் சீட்டு பெறுவதுபோல் - குளத்தில் மூழ்கி எழுந்து “சிவ - சிவ” என்று தலையில் குட்டிக் கொண்டால் மோட்சத்தை அடையலாம் என்பதுதானே! என்னே தெருவிளையாடலின் மகிமை!

பிட்டுக்கு மண் சுமந்தவன் - லட்டுக்கு வாய்த் திறந்தவன் - என்றெல்லாம் பீற்றிக் கொள்ளும் சிவனின் திருவிளையாடல்தான். மக்களுக்கு மெய் யறிவையூட்டும் புராணம் போலும்? தலைமுடியிலே ஒரு பெண்ணையும் - கையிலே ஒரு பெண்ணையும், மெய்யிலே ஒரு பெண்ணையும் வைத்திருந்த பெண் பித்தனை எப்படி ஆண்டவன் - ஒழுக்கசீலன் என்று வாய் திறந்து கூறுகிறார்கள் - ஏற்றுக் கொள்கிறார்கள்?

திருவிளையாட்டில் திளைக்கும் சிவனடியார்களே! - மோட்சத்தை அடைய குறுக்குவழி சிவனாரை ஒரு பாவமன்னிப்புச் சீட்டு - கொடுக்கச் சொன்னால் போகிறது. தலையெழுத்து கிழியவில்லையே என்று ஏன் ஏங்கிக் கொண்டிருக்கிறீர்கள்?

கொள்ளையும், கொலையும், கொடுமையும் செய் யும் அயோக்கியர்களுக்கு ஊக்கமும் உற்சாகத்தை யும் ஊட்டுவதுதான் ஆண்டவனின் திருவிளையாடல்  போலும்! இவற்றை திருவிளையாடல் என்பதா? தெரு விளையாடல் என்பதா?

எனவே கடவுளைக் கற்பித்தவனை முட்டாள் என்றும் - அதை பரப்பியவனை முறைகேடன் என்றும் - வணங்குகிறவனை காட்டுவிலங்காண்டி என்றும் கூறுவதைவிட வேறென்ன கூற முடியும்!
-- விடுதலை நாளேடு, 8.2.18

மாடர்ன் சுடிதாரில் கடவுளச்சி அபயாம்பிகையாம்




மயிலாடுதுறை, பிப்.6 மயிலாடு துறையிலுள்ள மயூரநாதர் கோவிலில்அம்மன் சிலைக்கு சுடிதார்அலங்காரம் செய்த 2 அர்ச்சகர்களை திருவாவடு துறை ஆதீனம் பணியிடை நீக்கம் செய்து உள்ளார்.

நாகைமாவட்டம்மயி லாடுதுறையில் திருவாவடு துறை ஆதீனத்திற்குச் சொந்த மான மயூரநாதர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் உள்ளஅபயாம்பிகைஅம்ம னுக்கு தைமாத வெள்ளிக்கிழ மையையொட்டி சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 2 ஆம் தேதி தை மாத 3 ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றதாம்.

அப்போது அர்ச்சகர்கள், அபயாம்பிகை அம்மனுக்கு சந்தன காப்பில் சுடிதார் அலங்காரம் செய்து இருந்தனர். இதனை கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்திருந்ததை கோவிலுக்கு வந்த பெண்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களிலும் வெளியிட்டனர். இந்தப் படக்காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவாவடுதுறை ஆதீனம் குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டார்.

ஆகம விதிமுறைகளை மீறி செயல்பட்டதாலும், மயூர நாதர் கோவில் தேவஸ்தான அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்காமலும், அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த மயிலாடுதுறையை சேர்ந்த அர்ச்சகர்கள் கல்யாணசுந்தரம்(வயது 75), அவரது மகன் ராஜு(வயது 45) ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

இரு கோவில்களில்

கோபுர கலசங்கள் திருட்டு

அம்பத்தூர், பிப்.6 இரு கோவில்களின் கோபுர கலசங்களை, யாரோ சிலர் திருடிச் சென்றனர். சென்னை, அம்பத்தூர், வெங் கடாபுரத்தில், சிறீ தேவி கருமாரியம்மன் கோவில், மேனாம்பேட்டில், மகா சுவர்ண கணபதி கோவில் ஆகி யவை உள்ளன. நேற்று காலை, கோவிலை திறக்க, அவற்றின் நிர்வாகிகள் வந்த போது, கோபுர கலசங்கள் திருடு போனது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு, 20 ஆயிரம் ரூபாய் என, கூறப்படுகிறது. அம்பத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

யாகத்தின் பலன்: இருவர் பலி!

பவானி, பிப். 6- ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஜம்பை கிராமத்தில் பவானி ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் கரையோரத்தில் முனியப்பன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் எல்லா சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று பூஜை நடத்தி சிறப்பு யாகம் செய்தனர். அப்போது கோவிலின் அருகே பழைமைவாய்ந்த புளியமரம், ஆலமரம் இருந்தன. இந்த மரத்தில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தன. யாகம் நடத்திய புகை அந்தத் தேனீக்கூடுகள் மீதுபட்டவுடன் தேனீக்கள் நாலாபுறமும் பறந்து வந்து யாகம் நடத்திய பக்தர்களை கொட்டியது.

இதில் ஜம்பை பகுதியை சேர்ந்த பொன்னுசாமி (70), மயில்சாமி (60), சின்னயம்மன், கணேசன் மற்றொரு கணே சன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை 108 ஆம்புலன்சை வரவழைத்து சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பொன்னுசாமி, மயில்சாமி பரிதாபமாக இறந்து விட்டனர். மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பவானி காவல் நிலைய ஆய்வாளர் இளங்கோ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

கோவிலில், யாகம் நடத்தியபோது தேனீக்கள் கொட் டியதில் 2 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- விடுதலை நாளேடு,6.2.18