புதன், 15 மே, 2024

வாயால் சிரிக்க முடியுமா? கடவுள்களின் கதைகளைக் கேளுங்கள்! கேளுங்கள்!!



விடுதலை நாளேடு
Published May 4, 2024

– கருஞ்சட்டை –

பூரி ஜெகந்நாதர் சிலை
பூரி தேர்த் திருவிழா முடிந்த பிறகு, அந்தச் சாமி சிலைக்குக் காய்ச்சல் எதுவும் உள்ளதா என்று சோதித்து மருந்து, மாத்திரை கொடுக்க நியமிக்கப்பட்ட எம்.பி.பி.எஸ். படித்த மருத்துவர்கள்.

அங்காள பரமேசுவரியைக் குளுமைப்படுத்தும் பக்தர்கள்!
கடுமையான வெயிலில் மேல்மலையனூர் கோவிலில் உள்ள கர்ப்பக் கிரகத்தில் அங்காள பரமேசுவரி தாங்கமாட்டார் என்பதற்காகக் கோவில் முழுவதும் பெரிய பெரிய அய்ஸ்கட்டிகளைக் கொட்டி கோவிலைக் குளுமைப்படுத்தும் பக்தர்கள்.

அழகருக்கு அசதியாம் – உடலைப் பிடித்துவிடும் பார்ப்பனர்கள்!
மதுரையில் சித்திரைத் திருவிழா முடிந்து அழகர் கோவிலுக்குத் திரும்பிய பிறகு அவருக்கு அசதியாக இருக்குமாம் – உடலைப் பிடித்துவிடும் பார்ப்பன அய்யங்கார்கள்!

இவற்றைப் படித்தால், கடுகளவு அறிவு உள்ளவர்களும் கைகொட்டி சிரிக்க மாட்டார்களா? நோய்களைத் தீர்ப்பார் கடவுள் என்று நம்பி விரதம் இருந்தும் கோவில் கோவிலாகத் தேடி அலைகிறார்கள்; நேர்த்திக் கடன் கழிக்கிறார்கள் பக்தர்கள். அந்தக் கோவில்களில் உள்ள கடவுள்களுக்கே டாக்டர்கள் வைத்தியம் பார்க்கிறார்களாம்! கடவுள் வெயில் தாங்கமாட்டார் என்று அய்ஸ் வைக்கிறார்களாம் – கடவுள் உடம்பை அய்யங்கார் பார்ப்பனர்கள் பிடித்து விடுகிறார்களாம்!
அய்யய்யோ, வாயால் சிரிக்க முடியவில்லையே!

ஹயக்கிரீவன் கதை தெரியுமா?

விடுதலை ஞாயிறு மலர்
Published April 27, 2024

பாற்கடலைக் கடைந்து எடுத்த இறப்பில்லாத நிலையைக் கொடுக்கும் அமிர்தத்தை அசுரன் ஒருவர் மாறுவேடம் பூண்டு தேவர்களின் வரிசையில் நின்று குடித்துவிட்டார். இதனால் அவரும் சாகாவரம் பெற்றுவிட்டார்.
அவரை வதம் செய்த நிலையில் அவர் இரண்டு பாகமாகி ராகு, கேது வாக வானில் சுற்றி வருகின்றனர். அவர்கள் அவ்வப்போது சூரியனையும் நிலவையும் விழுங்குவதால் தான் சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படுகிறது என்று கதை விட்டார்கள்.
அந்த ராகு, கேதுவிற்கு பல்லாயிரம் பிள்ளைகள் பிறந்து அவர்கள் பல கோடிகளாக மாறிவிட்டார்களாம். அவர்கள் தொடர்ந்து தேவர்களுக்கு தொல்லை கொடுத்ததால் அவர்களோடு விஷ்ணு ஒரு லட்சம் ஆண்டு தொடர்ந்து போர் புரிந்தாராம்.
இந்த நிலையில் போர் புரிந்து கொண்டு இருக்கும் போது, வில்லை எடுத்து அம்பை அதில் வைத்து எய்ய முற்படும் போது தூக்கம் வந்து விட்டதால், அப்படியே தூங்கிவிட்டாராம். எத்தனை ஆண்டுகள் தூங்கினார் என்றால் 17 லட்சம் ஆண்டுகள் தூங்கிவிட்டாராம்.

மீண்டும் அசுரர்கள் தொல்லை அதிகரிக்கவே 17 லட்சம் ஆண்டுகளாக அயர்ந்து தூங்கும் விஷ்ணுவை எழுப்ப தேவர்கள் பயந்தனர். இந்த நிலையில் “அவர் கையில் உள்ள வில் நழுவினால் அவர் எழுந்துவிடுவார்” என்று நாரதர் கூற இந்திரனும் கரையானாக மாறி அந்த வில்லை அரித்துவிட்டாராம். இதில் நாணில் ஏற்றிய அம்பு திடீரென விடுபட்டு வில்லை வைத்திருந்த விஷ்ணுவின் தலையை அண்ட சராசரத்திற்கு அப்பால் வீசிவிட்டதாம்,
இதை அறிந்த லட்சுமி தேவர்களையும் பூதகனங்களையும் விஷ்ணுவின் தலையை தேடிக்கொண்டுவர வேண்டிக்கொண்டாராம், அவர்களும் பல கோடி ஆண்டுகளாக தேடி தலை கிடைக்கவில்லை என்று திரும்பி வந்து லட்சுமியிடம் கூறினார்களாம்.

இதற்கு முன்பு ஒரு பிளாஸ் பேக்:
லட்சுமியும் அவரது சகோதரனான அஸ்வனுடன் குதிரை உருவம் கொண்டு கள்ள உறவு கொண்டிருப்பதை விஷ்ணு தட்டிக்கேட்டார். ஆனால் லட்சுமி அதை கண்டுகொள்ளாமல் இருக்கவே, விஷ்ணு லட்சுமியின் சகோதரன் அஸ்வனின் தலையைக் கொய்துவிட்டார்.
ஆனால் குதிரை உருவில் தலைவெட்டப்பட்டு கிடந்த தனது சகோதரனின் தலையை லட்சுமி எடுத்து பத்திரப்படுத்தி வைத்தார்.
அசுரர்களில் தலைவராகிய சுக்கிராச்சாரியார் லட்சுமிக்கு தலையை ஒட்டவைக்கும் மந்திரத்தைக் ஏதோ ஒரு காலத்தில் கூறினாராம். அந்த மந்திரம் நினைவிற்கு வர அதை கூறி தான் பத்திரப்படுத்தி வைத்த தனது சகோதரனாக இருக்கும் குதிரைத் தலையை விஷ்ணுவின் உடலோடு இணைத்துவிட்டாராம்.
உடனே லட்சுமியும் அவரையே கணவராக ஏற்றுக்கொண்டாராம்.

இதுதான் ஹயக்கிரீவன் கதை…
இதில் யாருமே ஒருவர் எப்படி ஒரு லட்சம் ஆண்டுகள் போரிடமுடியும் என்றோ?, 17 லட்சம் ஆண்டுகள் எப்படி தூங்கினார் என்றோ? ஒரு அம்பு எப்படி தலையை பிரபஞ்சத்தையும் தாண்டி கொண்டு சென்றது என்றோ? அசுரர்களின் தலைவரான சுக்ரீவர் எப்படி லட்சுமிக்கு தலையை ஒட்டவைக்கும் மந்திரத்தைத் கற்றுகொடுத்தார் என்றோ யாருமே கேள்வி கேட்கவில்லை?
இப்படி கேட்டிருந்தால் இந்த ஹயக்கிரீவ கதை கடவுளாகி புனிதமாகி இன்று பள்ளிப்பிள்ளைகளை விட்டு கல்வியில் தெய்வம் என்று பள்ளி துவங்கும் போது பூஜை செய்யமால் இருந்திருப்பார்கள்.
சான்று: “ஸ்ரீ லலிதாஸஹஸ்ர நாம ஸ்தோத்திரம்” – அதிகாரம்: 1, ஸ்லோகம்: 15

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

யார் இந்து விரோதி?


சனி, 10 பிப்ரவரி, 2024

வடகலை-தென்கலை சண்டை


வெள்ளி, 1 டிசம்பர், 2023

இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது ஏன்? எதற்கு?


தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இந்திய ஒன்றிய பி.ஜே.பி. அரசின் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் மாநில அரசு இந்து மத நிறுவனங்களை ஆக்கிரமித்து, அவற்றின் வருவாயை மாநில செலவி னங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள் என்று பிரச்சாரம் செய்திருக்கிறார்.

தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசைப்பற்றி போகிற இடங்களில் எல்லாம் புழுதி வாரித் தூற்றிக் கொண்டு இருக்கிறார். காரணம் இண்டியா கூட்டணிக்கு தி.மு.க. முதுகெலும்பாக இருப்பது தான்.

அதேபோல ஒன்றிய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதராமனும் தமிழ்நாட்டில் இந்துக் கோயில்கள் தி.மு.க. அரசால் கொள்ளை அடிக்கப்படுகின்றன என்று பேசிச் சென்றுள்ளார்.

சமூகநீதிக்கான சரித்திர நாயகராம் நமது மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தக்க வகையில் பதில் கூறி யுள்ளார்.

ரூ.5,500 கோடி கோயில் சொத்துக்களை மீட்டெடுத்தது திமுக அரசு; இத்தகைய அரசைப்பற்றித்தான் பக்தியின் பெயரால் பகல் வேஷம் போடுகிறவர்கள் குறை கூறுகிறார்கள் என்று ஆதாரத்தோடு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் நமது முதலமைச்சர்.

தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு பி.கே. சேகர்பாபு அவர்களும் புள்ளி விவரங்களோடு  - புழுதிவாரித் தூற்றுபவர்களுக்குத் தக்க வகையில் பதிலடி கொடுத்து, 'வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ' என்று பேச வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட கோயில்களில் இடையில் பார்ப்பனர்கள் அர்ச்சகர்களாக உள்ளே புகுந்து கோயில்களைத் தங்கள் உடைமையாக்கிக் கொண்டு கோயில் சொத்துகளைக் கொள்ளை அடித்தனர்.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு இந்துக் கோயில்கள் கொண்டு வரப்பட்டதற்கு காரணமே  - கோயில் சொத்துக்கள் பார்ப்பனர்களால் கொள்ளை அடிக்கப்பட்டதுதான்.

பிரிட்டிஷ் ஆட்சியின் போது கோவில் நிதிகளின்மீது கட்டுப்பாடுகளைக் கொண்டு வர 1817ஆம் ஆண்டு சட்டம் க்ஷிமிமிஆவது பிரிவு, கோவில்களை நிர்வகிக்கும் அதிகாரத்தை ரெவ்ன்யூ போர்டுக்குள் கொண்டு வந்தது.

19ஆம் நூற்றாண்டின் மத்தியில் இந்திய மதங்களில் தலையிடுவ தில்லை என்னும் பொதுக் கொள்கையை வகுத்துக் கொண்டு கோவில்களை நிர்வகிக்கும் அதிகாரத்திலிருந்து பிரிட்டிஷ் ஆட்சி தன்னை விடுவித்துக் கொண்டது.

இததான் சந்தர்ப்பம் என்று கோயில்களில் பார்ப்பனர் கொள்ளை என்பது - கேள்வி கேட்பாரின்றி தலைவிரித்தாடியது.

இத்தகைய சூழலில் தான் நீதிக்கட்சி ஆட்சியில் இந்து அற நிலையத்துறை என்ற அரசு அமைப்பு உருவாக்கப்பட்டது.

நீதிக்கட்சியை உருவாக்கிய மூவேந்தர்களுள் மூலவரான டாக்டர் சி. நடேசனார் சட்டப் பேரவையில் பேசும்போது குறிப்பிட்டார்.

"கோயில் நிதிகளை ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் நிர்வகிக்கிறார்கள் இதனால் அவ்வகுப்பாருள் இருக்கின்ற வேலை யில்லாதவர்கள் பயன் அடைகிறார்கள். அதே வகுப்பைச் சேர்ந்த வழக்குரைஞர்களும், மிகப் பெரும் அளவில் பயன் பெறுகிறார்கள். பேச்சு வழக்கில் இல்லாத இறந்த மொழியான சமஸ்கிருதத்தைக் கற்பிக்க பாடசாலைகளை நடத்துகிறார்கள் - ஆனால் எல்லா சமயங்களாலும் போற்றப் பெறுகிற மொழியான தமிழைப் புறக்கணிக்கிறார்கள்" என்று அப்பட்டமான உண்மை களை சட்டப் பேரவையில் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்தார்.

'இந்து' ஏடு இதனை எதிர்த்து எழுதியதுண்டு.

இந்து சமய அறநிலையத்துறை மசோதா நீதிக்கட்சி அமைச் சரவையினால் பானகல் அரசர் சென்னை மாநிலப் பிரதமராக இருந்தபோது (Premier) 1923ஆம் ஆண்டு ஏப்ரலில் நிறைவேற்றப்பட்டது.

பார்ப்பனர்களும், மடாதிபதிகளும் கடுமையாக எதிர்த்தனர். இதனால் வைசிராய் ஒப்புதல் தரக் கால தாமதம் ஆனது.

1923ஆம் ஆண்டு நீதிக்கட்சி வெற்றி பெறவே இந்த மசோதா 1924ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டது. வைசியராயின் ஒப்புதல் பெற்று 1925ஆம் ஆண்டு ஜனவரியில் சட்டமாக்கப்பட்டது.

அப்போது சென்னை மாநிலக் காங்கிரஸ் தலைவராக இருந்த தந்தை பெரியார், நீதிக்கட்சியின் இந்த சட்டத்திற்குத் தம் ஆதரவையும், பாராட்டையும் தெரிவித்தார்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தச் சட்டத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

முழுக்க முழுக்க மலை விழுங்கி மகாதேவர்களாக இருந்த பார்ப்பனர்களின் கையை விட்டு கோயில்கள் சென்றுவிட்ட காரணத்தால், இந்த இந்து அறநிலையத்துறை ஒழிக்கப்பட்டு இந்துக்கள் கையில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கூக்குரல் போடுகின்றனர். பிஜேபியும் - ஆர்.எஸ்.எஸ். வட்டாரமும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து இந்து அறநிலையத்துறையை ஒழிப்பதே என்று சூளுரைக்கின்றனர்.

இதுபற்றி இந்து அறநிலையத்துறையில் பல்லாண்டுக் காலம் பணியாற்றி ஓய்வு பெற்ற சிறீரங்கம் கோயில் இணை ஆணையராக இருந்த செயராமன் என்ன கூறுகிறார்? 

"இந்து சமய அறநிலையத்துறை சட்டம் சில திருத்தங்களுடன் உருவாக்கப்பட்டபோது 1959இல் பூஜ்ஜியமாக இருந்து முதலீடு இன்றைக்குத் தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் இருந்து, நிலை முதலீடாக மூன்றாயிரம் கோடி ரூபாய்க்கு மேலாக வைப்புத் தொகை வங்கிகளில் உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு வட்டியாக ரூ.300 கோடி வருமானம் கிடைக்கிறது. ஒரு ரூபாய்க் கூடக் கடன் கிடையாது. அதுபோல கோவில்களுக்குச் சொந்தமான தங்கம், வெள்ளி போன்றவை வங்கிகளில் பல டன்கள் உள்ளன" (புதிய தலைமுறை - 8.8.2018) என்று குறிப்பிட்டுள்ளாரே!

இந்த நிலை மாற வேண்டும்; கோயில் சொத்துக்கள் முழுவதையும்  தங்கள் வயிற்றில் அறுத்துக் கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்து அறநிலையத்துறையை ஒழிக்க வேண்டும் என்று கூப்பாடு போடுகிறார்கள் - உஷார்! உஷார்!!

இதில் ஒரு வெட்கக் கேடு என்னவென்றால் கேரளம், கருநாடகம், ஆந்திரா, தெலங்கானா, பீகார், ஒடிசா, புதுச்சேரி மாநிலங்களிலும் இதே இந்து அறநிலையத்துறை செயல்பட்டு வருகிறது.

பா.ஜ.க. ஆளும் மகாராட்டிரம், உ.பி. ம.பி. மற்றும் ராஜஸ்தான் (காங்கிரஸ்) மாநிலங்களிலும் பப்ளிக் டிரஸ்ட் ஆக்ட் என்ற அரசு  நிர்வாகத்தின்கீழ்தான் கோயில்கள் இருக்கின்றன.

குஜராத் சோமநாதர் ஆலயத்தின் அறங்காவலர் குழுத் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். உறுப்பினர்களாக எல்.கே. அத்வானி, அமித்ஷா இருக்கின்றனர் என்பதை மறந்து விட்டுப் பேசுகிறார்களே எப்படி?

சனி, 18 நவம்பர், 2023

முனிவர்கள் பிறப்பு மூலம்

சிங்கத்திற்கு  சிங்கமகாசூரன் பிறந்தான்
புலிக்கு   வீரீஞ்சிகன் பிறந்தான்
யானைக்கு விநாயகன் பிறந்தான்
குதிரைக்கு அஸ்வத்ராமன் பிறந்தான்
கழுதைக்கு காங்கேயன் பிறந்தான்
கரடிக்கு ஜம்புவந்தன் பிறந்தான்
எருமைக்கு மகிஷன் பிறந்தான்
பசுவுக்கு கவுதமரிஷி பிறந்தான்
ஆட்டுக்கு அசமுகி பிறந்தான்
மானுக்கு ரிஷ்யசீருங்கன் பிறந்தான்
நாய்க்கு சவுநகன் பிறந்தான்
நரிக்கு கேசகம்பலன் பிறந்தான்
பன்றிக்கு நரகாசூரன் பிறந்தான்
குரங்குக்கு சம்புகன் பிறந்தான்
மயிலுக்கு கண்ணுவன் பிறந்தான்
கிளிக்கு சுகர் பிறந்தான்
பட்சிக்கு சகுனி பிறந்தான்
ஆந்தைக்கு களிநாதன் பிறந்தான்
தவளைக்கு மாண்டவ்யன் பிறந்தான்
மீனுக்கு மச்சஹந்தி பிறந்தான்
பாம்புக்கு சோமாஸ்வன் பிறந்தான்
மண்டுகத்துக்கு மண்டோதரி பிறந்தாள்
பர்வதத்திற்கு பார்வதி பிறந்தாள்
மலைக்கு வசுவதத்தன் பிறந்தான்
துரோனியில் துரோணன் பிறந்தான்
கமண்டலத்தில் அகஸ்தியன் பிறந்தான்
ஆற்றில் பீஷ்மன் பிறந்தான்
காற்றுக்கு பீமன் பிறந்தான்
புற்றில் வால்மீகி பிறந்தான்
குட்டையில் ஸ்கந்தன் பிறந்தான்
தாமரையில் பத்மை பிறந்தான்
அண்டத்தில் வாதன் பிறந்தான்
கோபக்கணலில் லட்சுமி பிறந்தாள்
சூரியனுக்கு கர்ணன் பிறந்தான்
சந்திரனுக்கு அரிச்சந்திரன் பிறந்தான்
செவ்வாய் கோளுக்கு தோஷன் பிறந்தான்
புதன் கோளுக்கு புரூரவா பிறந்தான்
வியாழன் கோளுக்கு ஜகன் பிறந்தான்
சுடலை சாம்பலில் புரீசீரவன் பிறந்தான்
சுடலை எலும்பில் சல்லியன் பிறந்தான்
முகத்தில் பிராமணன் பிறந்தான்
தோளில் சத்திரியன் பிறந்தான்
தொடையில் வைசியன் பிறந்தான்
காலில் சூத்திரன் பிறந்தான்
வாயில் வேதவல்லி பிறந்தாள்
மூக்கில் அஸ்வினி பிறந்தாள்
மனதில் மன்மதன் பிறந்தான்
தொப்பிளில் வீரவாகு பிறந்தான்
கொட்டாவியில் செந்தூரன் பிறந்தான்
தும்மலில் தூபன் பிறந்தான்
நிழலில் சுந்தரன் பிறந்தான்
கண்ணீரில் வானரன் பிறந்தான்
உந்திகமலத்தில் பிரம்மன் பிறந்தான்
வலது கால் விரலில் கக்கன் பிறந்தான்
இடது கால் விரலில் தாணி பிறந்தான்
கை பெருவிரலில் விஷ்ணு பிறந்தான்
ரோமத்தில் ரோமாஞ்சன் பிறந்தான்
பேய்க்கு காந்தாரி பிறந்தாள்
கலியுகத்திற்கு சனீஸ்வரன் பிறந்தான்
காசீப முனிவனுக்கு சூரியன் பிறந்தான்
விஷ்ணுவுக்கு ஐயப்பன் பிறந்தான்
நாரதனுக்கு 60 ஆண்டுகள் பிறந்தது
ஊர்வசிக்கு விசுவாமித்திரன் பிறந்தான்
மேனகைக்கு சாகுந்தலை பிறந்தாள்
வண்ணாத்திக்கு நாரதன் பிறந்தான்
புலைச்சிக்கு சாங்கியன் பிறந்தான்
பார்பனத்திக்கு கிருஷ்ணன் பிறந்தான்
 - பழ.பிரபு முகநூல் பதிவு,17.11.2013

செவ்வாய், 7 நவம்பர், 2023

அர்ச்சகர் பிரச்சினை - பல்வேறு தகவல்கள் (பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி... )

 

 (இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

அர்ச்சகர் பிரச்சினை - பல்வேறு தகவல்கள்

தொகுப்பு: மின்சாரம்

5

பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி... 

ஆன்மிகப் பணியில் சத்தியபாமா

‘பெண்கள் கோயில் கருவறைக்குள் செல்லக் கூடாது’, ‘சாமி சிலைகளை பெண்கள் தொட்டால் தீட்டு’ என்றெல்லாம் சொல்லி ஆன்மிகத்தில் பெண் களுக்கு இந்தச் சமூகம் காலம் காலமாகப் பூட்டி வந்த கைவிலங்கு, ‘பெண்களும் அர்ச்சகராகலாம்’ என்ற தமிழ்நாடு அரசின் உத்தரவால் உடைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கடந்த பத்து ஆண்டுகளாக 243 பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சியையும், 108 பெண் களுக்கு தமிழ் வேதங்களை முழங்கி குடமுழுக்கு செய்யும் பயிற்சியையும் கொடுத்திருக்கும் சேலம் மாவட்டம், மேச்சேரியில் வசிக்கும் சத்தியபாமா பற்றி அறிய நேர்ந்தபோது, ஆச்சரியமாகிப் போனோம்.

‘சத்தியபாமா அறக்கட்டளை’ மற்றும் ‘அரசயோகி கருவூரார் தமிழின குருபீடம் தமிழ்வேத ஆகம பயிற்சி பாடசாலை’யின் நிறுவனர் சத்தியபாமாவிடம் பேசினோம். “எனக்கு சொந்த ஊர், சேலம் மாவட்டத் தில் உள்ள மேச்சேரி. திருமணமாகி, மூன்று பிள்ளைகள் இருக்காங்க. சின்ன வயசுல இருந்தே ஆன்மிகத்தில் எனக்கு மிகுந்த ஈடுபாடு. ஆனா, பெண்களை கோயில் கருவறைக்குள்ள அனுமதிக்க மறுக்கிற வழக்கங்க ளுக்கு எதிராக மனதில் பல கேள்விகள் எழும். ஆதி காலத்துல பெண்கள் கருவறை வரை சென்று வழிபடும் உரிமை இருந்திருக்கு. பக்தி வளர்த்த நாயகிகளுக்கு, கோயில்களில் சிலைகள் இருக்கு. திருவரங்கம் கோயிலில் உள்ள ஆண்டாள் நாச்சியார், தமிழ் பாக்கள் பாடி வைணவ வழிபாட்டை வளர்த்த பெண். தஞ்சை இராசராச சோழன் கட்டிய பெரிய கோயிலில், சோழ னின் சகோதரி குந்தவை நாச்சியாருக்கும் முக்கியத் துவம் கிடைக்குது. இப்படி, பெண்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கோயில் பூசைகள், மந்தி ரங்கள் ஓதுவதில் முக்கியத்துவம் இருந்ததை அறிய லாம்’’ என்று ஆதிச் சான்றுகள் சொல்லி ஆரம்பித்தார் சத்தியபாமா.

``காலப்போக்குல, பெண்களை கோயில் கருவறைக் குள்ள அனுமதிக்க மறுத்த பிற்போக்குத்தனம் ஆன் மிகத்தில் நுழைந்தது. அது என்னை ரொம்ப நாள் உறுத்திட்டே இருந்ததால, கடந்த 2007 முதல் பெண் களின் கோயில் கருவறை உரிமை, தமிழ்வேத வழிபாட்டு முறைன்னு ஆழமா இறங்கிக் கத்துக்கிட் டேன். சென்னை, காரனோடையில் சமாதியாகியிருக் கும் 12ஆவது பதினெண் சித்தர் பீடாதிபதி அரசயோகி கருவூராரை குருவாக ஏற்றுக்கொள்ளும் பாக்கியம் கிடைத்தது. 23 ஆண்டுகளுக்கு முன்பு இறைவனடி சேர்ந்த அவர், ‘பெண்களை மாதவிடாயின் காரண மாக தீட்டாகக் கருதுகிறார்கள். ஆனால், பெண்கள் சிவபூசை செய்யலாம்’னு சொல்லியிருக்கிறார். அவர் வழியில் இது தொடர்பா இன்னும் பல விடயங்களைக் கத்துக்கிட்டேன்’’ என்பவர், தன் பயிற்சி முறை பற்றி கூறினார்.

6

``காலம் காலமாக நம் கிராமத்துக் கோயில்கள்ல நம்ம அப்பத்தாக்கள், அம்மத்தாக்கள் பூசை பண் ணினாங்க. இப்போகூட சில இடங்கள்ல வயதான ஆத்தாக்கள்தான் பூசை பண்ணுறாங்க. இடைப்பட்ட காலத்துலதான், பெண்களுக்கான கோயில் கருவறை உரிமை மறுக்கப்பட்டது. அதை மாற்றும் விதமா, பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை செயல் படுத்த, 2010இல் இந்த அறக்கட்டளையை ஆரம்பிச்சு பெண்களுக்கு பூசாரி பயிற்சி, குட முழுக்கு செய்யும் பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சேன். ஆரம்பத்தில், பத்து வாரப் பயிற்சியாகக் கொடுத்தோம். இப்போ மூன்று நாள்கள் பயிற்சியாகத் தர்றோம். கடந்த பத்து ஆண்டு களில் பெண் அர்ச்சகர்கள் குழுவைக் கொண்டு, 20 கிராமக் கோயில்கள்ல தமிழ்வேத முறைப்படி குட முழுக்கு விழாக்கள் நடத்தி யிருப்பதை எங்களோட பெரிய சாதனையாகப் பார்க்குறோம்.

எங்ககிட்ட கத்துக்கிட்ட இன்னும் சில பெண்கள், தங்களோட குலதெய்வக் கோயில்கள்ல பூசை பண்றாங்க. இதுவரை 243 பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சியும், 108 பெண்களுக்கு குடமுழுக்கு பயிற்சியும் கொடுத்திருக்கோம். மருத்துவத்துறை, காவல்துறை, கல்வித்துறைன்னு பல துறைகள்ல பணிபுரியும் பெண் களும் இங்கு வந்து குலதெய்வ வழிபாடு பயிற்சி எடுத் திருக்காங்க. இப்போ ‘பெண்களும் அர்ச்சகராகலாம்’னு அரசே அறிவித்திருப்பதால், பெரிய சந்தோசத்தில் இருக்கோம். இனி பெண்கள், அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களிலும் கருவறையில் பூசை செய் யும் காட்சிகள் காணக் கிடைக்கணும்’’ என்றார் நெகிழ்ச் சியுடன்.

சமீபத்தில் கரூரில் சத்திய பாமாவின் அமைப்பு சார்பில், தமிழ் அமைப்புகள் உதவியோடு 30 பெண் களுக்கு மூன்று நாள்கள் அர்ச்சகர் பயிற்சி கொடுக்கப் பட்டு, சான்றிதழும் வழங்கப்பட்டன. அவர் களில் சிலரிடம் பேசினோம்.

உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் பவ்யா. “எங்க ஊரு தேனி மாவட்டம் தேவதானப்பட்டி. உசிலம்பட்டியில பூக்கடை வெச்சிருக்கோம். என் வீட்டுக்காரர் தேவ தானப்பட்டியில் உள்ள ஆத்தோர சுந்தர விநாயகர் கோயிலுக்கு பரம்பரை பூசாரியா இருக்காரு. உசிலம் பட்டி மாதரை பத்ரகாளியம்மன் கோயில்லயும் பத்து ஆண்டுகளாக பூசாரியா இருக்காரு. சத்தியபாமா அம்மா அர்ச்சகர் பயிற்சி தர்றதை பத்தி, என் கொழுந் தனார் என்கிட்ட சொன்னாரு. எனக்கு இதுல ஆர்வம் இருக்குறதால, முயற்சி எடுத்து கலந்துக்கிட்டேன். மந் திரம் சொல்றது, நைவேத்தியம் செய்வது, தீபாராதனை காட்டுறது, ஹோமம் வளர்க்குறது, தீர்த்த கலசம் ரெடி பண்றது, ஹோமகுண்டம் போடுறதுனு எல்லா பூசை முறை களையும் சொல்லிக்கொடுத்தாங்க. தமிழ்வேத மந்திரங்கள் அடங்கிய புத்தகத்தையும் தந்திருக்காங்க. வீட்டுல 48 நாள்கள் கலசத்தை வெச்சு, மந்திரங்களை ஓதி பூசை பண்ணினா, எல்லா மந்திரங்களும் மனப் பாடம் ஆகிடும்னு சொல்லி யிருக்காங்க. வீட்டுல கலச பூசையை ஆர்வமா பண்ண ஆரம்பிச்சுட்டேன்’’ என்றார்.

7

கேரள மாநிலம், வண்டிபெரியார் பகுதியில் வசிக்கிறார் செல்வி. ‘`நான் ஏற்கெனவே சத்தியபாமா அம்மா கிட்ட பயிற்சி எடுத்திருக்கேன். இப்போ மூணு நாள்கள் பயிற்சியில மறுபடியும் வந்து கலந்துக்கிட்டேன். கருவறை உயிர்ப்பு மந்திரம், சிவயோக பயிற்சி, காப்பு மந்திரம், குருமந்திரம், சந்நிதான மந்திரம், கிரகநிலை மந்திரம், குலதெய்வ மந்திரம், அந்தந்தக் கிழமைக்குரிய மந்திரம்னு பல பயிற்சிகள் கொடுத் தாங்க’’ என்றார் பரவசத்துடன்..

சென்னையைச் சேர்ந்த மீனா நமச்சிவாயத்துக்கு வயது 57. ‘`இளம் வயதில் இருந்தே ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகம். தேவாரம், திருவாசகம் பாடல்கள் எனக்கு அத்துபடி. அதையெல்லாம் சொல்லி வீட்டு பூசைகள் பண்ணுவேன். விரும்பி அழைக்கிறவங்க வீடு களுக்குப் போய், ‘இல்லந்தோறும் திருவாசகம்’னு பாடல்களைப் படித்து பூசை பண்ணுவேன். ஆதம் பாக்கம் முத்துமாரியம்மன் கோயில்ல பெண்கள் கூடி பூசைகள் செய்து, வழிபாடு நடத்துவோம். ஆனாலும், கருவறையில சிவனை வழிபடணும் என்பது என் ஏக்கம். இந்த நிலையில, முத்துமாரியம்மன் கோயில் குருக்கள் விக்னேஷ் மூலமா கரூர்ல அர்ச்சகர் பயிற்சி கொடுப்பதைக் கேள்விப்பட்டு ஆர்வமா கலந்துக்கிட் டேன். அர்ச்சகர் பயிற்சி யோடு, ஆன்மிகத்துல இன்னும் பல விஷயங்களையும் புரியவெச்சாங்க.

பெண்கள் சில கோயில்களுக்குள்ள நுழையவே இன்னும் தடை இருக்கும் சூழ்நிலையில, ‘பெண்களும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற தமிழ்நாடு அரசின் சமீபத்திய அறிவிப்பு எங்களுக்கு எல்லாம் பெரும் உற்சாகம் கொடுத்திருக்கு. கடவுளின் அருளை பெண் கள், ஆண்கள் வழியாதான் பெறணுமான்னு என் மனசுல இருந்த ஆறாத கேள்வி, இப்போதான் சமாதானம் ஆகியிருக்கு. எனக்கு தமிழ்வேத மந்திரங்கள் ஓதி சிவ பூசை செய்ய ஆசை. அந்த வாய்ப்பு கிடைச்சா ஜென்ம பாக்கியம் அடைவேன்” என்றார் உணர்ச்சி மேலிட.

பெண்களின் குரல்கள் மீண்டும் கோயில் கரு வறைகளில் ஓங்கி ஒலிக்கட்டும்.

- ‘அவள் விகடன்', 14.9.2021

- - - - -

சபரிமலைக்கு பக்தனாக வந்த நான் 

இன்று சபரிமலையில் அர்ச்சகர்

யது கிருஷ்ணா தன் வயதொத்த மற்ற குழந்தைகளில் இருந்து வேறுபட்ட அரிதான குழந்தையாக இருந்தான். அவனை கோவிலுக்கு கட்டாயப்படுத்தி அழைத்து செல்ல வேண்டியதில்லை. கோவில்களில் பின்பற்றப் படும் சடங்குகளால் ஈர்க்கப்பட்ட யது தனது ஆறாவது வயதிலேயே வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலில் தன்னாலான உதவிகளை செய்து வந்தான். இரண் டாண்டுகளுக்கு முன்னர் திருவிதாங்கூர் தேவசம் போர்டு நடத்திய அர்ச்சகர் நியமனத் தேர்வில் மொத்தமுள்ள 62 இடங்களில் 4 ஆவது இடத்தை பெற்று, திருவிதாங்கூர் தேவசம் போர்ட் நிர்வகிக்கும் 1200 கோவில்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒருவர் முதல் முறையாக அர்ச்சகராக தேர்வு செய்யப் பட்டார்.

அதன்படி 2017 ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட புலையர் வகுப்பைச் சார்ந்த இளைஞரான இவர் பத் தினம்திட்டா மாவட்டத்தின் வலஞ்சவட்டம் கிராமத் தில் அமைந்துள்ள மணப்புரம் மஹாதேவா ஆலயத் தின் கர்ப்ப கிரகத்தில் நுழைந்து வரலாறு படைத்தார். அர்ச்சகராக நியமிக்கப்பட்டு இரண்டாண்டுகள் கடந்த நிலையில் இம்மாதம் (டிசம்பர்) சபரிமலையில் சிறப்பு அலுவல் நிமித்தமாக தெரிவு செய்யப்பெற்றுள்ளார். "சபரிமலைக்கு அய்ந்து முறை பக்தனாக வந்துள்ள நான் இன்று இங்கேயே பணி செய்வதென்பது உண்மையில் நல்வாய்ப்புத்தான்" எனக் கூறும் யது கிருஷ்ணாவின் பெற்றோர்கள் தினக் கூலிகள் ஆவர்.

8
தன் பன்னிரண்டாவது வயதில் திருச்சூரில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள வடக்கு பரவூரில் அமைந் துள்ள சிறீ குரு தேவ வைதீக தந்த்ர வித்யா பீடத்தில் சேர்ந்து சமஸ்கிருதத்தையும் தந்த்ர சாஸ்திரத்தையும் பயின்றார். அர்ச்சகராக நியமிக்கப்பட்ட பின்னர் படிப்பை தொடர முடியாமல் நிறுத்திய யது கிருஷ்ணா "சமஸ்கிருதத்தில் முனைவர் பட்டம் பெறவேண்டும் என்பதே தற்பொழுது என் விருப்பம்" என தன் விருப்பத்தை தெரிவிக்கிறார். தான் அடைய எண்ணிய இலட்சியங்களை அடைவதற்கு தனக்கு "ஜாதி" எவ்விதத்திலும் தடையாக இருக்கவில்லை எனக் கூறும் யது அர்ச்சகராக தான் பொறுப்பேற்றதும் உயர் ஜாதி பிரிவைச் சார்ந்த பலர் ஒன்றிணைந்து தான் அர்ச்சகர் பணியை சிரத்தையுடன் செய்யவில்லை என புகார் அளித்தனர். எனினும் விசாரணைக்கு பிறகு அவர்கள் அளித்த குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பது வெளியானது என்று கூறுகிறார். "அர்ச்சகராக பொறுப்பேற்றது முதல் எவ்விதமான கசப்பான அனுபவங்களையும் தான் பெறவில்லை" எனக் கூறும் யது வருங்காலத்தில் புகழ்பெற்ற கோவில் ஒன்றின் தலைமை அர்ச்சகராக ஆக வேண்டும் என நம்பிக்கை கொண்டிருக்கிறார்.

- ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா', 29.12.2019