சனி, 10 டிசம்பர், 2016

கார்த்திகை தீபத்தின் கர்த்தா யார்?

- இரா.கண்ணிமை -

கார்த்திகை மாதம் வந்து விட்டாலே - பக்தர்குழாம் கால்கடுக்க-திருவண்ணாமலைக்குநடைப்பயணம்மேற் கொள்வதும் - வீடுகளில் விளக்கேற்றுவதும் - அண்ணா மலையாருக்கும் - உண்ணாமுலையாருக்கும் உண்டியல் ஏந்துவதும் - அண்ணாமலைக்கு அரோகரா..! அரோகரா... என்று குரலெழுப்பி திருவண்ணாமலையில் தீபம் கொளுத்துவதும் அல்லாமல் - சிவத்தலங்களில் திருவிழாக்கள் செய்வதும் இங்கே வாடிக்கை - வேடிக்கை.

இந்த அண்ணாமலையும்-உண்ணாமுலையும்குடி கொண்டிருப்பது-திருவண்ணாமலையில்...இதுசிவத்தலம் என்றுதலபுராணம்கூறுகிறது.சிவத்தலத்திற்குஉரியார் சிவபெருமான்! - அந்த சிவன் யார்? அவனின் வரலாற் றைத்தெரிந்து கொள்வோம்.

சிவன் மும்மூர்த்திகளில் ஒருவன். சிவன் மும்மூர்த்திகளிலும், பஞ்ச கர்த்தாக்களிலும், முப்பத்து முக்கோடி தேவர்களிலும் - பிதுர்தேவர்களிலும், தேவிமார்களிலும் - முதன்மையான கடவுளாய் மதித்து ஈஸ்வரபட்டமிட்டு தொழுது - ஆலயங்கள் கட்டி தேர்த்திருவிழாக் கொண்டாடுகிறார்கள்.

சிவனுக்கு பல பெயர்கள் உண்டு. சிவன் பதவி: கைலாயம். ஆயுதங்கள்: சூலம், பாசம், பிராகமெனும் வில். சிவனூர்த்தியும் - கொடியும்: இரிஷபம். உடை: புலித்தோல். சிவனுக்கு ஆயுள்: முன்னூறு ஆண்டுகள். சிவன் ஜென்ம நட்சத்திரம்: திருவாதிரை.

சிவன் தன் மனைவியை தலையில் வைத்திருந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. சிவன் தன் உடலெங்கும் சாம்பலைப் பூசிக்கொண்டு - நீண்ட சடைகளை வளர்த்து ஆண்டி வேடத்துடன், சூலாயுதத்தைக் கையிற்பிடித்துக் கொண்டு ஆணைத்தோலை உடுத்தி, பாம்புகளை ஆபரணமாய்ப் போட்டுக்கொண்டு, தலை மண்டை ஓட்டை கையில் பிடித்துக்கொண்டு, மதுவினால் நிறைந்த சிவந்த கண்களுடன் வெகுவாய் கூப்பிட்டுக் கூப்பிட்டுக் பிச்சையிரந்துண்டு, வெட்டிச்சியுடனே திரிந்து - பன்னிரண்டு வருடம் ருத்திர பூமியான சுடுகாட்டில் வாழ்ந்ததாய் தெரிகிறது. சிவனுக்கு அய்ந்து தலைகளும், மூன்று கண்களும் உண்டாம்.

ஒரு சமயம் சிவன் பிர்மாவின் தலையில் ஒன்றை சங் கரித்ததால் அந்த பிர்மஹக்தி (சாபம்) சிவனை பிடித்துக்கொண்டு, பன்னிரண்டு வருடம் தலையோட்டில் இரந்து உண்டதாயும் தெரிகிறது. இதை விளக்கும் ஓர் வெண்பா.

நக்கீரர் வெண்பா

சங்கருப்பதெங்கள் குலம் சங்கரனார்க்கே துகுலம்

பங்கமுறச் சொன்னால் பழுதாமோ - சங்கை

யரிந்துண்டு வாழவோ, மரனே நின்போ

லிரந்துண்டு வாழ்வ தில்லை.

சிவனுக்கு பிள்ளைகளும் உண்டு. சிவன் தன் மனைவி பார்வதியுடன் - வேசிகள் இருக்கிற சிவபுரத்தில் பிச்சையேற்று உண்டு வருகையில் - சிவனுக்குப் பல மனைவிகள் இருந்தும் பரத்தைகளோடு திரிவதைக் கண்ட பார்வதி பலமுறை சண்டையிட்டாள். ஒரு முறை - பத்மாசூரன், நான்யார் தலையில் கைவைப்பேனோ-அவன் சாம்பலாய்ப்போக வரம் தர வேண்டுமென்று கேட்க - அப்படியே அவ்வரம் கொடுத்தான் - அதை சோதிக்க முனைந்து - அவன் சிவனையே துரத்த - தான் கொடுத்த வரம் தனக்கே ஆபத்தாய் முடிந்ததென நடுங்கி ஓடி மறைய இடமில்லாமல் ஒரு அய்விரலிக் காயினுள் புகுந்து ஒளிந்துக் கொண்டதாய் கதை. இதை விளக்கும் ஒருபாடல்.

பேரின்ப மணி மாலை

மூவரையும் சனியன்தான் பிடித்த தாலே

முதலொருவன் தலையிழந்தான் முக்கண்ணுள் ளோன்

சாவு வருமென முனிவன் தனக்கு மஞ்சித்

தானொளித் தான் அய்வேலி தன்னி லேதான்?

பாவியென்ற திருமாலோர், பெண்ணி னாலே

பதியிழந்து பாரியுடன் வனத்திற் சென்றான்

தேவனென்றே இவர்கள் தம்மை வணங்கி னாலித்

திறமையுள்ள கதியருளுந் தேவ னாமோ?

பொருள்: மும்மூர்த்திகளும் சனியன் பிடித்த சாபத்தால் பிர்மாவின் தலை சிவனால் கிள்ளப்பட்டு - இழக்க நேர்ந்த தாகவும் சிவன் பஸ்மாசூரனுக்கு வரம் தந்ததால் - அதை சோதிக்க அசுரன் சிவனைத் துரத்த - சிவன் ஓடி ஒளிந்ததாகவும், திருமால் என்னும் பாவி - விஷ்ணு, ராம அவதாரத்தில் தன் தந்தை தசரதன் மனைவியின் வேண்டுகோள்படி - சீதையுடன் வனவாசம் சென்றதாகவும் காண்கிறதே. இவர்கள் தேவர்கள் ஆவார்களோ? என்பதாம்.

இதனால் விஷ்ணு பக்தர் விஷ்ணுவின் மோக தந்திரத்தால் - பெண்ணாய் மாறி அசுரனைக் கொன்றதால் சிவன் தப்பிப் பிழைத்தார் என இழிவாய் பேசுகிறார்கள். இதன் முழு விவரத்தையும் கந்த புராணத்திலும், பாகவதம் 10 ஆம் ஸ்கந்தம் விருகா சூரனைக் கொன்ற அத்தியாயத்தில் 6 முதல் 16 பாடலிலும் காணலாம். இது பற்றிய ஒரு விருத்தம்:

ஆதிவேதாந்த முதலறியா ஞான வஞ்செழுத்தின்

மெய்ப் பொருளை யயன்மால் தேடுஞ்

சோதியே யம்பலத்திற் தோன்றி யாடுஞ்

சுடரொளியே நீபிடித்த தோஷத் தாலே

பாதிமதி சடைகளினிந் தரவும் பூண்டு

பதியிழந்து சுடலைதனிற் பாடி யாடி

சாதி யினிற் கடைவேட னெச்சிற் தின்றார்

சனியனே காகமேறுந் தம்பி ரானே!

ஒரு கொச்சகம்

சனியனிந்த மூவரையும் தாரணியிலே பிடித்தால் சனியன் தனையனுப்பும் தற்பரனார் வேறலவோ? விருமாவின் கையெ ழுத்து மேதினியோர்க் குண்டானால் விருமா தலையறுக்க விதியெழுதி வைத்தவரார்?

இப்பாடலின் படி மும்மூர்த்திகளையும், தேவர்களையும் சனிபகவான் ஆட்சி செய்து, நிலைகுலையச் செய்வது உண்மை யானால், சிவனோ, சனியனோ யார் பெரிய தேவன்? மனிதர்க்கு விதியெழுதுவது பிர்மாவானால் - பிர்மா தலையற்றுப் போக விதியெழுதியது யார்? என்று சொல்லுங்கள்.

சிவன் அசுரனுக்குப் பயந்து அய்விரலிக்காயினுள் ஒளிந்து கொண்டிருந்ததால், சிவனை மீட்க விஷ்ணு மோகினி உருவெடுத்து ஓர் அழகிய பெண்ணாய் அந்த அசுரனின் முன்வர - சிவனை அழிக்க காத்துக் கொண்டிருந்த அசுரன் இந்தப் பெண்ணைப் பார்த்து மயங்கி அவளைக் கட்டிப்பிடித்து ஆலிங்கனம் செய்ய முனைந்தபோது - “நீ போய் முழுகிக் குளித்து உன்னை சுத்தம் செய்து கொண்டு வாவென அவள் சொல்ல - அவன் சென்ற இடமெல்லாம் தண்ணீர் இல்லாமல் செய்து - கடைசியாக மாட்டுக்குளம்பிலிருந்து ஒரு துளித் தண்ணீர் கொண்டாவது தலையில் வைத்து சுத்திகரித்துக் கொண்டு வாவெனவே - அசுரன் அப்படியே செய்ய - அக்கினியே பற்றியெரிந்து சாம்பலாய்ப் போனானாம்.

விஷ்ணு தன் பெண்ணுருவை மாற்றி அசுரன் பற்றி எரிந்து அழிந்த வகையைச் சிவனுக்குச் சொல்லி, அய்விரலிக்காயினுள்ளிருந்து இறங்கச் சொல்ல, சிவன் இதை உண்மையென நம்பாமல் விஷ்ணுவை திரும்பவும் பெண்ணுருவாய் மாற்றி - ருசுப்படுத்திக் காண்பிக்கச் சொன்னான். அப்படியே விஷ்ணு பெண்ணுருவாய் மாறியதும் சிவன் அடங்க முடியாத - மோக விகாரத்தால் தாவி கட்டிப் பிடித்து விஷ்ணுவோடு கூடிப்புணரவே - அந்த நிமிடமே அரிஹரபுத்திரன் (விஷ்ணு வுக்கும், சிவனுக்கும் பிறந்த பிள்ளை) என்ற அய்யனார் பிறந்து விட்டானாம். இந்த காமச் செயல்கள் நிறைந்த கதையின் வரலாற்றை வாய் கூசாமல் வெளியிட்டுச் சொல்லலாமோ? இது உண்மையா? இரு சமய விளக்கம் கவுதமர் வீடு சிவசாப சம்பந்தப்படலத்தில் உள்ள பாடலையும் பாருங்கள்.

ஏகுகின்ற தோரளவில் வெள்ளமாயிந் திரியத்து

வெள்ளருவி யோடலுந்

தேகமுள்ள காண்யாறு தானெனாமென்ன வங்கையா

லன்னி வேறுகோ

ரூகு புத்தியால் விந்துவென்று தானுன் னியின்ன

வாறொழி விலாசம்

போக மெய்துவார் யோனிலிங் கப்போது விழவிப்

புவியிலென் றனன்.

பொருள்: ஒரு நாள் காலையில் கவுதம ரிஷி எழுந்து குளிக்கப்போகும்போது - எதிரே வெள்ளப் பெருக்கு போல் இந்திரியம் ஓடுவதைக் கண்டு - காட்டு ஆறென எண்ணி தன்கையினால் அள்ளிப்பார்த்து - அது இந்திரியம் என்றறிந்து இப்படி ஒழியாது கலவி செய்வோர் லிங்கமும், ஆவடையாரும் - அற்றுப் பூமியில் விழக்கடவது என்று சபித்தார். இதனால் சிவன், பார்வதியின் லிங்கமும், ஆவடையாரும் - கவுதமர் சாபத்தால் அறுவுண்டு போயிற்றாம். இதைக் கண்ட ரிஷிகள் எல்லோரும் கவுதமரிடம் வந்து ‘நீ குடியிருக்கிற வீட்டில் கொள்ளையடித்தாற்போல் - சந்திரசேகரனாகிய சிவனை சபிப்பதற்குப் புத்தியற்றுப் போனாய். இனி நீ அந்தண குலத்திலிருக்க சம்மதியோம்‘ - என்று சொல்ல - ரிஷிகளைப் பிரியப் படுத்த கவுதம ரிஷி அற்றுப்போன சிவன், பார்வதியின் லிங்கத்தையும் ஆவடையாரையும் (ஆண்குறி - பெண் குறி) அனைவரும் இன்று முதல் அருச்சனை செய்வார்கள் என்று சொல்லி ஒப்புரவானதாக கந்தபுராணத்தில் எழுதியிருக்கிறது. இதேபோல இன்னொரு சமயம் தாருகாவனத்து ரிஷிகள் சாபத்தால் சிவனுடைய லிங்கம் (ஆண் குறி) அற்றுப் போக வில்லையா?

ரிஷி, முனிவர்கள் சாபத்தால் அற்று விழுந்த இந்த லிங்கத்தையும், ஆவடையாரையும் கல்லுருவில் செய்து (ஆண்குறி - பெண்குறி) கோயிலுக்கு உள்ளேயும், வெளியேயும் வைத்து வணங்குவதுமன்றி பலவித உலோகங்களில் செய்து சிறியதாய் கழுத்திலும் கட்டி தொங்கவிட்டுக் கொண்டு லிங்க பூசை செய்யவில்லையா? லிங்க பூசையைப் பற்றிய அகத்திய முனிவர் பாடல் இதோ:

அகஸ்தியர் ஞானம் 30 இல் 20 ஆம் பாடல்

பாரப்பா இப்படியே தெளிவில் லாமல்

பராபரத்தை யறியாமல் மோசம் போறார்,

ஆரப்பா எதிர்ப்பார்கள் என்னோ டேதான்

அஞ்ஞான மூடர்கள்தான் அதை எண் ணார்கள்

வேரப்பா சிவலிங்கம் விஷ்ணு லிங்கம்

வேதாந்த லிங்கத்தை விரித்துப் பார்த்தால்

சோரப்பா கசுமால நாற்றம் நாற்றம்

சிவன் வேண்டு மென்று தினஞ் செபத்தை செய்யே!

பொருள்:  (சிவம் - மோட்சம்) மக்களுள்ளத்தில் தெளிவான படி ஒன்றான மெய்யறிவை அறியும் அறிவில்லாத படியால் - அவரை அறியாமல் மோசம் போகிறார்கள். நான் மெய்வேதாந்த விளக்கம் சொல்லும்போது ஞானமில்லாத மூடர்கள் தவிர என்னை யார் எதிர்ப்பவர்கள்? வேதாந்தத்தில் சிவலிங்கம், விஷ்ணுலிங்கம் என்று பூசை செய்வதைப் பற்றி விவரமாய் ஆராய்ச்சி செய்து பார்த்தால் - பெரும் நாற்றத்திலும், நாற்றமாய் காண்கிறது.

(தொடரும்)

-விடுதலை,10.12.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக