சனி, 3 டிசம்பர், 2016

மந்திரம் - தந்திரம் - யந்திரம்



மனிதன் ஒரு காந்தம். அவன் உடல் உறுப்புகளில் காந்த சக்தி உள்ளது என்பதைப் பகுத்தறிவாளர்கள் கூட மறுக்க முடியாது. ஏனென்றால், அது விஞ்ஞானி களால் நிரூபிக்கப் பட்ட உண்மை.
இந்த உண்மையின் அடிப் படையில் அமைந்தது தான் தாந்த்ரிக சாஸ்திரம். சரியான சாதனையாலும், பயிற்சியாலும் இந்த காந்த சக்தியை ஓர் ஆக்க சக்தியாக்கி அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டியிருக் கின்றனர். (ஞான பூமி, பிப்ரவரி 1982, பக்கம் 29)
தேஹரியில் கொஞ்சகாலம் தங்கினேன், அப்போது பண்டிதரிடம் எனக்குப் படிக்கச் சில புத்தகங்களையும் ஏடுகளையும் கேட்டேன். அவர் சில இலக்கணங்கள், இலக் கியங்கள், நிகண்டுகள், தாந்திர நூல்கள் கிடைக்குமென்றார். தாந்திர நூல்களை நான் அதுகாறும் பார்த்ததில்லை. அதைப் படிக்கக் கேட்டேன். பண்டிதர் பல தாந்திர நூல்களைத் தந்தார்.
புத்தகத்தைத் திறந்ததுமே நம்பமுடியாதபடி அவ்வளவு அசுத்த, ஆபாச, அபத்த, அசங்கியச் சரக்குகளைக் கண்டு அருவருத்தேன். தாந்திர நூல் தாய், மகள், அக்கா, தங்கை, சண்டாளி, சாமரி என்ற விவஸ்தை இல்லாமல் ஸஹகமனம் (புணர்ச்சி) செய்யத் தூண்டுகிறது.
அதில் நிர்வாண ஸ்திரீயை பூஜை செய்யச் சொல்லியிருக்கிறது. எல்லா பிராணிகளையும் கொன்று புலாலுண்ணலாம். மீனுண்ணலாம், மதுபானம் செய்யலாம்; இவையெல்லாம் பூஜா விதியாம்.
பிராமணன் முதல் சாமரன் வரையில், விவஸ்தை இல்லாமல் பஞ்ச மகாரானுஷ்டானம் செய்யச் சொல்லுகிறது. மாமிசம், மது, மத்ஸ்யம், முத்திரை, மைதுனம் ஆகியவை பஞ்சமகாரங்கள். இந்தப் பைசாச அனுஷ்டானங்கள் முக்தி தருமாம். ஆனந்த முக்திக்கு இவை வழியாம்.
இந்தத் தாந்திர நூல்களை படித்து முடித்தபோது, என் அருவருப்பிற்கும் வியப்பிற்கும் அளவில்லை. இப்படிப்பட்ட ஆபாசக் குப்பை களை எழுதி தர்ம சாஸ்திரம் என்று பிரச்சாரம் செய்யும் தூர்த்தரை வெறுத்து, அங்கிருந்து சிறீநகரம் சென்றேன்.
- (பக்கம் 24, நூல்: தயானந்த ஜோதி, ஆரிய சமாஜம், சென்னை
-விடுதலை,27.3.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக