சனி, 31 டிசம்பர், 2016

கருக்கலைப்பு குற்றமில்லை என அறிவித்துள்ளவர் போப்


கத்தோலிக்க சர்ச்சுகளின் பார்வையில் இதுநாள்வரையிலும் பாவகரமானதாக பார்க்கப்பட்டு வந்த கருக்கலைப்பு பாவ கரமானதில்லை என்று போப் அறிவித்து, இனிவரும் காலங்களிலும் கருக்கலைப்பு விவகாரங்களில் தலையிடுவதிலிருந்து விலகி, அதை பாவகரமானது என்று எண்ண வேண்டாம் என்று பிஷப்புகள் மற்றும் கிறித்தவ பாதிரியார்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார் போப் பிரான்சீஸ்.

கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 20.11.2016 முடிய கத்தோலிக்க சர்ச்சுகளில் Ôகருணை ஆண்டுÕ அனு சரிக்கப்பட்டு தற்காலிகமாக கருக்கலைப்பு பாவகரமானதல்ல என்று அறிவிக்கப் பட்டது-.

21.11.2016 அன்று போப் பிரான்சீஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கருக் கலைப்பு பாவகரமானதல்ல என்கிற அறி விப்பு கால வரையறையின்றி நீட்டிக்கப் படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

‘‘கருக்கலைப்பு பாவகரமானது என்று சொல்லப்பட்டாலும், அதுகுறித்து என் னுடைய கருத்தை மேலும் உறுதிப்படுத்த விரும்புகிறேன். அப்பாவிகள்மீது திணிக் கப்படுவதை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் கருக்கலைப்பு பாவகரமானதல்ல என்று குறிப்பிட விரும்புகிறேன்.

அதேபோல், கருக்கலைப்பு பாவகர மானது இல்லை என்று அறுதியிட்டு என்னால் கூறமுடியும். அப்படியே கூறு கிறேன். கருக்கலைப்பு பாவகரமானது என்றால், திருந்திய உள்ளங்களுக்கு கட வுளின் கருணை கிடைப்பதைத் தடுப்பதாக ஆகிவிடும். ஒவ்வொரு பாதிரியாரும், கிறித்தவ மத போதகர்களாக, இருப்பவர்கள் அனைவரும் கருக்கலைப்பு விவகாரத்தில் சமரசம் ஏற்படுத்துவதில் தனி கவனத்துடன் பயணப்பட்டு, அவர்களுக்கு ஆதரவுடன் வழிகாட்டுபவர்களாக இருக்கவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று போப் பிரான்சீஸ் தம்முடைய கடிதத்தில் கிறித்தவ பாதியார்கள் உள்ளிட்டவர் களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ரோமன் கத்தோலிக்க சர்ச்சுகள் கருக்கலைப்பை மிகவும் பாவகரமானது என்று குறிப்பிட்டு வந்துள்ளன. மன்னிப்பு அளிப்பது என்பது  பிஷப்புகளிடம் உள்ளது. பாதிரியார்கள் அல்லது மதப் போதகர்களாக இருப்பவர்கள் இதுபோன்ற நிலைகளில் கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண்களின் ஒப்புதல் குறித்து அறிந்துகொள்ள வேண்டும் என்று வாடிகன் கூறுகிறது.

அமெரிக்கா கத்தோலிக்க செய்தி சேவை  நிறுவனம் அளித்துள்ள தகவல் களின்படி, பெரும்பாலான பிஷப்புகளால் சுழற்சி முறையில் பாதிரியார்கள் பதவியில் அமர்த்தப்படுகிறார்கள். ஆனால், கருணை என்பது பன்னாட்டளவில் தொடர்புள்ள தாக உள்ளதாகும். போப் தம்முடைய அறிவிப்பில், கடவுளின் கருணைக்கும் மனமுருகிக் கோரப்படுகின்ற மன்னிப் புக்கும் தடையாக எவரும் இருக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள் ளார் என்று அச்செய்தி நிறுவனம் குறிப் பிட்டுள்ளது

-விடுதலை ஞா.ம.,26.11.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக