வெள்ளி, 23 டிசம்பர், 2016

ஓணம் பண்டிகையும் தசாவதாரமும்


பொறியாளர்
ப.கோவிந்தராசன்
BE, MBA, MA (History), MA (Linguistics)

கேரள மாநிலத்தில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத் தில் சாதி மதபேதமின்றி எல்லா மக்களும் கொண்டாடும் பண்டிகை ஓணம் பண்டிகை ஆகும். ஒணம் பண்டிகை அரசு விழாவாக கொண் டாடப்படுகின்றது. இந்தப் பண்டிகை விஷ்ணு வாமன அவதாரமாக அவ தரித்த போது கொல்லப்பட்ட மலை யாள நாட்டை ஆண்ட மாவலி என்ற அசுர மன்னன் விஷ்ணு பகவானிடம் ஒரு வரம் பெற்றான்.

அதன்படி தான் பெரிதும் நேசித்த தன்னுடைய மக்களை மலையாள நாட்டிற்கு வரும் நாள் ஓணம் பண்டிகையாக மலையாள மக்களால் கொண்டாடப்படுகின்றது. இந்த விஷ்ணு எப்போது முக்கிய கடவுள் ஆனார்? யாருடைய ஆட்சி காலத்தில் அவதாரங்கள் தோன்றின?

இதிகாசம் உள்பட பல புராணங்கள் எப்போது எழுதப்பட்டன? யாருடைய ஆட்சி காலத்தில் யுகம் பற்றிய விவரங்கள் தெரியவந்தன? இது போன்ற வினாக்களுக்கு விடை காண கீழே உள்ளவாறு முயற்சிக்கப்படுகன்றது
விஷ்ணுவின் அவதாரங்கள்

இப்போது நடைபெறும் கலியுகத் திற்கு முன்பு   ஒன்பது யுகங்கள் ஏற்பட் டதாக சொல்லப்படுகிறது. அவைகளின்  விவரங்கள் ஒரு பட்டியலாகத் தரப் பட்டுள்ளது.

குறிப்பு:- 4,32,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை விஷ்ணு அவதாரம் எடுத்து பூமிக்கு வந்து அதர்மத்தை அழித்து தர்மத்தை காப்பாற்றுகிறார். இது போதுமானது அல்ல. ஏனென்றால் எஞ்சிய பெரும்பாலான காலமெல்லாம் அதர்மம் தான் ஆட்சி செய்கின்றது. மேலும் ஒரு யுகம் என்பது நீண்ட கால அளவு. அதனால் அவதரிக்கும் நாள் துல்லியமாக நிர்ணயிக்கவில்லை.

கீழே உள்ள பட்டியலின் படி பல கருத்துக்கள் உருவாகின்றன. அவை களில் சில

1. ஓணம் பண்டிகை திரேத யுகத்தில் (12,96,000 ஆண்டுகள்) தொடங்கி துவா பர யுகத்தில (8,64,000 ஆண்டுகள்) நடை பெற்று கலியுகம் (சுமார் 5025 ஆண்டுகள்) வரை தொடர்கின்றது.

2. வட இந்தியாவில் ராமன் வன வாசம் முடிந்து பட்டணப் பிரவேசம் செய்த நாளை (தரேதாயுகம்) தீபாவளி யாக பல யுகங்களாக கொண்டாடப் பட்டு வருகின்றது.

3.தென்னிந்தியாவில் கிருஷ்ணா நரகாசுரனை வதம் செய்த நாளை (துவா பரயுகம்) தீபாவளியாக சென்ற யுகத்தி லிருந்து கொண்டாடப்பட்டு வருகின் றது. தென்னிந்தியாவில் கருணனை வழிபடுவதாகவும் வட இந்தியாவில் ராமனை வழிபடுவதாகவும் காணலாம்.

மேலே உள்ள கருத்துக்கள் உண்மை யில் தவறானது. ஏனென்றால் வேதங் களில் விஷ்ணுவுக்கு எந்த முக்கியத்துவ மும் தரப்படாமல் ஒரு சிறு கடவுளாக கருதப்பட்டார். மேலும் வேதங்களில் இந்திரனைத்தான் முதன்மைக் கடவுளாக இன்றும் காணப்படுகின்றது.

அந்த இந்திரன் எந்த அவதாரங்களும் எடுக்காமல் (குழந்தையாகப் பிறந்து கருணனாக வளர்ந்து அர்ஜுனனுக்குத் தோரோட்டாமல்) தானே நேரில் மண்ணுலகிற்கு வந்து எதிரிகளை அழித்து வேத தர்மத்தை விரைவாக காப்பாற்றினார். இதனால் புத்தர், மகாவீரர், அலெக்சாண்டர், அசோகர், இயேசு போன்ற மாமனிதர்ளுக்கு இணையாக கதாபாத்திரங்களை உரு வாக்க பின்னர் அவர்களை கடவுளாக மாற்றும் ஆரியர்களின் சூழ்ச்சியாக கருத வாய்ப்புள்ளது.

குப்தர் காலத்தில் 
புராணங்களும் இதிகாசங்களும்

வரலாற்று அறிஞர் பலரின் கருத் துப்படி ஆரம்பத்தில் இதிகாசங்களும் புராணங்களைப் போல் நீண்ட நெடுங் கதைகளாக இல்லாமல் சிறுகதைகளாக இருந்தன. பின்னர் கீழே சொல்லப் படுகின்ற காரணங்களால் உருப் பெருக்கம் அடைந்தன

1. குப்த வம்ச மன்னர்கள் பற்றிய வரலாற்றுச் செய்திகள் புராணங்களில் காணப்படுகின்றன. இதன்படி புரா ணங்கள் பல குப்தர் காலத்தில் (கி.பி. 320 முதல் 550 வரை) தான் இறுதி வடிவம் பெற்று எழுதி முடிக்கப்பட்டது. இதன் பின்தான்  பல்லவர்களின் (கிபி 600 முதல் 900 வரை ) தொடங்கியது.

2. மகாபாரதம. குப்தர்கள் காலத்தில் (கி.பி. 320)தான் பாகவத மதத்தைச் சார்ந்த பகவக் கீதை மற்றும் புராணங்கள்  சேர்க்கப்பட்டு கீழ்க்கண்டவாறு உருப் பெருக்கம் அடைந்தது. (ஆதாரம்: ஆர்.கே.நாராயணன்- -எழுதிய மகாபாரதம் என்ற நூல். வெளியீடு-பென்குயின் பதிப்பு மற்றும்--- ஜயா- என்ற நூல். எழுதியவர் -தேவதத் பட்ட நாயக்)

1. தற்போதைய மகாபாரதம் துவக்கத்தில் 24,000 பாடல்கள் கொண் டதாகவும் “ஜயா’’ என்ற பெயரை கொண்டதாகவும் விளங்கியது.

தற்போதைய மகாபாரதம் இடைக் காலத்தில் விரிவாக்கப்பட்டு 88000 பாடல்கள் கொண்டதாக விளங்கியது. அப்போது பாரதம் மகாபாரதம்  என்று அழைக்கப்பட்டது.

தற்போதைய மகாபாரதம் குப்தர் காலத்தில் எழுதப்பட்ட போது 1,00,000 பாடல்கள் கொண்டதாகவும் மகா பாரதம் என்ற பெயரை உடையதாகவும் விளங்கியது. அப்போது பகவத் கீதை சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் இந்த பகவத் கீதையினால் ஏற்பட்ட விளைவு என்னவென்றால்----தனது அரண்மனையை தனது எதிரிகளிடமிருந்து மீட்க துவா ரகை மன்னன் கிருஷ்ணன் பலநாள் கடுமையாகப் போரிடநேர்ந்தது

(ஆதாரம்: இராஜாஜியின் மகாபாரதம்).

இத்தகைய துவாரகையை ஆண்ட----குறுநில மன்னனான கிருஷ்ணனை சர்வ வல்லமை பொருந்திய ஒரே முதன்மைக் கடவுளாக உயர்த்துவதற்கு கதை மிகவும் பயன்பட்டது.

கிருஷ்ணனை வழிபட்டவர்களை பாகவதர்கள் என்று அழைக்கப்பட்டது. அவர்களின் மதத்தை பாகவதமதம் என்று புதிய பெயரால் அழைக்கப்பட் டது. (ஆதாரம் - வரலாறு குறித்த எல்லா பாடநுல்கள் டில்லி யுனிவர்சிட்டி) மேலும் பாகவதர்கள் நாராயணனை வணங்க மாட்டார்கள்.

3.மகாபாரதம் மற்றும் புராணங்களும் எழுதப்பட்டதைப் போல் இராமா யணமும் குப்தர் காலத்தில் தான் சமஸ்கிருத மொழியில் அசோகர் பிராமி எழுத்துக்களில் முதன் முறையாக எழு தப்பட்டது.  இறுதி வடிவம் கொண்ட இராமாயணத்தை ஆய்வு செய்த அறி ஞர்கள் ராமாயணத்தில் மொத்தம் உள்ள 17,868 சுலோகங்களை ஆராய்ந் தார்கள்.

அவற்றில் 8121 சுலோகங்கள் (46 சதவீதம்) பல்வேறு கால கட்டங் களில் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றன. (மேலும் கந்தபுராணமும் இராமாயண மும் ஒன்றே-- என்று தந்தைபெரியார் கூறியுள்ளார் என்பதை நினைவு கூரத்தக்கது.)

(ஆதாரம்: பாரதீய வித்யாபவன் வெளியிட்ட ‘எப்பலாகு ஆப் ராமா யணா என்ற நூல் மற்றும் பரோடாவில் உள்ள எம்.எஸ். யுனிவர்சிட்டி செய்த--இராமாயண ஆராய்ச்சிக் குறிப்புகள்)

எனவே, ஒன்பது அவதாரங்களை (மகாபாரதம் மற்றும் இராமாயணமும் உள்பட) குறித்த புராணங்களும் மற்ற புராணங்களும் நான்கு யுகங்களும் முதலானவை எல்லாம் பாகவத மதத்தில் குப்தர் காலத்தில்தான் தோற்றுவிக் கப்பட்டவை மேலும் குப்தர் வம்ச மன்னர்கள் பாகவதர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள்

மேலே விவரித்தப்படி ஓணம் பண்டிகை குப்தர் காலத்திற்குப்பின் நடந்த பல்லவர் காலத்தில் (கி.பி.600 -950) தொடங்கியிருக்க வேண்டும் உதாரணமாக மகாபலிபுரம் என்ற நகரை உரு வாக்கி, பின்னர் தங்கள் தலை நகராக ஆக்கிக் கொண்டார்கள்.

முடிவாக ஓணம் பண்டிகை இயற் கையில் ஏற்படும் பருவ கால மாற்றங் களைக் கொண்டாடும் வகையில் அமைந்த பண்டிகை ஆகும். கேரளத்தில் தென் மேற்கு பருவக் காற்றால் மழைக் காலம் ஜுன் முதல் செப்டம்பர் மாதம் தொடக்கம் வரை நீடிக்கிறது. மழைக் காலம் முடிந்தபின் கல் தரை எல்லாம் ஈரமில்லாமல் காய்ந்து கோலங்கள் போடவும் பூக்கள் சேகரிக்கவும் வசதியாக இருக்கும்.

எனவே மழைக் காலம் முடிந்த பின் கேரளத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. (மலையாள மொழியில் கேரு என்றால் ஏறு என்று பொருள். அளம் என்றால் கடற்கரை பகுதியைக் குறிக்கும்). இதேபோல்தமிழ் நாட்டில் அய்ப்பசி கார்த்திகை மாதங்களில் மழை பெய்து முடிந்த பின் மார்கழி மாதத்தில் விடியல் காலையில் கோலம் போடுவது வழக்கம். இது இயற்கையில் சாதாரணமாக நிகழும் நிகழ்ச்சியினை மதம் சார்ந்த பண்டி கைகளாக ஆரியர்களால் மாற்றும் சூழ்ச்சியை வெளிப்படுத்துகின்றது.


-விடுதலை ஞா.ம.,26.9.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக