ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

பக்திக்கும் ஒழுக்கத்திற்கும் சம்பந்தம் இல்லை!’

ஆன்மிகம் வளர்ந்ததாகக் கூறும் குருமூர்த்தி அய்யரின் பூணூல் பார்வைக்கு அர்ப்பணம்




‘பக்திக்கும் ஒழுக்கத்திற்கும் சம்பந்தம் இல்லை!’


கேள்வி: நம் நாட்டில் இறையுணர்வு குறைந்து வருகிறதோ...?




பதில்: என் அனுபவத்துல சொல்றேன்.. பக்தி அதிகமா யிட்டிருக்கு.. கோயிலுக்குப் போகிறவங்க எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கிட்டே இருக்கு?


பழனியில் எம்பெருமான் முருகன் கோயில் உண்டிய லில் முன்னாடியெல்லாம் அஞ்சு லட்சம், ஆறு லட்சம் ரூபாதான் வந்திச்சு இப்பவோ காணிக்கைத் தொகை ரெண்டு மூணு கோடியைத் தாண்டிடுது. ... பக்தி அதிகமாக இருக்கு... ஆனால் ஒழுக்கம்தான் குறைந்துப் போயிடுச்சு!
கேள்வி: இறைவனிடத்தில் மக்களுக்குப் பக்தி அதிகமாக இருக்கிறதென்றால் ஒழுக்கமும் இருக்கிறதென்று கொள்ளலாமே?
பதில்: ஊ... ஹூம்.. அப்படியில்லை.. பக்திக்கும் ஒழுக்கத்துக்கும் சம்பந்தமே யில்லை. 


- கிருபானந்தவாரியார்,  (ஆனந்தவிகடன் 22.12.1991).


‘துக்ளக்’ பார்வையில்...


வினா: வேத மந்திரத்தை இந்த மாதிரி விலை பேசி விற்கலாமா? 


புரோகிதர் பதில்: எல்லாம் காலக் கோளாறுதான். காலம் ரொம்பத் தப்பாப் போச்சு நாங்கள்ளாம் இந்த மாதிரி வந்துட்டோம். இப்ப பிராமணனும் இல்லே. பிராமண தர்மமும் இல்லே.


வினா: நீங்க முன்னே பார்த்த மாதிரி ஜனங்களிடம் பக்தி இருக்கிறதா இப்போது? 


புரோகிதர் விடை: பக்தியாவது ஒண் ணாவது? கோவிலுக்கு வர்றவன் சாமி தரிசனத் துக்கா வர்றான்? சைட் அடிக்கன்னா வர்றான். பொம்மனாட்டிகள் மட்டும் என்ன யோக் கியம்? அவாளும் புடவை, நகை, நட்டு இதெல் லாம் போக, நேரம் இருந்தா சுவாமி அம்பாளை நெனச்சுக்கிறா! 


- ‘துக்ளக்’ 1-6-1981 இதழ் பக்கம் 32  


பக்தி தனிச் சொத்து  ஒழுக்கம் பொதுச் சொத்து


(தந்தை பெரியார் 24.11.1964 சென்னைப் பச்சையப்பன் கல்லூரி விழாவில்)


நல்ல ஒழுக்கம் இருந்தால் போதுமென்றும், கடவுள் அவசியமில்லையென்றும் சிலர் கூறுகின்றனர். அது தவறான கருத்து. கடவுள் அருள் இல்லையானால் ஒரு தனி நபருக்கோ நாட்டுக்கோ விமோசனம் ஏற்பட முடியாது.


(இப்படி சொல்லி இருப்பவர் (மறைந்த) 


காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரசுவதி ‘கல்கி’ 8.4.1958
-விடுதலை ஞா.ம.,8.7.17


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக